முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
குமுதம் ரிப்போர்டர் கட்டுரை குறித்த கருணாநிதியின் அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 16 பிப்ரவரி 2013 17:47

கருத்துச் சுதந்திரம் - பத்திரிகைச் சுதந்திரம் என்பவை ஜனநாயக நாட்டில் எந்த அளவுக்கு முக்கியமானவையோ; அதே அளவுக்கு முக்கியமானவை சமூகப் பொறுப்பு - பத்திரிகாதர்மம் ஆகியவை என்பதை ஜனநாயக உரிமைகளிலும் - கடமைகளிலும் நம்பிக்கையுள்ள எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.

koshboo

சமூகப் பொறுப்பு என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், அதைக் காற்றில் பறக்க விடும் பத்திரிகைச் சுதந்திரம்; பத்திரிகைகளுக்கான நெறிகளை அதாவது பத்திரிகா தர்மத்தைக் கிஞ்சிற்றும் பேணாத பத்திரிகைச் சுதந்திரம்; படிப்போர் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலக்கவும், ஜனநாயக சமூகத்தின் ஆணி வேரை அரிவாள் கொண்டு அறுக்கவும் பயன்படுமே அல்லாமல்; ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்தவோ, சமூகத்தை ஆரோக்கியப் படுத்தி ஆக்கப் பூர்வமான பாதையில் அழைத்துச் செல்லவோ, அணுவளவேனும் பயன்படாது.

பத்திரிகை உலகின் வியாபாரப் போட்டியில் வருமானமே முதன்மையானது என்ற குறுகிய நோக்கம் ஆட்கொள்ளும்போது, சமூகப் பொறுப்பும் - பத்திரிகா தர்மமும் இற்று விழுந்து காய்ந்து போகத் தான் செய்யும். இப்படித் தான் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று நியதியை விதித்துக் கொள்ளாமல்; எப்படியாவது வருவாயைப் பெருக்கிக் கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விடுமானால், பொறுப்புணர்வும் - தர்ம சிந்தனையும் கடைசி இடத்துக்குப் போய் விடும்.

தமிழகத்தில் சில குறிப்பிட்ட ஏடுகளும், இதழ்களும் தாங்கள் வெளியிடும் செய்திகளும் - செய்திக் கட்டுரைகளும் எப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி எள்ளளவும் கருதிப் பார்க்காமல்; அப்படிக் கருதிப் பார்த்தால் தாங்கள் செய்து வரும் வியாபாரம் அடிபட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, எதையும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று; கனி இருப்பக் காய் கவர்ந்து முகம் சுளிக்கும் காரியத்தைச் செய்து வருகின்றனர். இப்படிச் செய்வதால், விற்பனையாகும் பிரதிகளின் எண்ணிக்கை கூடலாம். ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதையும்; அவர்கள் வெளியிடும் செய்திகள் ஏற்படுத்துவது ஒரு வகை மயக்கமே - அந்த மயக்கம் மறு நொடியில் தெளிந்து விடும் என்பதையும்; கடைசியில் அவர்களுக்கே அது பாதகமாகி விடும் என்பதையும்; “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்” என்பதையும் அவர்கள் உணராமல் இருப்பதுதான், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டுமானால்; 2011 பொதுத் தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்து, மூன்றாவது இடத்துக்கு வந்ததற்குப் பிறகு; “நல்ல சமயமடா நழுவ விடாதே” - என்று திமுகவுக்கு “ஜென்ம விரோதிகள்” எனத் தம்மைத் தாமே நினைத்துக் கொண்டிருக்கும் ஒருசில பத்திரிகையாளர்கள் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, திமுகவை ஒழித்துக் கட்ட இதுவே சிலாக்கியமான தருணம் என்று முடிவெடுத்து காரியத்தில் இறங்கி இருப்பது கண்கூடு. இதற்கு மேலிடத்து ஆசீர்வாதமும் அரவணைப்பும் அறிவுரைகளும் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

