முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆண்டிமுத்து ராசாவின் வேட்டியை அவிழ்த்த அமெரிக்க பேப்பர். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 37
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010 22:05

 

 

இந்திய ஊழலின் இதயத்தில் பொறுத்தமற்ற மனிதர்

இப்படித்தான் நியூயார்க் டைம்ஸ் ஆண்டிமுத்து ராசாவை வர்ணிக்கிறது. இன்று நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையை சவுக்கு தனது வாசகர்களுக்காக உடனுக்குடன் மொழி பெயர்த்து வழங்குகிறது.

 

ஒரு சாதாரண ஊரில் உள்ள ஒரு தென்னிந்திய மாநிலத்தின் பிராந்தியக் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர்.   எப்படிப் பார்த்தாலும் தொலைத் தொடர்புத் துறையிலோ தொழில் வணிகத்திலோ சிறிதும் அனுபவம் இல்லாத ஒரு நபர் மிக வேகமாக வளர்ந்து வரும் செல் பேசி சந்தையை நிர்வகிக்கும் அமைச்சராவார் என்பதை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.

 

 a.raja_5

ஆனால் அவரிடம் என்ன தேவையோ அது இருந்தது. காங்கிரசின் மிக முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரின் எக்கு போன்ற பின்புலம் அவருக்கு இருந்தது. இவருடைய 16 உறுப்பினர்களின் ஆதரவு இல்லையென்றால், அலைபாயும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அமைக்கப் பட்டிருக்கும் அரசு நிலைகுலையும்.

 

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கப் படும் ஊழலின் மையப் புள்ளியாக ராசா உள்ளார்.   அவர் தனது பதவியை பயன்படுத்தி விலை மதிப்புள்ள செல்பேசியின் ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை 2008ம் ஆண்டில் அடி மாட்டு விலைக்கு விற்றார் என்பதுதான் அவர் குற்றச் சாட்டு. இது தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் ஏறக்குறைய இந்திய கஜானாவுக்கு 40 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கும் என்று கடந்த வாரம் இந்தியாவில் வெளியான ஒரு புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பாக வெளியான இரண்டு முக்கிய அரசியல் ஊழல்களை அடுத்து இந்த ஊழல் வெளியாகியிருப்பது இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அரித்துவிட்டிருக்கிறது.   பரவலாக மிக நேர்மையான மனிதர் என்று அறியப்படும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது இந்த விஷயத்தை துரிதமாக புலனாய்வு செய்யாததற்காக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளத்தை இந்த ஊழல் ஆட்டம் காண செய்யும்.

ஒரு சாதாரண சிற்றூர் அரசியல்வாதியாக இருந்த ராசா இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆக முடிந்தது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவும். சாதி அடிப்படையிலோ, குடும்ப அடிப்படையிலோ உருவாகும் சிறிய பிராந்திய கட்சிகள் இந்தியாவில் மிகப் பெரிய சக்தியாக விளங்கி அரசு இயந்திரத்தின் வலுவான பாகங்களை ஆக்ரமித்து தங்கள் கட்சி மற்றும் சொந்த கஜானாக்களை நிரப்பிக் கொள்கின்றன.

பல கட்சி கூட்டணி ஆட்சி என்றாலே, கொள்கைப் பிடிப்பு இல்லாத சிறிய கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்கிறார், அரசியல் நோக்கர் ப்ரேம் ஷங்கர் ஜா.

1989ம் ஆண்டு ராணுவ பேரங்கள் தொடர்பாக நடைபெற்ற ஊழல் காரணமாக தோல்வியை சந்தித்த ராஜிவ் காந்தி அரசாங்கத்துக்குப் பிறகு பாராளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக சிறிய, பிராந்திய கட்சிகளின் துணையோடு அரசு அமைப்பது என்பது, ஒரு சிக்கலான விவகாரமாகவே அமைகிறது. இது போன்ற பிராந்தியக் கட்சிகளுக்கு தேசிய அளவில் கொள்கை ஏதும் இல்லாமல் மத்தியில் கிடைக்கும் அதிகாரத்தை கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பாகவே பார்க்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஊழல்களுக்கு பஞ்சமே இல்லை.   ஆனாலும் அரசின் முக்கிய துறைகளான உள்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை போன்ற துறைகளை நீண்ட அனுபவம் மற்றும் சிறந்த தலைவர்களிடம் கொடுத்துள்ளது. ஆனால் கூட்டணி அரசாங்கத்தின் யதார்த்தம் பெரிய துறைகளை சிறிய கூட்டணிக் கட்சிகளிடம் கொடுத்து, அது கேள்விக்குள்ளாகும் அரசியல்வாதிகளை முக்கிய பதவிகளில் அமர்த்துவதில் போய் முடிகிறது.

இந்த கூட்டணி அரசியல் மிக தர்மசங்கடமான ஊழல்களுக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும் கடந்த காலத்தில் வழி வகுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சி தலைவராகவும், மத்திய நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த கிழக்கு மாநிலம் ஜார்கண்டைச் சேர்ந்த ஷிபு சோரேன் என்பவர் 2006ல் ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டதற்காக பதவி விலக நேரிட்டது.   மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளை தோற்கடித்து தனது கட்சியான திரிணாமூல் காங்கிரசை பதவியில் அமர்த்துவதையே ஒரே லட்சியமாகக் கொண்ட மம்தா பானர்ஜியின் கையில் தான் இந்தியாவின் மிகப் பெரிய வேலை வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே இருக்கிறது.

