முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கலைஞரின் இளைஞன் கதை. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 51
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2011 07:20

 

படமே இன்னும் ரிலீஸ் ஆகலை. அதுக்குள்ள எப்படி அந்தப் படத்தின் கதையை சவுக்கு எழுதுகிறது என்று பார்க்கிறீர்களா ?

 

அந்தப் படத்தில் கதை என்று ஒன்று இருக்கிறதா என்ன ?   ஆனாலும், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தால் (நடக்காது பயப்படாதீங்க… ஒரு பேச்சுக்கு) 2011ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாகவும், சிறந்த கதை வசனமாகவும், இளைஞனும், கருணாநிதியும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பதில் ஐயம் ஏது.

image013

(சாரி பாஸ் படம் தப்பாயிடுச்சு)

ஆனால் இந்தப் பதிவு இளைஞன் கதைப் பற்றியதல்ல. இளைஞனின் பின்னால் உள்ள கதையைப் பற்றியது. அது மிக மிக சுவராஸ்யமாக இருக்கிறது. படித்து விட்டு நீங்களே சொல்லுங்களேன். சுவராஸ்யமா இல்லையா என்று.

pa-vijay-ilaignan-movie-wallpapers-stills-pics-photos-01

இளைஞன் படத்தின் தயாரிப்பாளர் யார் ?   சான் டியாகோ மார்ட்டின்.   யார் இந்த சான்டியாகோ மார்ட்டின் ?   இவரை சான் டியாகோ மார்ட்டின் என்று சொல்லுவதை விட, ‘லாட்டரி மார்ட்டின்‘

என்றே பிரபலமாக அழைக்கப் படுகிறார்.

 

மார்ட்டின் பிறந்த அன்றே யோகம் தான். ஆம் தோழர்களே… பர்மாவில் சான்டியாகோ மார்ட்டின் பிறந்த அன்றே, மாட்டினின் பெற்றோர்களுக்கு லாட்டரியில் 1000 டாலர் விழுந்தது. இதை சொல்லிச் சொல்லியே வளர்த்ததனால் மார்ட்டினுக்கு லாட்டரி மீது தீராத காதல் உருவாகி, லாட்டரி சாம்ராஜ்யத்தையே கட்ட வைத்தது.

21-10-2010-7214-2-9

இப்படித்தான் மார்ட்டினின் வாழ்க்கை தொடங்கியது. பள்ளிப் படிப்பை கூட முடிக்காத மார்ட்டின் இன்று 4000 கோடி ரூபாய் லாட்டரி தொழில் நிறுவனத்துக்கு அதிபதி.

 

பர்மாவில் யாங்கோன் நகரில் தனது தொழிலை துவக்கினார். அங்கே சிறிய அளவில் லாட்டரி டிக்கட்டுகளின் ஏஜென்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பர்மாவில் சட்டவிரோத லாட்டரி டிக்கெட்டுகள் பெரும் அரசியல் சூறாவளியைக் கிளப்ப, மார்ட்டின் தப்பித்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அஸ்ஸாம், நாகாலாந்து, போன்ற அனைத்து வடகிழக்கு மாகாணங்களுக்கும் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார்.

சில வருடங்கள் கழித்து தனது மொத்த சாம்ராஜ்யத்தையும், தமிழகத்துக்கு கொண்டு வருகிறார்.  மார்ட்டினின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கட்டமைத்ததில் பின்னாளில் அவருக்கு எதிரியான உஸ்மான் பயாஸ் பெரும் பங்கு வகிக்ககிறார்.  கோவை மாவட்டத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார் மார்ட்டின்.

அதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கம் லாட்டரிகளை தடை செய்ததும், மார்ட்டினுக்கு பின்னடைவு என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், இந்தத் தடையே, மார்ட்டினை வளம் கொழிக்க வைத்தது.

