முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கழலும் டவுசர்கள். கலக்கும் சிபிஐ அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2010 00:36

 

சிபிஐ நடத்தும் ரெய்டுகளால் பலரது டவுசர்கள் கழற்றப் பட்டு வருகின்றன.   அவ்வகையில் நேற்று கழற்றப் பட்ட முக்கியமான இரண்டு டவுசர்கள் யாருடையது தெரியுமா ?

 

முதல் டவுசர் குருமா ராஜ் மற்றும் இரண்டாவது டவுசர் போலிப் பாதிரி ஜகத் கஸ்பர்.

 

இந்தப் போலிப் பாதிரியின் முகத்திரையை சவுக்கு ஜுலை மாதமே கிழித்தது.   அந்தப் பதிவு, சவுக்கு வாசகர்களுக்காக மீண்டும் தனியாக மறு பதிவு செய்யப் படுகிறது.

 

கடந்த மாதம், ஆ.ராசாவுக்கு ஆதரவாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய போலிப் பாதிரி பேசியதை சற்றே நினைவு படுத்திப் பார்ப்போம்.

 1

 

காவல்துறை அதிகாரிகளால் அழைத்து வரப்படும் காமராஜ்

‘இந்தப் போலிப் பாதிரி பேசும் போது ஆ.ராசா சமூக நீதிப் போராளி. சமூக நீதியைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசச் சொன்னாலும் பேசுவார் என்று கூறினார்.   ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார்.   ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான்.   ஆனால் ராசாவின் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்றார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள்.   இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும்.   ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா ? அது போலத்தான் இதுவும் என்றார்.   (இவர் வெறும் பாதர் இல்லை. காட் ஃபாதர்) தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கின்றன. அவற்றை திருப்பித் தரத் தயாரா என்று கேட்டார்.

 IMG_9392

 

தப்ப முயற்சி செய்து பத்திரிக்கையாளர்களிடம் சிக்கிய கஸ்பர்.

இதை அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு போடு. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து வருவாயைத் தருமாம். முற்றான விற்பனை இல்லையாம் அது.   ஆனால் 3ஜி ஸ்பெக்ட்ரம் முற்றான விற்பனையாம்.   அதிலிருந்து தொடர் வருமானம் வராதாம்.   பிறகு, ராசா பதவி ஏற்கும் போது செல்பேசி இணைப்புகள் 30 கோடியாக இருந்ததாம். ராசா பதவியை விட்டு இறங்கும் போது 70 கோடியாம். மேலும், ராசா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுமம் எடுத்த முடிவைத்தான் அவர் செயல்படுத்தினார். ராசா தொலைபேசி நிறுவனங்கள் கூட்டுக் குழுவாக செயல்பட்டதை உடைத்தார். அதனால் பதவியை இழந்தார் என்றார். (சும்மா சொல்லக் கூடாது. வாங்குன காசுக்கு நல்லாவே குரைக்கிறீங்க பாதர்)

 

IMG_9399

இப்படி புயல் போல முழங்கிய பாதிரியை நேற்று சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக, விசாரணையில் துளைத்து எடுத்தனர்.   பாதிரி பதட்டமில்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், பதட்டத்தில் கைகளை மேசையில் தட்டியபடி இருந்தார். பாதிரியின் தமிழ் மையம் அலுவலகத்தில் இருந்த பணியாளர்களும் வெளியேற அனுமதிக்கப் படவில்லை. 12 மணி நேரம் சோதனை முடிந்து சிபிஐ அதிகாரிகள் வெளியேறியதும் பாதிரி அலுவலகத்தின் பணியாளர்கள் மட்டும் வெளியேறினர். வெளியே பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் காரர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்த பாதிரி, விளக்கை அணைத்து விட்டு இருட்டறையில் அமர்ந்திருந்தார். பாதிரியின் உதவியாளர்கள், வெளியே வந்து புகைப்படக் காரர்கள் போய் விட்டார்களா இல்லையா என்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இறுதியாக, 1 மணி நேரம் கழித்து, பாதிரி திருடன் போலவே அவசர அவசரமாக வெளியேறினார். பத்திரிக்கையாளர்கள் மடக்கி கேள்வி கேட்டதும், சிபிஐ அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள் என்றார் (உங்ககிட்ட அவங்க சர்ட்டிபிக்கேட் கேட்டாங்களா ?) விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். (குடுக்கலன்னா, கைது செய்து ஒத்துழைப்பை வாங்கியிருப்பார்கள்.) இப்படி ஒரு மணி நேரம் ஒளிந்திருந்து திருடன் போல வெளியேறிய போலிப் பாதிரி இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார். ஏன் அவரை சிபிஐ ரெய்டு செய்தது என்று அவருக்குத் தெரியாதாம்.   கணக்கு வழக்குகள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதாம். போலிப் பாதிரியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் பிசினாரிப் பாதிரி, கொரியர் சர்வீசுக்குக் கூட பணம் பாக்கி வைத்திருக்கிறார். நேற்று சோதனை நடந்து கொண்டிருந்த போது, கொரியர் பையன் வந்தான். அவன் வந்த உடன், சார் கொரியருக்கு 2000 ரூபாய் பாக்கி என்று கத்தினான். இங்கே ரெய்டு நடக்குது போயிட்டு அப்புறம் வாப்பா என்று உள்ளிருந்து குரல் வந்தது. அப்போது அங்கிருந்த தொலைக்காட்சி கேமரா மேன், அந்த கொரியர் பையனிடம் பேட்டி எடுக்க முயன்றார்.   இது தெரிந்ததும், அவசர அவசரமாக ஷட்டரை திறந்து 2000 ரூபாய் பணம் கொடுத்தார்கள்.

