முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
ஊழல் தடுப்புத் துறையால் ஊத்தி மூடப்பட்ட பெரும் ஊழல். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 01 டிசம்பர் 2010 00:07

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.   கரூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தில் சர்வேயராக உள்ள கிருஷ்ணன், அவரிடம் நில அளவை செய்வதற்காக வந்த கண்ணன் என்பவரிடம் ரூபாய்.500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கண்ணன் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர் புகாரின் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை சர்வேயர் கிருஷ்ணன் பெறும் போது பாய்ந்து சென்று பிடித்து கைது செய்தனர்.

 

இது போன்ற பல்வேறு செய்திகளை வாசகர்கள் செய்தித் தாளில் படித்திருப்பீர்கள். அந்த சர்வேயர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியது தவறில்லையா என்றால் தவறு தான். சந்தேகமே இல்லை.

 

இப்படி 500ம் 1000மும் லஞ்சம் வாங்கும் கீழ் மட்ட ஊழியர்களை பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் மீதான ஊழல் பற்றி எப்படி நடவடிக்கை எடுத்தது என்று பார்ப்போம்.

 

2001ம் ஆண்டு அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா, திமுகவினர் 1996 முதல் 2001 வரை செய்த ஊழல்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.   இந்த காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தார்.   அப்போது மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வெற்றிவேல், மாநகராட்சி, பாதாள சாக்கடை குழாய்களை புதுப்பிப்பதில் ஏராளமான ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் DE 51/2001/PUB/HQ என்ற விரிவான விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்த விசாரணையை மேற்கொண்டவர் பாண்டியன் என்ற டிஎஸ்பி.

 

இந்தத் திட்டம் என்னவென்றால், ஜப்பானிய வங்கி, உலக வங்கி மற்றும் தமிழக அரசு ஆகிய மூன்றம் இணைந்து, சென்னை மாநகரில் உள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் அணைத்தையும் புதுப்பிப்பது.

இதற்காக சென்னை மாநகராட்சியிலிருந்து மூன்று பொறியாளர்கள், குடிநீர் வழங்கல் வாரியத்திலிருந்து மூன்று பொறியாளர்கள், பொறியியல் பட்டம் பெற்ற ஐந்து உதவி ஆய்வாளர்கள், இதை மேற்பார்வை செய்ய ஒரு ஐஜி. இந்த ஐஜி யாரென்றால் சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சட்டம ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் தான் அவர்.

 radhakrishna1n

இந்த வேலைகளில் டெண்டர் விட தொடங்கி கான்ட்ராக்டரை தேர்வு செய்வதிலிருந்து அனைத்துக் கட்டங்களிலும் ஊழல் நடந்திருப்பது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் தெரிய வந்தது. உத்தேசமாக 60 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

 

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை கடித எண் DE 52/2001/PUB/HQ 23.10.2001 நாளிட்ட அறிக்கையை விழிப்புப் பணி ஆணையருக்கு (Vigilance Commissioner) அனுப்புகிறது. அந்த அறிக்கையில், பூர்வாங்க விசாரணை நடத்தியதில், மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகையால் கீழ் கண்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு தொடர உத்தரவு இடுமாறு அறிக்கை ஒன்றை அனுப்புகிறது.

 

1)  திரு.மு.க.ஸ்டாலின்

2881310355_aa4ea16668_b

2)  திருமதி.சாந்தா ஷீலா நாயர், ஐஏஎஸ்

 

Santha_Sheela_Nair_IAS1

3)  திருமதி.எஸ்.மாலதி ஐஏஎஸ்

 

Malathy_S

4)  திரு.ஜோதி ஜகராஜன் ஐஏஎஸ்

 

jothy

5)  திரு.சி.பி.சிங், ஐஏஎஸ்

 

singh

6)  திரு.ஜே.ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ்

 

J

7)  திரு.ராஜேஷ் லகோனி, ஐஏஎஸ்

 

Rajesh_Lakhoni_IAS

 

பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் ஊழல் நடைபெற்றிருந்தாலும், எளிமையாக புரியும் படி சொல்வதானால், சென்னை மாநகர் எங்கும், சாலையில் பள்ளம் நோண்டுவதானால், பள்ளத்தை மூடுவதற்கு முன், குறிப்பிட்ட அளவு மணல் கொட்டி மூட வேண்டும் என்பது விதி. இந்த விதியை வேலை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் கட்டாயம் கடை பிடிக்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப் படுகிறது.