21-10-2010-7214-1-4

மார்ட்டினின் நிறுவனத்தில் உஸ்மான் பயாஸ் என்ற ஒரு நபர் மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை உருவாக்குகிறார். தமிழகத்தில் மார்ட்டினின் சட்டவிரோத கள்ள லாட்டரிகள் தாறுமாறாக விற்கத் தொடங்குகின்றன.   மார்ட்டினின் கோயம்பத்தூர், காந்திபுரம் 6வது தெரு, டெய்சி ப்ளாஸா, எண் 355-359 என்ற முகவரியில் மார்ட்னின் லாட்டரி ஏஜென்சி இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மார்ட்னின் செல்வாக்கு போகாத இடங்களே இல்லை எனலாம்.   மார்ட்டினின் செல்வாக்குக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு சொந்தமான தேசாபிமானி என்று ஒரு நாளிதழ் வருகிறது.   நம் தமிழ்நாட்டில் தீக்கதிர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.   2005ம் ஆண்டில் மார்ட்டின் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுக் கொண்டது தேசாபிமானி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷயம் வெளியே வந்து சர்ச்சை ஆனதும், தேசாபிமானி, அந்தத் தொகையை மார்ட்டினிடம் திருப்பி அளித்தது.

தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டே வந்த மார்ட்டின், எஸ்எஸ் ம்யூசிக் என்ற சேனலை விலைக்கு வாங்குகிறார். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு மார்ட்டினின் சட்டவிரோத லாட்டரிகளின் விற்பனைத் தொகை 1.5 கோடி ரூபாய்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மார்ட்டின் சட்டவிரோத லாட்டரிகள் விற்றதற்காக வழக்கு ஒன்று பதிவு செய்யப் படுகிறது. அந்த வழக்கில் மார்ட்டின் முன்ஜாமீன் பெறுகிறார்.   இன்றும் மார்ட்டின் முன்ஜாமீனில்தான் உள்ளார்.

இப்படியே இயல்பாக போய்க் கொண்டிருந்த மார்ட்டினின் வாழ்க்கையில் ஒரு திருப்பம்.   மார்ட்டினின் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஸ்மான் பயாஸ், ஒரு பெரும் தொகையை ஆட்டையை போட்டு விட்டு, மார்ட்டினிடமிருந்து பிரிகிறார். பிரிந்தவுடன், மார்ட்டின் தனது பண பலத்தால் பயாஸூக்கு நெருக்கடி தருகிறார். ஏற்கனவே, பல்வேறு அரசியல் தொடர்புகளோடு இருந்த பயாஸ், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கமாகிறார்.   பயாஸ் மீது மார்ட்டின் கடும் கோபத்தில் இருக்கிறார்.

பயாஸுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கலாம் என்று மார்ட்டின் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தமிழகத்தில் மார்ட்டினின் கள்ள லாட்டரிகள் விற்கும் இடங்களில் காவல்துறை சோதனையிட பயாஸ் ஏற்பாடு செய்கிறார்.

தொடர்ந்து சோதனைகள் நடந்ததும், மார்ட்டினின் கள்ள லாட்டரித் தொழில் அடி வாங்குகிறது. பணம் நஷ்டமாகிறது.

அரசியல் தொடர்புகள் அனைத்துக்கும், பயாஸையே நம்பி இருந்த மார்ட்டின் அரசியல் தொடர்புகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை நம்பி தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முயல்கிறார்.   மார்ட்டின் முதலில் அணுகியது, கருணாநிதியின் மகள் செல்வி. செல்வியோடு தொடர்பு ஏற்பட்டாலும், மார்ட்டினால் காவல்துறையின் சோதனைகளை நிறுத்த முடியவில்லை.

illaignan_Audio-Launch15

ரஜினிகாந்துடன் மார்ட்டின்

 

அப்போதுதான், மார்ட்டினுக்கு கவிஞர் பா.விஜயின் நட்பு கிடைக்கிறது.   பா.விஜய்யை அணுகிய மார்ட்டின் தனது கோரிக்கையை சொல்கிறார். அதற்கு பா.விஜய், நான் கருணாநிதியிடம் அழைத்துச் செல்கிறேன். தேவையான உதவிகளைச் செய்கிறேன், இதற்கு கைமாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்.

மார்ட்டின் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றதும், நான் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்னை ஹீரோவாக வைத்து, கருணாநிதி கதை வசனத்தில் படம் தயாரியுங்கள், நான் உங்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

மார்ட்டின் சம்மதித்ததும், அறிவிப்போடு நின்று விட்ட இளைஞன் படம் மீண்டும் உயிர் பெறுகிறது. இப்படி உருவானதுதான் இளைஞன்.

