முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வாழும் சகுனி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 46
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 10 பிப்ரவரி 2013 23:26

நல்ல செய்தியோ, கெட்ட செய்தியோ, தமிழக ஊடகங்களுக்கு செய்திகளை அள்ளி வழங்குவதில் திமுகவை விஞ்ச வேறு எந்தக் கட்சியும் இல்லை.  தினந்தோறும் அப்படி செய்திகளை வழங்கும் திமுக பற்றி கடந்த வாரம் வந்த செய்தி, குஷ்பூ வீட்டில் நடந்த தாக்குதல் குறித்தது. குஷ்பூ வீட்டில் தாக்குதல் நடைபெறக் காரணம், குஷ்பூ ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி. அந்த பேட்டி என்ன என்பதைப் பார்த்து விடுவோம்.

3-06-12-_Thalaivar_Birthday--111

தளபதிதான் அடுத்த தலைவரா இருக்கணும்னு அவசியம் இல்லை !

தடாலடி குஷ்பு

சின்னச் சின்ன தும்மல், களைப்பான கண்கள், சோர்வு ததும்பும் குரல்... குஷ்பு இஸ் நாட் ஃபீலிங் வெல்! ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் பாய்ந்து வந்த பதில், அதிரடி!

ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, தி.மு.க-வில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு.

''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''

''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''

''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''

'''நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''

''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''

''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும்.  தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''

''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''

''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''

''சமீப காலமா தி.மு.க-வில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?''

''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? தி.மு.க-வின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கிய மான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்ட யும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத் துக்கே தெரியும்... எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில்நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக் கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட் டுக்கு எதிரா நடந்த கண்டனஆர்ப் பாட்டத்துல தலைவர் முன்னிலை யில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்து வம் கொடுக்குறாங்கன்னு பேசு னாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக் குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட் டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!''

''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...''

(கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.''

'' 'விஸ்வரூபம்’ பட விவகாரத்தின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லைனு நம்புறீங்களா?''

'' 'விஸ்வரூபம்’ பத்தி இனிமே நாம பேசினா, அது கமல் சாருக்குத்தான் பிரச்னையா முடியும். கமல் சாரைப் பாதிக்கும்கிறதால அதைப் பத்தி நான் எதுவும் பேச விரும் பலை. அதான் அரசாங்கம் சார்பிலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!''

''அது தொடர்பான விவாதத்தில், 'ஜெயா டி.வி-க்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை’னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்களே?''

''அதை நீங்க நம்புறீங்களா ? சம்பந்தம் இல்லைனு சொல்றாங்க. ஆனா, அந்தப் பேட்டி கொடுத்தப்ப, ஜெயா டி.வி. மைக் மட்டும்தான் அவங்க முன்னாடி இருக்கு. எல்லா உண்மையும் புரியுற அளவுக்கு மக்கள் தெளிவா இருக்காங்க.''

''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?''

''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதி காரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணிபத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.''

''நாடாளுமன்றத் தேர்தலில் நீங்க போட்டியிடுவீங்களா?''

''தெரியலையே! இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமை தான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை மறுத்திடுச்சு’னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.''

''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு தி.மு.க.-வில் அதிகரிச்சுட்டே இருக்கே?''

''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது.  ஒன் ப்ளஸ் ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும்.உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? தி.மு.க. ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்து கிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல் லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்!

இன்னொரு விஷயம்,உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சி யின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக்கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.''

''எப்பவும் ஏதாவது ஒரு சர்ச்சை உங்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கே... சமீபத்தில், ராமர் படம் போட்ட புடவை. ஒருவேளை பரபரப்புக்காகவே இப்படிப் பண்றீங்களா?''

''யாரை விமர்சிச்சா லாபம் கிடைக்குமோ, அவங்களைத்தானே தொடர்ந்து குறிவைப்பாங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் அவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது. அது, குஷ்பு யாருக்கும்பயப்பட மாட்டா!

என் டிக்ஷனரியில் பயம்கிறதே கிடையாது. அன்பு, பாசத்துக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். அச்சுறுத்தல், மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். எனக்குப் பயம்னா என்னன்னே தெரியாது!''

ஆனந்த விகடன்

இதுதான் குஷ்புவின் பேட்டி. வாரிசு மோதல்  : கருணாநிதி யார் பக்கம் என்ற கட்டுரையில், தன் பிள்ளைகளுக்கு இடையிலேயே கருணாநிதி எப்படி அரசியல் செய்வார் என்பது குறித்து எழுதப்பட்டிருந்தது.

குஷ்பு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, திருச்சி சிவாவின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட குஷ்பு மீதும், திருச்சி திமுகவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்தத்தாக்குதலில், குஷ்பு மீது செருப்பு வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திமுகவை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம், கருணாநிதியின் சம்மதம் இல்லாமல் குஷ்பு இந்தப் பேட்டியை அளித்திருக்க வாய்ப்பு துளியும் இல்லை.  திமுகவின் மூத்த தலைவர்களான, அன்பழகன், துரைமுருகன் போன்றவர்களிடம் திமுகவின் அடுத்த தலைமை குறித்து கருத்து கேட்டால் கூட, தலைவர் இருக்கும் வரை, அடுத்தது யார் என்ற கேள்விக்கே இடமில்லை என்றுதான் பதில் சொல்வார்கள்.  அவர்களிடம் குறிப்பாக ஸ்டாலின் குறித்து கேட்டாலும், பதில் சொல்லாமல் மழுப்புவார்களே ஒழிய, நேரடியாக எந்த பதிலும் அளிக்க மாட்டார்கள். அப்படி மூத்த தலைவர்களே கருத்து சொல்ல அஞ்சி ஓடி ஒளியும் ஒரு சூழலில், அடுத்த தலைவர் ஸ்டாலினா இல்லையா என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்று தைரியமாக பேசியிருக்கிறார் குஷ்பு.

குறிப்பாக கருணாநிதியே ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று சொல்லி விட்டாரே என்று கேட்டதற்கு, “தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!'' என்று பதில் கூறியிருக்கிறார் குஷ்பு.

khusboo

இப்படியெல்லாம் குஷ்பு தேவையில்லாமல் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனந்த விகடனில் வந்த இந்த பேட்டியே கூட, கருணாநிதியின் கைவண்ணமாகத்தான் இருக்கும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் குஷ்புவுக்கு, இந்த பொதுக்குழு, உயர்மட்ட செயற்குழு, உயர்மட்ட அறிவுஜீவிக் குழு, அறிவில்லாத முட்டாள்கள் குழு போன்ற அத்தனை குழுக்களும், கருணாநிதியின் கைப்பாவைகள் என்பது நன்றாகவே தெரியும். அவருக்குத் தெரிந்தது போலவே, திமுகவில் உள்ள அத்தனை பேருக்கும், பொதுக்குழு என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும்.  தவிரவும், திமுக என்றாலே அது கருணாநிதியின் குடும்ப சொத்து என்பது திமுகவில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியும்.

மகன் எம்.எல்.ஏ.  மகள் எம்.பி.  மற்றொரு மகன் மத்திய அமைச்சர். பேரன் முன்னாள் அமைச்சர், இன்னாள் எம்.பி.  ஒரு மகன் பொருளாளர். மற்றொரு மகன் தென் மண்டல அமைப்புச் செயலாளர்.  மற்றொரு மகள், மற்ற மகன் ஆகியோர், ஆட்சியில் இருக்கையில், வசூல் வேட்டைகளைக் கையாளும் பொறுப்புகளில் உள்ளவர்கள்.  இவர்களெல்லாம் போட்ட மிச்சமும், மீதியும்தான், மற்றவர்களுக்குக் கிடைக்கும் கட்சியின் பொறுப்புகள், பதவிகள் எல்லாமும்.