தீட்டப்பட்ட சதித் திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் - திமுகவினரைக் காயப்படுத்தி, கலகமூட்டிக் குழப்பம் ஏற்படுத்திடும் கற்பனையான செய்திகள், என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் இட்டுக் கட்டிய பொய்யுரைகள் அபாண்டமான முறையிலும், அதிர்ச்சியூட்டத் தக்க வகையிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. நமது கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே வெளியிடப்படும் அந்தச் செய்திகளை அவ்வப்போது மறுத்து விளக்கமளிப்பதும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் கால விரயத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைப் பெரிதாக எண்ணி அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக அலட்சியப்படுத்தப்பட்டன. அலட்சியம் செய்ததையே ஆதாயமாகக் கருதி, “ஆட்டைக் கடித்து . . . . .மாட்டைக் கடித்து .......” என்பார்களே அதைப் போல, அருவருக்கத்தக்க கட்டுக்கதைகளை, எவ்வித நாகரிகமுமின்றி வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். என்னைப் பற்றிக் கூட நான் எப்போதும் கவலைப்படுவதில்லை, ஆனால் ஒரு பெண்மணியைப் பற்றி, அதுவும் கணவனுடனும், குழந்தைகளுடனும் குடும்பம் நடத்தி வாழ்ந்து கொண்டு, கட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி நாராச நடையில் கொச்சைப்படுத்தி எழுதுவது முறை தானா? தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறார்களா? அந்தப் பத்திரிகையாளர்கள் தங்களுக்கும் குடும்பம் - பிள்ளை குட்டிகள் இருப்பதை மறந்து, சேற்றை அள்ளி வீசுகிறோமே, அதனால் கைகள் கறை ஆவதோடு, மற்றவர் மனம் எப்படியெல்லாம் வேதனைப்படும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றால், அவர்களுக்குப் பணம் தான் எல்லாம்; பண்பாடு - பத்திரிகா தர்மம் போன்ற நெறிமுறைகள் பழங்குப்பை தான்!

நான் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளனாகவே வளர்ந்து வந்திருக்கிறேன். எனது கைகளைக் கொண்டே என்னை அடிப்பதா என்ற தயக்கத்தில் இதுவரை அமைதியோடு பொறுமை காத்து வந்தேன்.

பத்திரிகையாளர்கள் சிலர், என்னைப் பொறுமையின் விளிம்பிற்கே தள்ளிக் கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. எனவே சேற்றை வாரி வீசுவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அமைப்பு ரீதியாக முடிவெடுத்து அறிவிக்கலாமா அல்லது கட்சி ரீதியாக அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் முன்னாலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என்றிருக்கிறேன்.

கட்சித் தோழர்கள், உள்நோக்கம் கொண்ட இத்தகைய செய்திகளைப் பற்றிக் கவலைப்படாமல் - சதித் திட்டத்தை நிறைவேற்ற இறுக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கும் “இனவெறிக்” கூட்டத்தின் செய்திகளையும், ஏடுகளையும் புறந்தள்ளி விட்டு - என்றும் போல் கட்சிப் பணி - மக்கள் பணி ஆற்றி, வெற்றி காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

 