IMG_9400

 

இவ்ளோ துட்டு அடிச்கீங்களா பாதர்

 

இன்று நிருபர்களை சந்திக்கும் போது, கஸ்பர் சொன்னது, தமிழ் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரே ஒரு கோடி ரூபாய் மட்டும் வைத்திருக்கிறாராம்.   ஒரு கோடி ரூபாய் வைத்திருக்கும் நபர், கொரியர் பையனுக்கு பாக்கி வைத்திருக்கும் அவலத்தை பார்த்தீர்களா ?

 

கஸ்பர் அலுவலகத்துக்கு கீழே, கஸ்பர் ஆண்டுதோறும் நடத்தும் சென்னை மராத்தான் ஓட்டப் பந்தயத்துக்கான விளம்பரம் வைக்கப் பட்டிருந்தது.   அதில் இருந்த வாசகமான RUN என்பது போலவே, கஸ்பர் ஓடியது சிறப்பான விஷயம்.

IMG_9364

 

அடுத்தது நம்ப குருமாராஜ். இவரைப் பற்றி ஜுன் மாதம் எழுதிய பதிவையும் சவுக்கு தனியே மீள் பதிவு செய்யப் படுகிறது. ஒரு மனிதன் ஊழல் செய்து ஊரே அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அந்த மனிதர் ஊழல் செய்யவில்லை, அவர் தலித் என்பதால் ஊடகங்கள் அவரை தாக்குகின்றன என்று அனைத்து நாளேடுகளிலும் விளம்பரம் கொடுத்து, ஒரு கருத்தரங்கத்தை முன்னின்று நடத்துகிறார் என்றால் இந்த குருமாராஜ் எப்படிப் பட்ட மனிதராக இருப்பார் ?

IMG_9359

சிபிஐ அதிகாரிகளால் வங்கிக்கு அழைத்துச் செல்லப் படும் காமராஜ்

சிபிஐ அதிகாரிகள் காலை 7 மணிக்கே வந்து காமராஜ் வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே நுழைந்த அதிகாரிகள், வீட்டில் இருந்த காமராஜ் மற்றும் அவரது மனைவியின் செல்போன்களை அணைத்து தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டனர். காலை 9.30 மணி முதல் அனைத்து செய்தியாளர்களும், காமராஜ் வீட்டில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

மாலையில் 3.30 மணியளவில், காமராஜை அவரது ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கிக் கிளைக்கு அழைத்துச் சென்ற சிபிஐ, அவரது லாக்கரை சோதனையிட்டுள்ளனர். சோதனையில் ஒரு பெரும் தொகை கைப்பற்றப் பட்டதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் கூறுகின்றன.

காமராஜ் அவரது மனைவி மற்றும் உறவினர்களின் 11 வங்கிக் கணக்குகளை முடக்கிய சிபிஐ அதிகாரிகள், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி காமராஜை திருப்பி அனுப்பினர்.

IMG_9353

காமராஜ் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்களின் ஒரு பகுதி

காமராஜுக்கு ஆதரவாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் அருண் என்பவர் வந்து சோதனை நடைபெறும் போது காமராஜுக்கு ஆதரவாக இருந்தார். வங்கிக்கும் சென்றார்.

வந்திருந்த பத்திரிக்கையாளர்களின் நக்கீரன் நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைத் தவிர, ஒருவர் கூட, இந்த சோதனையை குறை கூறி பேசவில்லை.   அனைவரும் வரவேற்றனர். மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உங்களுக்கு இதுதான் மரியாதை காமராஜ். புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தோளோடு தோள் நின்று, ஒன்றாக சரக்கடித்து, உயிருக்கு உயிரான உங்கள் தொழில் கூட்டாளி ஜாபர் சேட் தப்பித்து விட்டார் பார்த்தீர்களா ? உங்கள் சோதனைகள் இத்தோடு முடியவில்லை. மேலும் தொடரும். காத்திருங்கள்.

ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கையில் அதை வைத்து காசு பார்த்தீர்களே…. காமராஜ்…   கஸ்பர் போன்றதொரு கடைந்தெடுத்த அயோக்கியப் பேர்விழியை வைத்து மறக்க முடியுமா என்று தொடர் போட்டீர்களே… அடுக்குமா… தமிழா தமிழா பாண்டியன் என்ற நபரை இலங்கைத் தூதரகத்தில் காசு வாங்கி இலங்கைக்கு அனுப்பி அதை கவர் ஸ்டோரி செய்தீர்களே.   நியாயமா காமராஜ்….. ஈழத் தமிழர்களின் அத்தனை சாபங்களும் உங்களை சுற்றிச் சுற்றி வரும். நீங்கள் எங்கும் ஓட முடியாது..

அடுத்ததாக, பெசன்ட் நகரிலேயே இருந்த ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்த அகிலன் ராமனாதன் என்பவரின் வீடு.

IMG_9345

கல்வித் தந்தை அகிலன் ராமநாதன் வீடு

இந்த நபர் மத்திய அரசுப் பணியில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர்.   மத்தியப் பணியில் இருந்த போது, ஆ.ராசாவின் செயலாளராக இருந்தார்.   (ராசா வனம் மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த போது) அப்போது ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையை போட்டதாக தகவல். பிறகு ராசாவோடு கருத்து வேறுபாடாகி, விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு கல்வித் தந்தை ஜெகதரட்சகன் கல்லூரியை நிர்வகிக்கிறார்.

சிறிது நாளில், கல்வித் தந்தை ஆவது எவ்வளவு எளிது என்று கண்டுகொண்ட அகிலன், அவரே ஒரு கல்லூரியை தொடங்கி பின்னாளில் அதை நிகர்நிலை பல்கலைகழகமாகவும் மாற்றினார். இவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இதைத் தவிர சோதனை நடைபெற்ற இடங்கள்.

 

1)  க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்

2)  ஈக்வாஸ் எஸ்டேட்ஸ்

3)  கதிர்காமம் பிரைவேட் லிமிட்டெட்

4)  சிவகாமம் ஏஜன்சீஸ்

5)  கோவை ஷெல்டர்ஸ் அன்டு ப்ரமோட்டர்ஸ்

6)  ஏஜிஎம் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

7)  வெல்கம் இந்தியா

8)  எக்சிம் வென்சர்ஸ்

9)  ஜெனெக்ஸ்

10) சாலி தெர்மோ ப்ளாஸ்டிக்ஸ்

11) ஐயப்பா என்டர்பிரைசஸ்

12) ஜேஜி எக்ஸ்போர்ட்ஸ் (மகேஷ் ஜெயின்)

13) ஆண்டிமுத்து கலியபெருமாள்

14) ஆர்.ராமச்சந்திரன்

15) டாக்டர் ராமச்சந்திரன்

16) சின்ன கிருஷ்ணமூர்த்தி

17) அகரம் தெரு சின்ன கிருஷ்ணமூர்த்தி

18) டி.செல்வராஜு

19) சி.சத்யநாராயணன்

20) வளவன்

21) அகமது ஷகீர்

22) முகம்மது ஹசன்

23) மகேஷ் ஜெயின்

24) அலோக் ஜெயின்

இதில் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் ஆகிய இருவரும் ஹவாலா தரகர்கள்.

சிபிஐ சோதனைகளில் மிகத் தாமதமாக நடைபெற்றிருப்பதாக ஒரு தரப்பினர் குறை சொன்னாலும், ஹோம் வொர்க்கை சரியாக செய்து, ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் சோதனை நடத்தியதன் மூலம், சிபிஐ இந்தியாவின் முன்னணி புலனாய்வு நிறுவனம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாகவே சவுக்கு உணர்கிறது.

சிபிஐ நிறுவனத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இருப்பினும், சிபிஐ அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று சொல்லத் தோன்றுகிறது. சிபிஐ கண்ணில் மண்ணைத் தூவிய ஜாபர் என்னென்ன செய்தார் என்ற விபரங்களை சவுக்கு விரைவில் வெளியிடும்.

 

Comments  

 
0 #75 -ஆழி 2011-05-15 18:32
சவுக்கு அவர்களே,
இறை சேவை செய்ய வேண்டிய பாதிரி கஸ்பர் அதைத் தவிர மற்ற எல்லா அயோக்கியத்தனத்த ையும் செய்து கொண்டிருக்கிறார ். இந்த அட்டூழியம் செய்யும் போலி பாதிரியை ஏன் கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் (பிஷப்) கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இவரை என் இன்னும் சபையில் இருந்து விலக்கி வைக்காமல் வைத்திருகிறார்க ள். இவரால் சபைத் தலைவருக்கு என்ன ஆதாயம் ? இதை நீர் கொஞ்சம் கவனியும் சவுக்கு. மதத்தின் போர்வையில் இருக்கும் இந்த அரசியல் கைகூலியால் மதத்திற்கு அல்லவா கெட்டபேர். இந்த அரசியல் கைக்கூலியை, அரசியல் புரோக்கரை நீர் இன்னும் வெளிச்சம் போட்டு காட்டுங்கள் சவுக்கு. இவருக்கு துணை போகும் மற்ற கிறிஸ்துவ பாதிரிகளையும் வெளிச்சம் போட்டு காட்டுங்கள் சவுக்கு. உங்கள் சேவை தொடரட்டும்.
Quote
 