திமுக என்கிற ராசாவின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு காலத்தில் தமிழ் தேசியம் பேசுகிற விடுதலை இயக்கமாக இருந்து வந்தது. ஆனால், தனது கொள்கைகளை ஏறக்குறைய அந்த கட்சி கைவிட்டு விட்டது. எண்பதுகளில் உள்ள, சக்கர நாற்காலையை நம்பியுள்ள மு.கருணாநிதி மற்றும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அவரது வாரிசுகள் திமுகவை ஒரு அரசியல் கட்சியாக இல்லாமல் குடும்ப தொழில் சாம்ராஜ்யமாக நடத்துவதாகவே தெரிகிறது.

2004ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, அதன் எதிரியான பிஜேபியின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுக காங்கிரஸ் அணிக்கு வந்தது. இதற்கு பலனாக திமுகவுக்கு தொலைத் தொடர்புத் துறை போன்ற பல்வேறு துறைகள் வழங்கப் பட்டன.

கருணாநிதியின் கொள்ளுப் பேரனும் மீடியா ஜாம்பவானுமான தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகுமாறு டெல்லிக்கு அனுப்பினார் கருணாநிதி. ஆனால் மாறனுக்கும் கருணாநிதியின் மூத்த மகனுக்கும் முட்டிக் கொண்டது.

 

குடும்பச் சண்டையை சரிக் கட்டுவதற்காக மாறனுக்கு பதிலாக அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஆனால் கட்சியில் மிகப் பெரிய அதிகார மையமாக உள்ள தனது மகள் கனிமொழியோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள ராசாவை தேர்ந்தெடுத்தார்.

 

ராசா கல்லூரி நாட்களிலேயே அரசிசியலில் ஈடுபட்டவர். இவர் இதற்கு முந்தைய அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார்.   தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படும் தலித் சமூகத்தை சேர்ந்த முக்கியமான அரசியல்வாதியாக டெல்லி வட்டாரத்தில் அறியப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவருக்கு பெரிய பதவி கொடுப்பதால் தலித் வாக்குகளை பெற முடியும் என்றும் நம்பப் பட்டது.

“அவர் யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல, அதுவே அவருடைய பலம் மற்றும் பதவிக்கான தகுதி“ என்கிறார் தமிழ்நாடு அரசியலை பற்றி ஏராளமாக எழுதியவருமான வாசந்தி.

கட்சியை கவனமாக பொறாமை உணர்வோடு பரம்பரைச் சொத்து போல பாதுகாத்து வரும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கு வேண்டுமானால் ராசா அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஸ்பெட்ரம் விற்பனையை கையாண்ட விதம், இந்தியாவின் சிறந்த அரசாங்கம் என்று கருதப்பட்ட ஒரு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குலைத்து விட்டது.

இந்த ஊழல், இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகளுள் ஒருவர் என்று கருதப்படும் மன்மோகன் சிங் மீது கூட கரி பூசி விட்டது.   யாருமே சிங் ஊழலில் சம்பந்தப்பட்டவர் என்று குறை சொல்லாவிட்டாலும் கூட, கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ராசா கையாண்ட விதம் குறித்து விசாரணை கோரிய ஒரு மனுவை தாமதப் படுத்தியதற்காக குறை கூறியது.

யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்று மன்மோகன் சிங் உறுதி கூறியிருந்தாலும், உடனடியாக ராசாவை பதவி நீக்கம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி, காங்கிரஸ் கட்சி பதவியையும் கூட்டணியையும் காப்பாற்றுவதற்காக எந்த கொள்கையை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் என்ற முடிவை எடுக்க வைக்கிறது.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ராசா கூறினாலும் நவம்பர் 14 அன்று ராஜினாமா செய்தார். இந்தியாவின் சிபிஐ புலனாய்வை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில வாரங்களில் காங்கிரஸ் கட்சியே ஊழல்களை சந்தித்தது. மோசமான தயாரிப்பு ஏற்பாடுகளை செய்திருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பொறுப்பாளராக இருந்த மூத்த அரசியல்வாதி அவர் வகித்த ஒரு சாதாரண கட்சிப் பதவியைக் கூட ஊழல் புகார் காரணமாக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. மும்பையை தலைநகராகக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் அவருக்கும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும், போரில் கணவனை இழந்த கைம்பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட வீடுகளை அபகரித்த குற்றத்திற்காக ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டார்.

 

இது போன்ற ஊழல்கள், 2014 தேர்தலில் வெற்றி பெற்று முழுப் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுலின் கனவை தகர்த்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

Comments  

 
0 #83 ஜெகன் நாதன் 2011-04-27 10:16
Quoting vasanthi
"அடைந்தாள் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றவர்கள் நாட்டைப்பற்றி கவலைபடாமல் அரசியலுக்கு வந்தவர்களிடன் நாட்டு நலனை எதிர்பார்த்தால் அது மக்களோட தவறேதவிர அவன்கதவரு இல்லை ஊழல் பெருச்சாளிகளை எதுக்கு அதிகாரத்துக்கு வரவிடுகிரீர்கள் .அப்புறம் குத்துதே குடையுதேன்னு கூப்பாடு போடுகிறீர்கள் அடுத்தமுறை தேர்தல்வரும்போத ு ஓட்டு கேட்டு வரும்போது கொள்ளை அடிச்ச பணத்துல பங்கு கேளுங்க இல்லேனா ஒட்டு போடதீங்க"

" சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்"
"அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு". திராவிட நாடை அடையவில்லை. அடைந்த நாட்டை சுடுகாடு ஆக்குவோம்.
"வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது"
நாம் சொல்லும் பொழுது தெற்கு தேயவில்லை, நாம் சொன்னதால் இன்று தேய வைத்தோம்
Quote
 
 
0 #82 Arulpari 2011-02-02 11:22
:-) Anbu savuuku,ennamo ponga, onnum puriyala.Ivanellam eppadiinnum irukkan?
Quote
 
 
+1 #81 ahr 2011-01-29 15:24
Please write about maaran's SUND DIRECT office land grabbing at OMR
Quote
 
 
+1 #80 marypushpam 2011-01-22 09:17
Quoting குலசேகரன்:
1. வழக்கமாக இந்த வடஇந்தியக்காரப் பயலுக அனைவரும் ஹிந்தியில்தான் பேசுவார்கள்.
ஆனால் இந்த பத்திரிக்கையாளர ்களின் டெலிபோன் (ஒட்டுக்கேட்கப் பட்ட) உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளதே ஏன்??

