முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ராஜாவும் கூஜாவும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 31
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 02 டிசம்பர் 2010 23:38

ராஜாவைப் பற்றி நன்கு தெரியும்.   ஊரே ராஜாவை உரித்து உப்புக் கண்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   அது யாரு கூஜா ? வேற யாரு …. கோபாலபுரம் கூஜாதான். இப்புவும் புரியலையா… ?

 

நம்ப ஜாபர் சேட் தான் வேற யாரு.   “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறானாம். “ என்ற பழமொழியை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?   இது ஜாபர் சேட்டுக்கு நன்றாகப் பொருந்தும்.   எப்படி என்று விளக்குகிறேன்.

 

கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை ஜாபர் சேட், ஆ.ராசா, கருணாநிதி மற்றும் கனிமொழியிடம் சொல்லி விட்டு, டெல்லி சென்றார்.   என்ன சொல்லி விட்டு சென்றார் தெரியுமா ?

 

“சிஏஜி ரிப்போர்ட்டில் ராஜா மீது சுமத்தியிருக்கக் கூடிய குற்றச் சாட்டுகளுக்கெல்லாம் பதில் தயார் செய்து விட்டேன். டெல்லி சென்று, மீடியாவுக்கெல்லாம் இதைக் கொடுத்து, ராஜா பெயரை சரி செய்து விட்டு வருகிறேன்“ என்பதுதான் அது.

 Jaffar_Sait_2

சவுக்கு வாசகர்கள் இதைப் படித்து விட்டு சிரிப்பது நன்றாக தெரிகிறது. ஆனால், இதுதான் உண்மையில் நடந்தது தோழர்களே…

 

நம்ப ஜாபர் சேட் குடுக்குற பில்டப் இருக்குதே….   அப்பிடி ஒரு பில்டப்.   என்னைக் கேக்காம டெல்லில காக்கா கூட கக்கூஸ் போகாது என்கிற ரேஞ்சுக்கு, பில்டப் கொடுப்பார்.     ஜாபரை நன்கு அறிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு இவர் ஒரு டம்மி பீசு என்பது தெரிந்தாலும், ஆ.ராசாவும், கருணாநிதியும், கனிமொழியும், இவரை இன்னும் நம்புவதுதான் வேதனையிலும் வேதனை. இவர் கொடுத்த பில்டப்பை பார்த்து நம்பிய ஆ.ராசா, ”ஜாபர், 500 கோடியானாலும் குடுத்துடலாம்” (இவன் அப்பன் சம்மாரிச்ச துட்டு இல்ல… ?) ”எந்த கேசும் வராம பாத்துக்கங்க” என்று கூறியிருக்கிறார்.   ராசாவிடமே, 500 கோடி இருக்கிறதென்றால், தொழில் அதிபரிடமும், பெண் சிங்கம் இயக்குநரிடமும் எவ்வளவு இருக்கும்

 

இது மட்டுமல்லாமல், கருணாநிதியிடம் என்னென்ன புளுகியிருக்கிறார் தெரியுமா ? நீரா ராடியா உரையாடல்களில் பலவற்றில் சந்தேகம் இருக்கிறது.   எடிட்டிங் செய்யப் பட்டிருக்கிறது.   அதையும் விசாரித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

 

கருணாநிதியும் இதை நம்புகிறார். ஏன் நம்புகிறார் ?   பல பேராட போனை ஒட்டு கேட்டு, நம்ப கிட்ட டேப் போட்டு காட்டுனவனாச்சே.. இவனுக்கு டேப் விஷயத்துல நல்ல அனுபவம் இருக்கும். இவன் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று கருணாநிதி நம்புகிறார்.   இது பழைய கருணாநிதி அல்ல. முதுமையில் பழைய செயல்பாடுகள் போல இப்போது செயல்பட முடியாத கருணாநிதி. பழைய கருணாநிதியாக இருந்தால், ஜாபரை இந்நேரம் சட்டையை கழற்றி, ஏடிஎம் சென்டர் வாட்ச்மேனாக்கியிருப்பார். இத்தனை முதுமையிலும், கருணாநிதியுடைய அதிகார வெறி, இது போன்ற நபர்களை நம்பி ஏமாற வைக்கிறது.

 

டெல்லி சென்ற ஜாபர் சேட், அஷோகா இன்டர்நேஷனல் ஒட்டலில் தங்கினார்.   முதல் நாள், உள் துறையில் சில அதிகாரிகளை சந்தித்தார்.   மாலை மீண்டும் அறைக்குத் திரும்பியவுடன், வேறு என்ன “சரக்கு வெச்சுருக்கேன்.   எறக்கி வச்சுருக்கேன்… கருத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சுருக்கேன்“   இதே போல அடுத்த இரண்டு நாட்களையும் கழித்த ஜாபர் சேட், வெள்ளியன்று சென்னை திரும்புகிறார்.