 
0 #74 lakshmanan 2011-03-26 13:07
impartent news.............mr.oldman unnala endrikkavea mudiyala unakkayallam yeadhukuda pathavi aasai unakkeallam nalla saavea varadhuda nasama povada un kudumpam nadu thervil pogum da seekkaram mandaya poda THANKS FOR SAUKU.COM
Quote
 
 
0 #73 kushivandha singam 2011-03-07 02:44
tri sundarrama iyyare savukku yenra peyaril mananoyali pola yeludhum ungal nokkam tamil nattil ydupadathu
Quote
 
 
0 #72 R.KAMARAJ 2011-03-04 15:10
They are playing hide and seek game in the name of politics. peoples are audiance for this game. but in this election people must play hide and seek game for this begger politicians.
Quote
 
 
0 #71 ahamed anies 2011-03-03 17:41
please send your office address and phone number :lol:
Quote
 
 
0 #70 ravikumar99 2011-01-26 18:33
Narkeeran is a true example of Media becoming corrupt and worst then politicians.

Athigara Dispriyogam.
Quote
 
 
0 #69 nalam virumbi 2010-12-28 13:16
savukku = wikileaks of tamilnadu
Quote
 
 
+1 #68 வாசு 2010-12-25 15:09
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிக்கை.ஆனால் இந்த மண்ணை கெடுத்த இந்திய ஊடகங்களால் வெறுப்புற்றிருந ்த எனக்கு சவுக்கின் நேர்மை,பத்திரிக ்கை தர்மம் சவுக்கை வணங்க வைக்கிறது
Quote
 
 
+1 #67 பச்சை தமிழன் 2010-12-21 22:10
ராசாவை ஆதரித்து அறிக்கை விட்ட வீரமணி, திருமாவளவன் முதலியவர்களையும ் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்.
Quote
 
 
0 #66 P.SELVARAJ 2010-12-21 11:28
nallathadu
Quote
 
 
0 #65 Unmai 2010-12-20 17:14
http://www.viduthalai.periyar.org.in/20101219/news07.html
Quote
 
 
+1 #64 Tamil Wikileaks 2010-12-19 22:28
Savukku,

Please write Education father (Kalvi Thanthai) Akilan Ramanathan (Ph.D, IAS) relationship with the following people. His assets are with his Ph.D Mentor Prof. Sivakumar of Anna University and as well as with his colleague Maraatti King Sivaji of Madras University Computer division. All these people are cocktail partners in the star Hotels. Their business deals are in hundreds' of crores. Hope Savukku can lead the message. Hope CBI's raid will make more strong of these cases.

When people died at Mullivaiikal and singalese counted the dead bodies these people counted the Tamil Nadu people money in crores. Please calculate the assets of Dr. Sivakumar and Maratti King. At least crores will come from their beds.
Quote
 
 
+1 #63 மானமதுரை பொடியன் 2010-12-19 09:34
ரைடு எல்லாம் நமக்கு சும்மா சைடிஸ்டு சாப்பிடுர மாதிரி..ஒத்த ரூபாய்க்கு அரிசி கொடுத்து நம்ப வைச்சு இத்தனை கோடி சுருட்டுன மஞ்சல் துண்டு ராஜதந்திரிக்கு சுருட்டுனத ஒழுங்க பதுக்க தெரியாதா?.. போயி உங்க புள்ள குட்டிகளெல்லாம் படிக்க வையுங்கப்பா...அதுவும் நம்ம க.உ களின் கல்லூரிகளில் படிக்க வையுங்கள்..

ரெய்டு எல்லாம் எலெக்ஸனுக்கு முன்னாடியும் பின்னாடியும் நடக்கிற காமெடி ஷோ மட்டும் தான் கூட்டனி காட்சிகள் மாற்றுவதற்கு நடக்கும் சிறு முன்னோட்டம் மட்டுமே... நம்ம நாடு எத்தனை ரெய்டுகளை பார்த்திருக்கும ்?.ஒரு மயிரும் புடுங்கப் போவது இல்லை..
எலெக்கஸன் நெருங்கிடுச்சுல இனி பிச்சகாரங்க தொல்ல தாங்க முடியாதப்பா எல்லா இழிச்செயல்களையு ம் மறந்துவிட்டு பல்லிழுச்சு உங்கள் வீட்டு வாசலில் வந்து கும்பிட்டு நிற்ப்பர்.
Quote
 
 
0 #62 Tamil Wikileaks 2010-12-19 04:23
Dear Savukku,

Thank you and kudo's on youe effort. It is a vibrating and tangling effect to bring this news to us. it is a wikileaks of Tamil.