2. 2009திலேயே இந்த ஒட்டுக் கேட்பு நடந்துள்ளது. அப்படியென்றால் வட இந்திய முக்கியமான பத்திரிக்கையாளர ்கள் அனைவரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்டுக்கொண்டிர ுக்கப்படுகின்றன வா.

3. அப்படியென்றால் தமிழ்நாட்டில் நடைபெற்ற / பெறும் ஒட்டுக்கேட்பு சம்பவங்கள் ஒன்றும் தவறானதல்ல.


ottu ketpathai ellam veliyidunkal appathan arasiyalvathika lum payapaduvarkal.
Quote
 
 
-4 #79 rajesh88 2011-01-19 10:58
r u tamalian? Non-Sence....... go and die. u know abt our culture. vantharai valavaikum panpadu tamil than da!
Quote
 
 
0 #78 Makkal 2011-01-07 12:20
kavinar kanimoli
Quote
 
 
+1 #77 ரெக்ஸ் 2010-12-28 19:20
Quoting உளவாளி:
Quoting சிங்கமுத்து:
Quoting Joseph:
உங்களுக்கு ஒன்று சொல்ல நினைக்கிறேன் சவுக்கு, இங்கே வருபவன் படிப்பவன் உங்களை போற்றுபவன் எல்லாம் சமூக அக்கரையாளனோ நவீன நேதாஜியோ பிரபாகரனோ அல்ல. எல்லாம் மார்டன் டே டீக்கடை பெஞ்ச் பாய்ஸ். இருந்தாலும் உங்கள் பணியைப் பாராட்டுகிறோம்.


வழிமொழிகிறேன்


நானும் வழிமொழிகிறேன்



பாஸ்..... அந்த மாடர்ன் டீக்கடை பெஞ்ச் பசங்கதான் ஓட்டு போட கியுவுல நிப்போம்பா
Quote
 
 
-1 #76 gchithirai 2010-11-30 16:53
makkal thamzhigam poal savukku samuga martram seeum.
Quote
 
 
-16 #75 Panivazhan 2010-11-29 16:56
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
-11 #74 Panivazhan 2010-11-29 16:56
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
-4 #73 praburaja 2010-11-27 00:01
-1 #72 TAMIZAN

we must need army revalution in India.

ராணுவம் ஊழல் செய்யாதா?. இன்று நாட்டில் நடக்கும் ஊழல்களின் ராணுவத்தின் பங்கு கணிசமானது. கருணாநிதி போன்றவர்கள் செய்தால் நாம் சவுக்கு போன்ற இணைய தளமாவது நடத்தலாம். ராணுவம் நடத்தினால் நாம் பேச கூட முடியாது.
Quote
 
 
-3 #72 TAMIZAN 2010-11-26 21:45
Indiayavil ranuva purachi varavendum apazthuthan inntha thirudarlkal kollai adithathai konduvara mudiyum,

we must need army revalution in India.
Quote
 
 
+3 #71 praburaja 2010-11-25 23:13
இந்த கட்டுரையின் தலைப்பு தவறு. ஏற்கனவே நிர்வாணமாக நிற்கும் ராசாவை நியூயார்க் டைம்ஸ் எப்படி வேட்டியை அவிழ்க்க முடியும்?. இந்த ஊழல் வெளிவரும் முன்பு நியூயார்க் டைம்ஸ் இந்த கட்டுரையை எழுதி இருந்தால் பாராட்டி இருக்கலாம். இந்த கட்டுரையின் நோக்கம் வெளிநாட்டு பணம் இந்தியாவின் ஊழலுக்கு ஒரு பெரிய காரணாமாக இருக்கும் உண்மையை மறைத்து , காங்கிரஸ் கட்சிக்கு இதை சாதகமாக்கி , முழு பொறுப்பையும் ராசாவின் மேல் போடும் ஒரு முயற்சி. ராசா, மன்மோகன், பன்னாட்டு நிறுவனங்கள் அனைவரும் இதற்கு பொறுப்பு.
Quote
 
 
+16 #70 SMS 2010-11-25 22:03
சிபிஐ:- Spectrum ஊழல் பணம் எங்க?.

ராசா:- அது கலைஞர் கிட்ட இருக்கு.

சிபிஐ:-WHY?