 

சென்னை திரும்பிய ஜாபர் சேட்டை வந்து சந்திக்குமாறு கருணாநிதி உத்தரவிடுகிறார்.   வெள்ளியன்று மாலை கருணாநிதியை சந்திக்க சிஐடி காலனி செல்கிறார் ஜாபர் சேட்.   உள்ளே நுழைந்த ஜாபர் சேட்டை வெராண்டாவிலேயே நிறுத்துகிறார் தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள்.

 

ராஜாத்தி அம்மாள், ஜாபர் சேட்டை திட்டிய வார்த்தைகளில் பதிவேற்றம் செய்ய முடிந்ததை மட்டும் சவுக்கு உங்களுக்குத் தருகிறது.

 
r1

குடி கெடுத்த பயலே

எங்கடா வந்த

இன்னும் யாரு குடிய கெடுக்கடா வந்த

உன்னால என் பொண்ணு எவ்வளவு கஷ்டப் பட்றா பாருடா

நான் எவ்வளவு கஷ்டப் படுகிறேன் தெரியுமா ?

உனக்கு நாங்க என்னடா துரோகம் செஞ்சோம்

ஏன்டா எங்க குடும்பத்த இப்படி சந்தி சிரிக்க வச்ச

சந்தி சிரிக்குதேடா எங்க குடும்பம்

வெளில தலக்காட்ட முடியலையேடா

அந்த …………………….. (குஷ்பூ) நீ கொண்டு வந்து விட்டதுலேர்ந்து எங்க வீட்டுல தரித்திரம் புடிச்சு ஆட்டுதேடா

அவ கால வச்சதுலேர்ந்து எங்க குடும்பம் விளங்காம போயிடுச்சேடா

நீ நல்லா இருப்பியாடா… ?

என் போனையே டேப் பண்ணி என் குடும்பத்த கெடுத்தவன் தானேடா நீ ?

எந்த மூஞ்ச வச்சுகிட்டுடா இங்க வந்த ?

 

தொழில் அதிபர் பயன்படுத்திய மற்ற வார்த்தைகளையும் பதிவேற்ற ஆசையாகத் தான் இருக்கிறது என்றாலும், மூத்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கடும் கண்டனத்துக்கு அஞ்சி, சவுக்கு அதைத் தவிர்க்கிறது.

 

மேலே சொன்ன அர்ச்சனைகளே இவ்வளவு சிறப்பாக இருக்கிறதென்றால், எழுதாமல் விட்ட அர்ச்சனைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை சவுக்கு வாசகர்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

 jafer_2

கருணாநிதி முதல் மாடியில் இருக்கிறார். ஜாபர் சேட் உள்ளே நுழைந்ததும், ஜாபருக்கு வணக்கம் வைத்து கண்டுகிடலாம் என்று வராண்டா அருகில் வந்த ட்ராலி பாய்ஸ் மூன்று பேரும், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட்டம் எடுத்திருக்கிறார்கள்.

 

இதன் பிறகு ஜாபரை சந்தித்த கனிமொழி, “ஜாபர்.. டூ சம்திங் ஜாபர். எவ்ரி டே லிவ்விங் ஈஸ் எ ஹெல் ஃபார் மி ஜாபர். ஐயாம் நாட் ஏபிள் டு பிக்கப் மை கால்ஸ் பார் தி பாஸ்ட் டென் டேஸ் ஜாபர். தி மீடியா ஈஸ் டார்கெட்டிங் மீ, பொலிடிஷியன்ஸ் ஆர் டார்கெட்டிங் மீ. ப்ளீஸ் டு சம்திங் ஜாபர்“ என்று கூறியிருக்கிறார்.

 06_KANIMOZHI_MP_VG_6721f

ஜாபர் “டோன்ட் ஒர்ரி.. ஐ வில் டேக் கேர். “ என்று ஆதரவு கூறியிருக்கிறார்.

 

நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஜாபர் கனிமொழிக்கு உத்தரவாதம் கொடுக்கிறாரே…. ….   ஜாபர் என்ன சோனியா காந்தியா, ராகுல் காந்தியா, மன்மோகன் சிங்கா ?   மன்மோகன் சிங்கையே, உச்ச நீதிமன்றம், பின்னி எடுக்கிறது. சோனியா காந்தியால், அவர்கள் கட்சிக் காரரான சுரேஷ் கல்மாடியையே காப்பாற்ற முடியவில்லை. உச்ச நீதிமன்றம் போடும் கிடுக்கிப் பிடியில் சிக்கிக் கொண்டு சோனியாவும், மன்மோகன் சிங்கும் ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில், ஐ வில் டேக் கேர் என்று புருடா விடுகிறாரே… ஜாபர்…. ? (ஜாபர் சேட்.. உங்கள இன்னுமா இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு ?)

 

இதையடுத்து ஜாபர் கருணாநிதியை பார்க்க முதல் மாடிக்கு சென்று விட்டார். சென்றவுடன் கனிமொழி ராசாத்தியைப் பார்த்து “அம்மா ஜாபர திட்டாதம்மா.. ஜாபர் நமக்கு ஹெல்ப் பண்ணுவாரும்மா” என்று சொன்னதும், தொழில் அதிபர் தலையில் அடித்துக் கொண்டு, இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார்.