Comments  

 
+2 #13 sangaiyaa 2013-02-27 14:20
ஒரு தரித்தரம் சரித்திரத்தை ஆரய்கிரது..!
Quote
 
 
-4 #12 Kush Sundar 2013-02-24 01:17
[ஃஉஒடெ நமெ="காங்கிரசு"]""குமுதம் ரிப்போர்டருக்கு மு க மீது தனிப்பட்ட விரோதம் இருந்தால், இவ்வளவு கேவலமாக தரம் தாழ்ந்து எழுதக்கூடாது.சுந்தர் என்பவர் தன் மனைவியைப்பற்றி இவ்வாறு வரும் செய்தி பார்த்து அவர் மனம் புண்படும் என்று இவர்களுக்கு தெரியாதா?
அ ய்யா புண்ணியவான்களே! இப்புடியாய்யா வெகுளியா இருக்கறது? என்னமோ இத எழுதுனதுக்கு வருத்தப்படுவாங் கன்னு எல்லாம் நம்புரீங்களே!! உங்கள நெனச்சா பாவமா இருக்கு... நீங்க சொன்ன அத்தன பேரும் அன்னைக்கு செம பார்ட்டி வச்சி கொண்டாடி இருப்பாங்க... இந்த வெளம்பரத்துக்கு தான்யா இது எல்லாமே!! வருங்கால தலைவருக்கு.. அதுவும் தி மு க வின் தலைவருக்கு இதுஎல்லாம் உரம் யா..............[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="சனேச்நரன்"]முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்........... கடவுள் இருக்குன்னு சொன்னாலும் இல்லன்னு சொல்லி ரகசியமா கும்புட்டாலும் எது எது எப்பப்ப நடக்கனுமோ அது அது அப்பப்ப சரியா நடக்கும்....
அமாம்.. இவ்ளோ நடந்தபிறகும் இரு தரப்பும் எதயும் விட்டு குடுக்குற மாதிரி தெரியல.. அந்த நடிகை உண்மையாகவே வருத்தப்பட்டால் போங்கப்பா.. . கச்சியாவது.. தலீவராவது.. தல்ப்பத்தி யாவது... திராவிடமாவது.. மானாவது.. மயிலாவது அப்படின்னு கவுரவமா ரிசைன் பண்ணிட்டு போனா அது ஒரு வித்தியாசமான அவர் எதிர்பாக்குற விளம்பரமா இருக்கும்.... பெரியவராவது கொஞ்சம் இறங்கி வந்து நம்ம குடும்பத்தால தான அந்த நடிகைக்கு... இயக்கத்தை ரட்சிக்க வந்த ரட்ச்சகி... ஆரிய திராவிட இணைப்புப் பாலம்... மும்பை மாநகர் பெற்றெடுத்த ம்மாதரசி... இயக்கத்தின் கடைகோடி தொண்டருக்கெல்லா ம் தொண்டர் குஷ்புவுக்கு பிரச்சினைன்னு இத இப்படியே விட்டுட்டு கலர் கலரா சட்டைகளை போட்டு ஏதாவது மீட்டிங்கு போடலாம்.. அவரும் விட மட்டெஙறாங்க... அந்தம்மாவும் டிவிட்டர்ல யாருக்கு ரிவிட்டு அடிக்கலாமுன்னு பார்த்துகிட்டுர ுக்கு... அந்தம்மாவோட டிவிட்டுகளுக்கு ரீ டிவிட்டு குடுக்குறாரறாம் மதுரை அன்பு நெஞ்சன்... அப்புறம் எச்.வீ. சேகர் வேரர உசுப்பேத்துறாரா ம்... என்னத்த சொல்ல? அந்த கடைகோடி தொண்டர் குஷ்பு மேடத்த தலைவராக்காம யாரும் விடுற மாதிரி தெரியல... பத்திரிக்கை காரங்களுக்கு பாய்ஸன் கிடைச்சாலே பாயாசம் மாதிரி சாப்புடிஉவாங்க.. இப்ப ........?[/ஃஉஒடெ


ஆனாலும் இந்த அம்பிக்கு குசும்பு ரொம்பவுன்புந்தா ன்.......]
Quote
 
 
-2 #11 kaangkirasu 2013-02-23 17:32
""குமுதம் ரிப்போர்டருக்கு மு க மீது தனிப்பட்ட விரோதம் இருந்தால், இவ்வளவு கேவலமாக தரம் தாழ்ந்து எழுதக்கூடாது.சுந்தர் என்பவர் தன் மனைவியைப்பற்றி இவ்வாறு வரும் செய்தி பார்த்து அவர் மனம் புண்படும் என்று இவர்களுக்கு தெரியாதா?
அ ய்யா புண்ணியவான்களே! இப்புடியாய்யா வெகுளியா இருக்கறது? என்னமோ இத எழுதுனதுக்கு வருத்தப்படுவாங் கன்னு எல்லாம் நம்புரீங்களே!! உங்கள நெனச்சா பாவமா இருக்கு... நீங்க சொன்ன அத்தன பேரும் அன்னைக்கு செம பார்ட்டி வச்சி கொண்டாடி இருப்பாங்க... இந்த வெளம்பரத்துக்கு தான்யா இது எல்லாமே!! வருங்கால தலைவருக்கு.. அதுவும் தி மு க வின் தலைவருக்கு இதுஎல்லாம் உரம் யா..............
Quote
 
 
+1 #10 gopalasamy 2013-02-23 13:26
WHY SSR VIJAYAKUMARI SEPARATED?
THERE WAS SOME NEWS ABOUT TANJORE COLLECTOR DURING 1970S.
CAN ANYBODY GIVE INFORMATION?
Quote
 
 
+5 #9 Sathish K 2013-02-22 17:45
சவுக்கு தி.மு.கவிடம் எவ்வளவூ வாஙினிர்கள் இந்த கட்டுரைக்கு..?
Quote
 
