முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 65
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012 09:55

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அது என்ன ஆயிரம் திருடர்கள்… ? நாற்பது திருடர்கள் இருந்தாலே நாடு தாங்காது… ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட திருடர்கள் இருந்தால்…  என்ன ஆகும்… ?

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருடர்களை உருவாக்கி வைத்து, அதன் தலைவராக இருந்து வருபவர் வேறு யாருமல்ல… மகாத்மா காந்தியை விட புனிதர் என்றும், மகாபாரதக் கர்ணனை விட கொடை வள்ளல் என்றும் தனக்கென்று ஒரு பிம்பத்தைக் கட்டியமைத்து, ஊரையே ஏமாற்றி வரும் சைதை துரைசாமிதான் அந்த அலிபாபா.

06THSAIDAI_S_DURAIS_522108a

யார் இந்த சைதை துரைசாமி ?  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சைதை துரைசாமி ஒரு சாதாரண நபராகத்தான் வாழ்கையைத் தொடங்குகிறார்.  சென்னை வந்த துரைசாமி, சைதாப்பேட்டை பகுதியில் ஒரு சிறு ரவுடியாக ஃபார்ம் ஆகிறார்.  இவரது ரவுடித்தனம் வீடுகளைக் காலி செய்வதில்தான் தொடங்குகிறது.  சைதாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டை காலி செய்வதில் நிபுணர் என்ற பெயரை எடுக்கிறார். ஆரம்பகாலத்தில் காவல்துறையினரை எப்படி கைக்குள் வைத்திருப்பது என்ற விபரங்கள் சரி வரத் தெரியாததால், அவர்களுக்கு மாமூல் கொடுக்காமல் இருக்கிறார்.  யாரடா அது.. நமக்கு மாமூல் கொடுக்காமல் ரவுடித்தனம் செய்வது என்று வெகுண்டெழுந்த காவல்துறையினர்,  சைதை துரைசாமியை பிக்பாக்கெட் அடித்ததாக கைது செய்துள்ளதாக ஒரு தகவல், அதிமுக வட்டாரங்களிலேயே உலா வருகிறது.   இதந்குப் பிறகுதான் காவல்துறையினருக்கு மாமூல் கொடுத்து தன் வசமாக்கினார் சைதை.

சென்னையில் துரைசாமி ஒரு ரவுடியாக ஃபார்ம் ஆவதற்கு முன், அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர், ஈரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகம் என்பவர்.  சோழி ஒயின்ஸ், சோழி காம்ப்ளெக்ஸ் போன்ற சொத்துக்களுக்குச் சொந்தமானவர் இந்த ஆறுமுகம்.   அதிமுகவில் சேர்ந்த துரைசாமி, தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பது போல காண்பித்துக் கொண்டு, இந்த ஆறுமுகத்திடம் தொடர்ந்து வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

வீடு காலி செய்யும் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் காலியாக உள்ள பழைய இடங்களை அபகரித்து, அதை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடத் தொடங்குகிறார்.  நில அபகரிப்பிலும் வீடு காலி செய்வதிலும் தலைச்சிறந்த ரவுடி என்று பெயரெடுத்த துரைசாமிக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைக்கிறது.  எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்ததும், அவரிடம் நல்ல பெயர் வாங்கி,  எம்.எல்.ஏ ஆகிறார் சைதை துரைசாமி. இதன் பிறகு, 1987ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமையில் இரண்டாகப் பிரிகிறது. அப்போது ஜெயலலிதாவின் அணிக்கு எதிராக, ஜானகி அணிக்கு ஆதரவு தருகிறார் துரைசாமி.  ஜானகி தலைமையில் செயல்பட்ட அதிமுக அணியின் அலுவலகமே சைதை துரைசாமியின் இல்லத்திலிருந்துதான் செயல்பட்டது.

1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக இரண்டாகப் பிரிந்து அதன் சின்னம் இரட்டை இலைக்கு போட்டி போட்டதால், சின்னம் முடக்கப்பட்டு, இரண்டு அணிகளும், இரட்டைப் புறா, மற்றும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டன.  அந்தத் தேர்தலில் ஜானகி அணி 2 இடங்களும், ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமயிலான அணிகள் இணைந்தன.  இந்த இணைப்பை சைதை துரைசாமி சற்றும் விரும்பவில்லை.  இதனால் அரசியலை விட்டே ஒதுங்கி இருந்தார்.

1991ல் ராஜீவ் கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையில், அதிமுக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.  அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளத் தெரியாத ஜெயலலிதா தனது அகம்பாவத்தினால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை சந்தித்தார்.

இதையடுத்து 1996ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்தத் தேர்தலுக்கு ஜெயலலிதாவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் குரல் எழுப்பினர்.   எதிர்ப்புக் குரல் என்பது ஜெயலலிதாவுக்கு எட்டிக்காய் என்பதால், உடனடியாக அதற்கு முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அரங்கநாயகம், எஸ்.டி.சோமசுந்தரம், கண்ணப்பன், முத்துசாமி போன்றவர்களை நீக்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஊழல்களைச் சுட்டிக்காட்டி பதவிக்கு வந்த திமுக அரசு, ஜெயலலிதாவின் மீது சராமாரியாக ஊழல் வழக்குகளை பதிவு செய்ய பூர்வாங்க வேலைகளைத் தொடங்கியிருந்தது.  ஜெயலலிதா பலவீனமாக இருந்த இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உள்ளே நுழைந்தார் சைதை துரைசாமி.  அது வரை அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்கி இருந்தவர், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு சேர்ந்து போட்டி அதிமுகவை தொடங்கினார்.

 

img-Z18062514_Page_1img-Z18062514_Page_2

scan_1

scan_2

scan_9

scan_8

 

போட்டி அதிமுகவை தொடங்கி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று அறிவித்து, ஜெயலலிதாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.  அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை எடுத்தனர்.  அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.  இந்த நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர் சைதை துரைசாமி.

சைதை துரைசாமி நடத்திய அதிமுகவை மக்கள் ஏற்கவில்லை.  ஜெயலலிதாவே உண்மையான அதிமுக என்பது, 1998ல் நடந்த தேர்தலில் நிரூபணம் ஆனது.  இதையடுத்து மீண்டும் அரசியலில் இருந்து ஒதுங்கினார் துரைசாமி.

ஒதுங்கியே இருந்த துரைசாமிக்கு மீண்டும் 2006ல் அரசியல் ஆசை வந்தது.   எப்படியாவது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கடும் முயற்சியை எடுக்கிறார். ஆனால், சைதை துரைசாமியின் கடந்த கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அந்த வாய்ப்பை வழங்க ஜெயலலிதா மறுக்கிறார்.  2006ல், தனக்கு அதிமுகவில் சீட் கிடைக்கவில்லை என்பதால், பாட்டாளி மக்கள் கட்சியிடம் சென்று தனக்கு அந்த சீட்டை ஒதுக்குமாறு பேசியவர் சைதை துரைசாமி.

2006 தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும், வேறு நல்ல திருட்டுத் தொழிலாக தேர்ந்தெடுக்கலாம் என்று சைதை துரைசாமி தேர்ந்தெடுத்த தொழில்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் என்று தொடங்கப்பட்ட மனிதநேய அறக்கட்டளை.  இந்த அறக்கட்டளைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள், முன்னாள் உள்துறைச் செயலாளர் பூர்ணலிங்கம் ஐஏஎஸ், அபுல் ஹஸன் ஐஏஎஸ் மற்றும் அலெக்சாண்டர் ஐபிஎஸ்.   எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் எம்.எல்.ஏவாக இருந்தபோதே இந்த அதிகாரிகளோடு சைதை துரைசாமிக்கு  தொடர்பு உண்டு.  பின்னாளில் சைதை துரைசாமி கிழக்கு கடற்கரைச் சாலையில் 200 ஏக்கர் நிலத்தை அபகரித்து கபளீகரம் செய்ததில் பின்னணியாக இருந்து செயல்பட்டவர்கள், இந்த அதிகாரிகள்.  அலெக்சாண்டர், தான் ஓய்வு பெறும்வரை, சர்வ வல்லமை படைத்த அதிகாரியாக விளங்கினார்.  அப்படிப்பட்ட அதிகாரி, சைதை துரைசாமிக்கு பின்புலமாக இருக்கையில், நில அபகரிப்பு செய்வதை யார் தடுக்க முடியும் ?

இந்த மூன்று அதிகாரிகளும் ஓய்வு பெற்றதும், வேலையில்லாத ஆண்டிகள் போல உட்கார்ந்து யோசித்ததில் உருவான திட்டம்தான் மனிதநேய அறக்கட்டளை.  இந்த அறக்கட்டளைக்கு ஆலோசனைக் குழும உறுப்பினர்களாக இந்த மூன்று அதிகாரிகளும், முன்னாள் பல்கலைக்கழக துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமியும் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த மனிதநேய அறக்கட்டளையில் முக்கியப் பொறுப்பில் சட்ட ஆலோசகராக தான் மரணமடையும் வரையில் செயல்பட்டவர் முன்னாள் நீதிபதி எஸ்.சம்பந்தம்.  இந்த சம்பந்தம், 1996ல், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து, ஜெயலலிதாவையும், சசிகலாவையும் கதற வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தத்தின் இந்த செய்கைக்கு கைமாறாக, கருணாநிதி 2000ம் ஆண்டில், மனித உரிமை ஆணையத்தின் தலைவராக சம்பந்தத்தை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த சம்பந்தத்தை தனது மனித நேய அறக்கட்டளைக்கு சட்ட ஆலோசகராக நியமித்தார் சைதை துரைசாமி.

மனிதநேய அறக்கட்டளையைத் தொடங்கி, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக போட்டித் தேர்வுகளில் பயிற்சி அளித்து, அதன் மூலம்  இழந்த தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார் துரைசாமி.  இந்த அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக அதிகாரிகள் இருக்க சம்மதித்ததன் பின்னணியைக் கேட்டால் ரொம்ப அற்பமானது.   பதவியில் இருந்து ஓய்வு பெற்ற இந்த அதிகாரிகளுக்கு வாகனமும், ஓட்டுனரும் யார் கொடுப்பார்கள்.   பதவியில் இருக்கும்போது, அரசு வாகனம் கிடைக்கும்… பார்ப்பவரெல்லாம் சல்யூட் அடிப்பார்கள்.  ஆனால் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வசதிகள் கிடைக்காதல்லவா ?  உயர் அதிகாரிகள் ஓசி வாகனமும், ஓட்டுனரும் இல்லையென்றால் செத்துவிட மாட்டார்களா… ?  அதற்காகத்தான் இந்த அதிகாரிகள், சைதை செலவில் வாகனத்தை வாங்கிக்கொண்டு, துரைசாமி நடத்திய பயிற்சி மையத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். எவ்வளவு அற்ப மனிதர்களாக இருக்கிறார்கள் பாருங்கள்… ?

