|
தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளைப் பற்றி சவுக்கில் படித்திருக்கிறீர்கள். ராசாத்தி அம்மாளின் மற்றொரு பரிமாணம் உங்களுக்குத் தெரியுமா ? தெரியாது. அதுதான் ராசாத்தி அம்மாள் இலக்கியவாதி என்பது.
நேற்று, சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக, தமிழ்ச்சங்கமத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடந்தது. முதல் நிகழ்ச்சியாக ரபீந்திரநாத் தாகூரின் படைப்புகளை வெளியிடும் விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க, இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கியவாதியும், தமிழ் உணர்வாளருமான ராசாத்தி அம்மாளை விட பொறுத்தமானவர் யார் ? சில தலைக்கனம் பிடித்த தறுக்கர்கள், வில்லங்கம் செய்யும் விபிடணர்கள், பொறாமை பிடித்த பொச்சரிப்புக் காரர்கள், ராசாத்தி அம்மாள் எப்படி தமிழுணர்வாளர் என்று கேட்கக் கூடும்.

நீரா ராடியா என்ற மாதரசி, ராசாத்தி அம்மாளிடம் தொலைபேசியில் உரையாடும் போது கூட, அவரிடம் ஆங்கிலத்தில் பேச விருப்பம் இல்லாததால், ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசி விட்டு, பேச்சையே முடித்துக் கொண்டு, அவர் ஆடிட்டர் ரத்தினத்திடம் தொலைபேசியை ஒப்படைத்தவர் ராசாத்தி என்பதை அந்த தறுக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு காரணத்தை சொல்கிறேன். கனிமொழியின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் என்ன ? “கருவறை வாசனை“ அந்தக் கருவறைக்கு சொந்தக்காரரான ராசாத்தி அம்மாளை விட இலக்கிய நிகழ்ச்சியை தொடங்கிவைக்க வேறு யாருக்கு தகுதி இருக்கிறது ?

அந்த அடிப்படையில் தான் ராசாத்தி அம்மாள் நேற்றைய நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் வரவேற்புரை ஆற்றிய தமிழ்ச்சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் (??????) இளையபாரதியின் ஜால்ரா சத்தம் காதைப் பிளந்தது. எடுத்தவுடன், கருணாநிதி இருக்கும் திசையை நோக்கி ஒரு கும்பிடு போட்டு விட்டு நிகழ்ச்சியை தொடங்கினார். அடுத்ததாக, போட்டாரே பாருங்கள் ஒரு போடு.. தொட்டதெல்லாம் துலங்கும் கரத்துக்குச் சொந்தக்காரரான எங்கள் சின்னம்மா (கனிமொழியாம்) இந்த நிகழ்ச்சியை நடத்துவதாலேயே இந்நிகழ்ச்சி பெருமை அடைகிறது என்றார். அதற்கு மேல தாங்க முடியவில்லை.

இந்தக் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல், பொருளாதார வல்லுனர் அமர்த்யா சென்னின் மகள் ஆந்த்ரா தேவரேன் வேறு தாகூரைப் பற்றி பேச வந்திருந்தார். நல்ல வேளை அவருக்கு தமிழ் தெரியாததால், திரு திருவென்று விழித்தக் கொண்டு அமர்ந்திருந்தார்.

அடுத்து ஒரு மகிழ்ச்சிகரமான தகவலை சவுக்கு உங்களுக்குத் தர இருக்கிறது. இலக்கியவாதி ராசாத்தி அம்மாளின் மற்றொரு பரிமாணம் அது. தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளுக்கு இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட், அகமதாபாத், இந்தியன் பிசினெஸ் ஸ்கூல், ஐதராபாத், ஹார்வார்ட் பல்கலைகழகம், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகிய இடங்களிலிருந்து, ராசாத்தி அம்மாளுக்கு, கெஸ்ட் லெக்சர் கொடுக்க அழைப்பு வந்திருக்கிறது. கெஸ்ட் லெக்சர் என்றதும் லாலா கடை மிக்சர் என்று எளிதாக எண்ணி விடாதீர்கள். மிக மிக பெருமையான விஷயம் அது.

தமிழையும் தன்மானத்தையும் கருணாநிதியின் காலடியில் அடகு வைத்த ஈரோடு தமிழன்பன் மற்றும், அப்துல் ரகுமான்
எதற்காக இந்த அழைப்பு ? அப்படி என்ன செய்து விட்டார் ராசாத்தி அம்மாள் என்ற கேள்விகளெல்லாம் உங்கள் மனதில் நிழலாடும். இருங்கள் சொல்கிறேன்.
நம்ப தொழில் அதிபர் அக்டோபர் 2004ல் ஒரு நிறுவனத்தை தொடங்குகிறார்கள். அந்த நிறுவனத்தின் பெயர் வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ். கம்பேனி தொடங்கும் போது, சொல்லும் போதே, அழுகையா வருது சார். வெறும் ஒரு லட்ச ரூபாய் சார். ஒரு லட்சம் ரூபாய். இவ்ளோ பெரிய தொழில் அதிபர் வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுல ஒரு நிறுவனம் தொடங்கறாங்கன்னா பாருங்க சார்.



