|
திமுகவின் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக என்றதும், ஏதோ மாவட்டச் செயலாளர்கள் யாராவது கலகம் செய்கிறார்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.
இது மாவட்டச் செயலாளர்கள் யாரும் செய்த கலகம் அல்ல. கழகம் என்றால் குடும்பம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். அந்தக் குடும்பத்தில் தான் இன்று கலகம் நடந்து கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டின் கடைசி நாளில் தொடங்கிய அந்த பூகம்பத்தின் அதிர்வலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்த மாதம் 31 அன்று தொலைபேசியில் கருணாநிதியை அழைத்த அழகிரி, தனது கோபத்தையெல்லாம் கருணாநிதியிடம் கொட்டி விட்டு, ராசாவை திமுகவை விட்டு நீக்கியே ஆக வேண்டும் என்று தெளிவாக தெரிவித்து விட்டார். ஆனால் கருணாநிதி இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
கடந்த பதிவில் எழுதியிருந்தது போல, அழகிரி சென்னைக்கு வந்து கடந்த 3ம் தேதி, தனது தென் மண்டல செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.
அதற்கு முதல் நாள் கடும் குருட்சேத்திரம் நடந்திருக்கிறது சிஐடி காலனியில்.
“நானும் தம்பியும் ஊர் ஊரா அலஞ்சு கட்சிய வளக்குறோம், தேர்தல சந்திக்கிறோம். இங்க என்னடான்னா சென்னை சங்கமம்னு கூத்தடிச்சிகிட்டு இருக்காங்க. நம்ப குடும்பத்துக்கு வந்த எல்லா அவமானமும் அந்தக் குடும்பத்தாலதான். என்னை கட்த்ரோட் அரசியல்வாதின்னு ************* பேசறா…. அப்பாவும் எந்த நடவடிக்கையும் எடுக்காம கம்முனு இருக்கார். இப்படியே போனா நாளை பின்ன என்னை எவன் மதிப்பான். இவரு என்னடான்னா அந்த வீட்லயே போய் உக்காந்துகிட்டு இருக்காரு… எம்பி பதவிய ராஜினாமா செய்யச் சொல்லுங்க. சங்கமத்த நிறுத்தச் சொல்லுங்க. நானா அந்தக் குடும்பமான்னு முடிவெடுக்கச் சொல்லுங்க…… “ என்று கடும் கோபத்துடன் பேசி விட்டு சென்றிருக்கிறார்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் கருணாநிதியிடம் சொல்லப் பட்டாலும், இறுக்கமாக இருந்த கருணாநிதி ஒன்றும் பதில் பேசவில்லை.

நேற்று கனிமொழி பிறந்தநாளுக்கு சிஐடி காலனி சென்ற கருணாநிதி, கனிமொழியிடம் காலையில் பேசி விட்டு, மீண்டும் இரவு பேசியிருக்கிறார்.
நேற்று தனது அமைச்சரவை சகா ஒருவருடன் நீண்ட நேரம் கருணாநிதி புலம்பியிருக்கிறார்.
“என்னய்யா நெனச்சுகிட்டிருக்கான் அவன்… அவன் இல்லன்னா ஒண்ணுமே பண்ண முடியாதா…. 62லேர்ந்து இந்தக் கட்சிய வளத்தவன்யா நானு…. அவன் இல்லன்னா தேர்தல சந்திக்க முடியாதுன்னு நெனைக்கிறானா அவன்….
அவனுக்கு என்னய்யா பண்ணல… ?
எலெக்ஷன்ல நிக்கனும்னான்…. எம்பி ஆக்கினேன். மந்திரி ஆகனும்னான். மந்திரி பதவி வாங்கிக் கொடுத்தேன்… கட்சிப் பதவி வேணும்னான். தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தேன்…. இப்ப என்னய்யா ஓவரா பேசறான்… இவன் சொல்ற ஆளையெல்லாம் கட்சிய விட்டு நீக்கிக்கிட்டே இருந்தா அப்புறம் கட்சியை எப்படி நடத்துறது… ?
