முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஊழல் மன்னனுக்குப் பாராட்டு விழாj அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 67
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 04 ஜனவரி 2011 08:01

 

கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது.   சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகி விட்டன.   அதனால் என்ன செய்யலாமென்று, திமுகவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை.

 

இதையொட்டி, நடைபெற்ற விழாவில் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு பேசியன…

முதலில கலைஞானி கமலஹாசன்.

 

நான் பல மேடைகளிலே சொல்லியிருக்கிறேன். சொல்லிக் கொண்டும் இருக்கிறேன். சொல்லிக் கொண்டே இருப்பேன். செல்வி ஜெயலலிதா முதல்வராகும் வரை.   நான் கலைஞரின் சினிமாவைப் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டவன். அந்த சினிமாவிலே நான் கண்டதே, என்றோ ஒரு நாள் இந்த வசனத்தை எழுதியவர், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழலைப் புரியப் போகிறார் என்று.

vairamuthu3111_339

அதற்கு முன்னோட்டமாகத் தான், பெரம்பலூர் போர்வீரன் ஆ.ராசாவை மனதில் வைத்து இந்த வசனத்தை எழுதியிருக்கிறார்.

 

“பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ“ என்று எழுதினாரே….. அது ஆ.ராசாவை மனதில் வைத்துத்தான் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்.

 

அது மட்டும் அல்ல. என்றாவது ஒரு நாள் அவர் குடும்பம் ஊழலில் ஈடுபட்டது தெரிந்து போகும் என்பதை அறிந்துதான் “குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது“

 

சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனாலும் நான் சொல்லாமல் விடமாட்டேன்.   அந்த காலத்திலேயே நீரா ராடியாவைப் பற்றி வசனம் எழுதியவர்தான் கலைஞர் என்பதை, அவர் உள்ள ஓட்டத்தை நன்கு புரிந்தவர்கள்தான் புரிந்து கொள்ள முடியும்.

 

ஆ.ராசா நீரா ராடியாவோடு பேசி மாட்டிக் கொண்டால் என்ன பதில் கூறுவார் என்பதைக் கூட அறிந்து வசனம் எழுதியிருக்கிறார்.

 

“இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.”

 

இந்த வசனத்தில் ஜாலக்காரி ஜுலி என்று கலைஞர் அவர்கள் குறிப்பிடுவது நீரா ராடியாவைத்தான். கடைசியில் பைத்தியமாக மாறினேன் என்று, ஆ.ராசா எப்படி ஆகப் போகிறாரோ, அதை தீர்க்கதரிசனத்தோடு எழுதியவர்தான் கலைஞர்.

 

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

vairamuthu3111_353

கலைஞர்ஜீ ஊழல் மன்னான்னு என்னேக் கேட்டா…. அவர் ஊழலோட சூப்பர் ஸ்டார்னு சொல்லுவேன்.   இல்லேன்னாக்கா… சூப்பர் ஸ்டாரோட ஊழலப் பத்தி அவர் சொல்லுவார்….. ஹாஹ்ஹா.

நான் தெய்வமா வழிபட்ற பாபாஜியப் பாக்க இமயமலேக்கு போயிருந்தேன். அப்போதான் தெரிஞ்சது, கலைஞர்ஜி மூணு மலைய வாங்கிருக்கார்ன்னு…. இமயமலேல்ல இருக்கற மூணு மலைய வாங்கிருக்காரே… நீங்க எப்படி பாபாஜி இருக்கறீங்கன்னு கேட்டதுக்கு, பாபாஜி, ராசாத்தி அம்மாஜிக்கு மாசா மாசம் வாடகை தர்றார்னு சொன்னதும் அசந்து போய்ட்டேன், நம்ம கலைஞர்ஜி டேலண்டப் பாத்து.

 

சிம்பிளா சொல்லனும்னா… ஊழல் பண்றதுல, கலைஞர்ஜி சிட்டி ரோபோ மாதிரி..   ஜெயலலிதாஜி கூட ஊழல் பண்ணாங்க… ஆனா அவங்க பண்ண ஊழல் 66 கோடி… கலைஞர்ஜியோட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலே கம்பேர் பண்ணாக்கா…. அது ஜுஜுபி.