கருணாநிதி, தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிட்டு அளித்த அறிக்கையில், ‘தற்போது தயாரிக்கப் பட்டு வரும் இளைஞன் படத்துக்கு கதை வசனம் எழுதுவதற்காக எனக்கு அளிக்கப் பட்ட ஊதியம் 45 லட்சம் ரூபாய்‘ என்றார். இந்த 45 லட்ச ரூபாயும் கதை வசனத்திற்கு அளித்த ஊதியம் அல்ல….. கள்ள லாட்டரி விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கொடுத்த லஞ்சம்.

 

illaignan_Audio-Launch09


இது தொடர்பாக மற்றொரு செய்தியைச் சொன்ன கருணாநிதி, இளைஞன் படம், ஒரு லோ பட்ஜெட் படம் என்றார். உண்மையில் இந்த படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா… ? 50 முதல் 60 கோடி என்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் கப்பல் செட் போட மட்டும் 14 கோடி ரூபாய் செலவிடப் பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

21-10-2010-7214-4-3_1

இந்தப் பின்னணியில் தான் கேரளாவில் நடந்த சம்பவத்தை பார்க்க வேண்டும். கேரள நாட்டில் இஷாக் என்பவர், பூட்டான் மாநில லாட்டரிகள் 10 வாங்குகிறார். அந்த லாட்டரிகளை பரிசீலித்ததில், அத்தனையும் போலி என்று அறிந்த இஷாக், மார்ட்டின் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கேரள மாநிலத்தின் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.   அந்த வழக்கில் போதுமான முகாந்திரம் இருப்பதால், நீதித்துறை நடுவர், கோட்டை காவல் நிலையத்திற்கு மார்ட்டின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறார்.

அடுத்த வழக்கை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனே பதிவு செய்ய உத்தரவிடுகிறார். இதையடுத்துதான், மார்ட்டின் முன் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த வழக்கில் தான் முதலில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்க்வி ஆஜராகிரார். கேரளா முழுவதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து, சிங்வி வழக்கிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறார். அடுத்ததாக மார்ட்டினுக்காக ஆஜரானவர் தான் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன். கருணாநிதி சொல்லாமல் பி.எஸ்.ராமன் கேரளா சென்றிருக்க மாட்டார். ஆனால் மார்ட்டினுக்காக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜரானதும், எழுந்த கடும் சர்ச்சையை ஒட்டி, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன்,  ராமன் எப்படி மார்ட்டினுக்காக ஆஜராகலாம் என்று கருணாநிதிக்கு கடிதமே எழுதினார்.

illaignan_Audio-Launch20

ஆனால், இந்தக் கடிதத்தையும் கண்டு கொள்ளாத கருணாநிதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் ராமன் செய்தது தவறே அல்ல என்று உடனடியாக அறிக்கை வெளியிட்டார்.   அது தவறு என்று கருணாநிதி எப்படி சொல்ல முடியும் ? அனுப்பியதே கருணாநிதி அல்லவா ?

இந்தப் படத்தின் விநியோகஸ்த உரிமையை வாங்கியிருக்கும் சிவப்பு பூதம் நிறுவனம் (அதாங்க ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ்) படத்திற்காக பத்து பைசாவை மார்ட்டினுக்கு கொடுக்கவில்லை என்பது கொசுறு செய்தி.  இந்தப் படத்தை எப்படியாவது வெற்றிப் படம் ஆக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

illaignan_Audio-Launch08

மேடம் அடுத்து நீங்க மார்ட்டின் தயாரிப்புல, "அலைக்கற்றை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" ன்னு ஒரு படம் எடுங்க மேடம்.

அருமையான ஆடு ஒன்னு சிக்கிருக்கு. வேஸ்ட் பண்ணக் கூடாது மேடம்

இது தவிர, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மார்ட்டின் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இப்படிப் பட்ட ஒரு மோசமான குற்றவாளி ஒரு படத்தை தயாரிக்கிறார், அதில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கதை வசனம் எழுதுகிறார், அவனோடு சேர்ந்து விழாவில் கலந்து கொள்கிறார், அவனிடம் 45 லட்சம் ஊதியம் பெற்றேன் என்கிறார்.. …. இதையெல்லாம் கருணாநிதியால் செய்ய முடியும். ஆனால் இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்றால், ‘ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும்‘ என்கிறார்.

மார்ட்டின் கருணாநிதி உறவு, இத்தோடு முடியவில்லை.      கருணாநிதியின் கதை வசனத்தில் வெளி வரும் அடுத்த படமான "பொன்னர் சங்கருக்கும்" மார்ட்டின் தான் தயாரிப்பாளர்.

