முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மனசாட்சியும் மானமும் உள்ள கவிஞன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 13 ஜனவரி 2011 09:01

 

அன்பார்ந்த தோழர்களே,  கவிஞர் வா.மணிகண்டன் அவர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக சவுக்குக்கு எழுதியிள்ள கடிதத்தை சவுக்கு தனது வாசகர்களுக்காக அப்படியே பிரசுரம் செய்கிறது.  கவிஞர் மணிகண்டனுக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.  கவிஞன் என்றால் சுயமரியாதை வேண்டும்.  அந்த சுயமரியாதையை கருணாநிதி காலில் அடகு வைக்க கவிஞர்கள் வரிசையில் போட்டி போடுகையில், வா.மணிகண்டன், பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.  வாழ்த்துக்கள் மணிகண்டன் அவர்களே.

va.manikandan

நண்பர்களுக்கு,

வணக்கம்.

கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் நிகழும் 'கவிதை சங்கம'த்தில் கவிதை வாசிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். தொடக்கத்தில் எனது கவிதைகளுக்கான அங்கீகாரமாகக் கருதியும் பின்னர் வந்தஆண்டுகளில் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வாகவும் தொடர்ந்து பங்களித்து வந்தேன்.

இந்த ஆண்டும் கவிதைச் சங்கமத்தில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. என்னை நினைவில் வைத்திருந்து அழைத்த நண்பர்களுக்கு நன்றி. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கும் கலாப்ரியா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. ஆனால் இந்த ஆண்டு கவிதைச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்டு சிபிஐ-ன் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் இந்த ஆண்டும் சென்னை சங்கமத்தில் பிரதான பங்களிப்பைச் செய்கிறது. சென்னைசங்கமத்தின் இணையதளத்தில் தமிழ் மையம் பற்றி சிலாகிக்கப்பட்டிருக்கிறது. கறையின் நிழல் விழுந்த ஒரு நபருக்கும் அவரது அமைப்புக்கும் சென்னை சங்கமம் அளிக்கும் முக்கியத்துவத்தை எதிர்க்கிறேன்.எதற்காக தமிழ் மையத்திற்கும் ஜெகத் கஸ்பருக்கும் சென்னை சங்கமம் இடமளிக்கிறது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கவிஞர் கனிமொழியின் இடத்தை ஸ்திரமாக்கப்படுவதற்கு நடத்தப்படுகிறது என்பது ஒரு காரணம் என்றாலும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்குமான இடமாக சென்னை சங்கமம் விளங்கி வருவதாக உணர்கிறேன்.அதே சமயம் சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகாக தனது புனித பிம்பத்தை மறு உருவாக்கம் செய்து கொள்ள முனையும் கஸ்பருக்குத் துணையாக இந்தச் சென்னை சங்கமம் அமைந்துவிடக் கூடாது என்பதை நான்விரும்புகிறேன்.

இலக்கியமும் கலையும் சினிமா கவர்ச்சியிலும், அதிகாரத்தின் விரலசைவிலும், அரிதாரங்களினாலும் வெளிச்சம் பெறுவதில்லை. அப்படி விழக் கூடிய வெளிச்சம் தற்காலிகமானதுதான். தன் சுய நலங்களுக்காகஇலக்கியத்தையும் கலையையும் பயன்படுத்திக் கொள்பவர்களை காலத்தின் சுழல் தாட்சண்யமின்றி தூர எறிந்துவிடும்.

சுயவிளம்பரத்திற்காகவும், அரசியல் பாதுகாப்பிற்காகவும், குற்றச்சாட்டினை மறைப்பதற்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் கலையையும், இலக்கியத்தையும் பயன்படுத்துவதற்கு எதிராக இந்த ஆண்டுநடைபெறும் கவிதைச் சங்கமத்தில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை.

நான்புறக்கணிப்பதனால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் வரப்போவதில்லை; அதே சமயத்தில் எனது கவிதைகளுக்கான பிரசுர வாய்ப்புகள் குறையலாம் -எனினும் அது பற்றிய எந்தவிதமானவிசனமும் இல்லாமல் எனது எதிர்ப்பினை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்கிறேன்.

நன்றி.

வா.மணிகண்டன்.