 

நான் சினிமால ஒரு டயலாக் பேசுனேன். நான் ஒரு தடவ சொன்னாக்கா நூறு தடவ சொன்ன மாதிரின்னு…. ஆனா கலைஞர்ஜி ஒரு கோடி அடிச்சாக்கா.. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி அடிச்சா மாதிரி…..

 

அடுத்து நீரா ராடியா.

 

Niira-Radia_20101119

ஹாய் கனி…. ஹாய் ராஜா…. ஹாய் கருணாநிதி…. ஹாய் ராசாத்தி… வேர் ஈஸ் ரத்னம் யார்…. கருணாநிதி நெவர் ஸ்போக் டு மீ ஓவர் போன் யார். ஒய் கருணாநிதி ஈஸ் நாட் டாக்கிங் ?. ஒன் மினிட் யார்.   (போனில் பேசுகிறார்)

 

ஹாய் மன்மோகன்….

ஹவ் ஆர் யு…

ஹவ் ஈஸ் சோனியா….

வெரி நைஸ் யார்…

யா… யா… யு ஆர் ரைட் மன்மோகன்.

தேர் ஈஸ் ஒன் ஃபெலோ கால்ட், ஜாபர் சேட்….

யு ஆர் ரைட்..

ஹி டேப்ஸ் ஆல் தி போன் கால்ஸ் யார்..

இன்க்லுடிங் மை ஃப்ரெண்ட் ராஜாத்தி யார்.

யா கருணாநிதி ஈஸ் ஸ்டில் இன் வீல் சேர் யார். பட் ஹி ஈஸ் வெரி ஹெல்தி.

 

யு நோ வாட் மன்மோகன். யு வோன்ட் பிலிவ் திஸ்.   ஐ யம் தி ஹீரோயின் இன் ஹிஸ் நெக்ஸ்ட் மூவி. ட்ரூலி யார்.   வாட்..?

யா யா. ஐ வில் ஆஸ்க் ஹிம் டு கிவ் யூ ய ஃபாதர் ரோல்.

 

ஓகே மன்மோகன் சி யூ இன் டெல்லி யார்…

 

(மீண்டும் மேடையில் பேசுகிறார்.) கருணாநிதி ஈஸ் தி நம்பர் ஒன் கரப்ட் பொலிடீஷியன். தேர் ஈஸ் நோ டவுட் யார்.   டெல்லி போலிடீஷியன்ஸ் ஆர் யங். பட் திஸ் ஓல்ட் மேன் இன் ய வீல் சேர் ஈஸ் அமேஸிங் யார். ஓகே.. பை எவ்ரிபடி.

 

அடுத்து வைரமுத்து…

vairamuthu3111_307

அன்று சர்க்காரியா சொன்னார்.

நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.

 

ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய்.

 

வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட முப்பத்து முக்கோடி தான்.

 

நீ ஒரே தவணையில் அடித்ததோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி.

 

ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.

ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.

 

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..

உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ…

ஆம் குடும்பத் தலைவன் நீ..

 

நான் கட்டியதோ பொன்மணி மாளிகை….

நீ கட்டியதோ பத்மாவதி, தயாளு மற்றும் ராசாத்தி…

 

சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ….

உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம்…..

 

 

அடுத்து கவிஞர் வாலி.

poet-vaali-stills-pics-photos

கொற்றவனே… கொற்றவனே….

ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…

தறுதலைகளை பெற்றவனே…

சூடு சொரணை அற்றவனே…

கொற்றவனே.. கொற்றவனே..

 

உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.

தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.

மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.

உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.

 

தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி

நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி

தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..

உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி

 

எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு

நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு

உன்னால தமிழகம் போனது கெட்டு

உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு

 

ஏற்புரை.. கருணாநிதி.

vamsamaudio020710_182

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே….

எனக்குப் புகழ்ச்சி அறவே பிடிக்காது. இவ்வாறு வந்து கூட்டங்களிலே அமர்ந்திருக்கும் நேரத்திலே கூட ஏதாவது கோப்புகளை பார்த்தால் சில கோடிகள் கிடைக்கும் என்று சிந்திப்பவன் நான்.