Untitled-1

2006ம் ஆண்டில், இலவசம் என்று தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  இலவசம் என்றாலே, அந்த இடத்தில் ஒழுங்காக பயிற்சி அளிக்கமாட்டார்கள் என்று பரவலாக மாணவர்கள் மத்தியில் செய்தி பரவியதே அதற்குக் காரணம். டிசம்பர் 2006ல் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் முதன் முறையாக ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சிக்காக சேர்ந்தவர்கள் வெறும் 50 பேர் மட்டுமே.

இந்த மையத்தை எப்படியாவது பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய பிரமுகர்களை அழைத்து மாணவர்களிடம் ஊக்கம் கொடுக்கும் வகையில் பேச வைத்து,  அதை பத்திரிக்கையில் செய்தியாக வரவைத்துப் பார்த்தார். ஆனால் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இவ்வாறு சைதை துரைசாமி சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் வாராது வந்த மாமணியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். காசி விஸ்வநாதன் ஒரு கரைவேட்டி கட்டாத திமுக பிரமுகர்.  2007ல் ஓய்வு பெறும்போத காசி விஸ்வநாதன் முதலமைச்சரின் செயலாளர் பதவியில் இருந்தார். ஓய்வு பெற்ற ஒரு சில நாட்களிலேயே டிஎன்பிஎஸ்சியின் தலைவராக கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.

kasi

காசி விஸ்வநாதன் ஐஏஎஸ்

இந்தக் காசி விஸ்வநாதன் டின்பிஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகுதான், துரைசாமியின் கவனம், டிஎன்பிஎஸ்சியின் பக்கம் திரும்பத் தொடங்குகிறது. அதன் பிறகு, துரைசாமிக்கு தொடர்ந்து சுக்கிர திசைதான்.  நடப்பதோ திமுக ஆட்சி.  ஆனால், அதிமுக பிரமுகரான சைதை துரைசாமி நடத்தும் பயிற்சி மையத்தில் படித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைவார்கள்.

அது வரை பயிற்சி மட்டும் அளித்துக் கொண்டிருந்த மனிதநேய மையம், காசி விஸ்வநாதன் டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவியேற்ற பிறகு, தாறுமாறாக விளையாடத் தொடங்கியது.  அந்த காலகட்டத்தில் மனித நேய மையத்தில் பயிற்சி எடுத்த மாணவர்கள், ஒவ்வொரு தேர்வாணைய உறுப்பினருக்கும், நேர்முகத்தேர்வில் முழு மதிப்பெண் போடுவதற்கு ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை தர வேண்டும் என்று நேரடியாகவே பேசி அவரே பணத்தை வாங்கினார் என்கிறார்கள்.

இப்படி பணம் கொடுத்த மாணவர்களில் பெரும்பாலானோர், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியடைந்த விபரம் போட்டித் தேர்வு எழுதுவோரிடையே பரவத் தொடங்குகிறது.  இச்செய்தி பரவத் தொடங்கியதும், மனிதநேய அறக்கட்டளையில் சேர்ந்து படித்தால், நிச்சயம் அரசுப் பதவி என்ற நிலை உருவாகிறது.   மனிதநேய அறக்கட்டளைக்கு முன்பாகவே, பல ஆண்டுகளாக பயிற்சி நிலையங்களை நடத்தி வரும் பல நிறுவனங்கள், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் தொடர்பு இல்லாததால், வேறு வழியின்றி, முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு முடிந்ததும், நேர்முகத் தேர்வுக்கு, துரைசாமியின் பயிற்சி மையத்திற்கு அனுப்பத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் பணம் கொடுத்து, தேர்வாணைய உறுப்பினர்களை சரி செய்யக் கூட அவசியம் இல்லாமல் போய் விட்டது.   நேர்முகத் தேர்வின் போது, எங்கே படித்தீர்கள் என்று தேர்வாணைய உறுப்பினர் கேட்டால், சைதாப்பேட்டையில் என்று சொன்னாலே, அவருக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் நிலை உருவானது.  துரைசாமியின் இந்த மையம், தேர்வாணைய உறுப்பினர்களுக்கும் மிகுந்த வசதியாகப் போய் விட்டது.    50 லட்சம், ஒரு கோடி என்று, ராசாத்தி அம்மாள், அழகிரி என்று கட்டணம் செலுத்தி உறுப்பினர்களானவர்கள், என்னிடம் வாருங்கள், இவ்விடத்தில் சகாய விலையில், செய்கூலி, சேதாரம் இல்லாமல், நியாயமான முறையில், அரசு வேலை வழங்கப்படும் என்றா விளம்பரம் கொடுக்க முடியும் ?   மனித நேய அறக்கட்டளை போன்ற ஒரு மையத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால், மொத்தமாக தொகை கைக்கு வந்து விடும் அல்லவா ?

sellamuthu

காசி விஸ்வநாதனுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவரான செல்லமுத்து

இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் துரைசாமிக்கு, மாணவர்களின் தொல்லை அதிகமாகத் தொடங்கியது.  எப்படிப்பட்ட தொல்லையென்றால், துரைசாமியை நேரில் பார்த்து, ஒரு முறை பேசி விட்டால், உறுதியாக பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்ற செய்தி பரவி விட்டதால், வரும் அத்தனை மாணவர்களும், சேர்மேனை சந்திக்க வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கத் தொடங்கினர்.  இது 2010 காலகட்டம்.  இந்தக் கட்டத்தில் நாம் நேரடியாக இதைச் செய்ய முடியாது என்பதை துரைசாமி உணர்கிறார். இது தவிரவும், தேர்தல் நெருங்குவதால், தேர்தலில் இம்முறை சீட் வாங்க ஜெயலலிதாவை அணுகுவதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறார் துரைசாமி.

இந்த இடத்தில்தான் இருவர் உள்ளே நுழைகிறார்கள்.  இதே போல போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தும், ரேடியன் ஐஏஎஸ் மற்றும், அப்போல்லோ பயிற்சி மையத்தைச் சேர்ந்த ராஜபூபதி மற்றும் ஷ்யாம் ஆகியோருக்கு துரைசாமியோடு தொடர்பு ஏற்படுகிறது.

இந்த பயிற்சி மையங்கள் நடத்துவதில் பெரிய சிரமம் என்னவென்றால், ஏகப்பட்ட மையங்கள் இருப்பதால், மாணவர்களை வளைத்து, தங்களுடைய பயிற்சி மையத்தில் சேர வைப்பது மிக மிக சிரமம்.  சின்ன பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர மாட்டார்கள்.   மனிதநேய அறக்கட்டளையின் பயிற்சி மையத்தில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால், இந்த இரண்டு பயிற்சி மையங்களின் நிறுவனர்களுக்கு துரைசாமியோடு தொழில் கூட்டு அமைப்பது எளிதாகவும், வசதியாகவும் இருந்தது.  இந்த தொழில் கூட்டு ஒப்பந்தத்தின் படி, மனிதநேய அறக்கட்டளை மையத்தின் பயிற்சி வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள், இதர உதவிகளை அப்போல்லோ மற்றும் ரேடியன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செய்வார்கள்.  பதிலுக்கு, மனிதநேய அறக்கட்டளையின் ஒரு பகுதி மாணவர்களை இவர்களின் மையத்துக்கு அனுப்ப வேண்டும்.  இந்த ஒப்பந்தம் அனைவருக்கும் வசதியாகப் போய் விட்டது.

மனிதநேய அறக்கட்டளைக்கும் டிஎன்பிஎஸ்சிக்கும் இருந்த நெருக்கம் வெளியானது, 2010ல் நடந்த மெயின் தேர்வுகளின்போது.  பல ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி மெயின் தேர்வுகளுக்கென்று, ஒரு வடிவம் இருந்தது.  2009ம் ஆண்டில், பல தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடுத்திருந்தனர்.  எங்கள் மீதா வழக்கு தொடுக்கிறீர்கள்… பாருங்கள் என்ன செய்கிறோம் என்று, அந்த ஆண்டு தேர்வில், கேள்வித்தாள் வடிவத்தை தலைகீழாக மாற்றுகிறார்கள்.

அது வரை, மெயின் தேர்வில், 5 கேள்விகள் 15 மதிப்பெண்களுக்கு, 5 கேள்விகள் 20 மதிப்பெண்களுக்கு என்று விரிவான விடை எழுத வேண்டிய வகையில் இருக்கும். ஆனால், அந்த ஆண்டு 40 கேள்விகள 1 மதிப்பெண்.  3 மதிப்பெண்களுக்கு சில கேள்விகள், 5 மதிப்பெண்களுக்கு சில கேள்விகள் மொத்தம் 104 கேள்விகள். தலைகீழ் மாற்றம்.   பல ஆண்டுகளாக தேர்வுக்காக பயிற்சி எடுத்து, தயாரித்து வந்தவர்களுக்கு அந்த மாற்றம் ஏற்படுத்திய அதிர்ச்சியை வார்த்தையில் வடிக்க இயலாது.   ஒரு பயிற்சி மையம் நடத்தி வரும் ஒருவர் சொன்னது… அவரிடம் 35 வயதான ஒருவர் இந்தத் தேர்வுக்காக சிறப்பாக தயாரிப்பு வேலை செய்திருந்தார்.   அவருக்கு அதுவே இறுதி வாய்ப்பு.  ஏற்கனவே க்ரூப் 4ல் பணிபுரிந்து வந்த அவர், அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, க்ரூப் 1 தேர்வுக்காக தயாரித்து வந்தார்.   அந்த தேர்வு அவருக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றார் அந்த நண்பர். அவரை என்ன சொல்லி ஆறுதல் படுத்தவது என்றே எனக்குத் தெரியவில்லை என்றார்.   விரிவான பதில் எழுத வேண்டிய கேள்விகளை எதிர்ப்பார்த்து, நன்கு பயிற்சி எடுத்து தேர்வெழுத சென்றவருக்கு, தலைகீழ் மாற்றங்கள் ஏற்படுத்தும் அதிர்ச்சியில் இருந்து மீளவே அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகி விடும்.  அந்த அதிர்ச்சியில் தெரிந்த விடைகள்  கூட மறந்து விடும்.