We are waiting to know about Dr. Akilan Ramanathan, Ph.D , IAS effort's to bring the public money to his home. Please write his previous history starts from Anna University.
Quote
 
 
0 #61 Meesai murukku 2010-12-19 04:18
Dear Savukku,

Please publish Akilan IAS picture. When he studies at Anna University, he took all the students and watchmans to GK Moopanar and told Moopanar that these people are members of tamil Maanila Congress. After he got IAS not in Tamil nadu cadre, his wealth is enormous. He is an example for a worst young generation. His approximate wealth today is Rs. 240 crores. Please write a separate article to him.
Quote
 
 
0 #60 important 2010-12-19 04:17
Dear Savukku,

Please publish Akilan IAS Picture. When he studies at Anna University, he took all the students and watchmans to GK Moopanar and told Moopanar that these people are members of tamil Maanila Congress. After he got IAS not in Tamil nadu cadre, his wealth is enormous. He is an example for a worst young generation. His approximate wealth today is Rs. 240 crores. Please write a separate article to him.
Quote
 
 
0 #59 sivamayam 2010-12-18 23:46
தொடர்ந்து கொலைவெறியில் நடைவண்டி கருணாநிதியும் இந்திய ஆதிக்கமும்,

LINK : http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=4275:2010-12-18-09-21-46&catid=34:2009-04-30-10-08-44&Itemid=29
Quote
 
 
0 #58 தமிழ் மாறன் 2010-12-18 19:40
I have appreciate your hard work but my suggestion please insists fathers fake political activities within tamil national movement. And please explain truths behind CBI raid
Quote
 
 
+2 #57 Premkumar SJ 2010-12-18 17:32
Nice worrk Savukuu ..
Hearty Congrats :)
Quote
 
 
0 #56 Thendral 2 puyal 2010-12-18 15:56
31 Thendral 2 puyal 2010-12-18 15:51
vanakam! ungalin ninda naal vasagaragiya naan.. indru dan endu karuthugalai pathivu seiya mun vandhulen.. aalum vargathai veta velikku konduvanatha ungalin muyarchiku enathu parattukkal..

ungalin karuthu vegujana makkalaiyum sendradaiya vendum.. satta mandra therthal nerunggi kondirukkirathu atharkulaga muzuththiraiyai yum neengal kizitherinthaga vendum.. makalin arivukku athu ettum padi seiya vendum...

vlarga nin thondu..

valthukaludan

Thendral 2 puyal
Quote
 
 
0 #55 கமல் 2010-12-18 14:36
:lol: இந்த கேள்விகள் தகுதியை பார்த்தா சிரிப்பு வருது.
Quote
 
 
+4 #54 ரவி 2010-12-18 13:52
மிகவும் அறிவுபூர்வமாக உந்களின் கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால், இந்த சிபிஐ சோதனைகள் கந்துடைப்பு நாடகம் என்பதை ஏன் குறிப்பிடவில்லை ? பாதிரி கஸ்பரின் தோழர்களில் ஒருவர்,சிதம்பரத ்தின் மகன் கார்த்திக் அல்லவா?இப்போதைய ரெய்டுக்கு இரண்டு காரணங்கள். முதலாவது சுப்ரமணியசாமி கூறிய ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியாவின் குடும்பத்தினருக ்கு 30% பங்குப்பணம் போயிருக்கிறது என்பதை கருணாநிதி வேறுவிதமாக சமீபத்தில் கூறியிருந்தார். அதாவது ராசா மட்டும் இவ்வளவு பெரியதொகையை விழுங்கியிருக்க முடியாது என்பதுதான். அவரையும் குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்தவர்களை மிரட்டுவது முதல் நோக்கம். இரண்டாவது, அரசாங்கம் ஏதோ நடவடிக்கை எடுக்கிறது என பொது மக்களை ஏமாற்றுவதற்குத் தான். ஆகவே இதைப்பற்றி மகிழத்தேவையில்ல ை.
Quote
 
 
0 #53 joe 2010-12-18 08:11
:D
Quote
 
 
+1 #52 meenakshisundaram 2010-12-18 07:36
eppo cit nagarla raid
Quote
 
 
0 #51 ஊர்க்குருவி 2010-12-18 00:16
பேய் கொள்ளும்
பிணியொடொரு
பிரிவும் சேரும்.

பித்தோடு பிடாரிகளே
துணையாய் ஆகும்.

தாய் கண்டு சேய் என்று
சொல்லாள் உன்னை.

தரித்திரமே உருத்திரமாய்
கொள்வாய் காண.

பாயில்லை சதியில்லை
இல்லுமில்லை.

படுந்துயரம் நீ செய்த
பாவம் தானே.