 

அன்பார்ந்த நண்பர் மணிகண்டன் அவர்களே.... உங்களுக்கான வாய்ப்பு எப்படி குறைகிறது என்று பார்க்கலாம்.  சவுக்கு தளத்தில் கவிதைகள் பிரசுரிப்பதில்லை.  அந்த விதியை தளர்த்தி, உங்கள் கவிதைகளை சவுக்கு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது.  உங்கள் உள்ளத்து உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து, அனுப்புங்கள்.  உலகெங்கும் உள்ள நமது அன்பு உறவுகள் அதைப் படிப்பார்கள்.     சவுக்கால், உங்களது கவிதைகளுக்கு பணம் கொடுக்க இயலாத ஒரு நிலையில் உள்ளது.  அது ஒன்றுதான் குறை.  அதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால், சவுக்கு தளம் உங்களை அள்ளி எடுத்துக் கொள்ள காத்திருக்கிறது தோழரே.... 

 

Comments  

 
-2 #60 Thurvasar 2011-02-05 16:35
Quoting Puthiyavan Raj:
ஜெகத் கஸ்பர் மீது இன்னும் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவி ல்லை. எனவே சவுக்கு இந்த கவிஞர் மணிகண்டன் அவர்களை மானஸ்தர் என்றெல்லாம் புகழ்ந்தாலும், சவுக்கிற்கும், மணிகண்டனை புகழ்ந்து எழுதி இருக்கும் வாசகர்களுக்கும் ஒரு கேள்வி. சரி சந்தேக நிழல் படிந்த ஜெகத் கஸ்பர் நடத்தும் மையத்துடன் இணைந்து பணியாற்றுவதால் சங்கமத்தை புறக்கணித்து விட்டீர்கள். ஜெ. மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள ுடன் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு 5 வருடங்களில் 60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வித்தை தெரிந்தவர். எனவே ஊழல் ராணியான ஜெ. வின் கட்சிக்கு யாரும் வாக்களிக்க கூடாது என்று சவுக்கு சொல்வாரா?
Your cannot be accepted by a common man
Quote
 
 
-4 #59 Puthiyavan Raj 2011-01-24 21:03
ஜெகத் கஸ்பர் மீது இன்னும் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவி ல்லை. எனவே சவுக்கு இந்த கவிஞர் மணிகண்டன் அவர்களை மானஸ்தர் என்றெல்லாம் புகழ்ந்தாலும், சவுக்கிற்கும், மணிகண்டனை புகழ்ந்து எழுதி இருக்கும் வாசகர்களுக்கும் ஒரு கேள்வி. சரி சந்தேக நிழல் படிந்த ஜெகத் கஸ்பர் நடத்தும் மையத்துடன் இணைந்து பணியாற்றுவதால் சங்கமத்தை புறக்கணித்து விட்டீர்கள். ஜெ. மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள ுடன் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு 5 வருடங்களில் 60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வித்தை தெரிந்தவர். எனவே ஊழல் ராணியான ஜெ. வின் கட்சிக்கு யாரும் வாக்களிக்க கூடாது என்று சவுக்கு சொல்வாரா?
Quote
 
 
+1 #58 ABUMUBEEN 2011-01-17 01:24
well done keep it up we allways with you
Quote
 
 
+7 #57 அ.அன்பரசு 2011-01-16 10:37
நீ ஓர் சுயமரியாதையுடைய தமிழ்க்கவிஞன் என்பதை உணர்த்திவிட்டாய ். உன்னை பார்த்தாவது திருந்த வேண்டும் சில அடிவருடி கவிஞர்கள்.
பாராட்டுக்கள் கவிஞரே....
Quote
 
 
+5 #56 சிங்கம் 2011-01-15 08:10
வீரக்கவி மணிகண்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். முத்தமிழ் சங்கத்தின் முந்தய தலைமைப் புலவர் நக்கீரரை நினைவுபடுத்திவி ட்டார். தமிழ்கூறும் நல்லுலகம் உமக்கு துணை நிற்கும். உம்மைப்போல் "சென்னை சங்கமம்" நிகழ்ச்சியை புறக்கணித்த அனைத்து நல்லுள்ளங்களுக் கும் நன்றி, நன்றி
Quote
 
 
+1 #55 saambiraani 2011-01-14 21:44
Its a wise decision on the part of Manikandan... but the DMK family might not bother about it rather they would give all kinds of problem to this poet... what ever it is we should definitely appreciate this daring poet.
Quote
 