 

வேலை முடிந்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணம் கேட்டு கடிதம் அனுப்பும் போது, எந்த இடத்திலும் மணல் நிரப்பவில்லை என்பது தெரிய வருகிறது.   இந்தப் பணிகளை சரி பார்த்த பொறியாளர்களும், மணல் நிரப்பப் படாததால் எம்புக் எனப்படும் வேலையை சரிபார்க்கும் புத்தகத்தில் கையொப்பம் இட மறுக்கிறார்கள்.

 

ஆனால், இந்தப் பொறியாளர்களின் எதிர்ப்பையும் மீறி, அனைத்து நிறுவனங்களுக்கும் பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது.

 

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை துவங்கியவுடன், பள்ளம் வெட்டிய இடங்களில் மாதிரிக்காக மீண்டும் பள்ளம் வெட்டப் பட்டு மணல் இருக்கிறதா என்று சரி பார்த்த போது எந்த இடத்திலும் மணல் நிரப்பப் படவில்லை என்ற உண்மை தெரிய வந்தது. மேலும், சம்பந்தப் பட்ட ஒப்பந்தக் காரர்களிடம், எந்த இடத்திலிருந்து மணல் வாங்கினீர்கள் என்று விசாரணை சமயத்தில் கேட்கப் பட்ட போது, மணலே நிரப்பவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்கள்.

 

இந்த அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று, லஞ்ச ஒழிப்புத் துறை 23.10.2001 அன்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறது.

 

அரசின் பொதுத் துறை, ஏசி/1023/6   05.12.2001 நாளிட்ட கடிதத்தில், இது தொடர்பாக தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்குமாறும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப் படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் ஒன்று அனுப்புகிறது. நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் ரோலன்ட்ஸ் நெல்சம் மற்றும் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய இணை தலைமைப் பொறியாளர் மொய்தீன் அப்துல் காதர் தலைமையில் ஒரு குழு அமைக்கப் படுகிறது. இவர்களின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் வேலை செய்து, ஜுன் 2003ல் தங்களது அறிக்கையை அளிக்கிறார்கள். இந்த அறிக்கை ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை செய்த பூர்வாங்க விசாரணையை உறுதி செய்கிறது.

 

இந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நாஞ்சில் குமரன் வருகிறார்.   அவர் அதிமுக ஆட்சியிலேயே, திமுகவோடு ரகசிய உறவு வைத்திருக்கிறார்.   இவர் காலத்தில் தான், திமுக முக்கிய பிரமுகர்களின் மீது போடப்பட்ட பல ஊழல் வழக்குகள் மீளா உறக்கத்தில் ஆழ்ந்தன.

Kumaran_1

இந்த அடிப்படையில், தொழில்நுட்பக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை கேட்டிருந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை உறுதிப் படுத்தாமல், வெறுமனே, 60 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு, மேல் நடவடிக்கைக்காக அறிக்கை அனுப்பப் படுகிறது என்று 21.01.2004 அன்று மொக்கையாக ஒரு அறிக்கையை அனுப்புகிறார். இது போல, ஒரு அறிக்கையை இவர் அனுப்பியதற்கான பரிசுதான், திமுக ஆட்சியில் நாஞ்சில் குமரனுக்கு வழங்கப் பட்ட சென்னை மாநகர காவல் ஆணையாளர் பதவி.

 

இதற்குப் பிறகு, இந்த அறிக்கை மீளா உறக்கத்தில் ஆழ்ந்தன. மே 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டாலின் மற்றும், ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான அத்தனை வழக்குகளும், உள்துறை செயலாளராக நியமிக்கப் பட்ட மாலதி மற்றும் ஜோதி ஜகராஜனால் மூடப்பட்டன. இது தொடர்பான அரசாணைகள் மாலதி மற்றும் ஜோதி ஜகராஜன் தூண்டுதலால் உடனுக்குடனாக வெளியிடப் பட்டன.

 

இதில் சம்பந்தப் பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

 

மு.க.ஸ்டாலின்.          துணை முதல்வர்.