 

ஆனால் தம்பி வைரமுத்துவும், கலைஞானி கமலஹாசனும், விழாவிலே பங்கெடுப்பதற்காக 50 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னதால், எனது பணிகளுக்கு சிறிதே ஓய்வு கொடுத்து விட்டு இந்த விழாவிலே பங்கெடுக்க வந்துள்ளேன்.

 

இந்தியாவிலேயே சிறந்த ஊழல் மன்னன் என்று திட்டமிட்டெல்லாம் நான் என்றுமே பணியாற்றியது கிடையாது.   பல ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா என்னை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆக்கும் போது அவரே நினைத்திருக்க மாட்டார். அவர் தம்பி இப்படி ஊழல் மன்னனாக வளர்வான் என்று….

 

நான் ஊழல் மன்னனாகியது காலத்தின் கட்டாயம் என்றால் அது மிகையாகாது. ஒரு மனைவி, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள், வைத்திருப்பவர்கள் சில கோடிகள் ஊழல் செய்யலாம். ஆனால் என் குடும்பத்தையும் என் வாரிசுகளையும் பாருங்கள்… அவ்வளவு பேரையும் திருப்தி படுத்த வேண்டுமென்றால், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து விட்டு, இடையறாது உழைத்தால்தானே முடியும் ?

 

ஏறக்குறைய 50 ஆண்டுகால பொதுவாழ்விலே, உழைத்து, மக்கள் பணியாற்றியே நான் இன்று ஊழல் மன்னன் என்று அழைக்கப் படும் இடத்திற்கு வந்திருக்கிறேன்.

 

ஆனால் இது கூட பொறுக்காமல் 20 ஆண்டுக்கும் குறைவாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள அந்த அம்மையார், என்னை விட அதிகமாக ஊழல் புரிய முயற்சிக்கிறார். அடிக்கடி அந்த அம்மையார் ஊழல் புரிகிறார், ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா ? அவ்வாறு கூறாமல் போனால், அந்த அம்மையார் என்னை விட அதிகமாக ஊழல் புரிந்து நான் இன்று பெற்றிருக்கும் பேரை தட்டிப் பறித்து விடுவாரோ என்ற அச்சத்திலேதான்….

 

நான் சென்று கொண்டிருக்கும் தள்ளு வண்டி சமயத்தில் பஞ்சராகி, என்னை முடக்க முயற்சி செய்தாலும், இந்த வயதிலும் நான் தொடர்ந்து உழைக்க ஒரே காரணம், இன்றும் என் குடும்பத்தினருக்கு போதுமான அளவுக்கு சொத்து சேர்க்காததே…..

 

இன்னும் கொஞ்சம் சொத்துக்கள் சேர்த்து, டாடா, ரிலையன்ஸ், பிர்லா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டால், அதற்குப் பிறகு நான் அரசியலில் இருந்து விலகி, இலக்கியப் பணியிலே ஈடுபடலாம் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில், எனக்கு இப்படி சிறந்த ஊழல் மன்னனுக்கான விழாவை நீங்கள் எடுத்தது என்னை மீண்டும் ஊக்கப் படுத்தி மேலும் சிறந்த ஊழல்களை, இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஊழலை விட, இன்னும் பன்மடங்கு ஊழல் புரிய ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்ற அளவிலே அதை எடுத்துக் கொண்டு, நன்றி கூறி விடை பெறுகிறேன்.