 
15IN_KANIMOZHI_287754e

”அவன நம்பாதடி”

அவன் எப்படிடி நமக்கு ஹெல்ப் பண்ணுவான் ?

இவன் பண்ண வேலையிலதானேடி அண்ணன் தம்பி ஒன்னு சேந்துக்கிட்டானுங்க ?

ஏற்கனவே இந்த பரதேசிப் பய நம்ப குடும்பத்த நாறடிச்சது போதாதாடி… ?

இவனும் அந்த காமராஜ் பயலும் சேந்துதானேடி நம்ப குடும்பத்த இந்த நெலமைக்கு கொண்டு வந்து விட்ருக்கானுங்க

இன்னுமாடி அவன நம்பற

இந்தப் பிரச்சனை ஆரம்பச்சதுலேர்ந்து அவன் எங்கடி போனான் ?

பத்து நாளா இந்தப் பக்கம் வந்தானாடி ?

இத்தனை நாள் கழிச்சு வந்ததுலேர்ந்தே அவன் பவுசு உனக்கு புரியலையாடி ?

அவன நம்புனா உன்ன நடுத்தெருவுல நிறுத்திருவாண்டி.. அவன நம்பாதடி”   என்று தலையில் அடித்துக் கொண்டு கத்தியுள்ளார்.

 

இந்தத் தகவல், மெல்ல மெல்ல காவல்துறை வட்டாரங்களில் கசிந்து கசிந்து வெளி வர ஆரம்பித்ததும், உயர் அதிகாரிகள், ”மத்தவுங்ககிட்டயெல்லாம் என்னா சவுண்டு விட்றான். ? அந்த பொம்பளை கிட்ட கத்த வேண்டியதுதானே… ” என்று ராசாத்தி அம்மாள் ஜாபருக்கு செய்த அர்ச்சனையை பற்றி மகிழ்ச்சியாக விவாதித்து வருகின்றனர்.

 

இந்த அர்ச்சனை நடக்கும் போது, ஜாபர் சேட், அட்டேன்ஷனில், ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார் என்று தெரிகிறது.

 

இதைச் சொல்லி சொல்லி சிரித்து மகிழ்கிறது ஐபிஎஸ் வட்டாரம். அந்தப் பழமொழி ஜாபருக்குப் பொருந்தும் தானே ?

 

Comments  

 
0 #45 kanian 2010-12-09 22:57
ரத்தன் டாட்டா - எனக்கு ஒன்று புரியவில்லை. 30 வயதுக்கு மேல் நிறைய இளைஜர்கள் லஞ்ச, ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள் . குண்டர்களுக்கு தெரிந்தால் வெட்டபடுவார்கள் அல்லது கொல்லபடுவார்கள் . ஆனால் ரத்தன் டாட்டா வுக்கு குடும்பமும் இல்லை பிள்ளையும் இல்லை. இத்தனை வருடங்கள் டாட்டா என்ன செய்து கொண்டு இருந்தார் ? விமான லஞ்சம் பற்றி சொல்லவே 15 ஆண்டுகள் ஆகிற்று. வாட் தி ஹெல் ஹி இஸ் doing ?
Quote
 
 
0 #44 kanian 2010-12-09 22:49
I dont understand one thing. At the age of 30 - 35 many youngsters with family and kids are fighting against corruption. If they caught by gundas, police then they will be humilated/hurted.But, Ratan Tata....no family... with billions of crores of rupees.... What the Hell Ratan TATA was doing all these years ? Who can touch him ?Why did not he shouted earlier ? It took 15 years to open hie mouth about a corruption charge ? If tata does not run telecom business what is the loss to TATA sons ?
India - 50% sold already. India Shining !!!
Quote
 
 
+1 #43 kayamozhi 2010-12-09 10:45
some idiots beleive only the secret news they like to know. they may go to nakkeeran" pages.

they are like "kunjamani" - famous speach--- " who wants the govt to enquire about 2g scam? "
Quote
 
 
-4 #42 தெரியாது 2010-12-06 16:36
வேர்வேயுப்டிஹ்க ்து நுஹ்டுயஹ்ட்பே உஹுயஹ்டோவேப் எஹ்டிஒதியோ எடோர் இஎரிப்ர்கெரிஒக் த்
Quote
 
 
-1 #41 ampmurugan 2010-12-05 21:24
symphony, Cognizant, CGI employees referrals available – www.referralmeet.com
Quote
 
 
+1 #40 dhatchi 2010-12-04 22:14
சவுக்குக்கு வணக்கம்!