 

சாந்தா ஷீலா நாயர்       ஓய்வு பெற்று விட்டார்.

 

எஸ்.மாலதி              தலைமைச் செயலாளர்

 

சி.பி.சிங்                  மின் வாரிய சேர்மன்

 

ஜோதி ஜகராஜன்          பொதுத் துறை செயலாளர்

 

ஜே.ராதாகிருஷ்ணன்       ஐக்கிய நாடுகள் அயல்பணியாக வெளிநாட்டில் உள்ளார்.

 

ராஜேஷ் லகானி          சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநர்.

 

இது தொடர்பான லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசிய அறிக்கையை சவுக்கு தனது வாசகர்களுக்காக வழங்குகிறது.

 

1

 

2

 

3

 

4

 

5

6

 

7

 

8

9

10

11

12

 

Comments  

 
0 #50 karthikeyan 2011-03-22 19:58
Super Savukku !!

Carry on. We are with you .
Quote
 
 
-1 #49 romba mukkiyam 2011-03-17 12:15
சவுக்கு பின்புலம் என்ன, எங்கிருந்து அவருக்கு பணம் வருகிறது?
Quote
 
 
0 #48 m.vasu 2011-03-12 11:49
savukku enrendum vazha valamutan
Quote
 
 
0 #47 mohanraj 2011-02-06 12:04
wp 1979/98,12619,12620/97 do you know the details.the wps were buried by the hc even after the government accepted corruption .
Quote
 
 
0 #46 Vaedhampudhidhu 2010-12-23 00:50
Quoting கோவை பிரியன்:
ஊதுற சங்க ஊதுவோம் ..விடியறப்போ விடியட்டும்..

This is our(tamils) nature. The sun will raise for us definitely, i'm not mentioning DMK symbol
Quote
 
 
-1 #45 Vaedhampudhidhu 2010-12-23 00:46
Quoting Kumar.T:
நான் கருணாநிதியின் தீவிர எதிர்ப்பாளன் என்றாலும், 1996-2001 ஆண்டில் அவரது ஆட்சி சிறப்பாகவே இருந்தது என்று சொல்வேன். உழவர் சந்தை, நமக்கு நாமே போன்ற பல நல்ல திட்டங்களை செயல் படுத்தினார்... இப்போது இருப்பது போல குடும்ப குறுக்கீடுகள் அப்போது இல்லை. இப்போது அவருக்கு என்ன ஆனது, ஏன் இப்படி "அந்நியன் ரெமோ" மாதிரி மாறிவிட்டார் என்று புரியவில்லை !!..


Vadivel: adhu pona maasam, naan solradhu endha maasam.
Kalangar: adhu kalaingar aatchi, ithu kanimozhi aatchi....
Quote
 
 
0 #44 ampmurugan 2010-12-05 21:26
symphony, Cognizant, CGI employees referrals available – www.referralmeet.com
Quote
 
 
+2 #43 Radhakrishnan 2010-12-05 13:16
Quoting pudhiyavan:

பிரபாகரன் படத்தை பார்த்து மகிழ்கிறேன்.ஊழலையும் லஞ்சத்தையும் அரசின் அடக்குமுறைகளையு ம் கண்டு பொங்கும் வாசகர்களை வாழ்த்துகிறேன்.ஆனால்வரதட்சணையை ஒழிப்போம் ஜாதிகளை ஒழிப்போம் என்று ஒரு சிறிய முயற்சி எடுங்கள். இங்கே ஒருத்தனும் வரமாட்டான்.அவன் தான் தமிழன்.


I too agree to this. Savukku write a post on Dowry
Quote
 
 
0 #42 கருணாநிதி 2010-12-02 20:23
கோபாலபுரம் வீடு தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை : லஞ்சம், ஊழல் விஷயத்தில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு நெருப்பு மாதிரி
கருணாநிதி
Quote
 
 
-1 #41 Aiyo 2010-12-02 19:20
Quoting jagan:
தற்போது புதிதாக வெளியிட்ட பதிவை தயவு செய்து நீக்கிவிடுங்கள் . :(

I also feel the same. It is very disturbing :(
Quote
 
 
+10 #40 AGNIPIRIYAN 2010-12-02 17:48
Quoting Kumar.T:
Quoting நந்தன்:
சவுக்கு நீங்கள் அ.தி.மு,க காரர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. வழியுது தொடச்சுக்குங்கோ .


ஒருவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டின ால் அது அவரது எதிரியை ஆதரிக்கும் செயலாக ஏன் பார்க்குறீர்கள் ?
ராமரின் மனைவி சீதை பத்தினி என்று சொன்னால் அப்போது மற்ற பெண்கள் எல்லாம் பரத்தை என்று அர்த்தம் ஆகுமா?
சவுக்கு எழுதிய கட்டுரையில் ஏதாவது தவறான தகவல் இருததால் அதை தைரியமாக சுட்டி காட்டலாமே. அதை விட்டு விட்டு அரசியல் "அல்லக்கை" போல எதற்கு பின்னூடடம் போடுகிறீர்கள்?



sabas kumar sariyana padhil
Quote
 
 
-2 #39 jagan 2010-12-02 16:38
தற்போது புதிதாக வெளியிட்ட பதிவை தயவு செய்து நீக்கிவிடுங்கள் . :(
Quote
 
 
+2 #38 நண்டு 2010-12-02 13:45
Quoting Sriram S:
Mr.J.Radhakrishnan - Was he the collector of Tanjore District / Nagapatinam during tSunami? During his period, he did many good things for Tanjore & Nagai people.. especially for who affected by tsunami.. Not able to digest..


இந்த ராதாகிருஷ்னணுக் கு பொல்லாத நேரம். இவர் எங்கெங்கெல்லாம் பதவியில் இருக்கிறாரோ அங்கே பல துயரங்கள் நடைபெறும்.
சுனாமி, கும்பகோணம் தீவிபத்து
Quote
 
 
+4 #37 Sreenivas 2010-12-02 10:41
Quoting pudhiyavan:
பிரபாகரன் படத்தை பார்த்து மகிழ்கிறேன்.ஊழலையும் லஞ்சத்தையும் அரசின் அடக்குமுறைகளையு ம் கண்டு பொங்கும் வாசகர்களை வாழ்த்துகிறேன்.ஆனால்வரதட்சணையை ஒழிப்போம் ஜாதிகளை ஒழிப்போம் என்று ஒரு சிறிய முயற்சி எடுங்கள். இங்கே ஒருத்தனும் வரமாட்டான்.அவன் தான் தமிழன்.

I agree your comment, and I agree to isolete the cast.
Quote
 
 
+6 #36 Kumar.T 2010-12-01 23:47
Quoting நந்தன்:
சவுக்கு நீங்கள் அ.தி.மு,க காரர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. வழியுது தொடச்சுக்குங்கோ .


ஒருவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டின ால் அது அவரது எதிரியை ஆதரிக்கும் செயலாக ஏன் பார்க்குறீர்கள் ?
ராமரின் மனைவி சீதை பத்தினி என்று சொன்னால் அப்போது மற்ற பெண்கள் எல்லாம் பரத்தை என்று அர்த்தம் ஆகுமா?
சவுக்கு எழுதிய கட்டுரையில் ஏதாவது தவறான தகவல் இருததால் அதை தைரியமாக சுட்டி காட்டலாமே. அதை விட்டு விட்டு அரசியல் "அல்லக்கை" போல எதற்கு பின்னூடடம் போடுகிறீர்கள்?
Quote
 
 
0 #35 RAAVANAN 2010-12-01 23:31
இந்த அயோக்கியன் சிபி சிங் தமிழக மின்சார வாரியத்தை நாறடித்துவிட்டா ர். தற்போது திமுகவின் நாயாய்ச் செயல்பட்டுவரும் இவரது நிர்வாகத்தில் லஞ்சம் கொடிகட்டிப் பறக்கிறது. கடந்த 5 வருட காலமாய் மின்சார வாரியத்தில் எல்லா அதிகாரிகளின் டிரானஸ்பரும் லஞ்சத்தில்தான் நடந்துள்ளது.
Quote
 
 
+2 #34 Surya 2010-12-01 23:07
Savukku has the ability like Wikileaks, which brings the cat out of the bag.
Quote
 
 
+2 #33 Sriram S 2010-12-01 23:01
Mr.J.Radhakrishnan - Was he the collector of Tanjore District / Nagapatinam during tSunami? During his period, he did many good things for Tanjore & Nagai people.. especially for who affected by tsunami.. Not able to digest..
Quote
 
 
0 #32 ilasu 2010-12-01 22:21
aama sir romba nallavar nu nenechen IAS adhikari ku oru udharanam nu nenechen

Quoting நண்டு:
//6) திரு.ஜே.ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ்//

இந்த ஆளை நான் ரொம்ப நேர்மையானவருன்ன ு நினைத்தேன்.