ராசா : கருணாநதி சொன்னார் “Money”ய நான் வச்சிகிரன், “kani“ய நீ வச்சுக்கோ நு...but அந்த டீல் எனக்கு பிடுசிருந்து...
Quote
 
 
+12 #69 விமலன் 2010-11-25 19:14
சாவுக்கு அவர்களின் பார்வைக்கு,
ஜெ, நகை அணிவதை எல்லாம் படம் போட்டு காட்டிய வீரர்கள். இன்று கொலைஞ்சர் பேரன் வீட்டு திருமணத்தில் அவர்கள் வீட்டு பெண்கள் மாட்டிக்கொண்டு வந்தது எல்லாம் பித்தலையா? வெங்கலமா? என்பதை ஒரு பத்திரிகை கூட எழுதவில்லை இதுதான் பத்திரிகை நீதியா? உன்னையும் சேர்த்துதான்.
Quote
 
 
+2 #68 உளவாளி 2010-11-25 15:26
காளையார்கோவில் ஒன்றிய சேர்மனாகவும் தி.மு.க ஒன்றிய செயலாளராகவும் இருப்பவர் மேப்பல் சக்தி. சுருட்டுவதில் மகா வல்லவர். ஒரு குண்டு பல்பு வாங்கினால்கூட கமிஷன் பார்த்திடுவார்ன ா பாத்துக்கங்க.

இவரைப் பற்றி அந்த ஊர் லோக்கல் தினகரன் ரிப்போர்ட்டர் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார் . இதனால் எரிச்சலடைந்த மேப்பல், சம்பந்தப்பட்ட நிருபரைக் கூட்டு, “மதுரை தினகரன்ல மூனு பேரை கைமா பண்ணது மறந்து போச்சா? தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டியிருக்கி றார்.

பயந்துபோன நிருபர் ஹெட் ஆபீசுக்கு போன் அடித்திருக்கிறா ர்.

“நீ எதற்கும் கவலைப்படாதே. தி.மு.க.வை எதிர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு நாம் வந்துவிட்டோம். துனிந்து எழுது” என்று உற்சாகமூட்டி இருக்கிறார்கள்.

ஆனால், நிருபரது குடும்பமோ, “எதுக்குப்பா வீன் வம்பு! அவங்க இன்னிக்கு வெட்டிப்பாங்க, நாளைக்கு ஒட்டிப்பாங்க. நீ பேசாம இரு” என்றார்களாம். நிருபர் இப்போது நடுங்கியபடிதான் வேலை செய்கிறாராம்.

சந்தேகமிருந்தா, நிருபர்கிட்டயே போன் போட்டு விசாரிச்சுக்கலா ம்.

கேடி பிரதர்ஸா, கொக்கா?
Quote
 
 
0 #67 உளவாளி 2010-11-25 15:10
ராசாவின் ராஜினாவை பின் நின்று இயக்கியதே கேடி பிரதர்ஸ்தான் என்பதை நேறு நடந்த கூட்டம் ஒன்றில் ஜெகத் கஸ்பர் போட்டு உடைத்துவிட்டார் .

”தகவல் தொடர்புத் துறைய நான்கைந்து பேர் மட்டுமே வைத்துக்கொண்டு காலாகாலத்துக்கு ம் அனுபவிக்கவேண்டு ம் என்று ஆசைப்பட்டார்கள் . ஆங்கில மீடியாவுடன் கூட்டு சேர்ந்துகொண்டு ராசாவுக்கு எதிரான பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டதும ் அவர்கள்தான்” என்றார்.
Quote
 
 
-3 #66 Mathan Dubai 2010-11-25 10:41
:oops: :sad: :cry: :o :-? :-x yenada tamilar mulakkamnu pera vachikittu mentala irukeenga.
21st centurayla jathi,matham????????????????????
naikala neenga thiruthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
Ulakathileya kevalamana piravi Tamilan,Mananke ttavan
Quote
 
 
+12 #65 abaithal 2010-11-25 09:35
Quoting kings:
நான் தற்போது மலேசியாவில் வசிக்கிறேன். நேற்று டேக்ஸியில் போகும்போது அதன் சீனா ஓட்டுனர் என்னிடம் இந்த மிகப்பெரிய ஊழலை பற்றி கேட்டார். மேலும் எல்லோரும் இந்தியா ஒரு ஏழை நாடு என்கிறார்கள், ஆனால் இவ்வளவு பணம் ஊழல் செய்வதைபார்த்தா ல் எனக்கு அப்படி தோன்றவில்லை என்றார். மானம் போய்விட்டது எனக்கு. இந்தியன் என்று சொல்வதற்கு முதல் முறையாக வெட்கப்பட்டேன்.

என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!! :sad: :oops:

neenga Malaysia la irunthu vetkapadurienga anal nanga tamilnatula irunthea thalaikunikindo m.
Quote
 
 
0 #64 selvam 2010-11-24 14:11
Indias statsminister må forklare seg om teleskandale
Indisk høyesterett vil tvinge statsminister Manmohan Singh til å svare på hvorfor han ikke har satt i gang en gransking av en stor skandale i telebransjen.
Oppdatert: 19.11.10 kl. 12:15 Publisert: 19.11.10 kl. 11:57

Teleminister Andimuthu Raja fikk forrige helg sparken fordi han skal ha solgt mobilkonsesjone r for billig, og uten anbudsrunder.

Flere teleselskaper i India, blant dem Telenor-deleide Uninor, knyttes til korrupsjonssake n.

Skandalen kan komme til å koste den indiske staten 31 milliarder dollar i tapte inntekter, tilsvarende nesten 200 milliarder norske kroner.
Redd for å støte partiet
Opposisjonen mener at Singhs treghet skyldes at han er redd for å støte Rajas parti DMK, som sitter i regjeringskoali sjon med Kongresspartiet til Singh.
Quote
 
 
+8 #63 உளவாளி 2010-11-24 14:10
Quoting சிங்கமுத்து:
Quoting Joseph:
உங்களுக்கு ஒன்று சொல்ல நினைக்கிறேன் சவுக்கு, இங்கே வருபவன் படிப்பவன் உங்களை போற்றுபவன் எல்லாம் சமூக அக்கரையாளனோ நவீன நேதாஜியோ பிரபாகரனோ அல்ல. எல்லாம் மார்டன் டே டீக்கடை பெஞ்ச் பாய்ஸ். இருந்தாலும் உங்கள் பணியைப் பாராட்டுகிறோம்.