ஆனால் அந்த புதிய கேள்வி முறையின்படி, மனித நேய அறக்கட்டளையில் மட்டும் மூன்று மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.  தமிழகத்தில் யாருக்குமே தெரியாத அந்த மாற்றம், மனித நேய பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு மட்டும் தெரிந்தது, மிகப்பெரிய ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.  இது மனிதநேய பயிற்சி மையத்தில் சேர்ந்தால், அரசு வேலை உறுதி என்று நிலவி வந்த கருத்தை உறுதிப்படுத்தியது.  அந்தத் தேர்வில் மனிதநேய அறக்கட்டளையில் படித்த மாணவர்கள் 68 பேர் தேர்ச்சி பெற்றனர்.  மொத்தம் உள்ள 128 பணியிடங்களில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து 68 பேர் தேர்ச்சியடைந்தது இயற்கைக்கு மாறான நிகழ்வு.

அதன் பிறகு, மனிதநேய அறக்கட்டளையின் பயிற்சி மையங்கள், தமிழகமெங்கும் விரிவடைந்தன.   தொடக்க காலத்தில் வெறும் 50 பேர் சேர்ந்த பயிற்சி மையத்தில் ஒரு தேர்வுக்கு 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினர்.  தமிழகமெங்கும் 10 கிளைகள் உருவாக்கப்பட்டன.  சின்ன பயிற்சி மையங்கள் வைத்து நடதியவர்கள், மனித நேய அறக்கட்டளையில் முழு நேர ஊழியர்களாகவும், இடைத் தரகர்களாகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

போட்டித் தேர்வில் மோசடியை அரங்கேற்றிய பின்னர், அடுத்த கட்டத்திற்கு நுழைந்தார் துரைசாமி.  அடுத்த கட்டம் என்னவென்றால், போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நல்ல பதவியை வாங்கித் தருவது.   உதாரணத்திற்கு, நீங்கள் க்ரூப் 2 தேர்வில் வெற்றி பெறுகிறீர்கள்.   உங்களுக்கு தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணி கிடைக்கிறதென்றால், அதை பெரும்பாலானோர் விரும்பமாட்டார்கள்.  ஏனென்றால் வருமானம் இல்லாத பதவி அது.  அதற்குப் பதிலாக, அதே க்ரூப் 2 தேர்வில் உள்ள நகராட்சி ஆணையர் (Municipal Commissioner) பதவி கிடைத்தால் செல்வச் செழிப்போடு வாழலாம் என்பதால் இது போன்ற பதவிகளுக்கு போட்டி அதிகம்.   வெற்றி பெற்றவர்களை அழைத்து, பதவிகள் ஒதுக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, உங்களுக்கு இன்ன பதவி ஒதுக்கப்பட்டள்ளது என்று அறிவிப்பார்கள்.   சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு இந்தப் பதவி வேண்டும் என்று கூறினால், அதற்கு ஒரு தொகை வசூல் செய்யப்பட்டு உரிய பதவி பெற்றுத் தரப்படும்.

இதிலும் ஒரு கூடுதல் திருட்டுத் தனம் செய்யப்பட்டது.  உதாரணத்திற்கு உங்களுக்கு க்ரூப் 1 தேர்வில், மாவட்ட பதிவாளர் (District Registrar) பணி கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  உங்களை அழைத்து, உங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (District Employment Officer) ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறுவார்கள்.  சார்… எப்படியாவது எனக்கு வேறு பதவி பெற்றுத் தாருங்கள் என்று கூறியதும் அவரிடம் 10 முதல் 12 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டு அவர் கேட்ட பதவியை பெற்றுத் தந்ததாக கூறுவார்கள்.

கடந்த க்ரூப் 1 தேர்வில் ஒரு கால்நடை மருத்துவர் இதே போல மாவட்ட பதிவாளராக தேர்ச்சியடைந்தார்.  அவர் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்.   அவரிடம் உங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியதும், அவர் 12 லட்ச ரூபாயை துரைசாமியிடம் கொடுக்கிறார்.    அவருக்கு தன் செல்வாக்கை பயன்படுத்தி மாவட்டப் பதிவாளர் வேலை பெற்றுத் தந்ததாக கூறினார் துரைசாமி.  ஆனால் உண்மையில், அந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பதவி, எம்.பி.சி பிரிவுக்கானது.  இந்த கால்நடை மருத்துவர் கேட்டாலும், அந்தப் பதவியை ஒதுக்க இயலாது.  இதுதான் துரைசாமியின் தந்திரம்.

தற்போது என்ன நிலைமை என்றால், போட்டித் தேர்வுகள் என்றால், அதற்கு பயிற்சி அளிக்கும் ஒரே மையம் மனிதநேய அறக்கட்டளை மட்டுமே என்ற நிலை உருவாகி விட்டது.  தற்போது துரைசாமி இந்த பயிற்சி மையத்தின் நிர்வாகத்தில் பெரிய அளவில் தலையிடுவது இல்லை.   அப்போல்லோ பயிற்சி நிறுவனத்தின் ஷ்யாம் மட்டுமே முழுமையாக இதை நிர்வகிக்கிறார்.  ஷ்யாம், தற்போது இந்த தொழிலை விரிவு படுத்தியிருக்கிறார்.

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு பயிற்சி மையம் நடத்துகிறீர்கள் என்றால், உங்கள் மையத்தில் படித்து ஒருவர் க்ரூப் 1 தேர்வில் பெற்றி பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அவர், மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தேன் என்று விளம்பரப்படுத்த ஒப்புக் கொண்டால், ஒரு தேர்வருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஷ்யாம் உங்களுக்கு கொடுப்பார்.  க்ருப் 2 தேர்வுக்கு இது 5 ஆயிரம்.  விஏஓ தேர்வுக்கு 3 ஆயிரம் என்ற வகையில் தற்போது வசூல் செய்யப்படுகிறது.

civil

துரைசாமியின் பயிற்சி மையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள்

கூடுதலாக ஷ்யாம், மற்ற பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு, வகுப்புக்கு மாணவர்களை அனுப்புகிறேன்.   ஒரு மாணவருக்கு 500 ரூபாய் கொடுங்கள்.  குறைந்தபட்சம் 400 முதல் 500 மாணவர்களை அனுப்புகிறேன் என்று பேரம் பேசி வருகிறார்.  இது போக, தனியார் தங்கும் விடுதிகள் வைத்திருப்பவர்களிடமும் பேரம் பேசி, படிக்கும் மாணவர்களை அந்த விடுதியில் தங்க வைப்பதற்கு தலைக்கு இவ்வளவு என்று பேரம் மனித நேய அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊழல், முறைகேடு, மோசடி போன்ற விவகாரங்களையெல்லாம் விலக்கி விட்டுப் பார்த்தால், ஏதோ துரைசாமி ஒரு நல்ல பணியை செய்து வருகிறாரே என்று தோன்றும்.  அவரைக் குறை சொல்லாதீர்கள்…. குறைந்தது 200 பேருக்காவது, தங்கும் இட வசதியோடு படிக்க வைக்கிறாரே என்று துரைசாமி தரப்பினர் வாதிடக் கூடும்.

ரமணா திரைப்படம் பார்த்திருப்பீர்கள்.  அதில் விஜயகாந்த் ஏசிஎஃப் ஆன்டி கரப்ஷன் போர்ஸ் என்ற ஒரு படையை உருவாக்கி, அதன் மூலம் ஊழலை ஒழிப்பதாக வரும்.  சைதை துரைசாமியும் ஒரு டிசிஎஃப் வைத்திருக்கிறார்.   இது துரைசாமி கரப்ஷன் போர்ஸ் (Duraisamy corruption force) துரைசாமி ஊழல் படை.   துரைசாமியின் பயிற்சி மையத்தில் படித்தவர்களில் பெரும்பாலானோரை, தனது அடிமைகளாகவே மாற்றி வைத்திருக்கிறார் துரைசாமி.   அரசியல் அறிவோடு, விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும் சிலரைத் தவிர, பெரும்பாலானோர், துரைசாமியை கடவுளாகவே வழிபடுகின்றனர்.

ஏற்கனவே சொன்ன கால்நடை மருத்துவருக்கு மாவட்டப் பதிவாளர் பதவி வாங்கித் தருவதற்காக துரைசாமி பெற்ற தொகை 12 லட்சம்.  மாவட்டப் பதிவாளர் பதவி கிடைத்ததும், 2 லட்சத்தை துரைசாமி அந்த கால்நடை மருத்துவரை அழைத்துத் திருப்பிக் கொடுத்தார்.  என்ன சார்… என்று கேட்டதற்கு, டிஎன்பிஎஸ்சியில் ஒரு உறுப்பினர் பணம் வாங்கவில்லை என்று கூறி விட்டார்.  அந்த கால்நடை மருத்துவர்…..  உடனே துரைசாமி காலில் விழுந்தார்.  சார்… உங்களைப் போல ஒரு நேர்மையான மனிதரை பார்க்கவே இயலாது.  உங்களால்தான் தமிழகத்தில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மழை பெய்கிறது என்ற ரேஞ்சுக்கு பெரிய ஐஸாக வைத்து விட்டு வந்தார்.   கால்நடை மருத்துவம் படித்த இந்த முட்டாளுக்கு,  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பணியிடம் எம்.பி.சிக்கு ஒதுக்கப்பட்டது, இவர் பெற்ற மதிப்பெண்ணுக்கு இயல்பாகவே மாவட்டப் பதிவாளர் பதவி கிடைத்திருக்கும் என்பது உறைக்கவேயில்லை.  இவரைப் போன்ற அடிமைகளை தமிழகமெங்கும் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் உருவாக்கி வைத்திருக்கிறார் துரைசாமி.  இவர்கள் துரைசாமியின் அடிமைகள்.  துரைசாமி கேட்டால், இவர்கள், அரசு ரகசியத்தை கண்ணை மூடிக் கொண்டு எடுத்து துரைசாமியிடம் கொடுத்து விடுவார்கள்.