என் நினைப்புல மண்ண அள்ளிப்போட்டுட் டானே மவராசன்.
Quote
 
 
0 #31 arumparaiyarasu 2010-12-01 22:10
[quote name="pudhiyavan"]இந்தியாவை 30 கோடி முகமுடையாள் என்று பாரதி பாடி 39வருஷம் ஆவதற்குள் 90கோடி ஆனோம்.நம் மாநிலத்தை மட்டும் எடுத்துகொண்டால் இப்ப உள்ள ஜாதிகள் அப்பவும் இருந்திருக்கும் ஆனால் லட்சத்திலும் இன்னும் பின்னே சென்றால் ஆயிரத்திலும் இருந்திருப்பான் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து தான் பெருகியிருப்பான ் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டி உடம்பும் அறிவும் எப்படி வளரும்?சொங்கிகளை உருவாக்கும் ஒரே சாதி திருமணங்கள் வரதட்சணை இல்லாமல் நடப்பதில்லை.FIRST CLASS MATTER FOR CONSIDERATION.
Quote
 
 
0 #30 kuppusamykp 2010-12-01 21:18
This information should reach every public. For this please start a magazine.
Quote
 
 
-12 #29 நந்தன் 2010-12-01 19:56
சவுக்கு நீங்கள் அ.தி.மு,க காரர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. வழியுது தொடச்சுக்குங்கோ .
Quote
 
 
+9 #28 Kumar.T 2010-12-01 19:47
நான் கருணாநிதியின் தீவிர எதிர்ப்பாளன் என்றாலும், 1996-2001 ஆண்டில் அவரது ஆட்சி சிறப்பாகவே இருந்தது என்று சொல்வேன். உழவர் சந்தை, நமக்கு நாமே போன்ற பல நல்ல திட்டங்களை செயல் படுத்தினார்... இப்போது இருப்பது போல குடும்ப குறுக்கீடுகள் அப்போது இல்லை. இப்போது அவருக்கு என்ன ஆனது, ஏன் இப்படி "அந்நியன் ரெமோ" மாதிரி மாறிவிட்டார் என்று புரியவில்லை !!..
Quote
 
 
+8 #27 Elayamathy 2010-12-01 19:18
தமிழகத்து விக்கிலீக்ஸ் சவுக்குக்கு வாழ்த்துகள்.
Quote
 
 
+3 #26 Jeeva 2010-12-01 16:40
Dear Savukku, All the best.I appriciate your work.
Quote
 
 
+6 #25 நண்டு 2010-12-01 15:19
Quoting தளவாய் தமிழர் களம்:
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி
'தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!


டேய் இங்கிருந்து ஓடிப்போயிரு, இல்ல குரவளையை கடிச்சி துப்பிருவேன்.

ஏண்டா கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறாய் ???

சவுக்கு இந்த ஆளோட I.P. அட்ரசை தடை செய்யவும்
Quote
 
 
-1 #24 நண்டு 2010-12-01 15:05
//6) திரு.ஜே.ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ்//

இந்த ஆளை நான் ரொம்ப நேர்மையானவருன்ன ு நினைத்தேன்.

என் நினைப்புல மண்ண அள்ளிப்போட்டுட் டானே மவராசன்.
Quote
 
 
0 #23 YO.SINGAPPAA 2010-12-01 14:57
Dr.S.M.Balaji எனும் முக சீரமைப்பு நிபுணர் ஒரு தொலைக்காட்சி செவ்வியில் சாதிக்குள் மணவுறவு கொள்வதே 90 சதம் முக விகாரங்களுக்கு காரணம் என்றும் ஒரு நடைமுறை உதாரணமாக செஷேல்ஸ் தீவில் ஆசிய ஆப்ரிக்க ஐரோப்பிய கலப்பினத்தில் பிறந்த குழந்தைகள் உறுதியான தாடை எலும்புகளுடன் உயரமாகவும் அகலமாகவும் அழகாகவும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவராகவும் இருப்பதை சுட்டியதாகவும் நினைவு.
Quote
 