இந்த உண்மைகளை குஷ்பு அறியாதவர் அல்ல.  அப்படி இருந்தும் குஷ்பு இப்படியொரு பேட்டியை ஆனந்த விகடனில் ஏன் அளிக்க வேண்டும் ? முழுக்க முழுக்க கருணாநிதியின் அறிவுறுத்தலின்படியே இந்தப் பேட்டியை குஷ்பு அளித்திருப்பார்.  இந்தப் பேட்டி வருவதால், கருணாநிதிக்கு என்ன நன்மை ? எதற்காக இப்படியொரு பேட்டி ?  ஏற்கனவே இது குறித்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது போல, கல்யாண வீடென்றால் கருணாநிதிக்கு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்.  இழவு வீடென்றால் பிணமாக இருக்க வேண்டும்.  எல்லாமே தன்னைச் சுற்றியே நடக்க வேண்டும், அவற்றில் பெரும்பாலானவற்றை தான் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கும் நார்சிஸ்ட் கருணாநிதி.

தற்போது குஷ்புவின் பேட்டியைத் தொடர்ந்து அவர் வீடு தாக்கப்பட்டதையடுத்து, குஷ்பு வீட்டின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பே, இந்த விவகாரத்தில் கருணாநிதியின் பங்கு என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

திமுகவில் சகோதர யுத்தம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  அதுவும், நான் ஸ்டாலினைத் தலைவராக முன்மொழிவேன் என்ற கருணாநிதியின் அறிவிப்பை அடுத்து, அழகிரி முண்டா தட்டிக் கொண்டு மோதலுக்கு தயாராகி வருகிறார்.  மற்றொரு வாரிசான கனிமொழி, அண்ணன் ஸ்டாலின் அணியில் ஐக்கியமாகி விட்டதாகவும், அதற்குக் கைமாறாக, அவரை 2ஜி வழக்கிலிருந்து விடுவிக்க உதவி செய்வதாக ஸ்டாலின் வாக்களித்திருப்பதாகவும் தெரிகிறது.  கனிமொழி ஸ்டாலின் அணியில் இணைந்துள்ள நிலையில், வாரிசு மோதல் ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையே என்று எல்லைக்கோடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.  இந்த போட்டியில் நடுவராக இருக்க வேண்டிய கருணாநிதி, தானும் ஒரு அறிவிக்கப்படாத போட்டியாளராக இருந்து வருகிறார்.

பாஞ்சாலி சபதத்தில் சூதாட மறுக்கும் தர்மனிடம் சகுனி

அச்சமிங் கிதில்வேண்டா,-விரைந்

தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையர் நாழிகை யா-நல்ல

காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்!
நிச்சயம் நீவெல் வாய்;-வெற்றி

நினக் கியல் பாயின தறியா யோ?
நிச்சயம நீவெல் வாய்;-பல

நினைகுவ தேன்களி தொடங்கு கென்றான்

அப்படி சகுனியைப் போல சகோதரர்களிடையே உனக்குத்தான் திமுக, நீதான் அடுத்த தலைவர் என்று தூண்டி விட்டு, அதன் மூலம் இருவருக்குமிடையே பகையை வளர்த்து அந்தப் பகையில் குளிர் காயும் வேலையைத்தான் கருணாநிதி செய்து வருகிறார்.

குஷ்புவின் இந்தப் பேட்டியால், ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதிக்கிறார்களா… கலவரத்தில் ஈடுபடுகிறார்களா… அப்படி ஈடுபட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் ஆர அமர இருந்து ரசிக்கலாம் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார் கருணாநிதி.  யாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், இறுதியாக பஞ்சாயத்து செய்து வைப்பதற்கு அவரிடம்தான் வர வேண்டும் என்பது கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.

முதல்வராக இருந்தால், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், கருணாநிதியின் வீட்டில் பிச்சைக்காரர்களைப் போல காத்திருந்து அய்யா… தர்மம் பண்ணுங்கய்யா… என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள்.  திரையுலகினர் வாரத்திற்கு ஒரு முறை விழா எடுத்து, தமிழ் மொழியைக் கண்டு பிடித்தவரே கருணாநிதிதான் என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.  கலைஞானி கமல்ஹாசன், நான் பராசக்தி பார்க்காவிட்டால், எனக்குத் தமிழே தெரியாமல் போயிருக்கும் என்பார்.  ரஜினிகாந்த், கலைஞர்ஜி இல்லேன்னாக்கா… தமிழ்நாடே இல்லை என்று கூறியிருப்பார்.

இந்தப் புகழாரங்களெல்லாம் இல்லாத காரணத்தால்தான், கருணாநிதி இப்படி ஒரு அற்பத்தனமாக காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

குஷ்பு அவர்களுக்கு…  தமிழ்த் திரையுலகில் கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு வெற்றிகரமான நடிகையாக இருந்தவர் நீங்கள்.  ஒரு நடிகையாக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற நீங்கள், அரசியலிலும் அதே வெற்றியைப் பெறலாம் என்று கனவு காணாதீர்கள். நீங்கள் நினைப்பது போல அரசியல் எளிதல்ல.  பெரியார் படத்தில் நடித்த ஒரே காரணத்தினாலேயே நீங்கள் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராகி விட மாட்டீர்கள் என்பதை உங்கள் நினைவில் கொள்ளுங்கள். திமுகவில் நீங்கள் சேர்ந்தது ஒரு விபத்து என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.   உச்சநீதிமன்றத்தில் உங்கள் வழக்கு முடிந்ததும், காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்திருந்த உங்களை இறுதி நேரத்தில் திமுகவுக்கு அழைத்து வந்தது, ஜாபர் சேட்டின் சாகசம்.  யதேச்சையாக நேர்ந்த காரணங்களால் திமுகவில் சேர்ந்து, வாரிசு மோதலில் சிக்கிக்கொள்ளும் வகையில் ஏன் அறிவிழந்து போனீர்கள் என்று புரியவில்லை.

சினிமா தெரிந்த அளவுக்கு உங்களுக்கு அரசியல் தெரியவில்லை.  கருணாநிதி யார், அவர் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்பதை உணர்த்த நீங்கள் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு சான்றுகள் உள்ளன. குடும்ப சண்டை காரணமாக, மூன்று அப்பாவி இளைஞர்களைக் கொலை செய்து விட்டு, அந்தச் சந்தடியே இல்லாமல் ஒன்று சேர்ந்து மீண்டும் கொள்ளையைத் தொடங்கிய குடும்பம் கருணாநிதி குடும்பம்.

3-06-12-_Thalaivar_Birthday--9

குடும்பத்துக்குள் இன்று ஆயிரம் மோதல்கள் இருந்தாலும்… குடும்பம் குடும்பம்தான். கருணாநிதி குடும்பத்தை விட்டுக் கொடுத்ததாக வரலாறே கிடையாது.   அப்படிப்பட்ட கருணாநிதியின் பேச்சைக் கேட்டு நீங்கள் அவர்களின் குடும்பச் சண்டைக்குள் மூக்கை நுழைப்பது உங்கள் அறிவீனத்தைக் காட்டுகிறது.  கருணாநிதி என்னதான் மூத்த தலைவராக இருந்தாலும், கட்சியும், குடும்பமும் அவரது முழுமையாக கட்டுப்பாட்டில் இல்லை.   வயதானவர்… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிப் பேசிக்கொண்டிருப்பார் என்ற அடிப்படையிலேயே, கருணாநிதியின் அற்பத்தனங்களை அவர் குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், அதே பொறுமையை அவர்கள் உங்கள் விஷயத்தில் காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.