இந்த அக்கிரமம் உலகில் எங்காவது நடக்குமா ?

 

Comments  

 
0 #71 sailu 2011-05-17 11:11
This kind of people should be punished without doubt.
Quote
 
 
-1 #70 Six 2011-05-14 21:49
தி.மு.க - திருடர்கள் முன்னேற்றக் கழகம்
Quote
 
 
+1 #69 Shivan 2011-04-19 18:43
தி.மு.க - திருட்டு முன்னணி கழுதைகள்
தி.மு.க - தில்லாலங்கடி முடுச்சவிக்கி களவாணிகள்
தி.மு.க - திருடிதின்னு முட்டபோட்ட கம்னாட்டிகள்
தி.மு.க - திருட முன்னிருக்கும் கடனாளிக்குபிரந் தவைகள்
Quote
 
 
+2 #68 mmdyasin nermai 2011-03-05 21:18
thi mu ka (thiruttu mudichavikki kasmalam)
Quote
 
 
0 #67 mmdyasin nermai 2011-03-05 21:17
kalaignarin sathanaigalil ilaignayum serthu kollungal... veru enna solvathu... kedu ketta thi mu ka(thirttu mudichavikki kasmalam)
Quote
 
 
+3 #66 தமிழ் வேல் 2011-02-23 02:40
என் குல மகளிர் என் தங்கைகள் சிங்கள நாய்களால் சீரழிக்க படும் போது இந்த தெலுங்கன் அதை எப்படி கையாண்டான் என்பதை உணர்ந்த போது யாருக்காக உழைத்தோம் இந்த அரக்கனுக்கா உழைத்தோம்
என்று நொந்து போனேன்.என் பழைய சையல் நினைத்து வெட்கப்பட்டேன்.
சாதி ஒழிகின்றேன் என்பான் ஆனால் தலைவர்கள் சிலை வைப்பான் உங்கள் சாதி தலைவர்களுக்கு
சிலை வைத்தேன் என்பன் அதை பார்த்து என் சாதி தலைவனுக்கு சிலை வை என்று மத்தவர்கள்
சொல்ல வைப்பான்.நான் உயர்ந்த எண்ணத்தில் தலைவர்களுக்கு சிலை வைத்தேன் ஆனால்
இப்படி சாதி சாயம் பூசுகின்றர்களே என்பான்.

இப்படி கபட நாடகம் போட்ட இவன் மனிதனே இல்லை! அரக்கன்

சாரயம் வித்தவன் , கட்டை பஞ்சயது செய்தவன் ,கந்து வட்டி கொடுபவன் எல்லாம் சாதி சாயம் பூசி
மாவட்ட செயலளர் ஆக்கி, அரசியல் என்பது ஆதாய தொழில் என்று கொண்டு வந்து.

தமிழர் களை தமிழர் கொண்டே அடக்கி தெலுங்கர் களை ஆளவைத்து, இவனது அரச தந்திரங்களை
பார்க்கும் போது ஆச்சரியமாக இருகின்றது.

இலங்கைஇல் தமிழ் குலம் வேட்டை யாட படும் போது கொந்தளித்த தமிழர்களை எப்படி கையாண்டான் என்பதை பார்த்த போதுதான் அவன் எவளவு பெரிய உளவியல் ஞானி என்பதை புரிய முடிந்தது.
உணர்சிகளை அடகினால் புரட்சி வெடிக்கும் ,உணர்ச்களை வடிகால் கொண்டு நீக்கினால் தான்
நிரந்தர தீர்வு.மக்களை போக்கு காட்டி காலம் கடத்த வேண்டும் .பின்னர் ஒருவழியாக இன அழிப்பு முடித்த பின் மக்கள் மக்கள் உணர்வு அன்றாட பிரச்சனைகளால் நீர்த்து போகும் .

தமிழனிடம் பத்திரிகை களும் இல்லை தினசரி களும் இல்லை இருக்கும் ஒன்னும் சுயநலவாதி கையில்
சினிமா மீடியா உம் தமிழனிடம் இல்லை! இதனால் இன உணர்வை தூண்டும் காரணிகளும் இல்லை

இந்த நாய்க்கு சுவரொட்டி ஓட்ட வைத்த என் தகப்பன் இப்போது கண்ணீர் வடிகின்ன்ரர்

யே தெலுங்கு தாசி குலதவனுக்கு இவ்வளவு மூளை இருக்கும் என்றால்
பாண்டியன் எமக்கு எவ்வளவு இருக்கும். நான் திங்கள் குல சிங்கமடா!