சூனியம் கசுப்புவுக்கு எனது மங்களம்,
Quote
 
 
+2 #50 Thamilan 2010-12-17 23:31
ஊரு உலகத்தயே புலனாய்வு பத்திரிக்கைன்ற பேருல அவங்களோட அந்தரங்கத எழுதுறது, பலான கதை எழுதுறதும இருந்தவனோட அந்தரங்கம் இன்னைக்கு ஊரே பாது சிரிக்கும்படியா ஆயிடிச்சு..
Quote
 
 
+14 #49 Kumar.T 2010-12-17 21:59
மன்மோகன் சிங்: மிஸ்டர் ராசா..நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்?
ராசா: ஏலம் விடச் சொன்னீங்க.
சிங்: எவ்வளவுக்கு விடச் சொன்னேன்?
ராசா: 1,80,000 கோடிக்கு.
சிங்: விட்டீங்களா?
ராசா: விட்டனே!
சிங்: ஏலம் எடுத்தவங்க பணத்தைக் குடுத்தாங்களா?
ராசா: கொடுத்தாங்க.
சிங்: சரி, அதுல 10,000 கோடி இங்க இருக்கு..மீதி எங்க?
ராசா: அதான் சார் இது.
சிங்: அவ்வ்வ்வுவுவுவவ ்...... நானே ஒரு கல்லுளி மங்கன் இவன் நமக்கு மேல இருப்பான் போலிருக்கே சாமி..!!!
Quote
 
 
+11 #48 Kumar.T 2010-12-17 21:29
அன்பு உடன்பிறப்பே,

அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கி ஆட்சி புரியும் எனக்கு நேரும் கொடுமைகளை பார்த்தாயா..?
தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டான் என்ற அடிப்படை உண்மை தெரியாத வீணர்கலது கூச்சலை கேட்டாயா..??
உலகின் முதல் கோடிஸ்வரர் என்ற பெருமையை அடைய அயராது உழைக்கும் எனக்கு நேரும் இன்னல்கலை கண்டாயா ...?
ஆயிரம் தடைகள் வந்தாலும் நமக்கு நம்பிக்கை கீற்று "தமிழக இளிச்சவாய் வாக்காலர்கள்" என்பதை மறக்க வேண்டாம் உடன்பிறப்பே !..
ஸ்பெக்ரம் பணம் நமக்கு கை கொடுக்கும் கலங்காதே என் கண்மணியே..!

இப்படிக்கு,
மாமன்னர் இரண்டாம் சோழன் கருணாநிதி
Quote
 
 
+3 #47 poimavalavan 2010-12-17 21:10
in this cartel,thirumav alavan is missing.kindly investigate
Quote
 
 
+8 #46 KARIKALAN 2010-12-17 19:36
your hardwork appreciated
Quote
 
 
0 #45 saturan 2010-12-17 19:01
atlast nothing will happened in this case. raja and all the people will escape.because we are in india.
Quote
 
 
+1 #44 p.udhaya kumar 2010-12-17 18:49
சவுக்கு எழுதும் அனைத்து பதிப்புகளும் உண்மை.உண்மையைதவிரவேறொ ன்றுமில்லை
Quote
 
 
-18 #43 விமலன் 2010-12-17 18:33
:lol: உன்னுடைய எழுத்துகள் எல்லாம் பழிவாங்கும் எண்ணத்தில் எழுதுபவையாக தெளிவாக தெறிகின்றது. மாற்றி கொள்ளவும்.
Quote
 
 
-22 #42 RANGANATHAN 2010-12-17 18:25
சவுக்கு அருட்தந்தை ஜெகத் கஸ்பர் சொல்வது தான் உண்மை....சோவையும் சுப்பிரமணியம் சுவாமியையும் நம்பி பொழப்பு நடத்துனா இதுதான் கதி..... நீ சொன்னது எல்லாமே பொய் என்று நிரூபிக்கப்பட்ட து பார்த்தாயா?
Quote
 
 
-23 #41 பொய் பேசாதே 2010-12-17 18:18
சவுக்கு நீ போட்டு கொடுத்ததை வைத்து ரெய்டு பண்ணி எதுவும் சிக்கவில்லை தம்பி.உன்னுடைய புளுகு மூட்டை எல்லாமே புஸ் ஆயிரிச்சி பேசாம வேற தொழிலுக்கு போப்பா.
Quote
 
 
+7 #40 மாங்கா கோழி 2010-12-17 18:14
இச்பெக்ட்ரும் ஊழலில் பன்னாட வாயன் கருணாநிதி பற்றி போடணும் வேண்டுகிறேன்...
Quote
 
 
+9 #39 கீறி குட்டி 2010-12-17 18:06
இதுக்கெல்லாம் மூல காரணமான மஞ்ச துண்டு க நி பையனபத்தி எதாவது செய்திகள் வருமா
Quote
 
 
+9 #38 கூத்தாடி குஞ்சாமணி 2010-12-17 17:09
திருடர் முன்னேற்ற கழகத்தின் கருணையோ கருணை,எல்லா டவுசரும் கழருது, அத CBI பாத்திட்டிருந்த ாலும் ,மூத்த முதளை நழுவப்பாக்கும், நண்பர்களே முதலில் சனியன் புடிச்ச முதளைய புடிச்சுக்கட்டி உப்புக்கண்டம் போடுங்க,
Quote
 