இது உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன் . விக்கிலீக்ஸ் tor என்ற மென்பொருள் பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது அதை பற்றி Tor - The Onion Routing project .தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க Mediawiki, Freenet மற்றும் PGP ஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலு ம், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்கள ுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. இவையெல்லாம் உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள்.மேலும் அறிய http://www.torproject.org/
Quote
 
 
+1 #39 Arunee 2010-12-04 17:53
A 'good news' about Jaffar Sait in Tehelka...


http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne111210Coverstory.asp
Quote
 
 
+3 #38 தமிழக அரசியல் 2010-12-04 17:16
‘‘கனிமொழியை மட்டுமல்ல... ராசாத்தி-அம்மாளையும் சந்தித்திருக்கி றார். ‘டெல்லி போன காரியம் எதுவும் கைகூடவில்லை’ என்றும் சொல்லியிருக்கி றார். நல்ல சேதி வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்க ளுக்கு இப்படியொரு தகவல் கிடைக்க, எரிச்சலடைந்தார் களாம். ‘போதும்... உங்களை நம்பி நாங்க நாசமாப் போனது...’ என்று, சகட்டுமேனிக்கு போலீஸ் நண்பரை கடும் சொற்களால் வறுத்தெடுத்து விட்டார்களாம். கடைசியாக, ‘இனிமே, இந்தப் பக்கம் தயவு செஞ்சு வந்துடாதீங்க...’ என்றும் சொல்லி முகத்தைக் காட்ட, தொங்கிய முகத்தோடு திரும்பி விட்டாராம் போலீஸ் நண்பர்

THANKS TO தமிழக அரசியல்
Quote
 
 
+1 #37 தமிழக அரசியல் 2010-12-04 17:16
கனிமொழியை அடுத்து சந்தித்த போலீஸ் நண்பர் ஒருவர், ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னாராம்’’
அவர் செயலிலேயே இறங்கினாராம். ‘எல்லா விஷயங்களையும் நான் டெல்லிக்குப் போய் சரி செய்துவிடுகிறேன ்’ என்று சொல்லி, டெல்லிக்குப் போய் வந்தாராம் போலீஸ் நண்பர்’’
டெல்லிக்குப் போனவர், அங்கே யாரையும் சந்திக்க முடியவில்லையாம் . பிரபல ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு தங்கிவிட்டு, வெறும் கையோடு சென்னைக்குத் திரும்பியதுதான் மிச்சம்’’

‘‘அதன்பிறகு அவர் கனிமொழியை சந்தித்தாரா?’’


THANKS TO தமிழக அரசியல்
Quote
 
 
+2 #36 மணியன் 2010-12-04 13:24
தி.மு.க. ஆட்சி முடிய 15.04.2011 12:00 132 Days 20 Hrs 07 Min. 51 Sec.
ஆண்டவா உன் கருணையால் அது ஈடேறும்
Quote
 
 
-4 #35 தமிழன் s 2010-12-04 11:35
பத்து இருவது போலீஸ் அதிகாரிகளை வீட்டுக்குள் வைத்துக்கொண்டுத ான் ஜாபர் சேட்டை திட்டினார்களா. இவன் விடும் புருடாக்களும் நீங்களும். கவனித்தீர்களா, ஜாபர் 500 கோடி ஆனாலும் பரவாயில்லை ஜாபர் என்று தெருக்கோடி டீக்கடையில் டீ குடிக்கும்போது சத்தம் போட்டு ராஜா சொல்லியதை டீ மாஸ்டர் மூலம் தெரிந்துகொண்டு சவுக்கு சங்கர் கக்கியிருக்கிறா ர். அகககா.
இந்தியாவை சிவகங்கை மூலமாக பார்ப்பேன் என்று சொன்னாரே சிதம்பரம் அதுபோல உலக அரசியலே ஆனாலும் ஜாபர் சேட்டு மூலமாகதான் பார்ப்பார் நமது சவுக்கார். சபாஷ்.

டேய் முட்டாள் ,கடைக்கி போயி இன்னைக்கி ஜூனியர் விகடன் வாங்கி படி ... உண்மைய எதுக்குக்க முடியாதோ ...லூசு பயலே
Quote
 
 
+1 #34 kaduppanavan 2010-12-04 09:32
This news is confirmed by Junior Vikatan also. So, there is one more source other than Savukku is giving the same story.

rasavum sanimozhiyum kollaiyil kootu
raasathi kaapathi vacha notu
Jaffer settu kettan phoneil ottu
Kamarasodu sernthu vachachan vettu
DMKKu ini vizhathu votu
Thamizha egira povathu unathu votu ratetu
savuku mattume unakku kural kodummum; aga intha forumil intha echil naigalai nanrai thittu.
Quote
 
 
0 #33 Sirippom.. 2010-12-03 22:57
http://www.youtube.com/watch?v=UD3t2DKYwFI&feature=related
Quote
 
 
0 #32 Yosippom.. 2010-12-03 22:55
http://www.youtube.com/watch?v=I5DA46IhcE4&feature=related
Quote
 
 
+6 #31 சங்கிலி 2010-12-03 22:43
ஐயோ கேன ரசிகா... காலாங்காத்தால பெட்டிலிருந்து எழுந்து நீரா ராடியாக்கிட்ட, ‘எனக்கு என்ன பதவி கிடைக்கும்’னு கேட்ட கனிமொழியோட டேப்பை கேட்டுமாடா நீ திருந்தலை... இன்னும் கொஞ்ச நாள் பாரு... அந்த விஷயமே வெளிவருது... ஜாபர் சேட்டை ராசாத்தி திட்டுனதை நம்ப மாட்டீங்களோ... கடைசிவரை நீ கேன ரசிகனாவே இரு...
Quote
 