கற்பழிக்கப்பட்ட எம் சகோதரிகளின் குமுறல் எங்கள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருக்கும்
எங்கள் எதிரி இனங்கள் அதற்கான விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை

சாது மிரண்டால் நாடு தாங்காது தமிழன் பொங்கினால் உலகம் தாங்காது
Quote
 
 
0 #65 positive karthick 2011-01-25 18:46
asathunka yesaman asathunka! :lol
Quote
 
 
-2 #64 positive karthik 2011-01-25 18:37
a.d.a.m.k. patri yen vai tiraka matten yenkirai.yethavathu something vanki irukiraya? melum
"vaitha rani"
"vai koluppu" elankovan
"vathi vettu" vai.ko
p.chithamparam yetanaiyo person ieruka d.m.k patri write seivathu yen. thiru mollamari kalakam D.M.K yenral anaithu india tirutu mollamari kalakam. purincha sari.
Quote
 
 
+6 #63 brindha 2011-01-18 01:33
மார்ட்டின் ஏராளமான சொத்துக்களை துபாயிலும் வாங்கி குவித்திருக்கிற ார். ஒரு முறை மார்ட்டின் நடத்திய லாட்டரியில் அவரது மகனுக்கே 5 கோடி விழுந்தது. இந்த வழக்கும் நிலைவையில் உள்ளது. 2ஜியிலும் அவருக்கு சம்மந்தம் உண்டு.அனைத்து ஏற்பாடுகளுக்கும ் பின்னணியில் இருப்பது ETA Group தான். மார்ட்டின் மகன் பல வருடமாக தலைமறைவாக துபாயில் வசிக்கிறார்ன்.
Quote
 
 
+9 #62 tamil anban 2011-01-17 22:20
இன்னும் நான்கு மாதத்தில் தேர்தலுக்கு பின்னால் திமுக சுத்தமாக காலி ஆகி விடும், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தாரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்(அல ைகற்றயில் அடித்தது உட்பட), அப்பொழுது பிழைப்புக்கு ஒரு வழி வேண்டாமா? அதனால் தான் இப்பொழுதே தன பழைய தொழிலை தூசி தட்டுகிறார் இதை போய் ஒரு பெரிய விஷயமா ஆக்குகிரார்களே. சிறையில் இருந்தே அப்பொழுது கதை வசனம் எழுதி சம்பாதிப்பார். அப்பொழுது அவர் பெயர் சிறைகலைஞர்.
Quote
 
 
+6 #61 கிரிவலம் 2011-01-15 12:13
தினமணி 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பற்றிய ஒரு தகவலை வெளியிட்டது. கலைஞர் டிவிக்கும், சன் டிவிக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பற்றி விளம்பரப்படுத்த பணம் தரப்படுகிறது என்று சொன்னது அந்த தகவல். இதற்கடுத்து பதில் சொன்ன கருணாநிதி, எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கும் அந்த விளம்பரம் வழங்கப்படுவதாக சொன்னார். ஆக.,பூணைக்குட்டி வெளியில் வந்து விட்டது. இது மார்ட்டின் சேனலா? தமிழ் ஈனத்தலைவரே!
Quote
 
 
0 #60 prabakaran 2011-01-14 12:16
ilaighanin kathai migavum arumai
Quote
 
 
+2 #59 NA.ERASAN 2011-01-14 12:15
Entha mudiya vayathil karunanidhku marai kayanduvittahu
Quote
 
 
+2 #58 charles 2011-01-14 00:41
VETKAM MAANAM SOODU SORANAI ILLATHA ORU THAMILAN KARUNANITHI ITCHI THELUNKAN
Quote
 
 
+5 #57 Srini 2011-01-13 21:12
இந்த பொழப்புக்கு போய் பிட்சை எடுக்கலாம்...
Quote
 
 
0 #56 mayavarathar 2011-01-13 18:03
very good, nalla seithi
Quote
 
 
+1 #55 joe 2011-01-13 08:59
savukku rocks :roll:
Quote
 
 
+5 #54 ABARA 2011-01-12 23:58
DIRTY KARUNANITHY AND HIS FAMILY
Quote
 
 
+4 #53 tamil 2011-01-12 23:19
முதல்வருக்கு நிறையபணகஷ்டம் அதனால் தான் மார்டின் தயாரிக்கும் படத்திற்கு கதை எழுதுகிறார்
Quote
 