வழிமொழிகிறேன்


நானும் வழிமொழிகிறேன்
Quote
 
 
+9 #62 உளவாளி 2010-11-24 14:04
[quote name="praburaja2002"] இந்த பத்திரிக்கையின் நோக்கம் காங்கிரஸ் போன்ற ஓரிரு கட்சிகளின் பிடியில் நமது நாடு இருக்க வேண்டும் என்பது. இதன் மூலம் நமது இயற்கை வளங்களை அவர்கள் எளிதாக கொள்ளை அடிக்கலாம்.
இதே நியூயார்க் டைம்ஸ் தான் தான் எழுதிய பொய்யான தகவல்களின் மூலம் ஈராக் போருக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இது நக்கீரனை விட மோசமான பத்திரிகை.//

சரியாகச் சொன்னீர்கள் பிரபுராஜா.
Quote
 
 
+13 #61 உளவாளி 2010-11-24 14:00
கேடி சகோதரர்களுக்கு அ.தி.மு.க.வுடன் கள்ளத் தொடர்பு இருப்பது அரசியலை உள்ளிருந்து கவனிப்பவர்களுக் கு நன்கு தெரியும்.
அந்த வகையில், அடுத்த தேர்தலில் அம்மா வந்தால், கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்ப டக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளுடன் 500 கோடி ரூபாயை அ.தி.மு.க.வின் தேர்தல் நிதிக்காக கொடுத்திருப்பது , தற்போது அரசியல் வட்டாரத்தால் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது.

வாழ்க ஜனநாயகம், உயர்க ஸ்பைஸ் ஜெட், வளர்க கேடி பிரதர்ஸ். ஒழிக தமிழ்நாடு!
Quote
 
 
+3 #60 உளவாளி 2010-11-24 13:55
//அவர் யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல, அதுவே அவருடைய பலம் மற்றும் பதவிக்கான தகுதி“ என்கிறார் தமிழ்நாடு அரசியலை பற்றி ஏராளமாக எழுதியவருமான வாசந்தி.//

அடேங்கப்பா! நியூயார்க்கில் இருந்து என்னே ஒரு கண்டுபிடிப்பு? வாசந்திதான் இந்தியாவின் ஆகப்பெரிய அரசியல் விமர்சகரா? சூப்பரப்பு.

இந்தியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை இந்தியா டுடே மட்டும்தான் என்று நியூயார்க் டைம்ஸ் நம்பிக்கொண்டிரு க்கிறது போலும்.

மொத்தத்தில், “இப்படியொரு நியூஸை ஏன் நீங்க போடக்கூடாது?” என்று ஏகப்பட்ட பிட்டுகளுடன் கேடி பிரதர்ஸ், நியூயார்க்கை முகாமிட்டதாக இப்போது தகவல் வெளியாகியிருக்க ிறது
Quote
 
 
+2 #59 தீ 2010-11-24 13:53
//அவர் யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல, அதுவே அவருடைய பலம் மற்றும் பதவிக்கான தகுதி“ என்கிறார் தமிழ்நாடு அரசியலை பற்றி ஏராளமாக எழுதியவருமான வாசந்தி.//

அடேங்கப்பா! நியூயார்க்கில் இருந்து என்னே ஒரு கண்டுபிடிப்பு? வாசந்திதான் இந்தியாவின் ஆகப்பெரிய அரசியல் விமர்சகரா? சூப்பரப்பு.

இந்தியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை இந்தியா டுடே மட்டும்தான் என்று நியூயார்க் டைம்ஸ் நம்பிக்கொண்டிரு க்கிறது போலும்.

மொத்தத்தில், “இப்படியொரு நியூஸை ஏன் நீங்க போடக்கூடாது?” என்று ஏகப்பட்ட பிட்டுகளுடன் கேடி பிரதர்ஸ் நியூயார்க்கை முகாமிட்டதாக இப்போது தகவல் வெளொயாகியிருக்க ிறது.
Quote
 
 
+2 #58 உளவாளி 2010-11-24 13:45
//குடும்பச் சண்டையை சரிக் கட்டுவதற்காக மாறனுக்கு பதிலாக அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஆனால் கட்சியில் மிகப் பெரிய அதிகார மையமாக உள்ள தனது மகள் கனிமொழியோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள ராசாவை தேர்ந்தெடுத்தார ்.//

மாறன் எப்போது பிரபலமானார்? தி.மு.க அவருக்கு சீட் கொடுத்தபோதுதானே ! அதுவும், வைகோவை ஒண்டிக்கு ஒண்டி அழைத்ததன் மூலம். கனிமொழிக்கு ராசா நெருக்கம் என்று நியூயார்க் சொல்வதைப் பார்த்தால், மாறனின் செல்வாக்கு மற்றும் மீடியா ஏகபோகம் அமெரிக்காவரை பாய்ந்திருப்பது நன்றாகத் தெரிகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ”அமெரிக்கப் பத்திரிகையோடு டையப் வைத்துக்கொண்டு எங்கள் பத்திரிகை செய்தி வெளியிடப்போகிறத ு” என்று தினகரன் ஊழியர்கள் சொல்லிக்கொண்டிர ுந்ததன் விளைவு இப்போதுதான் புரிகிறது.
Quote
 
 
+3 #57 உளவாளி 2010-11-24 13:36
//மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள ை தோற்கடித்து தனது கட்சியான திரிணாமூல் காங்கிரசை பதவியில் அமர்த்துவதையே ஒரே லட்சியமாகக் கொண்ட மம்தா பானர்ஜியின் கையில் தான் இந்தியாவின் மிகப் பெரிய வேலை வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே இருக்கிறது.//

எங்கேயோ இடுக்குதே! நந்திகிராமை டாடாவுக்கு வாரிக்கொடுத்த காரணத்தால்தானே இந்தப் போலி கம்யூனிஸ்டுகள் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தார்கள்.