முதன் முதலில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையமாகவே மனித நேய அறக்கட்டளை தொடங்கப்பட்டது என்பது நினைவிருக்கும்.  இந்தத் தேர்வில் தேர்ச்சியடைபவர்களையும் வளைத்துப் போடவதற்கு துரைசாமி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார்.   மனிதநேய அறக்கட்டளையில் படிக்காமல், வெளி பயிற்சி மையங்களில் படித்து, ஐஏஎஸ் தேர்ச்சியடைந்த இரண்டு அதிகாரிகளை துரைசாமி அழைத்தார்.  எங்கள் மாணவர்களுக்கு உங்கள் தேர்வு அனுபவங்களை சொல்லுங்கள் என்று கூறினார்.  இவர்களும், மாணவர்களுக்கு உதவலாமே என்று செல்கிறார்கள்.  அவர்களிடம், நீங்கள்தான் இந்த நாட்டையே தூக்கி நிறுத்தப்போகிறீர்கள், நீங்கள் ஜனநாயகத்தின் தூண் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருக்கிறார். இவர்களைப் போல துரைசாமியை சந்திக்கச் செல்லும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மற்ற தேர்வர்களுக்கு உங்களுக்கு டெல்லி செல்வதற்கு விமான டிக்கெட் எடுத்துத் தருகிறேன், ஒரு த்ரீ பீஸ் சூட் எடுத்துத் தருகிறேன் என்று தனது லஞ்ச லாவணியை பாடுவது துரைசாமியின் வழக்கம் என்று கூறுகிறார்கள். துரைசாமியை சந்தித்த இரண்டு அதிகாரிகளும் புத்திசாலி அதிகாரிகள்.  சம்பந்தம் இல்லாமல் இவன் எதற்கு நம்மை இந்தத் தாங்கு தாங்குகிறான் என்று சந்தேகப்பட்டு அளவோடு பேசி விடை பெறுகிறார்கள்,  ஆனால் அந்த இரண்டு அதிகாரிகளுக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சைதையின் வீச்சு சைதாப்பேட்டையோடு முடிந்து விட்டது என்று நினைத்திருந்தார்கள்.   ஆனால் உண்மை அதுவல்ல... .... 

இரண்டு அதிகாரிகளும் பயிற்சிக்காக மசூரி பயிற்சி மையத்தில் உள்ளார்கள்.  அப்போது அந்த மையத்தில், இந்தியா டே என்ற நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சியோ, அல்லது வேறு ஏதாவதோ செய்ய வேண்டும் என்று அறிவிப்பு.  இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ரங்கோலி கோலம், நடனம், கலை நிகழ்ச்சிகள் என்று செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த இரண்டு அதிகாரிகளும், கலை நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட பயிற்சியில் இருக்கையில் திடீரென்று அவர்களுக்கு அழைப்பு. முதல் தளத்திற்கு சென்று பார்த்தால், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலை அப்படியே சினிமா செட்டாகப் போட்டிருக்கிறார்கள்.  தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கரகாட்ட கோஷ்டியினர் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர்.  தமிழகத்தில் இருந்து தேர்வான அதிகாரிகள் ஒவ்வொருவரும் தலா 1000 ரூபாய் போட்டு, 29 ஆயிரம் வசூல் ஆகியிருந்தது. இந்தத் தொகையில் எப்படி இவ்வளவு ஆடம்பரமாக செய்ய முடியும் என்று கேட்டால், மற்ற அதிகாரிகள், அய்யாதான் கொடுத்தார் என்று கை காட்டுகிறார்கள். அவர்கள் கை காட்டிய இடத்தில் பார்த்தால், சைதை துரைசாமி தனது நயவஞ்சக புன்னகையை வீசிக் கொண்டிருக்கிறார்.   இரண்டு அதிகாரிகளும் கடும் எரிச்சலடைந்து பணத்தை பெற்ற மற்ற அதிகாரிகளிடம் விசாரித்தால், துரைசாமியிடம் 50 ஆயிரம் பெற்ற விபரத்தை சொல்லியிருக்கிறார்கள்.  கடும் எரிச்சலடைந்த இரண்டு அதிகாரிகளும், கடுமையாக சத்தம் போட்டு, பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.   சரி என்று சொன்ன மற்ற அதிகாரிகள், பணத்தை திருப்பிக் கொடுத்தார்களா, இல்லை  ஐயா கோபித்துக் கொள்வார் என்று திருப்பிக் கொடுக்காமல் இவர்களே கபளீகரம் செய்து விட்டார்களா என்பது குறித்த விபரங்கள் இல்லை. ஆனால் நிச்சயம் திருப்பிக் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. 

2007 முதல் ஒவ்வொரு ஆண்டும், துரைசாமி மசூரி சென்று கரகாட்டம் ஆடி வருவதாக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பயிற்சிக்காக, மசூரிக்கு செல்லும் அத்தனை அதிகாரிகளுக்கும், மத்திய அரசு முழுமையான தொகையை அளிக்கும்.  ஆனால், துரைசாமி இவர்களுக்கான விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்து, இவர்களை போலிப் பயணப்பட்டியல் தயாரிக்க சொல்லிக் கொடுத்து, பணியில் சேரும் நாள் முதலாகவே ஊழல் அதிகாரிகளாக இவர்களை மாற்றுகிறார்.  துரைசாமியின் பயிற்சி மையத்தில் படிக்காத அதிகாரிகளாக இருந்தாலும், தேர்வில் வெற்றி பெற்றதும், அவர்களை அழைத்து, மேலே சொன்ன இரண்டு அதிகாரிகளுக்கு விமான டிக்கெட் எடுத்துத் தருகிறேன் என்று சொன்னது போல, மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுத்து, துரைசாமி கரப்ஷன் போர்ஸில் சேர்த்து விடுவார் துரைசாமி.  அந்த இரண்டு அதிகாரிகளைப் போல, சுயமரியாதையோடு இந்த லஞ்சத்தை மறுக்கும் அதிகாரிகள் வெகு குறைவு.  துரைசாமியிடம் கை நீட்டி, அதன் மூலம், துரைசாமி கரப்ஷன் போர்ஸில் உறுப்பினராகும் அதிகாரிகள், இன்று இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளாக (Indian Foreign Service) பணியாற்றி வருகிறார்கள்.  தமிழகமெங்கும் துரைசாமி கரப்ஷன் போர்ஸ் உறுப்பினர்கள், 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ளார்கள்.

U.P.S.C_Selected_List_2010-11_Page_1

U.P.S.C_Selected_List_2010-11_Page_2

U.P.S.C_Selected_List_2010-11_Page_3

இந்த துரைசாமி கரப்ஷன் போர்ஸ், சைதை துரைசாமியை இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த நபராக மாற்றியிருக்கிறது. காவல்துறையிலும், பத்திரிக்கை துறையிலும் இருப்பவர்களுக்கு தெரியும். தகவல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது.  அரசுத் துறைகளில் நடக்கும் விவகாரங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், ஒரு நல்ல பத்திரிக்கையாளர், அற்புதமான செய்திகளை வெளியிட முடியும். பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர முடியும். ஆனால், ஒரு திருட்டு அரசியல்வாதிக்கு இந்தத் தகவல்கள் தெரிந்தால், அவர் தன்னையும், தன் குடும்பத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கே அதைப் பயன்படுத்துவார்.  அப்படிப்பட்டவர்தான் இந்த துரைசாமி.

சென்னை மாநகராட்சியின் மேயரானதும் துரைசாமியின் வசூல் களை கட்டுகிறது.   சென்னை மாநகரப் பொறுத்தவரை, அதிமுகவில் தனது எதிரிகள் அத்தனை பேரையும் ஒழித்து விட்டார் துரைசாமி.  இன்று துரைசாமியைப் பகைத்துக் கொண்டால், சென்னை அதிமுகவில் இருக்க முடியாது என்கிற நிலைமையை உருவாக்கி விட்டார். இவரைக் கண்டு பலரும் அஞ்சுகிறார்கள்.

எந்த ஊடகத்திலும், துரைசாமிக்கு எதிராக ஒரு வரிச் செய்தியைக் கூட கொண்டு வர முடியாது.  அத்தனை ஊடகங்களையும் வளைத்துப் போட்டிருக்கிறார் துரைசாமி.   இது திமுக ஊடகங்களுக்கும் பொருந்தும். சர்வ வல்லமை படைத்த சக்ரவர்த்தியாக உருவாகியிருக்கிறார் துரைசாமி.  தனது இந்த வலிமையை, சென்னை நகரில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், பள்ளி உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் ஆகியவர்களிடம் வசூலிக்கப் பயன்படுத்தி வருகிறார்.

தற்பொது சென்னை நகரில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படப் போவதாக மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   இந்தத் தனியார் பள்ளியின் உரிமையாளர்கள் துரைசாமியைப் பார்த்து கட்ட வேண்டியதை கட்ட வேண்டும் என்று இவரது தொண்டர் அடிப்பொடி கடும்பாடி மூலமாக செய்தி அனுப்பப் பட்டுள்ளது.  பள்ளிகளிடமிருந்து மட்டும் இது வரை 120 கோடி வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது.  கேஎப்சி, மெக் டொனால்ட்ஸ் போன்ற பன்னாட்டு உணவு விடுதிகளும், பெரிய ஹோட்டல்களும், திடீர் சோதனை நடத்தப்படும் என்ற அடிப்படையில் மிரட்டல் மற்றும் வசூலுக்கு உள்ளாகியிருக்கின்றன. விதிகளை மீறிக் கட்டியுள்ள கட்டிடங்களுக்கும், குறிப்பாக அண்ணா நகர் சாந்தி காலனியில் பல கோடி ரூபாய் வசூல், நடைபெற்று வருகிறது.

சென்னை வேளச்சேரியில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பில் புரட்சித் தலைவி அம்மா திருமண மண்டபம் என்ற ஒன்றைத் தொடங்கி, அதில் ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று அறிவித்து, அதை ஜெயலலிதாவை வைத்து திறக்க வைத்தார் துரைசாமி.  அந்த திருமண மண்டபத்துக்கான அனுமதி பெறுகையில், குடிசைத் தொழில் பயிற்சி மையம் நடத்துவதற்கு என்றும், கீழ் தளத்தில் வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்றும் 5 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் கட்டப் போவதாகவும் அனுமதி பெற்றார் துரைசாமி.  ஆனால் 18 ஆயிரம் சதுர அடியில், விதிமுறைகளை மீறி மண்டபம் கட்டி, அதை ஜெயலலிதாவை வைத்தே திறக்கச் செய்தார் துரைசாமி.  இது துரைசாமியின் சாமர்த்தியத்துக்கு மற்றொரு உதாரணம்.