 
0 #52 vanankamuti 2011-01-12 22:16
martin story spr
Quote
 
 
+3 #51 Savukkufan 2011-01-12 20:12
I guess this movie would come under freebies of coming election. Free entry for public to see this movie in TN theaters and TN gvt may pay for that.....It will be in the lines of free TV, free gas stove, free... free.. free. This would be more than enough for TN and Tamils in India.... Savukku should write more about the developments happened in TN for past 5years! Many in TN believe that, DMK gvt didn't tons of goodies to the state in investment, infrastructure, education, agriculture, industry etc., But in reality TN and Chennai is being pushed back!! We are in down trend.... no more we can claim that TN is 3rd most developed state in India... Another 5years if this DMK rules, then we will have to compare our state with Bihar, UP rather than comparing it with Maha or GJ.

Savukku please write about state developments reality to tear the face of those who claim TN has reached gr8 development in this gvt... common people should know the reality.
Quote
 
 
+1 #50 kusmbu 2011-01-12 19:34
kusumpu -- (சாரி பாஸ் படம் தப்பாயிடுச்சு)
Quote
 
 
+8 #49 மும்பை முருகன் 2011-01-12 19:09
சற்று முன் தினமணி-யில் கிடைத்த தகவல் : இளைஞன் படத் தயாரிப்பாளர் மார்டின் மீது நிலமோசடி வழக்கு தொடுக்க உயர்நீதிமன்றம் ஆணை.

தொடரட்டும் சவுக்கின் பணி.
Quote
 
 
+4 #48 RASIKAN 2011-01-12 19:05
SAVUKKU you are the real journalist. Best of luck
Quote
 
 
+6 #47 Dinamalar 2011-01-12 16:42
சென்னை : முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் தயாராகி வரும் இளைஞன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மார்டின். லாட்டரி தொழில் அதிபரான இவர் மீது சேலத்தில் நில ஆர்ஜிதம் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் மார்டின் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளத ு.
Quote
 
 
0 #46 Gunabalan 2011-01-12 15:30
Chennai high court ordered to file FIR againt Martin. Dinamalar news today.

Savukku is always great with real news.
Quote
 
 
+5 #45 தங்கராசுநாகேந்திரன் 2011-01-12 14:15
வீ.சேகர் , கருணாநிதியை தெலுங்கர் கூறியதை கவனித்தீர்களா வேறென்ன கருனாநிதியின் சமூகம் தெலுங்கிலிருந்த ு இறக்குமதி செய்யப்பட்டதுதா ன் அதனால்தான் தமிழன் எக்கேடு கெட்டால் என்ன மானாட மயிலாட ஆடிக்கொண்டிருக் கிறார்
Quote
 
 
+4 #44 JP 2011-01-12 12:29
This kind of people should be punished without doubt.
Quote
 
 
0 #43 Arasiyal Analyzer 2011-01-12 12:18
Anna Salai muluvathum ulla "Chennai Sangamam" vilamparankalil "Tamil Maiyam" ullathu.

Please refer the website: http://chennaisangamam.com/ (Tamil Maiyam) logo is available.

What are you going to do?
Quote
 
 
+3 #42 தமிழ் மக்கள் 2011-01-12 11:19
என்ன கொடுமை சார் இது...
Quote
 
 
+8 #41 பாமரன் 2011-01-12 11:11
அதேபோல சூர்யாவும் , கார்த்தியும் red giant மற்றும் cloud nine மூவீசோட கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளை ஆக்க வைத்திருக்கும் கம்பெனி நடிகர்கள் என்று இணையத்தில் பார்த்தேன் உண்மையா சவுக்கு. இவர்கள் தான் நடிகர் விஜயோட வளர்ச்சியையும் தடுக்கிறார்கள் என்றும் கூட இணையத்தில் கருத்து உலவுது.
Quote
 
 
+8 #40 அனானி 2011-01-12 01:04
இது தொடர்பாக இன்னொரு செய்தி. மார்ட்டின் ஒரு கல்லூரி ஆரம்பிக்க விரும்பி சென்னையின் பிரபல ஆர்கிடெக்ட் நிறுவனத்தை அணுகுகிறார். ஆனால் அவர் மறுத்து விடுகிறார். அவர் யாராக இருந்தால் என்ன நான் செய்கிற வேலைக்கு பணம் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லாமல் தொலைநோக்கு அறச்சிந்தனையுடன ் சிந்தித்துப் பார்த்த ஒரு ஆர்க்கிடெக்ட் அள்வுக்குக் கூட மக்கள் பார்வயில் படும் முதல்வர் சங்கோஜப் படவில்லை
Quote
 