 
0 #30 Enjoy 2010-12-03 21:31
http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&feature=&p=D6DAEF8E7C777233&index=0&playnext=1
Quote
 
 
-16 #29 கேனயர்களின் ரசிகன் 2010-12-03 20:43
Quoting ஜீவானந்தம்:
Quoting விண்கரன்:
ஒரு முதல்அமைச்சர் வீட்டின் உள்ளே குடும்ப உறுப்பினர்கள் பேசிக்கொள்வதை அப்படியே RECORD பண்ணி RELAY செய்வது சவுக்கால் மட்டும் தான் முடியும் அதை நம்புவதற்கு உங்கள் வாசகர்களால் மட்டும் தான் முடியும்.

தம்பி, அவ்வுறையாடல் போலீஸார் மத்தியில் பேசப்பட்டுள்ளது என்று இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தை நீ படிக்கவில்லையா? இச்செய்தி போலீஸார் மூலமே வெளியே கசிந்திருக்கும் . அது தான் சவுக்கின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.


பத்து இருவது போலீஸ் அதிகாரிகளை வீட்டுக்குள் வைத்துக்கொண்டுத ான் ஜாபர் சேட்டை திட்டினார்களா. இவன் விடும் புருடாக்களும் நீங்களும். கவனித்தீர்களா, ஜாபர் 500 கோடி ஆனாலும் பரவாயில்லை ஜாபர் என்று தெருக்கோடி டீக்கடையில் டீ குடிக்கும்போது சத்தம் போட்டு ராஜா சொல்லியதை டீ மாஸ்டர் மூலம் தெரிந்துகொண்டு சவுக்கு சங்கர் கக்கியிருக்கிறா ர். அகககா.
இந்தியாவை சிவகங்கை மூலமாக பார்ப்பேன் என்று சொன்னாரே சிதம்பரம் அதுபோல உலக அரசியலே ஆனாலும் ஜாபர் சேட்டு மூலமாகதான் பார்ப்பார் நமது சவுக்கார். சபாஷ்.
Quote
 
 
+4 #28 selva---- 2010-12-03 19:26
எவ்வளவு திட்டினாலும் தாங்குவான் போல ,,,,இவன் ரொம்ப நல்லவன்
Quote
 
 
+5 #27 ம.பொன்ராஜ் 2010-12-03 19:25
கவுண்டமணி வசனம்: "கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி... இவனுக எல்லாரையும் நான் தனித்தனியா தான் பார்த்திருக்கேன ். ஆனால், உன்கிட்ட தான் இவனுகளை மொத்தமா பாக்குறேன். அது என்ன... செய்றதை எல்லாம் செஞ்சுட்டு, முகத்தை குழந்தை மாதிரி வச்சிருக்க?" ( குறிப்பு: இந்த கமெண்ட்டுக்கும் , இங்கே பிரசுரிக்கப் பட்டுள்ள 'சிந்தனை சிற்பி' போன்று தாடையில் கைவைத்து போஸ் கொடுக்கும் ஜாபர் செட் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.)
Quote
 
 
+5 #26 ம.பொன்ராஜ் 2010-12-03 19:19
Quoting keerththi:
Quoting படிப்பவன்:
ஒரு சந்தேகம்.

முன்பெல்லாம், பகலிலே சி.ஐ.டி காலனி, இரவிலே கோபாலபுரம் என்றிறுந்த கருணாநிதி இப்போது நேரத்தை மாற்றிவிட்டாரே என்ன காரணம்?

கோபாலபுரம் தயாளு பாட்டி வீட்டில் தோஷ நிவர்த்தி பூஜை நடத்தி கன்னிப்பெண் ஒருத்தரை புதிதாக கொண்டுவந்திருக் கிறார்கள் வேலைக்கு என்று கூறப்படுகிறது என்ன வேலையென்பது போகப்போகத்தெரிய ும்,
அந்த மாதிரி பலான செய்திகளை நீங்கள் இனி வரும் நக்கீரனில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Quote
 
 
+3 #25 lakshmidharan 2010-12-03 18:46
கோபாலபுரம் தயாளு பாட்டி வீட்டில் தோஷ நிவர்த்தி பூஜை நடத்தி கன்னிப்பெண் ஒருத்தரை புதிதாக கொண்டுவந்திருக் கிறார்கள் வேலைக்கு என்று கூறப்படுகிறது என்ன வேலையென்பது போகப்போகத்தெரிய ும்,

Correct....

அது போன்று கருணாநிதி தான் செய்த தவறுகளுக்கு, அமைதியாக போக வேண்டிய காலத்தில் வட்டியும் முதலுமாக அனுபவிக்கின்றார ். கடந்த இரு வாரங்களாக அவர் தலையே முன் போல் டிவியில் தெரியவில்லையே.