 
0 #54 sivaram 2011-01-14 11:32
Thanmana tamizhan ivane - vazthukal
Quote
 
 
+7 #53 SOMBU SUPRAMANI 2011-01-14 10:08
இந்த கவிஞர் எல்லா இணைய தளங்களுக்கும் இதே கடிதத்தை எழுதி பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டுள ்ளார் சவுக்கு மட்டுமே பிரசுரம் செய்துள்ளது.சவுக்கின் தைரியத்தையும் தன்னம்பிக்கையைய ும் பாராட்டுகின்ற அதே நேரத்தில்......
Quote
 
 
+1 #52 noor 2011-01-14 09:27
vairamuthu ponra vesigal mathiyil veeramikka tamil kavigan valga
Quote
 
 
-12 #51 Gladiator 2011-01-14 09:00
//http://www.luckylookonline .com/2011/01/blog-post_13.html//
இவன தெருபொருக்கி எழுத்தாளன்னு சொன்னதுல ஒரு தப்பும் இல்ல!.....................இவன் ஒரு டபரா வாயன்னு மறுபடியும் நிருபிசுட்டான்......
Quote
 
 
0 #50 sree 2011-01-14 05:46
vaazthukkal Manikandan!
Quote
 
 
+9 #49 ABDUL AZIZ 2011-01-14 02:03
வாழ்த்துக்கள் நண்பரே

உங்களுக்கு மட்டும் அல்ல சவுக்குவிர்க்கு ம் சேர்த்து பொருளாதார உதவி செய்ய காத்துக்கொண்டு வரிசையில் நிக்கும் லட்சக்கனக்கானவர ்களில் நானும் ஒருவன் .அவர்களைபோல் ( கருநாய் ) கோடி கோடியாக குடுக்கமுடியாவி ட்டாலும் எங்களால் முடிந்ததை செய்வோம் . அவர்கள் கொடுக்கும் கோடியில் ஒரு ரூபாய் கூட அவர்களுடைய உழைத்த காசு இருக்காது ஆனால் நாங்கள் தரும் ஒவ்வொரு காசிலும் எங்களுடைய உழைப்பு இருக்கும். அந்த கோடியை விட எங்கள் காசுக்கு மதிப்பு அதிகம் .....
Quote
 
 
+1 #48 kannappan 2011-01-14 01:20
அன்புக்குரிய கவிஞ்சரே.. உங்களின் நியாயமான புறக்கணிப்பு உங்களை மென்மேலும் நிமிர்வடைய செய்யும். நீவீர் நீடூழி வாழி - புகழோடு வாழி!!
நா. அ. கண்ணப்பன்
Quote
 
 
+9 #47 Thendral 2011-01-13 20:56
உண்மையான கவிஞன் உறுதியுடைய நெஞ்சோடும் நேர்மையோடும் இருக்க வேண்டும். கவிஞர் மணிகண்டன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.தன்மானக் கவிஞனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
Quote
 
 
+11 #46 v.ramasamy 2011-01-13 19:50
சென்னைச் சங்கமத்தில் 2008 ல் கலந்து கொண்டு கவிதை படித்தேன் .அது ஒரு மானக்கேடான சம்பவமாக இருந்தது .மிகவும் காக்க வைத்து அவமானப் படுத்தினார்கள் . கவிஞர் யு மா வாசுகி மேடையிலே அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார் .அதன்பின்பு சென்ற வருடம் நான் கலந்து கொள்ளவில்லை .இப்போது இனப் படுகொலை மற்றும் ஊழல் நடந்த பிறகு அன்பு நண்பர்களே இதில் கலந்து கொண்டு கேவலப் படாதீர்கள் .
Quote
 
 
+4 #45 mangoose 2011-01-13 19:37
ரயில்வே துறையில் நடக்கும் ஊழல்களை எழுத முடியுமா ?தொழில் சங்கம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை பற்றி எழுத முடியுமா ?அதை தோண்டினால் ஸ்பெக்ட்ரம் எல்லாம் சும்மா .....
Quote
 