 
+4 #39 குசும்பன் 2011-01-11 23:29
உடம்புக்கு சரியில்லாததால் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள ்ளுகிறேன்,பாகவெ ளி தமிழன், anbu, Thomas, சவுக்கின் விசிறி, Senthamizh, AADHI, SESHU, ramugurunathan, ,Nithi, ஏகா, குப்புசாமி,nith i, காவலன்,ராஜா, குருபாகஜன்,அப்த ுல் ரகுமான் டுபாய்,விளம்பி, சாவுமணி, வீரத்தமிழ்மகன் பாமரன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்,
Quote
 
 
+13 #38 Kumar.T 2011-01-11 23:03
அட லாட்டரி சீட்டு விக்கிராங்க, லஞ்சம் வாங்கராங்க அதெல்லாம் போய்ட்டு போகுது விடுங்க.. ஆனா இந்த பா.விஜய் ஹீரோவா நாடிச்ச படத்த யாரு தியேடரில உக்காந்து பாக்குரது ??.. திருட்டு விசிடி ல கூட பாக்க முடியாது... 1000 ரூபா வாங்கிட்டு வோட்டு போட்ட கொடுமைக்கி தமிழன் இன்னும் என்ன என்ன கொடுமையாெல்லாம் அனுபவிக்கனுமோ..

மிஸ்‌டர் திருக்குவளை கொஞ்சம் ஓவர்ரா தான் போறீங்க...
Quote
 
 
+6 #37 பாமரன் 2011-01-11 22:54
வீ.சேகர் , கருணாநிதியை தெலுங்கர் கூறியதை கவனித்தீர்களா ?
Quote
 
 
+4 #36 taillan 2011-01-11 22:29
படம் ஓடுதோ இல்லையோ இந்த கதை தேர்தல் பிரச்சாரத்தில் நன்றாகவே ஓடும்
Quote
 
 
+4 #35 சாவு மணி 2011-01-11 21:46
அந்த unanimous தகர டப்பா தலையன் ஜபார் சேட் தானே ?? போலிஸ் எல்லாம் மாமான்னு நினைச்சிகிட்டு இருந்தேன் சவுக்கும் போலீஸ் துறை என்று தெரியாத வரை. http://www.savukku.net/components/com_jcomments/images/smiles/cry.gif
Quote
 
 
+4 #34 SOORIYA MAINDHAN 2011-01-11 20:58
யாருக்கு அவர் கஷ்டம் தெரியும்?
இந்த தள்ளாத வயதில், அரசியலை பார்த்துக்கொண்ட ு, வாரிசுகளை அணைத்துக்கொண்டு , கூட்டணியை நிலை நிறுத்திக் கொண்டு, எதிர் அணியை முறைத்துக் கொண்டு, தேர்தலுக்கு அடுத்த இலவசத்தை திட்டமிட்டுக்கொ ண்டு, பாராட்டு விழாவிற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டு ....அப்பப்பா..
இளைஞன் யார் தெரிகிறதா..?
Quote
 
 
+5 #33 kirithi 2011-01-11 20:25
ada savukku ennaanga... naama etha pathi nenaikiromo atha pathiyae puttu puttu vekkiraanga!!!!
Quote
 
 
0 #32 minnal 2011-01-11 18:46
kalaigar atchi mudivathu MAY 14 than not in APRIL. PL. CORRECT IT IN THE WEBSITE
Quote
 
 
+7 #31 fan 2011-01-11 17:45
மார்ட்டின் கோவை துடியலூரில் தனக்கு கட்டிய வீட்டையும், அருகிலே வாங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தையும் பாப்பாவுக்கு விற்று விட்டார் என்பது இங்கு உலவும் கிசுகிசு.