 

Comments  

 
-1 #79 k.kumari 2011-05-03 22:42
VERY VERY SUPER- CONTINUE LIKE THIS
Quote
 
 
0 #78 sure 2011-02-04 13:17
:lol: :lol: :lol: :lol: :lol: great .. namma nattoda nelami ippa ipde iruku enna seiya.,.,
Quote
 
 
0 #77 m.karthick 2011-01-18 20:55
very very interesting but shocking. :-x
Quote
 
 
0 #76 rajesh g 2011-01-18 12:44
where is the rasa
Quote
 
 
0 #75 சங்கரன் 2011-01-17 13:39
சூப்பரப்பு!
Quote
 
 
0 #74 s. baskar 2011-01-13 10:55
savuku ungal karpani thiran alaathiyanathu aanal karunanithipol thamilina throgigalai ini nadum nattumakalum mannikka maattaargal
Quote
 
 
0 #73 ramachandran 2011-01-12 14:25
savukku valaithalam nallaave kathai vasanam ezhuthukirathu. oodakam enpathaal ethaiyum ezhuthalaam entru ezhuthaatheerka l. piraku savukku urimaiyaalarin kudumpatthai patriyum ezhutha veru patthirikkaikal um ullana. koolikku maaradikkum koottam veru eppadi ezhuthum. jananaayakattho du neenkal irunthaal unkalaiyum potruvom. athaividutthu thannidam oodakam ullathu enpatharkkaaka yaaraiyum eppadiyum ezhuthalaam entru ennaatheerkal. unkal vimarsanam karunaanithiyai yum, avar kudumpathaiyum kevalamaaka pesuvathu mattumthaan thozhilaaka kondullathu, neenkalum koolikku maaradikkum koottatthai sernthavaro entra aiyam thontrukirathu? unmaiyaa SAVUKKU.
Quote
 
 
0 #72 Raja Pandi 2011-01-11 06:51
Good....... But More Person Missing....... Enga thokuthikku ethuvume seyyama, Avarukkum, Avaroda oorukkum seytha oru Ammaichar irukkaru, Avariyum konjam Pugalunga. Enga thoguthi makkalukku Varuthama irukkula..... Yara... Athanga Palli Kalvi Durai Amaicharu.... OOOLALARASU,,,, ,
Quote
 
 
+2 #71 jack 2011-01-10 22:19
;-) super
Quote
 
 
0 #70 k s venkatesan 2011-01-10 18:27
arumai arumai arumai
Quote
 
 
+3 #69 சாமக்கொடங்கி 2011-01-08 18:46
கேலிக்கூத்தாகவு ம் அதே நேரத்தில் தமிழகத்தின் தற்போதைய நிலையை விலாவாரியாக விவரிப்பதாகவும் உள்ளது உங்கள் எழுத்து..

இவர்கள் ஊழல செய்வது ஊருக்கே தெரியும்.. ஏன் இந்த பாராட்டு விழாக்களில் பங்கேற்பவர்களுக ்கு மட்டும் தெரிவதில்லை..?? இது தான் காசு கண்ணை மறைக்குது என்பதோ....????
Quote
 
 
+1 #68 True Indian Citizen 2011-01-08 12:43
:lol:
ஊழல் மன்னனுக்குப் பாராட்டு விழா
Quote
 
 
0 #67 tamilan 2011-01-07 18:38
karunanidhi indha polapuku family oda thookula thongidalam thooooooooooooo :lol:
Quote
 
 
+5 #66 nasar tiruppur 2011-01-07 17:55
தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி

நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி

தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..

உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி
Quote
 
 
+1 #65 nasar tiruppur 2011-01-07 17:52
ஊழல் தலைவனுக்கு பாராட்டு வீழா மிக அருமை சவுக்கு...
Quote
 
 
0 #64 kamalesh 2011-01-07 08:15
THEN WHO IS GOOD POLITICION?AIADMK?OR CONGREES PARTY?OR YOU SAVUKKU? ALL ARE SAME .IF SAVUKKU WOULD HAD BEEN IT MINISTER SAME MIGHT BE HAPPEN.IS NOT IT?BECAUSE OF KARUNANITHI SAVUKKU GETTING PAPULAR.WILL U SHOW SAME THING AGAINST JAYALAITHA?ENCOUNTER WILL BE THERE .LIMIT YOUR COMMENTS PLEASE.THANKYOU.
Quote
 
 
0 #63 Tamilpriyan 2011-01-06 15:22
Its very nice and beautiful comedy and superb message for tamilnadu peoples(Voters)
Quote
 
 
0 #62 Anani 2011-01-06 14:14
Very Good sadly a bad reflection on the State of Affairs Good to read a genuine sattire..keep it up.
Oosi pona postings padithu padithu bore agi pocchu this is refreshing.
Quote
 