 
+4 #44 தமிழ்2011 2011-01-13 19:11
தம்பி ஆட்டோ வரும். பார்த்து இருந்துக்கோ.
Quote
 
 
+2 #43 பாமரன் 2011-01-13 18:55
Quoting நிஜ கவிஞன்:
இதன் மூலம்

http://www.luckylookonline .com/2011/01/blog-post_13.html

அட அந்த luckylookonline ல யாரும் இப்ப சீந்துவாறிலை போலும். பின்னோட்டாம் கூட அட சும்மா ஒரு பேச்சுக்கு திட்டி கூட போடா மாட்டேன் என்கிறார்கள். பாவம் லக்கிலுக் . லக்கிலுக் இப்போ அன்லக்கிலுக்.
Quote
 
 
+1 #42 YK 2011-01-13 18:31
கவிஜருககு வாழ்த்துக்கள் . உங்கள் கவிதைகளை தாரளமாக சவுக்கில் வெளியிடலாம் . எங்கள் ஆதரவுக்கு எப்போதும் உண்டு . We can support in finacially also :-)
Quote
 
 
+5 #41 வைரமுத்து 2011-01-13 17:52
மணியான முகத்தோடு நீ பிறந்ததால் உனக்கு மணி கண்டன் என்று பெயர் வைத்தார்கள் உன் பெற்றோர். mony விஷயத்தில் உஷாராக இருந்ததால் வைரமுத்து என்று பெயர் வைத்தாள் கருவாச்சிக் கிழவி. மண்டையில் மசிறே இல்லாத ஒரு கருணாவுடன் கைகோர்.... கவிஞனே உன் வாழ்வில் மணி கிடைக்கும்.... ஊரை வளைத்துப் போட்டு சந்ததியைப் பெருக்கப் பார்.
Quote
 
 
-2 #40 eroderajesh 2011-01-13 17:34
பொங்கல் வந்த்ருச்சு ,இன்னும் இலவச வேட்டி,சேலை வரலை அதுல என்ன ஊழல் நடக்குது கவனிக
Quote
 
 
+1 #39 செல்லதேவன் 2011-01-13 17:16
கவிஞர் மணிகண்டனின் முடிவு வரவேற்கத்தக்கது ம், சரியானதும்கூட. ஒரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன். சங்கமம் நிகழ்ச்சியில் கவிதை வாசிக்க அனுமதி கேட்காமலே பலர் பெயரை இணைத்துள்ளனர். மேலும், கவிதை வாசிப்பவர்களுக் கு தொகை வழங்குவது குறித்த செய்தி இப்போதுதான் தெரியும். நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டுமல்லவா? சங்கமம் நிகழ்ச்சிக்கு அமைப்பாளர்கள், கூலிக்கு மாரடிப்பவர்கள். அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களை, அறிமுகமானவர்களை மட்டுமே சங்கமம் நிகழ்ச்சிக்கு கவிதை வாசிக்க தெரிவு செய்கின்றனர் என்பதுதான் உண்மை.
Quote
 
 
0 #38 Anand 2011-01-13 17:16
வாழ்த்துக்கள் கவிஞர் மணிகண்டன் அவர்களே !!! நீங்கள் தான் உண்மையான கவிஞர் !!!
Quote
 
 
0 #37 நிஜ கவிஞன் 2011-01-13 17:05
இதன் மூலம்

http://www.luckylookonline.com/2011/01/blog-post_13.html
Quote
 
 
+5 #36 Ravisundaram 2011-01-13 17:03
பின்னூட்டங்களின ் நீளத்தின் காரணமாக விடுபட்டு விட்ட மணிகண்டனுக்கான என் வினாக்கள்!! பராவாயில்லை..தாமதமாக விழித்துக் கொண்டீர்கள் என்று கொள்வோம் என்று நினைத்துக் கொள்வோம் என்றால் புறக்கணிப்புக்க ு நீங்கள் சொல்லும் காரணம் மிகவும் சாதாரணமாக உள்ளது. ஜெகத்கஸ்பர்தான் உமக்கு ஊழலின் உறைவிட‌மாக‌ தெரிகிறாரா? ப‌க்க‌த்தில் இருக்கும் த‌மிழ‌ர்த‌லைவ‌ர ும் அவ‌ர‌து புத‌ல்வியும் உம் க‌ண்ணில் எப்ப‌டி தெரிகிறார்க‌ள்.? க‌ண்ணை விடும் க‌னிமொழியின் தொலைப்பேசி உரையாட‌ல் உம‌து காதில் விழ‌வில்லையா? வோல்டாஸ் என்ன‌ க‌னிமொழி ஆர‌ம்பித்த‌ க‌ம்பெனியா?