 
+9 #37 RAAVANAN 2010-12-17 16:51
கொடிகட்டிப் பறக்கும் தரகு விபச்சாரம் இந்த திருட்டு நாய்களை புனிதர்களாக்கிவ ிடக கூடும். கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர்க ள் ஈழமக்களின் அறச்சீற்றத்தில் அழிவர். கண்ணகி ஒரு முலை அறுத்து வீசி மதுரையை எறித்தாள். எம் ஈழத்தங்கையர் உடல் சிதைத்த சிங்களனின் மூத்திரத்தை நக்கிக் குடித்துக் கொண்டலையும் துரோகக் கழிசடை மக்கி அழிவான் என்பது திண்ணம்.
Quote
 
 
+5 #36 Julian Asange 2010-12-17 16:48
SAVUKKU NEE ORU INDIAN JULIAN ASANGE.
Quote
 
 
+5 #35 smn7894 2010-12-17 16:22
சவுக்கு எழுதும் அனைத்து பதிப்புகளும் உண்மை.உண்மையைதவிரவேறொ ன்றுமில்லை
Quote
 
 
+11 #34 chinna 2010-12-17 16:07
ஓட்டு போட்ட எனகு 1 கிலோ அரிசி ,
ஓட்டு எங்கிட்ட பிச்சை எடுத்த இவங்களுக்கு 1,700 கோடிய??????????????????
Quote
 
 
+12 #33 அனானி 2010-12-17 14:27
எதிர் நிற்பது இறைவனே என்றாலும், குற்றம் குற்றமே என்று சொன்ன ‘நக்கீரன்’ பெயர் கொண்ட அந்த பத்திரிக்கை, நாட்டையே திகிலடைய வைத்திருக்கும் தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது இணையாசிரியரும் பங்கெடுத்ததற்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் தன் பெயரை அப்பத்திரிகை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தலைப்பில் முழங்குகிற அந்த முழக்கத்தையாவது மாற்றி, இனி “நெற்றிக்கண் திறப்பினும் ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம்” என்றாவது அச்சிடவேண்டும். அதுவும் முடியாது போனால், “பொன் நாடார் பொருள் நாடார் தன் அன்னையையும் நாடார், நாடொன்றே நாடி, தன் நலமென்றும் நாடாத நாடாரை நாடினேன்” என்று கவியரசு கண்ணதாசனால் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தான் வைத்துக்கொள்வது தகுமா என்று வெட்கித் தலைகுனிந்து இணையாசிரியர் காமராஜாவது குறைந்தபட்சம் வேறொரு பெயருக்கு தன்னை மாற்றிக்கொண்டால ாவது மறைந்த அந்த மாபெரும் தலைவரின் ஆன்மாவாவது மட்டற்ற மகிழ்ச்சி அடையும்.
புலனாய்வுப் புலிகள் செய்வார்களா... பார்ப்போம் என்னும் மக்களின் காத்திருப்போடு நாமும்.
Quote
 
 
+6 #32 அனானி 2010-12-17 14:27
“சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்... சமயம் பார்த்து பல வகையினில் கொள்ளை அடிக்கிறார்...” என்னும் வரிகள் சுத்தமாய்ப் பொருந்துகின்ற நக்கீரன் காமராஜின் நீண்ட நெடிய நாடகம் ஒருவழியாய் சி.பி.ஐ.யின் அதிரடி நடவடிக்கையால் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குற்றவாளிகள் பிறப்பது கிடையாது. உருவாக்கப்படுகி றார்கள் என்று சமூக விரோதிகளுக்கு வக்காலத்து வாங்கும் நக்கீரனிடம் நாட்டு மக்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான். ஆண்டிமுத்து ராசா என்னும் குற்றவாளி பிறந்தாரா? இல்லை அந்த ஆண்டிமுத்து ராசாவை அலைவரிசை ராசாவாக உருவாக்கிய அயோக்கிய காரியத்தை ‘நக்கீரனி’ன் இணையாசிரியர் காமராஜும் முன்னின்று செய்து முடித்தாரா? என்பதுதான்.
Quote
 
 
+8 #31 அனானி 2010-12-17 14:26
ஒரு பத்திரிகையின் இணையாசிரியர் இருக்கையில் இருந்துகொண்டு, உத்தமர் வேடமிட்டு ஊர் - உலகத்தை மிரட்டி, காசு பார்த்து வந்த காமராஜ், இப்போது உலகப் பெரும் ஊழல் பேர்வழிக்கு ஊன்றுகோலாக நின்று, உதவி வந்த அசிங்க அத்தியாயங்கள் அரங்கேறத் தொடங்கியதும், தன்னைக் காப்பாற்றுமாறு மறைமுகமாக வேண்டும் நோக்கத்தோடே, கடந்த நக்கீரன் இதழில் கருணாநிதியின் புலம்பல் பேட்டி ஒன்றையும் அச்சிலேற்றி மன்றாடினாராம்.