இதனாலேயே மதுக்கரையிலிருந ்து வரும் பை-பாஸ் சாலையையும் அந்த நிலத்தை ஒட்டி வருமாறு பாதை மாற்றி விட்டார்கள்.
Quote
 
 
+13 #30 குப்புசாமி 2011-01-11 17:10
இதுல கவிஞர் கனிமொழி ஒரு பாட்டு எழுதுனா அவன் ஒரு கோடி கொடுப்பானே... நீங்க எழுங்க மொழி... எதுக்கும் இந்த பாட்ட ரீமிக்ஸ் பண்ணுங்க - " ராசாவே உன்ன நம்பி.... ரோசாப்பு தவிக்குதுங்க..."
Quote
 
 
+2 #29 shakeelakther 2011-01-11 16:18
:lol: :lol: :lol:
Quote
 
 
+6 #28 Ravisundaram 2011-01-11 16:05
தமிழ்நாட்டில் நடப்பது பிகாரில் பலசமயம் நடப்பது போன்ற கொள்ளையரின் ஆட்சி. கடந்த 40 வருடங்களாக ஆட்சி செய்யும் இந்த கொள்ளையரின் உடுப்பு வேண்டுமானாலும் மாறலாம். புடவை வேட்டியாகும். அல்லது வேட்டி புடவையாகும். இதுதான் பெரிய மாற்றம். கொள்ளை நடப்பதென்னவோ தொடர்ந்தே தீரும். தமிழ்நாட்டை தமிழரை சகதியில் முழுக வைத்து அழிப்பதென்பது தொடர்ந்து நடந்தே வந்துள்ளது. இதில் கலைஞரின் பங்கு அளவிட முடியாதது. இதற்கும் அவர் பெருமை கொள்ளலாம். சுயமரியாதையை பேசி பேசியே தமிழரின் சுயமரியாதை மற்றும் தன்மானத்தை ஒழித்த இந்த கழகங்கள் இலங்கை தமிழரை முடித்தது போலவே இந்திய தமிழரையும் ஒழித்துவிட்டுத் தான் ஓய்வார்கள்.
Quote
 
 
+7 #27 Krishna B 2011-01-11 14:57
பதிவுக்கு தொடர்பில்லாத கேள்விக்கு மன்னிக்கவும்...
கேப்டன் அம்மா கூட்டணி அமையுமா? அமைந்தால் வெற்றி கூட்டணி ஆக இருக்குமா?
Quote
 
 
+1 #26 jeeva 2011-01-11 14:54
martin is living in Vellakinar Pirivu, MTP road, and his house value is more than 70 crores.This house is like Mappillai and panakkaran film type house.Selvi pinami is living in same area.
Quote
 
 
+9 #25 வீரத்தமிழ் மகன் 2011-01-11 14:51
செம்மொழி மாநாட்டின் முக்கிய ஸ்பான்சர்தான் இந்த மார்ட்டின். கோவைக்கு வரும்போது வெறும் கையுடன் வந்ததாய் சொல்வதுண்டு. கோவையில் கொடிகட்டி பறந்த, எல்.கே.எஸ். கனி, எஸ்.எஸ்.மணியன் என எல்லோரையும் முழுங்கி விட்டு, போலி லாட்டரி சீட்டின் மூலம் பல கோடிகளை சுருட்டியவர். தற்போது, ரியல் எஸ்ட்டேடிலும் நுழைந்து வெற்றி நடை போடுகிறார். கோவை சரவணாம்பட்டிக்க ு அருகில் கோவையின் மிகப் பெரிய அளவில் குடியிருப்புகளை கட்டி வருகிறார். அனைத்து விற்றுவிட்டதாயு ம் சொல்லப்படுகிறத ு. சரவணாம்பட்டி பிராஜக்கெட்டுக் கு கைமாறுதான், செம்மொழி மாநாட்டு ஸ்பான்சர்.
Quote
 
 
+12 #24 வடக்குபட்டி ராமசாமி 2011-01-11 14:32
என்ன கொடுமை சார் இது, இவனுங்க மேடை மேடையா தமிழ் தமிழ்ன்னு கத்தரானுங்க ஆனால் இந்த போஸ்டர்ல கலைஞரின் இளைஞன் ரெண்டு மட்டுமே தமிழ்ல இருக்கு.. போங்கடா நீங்களும் உங்க தமிழும்...
Quote
 
 
-15 #23 Nellai 2011-01-11 14:06
அடுத்து கருணாநிதி தான் முதல்வர் இப்போதே அடுத்த ஐந்து வருடத்திற்கு கவுன்டவுன் ரெடியாக்கவும்.
Quote
 
 
+3 #22 sudar 2011-01-11 13:49
hats off savukku to reveal the truth.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 206 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2581
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week23780
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month226512
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12748631