அன்புன்னா உயிரக் குடுப்பேன், அடாவடின்னா உயிரை எடுப்பேன் என்று ரஜினிகாந்த் போல பன்ச் டயலாக் பேசுவது சினிமாவுக்கு மட்டுமே சரிப்படும் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.  பயம்னா என்னன்னே எனக்குத் தெரியாது என்று பேட்டியளித்த நீங்கள், திருச்சி ஃபெமினா ஓட்டலில் வீசப்பட்ட செருப்புகளுக்குப் பயந்து மீண்டும் ஓட்டலுக்குள் தஞ்சம் புகுந்தீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.   உங்கள் மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலுக்கு போலீஸ் புகார் கூட கொடுக்க முடியாதபடி ஒரு நெருக்கடியில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.   உங்களைத் தாக்கிய ஸ்டாலின் ஆதரவாளர்களை கைது செய்யுங்கள் என்று போலீசில் புகார் கொடுத்து விட்டு நீங்கள் கட்சியில் இருந்து விட முடியுமா ?   திமுக கூட்டங்களுக்குப் போனால், மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது போல, “எக்ஸலன்ட் பெர்பார்மன்ஸ்… ஹேட்ஸ் ஆஃப்….” என்றும், “தலீவர் இருக்கறதாலேதான் டமிளர்கள்ளாம் உயிரோட இருக்காங்க…  தலீவர் டமிளினத்தின் ஒரே தலீவர்” என்று பேசுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

திமுகவில் இப்படியே இருந்து, கருணாநிதிக்குப் பிறகு ஜெயலலிதாவாகலாம் என்று கற்பனை செய்யாதீர்கள்.  ஜெயலலிதா அதிமுகவில் இருந்ததற்கும், நீங்கள் திமுகவில் இருந்ததற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.  எம்ஜிஆருக்கு வாரிசே இல்லை.  கருணாநிதிக்கு ஊரெங்கும் வாரிசுகள்.  திமுக, அதிமுக சமன்பாடுகள் வேறு வேறானவை.  நீங்கள் ஒரு காலத்திலும் ஜெயலலிதா ஆக முடியாது.

“மேம்… வி ஸ்டேன்ட் பை யு மேடம்… யு ஆர் வெரி போல்ட் மேடம்… வி சல்யூட் யுவர் கரேஜ் மேடம்” என்று ட்விட்டரில் உங்களை உசுப்பேற்றுபவர்கள், உங்கள் வீட்டில் கல்லெறியப்படும்போதும், உங்கள் மீது செருப்பு வீசப்படும்போதும் இருக்க மாட்டார்கள். நிஜ வாழ்வில் ஏற்படும் வன்முறையை நீங்கள் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். இந்த யதார்த்தத்தைப் பரிந்து கொண்டு நடந்து கொள்ளுஙகள்.

கருணாநிதி அவர்களே… நீங்கள் வாழ்வின் இறுதிப் படிக்கட்டில் இருக்கிறீர்கள்.   இன்னும் ஐம்பது ஆண்டுகள் அல்ல… இருபது ஆண்டுகள் இருப்பீர்களா என்பதே சந்தேகம்தான்.   நீங்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும், இயற்கை அதற்கு ஒத்துழைக்காது.  ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகங்கள் என்றுமே மறக்கப்படாது.  தமிழனத்தின் துரோகி என்றே வரலாறு உங்கள் பெயரைப் பதிவு செய்யும்.  இன்னும் உங்களை எப்படியாவது தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று, உங்கள் உடன்பிறப்புகள் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது, பெருந்தன்மையோடு நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  உங்களை தலைவனாக அல்லாவிடினும் மனிதனாகவாவது வரலாறு நினைவில் கொள்ள வேண்டும்.  சகுனியாக அல்ல.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்

என்கிறார் வள்ளுவர்.  குறளோவியம் தீட்டிய உங்களுக்கு விளக்கம் வேண்டியதில்லை.

 

Comments  

 
+3 #43 star 2013-02-21 10:38
தலைவர் பிரபகரனின் தாயை விமானனிலயட்தில் இருந்து மருதுவவுதவி மருக்கப்பட்டு திருப்பியன்னுப் ப,அனுப்பியபின் நடட்திய நாடகம்,திடரை கடை வசனம், அ நைட்தும் மரவாதிர்கள்.வேட்கமின்ரி திரிஉம் இவர்கள் வாழதகுதியட்ர ஜென்மஙள்.
Quote
 
 
+1 #42 ஊதாத்தமிழன் 2013-02-17 17:43
பிற்காலத்தில் திமுக உடைந்தாலும் ஸ்டாலின் அணி அழகிரி அணி என்றுதான் உடையும். எப்படியும் கட்சி தலைமை என்பது தன் மகன்களிடமே இருக்க வேண்டும் என்று முக திட்டமிட்டு மூத்தவனுக்கும் இளையவனுக்கும் ஆள் சேர்த்து விடுகிறார்.

பேராசிரியரிலிரு ந்து கடைசி தொண்டன் வரை சூடு சொரணையற்று கருணாநிதி குடும்ப தலைமையின் கீழ் வாழையடி வாழையாக வாழ நினைக்கிறார்கள் .

கருணாநிதி குடும்பத்துக்கு வெளியே திமுகவில் தலைமைப்பண்பு யாருக்குமே இல்லையா. அல்லது திமுகவுக்கு தலைவராகனும்னா அவங்கம்மா கருனாநிதியோட.....அடத் தூ...!
Quote
 
 
+4 #41 Erode Sampath 2013-02-16 22:25
பத்மாவதி,த்யாலு ,ராசாத்தி,குஷ்ப ு.........
Quote
 
 
+7 #40 anniyan 2013-02-16 09:05
Quoting uyir:
தமிழ் நாட்டில் குசூபு. இருக்கவேன்ட்டிய திள்ள. அவள் செத்தால் என்ன பிச்சை எடுத்தால் என்ன சவுக்கு? ஏன் மினக்கட்டு இந்த கட்டுரை? கருன்னநிதி பயபுள்ள இழுத்து இழுத்து தான் சவான்.............


அன்புள்ள uyir,
குஷ்பூவைப் பற்றி உங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை.. பிற்காலத்தில் குஷ்பூ தமிழ்நாட்டின் முதல்வராகவோ அல்லது முதல்வரின் மகளுக்குத் தாயாகவோ வர வாய்ப்புண்டு. "ராஜாத்தி யார்?" என்ற கேள்விக்கு "என் மகள் கனிமொழியின் தாய்" என்று சொன்னது போல்தான்.
Quote
 
 
+4 #39 sharjah Mathan 2013-02-15 23:01
கட்சித் தலைவரின் தோள் மீது ஏறி உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருப்பவர ் குஷ்பூ. அப்படிப்பட்ட குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர் யார்? பொருளாளர் ஸ்டாலின். அந்த ஸ்டாலின் என்ன செய்வார் தெரியுமா?