துரைசாமிக்கு தொந்தரவு தருபவர்களோ, அல்லது அவரை பகைத்துக் கொள்பவர்களோ, ஓரங்கட்டப்படுவார்கள் அல்லது ஒழித்துக் கட்டப்படுவார்கள்.  சைதை துரைசாமியின் நயவஞ்சக திட்டத்துக்கு இடையூறாக இருந்தவர், உதயச்சந்திரன் ஐஏஎஸ்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தில் நடந்த ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும், அதில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததற்கும் உதயச்சந்திரன் வகித்த பங்கு சிறப்பானது.   லஞ்ச ஒழிப்புத் துறை, டிஎன்பிஎஸ்சியின் அத்தனை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பிறகும் கூட, துரைசாமியின் ஏஜென்டுகளாகவே தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.  க்ரூப் 1 தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளின் போது, சைதாப்பேட்டையில் படித்தேன் என்றால், அந்த தேர்வருக்கு முழு மதிப்பெண்கள் வழங்குவது என்ற வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.  நேர்முகத் தேர்வை முழுமையாக வீடியோ பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வந்தார் உதயச்சந்திரன். இதன் காரணமாக, ஒரு உறுப்பினர், ஒரு தேர்வருக்கு முழுமையான மதிப்பெண்கள் வழங்கினால், அந்த வீடியோ பதிவோடு ஒப்பிட்டு, அந்த உறுப்பினரின் மதிப்பெண்களை கேள்விக்குள்ளாக்க முடிந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிகளை வழங்குவதில் கலந்தாய்வு முறையைக் கொண்டு வந்தார் உதயச்சந்திரன்.  இவரின் இந்த முயற்சிகளுக்கு தேர்வாணைய தலைவர் நட்ராஜ் முழு ஒத்துழைப்பு நல்கினார்.

Udhayachandran_IAS

இவையெல்லாம் துரைசாமியின் கண்களையும், காதுகளையும் உறுத்த, ஜெயலலிதாவிடம் சொல்லி, உதயச்சந்திரனை, அவரது பணி மூப்புக்கு பொறுந்தாத, அதை விடக் கீழான தேயிலை தொடர்பான பணியில் நியமித்தார் ஜெயலலிதா.  நட்ராஜ் எவ்வளவோ முயன்றும், அவரால் இந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்ய முடியவில்லை.  துரைசாமியின் செல்வாக்கு அத்தகையது.   தற்போது துரைசாமியின் வசூல் வேட்டைக்கு ஒத்துழைக்காத, கார்த்திகேயன் என்ற ஐஏஎஸ் அதிகாரியையும், சென்னை மாநகராட்சியிலிருந்து தூக்கியடித்த பெருமை துரைசாமியையே சேரும்.

எல்லோருக்கும் எழக் கூடிய ஒரு கேள்வி….  ஜெயலலிதா ஏன் துரைசாமியைப் போன்ற ஒரு கபட வேடதாரியை, அதுவும், ஜெயலலிதாவை அதிமுகவை விட்டு நீக்கிய ஒரு நபருக்கு இத்தனை ஆதரவு அளிக்கிறார் என்பதுதான்….

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உதவிகள் செய்து, அவர்களை எப்படி வளைக்கிறாரோ, அதே போலத்தான் ஜெயலலிதாவையும் வளைத்துள்ளார் துரைசாமி.    ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாருக்கு, தீபக், தீபா என்று இரண்டு பிள்ளைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இவர்களுக்கு பணம் கொடுத்து இவர்களைப் பார்த்துக் கொள்வது சைதை துரைசாமிதான்.   இந்த அடிப்படையில்தான், துரைசாமி, தன்னை கட்சியை விட்டு நீக்கியவர் என்பதையும் மறந்து, 2011 தேர்தலில் துரைசாமிக்கு அதிமுக சார்பில் போட்டியிட இடம் கொடுத்தார் ஜெயலலிதா.

கடந்த ஆண்டு, சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி மாபியாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டியடித்த பிறகு, ஜெயலலிதாவை தனிமை மிகவும் வாட்டியது.  அந்த நேரத்தில், அவரது அண்ணன் பிள்ளைகளைப் பற்றி அவரிடம் கூறி, ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றார் துரைசாமி.   வெளிப்படையாக தன் அண்ணன் பிள்ளைகளோடு உறவாட, ஜெயலலிதாவின் ஈகோவும் தடுத்தது, மன்னார்குடி மாபியாவும் தடுத்தது.   அதே நேரத்தில் பாசமும் விடவில்லை.  ஜெயலலிதாவும் மனிதர்தானே….  அந்த நேரத்தில் கச்சிதமாக காய் நகர்த்திய துரைசாமி, ஜெயலலிதாவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நபராகி விட்டார்.   இதுவே ஜெயலலிதா துரைசாமியின் அட்டகாசங்களை தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருப்பதன் மர்மம்.

ஆனால், துரைசாமி ஒரு கடைந்தெடுத்த நயவஞ்சகமான அரசியல்வாதி என்பதை உணர மறுக்கிறார்.  துரைசாமியிடம் உள்ள, துரைசாமி கரப்ஷன் போர்ஸ் மூலமாக, துரைசாமி எதை நினைத்தாலும் சாதிக்க முடியும் என்பதை உணர மறுக்கிறார்.  இப்படி ஒரு நயவஞ்சகமான நபரிடம், இத்தனை அதிகாரங்கள் குவிவது, எப்போதுமே நல்லதல்ல.  அது நாளை ஜெயலலிதாவுக்கே ஆபத்தாக முடியும்.  இதை ஜெயலலிதா உடனடியாக உணர்ந்து, துரைசாமியின் வாலை ஒட்ட நறுக்கினால் மட்டுமே, அவருக்கும் விடிவு.  தமிழகத்துக்கும் விடிவு.  அப்படி ஜெயலலிதா செய்யத் தவறினாரேயானால், அதற்கான கடுமையான விலையை ஜெயலலிதா கொடுக்க வேண்டியிருக்கும்.

 

Comments  

 
0 #68 NALLAVAN 2013-02-24 16:53
அவர் உண்மையான பெயர் சாம் ராஜெஸ்வரன். ஒன்னாம் நம்பர் டுபுக்கு. காசுனா என்ன வேனும்னாலும் செய்வார். அவர் அப்ப ஒரு முன்னாள் காவல் அதிகாரி. இவர் இந்த தொழிலில் அடிச்ச்ச பணம் நெறய்ய. கைல ஒரு லாப்டாப் பேக் இரூக்கும். அதுல 5 லட்சம் எபப்வும் இருக்கும். இன்னும் நெரய சொல்ல விசயம் இருக்கு. வேணுமா?

[ஃஉஒடெ நமெ="ட் கன்னன்"]தோழர், நீங்கள் குறிப்பிடும் அபோல்லோ பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் 'ஷ்யாம்' அல்ல. அவரது பெயர் சாம் எடிசன். ஈஆஸ் மற்றும்
Quote
 
 
0 #67 kilthipriyaaa 2013-01-20 21:45
thank you :-| for exibiting true of fake man activities. we hope to exibit group one question leakout network. search the back gate entries of group post by poithayar affairs.saidayar also approvar of his acitivities. but allakai karthik dont know.
Quote
 
 
+2 #66 semmozhimani 2013-01-20 20:37
துரைசாமி ஒரு கடைந்தெடுத்த நயவஞ்சகமான அரசியல்வாதி. துரைசாமியின் வாலை ஒட்ட நறுக்கி ஆப்பு சொருக வேண்டும்.
Quote
 
 
+1 #65 semmozhimani 2013-01-20 20:31
நல்லவன் வேசம் போடும் நாதாரி,உனக்கெல் லாம் பதவி ஒரு கேடா?மானங்கெட்டவன் , பல மாணவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போடும் நீ நாசமாக போவாய்..
Quote
 
 
0 #64 SIVA KUMAR.R 2013-01-11 17:38
kadinappatu ulaikkum ennaipontra izhingarkaluku kadanta 5 varusama vettry kidaikala.ippatan atu purintatullathu .pavam illaiya nanga.kiramatula irukira nanga ippadi pannikitu irunta eppadi munetram kanarathu.vaimai iruka illaiya.enga poi solrathu.kadavul illainu sonna yaruppa kekurathu.setharalamnu thonutuppa.mudiala da samy.pongada.nalla irunga.sogathudan siva.manavai.
Quote
 
 
+2 #63 T Kannan 2013-01-09 04:22
தோழர், நீங்கள் குறிப்பிடும் அபோல்லோ பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் 'ஷ்யாம்' அல்ல. அவரது பெயர் சாம் எடிசன். ஈஆஸ் மற்றும் குரூப்-ஈ தேர்வுகளுக்காக மிகவும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு, எதிர்பார்த்த சர்வீஸ் கிடைக்க பெறாமல் பயிற்சி நிறுவனத்தை துவக்கினார். 1997-முதல் 2003 வரை இந்த தேர்வுகளுக்காக முயற்சி செய்தவர்களைக் கேட்டால் தெரியும். பொலிடிசல் ச்சிஎன்செ என்றல் சாம் என்று கூறுவார்கள். அப்படி சீரிய முயற்சியாளர். 1998௯9 குரூப்-ஈ தேர்வில் நடந்த முறைகேடுகளை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றவர். கடுமையான உழைப்பாளர், திறமைசாலி. நேர்மையான முறையில் பலரை அவரது நிறுவனத்தின் மூலம் நேர்மையான முறையில் வெற்றியடையச் செய்திருக்கிறார ். அவரை இந்த சர்ச்சையில் இணைத்திருப்பது முரண்பாடாகவும், உள்நோக்கத்துடனு ம் இருப்பதாகவும் தெரிகிறது.
Quote
 
 
-5 #62 karthik 2013-01-05 17:01
கட்டுரை எழுத நல்ல கர்பனை வளம் வேண்டும் என்று உனர்த்திய சவுக்குக்கு நன்றி.ஆதாரம் இருந்தால் வழக்கை சந்தியுஙகல் அப்போது நம்புகிரேன். நீங்கள் விளம்பரதிர்காக இதை செய்யவில்லை என்று. நன்றி...
Quote
 
 
+10 #61 THARMENDIRA 2013-01-04 16:34
போட்டி தேர்வு மாணவர்களே திருடர்கள் ஜாக்கிரதை!
Quote
 
 
+3 #60 kumki 2013-01-03 15:29
pasu thoal porthiya panni
Quote
 
 
+14 #59 கலகக்காரன்! 2013-01-03 00:26
இவரின் திருவிளையாடல் வேலை வாங்கித் தருவதுடன் நின்றுவிடவில்லை . பயிற்சி முடித்து பணிக்கு வரும் குருப் 1 அலுவலர்களுக்கு போஸ்டிங் போடுவது வரை தொடர்கிறது. எம் நண்பர்கள் சிலர் மாநகர தந்தையின் ஆசீர்வாததோடு நல்ல பசையான போஸ்டிங்க்ஸை வாங்கியுள்ளனர்.
இவரின் கையசைவுக்கு சேவகம் செய்ய ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார ்கள்.
வாழக வளத்துடன்.!
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!
Quote
 