இந்தக் கருத்து நியூயார்க் டைம்ஸின் சொந்தக் கருத்தா, எவனோ அல்லக்கை எழுதிக் கொடுத்ததா? எல்லா ஊர்லயும் ஜால்றா பத்திரிகைடா சாமி!
Quote
 
 
+4 #56 உளவாளி 2010-11-24 12:32
//பரவலாக மிக நேர்மையான மனிதர் என்று அறியப்படும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது இந்த விஷயத்தை துரிதமாக புலனாய்வு செய்யாததற்காக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.//

மட்கிப்போகும் உணவு தாணியங்களை ஏழைகளுக்கு கொடுக்கமாட்டேன் என்று உச்சநீதிமன்றத்த ையே மதிக்காமல் வக்கிரமாய்ப் பேசிய மன்மோகன்தான் மிக நேர்மையானவனா? த்தூ....
Quote
 
 
+5 #55 GAPPI 2010-11-24 10:23
YO.SINGAPPAA MAY BE CORRECT வாழப்பாடியார் காலத்தில் தான் தமிழகத்தில் சமையல் காஸ்சும் பெட்ரோல் பங்குகளும் மிக மிக சரளமாக ஆனது.முரசொலியார் காலத்தில் தான் நம் நாடு தொழில் துறையில் பெரும் வளர்ச்சி அடைந்தது.எ.கே.மூர்த்தி ரயில்வே துணை அமைச்சராக இருந்த போது தான் தமிழகத்தில் மிக மிக பெரிய திட்டங்கள் துவக்கப்பட்டன.
Quote
 
 
0 #54 kings 2010-11-24 10:03
நான் தற்போது மலேசியாவில் வசிக்கிறேன். நேற்று டேக்ஸியில் போகும்போது அதன் சீனா ஓட்டுனர் என்னிடம் இந்த மிகப்பெரிய ஊழலை பற்றி கேட்டார். மேலும் எல்லோரும் இந்தியா ஒரு ஏழை நாடு என்கிறார்கள், ஆனால் இவ்வளவு பணம் ஊழல் செய்வதைபார்த்தா ல் எனக்கு அப்படி தோன்றவில்லை என்றார். மானம் போய்விட்டது எனக்கு. இந்தியன் என்று சொல்வதற்கு முதல் முறையாக வெட்கப்பட்டேன்.

என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!! :sad: :oops:
Quote
 
 
0 #53 manasthan 2010-11-24 05:02
http://www.aftenposten.no/okonomi/utland/article3912057.ece

http://www.aftenposten.no/okonomi/utland/article3913040.ece
Ithu norway newspaperil vatha veti avilpu news. to translate to english use www.translate.google.com
Halo people from different countries post a link of this news in your local newspaper. Lets show what world thinks of this tamil betrayers
Quote
 
 
+3 #52 muhaideen 2010-11-24 02:03
இந்திய அரசியல் வாதிகளின் தொடரும் ஊழலின் தொடர்சித்தான் இது,
சுடுகாட்டுக்கு கூரை வாங்கியதில் தொடர்ந்து கார்கில் போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின்
உடலை அடக்கம் செய்யப்பட வாங்கப்பட்ட சவப் பெட்டிவரை ஊழல் தொடர்ந்து
இன்று ஸ்பெக்ட்ரம் வரை வந்துள்ளது,எதுவ ரை செல்லுமோ இறைவனுக்கே வெளிச்சம்
அரசியல் என்ற மக்களின் நலன் பேணக்கூடிய துறையில் இப்படியும் சில கருங்காலிகள்.
Quote
 
 
+4 #51 காலவன் 2010-11-23 23:13
காத்துக்கொள்ள குழந்தைகளைக்கூட கொல்ல துணிபவர்கள்... சில விதிவிலக்குகள் உண்டு....(ஈ.வே.ரா. தமிழருவி மணியன் தியாகு, நல்லகண்ணு,இப்பட ியாக சில விரல்விட்டு எண்ணக்கூடிய அபூர்வ மனிதர்கள்) அவர்களுக்ககான மரியாதையை நாம் நேற்றுவரை குத்தாட்டம் போட்ட நமீதாவின் சதைக்கு கொடுத்த மரியாதை கூட கிடையாது.
Quote
 