 
+1 #61 marshal 2011-01-06 12:13
super sir very good all the best thank you
Quote
 
 
+1 #60 V Rajendran 2011-01-06 08:06
Brilliant piece. Fertile imagination. Wonderful satire. Cho-vudaiya sishyano?
Quote
 
 
0 #59 kadharsyed 2011-01-06 00:28
:lol: :oops: :-x
Quote
 
 
0 #58 kadharsyed 2011-01-06 00:27
hi
Quote
 
 
0 #57 neovasant 2011-01-06 00:26
:lol: :lol: :lol:
non-stop laughs! satire at its best!!!
Quote
 
 
-1 #56 Anand T 2011-01-05 22:32
Guys, Shallwe VOTE Against this party this time?
Quote
 
 
-1 #55 shareef 2011-01-05 20:39
CHANCE LESS WRITING SUPER SAVUKKU
SHAREEF
Quote
 
 
-1 #54 yayathi 2011-01-05 19:47
:D
Rempa Arumai Pittittingaa,
by
Yyathiraja
Quote
 
 
-1 #53 Raja N 2011-01-05 16:59
Ultimate sir.....i am laughing a mad after reading this article. But the content is 100 % true
Quote
 
 
-1 #52 Thiru 2011-01-05 12:36
Super appu :lol:
Quote
 
 
-1 #51 Naermainaa enna ? 2011-01-05 11:40
Kunjaamaniai kaanom ?
Quote
 
 
-1 #50 Nithi 2011-01-05 10:44
Quoting சவுக்கு:
Dear Nithi,
We all have tremendous anger due to this corruption and huge scams. If we keep thinking continuously about these scams our BP will shoot up and our health will deteriorate. Dont you think, we should laugh a little and have a little sense of humour, to keep us healthy ?


Thanks and i will agree with you.......you can proceed.
Quote
 
 
-1 #49 balan.m 2011-01-05 10:10
super bosss. continue it....
Quote
 
 
+4 #48 ரோமிங் ராமன் 2011-01-05 08:22
என்ன அரை குறை கவரேஜ் பண்ணுறீங்க நீங்க?? வாலி சொன்னதில் பாதி காணோம்!! "இந்தா.. "நான் பொய் சொல்ல மாட்டேன்.. நான் பொய் சொன்னா என் நாக்குல சரஸ்வதி நடமாட மாட்டாள்!-இந்த நாட்டில் இருக்க பெரிய ஆட்கள் எல்லாருக்கும் இந்த ஊழல்- அப்படிங்கறத சொல்லிக் கொடுத்ததே இந்த அறிஞர்தான்!!"" என்றெல்லாம் சொன்னாரே ஏனய்யா போடவில்லை??
Quote
 
 
+1 #47 butterfly 2011-01-05 05:58
namma vethanaiya ipdithan comedya solli theerthukka vendi ullathu
Quote
 
 
+1 #46 Ranse 2011-01-05 03:34
Savukkuku auto + gundas + police ready :lol: :sad:
Quote
 
 
+4 #45 tamiltarutalai 2011-01-05 00:19
வைரமுத்து ஒரு சாதி வெறியன்.கமலஹாசன் ஒரு மன நோயாளி.
ரஜினி ஒரு பலே திருடன்..
இந்த கரும்புள்ளிகளை பற்றி கவலைபட தேவை இல்ல.இவர்களின் சந்ததிகளை எதிர்கால தமிழகம் பார்த்து கொள்ளும்.
இந்த மூன்று பாக்தாத் திருடர்களும் இருக்கும் வரை வாழ்ந்து ஓயட்டும்..வாழ்க இவர்கள் தொண்டு.
Quote
 
 
-1 #44 Krishnaraj 2011-01-05 00:06
Idhu karpanaiya illai munkooti ariyum aatrala
Quote
 
 
-1 #43 *alagi* 2011-01-04 23:18
PINNITTINGA..............
Quote
 
 
-1 #42 tamil anban 2011-01-04 23:11
ஊழல் மன்னன் கருணாநிதி, அப்போ ஊழல் இளவரசன்? அழகிரியா அல்லது ஸ்டாலினா? இருவருமே தான் ஆனால் யார் பட்டத்து இளவரசன்?
Quote
 