இது போன்று அர‌சிய‌ல்வாதிக‌ ளின் துணையின்றி ஜெக‌த்க‌ஸ்ப‌ர் போன்ற‌ அல்ல‌கைக‌க‌ள் ச‌முதாய‌த்தில் ஜெயிக்குமா? அப்ப‌டியிருக்க‌ எய்த‌வ‌ர் இருக்க‌ அம்பை நோவ‌து கேலிக்குரிய‌து.
Quote
 
 
+9 #35 Ravisundaram 2011-01-13 17:01
பின்னூட்டங்களின ் நீளத்தின் காரணமாக விடுபட்டு விட்ட மணிகண்டனுக்கான என் வினாக்கள்!! இந்த முறை நீங்கள் சுயமரியாதை காத்தது பாராட்டுக்குரிய து.

ஆனால் கடந்த ஆண்டுவரை சென்று கவிதாமனி கனிமொழியுடன் இணைந்து கவிதையாற்றியது எதுடன் சேர்த்தி? நேற்றுவரை கனிமொழி உத்தமபுத்திரியா ?
மதுரையில் மூன்று பேர் எரியூட்டப்பட்டத ற்கு தன் தந்தையோ தமயனோ கொஞ்சம் கூட காரணமில்லை என்று அடித்து பேசினாரே? அப்போது நீங்கள் ஆப்பிரிக்காவில் இருந்தீர்களோ? முள்ளி வாய்க்காலில் தமிழர் புதைக்கப்பட்ட போது தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல மெளனம் காத்தாரே அது உமக்கு சரியாகப் படுகிறதா? அட..இனம் வேண்டாமய்யா..ஒரு மனிதன் என்கிற அளவில் கூட பதைபதைக்காமல் அந்த பெரும் மனித பேரழிவிற்கு துணை போன அந்த குடும்பத்தின் நிழலில் சென்ற ஆண்டும் கவி பாடினீர்களாமே அது சரியா? தமிழே தெரியாத ஒரு நார்வேகாரனும், பிரஞ்சுகாரனும், இங்கிலாந்துகாரன ும் இந்த துயரத்தை கண்டிக்கும் போது நீங்கள் கொஞ்சமும் சுரணையின்றி கவிபாடினீர்களாம ே..அதுசரியா?
Quote
 
 
-2 #34 NA.ERASAN 2011-01-13 16:07
Well done Mr.Manikandan
Quote
 
 
+8 #33 உறையாடு 2011-01-13 15:59
இது கவிஞர் சங்கர் ராம சுபரமணியன் face bookkil எழுதியது // * சங்கர ராமசுப்ரமணியம் பேஸ் புக்கில் எழுதியது *


இன்று வா.மணிகண்டன் என்ற கவிஞரிடமிருந்து வந்த மின்னஞ்சல் ஒன்று கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. சென்னை சங்கமத்தில் இந்த ஆண்டு அவர் கவிதை படிக்கப் போவதில்லையாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்புள்ள தமிழ் மையம் நடத்தும் சென்னை சங்கமத்தில் கவிதை வாசிப்பதை அவர் இழுக்காக கருதுகிறாராம்.. இவர் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால ் பேரவலம் நடந்த பின்னும் கவிதை வாசிக்கச் சென்றவர்.

Shankar Ram சென்னை சங்கமம் தொடங்கிய காலத்திலிருந்து கலாப்ரியா தலைமையில் கவிதைக்காவடி தூக்கியவர்களில் ஒருவர் இந்த மணிகண்டன் ...இந்த திடீர் தார்மீக கொசுக்கடிகளைத் தாங்கமுடியவேயில ்லைப்பா...

