முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கண்ணாயிரத்துக்கு கண்டனம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 9
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2010 08:13

டைட்டில் நல்லா இருக்குல்ல…. ? என்னதான் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி ஆயிரம் எழுதினாலும், காவல்துறை அதிகாரிகளைப் பற்றி எழுதும் போது இருக்கும் இன்பம் இருக்கிறதே…. அது அலாதியானது.

 

சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான கமிஷனர் கண்ணாயிரத்திற்குத் தான் இந்தக் கண்டனப் பதிவு.

 Rajendran_T_IPS

இந்தியா ஒரு ஜனநாயக நாடுதான் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். தமிழகமும் அதில் ஒரு அங்கம் தானே.. ?

 

டாக்டர்.பினாயக் சென் மீதான அயோக்கியத்தனமான ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டதை கண்டித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.   பல்வேறு நாளேடுகள் இந்தத் தீர்ப்பை கண்டித்து தலையங்கம் எழுதுகின்றன.

 

இந்தக் கண்டனக் குரல்களின் ஒரு பகுதியாக 31.12.2010 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் என்ற முறையில் கண்ணாயிரத்திடம் அனுமதி கடிதம் வழங்கப் பட்டது.

 

இந்த அனுமதியை மறுத்து கண்ணாயிரம் எழுதியுள்ள பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 IMG

“நீதிமன்றத் தீர்ப்பையும், நீதிமன்றத்தின் ஆணையை கண்டிப்பதும், சட்டத்திற்கு எதிரானதாகும்.   அது நீதிமன்ற அவமதிப்பாகும்.

 

மேலும் டாக்டர் பினாயக் சென்னின் தண்டனையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, எவ்வித பொது நலனும் இல்லாததாகும்.

 

எனவே கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி மறுக்கப் படுகிறது“

மீண்டும் மீண்டும், நண்பர்களும் ஆர்வலர்களும் வார்த்தைகளில் கவனம் தேவை என்று சொல்லுவதால் காரம் சற்று குறைக்கப் படுகிறது.

 

நீதிமன்றத் தீர்ப்பை கண்டிப்பது சட்ட விரோதம் என்று சொல்லுகிறாரே கண்ணாயிரம்… ….   இதைக் கண்டித்து தலையங்கம் தீட்டிய இந்து நாளேட்டிடம் இந்த ம…………. சொல்ல வேண்டியதுதானே….

 

நீதித்துறை மீது குற்றம் சொல்லுவது சட்ட விரோதமானது என்று சொல்லும் கண்ணாயிரம் நீரா ராடியா உரையாடலில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி 9 கோடி லஞ்சம் வாங்கினார் என்று வருகிறதே… நீரா ராடியாவிடம் போய்க் கேட்க வேண்டியதுதானே….

 

 ஒரு எம்.பியாக இருக்கும் வசந்தி ஸ்டான்லி, பொய்யான ஆவணங்களை கொடுத்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று உள்ளார் என்று புகார் கொடுத்து 3 மாதம் ஆகிறதே….   வசந்தி ஸ்டான்லி செய்தது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா…. …..   அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்து கிழித்து விட்டார் கையாலாகாத கண்ணாயிரம் ?

 

ஒரு நபரைக் கைது செய்யும் போது என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு என்ற வழக்கில் பல விதிமுறைகளை சொல்லியுள்ளதே….. அந்த விதிமுறைகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வைக்கப் பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளதே. இதைக் கடைபிடிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என்று தீர்ப்பு உள்ளதே…..   இந்த அறிவிப்பு பலகைகள் சென்னை மாநகரின் எத்தனை காவல் நிலையங்களில் உள்ளன ?   இந்த கண்ணாயிரம் தினந்தோறும் நீதிமன்ற அவமதிப்புச் செயலில் ஈடுபடவில்லையா ?

 

கண்ணாயிரத்தின் இந்த அனுமதி மறுப்பை சவுக்கு வன்மையாக கண்டிக்கிறது.

அனுமதி மறுப்பை கண்டித்து, சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, பத்திரிக்கையாளர் ஞானி உள்ளிட்டோர் தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

 IMG_9539

கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர்கள், வாயில் கருப்புத் துணியை கட்டி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 IMG_9543

IMG_9546

ஜாபர் சேட்டை அண்டிப் பிழைக்கும் கண்ணாயிரத்திற்கு சவுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஜாபர் சேட் அணையப் போகும் விளக்கு என்பதையும் கண்ணாயிரத்திற்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

 

Comments  

 
0 #16 arundba 2011-04-03 07:13
when will raksasabakse commit sucide? just for 50 cricket tickets, he had a fight at mubai. cruel dictator should die now.
Quote
 
 
0 #15 erimalai 2011-02-07 16:22
eppothaan ivanunga thiruntha poraanungalo
Quote
 
 
-1 #14 Sella 2011-01-04 20:46
There is nothing wrong in saying 'Mayiru', it is been used traditionally. Never mind about words what is important is that the feeling should be transferred that is art of writing. Good luck.
About this article: Most of the contents are premediated and did not give enough space for such a harsh critism as presented here.
Quote
 