 
+14 #58 கலகக்காரன்! 2013-01-03 00:24
ரொம்ப நாளா மனசுல உறுதிக்கிட்டு இருந்ததை நதி மூலம் ரிஷி மூலத்தோட தோல் உரிச்சிட்டீங்க.! மிக்க நன்றி.!
ஈஆஸ், ஈப்ஸ் நேர்முக தேர்வுகளுக்கு டெல்லி செல்லும் நண்பர்களுக்கு கோட் சூட், விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வளைத்தவர் இவர். அப்பொழுது இந்த வலையில் விழாமல் சொந்த செலவில் டெல்லி சென்றவர்களில் நானும் ஒருவன். அப்பொழுது அந்த நண்பர்களிடம் ஏன் இந்த ஆள் கொடுப்பதை வாங்குகிறீங்க? டிரஸ் எடுக்க கூடவா சொந்த காசு இல்லை என்று கேட்டுள்ளேன். அவர்கள் அதற்கு சும்மா கிடைக்கிறதை ஏன் விடுவானேன் என்று கேட்டனர். ஐ‌ஏ‌எஸ் பணிக்கு சென்றாலும் இலவசம் என்றால் வாய் பிளக்கும் இவர்களை என்ன சொல்வது.! இவர்களில் சிலர் தேர்வானர்கள் என்பது வேறு விஷயம்.!
ட்ண்ப்ஸ்ச் தேர்வினை பொருத்தவரை சவுக்கு சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. குருப் 1 தேர்வில் நடந்த முறைகேடுகளைப் பற்றி எம்மனக் குமுரலை ஒரு வெளிப்படுத்தவேண ்டி பத்திரிக்கைகள் பலவற்றை தொடர்புகொண்டோம் . ஆனால் ஒருவரும் செவிசாய்க்கவில் லை. அப்பொழுது குருப் 1 தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவுக்கு ஆதாரங்களை திரட்டி வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பு வரும் நேரத்தில் அந்த வழக்கின் நீதிபதிகளையே இந்த ஆசாமி வளைத்து விட்டார்.!
நடந்து முடிந்துள்ள குருப் 1 முதன்மை (மைன்) தேர்வில் ஏதோ பெரும் மாற்றங்கள் வரும் என்று நினைத்து தேர்வு எழுத சென்றோம். ஆனால், 104 கேவிகள் கேட்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. கேட்கப் பட்டிருந்த கேள்விகளில் சில கடினமாக இருந்தன. நாங்கள் ஓரளவு திருப்தியுடன் வெளியே வருகையில் இந்த கடினமான கேள்விகள் எல்லாம் ஒரு சில தேர்வு பயிற்சி மையம்களில் நடந்த மாதிரித் தேர்வுகளில் கேட்கப் பட்டுள்ளன என்ற தகவல் வெளியானது. இது குறித்து தேர்வாணைய செயலர் திரு.உதயச்சந்திரன் அவர்களிடம் முறையிடப்பட்டது . அவர் இதற்கு மேலும் ஆதாரங்களை திரட்ட சொன்னார். குற்றவாளிகளை நெருங்கும்வேளைய ில் அவர் மாற்றப்பட்டார். நன்றாக செயல்பட்ட இவர் ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.!
Quote
 
 
+4 #57 பாஸ்கர் 2013-01-02 23:50
சைதையார் என்கிற பொய்தையார். உங்கள் ஒட்டு மொத்த கட்டுரைக்குமான தலைப்பு இது. அழகாக ஒரே வரியில் சொல்லிவிட்டார் வாசகர். அந்த வாசகருக்கு நன்றி.
Quote
 
 
+9 #56 செந்தில்குமரன் 2013-01-02 23:48
சமூகத்தின் எல்லா அசிங்கங்களிலும் அவமானங்களிலும் இன்றைக்கு பத்திரிகையாளர்க ள் எந்த ரூபத்திலாவது இருக்கிறார்கள் பார்த்தீர்களா? அரசியல்வாதிகள் இந்த சமூகத்துக்கு எந்த அளவுக்கு கொடூரமானவர்களோ அதே அளவுக்கு கொடூரமானவர்கள் பத்திரிகையாளர்க ள். சின்ன வயதிலிருந்து போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் என்றால் சமூகத்தின் தேவையில்லாத ஜந்துவாகத்தான் நான் பார்ப்பேன். அவர்களை தூசியளவுக்குக்க ூட என் மனம் மதிக்காது. அந்த லிஸ்ட்டில் இப்போதைக்கு பத்திரிகையாளர்க ளையும் இணைத்து விட்டேன். பத்திரியாளர்கள் என்று யாராவது என்னிடம் அறிமுகப்படுத்தி க் கொண்டு விட்டால், மிதிக்கக் கூடாததை மிதித்தது போல உணருகிறேன். பெரியார் இன்றைக்கு இருந்திருந்தால் கட்டாயம் இப்படித்தான் சொல்லியிருப்பார ். பாம்பையும் பத்திரிகையாளனைய ும் கண்டால், பாம்பை விட்டு விடு. முதலில் பத்திரிகையாளனை அடித்துக் கொள் என்பதாகத்தான் இருந்திருக்கும் . அந்த அளவுக்கு இன்றைக்கு பத்திரிகையாளர்க ள் சமூகத்தின் விரோதியாக இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லாருமே எச்சில் பொறுக்கியாகத்தா ன் இருக்கிறார்கள். இதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். காரணம், அடிப்படையில் நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்தவந்தான். தொடர்ந்து அந்த சாக்கடையில் நீந்த பிடிக்காமல் சுத்தமாக ஒதுங்கி விட்டேன். இருந்தாலும் ஒரு காலத்தில் செய்த பாவங்களுக்கு குடும்பமாக சேர்ந்து கண்ணீர் சுமக்கிறோம். இப்படி பாவ காரியம் பண்ணுகிறவர்கள்த ான் பத்திரிகையாளர்க ள். காசு வாங்கும் பத்திரிகையாளனை கசாப் போல தூக்கிலிட்டால், அன்றைக்கு நான் நிம்மதியாகத் தூங்குவேன்.
Quote
 
 
0 #55 வாரண்ட் பாலா 2013-01-02 23:31
அன்புள்ள சவுக்கு, 44 வது பின்னூட்டம் நான் பதிந்தது. ஆனால், 24 பின்னூட்டத்தை நான் பதியவில்லை. அதனால், என்னுடைய பெயரில் 24 பின்னூட்டத்தை பதிந்தவர் என் பெயரில் உலவும் போலி. அதனால், அவருடைய மின் அஞ்சல் முகவரியையும் ஐ.பி. முகவரியையும் எனக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும். அட 24 வது பின்னின்னூட்டம் போட்ட போலியே, உன்ன மாதிரி ஆட்களைத்தானய்யா , சைதையார் என்னும் பொய்தையார் தேடிக் கொண்டிருக்கிறார ். வாரண்ட் பாலா என்றால், இவர் ஒருவர்தான் உலகத்திலேயே வாரண்ட் பாலா போலவும், இதற்கெல்லாம் பதிவு எண் பெற்றிருப்பது போலவும் பேசும் இவரெல்லாம் இணைய தளம் குறித்த எந்த விவரமும் தெரியாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. பாவம்...
Quote
 
 
0 #54 Warrant Balaw 2013-01-02 13:46
இதில், 44 வது பின்னூட்டத்தை நான் பதியவில்லை. 24 நான்காவது பின்னூட்டம் மட்டுமே நான் பதிந்தது. எனவே, சட்டத்துக்கு புறம்பாக எனது பெயரில் 44 வது பின்னூட்டத்தை பதிவு செய்தவரை கண்டு பிடிக்க எதுவாக பதிவாகியுள்ள மின்னஞ்சல் மற்றும் ஐ.பி முகவரிகளை உடனே எனக்கு அனுப்பி வைக்கவும்.

இதே ஐ.பி முகவரியில் இருந்து இத்தளத்தில் வேறு பின்னூட்டப்பட்ட ுள்ளதா என்பதையும் சரி பார்த்து தெரிவிக்கவும்.
Quote
 
 
+3 #53 Warrant Balaw 2013-01-02 13:45
[ஃஉஒடெ நமெ="வாரண்ட் பாலா"]பத்திரிகையாளர் கள் துரைசாமியின் துட்டுக்கு வாலாட்டும் கதையை மட்டும் ஏன் எழுதவில்லை சவுக்கு? துரைசாமியிடம் துட்டு வாங்கி மலத்தை நக்கும் பத்திரிகையாளர்க ளின் பட்டியலையும் வரிசையாகப் போட்டு தோலுரியுங்கள். விகடனில் ஆரம்பித்து ஹிந்து வரையில் இவரிடம் பொறுக்கித் திங்காத பத்திரிகையாளர்க ளே இல்லை. அதனால்தான், இந்த பேமானியின் கதையை யாரும் தோலுரிப்பதில்லை . நீயாவது அந்த காரியத்தைச் செய்தாய். இதே நிலைமைத் தொடர்ந்து தமிழகத்தின் பிரதான இடம் முழுவதும் மனித நேய அறக்கட்டளையில் படித்தவர்கள் வந்து அமர்ந்தால், அவர்களை வைத்து நாளை அரசாங்கத்தையே சைதை துரைசாமியால் மிரட்ட முடியும். அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியும். இது தெரிந்தால், அரசாங்கமே சைதை துரைசாமிக்கு பயந்தல்லவா போய்விடும். இப்படிப்பட்ட ஆபத்துக்கள் இருப்பதையெல்லாம ் யாரும் உணருவதில்லை. இல்லை, உணர மறுக்கிறார்கள். மொத்தத்தில் இந்த தலைமுறை பாழாகி விட்டது.[/ஃஉஒடெ]

இதில், 44 வது பின்னூட்டத்தை நான் பதியவில்லை. 24 நான்காவது பின்னூட்டம் மட்டுமே நான் பதிந்தது. எனவே, சட்டத்துக்கு புறம்பாக எனது பெயரில் 44 வது பின்னூட்டத்தை பதிவு செய்தவரை கண்டு பிடிக்க எதுவாக பதிவாகியுள்ள மின்னஞ்சல் மற்றும் ஐ.பி முகவரிகளை உடனே எனக்கு அனுப்பி வைக்கவும்.

