முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வெட்டப்படும் மரங்கள்.. அலறும் விலங்குகள்! - சிக்கலில் ஈஷா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 29
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 13 மார்ச் 2013 08:31


'மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இருப்பது நெருக்கமான உறவு. இந்த உறவை யாரும் பிரிக்கவோ அல்லது இந்த உறவு இல்லாமலோ மனிதன் வாழவே முடியாது’ என்று சொன்னவர் ஜக்கி வாசுதேவ். அப்படிப்பட்ட மரங்களை வைத்தே ஜக்கி வாசுதேவ் மீது இப்போது சர்ச்சை மேகம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பொதுநல மனுவின் மூலம் அதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்துள்ளார்.

அவரிடம் இதுபற்றிக் கேட்டோம். ''1990-களில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து, இக்கரை பொலுவம்பட்டியில் மிகச் சிறிய அளவில் ஜெகதீஷ் என்பவர் ஆசிரமம் தொடங்கினார். பிறகு அவர், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன பிறகு, அவருடைய ஆசிரமத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். அடர்ந்த வனப் பகுதியை மொட்டையடித்து, ஆடம்பரமான கட்டடங்களைக் கட்டத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட பரப்பளவு 37,424.32 சதுர மீட்டர். 2005 முதல் இந்த நிமிடம் வரை படுவேகமாக 55,944.82 சதுர மீட்டரில் கட்டடங்களைக் கட்டி உள்ளனர். இதுபோன்ற அடர்ந்த வனப் பகுதிக்குள் கட்டடம் கட்டுவதற்கு, மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

p40

மாவட்ட கலெக்டரும் மாவட்ட வனச்சரக அதிகாரியும் நேரில் சென்று ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்து ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவை அனைத்தும் மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் பார்வைக்கு வைக்கப்படும். அதன்பிறகு, மலைத்தளப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தி, அதில்தான் ஒப்புதல் வழங்கப்படும். இதில், ஏதாவது ஒன்றில் பிசகினால்கூட வனப் பகுதிக்குள் ஒரு செங்கல்லைக்கூட வைக்க முடியாது.

ஆனால், ஈஷா தியான மையம் எந்த அனுமதியும் பெறாமல், கட்டடம், விளையாட்டு மைதானம், செயற்கை ஏரி, வாகன நிறுத்துமிடம் என பல வசதிகளை செய்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சத்குரு என்ன நினைத்தாரோ? ஏற்​கெனவே கட்டியுள்ள கட்டடங்களுக்கும், புதிதாகக் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கும் அனுமதி வேண்டும் என்று மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

இதையடுத்து, ஆய்வில் இறங்கிய வனச்சரக அலுவலகம் தனது அறிக்கையில், 'ஈஷா தியான மையம் அமைந்துள்ள பகுதி யானை வழித்தடங்களைக்கொண்ட அடர்ந்த வனப் பகுதி. அங்கு கட்டடங்கள் கட்டுவது விதிமுறைகளுக்கு மாறானது. எனவே, உடனே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அறிக்கை அளித்தது. அத்துடன் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றும் ஈஷா தியான மையத்துக்கு நோட்டீஸும் அனுப்பி உள்ளது.

 p40b

மாறாகக் கட்டடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்த படிவத்தைத் திரும்பக் பெற்றுக்​கொள்கிறோம் என்று ஈஷா தியான மையம் மனுச் செய்கிறது. விதிமுறைகளைப் பின்பற்றச் சொன்னால், அதைச் செய்யாமல், அனுமதி கேட்ட விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதுதான் தீர்வா?'' என்று கேட்டார்.

வெற்றிச்செல்வனின் மனுவைப் பரிசீலித்த, உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர், விதிமுறை மீறிய கட்டுமானங்கள் பற்றி உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு தமிழக அரசுக்கும் ஈஷா தியான மையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதேபோல, சிவராத்திரி விழா நடத்துவதற்கும் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கடைசி நேரத்தில் மகாசிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால், உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதற்கு  மாவட்டக் கலெக்டரும், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும், வனத் துறை அதிகாரிகளும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இதுகுறித்து, ஈஷா மைய மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேஷ், ''நாட்டில் பசுமை விழிப்பு உணர்வை ஏற்படுத்த, ஈஷா சார்பாக இதுவரை ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டும் வருகிறோம். பசுமைப் புரட்சிக்காக மத்திய, மாநில அரசுகள் ஈஷாவுக்கு விருதுகளை வழங்கி இருக்கிறது. 1993-ல் கட்டடம் கட்ட ஆரம்பித்தபோது இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் இல்லை. அதன்பிறகு, விதிமுறைகள் இயற்றப்பட்டதும் இதுகுறித்து நோட்டீஸ் வந்தது. கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்திவிட்டோம். புதிய விதிமுறைப்படி கட்டடம் கட்டவும் திருத்தங்கள் செய்வதற்கும் விண்ணப்பிக்க உள்ளோம். எங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்'' என்றார்.