குஷ்பூ மீது நடவடிக்கை எடுத்து அழ வைப்பார் என்றா நினைக்கிறீர்கள் !

நாளை வள்ளுவர் கோட்டம் அருகே ராஜபக்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில ், குஷ்பூவை தனது அருகே அமர்த்தி அழகு பாப்பார் தளபதி ஸ்டாலின்...

வாழ்க தி.மு.க.

வாழ்க திராவிட தாய் குஷ்பூ
Quote
 
 
+2 #38 sharjah Mathan 2013-02-15 22:57
;-) :-* :cry: :o :-x :zzz தனது முதுமையை உணர முடியாத குஷ்பூ பிரியர்…

தனது பணிகளை மட்டுமல்ல, கழகம் ஆற்ற வேண்டிய பணிகளை முறையே

செய்ய முடியாத குஷ்பூ பிரியர்….

மன வலிமையும் இல்லாத குஷ்பூ பிரியர் …..

உடல் வலிமையும் இல்லாத குஷ்பூ பிரியர் …

அரசியல் பொலிவையும் இழந்த குஷ்பூ பிரியர்….

சொந்த வாரிசையே எதிர்த்தாலும் குஷ்பூவையே காப்பாற்றும் பிரியர்…

போப் ஆண்டவரின் அறிக்கையை படித்தாவது உணருவாரா?


:P
Quote
 
 
+1 #37 aninu 2013-02-15 13:31
Vaiko 19 matham sirayil thaliyathu edhe JAya arasu . Appo kalingar appuram vaiko than adhanal evarai ulle thalinal nammuku edhiri irruku mattan endra artahm thane . Savukku avargale ungal polulla niraya per en Thaliavar Prabhakaran edam ANTON BALSINGHAM irunth edithil avarai pol siruntha arasiyal alosogar vendum endru sollville? Avargal poridutuum nam enge adhaivaithu arasiyal seiya thane ?
Quote
 
 
0 #36 aninu 2013-02-15 13:24
Srilankan issue Karunanithi seitha adhey drogam jayavum seithirukargal .Ltte oru thivaravathi iyyakam athey tamil nattukul irrukukodathu and sollum CHO adhey jayalalitha adharithu tamil nattil satam ozhungu seriyile endru delhi varai adthu sendru DMK govt kalaikapattuthu . Por endral uiyur illapu endru pesiyavur , Prabhakaran kutravaliyaga tamilnadu kondu vara vendum endru sollivitu . Makkal srilankan tamil issue va adharikirargal enbatharkaga somersault adithu indru kaka vantha viranganai pol pesuvathu mattumm santharpa vadham illiye? Endrum CHO and Subramanian swami are supporting rajapakse and they are WELLLLLLLLLLLL wishers of Jayalalitha . SO please write about both Karunanithi and Jayalalitha
Quote
 
 
-2 #35 aninu 2013-02-15 13:15
You can definitely have your thoughts been told but there is a decorum which should be there . When nakkeran published about the beef incident . Although you condemned the action against nakkeran you told that nakkeeran should also know what it writes . I hope this also would hold good for any one .Saying that karunanathi has heirs every where puts you in poor light. Today kumudham reporter has article saying " Inoru Maniyamai " and tomorrow would you have the guts to condemen as this is also a personal issue of a individual and press should also maintain its decoroum . Can you say that people in media are the purest and they only stnd by truth . I expect more decorum in your articles and hope you hear and listen nto all your viewers.
Quote
 
 
+4 #34 கும்பிட்ரென் சாமி 2013-02-14 15:52
ஏன் குஷ்பு மணியம்மை ஆக முடியாது? பெரியாருக்கும் மணியம்மைக்கும் வயது வித்தியாசம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல். அதே போல் கருணாவிற்க்கும் , குஷ்புவுக்கும் வயது வித்தியாசம் இருக்கும். திராவிட நாட்டில் இது நடக்கும். இருந்து பார்.
Quote
 
 
+5 #33 திருவேங்கடம் குமார் 2013-02-13 17:39
மு கா வின் கிரிமினல் புத்தியை மிக தெளிவாக விளக்கியுள்ளீர் கள் - இந்த குஷ்பூ - ல்லாம் எக்கேடு கெட்டு போகட்டும் விடுங்க ஐயா.
தமிழன்.
Quote
 
 
+39 #32 ஊர்க்குருவி. 2013-02-13 17:08
Puthiyavan Raj அவர்களே! நீங்கள் கருணாநிதிக்காக விசுவாசமாக இருங்கள் அது உங்கள் தனிப்பட்ட தெரிவு. ஆனால் கருணாநிதியைப்போ ல சுத்துமாத்துத்த னமாக பேசி நியாயப்படுத்த முயல்வது நியாயமுமாகாது, நீதியுமில்லை.

முள்ளிவாய்க்கால ில் இறுதி கட்ட போர் நடைபெறும் போது ஈழம் இனி சாத்தியமில்லை என்று கருவாய் மலர்ந்து திசைமாற்றியவர் இந்த பச்சோந்தி கருணாநிதி.

சோனியாவின் மத்திய அரசின் நிலைப்பாடு தான் மாநில அரசின் நிலைப்பாடு என்று சொன்னதும் இதே கருணாநிதிதான்,

போர் நடைபெறும்போது தமிழ்நாட்டில் ஈழம் என்ற சொல்லையே சொல்லகூடாது , விளம்பரங்களில் ஈழம் பயன்படுத்த கூடாது என்றும் அதை பல சுவர் விளம்பரங்களில் அழித்தது சோனியாவுக்கு பக்கபலமாக நாட்டை ஒரு சர்வாதிகார இரும்புத்திரை நிலையில் வைத்திருந்ததும் இதே கருணாநிதிதான்.

உச்சகட்ட போர் நடைபெறும்போது தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழித்த போது குமுறி குரல்கொடுத்த வைகோவையும் , சீமானை 5 முறை சிறை பிடித்ததும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்ததும் கருணாநிதிதான்.

ஈழ படுகொலை கொடூர வீடியோக்களை தமிழகத்தில் பரவும் போது அதை தடுத்தது தேசியப்பாதுகாப் பு பாயும் என மிரட்டிய பாவியும் இந்த கருணாநிதிதான்.

அப்பாவி முத்துகுமார் உயிரை மாய்த்து கொண்ட போது கேவலமாக அவன் சாவை தூற்றியதும் இதே கருணாநிதிதான்.

இறுதி கட்டத்தில் பல கட்சிகள் மக்கள் , மாணவர்கள் , வழக்கறிஞர்கள் என்று போராடிய போது அவர்களை ஓட ஓட அடித்து துரத்தியதும் இதே தரித்திரவான் கருணாநிதிதான்.

ஆட்சியில் இருக்கும் போது தேவை இல்லாமல் ஈழ பிரச்சினையை இங்கு எல்லோரும் அரசியல் ஆக்குகிறார்கள் என்ற கருணாநிதி இப்போ கள்ளர்கள் போல ,
கறுப்பு சட்டை அணிந்து கண்ணீர்விட்டு ஐநாவரை கொடிபிடித்து அரசியலாக்குவதும ் கருணாதான்.
Quote
 
 
+33 #31 ஊர்க்குருவி. 2013-02-13 17:08
(2) நெடுமாறன் சேர்த்து அனுப்பிய அரிசி , பருப்பு , மருந்து உதவி பொருள்கள் என்று அத்தனை பொருள்களையும் இலங்கை திசைக்கே போகவிடாமல் தடுத்தவனும் கருணாநிதிதான்.