 
+5 #50 காலவன் 2010-11-23 23:09
மிகப்பெரியஅரசிய ல்வாதிகள்,பெரும ்பணக்காரர்களின் குடும்ப கெளரவம் என்பது ஒரு அபத்தம் தான்.(தேன்வண்டு) ஒருவருடைய குடும்பத்தில் பத்து தலைமுறையினர் உக்கார்ந்து சாப்பிடலாம் என்ற அளவுக்கு பணம் சேர்த்த பிறகு.. அவர்களுக்கு மகள் அப்பா மகன் மாமா,அம்மா மனைவி என்கிற உறவெல்லாம்வெறும ்வார்த்தையே....நம்மைப்போன்ற நடுத்தரவர்க்கமே மானம் கௌரவம் எனும் வார்த்தைகளுக்கு பெரும் கவனத்தில் வைத்திருகிறோம்.. கருணாநிதி ஜெயலலிதா சசிகலா,ப.சிதம்பரம்,சோனிய ா, இவர்களது குடும்பத்தில் இதை நீங்கள் எதிர்பார்த்தால் வேறு எதிலாவது மற்றவர்கள் சிரிப்பார்கள். சுயமரியாதை என்பது மனசாட்சிக்கு கட்டுபட்டு வாழ்வது. வாழ்க்கையின் அர்த்ததை தேடிக்கண்டைடவது ... இவர்கள் எல்லாம் பணப்பேய்கள்.... இவர்களிடம் போய் .......? 30மற்றும் 28 வயது கூட இரு பணக்கார இளைஞர்கள் சினிமா எடுக்கிறார்கள் நாம் யாராவது... கேட்டோமா...? அதை இந்த டூப்பாக்கூர் கமல்ஹாசன் யோக்கிய புளுத்தி மாதிரி பேசுவான் அவனும் அவங்களோட சேர்ந்துதான் கும்மியடிக்கிறா ன்.. தமிழ் நாட்டில் முக்கியபுள்ளிகள ் அனைவரும் கடைந்தேடுத்த அயோக்கிய மனிதப்பிண்டங்கள ்.. தங்களை
Quote
 
 
+5 #49 kumarselvam 2010-11-23 22:40
(Quoting YO.SINGAPPAA:
நஷ்டத்தில் இயங்கி வந்த ரயில்வேதுறை லாலு பதவியேற்ற பிறகு எத்தனை ஆயிரம் கோடிகள் லாபம் ஈட்டியது?அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை மந்திரியாக பதவியேற்ற பிறகு அந்த துறை பெற்ற அசுர வளர்ச்சி தெரியாதா?BSNL வாடிக்கையாளர் எண்ணிக்கை ஐந்து மடங்கு உயர்ந்ததற்கும் சந்தா தொகை, 2012 இலக்கை இந்த ஆண்டே அடைந்ததற்கும் பட்ஜெட் உரையில் ராசாவை பிரதிபா பாராட்டவில்லையா ?.பிராந்திய கட்சிகளில் இருந்து சென்ற பிற்படுத்தப்பட் ட மற்றும் தலித்கள் ஒன்றம் முட்டாள்கள் அல்ல என்று நியூயார்க்டைம்ஸ ்க்கு சொல்லுவோம்
)


ஏ முட்டாள், நீ என்ன எட்டயபுரத்தானா? (பாரதி அல்ல). எவ்வளவு ஊழல் செய்தாலும், அது சரிதான் என்று சாதிக்கிற ஈனப்பிறவி கருனாநிதிக்கு உங்களை போன்றவர்கள் தான் பலமே.
Quote
 
 
0 #48 Tirupurvalu 2010-11-23 20:09
Eppo enna 17,60,00,00,00,0 00 rs loose agiducha .In next election party peoples beat this amount .don't worry savuku u can shout always like this nothing will happen in India.Because we are Indians.We are brothers and sisters eppudiiii
Quote
 
 
0 #47 raja159+ 2010-11-23 19:15
true true
Quote
 
 
0 #46 selvakumar.nagapandi 2010-11-23 18:47
hi friends....enna pannurathu naamaa ellorum ootu podum pothu evalavu paisa thaaraanu ninaichu potta ..ippadi thaan koollai adipaanga.. inni naalum paarthu podunga......
Quote
 
 
+4 #45 ambuttthanga raasaa 2010-11-23 18:34
தினமணி மட்டும் கொஞ்சம் பரவில்லைங்க
ராசா பத்தி பக்கம் பக்கமா எழுதி தள்றாங்க
Quote
 
 
0 #44 mookan 2010-11-23 18:06
Adutha vettiya avukka venum,nan varren bye bye
Quote
 
 
+1 #43 குசும்பன் 2010-11-23 17:44
Quoting Selva85:
இதற்காக ஒரு பாரட்டு விழா நடத்தாமல் இருந்தால் சரி






supper :lol: :lol: :lol:
Quote
 
 
+1 #42 mubarak kuwait 2010-11-23 16:39
i want to know about JPC investigation, can u explain, we heard newly about it,
mr savukkuplease explain about this, why central government refused to jpc investigation,
Quote
 
 
+12 #41 raman 2010-11-23 16:25
இந்த விசயத்துல தமிழ்நாட்டு பேப்பர்காரனுகளை எண்ணி ஒவ்வொருத் தமிழினும் பெருமை படனும். இருக்காத பின்ன, ஆளும் கட்சியின் தவறை எதிர்த்து ஒரு துணுக்கு கூட போட மாட்டேங்கிறாங்க . ஏன்ப்பா ஆளும் கட்சியின் குறையை எழுதும் போது உன் பேனாவில் இருந்து இங்க் வரமாட்டேங்கிறதா ?
Quote
 
 
+13 #40 தேன் வண்டு 2010-11-23 16:15
தமிழருவி மணியன் நாளை 24 கான ஜூனியர் விகடனில்
"கலைஞரின் ஆத்திசூடியும்.> ஆ ராசாவும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறா ர், படியுங்கள் அதில் சிலவரி> ''"பதவிகள் பவிசுகள் வரும் போகும் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்களாகிவி டுவார்கள்,,,'தியாகிகள் முன்னாள் தியாகிகள் ஆவதில்லை பதவி நிலைக்காது தியாகம் நிலைக்கும் தியாகத்தின் அடிப்படையில் பதவியில் அமர்ந்தவர்கள் நாம் பதவியிலிருந்தவா று கழக இலட்சியத்தை அடைந்திட இயலாதெனில் பதவியை தியாகம் செய்யும் மனப்பக்குவம் படைத்தவர்கள் நாம் எப்படியும் பதவியில் ஒட்டிக்கொண்டிரு க்க வேண்டுமென்கிற "அட்டையின் புத்தி நமக்கில்லை" என்று 15.2.75 அன்று முரசொலியில் முடங்கலோவியம் தீட்டியவர் கலைஞர்.ஆனால் இன்று? சொல் ஒன்று, செயல் ஒன்று என்பதில் கலைஞருக்கு இணை சொல்ல (உலக) இந்திய அரசியலில் இன்னொருவரில்லை!
Quote
 