சிவராத்திரி முடிந்த பிறகும் தூக்கத்தைத் தொலைத்​திருக்கிறது ஈஷா.

- ஜோ.ஸ்டாலின்

 

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
-1 #12 PRAKASH D 2013-03-25 16:58
இப்படி பட்ட நல்லவன் ஒருவன் பொதுமெ தமிழ் நாடு உருப்பட , காடு மட்டும் தானா வீடு எல்லாம் :-*
Quote
 
 
+2 #11 usha 2013-03-22 21:03
அது எப்படி பனம் இருக்கரவஙலுக்கு மட்டும் இவரொட சிஷ்யர்கல் ஆகரான்ங நு யாரவ்து கொன்சம் ய்யொசிஙப்பா !!
Quote
 
 
0 #10 SHANS 2013-03-21 12:56
nice article... bestwishes to stalin
Quote
 
 
+3 #9 rasakannu 2013-03-20 19:31
பிடிச்சு உள்ள போடுங்க சார் இந்த ஆள ..
Quote
 
 
-3 #8 mourees 2013-03-19 12:20
savukku you are earning money through righting this type of articles, ok but the true is always a true. If you have proof go to the court and that is so easy to save the peoples. instead of that you are keep on righting articles to earn money for a proof less matter. Hope you will realize your stage soon...so many peoples are happy because of ISHA and you are opp... no one have rights to talk about the others, because all are god here and you are earning money through this and this is not what god dos...
Quote
 
 
0 #7 rameshan 2013-03-17 15:02
[ஃஉஒடெ நமெ="ஷ்யம்"]றெச்பெச்டெட் சிர்,
ஈ அம் நொர்கிங் இன் அன் ஈட் சொம்பன்ய். ஈட் சொம்பனிஎச் அரெ எ௯ப்லொஇடிங் தெஇர் எம்ப்லொயேச். தெய் அரெ நொட் ஃபொல்லொநிங் அன்ய் ளபொஉர் ளந்ச். தெய் அரெ ஹிரிங் அன்ட் ஃபிரிங் தெஇர் எம்ப்லொயேச் அட் தெஇர் நில்ல். ஈ நன்ட் டொ ஃபிக்ஹ்ட் ஃபொர் ம்ய் ரிக்ஹ்ட். ப்லெஅசெ ஹெல்ப் மெ அன்ட் குஇடெ மெ.

தன்க்ச்!
ஸ்ஹ்யம்.[/ஃஉஒடெ]

pls refer www.neethiyaithedy.org for information
Quote
 
 
+2 #6 NAVI 2013-03-17 13:49
"நித்தி" செய்தது கூட குற்றமாக படவில்லை. ஆனால் இந்த ஜ(ப)க்கி காட்டை கற்பழித்து உலக மக்களுக் கெல்லாம கேடு விளைவிக்கிறான்....

"ஒரு கோடி மரம் நட்டால் காட்டை அழிக்கலாம என்றால்... 10 பெண்களை கற்பழிப்பிலிருந ்து காப்பாற்றினால் 2 பெண்களை கற்பழித்துக் கொள்ளலாமா? என ஈஷாவின் லூசு பி.ஆர்.ஓ ராஜேஸ் தான் விளக்க வேண்டும....
Quote
 
 
0 #5 rameshan 2013-03-16 18:59
To #1 Mr.Shyam sir,
pls refer www.neethiyaithedy.org for your queries.
Quote
 
 
+2 #4 Muthusivaa 2013-03-16 09:47
Many places even in weekly market places they( isha) groups are selling the saplings and earning money. They are not the contributors they are doing Business.
Quote
 
 
+5 #3 rrjn33@gmail.com 2013-03-15 11:56
THEY ARE DESTROYING THE FORESTS, CUTTING DOWN THE TREES BUT THEY SAY THAT THEY ARE PLANTING TREES IN THE CITIES AND TOWNS. WHO WANT THIS? LET THE NATURE ALONE TO SURVIVE AND LET THEM NOT DESTROY IT IN THE GUISE OF HELPING IT.
Quote
 
 
-5 #2 K. ராஜா 2013-03-14 17:11
ஜெகதீஷ் என்பவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் என ஆனார், இவரை இந்துக்கள் என்னவாக நினைக்கின்றார்க ள் கடவுளாகவா? அல்லது வேறு ஏதாவதாகவா? தெளிவுபடுத்தினா ல் மாற்று சமயத்தவர்கள் இந்துக்களை பற்றி புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். யாரும் விளக்குவீர்களா?
Quote
 
 
+20 #1 shyam 2013-03-13 10:57
Respected sir,
I am working in an IT company. IT companies are exploiting their employees. They are not following any Labour Laws. They are hiring and firing their employees at their will. I want to fight for my right. Please help me and guide me.
Thanks!
Shyam.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 218 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2221
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week59123
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month261855
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12783974