மனதில் ஈரமுடைய துணிச்சலான தமிழ் இளைஞர்கள் திரட்டி அனுப்பிய உயிர்காக்கும் இரத்த உறைகளையும் மருந்துகளையும் ஜபார் சேட்டை அனுப்பி பறித்து கடலில் வீசியதும் நரகாசுரன் கருணாநிதியே.

சிங்களர்கள் கோபபடுவது போல் நாம் நடந்து கொள்ள கூடாது , அவர்களாக கொடுப்பதை தான் நாம் வாங்கி கொள்ள வேண்டும் என்று வஞ்சகமாக சொன்னதும் கருணாநிதி

தமிழீழத்தை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்காது என்று ப.சிதம்பரம் சொல்லியும் அவரை திருட்டு தனமாக வெற்றி பெற செய்து இன்று வரை கூட்டணியில் தோள் கொடுத்து தூக்கி நிற்பதும் கருணாநிதிதான்.

ஒவ்வொருமுறையும் தான் கேட்ட துறைகள் கிடைக்க டெல்லிக்கே குடும்பத்துடன் படையெடுக்கும் கருணா ஈழ படுகொலை சம்பந்தமாக மத்திய தியாகத்திருவிளக ்கிடம் ஏதாவது பேசி கோரிக்கை வைத்ததானிதுவரை வதந்தியாவது உண்டா?

உண்மையிலையே தமிழர்கள்மீது கரிசினை உணர்வு இருந்திருந்தால் படுகொலைகளை தடுக்கவேண்டுமென ்ற உணர்ச்சி இருந்திருந்தால் கடைசி வரை சகோதர யுத்தம் சகோதர யுத்தம் என்று கூப்பாடு போட்டு ஒப்பாரி வைத்திருப்பாரா.

கட்சியை விட்டு MGR , வைகோ நீக்கியது எந்த யுத்தம்? அழகிரி, ஸ்ராலின் நடுவே நடக்கும் யுத்தம் என்ன யுத்தம்? சகோதர முத்தமா??

2 1/2 மணிநேர நாடக உண்ணாவிரத ராமாவை அரங்கேற்றி தமிழ் மக்களையும் , தமிழீழ மக்களையும் கேடுகெட்ட முட்டாள் ஆக்கியது யார்

ராஜினாமா என்ற மற்றொரு நாடகத்தை அரங்கேற்றி பாராளுமன்ற எம்பிகளின் ராஜினாமாவை பெற்று சகுனி வேலை செய்தது ஜெயலலிதாவின் அறிவுரையின்படிய ா?

மகள் கனிமொழியை ராஜாபக்செவுடன் கொஞ்சி கூத்தடிக்க அனுப்பிவிட்டு பல பரிசு வாங்கி வரும்போது வரவேற்றது யார் அதிமுக காரரா?


இன்று பதவி இல்லாமல் அம்மணமாக உக்கார்ந்து ஊளையுடும் காண்டாமிருகம் அன்று பதவியை தூக்கி எறிந்திருந்தால் இன்றைக்கும், என்றைக்கும் இந்த நரி முதலைமைச்சர் பதவியை பறிகொடுத்திருக் குமா?.

ஈழ தமிழர் பிரச்சினைக்காக ஆட்சி இழந்தேன் , ஆட்சி இழந்தேன் என்கிறதே இந்த மரம், அவன் அவன் உயிரையே இழந்து உள்ளான் என்று தெரியாதா?
Quote
 
 
+21 #30 senthamil 2013-02-13 13:51
எம்ஜிஆருக்கு வாரிசே இல்லை. கருணாநிதிக்கு ஊரெங்கும் வாரிசுகள்..சூப்பர்..
Quote
 
 
-1 #29 கும்பிட்ரென் சாமி 2013-02-13 12:50
வாழும் திராவிட வேந்தன் நவீன பெரியாரும் மணியம்மை கண்டால் உங்களுக்கு ஏன் கடுப்பு.
Quote
 
 
+12 #28 kingkong 2013-02-12 21:14
புதியவன் : வயது என்பது வெறும் நரை கூடி கிழப்பருவம் எய்துவது மட்டும் அல்ல.மனமும் பக்குவப்படவேண்ட ும் முக்கியமாக மரியாதை மற்றவர் தரவேண்டும்.. கலைஞரிடம் வெளிப்படுவது நகைச்சுவை உணர்வெனில் ஹிட்லரும் மனித நேயனே! மற்றவர்கள் துப்பாக்கி ஏந்தி போராடினார்களா என கேட்பவர் போராடியவர்களுக் காக என்ன பிடுங்கினார்? நடுவண் அரசில் கொலு வீற்றிருந்தவர் என்ன செய்தார்? உங்கள் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கி ரான் தமிழன்.. அதை துடைப்பதை விட்டு என்னை மட்டும் தான் இப்படி உமிழ முடியும்.. என் எதிரியை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சப்பைகட்டு கட்டாதீர்..
Quote
 
 
+4 #27 santhaanam 2013-02-12 18:48
""ஈழத்தமிழரை நான் காப்பாற்றவில்லை என்று தூற்றுவோர், துப்பாக்கிகளை ஏந்தி, ஈழத்தமிழரை காக்க போரிட்டுக்கொண்ட ிருந்தார்கள் அல்லவா என்று சூடு கொடுத்துள்ளார்""
இங்க அதுக்காக போராடி தீக்குளித்து உயிர் துறந்த முத்துக்குமாரை மன நிலை பாதிக்கப்பட்டவர ென்றீர்- ஈழ ஆதரவு போராட்டம் நடத்திய வைகோ, சீமான் போன்றோரை தேசிபாதுகாப்பு சட்டம் போட்டு தடுத்தீர்-- இழ கொலை முடிந்தௌடன் ராஜபக்ஷா வை காமன்வெல்துக்கு கூப்பிட்டு கவுரவபடுத்தியபோ து என்ன செய்தார்? இப்ப மட்டும் கருப்பு சட்ட போட்டு சீன் போட முடியௌது.. அப்ப பதவி இருந்த போது அவனுக்கு சிவப்பு கம்பளம் விரித்தபோது கருப்பு சட்டை தைத்து கொடுக்க ஆள் இல்லயா? நம்ம குஷ்பு நடித்த பெரியார் படத்தில் நிறைய கருப்பு சட்டைகள் தைத்திருப்பார்க ளே!! ஜாபர் ஆபீஸர் சொல்லலையோ?
Quote
 
 
+5 #26 santhaanam 2013-02-12 18:42
"ஈழத்தமிழரை நான் காப்பாற்றவில்லை என்று தூற்றுவோர், துப்பாக்கிகளை ஏந்தி, ஈழத்தமிழரை காக்க ோரிட்டுக்கொண்ட ிருந்தார்கள் அல்லவா என்று சூடு கொடுத்துள்ளார்"
சூப்பரப்பு!!அப் போ மத்திய அரசுல இருந்தது யாருங்கோ?? அப்ப மத்திய அரசுல இருந்தோமா?? இருந்தோம்.. அப்பதான் ஸ்பெக்ட்ரம் ஏலமெல்லாம் விட்டாங்க... அதுக்கு அப்புறம் இலங்கைல 2 லட்சம் பேர கொன்னாங்க! என்னது? இலங்கைல போர் நடந்ததா? இதல்லாம் ரீசன்டா படத்துல பாத்துட்டோம் சார்!!இப்ப இருக்குற அரசவிட அப்ப பலமில்லாத நிலையில என்னா வேணும்னாலும் செய்திருக்கலாம் ... அனா இப்பதான் நம்ம குஷ்பு திமுக தலீவருக்கு மேட்டரே தெரியுது.... ஏன் அப்ப தலீவர் இதுபத்தி எல்லாம் கண்டுகலன்னா தலைமுறை இடைவெளி... 2ஜி... 3 ஜி இப்புடி ஜெனெராஷன் கேப் ஆயிபோச்சி...........
Quote
 