என்னமோ ரொம்ப பேசறானே….. இவன் மட்டும்தான் கட்சிய வளத்தானா… ? நான் வளக்கலியா…. நீ வளக்கலியா..? இவந்தான் கட்சி மாதிரி பேசறான்… ? “ என்று புலம்பியிருக்கிறார்.
சென்னை சங்கமம் விழா என்ன ஆனாலும் நடந்தே தீர வேண்டும் என்று உறுதியாக கருணாநிதி கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.
அடுத்த அதிர்ச்சிகரமான தகவல். கனிமொழிக்காக, அழகிரியை தியாகம் செய்ய கருணாநிதி துணிந்து விட்டார் என்பதுதான். ஆம் தோழர்களே…

முந்தாநாள் பேராசிரியர் அன்பழகனை தொடர்பு கொண்ட கருணாநிதி, அழகிரியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக் கொண்டதாக திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எப்போது கருணாநிதி கேட்டாலும் உடனடியாக கையெழுத்து போட்டுத் தரும் அன்பழகன், முதன் முறையாக “யோசித்துச் செய்யுங்கள்“ என்று கூறியிருக்கிறார். தான் நினைத்ததை நடத்தியே தீரும் பிடிவாத குணம் கொண்டவரான கருணாநிதி, துரைமுருகனை உடனடியாக வரச் சொல்லி, அன்பழகனை சந்தித்து, அழகிரியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் படி அன்பழகனை வற்புறுத்துமாறு கூறியுள்ளார். அதன் படி, அன்பழகன் நேற்று காலை 10 மணிக்கு அன்பழகனை சந்தித்து விட்டு 11.30 மணிக்கு வெளியேறியிருக்கிறார்.
இது இப்படி இருக்க, அஞ்சா நெஞ்சன், தொடை தட்டிக் கொண்டு களமிறங்க தயாராகி வருகிறார். தனது ஆதரவாளர்களோடு தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வரும் அவர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், தனது ஆதரவு எம்எல்ஏ, எம்பிக்களோடு திமுகவை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதற்காக ஜனவரி 14 பொங்கல் வரை கெடு விதித்திருப்பதாகவும் அழகிரி கூறியிருக்கிறார். கனிமொழி எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ராசா கட்சியை விட்டு நீக்கப் பட வேண்டும், சென்னை சங்கமம் ரத்து செய்யப் பட வேண்டும் என்ற தனது கோரிக்கையில் அழகிரி பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிகிறது.

கருணாநிதியும் அழகிரியும் ஆளுக்கு ஒரு பக்கம் தோள் தட்டி வரும் நிலையில், திமுகவில் உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது.
அண்டை மாநிலமான ஆந்திராவில், தான் இரண்டாவதாக திருமணம் செய்த லட்சுமி சிவபார்வதிக்காக, தான் உருவாக்கிய கட்சியான தெலுங்கு தேசம் தன் வாழ் நாளிலேயே இரண்டாக உடைந்ததை பார்த்தவர் என்.டி.ராமாராவ்.
அந்தக் காட்சியை இது நினைவுபடுத்தவில்லை ?

எது எப்படியோ, 2011 ஆண்டு அமர்க்களமாகத்தான் தொடங்கியிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி மரண ஓலமிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களுக்காக போலித்தனமாக ஊளையிட்டுக் கொண்டே, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த இந்தக் குடும்பம், இது போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாவது, சவுக்குக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே |
Comments
kaipulla vettil erukkama veliel aduthu endraikku andimuthu rasa madiri karunagathukku eraiyakapogutho vadivelu kariputithalaiy 6an
"Sooriyan udikum disai Kizhaku".... "Sir Sooriyanu solreengale..... neenga DMK'va".......