 
0 #8 manithan 2013-02-20 11:50
iyo saamy gala. dk...dmk.vaagy...dmk...admk...vagydichy...ipo dmk.la irunthu ku.dmk.nu inoru branch.athaanga kushboooooo dmk.
Quote
 
 
+21 #7 SUTHIRAN 2013-02-18 16:43
குஷ்பு லேசுப்பட்டவர் அல்லர் ! கருணாவோ "அந்த" மாதிரி விஷயங்களில் பழம் தின்றுக் கொட்டையையே போட்டவர் ! முன்னவர் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஏற்கெனவே திருமணமான ஒரு முன்னணி நடிகருடன் "கணவன் மனைவி" போல ஒரே வீட்டில் வாழ்ந்த கற்புக்கரசி ! பின்னவரோ ஐந்தாறு பெண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னரும் மனைவி உயிருடன் இருக்கும் போதே ஓர் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இணைவியை இணைத்துக் கொண்டு "கற்பென்பது ஆண்களுக்கு எல்லாம் அனாவசியம்" என்று நிரூபித்து ஓரு பெண் குழந்தையையும் ஊரறியாமல் பெற்றுக் கொண்டு கழக உடன் பிறப்புகளுக்கெல ்லாம் "தமிழ் ஆண்மகனின் கற்பு நெறியை யாவரும் பின் பற்றும் வண்ணம் முன் மாதிரியாக விளங்கியவர் ! அப்புறம் என்ன இவர்களுக்கு கற்பாவது புடலங்காயாவது?
Quote
 
 
-4 #6 Robinhood 2013-02-18 11:52
குமுதம் ரிப்போர்டருக்கு மு க மீது தனிப்பட்ட விரோதம் இருந்தால், அதற்காக இவ்வளவு கேவலமாக தரம் தாழ்ந்து எழுதக்கூடாது.தமிழ் படிக்கத்தெரிந்த சிறு வயது முதல் குமுதம் தொடர்ந்து படிப்பவன் என்பதால் , வருத்தமாக இருக்கிறது. எஸ் எ பி , ரா கி ர , ஜ ர சு போன்ற மாபெரும் மனிதர்கள் பத்திரிகை இவ்வளவு தரம் தாழகுடாது.சுந்தர் என்பவர் தன் மனைவியைப்பற்றி இவ்வாறு வரும் செய்தி பார்த்து அவர் மனம் புண்படும் என்று இவர்களுக்கு தெரியாதா? அவர்கள் குழந்தைகள் நிலை என்ன? பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிகை இவ்வாறு கண்டபடி எழுதுவதை நிறுத்தட்டும்.
Quote
 
 
0 #5 sekarrr 2013-02-17 20:52
அப்பபோது யாரோ தப்பு செய்தால் இப்போது செய்யும் தப்பை நியாயப்படுத்தக் கூடாது
Quote
 
 
+4 #4 saneeswaran 2013-02-17 10:28
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்........... கடவுள் இருக்குன்னு சொன்னாலும் இல்லன்னு சொல்லி ரகசியமா கும்புட்டாலும் எது எது எப்பப்ப நடக்கனுமோ அது அது அப்பப்ப சரியா நடக்கும்....
அமாம்.. இவ்ளோ நடந்தபிறகும் இரு தரப்பும் எதயும் விட்டு குடுக்குற மாதிரி தெரியல.. அந்த நடிகை உண்மையாகவே வருத்தப்பட்டால் போங்கப்பா.. . கச்சியாவது.. தலீவராவது.. தல்ப்பத்தி யாவது... திராவிடமாவது.. மானாவது.. மயிலாவது அப்படின்னு கவுரவமா ரிசைன் பண்ணிட்டு போனா அது ஒரு வித்தியாசமான அவர் எதிர்பாக்குற விளம்பரமா இருக்கும்.... பெரியவராவது கொஞ்சம் இறங்கி வந்து நம்ம குடும்பத்தால தான அந்த நடிகைக்கு... இயக்கத்தை ரட்சிக்க வந்த ரட்ச்சகி... ஆரிய திராவிட இணைப்புப் பாலம்... மும்பை மாநகர் பெற்றெடுத்த ம்மாதரசி... இயக்கத்தின் கடைகோடி தொண்டருக்கெல்லா ம் தொண்டர் குஷ்புவுக்கு பிரச்சினைன்னு இத இப்படியே விட்டுட்டு கலர் கலரா சட்டைகளை போட்டு ஏதாவது மீட்டிங்கு போடலாம்.. அவரும் விட மட்டெஙறாங்க... அந்தம்மாவும் டிவிட்டர்ல யாருக்கு ரிவிட்டு அடிக்கலாமுன்னு பார்த்துகிட்டுர ுக்கு... அந்தம்மாவோட டிவிட்டுகளுக்கு ரீ டிவிட்டு குடுக்குறாரறாம் மதுரை அன்பு நெஞ்சன்... அப்புறம் எச்.வீ. சேகர் வேரர உசுப்பேத்துறாரா ம்... என்னத்த சொல்ல? அந்த கடைகோடி தொண்டர் குஷ்பு மேடத்த தலைவராக்காம யாரும் விடுற மாதிரி தெரியல... பத்திரிக்கை காரங்களுக்கு பாய்ஸன் கிடைச்சாலே பாயாசம் மாதிரி சாப்புடிஉவாங்க.. இப்ப ........?
Quote
 