 
+4 #25 ganesh111 2013-02-12 17:10
வாழும் சகுனி " - Exact title for MK
Quote
 
 
-5 #24 arunyog 2013-02-12 16:38
அவர்களுக்கு தெரிவது இருக்கட்டும். திமுக வின் பொதுக்குழுப் பற்றி தங்களுக்கும், தங்களுக்கு ஜால்றா போடும் பின்னூட்ட பித்தன்களுக்கும ் ஏதாவது தெரியுமா ?////
அங்கே சிறப்பு அழைப்பாளராக ராஜாத்திஅம்மாள் வருவார்.
Quote
 
 
-4 #23 arunyog 2013-02-12 16:35
பிரச்சினை தங்களை போன்ற ஊடகங்கள் தான் .மேலே சொல்லியுள்ள அனைத்து குற்றசாட்டுகளுக ்கும் ஊடகங்களே காரணம் என்பது மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும்////
நான் சொல்றேன் முரசொலி என்னும் ஊடகத்தினால் உங்களது கல்லா பெட்டி நிறைந்தது மட்டுந்தான்
Quote
 
 
+2 #22 arunyog 2013-02-12 16:28
ஈழத்தமிழரை காக்க போரிட்டுக்கொண்ட ிருந்தார்கள் அல்லவா என்று சூடு கொடுத்துள்ளார். ஒரு மானில அரசால் எப்படி வெளி நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை தடுக்க முடியும் என்ற அடிப்படை விசயம் கூட புரியாமல் கலைஞரை விமரிசிப்பது குரோதம் அன்றி வேறு இல்லை./////
அடங்க கொய்யலா
மாண்டீநீக்றோ நாட்டு துதர் கையில சொன்னக்கா எல்லாம் சரியாப்பூடும் என்ற
அடிப்படை விஷய்ம் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கு
Quote
 
 
+7 #21 Bilal 2013-02-12 13:02
Dear Savukku, Its my very long time wish to learn the contribution of TamilNadu politicians in the murder of Rajiv Gandhi, would you be able to write an article or guide me to a book.
Quote
 
 
+9 #20 ஊர்க்குருவி. 2013-02-12 09:56
கன்னிகையே….
நின்
கருத்துள்ள
பரப்புரைகள்
திகைப்பு கொண்டேன்.

கணப்பொழுதில் தாக்கியது
பிய்ந்துபோனேன்.
மெல்ல மெல்ல
முதிய நிலை பின்னே சென்று
சின்னவனாய் என் மனது
உணரக்கண்டேன்.

தின்றிடவும்
என் மனது இணங்கவில்லை
சீராக உறங்கிடவும்
வழியுமில்லை
புல்லாகி புழுவாகி புலையனாகி
பூமியிலே நாயாக
அலைகின்றேன் நான்.

முன்னமது
பெரியாரின் தொண்டனாக
மூப்படைந்து
கிழமாக தவழ்ந்தபோதும்.

வண்ணநிலா வடிவான
கள்ளி உன்னை-என்
கரு நெஞ்சில்
கோவிலாக
கண்டேன் கொண்டேன்.

முன்னையவள் மணியம்மை
பெரியார் நெஞ்சில்
முழுமனதாய்
அமர்ந்தது போல்
எந்தன் நெஞ்சும்

கல்மீதி மோதிநின்ற
கால் நகம்போல்
கந்தலென நாராக
கிழிந்து தொங்கி,
கண நேரம் தூங்காமல்
அலையக்கண்டேன்

என்
எண்ணமது
என்னவென்று
அறிவாய் நியும்
எழுதுகோல் முனைபோல
உலைகின்றேன் நான்.

வெண்நிலவு வரும்வேளை
பின் வளவு
அண்ணா சிலை வேலி ஓரம்
திண்ணமது
என் திறன் அனைத்தும்
தெரியக்காண்பாய் .

என்னவென்று
மழலை மொழி வாய் திறந்து
கண்ணன் எனை
களிப்படைய வைப்பாய் காவாய்.

என்
எண்ணமது
அவ்வளவும் சொல்வேன்
அன்று
இங்ஙனமோர்
உருக்குலைந்து
வாழும் சகுனி,
Quote
 
 
+2 #19 dhina 2013-02-12 09:49
[ஃஉஒடெ நமெ="புதியவன் றஜ்"]சவுக்கும் சவுக்கு வாசகனும் ஜெ. இமாலயத்தவறு செய்தாலும், அதைக்கண்டிக்கும ்போது மயிலறகால் தடவுவது போல இருக்கும். ஆனால் கலைஞர் கடுகளவு தவறு செய்தாலும், இரும்புத்தடியால ் குரூரமாக தாக்குவார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும், ஈழத்தாய் என்றெல்லாம் ஜெ. விடம் கூனிக்குறுகி நின்றதை வசதியாக மறந்து விட்டு ஜெ. விடம் யாரும் உயிர் பிச்சை கேட்கவில்லை என்று ஜெ. துதி பாட துடிக்கிறார். தள்ளாத வயதிலும் தளராத நகைச்சுவை உணர்வோடு, ஆமாம் ஈழத்தமிழரை நான் காப்பாற்றவில்லை என்று தூற்றுவோர், துப்பாக்கிகளை ஏந்தி, ஈழத்தமிழரை காக்க போரிட்டுக்கொண்ட ிருந்தார்கள் அல்லவா என்று சூடு கொடுத்துள்ளார். ஒரு மானில அரசால் எப்படி வெளி நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை தடுக்க முடியும் என்ற அடிப்படை விசயம் கூட புரியாமல் கலைஞரை விமரிசிப்பது குரோதம் அன்றி வேறு இல்லை.[/ஃஉஒடெ துப்பாக்கியை தூக்க வேண்டாம் ....மத்திய அரசிலிரிந்து விலகினால்போதும் பா ....மானமுள்ளவன் யோசிக்கவேண்டியத ு......கருணாவிற்கு எதற்கு?
Quote
 
 
-7 #18 Chandrabarathi 2013-02-12 09:21
தமிழ் வாழ்க
Quote
 
 
-56 #17 Puthiyavan Raj 2013-02-12 08:33
சவுக்கும் சவுக்கு வாசகனும் ஜெ. இமாலயத்தவறு செய்தாலும், அதைக்கண்டிக்கும ்போது மயிலறகால் தடவுவது போல இருக்கும். ஆனால் கலைஞர் கடுகளவு தவறு செய்தாலும், இரும்புத்தடியால ் குரூரமாக தாக்குவார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும், ஈழத்தாய் என்றெல்லாம் ஜெ. விடம் கூனிக்குறுகி நின்றதை வசதியாக மறந்து விட்டு ஜெ. விடம் யாரும் உயிர் பிச்சை கேட்கவில்லை என்று ஜெ. துதி பாட துடிக்கிறார். தள்ளாத வயதிலும் தளராத நகைச்சுவை உணர்வோடு, ஆமாம் ஈழத்தமிழரை நான் காப்பாற்றவில்லை என்று தூற்றுவோர், துப்பாக்கிகளை ஏந்தி, ஈழத்தமிழரை காக்க போரிட்டுக்கொண்ட ிருந்தார்கள் அல்லவா என்று சூடு கொடுத்துள்ளார். ஒரு மானில அரசால் எப்படி வெளி நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை தடுக்க முடியும் என்ற அடிப்படை விசயம் கூட புரியாமல் கலைஞரை விமரிசிப்பது குரோதம் அன்றி வேறு இல்லை.
Quote
 