Shankar Ram இந்த ஆண்டு கடைசி ஆண்டு....சங்கமம் கவிதைக்கு ஐயாயிரம் என்று பேச்சு... நூறு பேர் சம்மதித்துவிட்ட ார்கள்....போங்க போங்க ....பேரைச் சேத்துக்கோங்க...ஓடு ஓடு....run wild என்று கவிதை எழுதிய கலாப்ரியாவும் ஓடுகிறார்...ஓடு...ஓடு//
Quote
 
 
+1 #32 Ravisundaram 2011-01-13 15:25
கவிஞர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். உண்மையில் உங்கள் கவிதைகளை படித்ததில்லை. ஆனால் உங்களின் சுயமரியாதை பாராட்டுகுரியது . அவ்வளவாக புகழ் அடையாத போதிலும் பெருமளவு பொருள் ஈட்டாத போதிலும் நேர்மையாகத்தான் நடப்பேன் என்று நீங்கள் காட்டும் தீவிரம் பாராட்டுகுரியது . இன்றைய தமிழனுக்கு இதுவே முக்கியமான தேவையாகும்.
பல புகழ் மாலைகளை பெற்றும் பெரும் பணம் ஈட்டியும் இன்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த குடும்பத்தின் முன் கை கட்டி(!!) வாய் பொத்தி இருக்கும் பல கவிஞர்கள் முன் நீங்கள் வித்தியாசப் படுகிறீர்கள். உங்கள் கவிதைகளை சவுக்கின் மூலம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
Quote
 
 
-3 #31 ungal nanban 2011-01-13 15:11
intru mudhan naan va. manikandan - udaya kavithaikku rasikan aahivitten.
Quote
 
 
-2 #30 Prabhuv 2011-01-13 15:08
dear manikandan sir,

hats off u..we r with u...
Quote
 
 
+2 #29 பாரதிக்குஞ்சு 2011-01-13 15:04
துணிவுடன் தமிழனின் மான உணர்வை வெளிப்படுத்தி துதிபாட மறுத்த உடன்பிறப்பே வணங்குகிறேன். சாக்கடைகள் கூட்டும் சங்கமத்தில் சங்கமிக்க மாட்டேனென்று நழுவலின்றி தைரியமாக கருத்துக்கூறும் உங்கள் குரல் சங்கமத்தை கடந்து நீண்ட தொலைவுக்கு சென்றடையும், என்றென்றும் தமிழன்னை உங்களுடன் துணையிருப்பாள், நாமும் கூட, வாழ்த்துக்கள்,
Quote
 
 
+1 #28 ஊர்க்குருவி 2011-01-13 14:52
அன்புடன் சகோதரன் மணிகண்டன் அவர்களுக்கும் கவிஞர் மணிகண்டனை தொடர்வுபடுத்திய சவுக்கு இணையத்திற்கும் வணக்கம், நானும் இலக்கியத்தில் குறிப்பாக கவிதை எழுதுவது படிப்பதில் ஆர்வமுள்ள பிறப்பு, உங்கள் ஆதங்கமும் தன்மானமும் புரிகிறது ,நல்ல கவிஞர்களுக்கு அது இயல்பானதும் கூட உங்கள் கவிதைகளை சவுக்கு இணையத்தில் பிரசுரித்தால் ரசித்துப்படிக்க என்னைப்போல் பல ஆயிரம் ரசிகர்களுண்டு, நீங்கள் அனுமதித்தால் சவுக்கிலிருந்து பிரதிபண்ணி நாங்களும் ஐரோப்பாவில் ஒருசில இணையத்தளங்களில் நிச்சியம் பிரசுரிக்கச்செய ்யலாம் தன்மானமிருந்தால ் தோல்வி ஏது சகோதரா??
Quote
 
 
-1 #27 thaya 2011-01-13 14:35
nallathu thollar nalla mudivu-thaya from tamil eelama
Quote
 
 
0 #26 Hari 2011-01-13 13:32
GOOD LUCK MR MANIKANDAN,WE RESPECT YOU AND WE SALUTE YOU,GOD BLESS YOU.
Quote
 
 
-1 #25 Danbury 2011-01-13 13:20
Well done Mr. Manilandan!!!!
Quote
 
 
0 #24 kmsuresh21 2011-01-13 12:58
வாழ்த்துக்கள்
Quote
 
 
0 #23 A.saravanan 2011-01-13 12:38
கவிஞன் மனசு இதுதான்,ஆண்டவன் கொடுத்த திறமை புலமை. அது அநியாயத்தை கண்டு பொங்கவேண்டும் அல்லது விலகவேண்டும்.ஆதாயத்துக்காக புலமையை அடகு வைத்த மானம்கெட்ட மற்றவர்களைப்போல ் இல்லாமல், மறுத்த மணி அவர்களின் சிறந்த கவிதை அவரது மனம்தான். அது என்றும் தமிழர்கள் நெஞ்சில் வாழும் நன்றி மணி அவர்களே
Quote
 