Edhavadhu sonna.... neenga Castista, ADMK'va, Kannadi podadhavara, sivapa irukaravara..... ennada thirundha maateengala.......
எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து தமிழனை சோம்பேறியாக்கி விட்டார்கள். தற்போது எல்லா உணவகங்களிலும் வடநாட்டு ஆட்கள் வேலை செய்கிறார்கள். எல்லா வேலைகளுக்கும் வெளி மாநிலத்து ஆட்கள் தன் வருகிறார்கள். இது இப்படியே போனால் எல்லா ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கும ் , இலவச உணவு கொடுத்து நிரந்தர ஆட்சியை பிடிக்க நினைப்பார்கள்.
பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போடும் நிலை இருக்கும்வரை இவர்களை ஒன்னும் பண்ண முடியாது. வருகிற தேர்தலில் இவர்கள் ஜெயித்தாலும் ஆச்சரியப்படுவதற ்கில்லை
நாளைக்கு ஜெ., ஆட்சிக்கு வந்தால் நீர் மூடிக்கொண்டு எதிர்கட்சிகளை மட்டுமே விமரிசனம் செய்து உன் முகத்திரையை கிழித்துக்கொள்ள ும் நாள் வெகு விரைவில் இல்லை.. 15 வருடமாக சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கி வரும் வாய்தா ராணியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதேன் பார்க்கலாம்.. இதெல்லாம் ஒரு பொழைப்பு..
நீங்களும் இப்படி ஏமாந்து போவீர்கள் என்று நான் நினைக்க வில்லை. கருணா குடும்பம் முழுவதும் நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறது. ஒன்னே முக்கால் லட்சம் கோடியும் ராசா, கனிமொழி கூட்டணி மட்டுமே ஆட்டைய போட்ட மாதிரி இப்படி குதிக்கிறாங்க. 2008 ல நடந்தது பற்றி இந்த குடும்பம் முழுசுக்கு ஒன்னும் தெரியாதோ?
இது ஒரு உளவியல் யுக்தி போல தெரிது பாஸ். கனிமொழி, ராசா தவிர மத்தவங்களுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி தமிழ் நாட்டு ஜனங்க கிட்ட ஸீன் போடுறாங்க. தேர்தல் வருது இல்ல. அதான் இந்த உத்தம புத்திரன் வேஷம். வேணுமின்னா எல்லாரும் பாருங்க. தேர்தல் சமயத்தில இந்த குடும்பம். இந்தியாவோட தியாக குடும்பம். எல்லாம் ஒன்ன சேர்ந்து வோட்டு கேட்கும். என்ன தியாக திருவிளக்குக்கு ம் 60 சத பங்கு போயிருக்கு. இப்பவே ஸ்பெக்ட்ரம் பற்றி டெல்லில நடக்கிற மாற்றத்த பார்த்தா புரியும்.
காச அள்ளி விட்டா இந்த முட்டாள் ஜனங்க எப்படியும் வோட்டு போட்டுடுவாங்க. அந்த நம்பிக்கையில தான் கருணா கும்பலும், டெல்லி கும்பலும் இருக்கு. இவனுங்க திருந்த மாட்டங்க பாஸ்.
தப்பாகப் போகும் கணக்கு
தப்பினால் வரும் பிணக்கு!
தொடரும் நீலகிரி
மருந்தாய் ஏலகிரி
துரத்தும் அழகிரி
காப்பது viruthaகிரி????
நீங்கள் சொல்லுவது நிச்சயம் நடக்கும் நண்பரே, விதைப்பும் அறுப்பும் மாறாதது,
how many educated people in india???why this old man still grabbing the seat???? Dear tamil naad people look at the telungu people they always be together, if you all been like that this kind of foxes never enter the city
ஜாக்கிசான் ரசிகர்கள் சார்ப்பாக எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் :)
நி ஒருத்தன் போதும் மு.க.வை அட்சியில் இருந்து எறக்க (நி ஆயிரம் ஸ்பெக்ட்ரமுக்கு சமம்)
அழகிரி நி சொல்லுவது செல்லாது... செல்லாது .........