 
-26 #16 கொம்பன் 2013-02-12 00:29
//பொதுக்குழு என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும்.//
அவர்களுக்கு தெரிவது இருக்கட்டும். திமுக வின் பொதுக்குழுப் பற்றி தங்களுக்கும், தங்களுக்கு ஜால்றா போடும் பின்னூட்ட பித்தன்களுக்கும ் ஏதாவது தெரியுமா ? என்பதே சந்தேகம்! ஸ்டாலின் வ்ச் குஷ்பு என்று ஒரு வார பத்திரிக்கை செய்து வெளியிட்டிருக்க ிறது, அதற்கும் இந்த பதிவுக்கும் பெரிதாக எந்த ஒரு வித்தியாசமும் இல்லை!
Quote
 
 
+22 #15 uyir 2013-02-11 20:43
தமிழ் நாட்டில் குசூபு. இருக்கவேன்ட்டிய திள்ள. அவள் செத்தால் என்ன பிச்சை எடுத்தால் என்ன சவுக்கு? ஏன் மினக்கட்டு இந்த கட்டுரை? கருன்னநிதி பயபுள்ள இழுத்து இழுத்து தான் சவான்.............
Quote
 
 
+11 #14 raguraam 2013-02-11 19:09
வருங்கால முதல்வர் திருமதி குஷ்பு சுந்தர் அவர்களுக்கு இப்பவே ஆயிரமாயிரம் நமஸ்காராங்கள்!!
அமாம்.. தி மு க தலைவர் பதவிக்கு தலைவர், தல்ப்பத்தி,அல்க ிரி அண்ண (இது கலைஞர் -குஷ்பு கண்டுபிடித்த நான்காம் டமில்.. முத்தமிழுக்கு அடுத்தது)ஆகிய மூன்று பேருக்கும் தானே போட்டின்னு நினைச்சேன்!! இப்ப இவங்க வேரயா? ஆகா.. அந்த பேட்டிய படிச்சா நல்லா சொல்ராங்கப்பா.. நான் கூட வரலாம் அப்புடிங்குறத ஒடச்சி சொல்லிட்டாங்க... அப்புறம் என்ன? அவங்களயும் போட்டியில சேத்துக்க வேண்டியது தானே?.. இவங்கள பத்தி என்னதான் நினைச்சிகிட்டு இருக்காங்க? இவங்களும் இன்னும் குஷ்பு... குஷ்பு ......அப்புடின்ன்மு தமிழினம் வெறிகொண்டு அலையிறதாகவும், இவங்க நடத்துற ரிக்கர்டான்ச பார்க்குறவங்களு ம் ஏதோ இவங்க என்னா சொன்னாலும் கேக்குற அளவுக்கு மதி மயங்கி இருப்பது போலவும் நினைச்சிகிட்டு இருக்குறாங்க போல.....அமாம் தலீவர் ஏன் இந்த நடிகையை கட்சியில செம லைட்டு குடுத்து வச்சிருக்காருன் னு யோசிச்சவங்களுக் கெ எல்லாம் இப்ப தெரியும்... காரணம்.... அவுங்க ரொம்ப திறமையானவங்க அப்புடின்னும் மிகப்பெரிய தைரியசாலி அப்புடின்னும் அவங்களே சொல்லிட்டாங்கப் பா... வங்கக்கடல் ஓரத்திலே சந்தனப்பேழையில் உறங்கிக்கொண்டிர ுக்கும் அறிஞர் அண்ணா தோற்றுவித்து, ஐம்பெரும் தலைவர்களாலே வளர்க்கப்பட்டு ஆறாம் பெரும் தலைவராலே பிரிக்கப்பட்ட கட்சிக்கு இப்போது இன்னொரு வாரிசு! இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! திராவிட இயக்க, பெரியாரின் கொல்லைகலை(அவங்க டமிலில் கொள்கைகளை) நல்லா படிச்சிட்டாங்கன ்னும் அதுக்கேத்த மாதிரி அப்பப்ப செம செமயா டயலாக்கெல்லாம் உட்டு அவரது இருப்பை உறுதி படுத்தி கொள்வது போன்ற மிகப்பெரிய திறமைகளைக் கொண்டுள்ள அவரையும் தலைவருக்காண போட்டியில் சேர்த்துக் கொள்ளலாம்...
Quote
 
 
+32 #13 சோழன் 2013-02-11 18:23
சவுக்கு ஒரு சிறு விளக்கம்!!!

திருக்குறள் படித்து புரிந்துகொண்ட எவனும் "குறைந்த பட்சம்" மனிதனாக வாழ முயற்சிப்பான்!! !

இவன் குற்ளோவியம் படைத்தான் 'னு திருக்குறள் அ அசிங்க படுத்துறதும், இவன் முத்தமிழறிஞன் 'னு சொல்லி தமிழ அசிங்க படுத்துறதும் தயவு செய்து வேண்டாம்!!!

தமிழும் திருக்குறளும் இவன் அறிவை தாண்டி புனிதமானது!!!
Quote
 
 
+20 #12 சோழன் 2013-02-11 18:17
Quoting anniyan:
//இன்னும் ஐம்பது ஆண்டுகள் அல்ல… இருபது ஆண்டுகள் இருப்பீர்களா என்பதே சந்தேகம்தான்.//

என்னுடைய ஆசை தி.மு.கருனானிதி அவர்கள் இன்னும் 50 வருடம் உயிரோடிருந்து தன் கண் முன்னெயே இந்தக் கட்சி இல்லாமல் போவதைக் காணவென்டும் என்பதுதான்




திமுக அழிய ஐம்பது ஆண்டுகள் ஆகுமா? அது பேர் அழிவே இல்லயே!!!
Quote
 
 
+6 #11 sureshstalin 2013-02-11 17:21
பெரியபுராணம் தந்த சேக்கிழார்
http://www.tamilkadal.com/?p=1870
பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்பு ராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது.
Quote
 
 
-22 #10 MUKIL 2013-02-11 17:12
:லொல்: இந்த கட்டுரையினால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம். மாற்றம் வேண்டும் என சொன்னீர்கள் மாற்றத்தினால் ஏற்பட்ட பயன்களை தங்களை போன்ற ஊடகங்கள் அனுபவித்தால் நல்லது.தாங்க்ள் எந்த வித தடங்கலும் இல்லாமல் இருப்பீர்கள் ஆனால் மாற்றம் வேண்டிய மக்கள் கற்காலத்திற்கு செல்வார்கள்.தங்களை போன்றவர்களை விட பல வித வசவுகளை வாங்கி தாங்கி தான் திமுக இவ்வளவு வளர்ந்துள்ளது.திமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை பிரச்சினை தங்களை போன்ற ஊடகங்கள் தான் .மேலே சொல்லியுள்ள அனைத்து குற்றசாட்டுகளுக ்கும் ஊடகங்களே காரணம் என்பது மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும்
Quote
 
 
+33 #9 arunyog 2013-02-11 15:19
கே.கே நகரில் நடந்த மு.க பிறந்த நாள்
கூட்டத்தில் ஒரு திமுக காரன் குஷ்புவின்
இடுப்பை கிள்ளி விளையாடியதாக கேள்வி
பட்டேன் உண்மையா ??????
Quote
 
 
+24 #8 KarthikPrabakaran 2013-02-11 14:17
.................................................................................................................................................................................................................................