இதே ஐ.பி முகவரியில் இருந்து இத்தளத்தில் வேறு பின்னூட்டப்பட்ட ுள்ளதா என்பதையும் சரி பார்த்து தெரிவிக்கவும்.
Quote
 
 
+1 #52 Narayan Viswam 2013-01-02 01:32
Very timely article. The contents shock the reader, but when you see the happenings around us it makes sense. You have done thorough research, excellent analysis, and the flow is good. Please write more such articles and open the public's eyes. We all know there are large number of wolves covered with cow-skin exist in all political parties which should be exposed. Hats off to you Sir for your courage, intellect, and service-mind.
Quote
 
 
+5 #51 திருப்பூண்டியான் 2013-01-02 00:51
தமிழ் மக்களின் நாடித் துடிப்பு... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றாமே... என்றெல்லாம் முகப்பில் வெட்கமே இல்லாமல் போட்டுக் கொண்டு பத்திரிகை நடத்தும் புலனாய்வு செய்தி பத்திரிகைகள் அல்லவா இந்த மாதிரியான விரிவான அலசல் புலனாய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்க வேண்டும்? ஆனால், அவர்களெல்லாம் சவ சவ பண்ணிக் கொண்டிருக்கிறார ்களே? கொள்ளைக் கூட்டத்திலும் இவர்களும் ஒருவர் என்பதாலா? இத்தனைக்கும் ஒழுக்கச் சீலர் காமராஜும் கடாமீசை வீரப்பனையே ஏமாற்றியசாலி கோபாலும் கூட இத்தாகைய கபடதாரியின் முகத்தை கிழிக்கவில்லையே . காரணம் என்ன இங்கே திருமாவேலன், அங்கே இளையசெல்வன், காமராஜ், பிரகாஷ் என்று ஒரு பட்டாளமே துரைசாமிக்கு அடிவருடும் பணியை செய்து கொண்டிருப்பதுதா ன்.
Quote
 
 
-1 #50 ஆராவமுதன் 2013-01-02 00:33
இந்த செய்தியை உங்களுக்கு யார் கொடுத்தார் என்பது எங்களுக்கெல்லாம ் நாங்கள் தெளிவாக அறிவோம். இங்கே லிங்க் இருக்கும் ஒரு இணையதள ஆசாமிதான் எழும்பூரில் உட்கார்ந்து கொண்டு இத்தனை செய்திகளையும் உங்களுக்குக் கொடுத்தது. ஏனென்றால், அவரும் அவருடைய ஆத்மார்த்த பத்திரிகையாளர் நண்பரும் ஒருமுறை பெரிய தொகைக்கு அடிபோட்டு துரைசாமியை அணுகிய போது, அவர் இவர்களை அ.தி.மு.க.வின் எம்.பி.யான தென் சென்னை பிரமுகரின் ஆள் என்று நம்பி, ‘அந்த ஆசாமியிடமே போய் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்...’ என்று சொல்லி அனுப்பி விட்டாராம். போன பத்திரிகையாளர்க ள் இருவரும் அடையாறு வழியாக பெசன்ட் நகர் நோக்கி ஓடினார்களாம்.
Quote
 
 
+3 #49 அநபாயன் 2013-01-02 00:29
இப்படிப்பட்ட கேடுகெட்டச் செயலுக்குத் தெரிந்தே துணை போகும் அபுல் ஹசன், அலெக்ஸாண்டர், பூர்ணலிங்கம், வி.சி. குழந்தைசாமி போன்றவர்கள் அரசுப் பணியில் இருந்த போது எத்தனை நேர்மையாக நடந்திருப்பார்க ள் என்பதைப் பாருங்கள். அலெக்ஸாண்டரை எல்லாம் நான் நேர்மையாளராகப் பார்த்து விட்டேன். இப்படி நினைத்ததால், என்னையே நான் தற்போது வெறுக்கிறேன். ஆனால், அவர்களுக்கெல்லா ம் கொஞ்சமும் எதுவும் கிடையாது போல...
Quote
 
 
+3 #48 மனிதன் 2013-01-02 00:26
சூத்திரக்கார சைதை துரைசாமியை முதல்வர் ஜெயலலிதா நம்புவதால்தான் இத்தனையும் நடக்கிறது என்பது நிஜம். ஆனால், இந்த கபடவேடதாரி என்ன செய்து கொண்டிருக்கிறார ் தெரியுமா? ஜெயலலிதாவுக்கு தன்னுடைய செயல்பாடுகள் எதுவும் பிடிக்கவில்லை. அவள் ஆணவக்காரி. இவளாலேயே நான் அரசியலை விட்டு விலகப் போகிறேன் என்றெல்லாம் சொல்லி, ஜெயலலிதாவுக்கு இவருக்கும் ஏழரைப் போலக் காட்டி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார ். அதனால், உங்கள் செய்தி கட்சிக்காரர்கள் நம்ப முடியாதவை. அதுக்காக நாம என்ன செய்ய முடியும்? எல்லாம் தலையெழுத்து. ஆனா, நல்லவர்கள் போர்வையில் உலா வரும் இவர்களை மக்கள் விட்டாலும் கடவுள் விட மாட்டார். சைதையாரின் லீலைகள் குறித்து நிறைய விசாரியுங்கள். கதை கதையாக வரும். தேர்தல் நேரத்தில் தன்னைக் கொல்ல விமான நிலையம் வரையில் ஆட்கள் பின் தொடர்ந்து வந்ததாக, ஜூனியர் விகடன் ஆட்களுக்கு காசு கொடுத்து செய்தி போட வைத்து, பரிதாபம் தேட விழைந்தவர்தான் இந்த சைதையார் என்று அழைக்கப்படும் பொய்தையார்.
Quote
 
 
+7 #47 raajvi 2013-01-02 00:21
அட, சவுக்கே... துரைசாமி குறித்து செய்தி வெளியிட்டு கபட வேடதாரியின் முகத்தை கிழித்ததில் எங்களுக்கெல்லாம ் சந்தோஷம்தான். ஆனால், பாரி வேந்தர் என்று தன்னைத் தானே விளித்துக் கொண்டு கல்வி விபசாரம் செய்து இந்த நாட்டையெ குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கும் பச்சைமுத்துவையு ம் அவருடைய மகனையும் அவர்களுடைய செக்ஸ் லீலைகளையும் விசாரித்து பெரிய கட்டுரைப் போடவும். விசாரித்தால், புதிய தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்க ளும் பி.ஆர்.ஓ.க்களும் தயாராக காத்திருக்கிறார ்கள். உடனே இறங்கி விசாரியுங்கள். கத்தை கத்தையாக செய்திகள் கொட்டும். செய்திக்காக காத்திருக்கிறோம ்.
இங்கனம்,
பச்சைமுத்துவால் பாதிக்கப்பட்டவர ்கள்.
Quote
 
 
+5 #46 kadavul 2013-01-02 00:17
சென்னை பெருங்களத்தூரில ் ஒரு வயதான அம்மா. அவருடைய கணவர் என்று இரன்டு பேர் முரட்டு வீடு ஒன்றை பூர்வீகச் சொத்தாக வைத்திருந்தார்க ள். அந்த வீட்டை மிரட்டிப் பிடுங்குகிறார் சைதை துரைசாமி. அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. முதியவர்களை வீட்டை விட்டு விரட்டிவிடும் புனிதமான பணியில் ஈடுபட்டது யார் தெரியுமா? இந்தியன் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் வாராகி என்பவர்தான். இவருக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து, சைதை துரைசாமி பெரியவர்களை விரட்டி வீட்டை காலி செய்யப் பணித்தாராம். இதேபோல தன்னுடைய அடாவடிகளுக்கு சைதை துரைசாமி பத்திரிகையாளர்க ளையும் அடியாட்களாக பயன்படுத்துவார் . நிறைய விசாரிங்க... நிறைய தகவல்கள் வரும். தின்ந்தந்தி டி.வி.யில் பணியில் இருககும் பாண்டே, மை.பா. நாராயணன், வி.சந்திரசேகரன் ஆகியோரெல்லாம் துரைசாமியிடம் ரெகுலர் மாமூல் லிஸ்ட்டில் இருப்பவர்கள். தந்தி டி.வி.யில் துரைசாமிக்கு பங்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இவர்களையெல்லாம் தந்தி டி.வி.யில் சேர்த்து விட்டதே இந்த துரைசாமிதான். இப்பப் புரியுதா என்ன நடக்குதுன்னு? கடவுளே... கடவுளே... எங்க போய்டா சாமி முட்டிக்கிறது?
Quote
 
 
+3 #45 kirishnakumaar 2013-01-02 00:12
இவர் கொளத்தூரில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட போது, தில்லு முல்லு நடந்ததாம். அதை தட்டிக் கேட்டு இவர் வழக்குப் போட்டிருக்கிறார ாம். என்னா கூத்துப் பாருங்க சாமி.
Quote
 
 
+9 #44 வாரண்ட் பாலா 2013-01-02 00:10
பத்திரிகையாளர்க ள் துரைசாமியின் துட்டுக்கு வாலாட்டும் கதையை மட்டும் ஏன் எழுதவில்லை சவுக்கு? துரைசாமியிடம் துட்டு வாங்கி மலத்தை நக்கும் பத்திரிகையாளர்க ளின் பட்டியலையும் வரிசையாகப் போட்டு தோலுரியுங்கள். விகடனில் ஆரம்பித்து ஹிந்து வரையில் இவரிடம் பொறுக்கித் திங்காத பத்திரிகையாளர்க ளே இல்லை. அதனால்தான், இந்த பேமானியின் கதையை யாரும் தோலுரிப்பதில்லை . நீயாவது அந்த காரியத்தைச் செய்தாய். இதே நிலைமைத் தொடர்ந்து தமிழகத்தின் பிரதான இடம் முழுவதும் மனித நேய அறக்கட்டளையில் படித்தவர்கள் வந்து அமர்ந்தால், அவர்களை வைத்து நாளை அரசாங்கத்தையே சைதை துரைசாமியால் மிரட்ட முடியும். அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க முடியும். இது தெரிந்தால், அரசாங்கமே சைதை துரைசாமிக்கு பயந்தல்லவா போய்விடும். இப்படிப்பட்ட ஆபத்துக்கள் இருப்பதையெல்லாம ் யாரும் உணருவதில்லை. இல்லை, உணர மறுக்கிறார்கள். மொத்தத்தில் இந்த தலைமுறை பாழாகி விட்டது.
Quote
 
 
+8 #43 balu01 2012-12-31 21:55
பலருக்கும் தெரியாத உண்மைகளை மிக துல்லியமான புள்ளிவிபரங்களோ டு சொல்லி பசுத்தோல் போர்த்திய சுயலாப சமூக சீர்கேட்டிற்கு அடித்தளம் அமைக்கும் தீய சக்தியின் முகமூடியை கிழித்தமைக்கு மிக்க பாரட்டுக்கள்.
Quote
 