 
+7 #22 pudhiyavan 2010-12-01 14:33
இந்தியாவை 30 கோடி முகமுடையாள் என்று பாரதி பாடி 39வருஷம் ஆவதற்குள் 90கோடி ஆனோம்.நம் மாநிலத்தை மட்டும் எடுத்துகொண்டால் இப்ப உள்ள ஜாதிகள் அப்பவும் இருந்திருக்கும் ஆனால் லட்சத்திலும் இன்னும் பின்னே சென்றால் ஆயிரத்திலும் இருந்திருப்பான் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து தான் பெருகியிருப்பான ் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டி உடம்பும் அறிவும் எப்படி வளரும்?சொங்கிகளை உருவாக்கும் ஒரே சாதி திருமணங்கள் வரதட்சணை இல்லாமல் நடப்பதில்லை.ஆகவே ........
Quote
 
 
+8 #21 டார்டாய்ஸ் 2010-12-01 14:31
Quoting தளவாய் தமிழர் களம்:
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி
'தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!



அய்யய்யோ....

இந்த தளவாய் கொசுத்தொல்ல தாங்க முடியலைடா நாராயணா! தேவையில்லாம போஸ்டர் ஒட்டிட்டு திரியுது. யாராவது இந்த கொசுவ அடிங்கடா!
Quote
 
 
+8 #20 உளவாளி 2010-12-01 13:22
ஆ.ராசாவுக்கு ஆதரவன ஊடகவியலாளர்கள் கூட்டம் சில நாட்களுக்கு முன் சென்னை தி.நகரில் நடந்தது. அதில் பேசிய ரமேஷ்பிரபா, “டைம்ஸ் நவ், என்.டி.டி.வி., சி.என்.என்.ஐ.பி.என்., ஹெட்லைன்ஸ் டுடே போன்ற சேனல்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் 0.1 சம்திங் சதவிகிதம்தான். இந்தச் சேனல்களை கால்வாசி மக்கள்கூட பார்ப்பதில்லை. ஆனா, இவர்கள் வெளியிடும் செய்தியால், ஒரு மந்திரி பதவியே பறிக்கப்படுகிறத ே! அது எப்படி?” என்று கேட்டுவிட்டு, அதற்கான பதிலையும் சொன்னார்.

”இந்தச் செய்திகளை, யார் பார்க்க வேண்டுமோ அவர்கள் பார்க்கிறார்கள் . அதனால், நடவடிக்கை எடுக்கப்படுகிறத ு.” என்றார்.

எனவே, நண்பர்களே! இன்று நம்மைப் போன்றவர்களின் ஆதரவினால், சவுக்கை யார் பார்க்கவேண்டுமோ அவர்கள் பார்க்கிறார்கள் . அந்த வகையில் நாம் திருப்திபட்டுக் கொள்வோம்.

சவுக்கு அச்சில் வரும்போது இரட்டிப்பு சந்தோஷம் கொள்வோம்.

அதற்கிடையில் சில நாலாம்தர வார்த்தைகள் இல்லாமல் செய்தி வெளியிட சவுக்கு பழகட்டும்.
Quote
 
 
0 #19 MDMK 2010-12-01 12:58
Good... Keep it up..
Quote
 
 
0 #18 kuppusamy 2010-12-01 12:52
what Savukku...... do u think you are as good as Wickileaks ? All govt investigative agencies are stooges of the ruling party. dont believe them....
Quote
 
 
+9 #17 மனிதன் 2010-12-01 12:26
சவுக்கு,
உங்களின் நோக்கம் மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டுவது என்றால்,கொஞ்சம் யோசித்து பாருங்கள்.....நம் தமிழகத்தில் எத்தனை பேரிடம் கணினி உள்ளது...அதுவும் இணைய இணைப்புடன்....
உங்கள் நோக்கம் நிறைவேற தயவு செய்து ஒரு புலனாய்வு பத்திரிக்கை தொடங்கவும்....
அதுவே மாற்றம் ஏற்பட ஒரே தீர்வு........
Quote
 