 
+12 #3 nallavan 2013-02-17 07:45
//“இனவெறிக்” கூட்டத்தின் செய்திகளையும், ஏடுகளையும் புறந்தள்ளி விட்டு - என்றும் போல் கட்சிப் பணி - மக்கள் பணி ஆற்றி, வெற்றி காண வேண்டும் என்று விரும்புகிறேன்//
கருணாநிதி இதை சொன்னத புதியவன் ராஜ் க்கு அதை இவர் புரிந்துகொள்வார ் என்று நம்பலாம்
Quote
 
 
+65 #2 Ravi 2013-02-16 23:04
இப்போது இவ்வளவு பேசும் நீங்கள் அன்று உங்கள் அறிவுக் கண்ணை திறந்த ஆசான் என்று கூறிக் கொள்ளூம் பெரியார் மணியம்மையை திருமணமே செய்து கொண்ட போது எவ்வளவு கீழ்த்தரமாக வாதிட்டீர்கள் என்று நினைவு வருகிறதா? அதை திருப்பி எழுதக் கூட எங்களுக்கு கை கூசுகிறது. காலம் இன்று உங்களை அங்கு நிறுத்தி பார்த்து கை கொட்டி சிரிக்கிறது.
Quote
 
 
+96 #1 Ravi 2013-02-16 23:01
இவருக்கு வசதி பட்ட போது நாம் பத்திரிக்கை தர்மம் காக்க வேண்டும். இன்றைய பத்திரிக்கை அசிங்கம் என்றால் இதை விதைத்தது யார்? இப்படி ஒரு தலைவரை இல்லாததும் பொல்லாததும் சொல்லலாம். யாரும் கேட்கமாட்டார்கள ். மாறாக ஆட்சியை கையில் தருவார்கள் என்று வழிகாட்டியது யார்? வயதில் முத்தவரும் மக்கள் சேவைக்காக தன் திருமண வாழ்க்கையைப் பற்றி கவலை கொள்ளாமல் வாழ்ந்த காமராஜரை நீங்கள் என்ன சொல்லி கேவலப்படுத்தினீ ர்கள்? அவரது பிரம்மசரியத்தை எப்படியெல்லாம் கேவலமாக பேசி, எழுதி மகிழ்ந்தீர்கள்? நினைவு வருகிறதா? அன்றும் அவரை ஒரு நடிகையுடந்தான் தொடர்பு படுத்தி எழுதி கேவலப்படுத்தி மகிழ்ந்தீர்கள். அப்ப அது தமிழகமே அறியாத புது அரசியல் யுக்தியாக நீங்கள் பறைசாற்றிக் கொண்டீர்களே? அப்போது உங்களுக்கு பத்திரிக்கைதர்ம ம் தெரியாது போலிருக்கு. நீங்கள் தொடங்கி வைத்த அந்த விஷ் வித்து இன்று வளர்ந்து மரமாகி ஒரு தோப்பாகி நாட்டையே சந்தி சிரிக்க வைக்கிறது. அதில் நீங்கள் அகப்பட்டு கொண்டீர்கள். இப்ப வந்து குத்துதே..குடையுதே என்று சொன்னால் எங்களைப் போன்று உங்கள் சரித்திரம் அறிந்தவர்கள் சிரிக்க மாட்டார்களா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 24 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1424
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week70676
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month273408
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795527