 
+2 #39 குலசேகரன் 2010-11-23 16:10
1. வழக்கமாக இந்த வடஇந்தியக்காரப் பயலுக அனைவரும் ஹிந்தியில்தான் பேசுவார்கள்.
ஆனால் இந்த பத்திரிக்கையாளர ்களின் டெலிபோன் (ஒட்டுக்கேட்கப் பட்ட) உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளதே ஏன்??

2. 2009திலேயே இந்த ஒட்டுக் கேட்பு நடந்துள்ளது. அப்படியென்றால் வட இந்திய முக்கியமான பத்திரிக்கையாளர ்கள் அனைவரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்டுக்கொண்டிர ுக்கப்படுகின்றன வா.

3. அப்படியென்றால் தமிழ்நாட்டில் நடைபெற்ற / பெறும் ஒட்டுக்கேட்பு சம்பவங்கள் ஒன்றும் தவறானதல்ல.
Quote
 
 
+2 #38 K.Veeramani 2010-11-23 15:19
In an effort to quiet the burgeoning family feud, Mr. Karunanidhi replaced Mr. Maran, a powerful political player in Tamil Nadu, with Mr. Raja, who was much less well known but who had a close relationship with Mr. Karunanidhi’s daughter Kanimozhi, who is also a powerful party figure - குடும்பச் சண்டையை சரிக் கட்டுவதற்காக மாறனுக்கு பதிலாக அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஆனால் கட்சியில் மிகப் பெரிய அதிகார மையமாக உள்ள தனது மகள் கனிமொழியோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள ராசாவை தேர்ந்தெடுத்தார ்.----Super...Super...உலகம் பூராவும் நம் பெருமை கொடிகட்டி பறக்குது!!!
Quote
 
 
+2 #37 Grishna 2010-11-23 14:43
Ithuvarai Thamilargalin Maanaththai Indiaavil vaangiya kudumbathinar ippothu Ulaga alavil vaangi kodukkindranar. Thamilanukku Vetka Kedu...
Quote
 
 
+6 #36 emai 2010-11-23 14:35
-----------------------
இந்த பத்திரிக்கைகள் தங்களது நல்ல பெயரையும் விற்பனையையும் இழந்து ரொம்ப நாளாயிற்று.
ஈராக் சண்டைக்கும் , லட்சகணக்கான உயிர்ப்பலிக்கும ் நியூயார்க் டைம்ஸ் ஒரு முக்கிய காரணம்.
பெரு முதலாளிகளுக்கும ் அவர்களது திட்டங்களுக்கும ் ஜால்ரா போடும் வாஷிங்க்ட்டன்போ ஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் இரண்டுமே மக்கள் விரோத பத்திரிகைகள்.
ராசா செய்தது தவறு. ஆனால் இந்த பத்திரிக்களின் நோக்கம் வேறு. தமிழர்களுக்கு முதல் எதிரி வாஷிங்க்ட்டன்போ ஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்.
PA. CHITHAMPARAM, MANMOHAN SING ELLORUM NEENDA ANUPAVAMUM, THIRAMAIUM ULLAVARKALA? ETHIL THIRAMAI KOOTTIKODUPPATH ILA? KAATTIKODUPPATH ILA?
Quote
 
 
+7 #35 vasanthi 2010-11-23 13:53
அடைந்தாள் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றவர்கள் நாட்டைப்பற்றி கவலைபடாமல் அரசியலுக்கு வந்தவர்களிடன் நாட்டு நலனை எதிர்பார்த்தால் அது மக்களோட தவறேதவிர அவன்கதவரு இல்லை ஊழல் பெருச்சாளிகளை எதுக்கு அதிகாரத்துக்கு வரவிடுகிரீர்கள் .அப்புறம் குத்துதே குடையுதேன்னு கூப்பாடு போடுகிறீர்கள் அடுத்தமுறை தேர்தல்வரும்போத ு ஓட்டு கேட்டு வரும்போது கொள்ளை அடிச்ச பணத்துல பங்கு கேளுங்க இல்லேனா ஒட்டு போடதீங்க
Quote
 
 
+7 #34 Dhana 2010-11-23 12:29
Quoting N.Saravanan:
கச்சை அவிழ்த்த இடமெல்லாம் களவுறவு கொண்டவனை
தமிழனின் காவலன் என்று சொன்ன அந்த கேவலன் யார்?

தமிழன் பெருமை உலகில் கொடிகட்டிப் பறக்கிறது இதற்காகவும் ஒரு மாநாடு நடத்தி ஆளாளுக்கு மாறி மாறி கவி பாடி முதுகு சொறியலாமே.

இருந்தாலும் பதினேழு முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் ரிசவ் வங்கித் தலைவருக்கு ஆப்படித்த கருணாநிதி, ராசா மற்றும் கனிமொழி போன்றவர்களால் தமிழனுக்கும் குறிப்பாக இந்தியனுக்கும் பெருமை தானே

one hundred percent i agree with Mr. Saravana.
this may happen when CBI or the Central Govt closes the issue, and our allaikkaigal... definitely arrange a grand celebration for prooving Raja as innocent by Mr.Karuna....imagine the rest
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 112 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7663
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week40122
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month242854
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12764973