 
-3 #22 RajanRajan 2011-01-13 12:37
we are expecting more updates from you, and your focus should be in all direction, we know about Mr.karunanithi & Family through savukku, and there are many peoples which you need to show to puplic like us.
Quote
 
 
-7 #21 DMK 2011-01-13 12:35
Please put some worth reading news.
Quote
 
 
0 #20 அப்துல் ரஹ்மான் 2011-01-13 12:26
மன்னிக்கவும். சவுக்கிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன ், ஆனால், மறந்து விட்டேன். மானஸ்தன் திரு. வா. மணிகண்டன் அவர்களின் புகைப்படத்தை சவுக்கு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Quote
 
 
0 #19 selvaa 2011-01-13 12:24
மணிகண்டன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
கவிதை எங்களுக்கு புரியா புதிர்.
அனால் மனிதர்களின் உண்மையான மனதை மதிக்க தவறுவது இல்லை..


உணர்வுடன்.
செல்வா
Quote
 
 
-2 #18 Arasiyal Analyzer 2011-01-13 12:24
Anna Salai muluvathum ulla "Chennai Sangamam" vilamparankalil "Tamil Maiyam" ullathu.

Please refer the website: http://chennaisangamam.com/ (Tamil Maiyam) logo is available.

What are you going to do?
Quote
Quote
 
 
-1 #17 JP 2011-01-13 12:18
WELL DONE MANIKANDAN
Quote
 
 
-1 #16 Raj 2011-01-13 12:16
நண்பரே! பின்பக்கத்தில் கருப்பு வன்ணமும் எழுத்து மஞ்சள் நிறத்திலும் இருப்பதால் படிக்கும்பொழுது மிகவும் சிரமமாக உள்ளது. கண்களை உறுத்தாதவண்ணம் எழுத்துக்களின் நிறத்தையோ அல்லது பின்பகுதியின் வண்ணத்தையோ மாற்றி அமைக்கவும்...

அன்புடன்
ராஜ்
Quote
 
 
0 #15 அப்துல் ரஹ்மான் 2011-01-13 12:13
வா......வ் மணிகண்டன் அவர்களே! மனம் மகிழ்ந்து, மனம் நிறைந்து, மனதார பாராட்டுகிறேன். சவுக்கைவிட நீங்கள் மிகுந்த ரோசக்காரர். தன்மானத்தோடும் மரியாதையோடும் வாழ்பவர்கள் இன்னும் இந்த பூமியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள். வெறுமனே "பாராட்டுகள்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உபயோகிக்க எனக்கு பிடிக்கவில்லை.
Quote
 
 
0 #14 முத்து 2011-01-13 11:39
கவிஞரே நீர்தான் எமது சபையில் இனி கவிப்பேரரசு..
Quote
 
 
+1 #13 பாமரன் 2011-01-13 11:19
வா மணிகண்டன் . நீங்கள் உண்மையில் ஒரு தன்மானமிக்க ஒரு கவிஞன். கவிஞர்களுக்கு எல்லாம் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டா க விளங்குகிறீர்கள ். வாழ்த்துக்கள்.
Quote
 
 
0 #12 s. baskar 2011-01-13 11:00
chennai sangamam enbathe kanimozin arasial pravesathirkaga munniruthapadug irar jagath kasper nirainth yogyan pol pesuvar aanal inathrogathai seithavar enbathu nndariyu enevethan avar kalainger kudumbathudan nerukamai irrukirar
Quote
 
 
0 #11 r.kannan 2011-01-13 10:55
நன்றி சவுக்கு திரு மணிகண்டனுக்கு மரியாதையை கலந்த வணக்கங்கள் .சுயமரியாதை எல்லோருக்கும் உண்டு இருப்பினும் கவிங்கர்களுக்கு மிக அதிகம் ,சுய மரியாதையை இல்லாதவன் கவிஞன் அல்ல .காசுக்காக விற்கும் வேசி .தங்களுடைய செயலுக்கு வணக்கங்கள்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 49 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2164
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week24536
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month237355
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759474