கருணாவோ, அடிக்கிற காற்றில் அம்மியே பறக்கிறபோது, பஞ்சை எப்படி பத்திரப் படுத்துவது என்று கைவிட்டுவிடவே, புலனாய்வுத் துறை வரும் வழிபார்த்து வாசலை எதிர்நோக்கியே காத்திருந்தாராம ்.
Quote
 
 
+7 #30 அனானி 2010-12-17 14:25
இப்படி, பத்திரிகை முகமூடி போட்டுக்கொண்டு, பல்வேறு தில்லாலங்கடி வேலைகளையும் மிகத் திறமையாக செய்துவந்த காமராஜ், நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரான கோபாலையே தனது கொத்தடிமையாகவே வைத்திருந்தாராம ்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், “நக்கீரன் என்று எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கே அவருக்கு நான்கு நிமிடம் ஆகுமே... அவருக்கு என்ன தெரியும், இந்த காமராஜ் இல்லையென்றால் நக்கீரனும் இருக்காது, நக்கீரன் கோபாலும் இருக்க முடியாது! அடிப்பதில்தான் அவருக்கு போதிய பங்கு போய்விடுகிறதே” என்றும் இறுமாப்போடே காமராஜ் பதிலளிப்பாராம்.
Quote
 
 
+9 #29 அனானி 2010-12-17 14:23
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தி ல் பாலிடெக்னிக் மட்டுமே படித்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு மட்டும் ஐநூறு கோடிகளையும் தாண்டுமாம்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து முதலமைச்சரிடம் வத்தி வைப்பது, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது என சகல பராக்கிரமங்களைய ும் கடந்த ஐந்து வருடங்களாக நடத்திவந்தாராம் .

மேலும், வீட்டுவசதி வாரிய இடங்களை தன் மனைவி ஜெயசுதா பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவித்திருக்கிற ார்.
Quote
 
 
+6 #28 அனானி 2010-12-17 14:22
மேலும், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பணத்தை உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று, அவற்றை பத்திரமாக பதுக்கும் வேலையையும் நக்கீரன் காமராஜ் முன்னின்று செய்திருக்கிறார ாம்.

இவர்தான் ஈ.டி.ஏ. குழுமங்களின் தலைவர் சலாவுதீனையும், பெரம்பலூர் சாதிக்பாட்சாவைய ும் ராசாவுக்கு அறிமுகப்படுத்தி யதோடு, அந்த சலாவுதீனின் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கருணாநிதியின் “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்”துடனான ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாராம். இதற்கு மட்டும் இவர் பெற்ற கமிஷன் தொகை சுமார் 25 கோடி ரூபாயாம்.

மேலும், தமிழகக் காவல்துறையின் உளவு அதிகாரிகளை இயக்கும் சக்தியாகவும் இவர் செயல்பட்டு வந்திருக்கிறார் .
Quote
 
 
+8 #27 அனானி 2010-12-17 14:21
மேலும், தன்னை அரசியலில் உருவாக்கி, கோடிகளில் புரள வைத்ததற்கு நன்றிக் கடனாகவே ஸ்பெக்ட்ரம் திருடன் ராசா தனது கிரீன்ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்திலும், மாடர்ன் ஹைடெக் நிறுவனத்திலும் நக்கீரன் காமராஜையும் இயக்குநராக அமர வைத்து அழகுபார்த்திருக ்கிறார்.

இவற்றோடு, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் சில நூறு ஏக்கர் விலைமதிப்பில்லா நிலங்களும், பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் காமராஜ் பெயரிலும், அவரது தந்தை அண்ணாமலை பெயரிலும் வாங்கிக் குவிக்கப்பட்டிர ுப்பதும், இவற்றோடு வடமாநிலங்களில் இரண்டு பொறியியல் கல்லூரியும், ஒரு மருத்துவக் கல்லூரியும் காமராஜின் பெயரிலேயே வாங்கப்பட்டிருப ்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.
Quote
 
 
+2 #26 அனானி 2010-12-17 14:20
ஒரு குழந்தைக்கு அனைத்துப் பயிற்சிகளும் கொடுத்து, வளர்த்து ஆளாக்கி, பின்னாளில் பெரும் கொள்ளைக்காரனாய் அவனை உருவாக்கும் சினிமா கதைபோலவே, காமராஜும் ஆ.ராசாவை தி.மு.க.வில் சேர்த்தது தொடங்கி, நாடாளுமன்ற தேர்தலில் சீட்டு வாங்கியது வரையிலும், அவரை அமைச்சராக்கியது , கொள்கைபரப்புச் செயலாளராக்கியது , அதிலும் குறிப்பாக மத்திய அரசில் தகவல் தொழில்நுட்பத் துறையை லாவகமாய் ராசா பெறுவதற்காக கருணாநிதியின் மகள் கனிமொழியை வளைப்பதற்கும், தங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வருவதற்கும் ராசாவுக்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுத்தது வரை அனைத்து சூழ்ச்சிகளையும் கற்றுக்கொடுத்த துரோனாச்சாரியாக வே நக்கீரன் காமராஜ் செயல்பட்டு வந்திருக்கிறார் என்பதும் சி.பி.ஐ.யின் புலனாய்வு அதிகாரிகளுக்கு தெளிவாகியதாம்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 156 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11437
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week55437
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month277697
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13194064