 
+6 #42 iniyan 2012-12-31 20:32
ஐயா சவுக்கு,

லிஸ்ட் போட்டு நல்ல அரசியல்வாதிகளை காட்டுவது என்பது மெத்தக் கடினம் என்று ஆகி விட்டது. நிங்கள் ஒன்று செய்யலாம். கடைசியில் இருந்து ஆரம்பித்தால் பொது மக்களூக்கு உதவியாக இக்ருக்கும். குறைவான தீய சக்தியை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும். செய்வீர்களா?
Quote
 
 
+1 #41 guduvancheri govind 2012-12-31 13:29
araseella ithalam satharanam appa :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+1 #40 D. Ramchandran 2012-12-31 13:26
சாத்தப்பன், மனித நேய அறக்கட்டளை பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது, அதைத் தான் இராஜா சேதுபதி சுட்டிக்காட்டிய ுள்ளதாக எனக்கு படுகிறது. 2006லிருந்து என்று சவுக்கே குறிப்பிட்டுள்ள ார்.
Quote
 
 
+3 #39 sathees 2012-12-30 10:30
Moneyத நேய அறக்கட்டளை. :lol:
Quote
 
 
+4 #38 suvaiinbam.blogspot. 2012-12-30 01:00
அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும்.
மிக சரியான தலைப்பு :o :cry: :-? :sad:
Quote
 
 
+2 #37 tamilscafe 2012-12-29 21:33
A wonerful effor..
Quote
 
 
0 #36 kaankirasu 2012-12-29 18:01
மக்கள் விரும்பி 2012:
அதிமுகவில் வேறு யாரை எதிர்பார்கிறீர் கள்.
அப்ப தி மு க விலிருப்பவர்கள் எல்லாம் புனிதபயணமாக அரசியல் பயணத்தில் பங்கெடுத்து இருப்பவர்களோ???

இது எதிரணியின் சவுக்காட்டம்... சமீபகாலமாக சவுக்காட்டம் ரொம்ப ஜோரா நடக்குது?? குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் ...............
Quote
 
 
+9 #35 karthiksaran 2012-12-29 03:20
very big hats off for your work, really i wonder how do you collect these details and publish as a article to public.
Quote
 
 
+6 #34 Seshan 2012-12-28 23:58
This Duraisamy according to many who know hum really well is a born criminal. He reportedly pays media on a monthly basis to ensure nothing is said or written against him anywhere. Whether it is Nakheeran Kamaraj or the key person in Juvi or his big boss Sivanthi, Duraisamy reportedly has a price for all. Alas! He must know money cannot win all. Power is not permanent. Many are gunning for him and when the fortune of wheel turns, Duraisamy may be in deep trouble. He has antagonised too many people apparently and reportedly never true to anyone.this article is a fantastic piece. Great job done!
Quote
 
 
-2 #33 V. EBINESAR 2012-12-28 22:24
sowkanna..............MAYAR DURAISAMI ooda thoRgam gunatha pathan aiyoooooooooooo o :-*ITHA PATHA MGR song onnu ninnanavuku varuthu :-* :-* :-* :-* :-* :-* :-* ETHANAI KALLAM THAN EMATRU VAAR INNTHA NAATILAYYYYY SONTHA NAATILAYYY nam NATTILAYYYYY SATHIYAM THAVARATHA UTTHAMAN POLAVAY EMATRUKIRAAAAAA AA KARUNANITHI IIDAM UURAVAI VAITHU KONDU purachithalvi AMMA vaium KALAGAM THAIAY KATII KODUKIRAAAIIIII INNNUM ETHANAI KALLAM THAN EMATRU VAAR INNTHA NAATILAYYYYY SONTHA NAATILAYYY nam NATTILAYYYYY............ 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)
Quote
 
 
+7 #32 நெல்லை பாலாஜி 2012-12-28 21:50
அடடே !!!! படிச்சவன் சூதும் ..........ரொம்ப நல்ல இருக்கு .. அரசாங்கம் என்பது , ஒரு கொள்ளை கும்பல் என்பது,கூடிய விரைவில் தெரிய வரும்..
Quote
 
 
+3 #31 Robinhood 2012-12-28 20:26
Super
Quote
 
 
+13 #30 பாரதிராஜா 2012-12-28 19:53
நல்ல பணி. நம் சமூகத்தில் இத்தகைய தோலுரிப்புகள் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. நிரூபிக்கப் பட்ட திருடர்களையே நம்பிக் கொண்டும் அவர்களுக்காக மூர்க்கத்தனமாக வாதிட்டுக் கொண்டும் இருக்கும் ஒரு முட்டாள்க் கும்பல் வேறு இருக்கிறது. இதற்கிடையில் இன்னும் வெளிவராத மோசடிகளையும் வெளிக் கொண்டு வர வேண்டிய பணியும் யாராவது செய்ய வேண்டியுள்ளது. அதைச் சவுக்கு செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்க ிறது.
Quote
 
 
+6 #29 arunyog 2012-12-28 15:33
திராவிட அரசியல்வாதிகளீல ் நல்லவர்களை
தேடுவது மலத்தில் அரிசி பொறுக்குவதற்
சமம்- சிறியார்
Quote
 
 
+5 #28 NAAN TAMIZHANALLA 2012-12-28 15:15
"வாழத் தெரியாதோர் பலர் வாழும் நாட்டில் ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடக்கும்" -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Quote
 
 
+8 #27 Heinz 2012-12-28 09:56
Dear Savukku Shankar,

Greetings and my bows for your efforts.

TN Health minister Dr. Vijay is doing lot of corruption. I am poiniting few below. Please try to collect more details and expose him.

1. He takes Rs. 3 Lakhs for doctors transfer. Recently two doctors got transfer to Salem Hospital like this.

2. There is a speculation that staff nurses transfer counselling will be held by disturbing more than 4,5 years service people in one location. So staff nurses in same taluk or block are getting mutual transfer by paying 1.1 Lakhs each as bribe. (afraid that they may be transferred to some far away places).

3. No transfer counselling has been conducted for last 4,5 years in General side DMS, ESI DMS and DPH. Only DME side transfer counselling is conducted.

4. Pochampalli (Krishnagiri Dist) GH has been upgarded from PHC, but no doctor has been posted additionally. Only 1 doctor was there and he is on medical leave for sometime now. 1 doctor from Krishangiri is deputed there everyday. No use of GH upgradation. People money wasted.

5. As per rules, Doctors with MBBS degree are allowed to work only in PHC or Dispensary and doctors with PG Diploma or MD or MS are allowed to work in GH, but one MBBS doctor is posted in Vellore ESI Hospital after getting bribe.

6. Senior doctors in TNGDA (http://www.tngda.net/association/index.php) have good contact with TN health secretary and health minister, so they cancelled the order (within 24 hours time) which asked the senior doctors also to perform 24 hours duty.
Quote
 
 
+21 #26 மக்கள் விரும்பி 2012-12-28 01:20
அதிமுகவில் வேறு யாரை எதிர்பார்கிறீர் கள். நல்லவர்களைய? உத்தமர்கலையா?, அப்படி என்றால் அதிமுகவில் இடம் இல்லை. திருடர்கள், பொறுக்கிகள், அநியாயக்காரர்கள ் போன்றவர்கள் தான் அங்கு இருக்க முடியும். ஏன் என்றால் அக்கட்சியின் தலைவியும் அப்படி பட்டவர் தானே.
Quote
 
 
-30 #25 ravikumarsukumar 2012-12-28 00:52
these allegations are baseless and so childish.
Quote
 
 
+29 #24 Warrant Balaw 2012-12-27 23:12
அவரோடு பழகிய ஓரிரு முறைகளிலேயே, இப்பதிவின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை என அறிந்தவன், நான். மனிதநேய அறக்கட்டளை என்கிற பெயரில் மனிதநேயத்தை சாகடிப்பவர்.
Quote
 
 
+13 #23 bad boy 2012-12-27 22:59
he objected to disclose income tax returns of his trust, his and his wife income tax returns for my rti application
Quote
 
 
+24 #22 குசும்பன். 2012-12-27 22:08
திருவாளர் துரைச்சானியாரின ் வரலாற்றை எம்ஜீஆர் காலத்தை கணக்கிட்டுப்பார ்த்தால் அவருக்கு கிட்டத்தட்ட 70 வயதை எட்டிப்பிடித்தி ருக்க வாய்ப்பிருக்கிற து படம் ஒரு 28 அல்லது 30 வயதைத்தான் காட்டுகிறது. அதெப்படி?
Quote
 
 
+18 #21 bsb 2012-12-27 22:01
Very bold news,Keep it up savukku team.
Quote
 
 
+13 #20 bsb 2012-12-27 21:59
Every citizen want to think about it...Great news.
Quote
 
 
+22 #19 ஊர்க்குருவி. 2012-12-27 21:59
எப்படிப்பார்த்த ாலும் எந்த ஆட்சிவந்தாலும், அனைத்து உயர் அதிகாரிகளும், அரசியல்வியாபாரி களும், மிக மோசமான முறைகேடுகளையும் கிரிமினல் வேலைகளையும்தானே செய்துகொண்டிருக ்கின்றனர். கட்டுமரம் கருணாநிதி என்ற கடைந்தெடுத்த தீயசக்தி ஆட்சியை கைப்பற்றினாலும் சரி, நிர்வாகத்தில் சர்வாதிகாரியாக எவரது பேச்சையும் காதில் வாங்காமல் நினைத்ததை நடத்தும் ஜெயலலிதா ஆட்சியை நடத்தினாலும்சரி ஊழல் முறைகேடு ஒன்றுக்கு ஒன்று குறைந்ததாக இல்லை. ஆட்சியை கனவில்க்கூட காணாத பாமக ராமதாஸர், விசி திருமா கட்சிகளும் கிரிமினல் ஊழல் என்றுதான் செய்திகள் வருகின்றன. தெரியாமல்த்தான் கேட்கிறேன் இதற்கு முடிவுதான் என்ன. டில்லிக்கதையை கேட்டால் அது பெரும் சோகக்கதையாக இருக்கிறது. தாத்தா அப்ப்துல்லா கலாம் அவர்களைக்கேட்டா ல் குழந்தைகளே வல்லரசை தரிசிக்க தயாராகுங்கள் என்று குருவியின் குரலில் பிரசங்கம் செய்கிறார். எனக்கென்னவோ ஆப்கானிஸ்தான் நிலைதான் எப்போதும் ஞாபகத்துக்கு வருகிறது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 28 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1327
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week70579
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month273311
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795430