 
0 #16 jahnageer.m.b. 2010-12-01 12:08
thamizhakathin wikileak........savukku vaazhka.
Quote
 
 
0 #15 Senthil Saravanan 2010-12-01 11:58
Hats off savukku. But enquire about Mr.Radha Krishnan. He is clear hand officer
Quote
 
 
0 #14 P.SELVARAJ 2010-12-01 11:57
vazhtthukkal
Quote
 
 
+1 #13 Nithi 2010-12-01 11:31
தமிழகத்தின் விக்கி லீக் = சவுக்கு வாழ்க!
Savaku, Entha mathri thirudana ellam ne savukala adicha mattum pathathu, Gun eduthu sudanum......
Quote
 
 
+7 #12 sam 2010-12-01 11:29
தமிழகத்தின் விக்கி லீக் = சவுக்கு வாழ்க!
Quote
 
 
+9 #11 pudhiyavan 2010-12-01 11:29
பிரபாகரன் படத்தை பார்த்து மகிழ்கிறேன்.ஊழலையும் லஞ்சத்தையும் அரசின் அடக்குமுறைகளையு ம் கண்டு பொங்கும் வாசகர்களை வாழ்த்துகிறேன்.ஆனால்வரதட்சணையை ஒழிப்போம் ஜாதிகளை ஒழிப்போம் என்று ஒரு சிறிய முயற்சி எடுங்கள். இங்கே ஒருத்தனும் வரமாட்டான்.அவன் தான் தமிழன்.
Quote
 
 
+2 #10 கோவை பிரியன் 2010-12-01 10:35
ஊதுற சங்க ஊதுவோம் ..விடியறப்போ விடியட்டும்..
Quote
 
 
0 #9 கோவை பிரியன் 2010-12-01 10:35
ஊதுற சங்க ஊதுவோம் ..விடியறப்போ விடியட்டும்..
Quote
 
 
+13 #8 tamil2175 2010-12-01 09:41
தமிழகத்தின் விக்கி லீக் = சவுக்கு வாழ்க
Quote
 
 
+7 #7 karthikeyan 2010-12-01 09:35
தமிழகத்தின் விக்கி லீக் = சவுக்கு வாழ்க!
Quote
 
 
+6 #6 Thiru 2010-12-01 09:10
தமிழகத்தின் விக்கி லீக் = சவுக்கு வாழ்க!
Quote
 
 
+5 #5 சவுக்கின் விசிறி 2010-12-01 08:56
சவுக்கு... இந்த டுபுக்கு ராதாகிருஷ்ணனுக் கா, போலீஸ் துறையை மேம்படுத்த இங்கிலாந்து ராணியின் விருது கிடைத்தது.... விருது கிடைச்சாலும் கிடைச்சது.... போலீஸ் துறையை நல்லா மேம்படுத்துறாரு ய்யா!
Quote
 
 
+8 #4 ஏகா. 2010-12-01 07:21
தமிழகத்தின் விக்கி லீக் = சவுக்கு வாழ்க!
Quote
 
 
+1 #3 anbu 2010-12-01 06:22
very good savukku...best investignation...anbu
Quote
 
 
+15 #2 Tamilan 2010-12-01 01:42
சவுக்கு அவர்களே தயவு செய்து ஒரு புலனாய்வு பத்திரிக்கை தொடங்கவும்,
இங்கே இருக்கும் பொய்யன் பத்திரிக்கைகள் மஞ்சள் பத்திரிக்கைகளை விட தரம் தாழ்ந்து விட்டன.
சவுக்கை போன்ற உண்மை எழுதும் கைகள் இப்பொழுது குறைவாக உள்ளது,
எல்லா பத்திரிக்கைகளும ் ஆள்வோருக்கு ஜால்ரா போடுகிறது.
உங்கள் எழுத்து தமிழகமெங்கும் வாசிக்கப்படவேண் டும்.
உங்கள் உண்மை மாறா எழுத்துக்களை பத்திரிக்கை வாயிலாக படிக்க ஆவலாக உள்ளோம்.
Quote
 
 
+7 #1 indian 2010-12-01 01:33
You are the wikileaks of tamil nadu. Please have these documents organised and make it searchable through web.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 60 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2437
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week34650
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month268697
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13185064