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நல்ல பள்ளியும், மருத்துவ வசதியும் இருந்தாலே இந்த நாட்டு மக்கள் தங்களுடைய சுய சிந்தனையாலும், உழைப்பாலும் பன்மடங்கு உயர்ந்து விடுவார்கள். இவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகளும், இலவசம் என்ற பெயரில் பிச்சையும் தேவை இல்லை. இதனை அறிந்த கொள்ளை கும்பல்கள் இவர்களை வளர விடாது. இவ்வாறு செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதை எப்போது நிறுத்துவார்களோ அப்போதுதான் இந்தியா முழுமையான சுதந்திரம் அடையும்.
இந்த நிலைமையில், "யாருக்கு போட்டா என்ன" என்ற மனநிலையில் இறுக்கும் மக்கள் இந்த திருட்டு கும்பலுக்கு காசை வாங்கிவிட்டு வோட்டு போட தயாராக இருந்தாலும் இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கூட காசுக்கோ, சாதிக்கோ வோட்டு போடும் மக்கள் மனநிலை மாறும் வரையில் நம் நாட்டுக்கு விமோசனமே கிடைக்காது.
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே//
சரியான சவுக்கடி
சென்னையில் உள்ள போலி பாதர் ஜெகத் விஸ்பரே சாரி கஸ்பரே என்னை மன்னியும்
today is the happiest day in my life..
u r rocking again.. cheers...
Kalaignar kudumbam rendu patta Oooru'ku.
ஸ்டார்ட் ம்யூஸிக்....
ஓரமாக நின்று இந்நிகழ்ச்சியை கண்டு களித்த கேப்டன், தான் பிரபாகரனின் பெயரில் காவியம் ஒன்றில் நடித்தவன் என்றும், சோனியா அல்லது ஜெயல்லிதா என்ற இரண்டு கடவுள்களில் ஒருவருடன்தான் கூட்டணி என்பதைத் தெளிவு படுத்தினார். இந்த நாளில் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளில் கூட்டம் முண்டி அடித்துகொண்டு இருந்ததையும் , இன்று மட்டும் 50% அதிகம் மது விற்பனை நடந்தது என்ற உண்மையையும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாடு முழுக்க திரைக் கொட்டகைகள் நிரம்பி வழிந்தன. திரைக் கொட்டகையின் உச்சியில் ஏறி நூறு பேர் திரைப்படம் பார்க்கையில் தவறி விழுந்த சிலருக்கு பண உதவி அளிக்க வேண்டும் என்றும், வீதி வீதிக்குத் திரைக் கொட்டகைகளைத் திறந்து நெரிசலைக் குறைக்க வேண்டும் என்றும் இரசிகர்கள் சாகும் வரை உண்ணவிரதப் போராட்டம் செய்ய முடிவு செய்தனர்…..
----கற்பனைதான்.. நடக்காது என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் தமிழனின் மறதி அப்படி
தங்கபாலுவோ, ஒவ்வொரு தமிழனும் தன்வீட்டில் அன்னை சோனியாவின் படத்தை வைத்து வணங்க வேண்டும் என்றும், தன் குழந்தைகளுக்கு இராகுல், பிரியங்கா எனப் பெயர் வைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து பேசிய தந்திரன், தமிழ்தான் தன் மூச்சு என்றும், தமிழர் நலனுக்காகத் தான் தாக்கரேயிடம் ஆசி பெற்றதாகவும், தன்னைப் பார்க்க வந்து காரில் நசுங்கிய ஆயிரம் தமிழர்களுக்கு மிகுந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். இவ்விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த வைக்கோ, நெடுமாறன், சீமான் போன்ற இந்திய, தமிழ் இறையாண்மைக்கு எதிரான தீவிரவாதிகள் , தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர் .
ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இராஜபக்சேக்கு விருது வழங்குவது தன் திட்டம் என்றும், மைனாரிட்டி தி.மு.க அரசு தன் திட்டங்களைத் திருடி நற்பெயர் சம்பாதிப்பதாகவு ம் தெரிவித்தார். சன்,கலைஞர் டிவி களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்கள் கண்டு உவந்தனர்
மதுரை, 31 டிசம்பர் 2015------------------------------------
இங்கிலாந்தில் பல்கலைக் கழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப் பட்ட இராஜபக்சேக்கு இலங்கையில் தமிழ் மக்களுக்கு அளப்பரிய தொண்டு ஆற்றிய செயலுக்கான கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கும் விழா மதுரைப் பல்கலைக் கழகத்து மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை ஏற்றுப் பேசிய கருணாநிதி, தானும் தன் நண்பர் இராஜபக்சேவும் தமிழ், தமிழர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்றும் அறிவித்தார். இராஜ பக்சேயை வாழ்த்திப் பேசிய ஹிந்து என்.ராம், சீனாவின் உதவியை இராஜபக்சேக்குப் பெற்றுத்தர தான் மிகவும் பாடுபட்டதாக உரையாற்றினார். அடுத்துப் பேசிய ஜி.கே வாசன், இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றத்துக் காக இராஜபக்சேக்கு அன்னை சோனியா செய்த உதவிகள் அளப்பரியன என்றார். அவசரமாக மைக்கைப் பிடுங்கிய இளங்கோவன் , சோனியா, இராஜபக்சே இருவருக்கும் நோபல் பரிசு இதுவரை தராதது ஏன், இதில் தி.மு.க வின் உள்குத்து இருக்கிறது என்றார்.
jackie jan photo vir kum itharkum ethavathu sampatham irruka? oru vellai sandaiai kuripatharkaka pootirgala?
there is a saying matha vairu erinjal vazha orunallum - this is happening
1. ஔரங்கசீப்பிற்க் குப் பின் வந்த அரசர்கள் திறமை அற்றவர்களாக இருந்தார்கள்.
2. ஔரங்கசீப்பிற்க் குப் பின் வாரிசுப்போர் தொடங்கியது.
3. ஔரங்கசீப் இந்துக்களின் மனதைப் புண்படுத்தினார் .
4. ஔரங்கசீப் சீக்கியர்களின்( இலங்கைத் தமிழர்கள்) பகையை தேடிக்கொண்டார் .
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே
1. ஔரங்கசீப்பிற்க் குப் பின் வந்த அரசர்கள் திறமை அற்றவர்களாக இருந்தார்கள்.
2. ஔரங்கசீப்பிற்க் குப் பின் வாரிசுப்போர் தொடங்கியது.
3. ஔரங்கசீப் இந்துக்களின் மனதைப் புண்படுத்தினார் .
4. ஔரங்கசீப் சீக்கியர்களின்( இலங்கைத் தமிழர்கள்) பகையை தேடிக்கொண்டார் .
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!
அப்பாவியாய் ஒருவர்!
தப்பாகப் போகும் கணக்கு
தப்பினால் வரும் பிணக்கு!
தொடரும் நீலகிரி
மருந்தாய் ஏலகிரி
துரத்தும் அழகிரி
காப்பது எந்தகிரி?
Thanks to DINAMANI
நீங்க சொன்னது மட்டும் நடந்ததுன்னா ,
கனிமொழிக்கும் அவங்கம்மாவுக்கு ம் தமிழ்நாட்டு ஜனங்க
என்னைக்கும் நன்றி கடன் பட்டவங்களா இருப்பாங்க
ஆண்டவா இவரு சொல்றதெல்லாம் நடக்கணும் சாமீஈஈஈஈஈஈஈஈ
RSS feed for comments to this post