Ada pavamey.....

வினை விதைத்தவன் வினை அறுப்பான்...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

Deivam ninru kollum.....

குடும்பத்தினர், உற்றார், உறவினர் தங்களது உழைப்பில் சொத்துகளை வாங்கியிருக்கலா ம் என்றும் கூறிருக்கிறார் ராசாத்தி அம்மையார்

எந்த, உழைப்பில் கனிமொழி எந்த உழைப்பில் சம்பாதிச்சாங்க என்று தெளிவாக கூறவில்லை ஆதலால் அதை பற்றி நீங்க ஒரு அலசல் ரிப்போர்ட் கொடுத்தா நல்ல இருக்கும், ஏனெனில் அவரு என்ன சொன்னாலும் கேட்பதற்கு நாம கழக தொண்டர்கள் கிடையாது..

Udanprappugal ungal report edhirparkirarga l.....
Quote
 
 
0 #24 NA.Erasan 2010-12-03 18:26
Enatha solla kalainarukku neram sariyillai.
Quote
 
 
+4 #23 தேன் வண்டு 2010-12-03 16:59
Quoting Kumar.T:
வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக 160 இடங்களை வெல்லும் என்று இந்த ஜாபர் சேட் உளவு துறை சார்பாக கருணாநிதிக்கு அறிக்கை அளித்துள்ளதாக தெரிகிறது.. உயர் மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதை போன்ற அதிகாரிகளை எப்படி நம்புகிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது ! !

ஆச்சரியம் ஒண்ணும் கிடையாது தேர்தலன்னிக்கு அஞ்ஜாநெஞ்ஜன், தலைமையில் கூஜாக்கள் ஒவ்வொரு பூத்திலும் மேசை போட்டு ஓட்டுக்கு தலைக்கு 500க்கு பதில் 5,000 குடுக்கலாமுன்னு முடிவுபண்ணியிரு க்காங்க.
இப்போ பணமா முக்கியம் கதிரைகளை புடிச்சிட்டா ஒரு இயரில ,176.000.00.00.000.000 கோடிபெரிய விசயமா
அப்பொறம் மல்லளாவது மண்ணாவது, இதென்ன இங்கிலாந்தா மக்களையும் சட்டத்தையும் மதிக்க,
Quote
 
 
+5 #22 Kumar.T 2010-12-03 14:41
வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக 160 இடங்களை வெல்லும் என்று இந்த ஜாபர் சேட் உளவு துறை சார்பாக கருணாநிதிக்கு அறிக்கை அளித்துள்ளதாக தெரிகிறது.. உயர் மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதை போன்ற அதிகாரிகளை எப்படி நம்புகிறார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது !
ஏற்கனவே ஜெயலலிதா அலக்சான்டர், சிவனான்டி போன்ற உளவுதுறை அதிகாரிகளை நம்பி "போண்டி" ஆனது எல்லோருக்கும் தெரிந்ததுதான் !
Quote
 
 
+1 #21 keerththi 2010-12-03 12:56
Quoting படிப்பவன்:
ஒரு சந்தேகம்.

முன்பெல்லாம், பகலிலே சி.ஐ.டி காலனி, இரவிலே கோபாலபுரம் என்றிறுந்த கருணாநிதி இப்போது நேரத்தை மாற்றிவிட்டாரே என்ன காரணம்?

கோபாலபுரம் தயாளு பாட்டி வீட்டில் தோஷ நிவர்த்தி பூஜை நடத்தி கன்னிப்பெண் ஒருத்தரை புதிதாக கொண்டுவந்திருக் கிறார்கள் வேலைக்கு என்று கூறப்படுகிறது என்ன வேலையென்பது போகப்போகத்தெரிய ும்,
Quote
 
 
+1 #20 ♠புதுவை சிவா♠ 2010-12-03 12:32
பதிவை படிச்சா இந்த பாட்டு நாபகம் வருது சவுக்கு
காகித ஒடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம் ...

இன்று நண்பர் திங்கள் சத்தியாவின் பதிவில் படித்தது
‘‘தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்கவேண்டும ்’’
http://marakkanambala.blogspot.com/2010/12/blog-post.html
Quote
 
 
+8 #19 dhatchi 2010-12-03 11:51
சவுக்குக்கு வணக்கம்
நேற்று தினமணியில் ஒரு செய்தி பார்த்தேன் அதில் நம்ம புளுகு மூட்ட அதாங்க தமிழின தலைவர் கருணாநிதி அறிக்கை கொடுத்திருக்கார ு (லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி) என்றும்
குடும்பத்தினர், உற்றார், உறவினர் தங்களது உழைப்பில் சொத்துகளை வாங்கியிருக்கலா ம் என்றும் கூறிருக்கிறார் ராசாத்தி அம்மையார் எந்த, உழைப்பில் கனிமொழி எந்த உழைப்பில் சம்பாதிச்சாங்க என்று தெளிவாக கூறவில்லை ஆதலால்
அதை பற்றி நீங்க ஒரு அலசல் ரிப்போர்ட் கொடுத்தா நல்ல இருக்கும், ஏனெனில் அவரு என்ன சொன்னாலும் கேட்பதற்கு நாம கழக தொண்டர்கள் கிடையாது..
Quote
 