 
+2 #13 kathir 2011-01-04 10:57
Contempt of Justice
The shocking judgment against Binayak Sen and others should lead to a reform of our anachronistic laws.

http://epw.in/epw/uploads/articles/15558.pdf
Quote
 
 
0 #12 Kadavul 2011-01-01 22:06
arasiyal viyathigalin adiyatkal thaan intha police naaigal
Quote
 
 
0 #11 கோ 2011-01-01 14:02
கொஞ்சம் பாரத்து எழுதுங்க
Quote
 
 
+6 #10 kathir 2010-12-31 21:43
காவல்துறையும்,ந ீதிதுறையும் ஆளும்கும்பல்களி ன் அல்லகைகள் என்பதை இதைவிட சிறப்பாக வெளியிட முடியாது.வாழ்த்துக்கள்.கருணாநிதியின் காலைநக்கிய தமிழக தடா கோர்ட் நீதிபதி தக்ஷணாமூர்த்தி கடந்தமாதம்(27.8.10) அன்று சப்பை கேசுக்கு(ipc படி பார்த்தா மூனுமாசம் தான் அதிகபட்ச தண்டனை)நாலு ஆயுள்தண்டனை குடுத்திருக்கான ்.சுந்தரமூர்த்தி என்ற மாவோயிஸ்ட்டுக்க ு.கருணாதி சொல்ரதலகையெழுத் து போர்ரத்துக்கு நீதிபதி எதுக்கு ,அரசு வழக்கறிஞன் சைதையில மாமா வேலைபார்த்தவன்.உலகத்துல இப்படிபட்ட தீர்ப்ப பார்த்திருக்கமு டியாது.இறுதி விசாரணை முடிந்த ஒருமணிநேரத்துல 128 பக்க தீர்ப்பு,கருணாந தி குடும்பத்தையே மத்தயில கூட்டிகொடுத்தவன ். நீதிபதி தட்ஷணாமூர்த்தி கருப்புஅங்கிய கலட்டி வைச்சிட்டு மாமா தொழில்ல ஆரம்பிக்கலாம் .மாணங்கெட்டதுங்க .சவுக்கு இதுகல கொஞ்சம் அம்பல படுத்துங்க.
Quote
 
 
0 #9 karthi dr 2010-12-31 14:45
india is following china in some aspects. still we are the largest democratic?
Quote
 
 
+3 #8 chinna 2010-12-31 14:07
நீதியோ கண்ணுக்கு தெரியாத இவனுக்கு பெரு கண்ணாயிரம் எவண்தான் இவனுக்கு இப்படி ஒறு பெயர் வச்சானோ.அதுலயும் கமிஷனர் கண்ணாயிரம் பேசாம கமிஷன் டப்ஸகண்ணு பொருத்தம இருக்கும்.
Quote
 
 
+2 #7 chinna 2010-12-31 13:47
\\ஜாபர் சேட் அணையப் போகும் விளக்கு\\அணையா போவதருக்கு எதோ விஷயம் உங்களிடம் இருக்கு போல..சொல்லுங்களேன் எங்களுக்கும். :lol: :lol:
Quote
 
 
0 #6 JP 2010-12-31 13:10
super
Quote
 
 
+5 #5 குசும்பன்., 2010-12-31 12:47
"நீதிமன்றத் தீர்ப்பையும், நீதிமன்றத்தின் ஆணையை கண்டிப்பதும், சட்டத்திற்கு எதிரானதாகும். அது நீதிமன்ற அவமதிப்பாகும்"// OK ,ஒரு வழக்கில் மீள் விசாரணை வேண்டுமென்று அப்பீல் செய்வதுகூட, கண்ணாயிரத்தாரின ் கருத்துப்படி நீதிமன்ற அவமதிப்புத்தானே ?????,,, சரி கண்ணாயிரத்தின் கருத்துக்கு முரணாக செயல்ப்படும் கண்ணாடி கண்ணாயிரம் கருணாவை, இவர் எத்தனைமுறை தட்டிக்கேட்டு கண்டித்திருக்கி றார்??????. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி எத்தனையோ வருடங்களாகியும் காவிரி பிரச்சினையை தீர்க்கமுடியாத அலம்பல் அரசாங்கங்களை கண்டித்து (கண்ஆயிரம்) பதவியை விலகும்படி பரிந்துரை செய்கிறேன்,
Quote
 
 
0 #4 Arasiayal Analyzer 2010-12-31 12:08
Please post this Junior Vikatan , Kalugu etc in sirappu seithikal, we are not able to get t his week Ju Vee, Please ...
Quote
 
 
0 #3 Soundar 2010-12-31 11:22
Police dept.... Go and Clean Politicians toilets... etc.... etc....
Quote
 
 
0 #2 Shanthi 2010-12-31 10:42
Title matum tha nala iruku, matter romba kevalama iruku, epo tha ivanunga la thirunda poranunga savukku??? :sad:
Quote
 
 
0 #1 joe 2010-12-31 10:16
super appu
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 147 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3077
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49892
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month262711
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784830