வேற ஒண்ணும் இல்லைங்க!!! திட்றதுக்கு புதுசா ஏதாவது வார்த்தை இருக்கானு தேடிட்டு இருக்கேன்..!!!!!!
Quote
 
 
+14 #7 சவுக்கு வாசகன் 2013-02-11 13:50
[ஃஉஒடெ நமெ="பெனெடிச்ட்"]சவுக்கு,உன்னுட ைய கட்டுரை சிறப்பு. ஆனால் கடைசி பத்தியில் உன் சுய ருபம் காட்டியிருக்கிற ாய். ஏதொ கருணா மட்டும் இலங்கை தமிழர்க்கு எதிரி மாதிரி எழுதியுள்ளாய். இக்கட்டுரை குஷ்பு பற்றியது. அதில் எதற்க்கு இலங்கை சம்பந்தமான எழுத்து.ஏன் இந்த பாரபட்சம். ஏன், ஜெயா இலங்கை தமிழர்க்கு எதிரானவர் இல்லையா?[/ஃஉஒடெ]


ஜெயலலிதா என்றும் நான் ஈழ தமிழர்களுக்கு உயிர் தருவேன், **** தருவேன் என்று பேசியதில்லை.. கலைஞர் தான் அவ்வாறு வசனம் பேசினார், அவரால் தடுக்க பெரிய வழி இருந்தும், தன் குடும்பத்துக்கா க தன் ஒரே மகளுக்காக ஈழ தமிழர்கள் பல லட்சம் பேரை பலி ஆக்கினார். பிறகு யாரை குற்றம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள் . மேலும் தமிழர்கள் ஜெயலலிதாவிடம் போய் உயிர் பிச்சை கேட்கும் நிலையிலும் தரம் தாழவில்லை நண்பரே.
Quote
 
 
-41 #6 Benedict 2013-02-11 10:24
சவுக்கு,உன்னுடை ய கட்டுரை சிறப்பு. ஆனால் கடைசி பத்தியில் உன் சுய ருபம் காட்டியிருக்கிற ாய். ஏதொ கருணா மட்டும் இலங்கை தமிழர்க்கு எதிரி மாதிரி எழுதியுள்ளாய். இக்கட்டுரை குஷ்பு பற்றியது. அதில் எதற்க்கு இலங்கை சம்பந்தமான எழுத்து.ஏன் இந்த பாரபட்சம். ஏன், ஜெயா இலங்கை தமிழர்க்கு எதிரானவர் இல்லையா?
Quote
 
 
+45 #5 Padmanan 2013-02-11 09:22
எப்படி எப்படியோ சிறப்பாக எழுதப்பட வேண்டிய இடத்திலிருந்தும ், தன் வரலாறு இப்படித்தான் இருக்க வேண்டும் என செயல்பாடுகளினால ் தன் வாழ் நாளிலேயே தீர்மானித்து செயல்படும் தலைவர்தான் கருணாநிதி.

இராஜாஜி, காமராசர், பக்தவசலம், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், இந்திராகாந்தி போன்றவர்களோடு அரசியல் செய்த ஒரு தலைவர் இன்று செய்யும் அரசியல் தமிழர்களுக்கே தலை குனிவு. அதையும் என்னைப் போன்ற நண்டு சிண்டெல்லாம் கடுமையாக விமர்சிப்பது... அதை விட கொடுமை.
Quote
 
 
+87 #4 vithivilakku 2013-02-11 06:46
அட இந்த நாதாரிய பத்தி காலைலயே படிக்கனுமா.....
Quote
 
 
+72 #3 anniyan 2013-02-11 05:25
//இன்னும் ஐம்பது ஆண்டுகள் அல்ல… இருபது ஆண்டுகள் இருப்பீர்களா என்பதே சந்தேகம்தான்.//

என்னுடைய ஆசை தி.மு.கருனானிதி அவர்கள் இன்னும் 50 வருடம் உயிரோடிருந்து தன் கண் முன்னெயே இந்தக் கட்சி இல்லாமல் போவதைக் காணவென்டும் என்பதுதான்
Quote
 
 
+53 #2 Ravi 2013-02-11 03:41
இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது அந்த மாநில மொழியைக்கூட ஒழுங்கா பேசத்தெரியாத வெளி மாநில ஆட்கள் குஷ்பு போல வந்திருக்காங்கள ா? நம்ம தமிழ் நாட்டில அதுவும் தமிழுக்காக உயிரைக் கொடுப்பென்னு வளர்ந்த கட்சிதான் இந்த அநியாயத்தை செய்து இன்று இந்த அம்மா இன்னொரு முதல்வர் கனவில் இருக்கிறாங்க...எனக்கு தெரிந்து ஆந்திராவோ, கேரளாவோ, கர்நாடகமோ இல்லை மிகப் பெரிய காஸ்மாபாலிடனாக மதிக்கப்படும் பாம்பாயோ அல்லது நமக்கெல்லாம் பொது என்று அறியப்படும் டெல்லியிலோ அந்த ஊரு பாஷைக் கூட தெரியாம ஒரு கவுன்ஸிலராக கூட முடியாது. அனா இங்க இந்த அம்மா ஒரு தலைவர் என்று வலம் வருகிறார்கள்..நன்றி..கலைஞர்.
Quote
 
 
+37 #1 போராளி 2013-02-11 01:29
சவுக்கு சங்கர் பாவம்? அமைதி படை படம் பார்க்கவில்லை போலும். கடைசி வரை அம்மாவாசை திருந்தமாட்டார் என்பதை படத்தின் இயக்குனர் மரியாதைக்குரிய மணிவண்ணன் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டு இருப்பார். அந்த அம்மாவாசை கதாபாத்திரம் யாரை மனதில் வைத்து எடுத்தார்? அன்றைய நிலையிலும் இன்றைய நிலையிலும் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று சவுக்கு வாசகர்களுக்கு நன்றாக தெரியும். ஒருத்தன் திருந்தவே மாட்டான் என்று இருக்கும் போது அவனுக்கு அறிவுரை கூறுவது என்பது முட்டாள்கள் செய்யும் வேலை. சரி இதெல்லாம் தெரியாமலா முக செய்கிறார். ஏன் அய்யா? தெரிஞ்சே செய்றவனுக்கு எதுக்கு அறிவுரை. ஜெயா கூட கொஞ்சம் திருந்தி உள்ளார். முன்பு அனைத்திலும் இருந்தது தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது. சவுக்கு சங்கரை தெரியாமதான் கேட்கிறேன். இந்த அறிவுரை குஸ்புக்கா இல்லை முகவுக்கா. குஸ்புவை அதிமுக பக்கம் போக சொல்லி திமுகவை அந்த குடும்பத்திடமே முழுசா ஒப்படைக்க சவுக்கு போடும் திட்டமா? இந்த கட்டுரை தமிழ் எழுத்துக்களுக்க ு ஒரு இழுக்கு.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 150 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2997
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week24196
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month226928
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12749047