 
+7 #18 dhatchi 2010-12-03 11:44
சவுக்குக்கு வணக்கம்
நேற்று தினமணியில் ஒரு செய்தி பார்த்தேன் அதில் நம்ம புளுகு மூட்ட அதாங்க தமிழின தலைவர் கருணாநிதி அறிக்கை கொடுத்திருக்கார ு (லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு: முதல்வர் கருணாநிதி) அதை பற்றி நீங்க ஒரு அலசல் ரிப்போர்ட் கொடுத்தா நல்ல இருக்கும், ஏனெனில் அவரு என்ன சொன்னாலும் கேட்பதற்கு நாம கழக தொண்டர்கள் கிடையாது...
Quote
 
 
0 #17 Nithi 2010-12-03 11:00
Ada Andava, entha Kutha ellam ketkara nilamalya naama makkal erukangalay........ nama kenyanugala ella avunga kenaynugala?????
Quote
 
 
+14 #16 ஜீவானந்தம் 2010-12-03 10:14
Quoting விண்கரன்:
ஒரு முதல்அமைச்சர் வீட்டின் உள்ளே குடும்ப உறுப்பினர்கள் பேசிக்கொள்வதை அப்படியே RECORD பண்ணி RELAY செய்வது சவுக்கால் மட்டும் தான் முடியும் அதை நம்புவதற்கு உங்கள் வாசகர்களால் மட்டும் தான் முடியும்.

தம்பி, அவ்வுறையாடல் போலீஸார் மத்தியில் பேசப்பட்டுள்ளது என்று இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தை நீ படிக்கவில்லையா? இச்செய்தி போலீஸார் மூலமே வெளியே கசிந்திருக்கும் . அது தான் சவுக்கின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.
Quote
 
 
-12 #15 விண்கரன் 2010-12-03 10:07
ஒரு முதல்அமைச்சர் வீட்டின் உள்ளே குடும்ப உறுப்பினர்கள் பேசிக்கொள்வதை அப்படியே RECORD பண்ணி RELAY செய்வது சவுக்கால் மட்டும் தான் முடியும் அதை நம்புவதற்கு உங்கள் வாசகர்களால் மட்டும் தான் முடியும்.
Quote
 
 
+1 #14 anbu 2010-12-03 09:51
savukku..unnai appdi.. paraturathu puravellai...careful..rowdi family... anbu
Quote
 
 
+14 #13 அபிஷ்டு 2010-12-03 09:17
ராசாத்திக்கு கடும் கண்டனங்கள்... அவர் எப்படி ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டை திட்டலாம்... இனிமேல் அப்படி திட்டினால், ராசாத்திக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். ஜாபரை திட்டுவதோ, அவரை விமர்சிப்பதோ எதுவாக இருந்தாலும் அந்த உரிமை சவுக்குக்கு மட்டுமே உண்டு... கூடுதலாக சவுக்கு வாசகர்களுக்கும் உண்டு... இனிமேல் ராசாத்தி திட்ட விரும்பினால்... சவுக்கு பகுதியில்தான் அதை பதிவு செய்ய வேண்டும் என்று கடும் கண்டனத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
Quote
 
 
+3 #12 மாதவன் 2010-12-03 09:13
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

யாராகவாராயினும் நா காக்க....

மண்ணில் நிரந்தரமானவர் யாருமே இல்லை...

உளவுத்தொழில் அந்த நாட்டை முன்னேற்றுவதாக இருக்க வேண்டும்.. அதை களவு தொழிலாக மாற்றுதல் கூடாது...
கடைசியாக ஜாபர்...

போட்டோவில் மட்டும் கம்பீரம் இருந்தால் போதுமா... வாழ்க்கையில் அது இருந்தால் தானே நீங்கள் ....?
Quote
 
 
+3 #11 சவுக்கின் விசிறி 2010-12-03 09:06
இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா ஜாபர் சேட்?
Quote
 
 
+6 #10 முத்து.அ 2010-12-03 07:55
கனிமொழியை உத்தம புத்திரி என்றும் எதற்கும் ஆசைப்படாத துறவியென்றும் புகழாரம் சூட்டியவர்களும் எங்கே போனார்கள்.
அம்மணியின் டெலிபோன் உரையாடல்களை கேட்டபோது அவரது பொய் முகம் கிழிந்து தொங்கியதை காணமுடிந்தது தமிழ்நாட்டு ’கவர்’ஸ்டோரிக்க ாரர்கள் எல்லோரும் எருமை மாடு போல நிற்கிறார்களே அது ஏன்..?கருணா பேசாமல் அளவோடு பேசும் (போனில்!)ஆங்கில ம் தெரியாத ராசாத்தி அம்மையாரையே ராஜ்யசபைக்கு அனுப்பியிருக்கல ாம்...!
Quote
 
 
+3 #9 படிப்பவன் 2010-12-03 07:33
ஒரு சந்தேகம்.