 
+5 #41 tamil anban 2011-01-04 23:07
உங்கள் இந்த பதிப்பை ஜெகத் இரட்சகனுக்கு அனுப்பி வையுங்கள் அடுத்த வாரமே இந்த கற்பனை உண்மையாகும்.. உமது பனி சிறக்க வாழ்த்துக்கள். :-)
Quote
 
 
+2 #40 ம.பொன்ராஜ் 2011-01-04 22:13
ஏங்க சவுக்கு..... நீங்க உக்காந்து யோசிபீன்களா? இல்ல யோசிச்சுகிட்டே தான் உக்காருவீங்களா?... பின்னி பெடலேடுக்குறீங் க?
Quote
 
 
+2 #39 விமலன் 2011-01-04 21:23
ஊழல் தலைவனுக்கு பாராட்டு வீழா மிக அருமை சவுக்கு... சிலருக்கு இது காமெடி ஆனால் நீ எழுதியது 100% உண்மை
Quote
 
 
+2 #38 Rajesh Moorthy 2011-01-04 20:28
Boss, Chumma kalakuringa.. I recommended to this site to many of my friends. Please keep up your good work. All the Best.
Quote
 
 
0 #37 GanesanKrishnamurthy 2011-01-04 19:50
Excellent one,,,But it does not look like a comical script,,It is so real and even child in Tamil Nadu knows that encomiums showered by Vali, Vairamuthu, Kamal and Rajini on "Corruption Emperor" Karunanidhi are not from the heart,,,Wheneve r, i think about Karunanidhi, i always think about latin american autocrats such as "Papa Doc" Duvalier and Leonidas Trujjillo,,,
Quote
 
 
0 #36 Nithu 2011-01-04 18:07
sabaash...sariyana conversation....
Quote
 
 
+1 #35 Krishnan Balaa 2011-01-04 18:00
அந்தந்தப் பாத்திரங்களகவே மாறி,சவுக்கைச் சொடுக்கியிருக்க ின்ற விதம் சிறப்பான சிந்தனையைத் தந்து சிரிக்கவும் வைக்கிறது.சொடுக்கு நல்ல மிடுக்கு!
Quote
 
 
+1 #34 wee wee 2011-01-04 17:32
தலைவா , நீங்க எங்கேயோ போய்டீங்க :-) சிரிச்சு சிரிச்சு சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது தலைவா :-)
Quote
 
 
0 #33 devanathan 2011-01-04 16:56
savukku
where is kaspar kanimoli and kamaraj?
Quote
 
 
-1 #32 கூத்தாடி 2011-01-04 16:13
http://koothadiveddai.blogspot.com/
Quote
 
 
+2 #31 ஊர்க்குருவி 2011-01-04 15:40
Quoting சவுக்கு:
அன்பார்ந்த ஊர்க்குருவி,
இது போல காலதாமதம் ஆகும் என்பதை தவிர்க்க முடியாது என்பதால் தான், மட்டுறுத்தல் இல்லாமல் பின்னூட்டங்கள் பதிப்பிக்கப் பட்டு வந்தன. ஆனாலும், ஓரிரு அன்பர்கள், தங்கள் சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்காக தங்களுக்குப் பிடிக்காதவர்களை ப் பற்றி சம்பந்தமில்லாமல ், அவதூறான வார்த்தைகளில் பின்னூட்டம் இட்டு விடுகிறார்கள். அது மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகிறது. சவுக்குக்கு மட்டும் தனது வாசகர்களின் பின்னூட்டங்களை உடனுக்குடன் பார்க்க ஆசையில்லையா என்ன ?
உடனுக்குடன் பதிப்பிக்க முடியாமல் பல்வேறு வேலைகளில் சவுக்கு அலைந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா தோழரே... தாமதத்தை பொறுத்தருளவும்.

நன்றி,
Quote
 
 
0 #30 dubukku 2011-01-04 15:31
:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 47 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2940
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week71714
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month205672
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12727791