முன்பெல்லாம், பகலிலே சி.ஐ.டி காலனி, இரவிலே கோபாலபுரம் என்றிறுந்த கருணாநிதி இப்போது நேரத்தை மாற்றிவிட்டாரே என்ன காரணம்?
Quote
 
 
+11 #8 tamilrishi 2010-12-03 06:45
இதுவெல்லாம் உண்மைதானா ! நம்பவே முடியலா ,தமிழ் நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி எந்த அதிகாரமும் இல்லாத முதல்வரின் மூன்றாம் மனைவி (சின்னவீடு ) என்ற தகுதி உள்ள ஒருவரிடம் இந்த அர்ச்சனைகளைக் கேட்டுக்கொண்டு (அச்சிலே ஏற்ற முடியாத )சும்மா நிற்கிறார் என்றால் இவரைப்(னை) போன்ற சுய மரியாதை இல்லாத நா..கள் தங்கள் பதவிக்காக தன் உறவுகளையும் கூட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.நம்மை ஆளும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளைய ும் நினைத்தால் ,மாவோயிஸ்டுகள் செய்வதே சரியென்றே படுகிறது,,,
வாழ்க ஜனநாயகம் ! வாழ்க தமிழ் ! வளர்க சவுக்கின் கழுகுப் பார்வை.... :oops:
Quote
 
 
+10 #7 பொதுஜனம் 2010-12-03 01:29
இதை படித்த போது 'தூள்' படத்தில் மயில்சாமி அண்ணிக்காக சிங்கப்பூர் முருகன் கோயிலுக்குப் போய் வேண்டிக் கொள்ளப் போவதாக கூறி விவேக்கை ஏமாற்றும் காட்சி தான் ஞாபகத்துக்கு வந்தது.
ஶ்ரீராமக்கிருஷ் ணர் ஒரு கதை கூறுவார். காகம் தன்னை அதி புத்திசாலியாக நினைத்துக் கொள்ளுமாம். ஆனால் அது மலத்தை சாப்பிடுமாம். அது போல் தன்னை சிறந்த ராஜதந்திரி என்று காட்டிக் கொண்ட கருணாநிதி தன் கடைசி காலத்தில் வகையாக சிக்கிக் கொண்டார். கருணாநிதியே தஞ்சாவூர் பாணியில் அர்ச்சனை பண்ணுவாராமே?! ஜாபர்சேட்டிற்கு அந்த பாக்கியம் கிடைக்கலையா?
மகாபாரதம் படித்தவர்கள் ஒரு விசயத்தை கவனித்திருப்பார ்கள். அதில் சில கதாப்பாத்திரங்க ள் எப்பவோ ஒரு தவறு செய்திருப்பார்க ள். அதற்குரிய தண்டனையை அவர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான கால கட்டத்தில் எதிர்பாரா விதமாக அனுபவிப்பார்கள் .
அது போன்று கருணாநிதி தான் செய்த தவறுகளுக்கு, அமைதியாக போக வேண்டிய காலத்தில் வட்டியும் முதலுமாக அனுபவிக்கின்றார ். கடந்த இரு வாரங்களாக அவர் தலையே முன் போல் டிவியில் தெரியவில்லையே.
Quote
 
 
+7 #6 ம.பொன்ராஜ் 2010-12-03 01:09
இந்த கட்டுரை பார்த்தால் ஒன்று தெரிகிறது. 'காக்க காக்க' பாகம் இரண்டில் செந்தில் நடித்தால், அவருக்கு ஜாபர் செட் மிகச் சரியான இன்ஸ்பிரேஷனாக இருப்பார். அப்போ கவுண்டமணி? அது நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியனுமா... அதான் சவுக்கே சொல்லிட்டாரே...
Quote
 
 
0 #5 grishna 2010-12-03 00:48
athu sari.... Ivvalavu thooram santhi sirikka aarmbichudichaa ... inimel thaan soodu kilambum.......
Quote
 
 
0 #4 Gana 2010-12-03 00:40
:D
Quote
 
 
0 #3 சிவமயம் 2010-12-03 00:39
சிகப்பு விளக்கு யேரிதம்மா...........!!!!!!!!!!!!!!!
Quote
 
 
+13 #2 தமிழன் 2010-12-03 00:27
எவ்வளவு திட்டினாலும் தாங்குவான் போல ,,,,இவன் ரொம்ப நல்லவன்
Quote
 
 
+15 #1 தமிழன் 2010-12-03 00:23
இவனுக்கு எதுக்கு இந்த மானக்கெட்ட பொழப்பு , இந்தமாதிரி வாழ்வதற்கு இவனெல்லாம் சாகலாம். இவனுங்க எவனுக்கும் வெட்கம் ,மானம் ,சூடு ,சுரணை எதுவும் கிடையாது போல...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 77 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8896
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week41355
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month244087
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12766206