அதுவும், அவங்க வீட்டுக் காரர், தொழில் தொடங்க அனுமதி தொடங்கல போலிருக்கு. அதனால, வீட்டுக்காரர் பேரை போடாம, முத்துக்குமாரசாமியின் மகள் னு பேரை போட்டு தொழில் தொடங்கியிருக்காங்கன்னா எவ்வளவு கஷ்டப் பட்ருக்காங்கன்னு நீங்களே சொல்லுங்க சார். நீங்களே சொல்லுங்க. ஒரு பெண் தொழில் அதிபர் ஆவதற்கு, இந்த சமூகம் எவ்வளவு நெருக்கடிகளை கொடுக்கிறது பார்த்தீர்களா ?


ராசாத்தி தொழில் தொடங்கும் போது இவரோடு சேர்ந்து மூன்று பேர் பங்குதாரர்கள். ரவிச்சந்திரன், கவிபிரசாத், மற்றும் செல்வமணி. ஆனால், தொழில் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள், அதாவது திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மற்ற மூவரும், ராசாத்தி அம்மாளை தனியே தவிக்க விட்டு விட்டு, ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார்கள் சார். போய் விட்டார்கள். அதிகப் பிரசங்கித் தனமாக, தன்னுடைய மகளை பார்ட்னராக சேர்த்துக் கொள்வதற்காக, இவர்கள் மூவரையும் அடித்துத் துரத்தி விட்டார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

அவர்கள் மூவரும் ராஜினாமா செய்து விட்டுப் போனதும், வேறு வழியின்றி, நமக்கு யாருமே ஆதரவு இல்லையென்று தன்னுடைய மகளையே பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறார் சார். யாருமே ஆதரவு தராத போது, பெற்ற மகள் விட்டு போய் விடுவாரா என்ன ?

இரண்டு பேரும் சேர்ந்து, தொழிலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். அப்படி உழைத்து, உழைத்து, உழைத்து, உழைத்து இன்றைக்கு வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸின் நிதி நிலை என்ன தெரியுமா ?
முதலீடு 5 கோடி
கையிருப்பு 5 கோடியே 74 லட்சம்
வசூலிக்கப் பட்ட கடன் 1 கோடியே 4 லட்சம்
வசூலிக்கப் படாத கடன் 6 கோடியே 70 லட்சம்
மொத்த சொத்து 16 கோடியே ஐந்து லட்சம்
வங்கி கையிருப்பு 1 கோடியே எண்பத்தியிரண்டு லட்சம்
இதர சொத்துக்கள் 1 கோடியே 79 லட்சம்


மொத்த செத்து 16 கோடி என்று குறிப்பிட்டிருந்தாலும், உதகமண்டலத்தில் வெஸ்ட் கேட் பெயரில் 500 கோடிக்கு வாங்கியுள்ள வின்ட்சர் டீ எஸ்டேட் இதில் சேர்க்கப் படவில்லை.
ஆனால், லாஜிஸ்டிக்ஸ் தொழிலில் இருப்பவர்களை விசாரித்தால், இந்த நிறுவனம் எந்த விதமான தொழிலும் செய்யவில்லை, இது ஒரு லெட்டர் பேட் கம்பேனி என்று கூறுகிறார்கள்.
பார்த்தீர்களா, நியாயமான தொழில் செய்யும் போது கூட வெளிப்படையாக செய்ய முடியாத ஒரு நிலைமை. என்ன கொடுமை சரவணன் இது ?
சவுக்கு வாசகர்கள் யாராவது, இது ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணம் என்று சொன்னீர்கள் என்றால், சவுக்குக்கு கெட்ட கோபம் வந்து விடும் சொல்லி விட்டேன்.
ராசாத்தி அம்மாள் இவ்வளவு பெரிய தொழில் அதிபராக இருந்தாலும், இன்னும் அவருக்கு சொந்தமாக ஒரு ஈமெயில் ஐடி கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவரின் ஆடிட்டர் ரத்தினத்தின் srirathnam@gmail.com என்ற ஈமெயில் ஐடியைத் தான் ஆவணங்களில் கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஏன் மேடம் ராசாத்தி மேடம். இவ்ளோ பெரிய தொழில் அதிபரா இருக்கீங்களே… ஒரு ஈமெயில் ஐடி சொந்தமாக ஓபன் பண்ணக் கூடாதா ?
ராசாத்தி அம்மாள் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸிலும் விரிவுரை ஆற்றி விட்டு வந்தவுடன், சவுக்கு வாசகர்கள் சார்பில் நாம் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ன ?

மேடம் உங்க கழுத்துல இருக்கற செயின் நல்லா இருக்கு மேடம். புதுசா ஸ்பெக்ட்ரம் செயின்னு ஒன்னு வந்துருக்காமே, அதுவா மேடம் அது
தொழில் அதிபர்களை மதிக்க வேண்டும் அய்யா. மதிக்க வேண்டும். |
Comments
Quoting ramarajan:
தலை சுத்துது. இன்ஃனொரு வ்லை நயில் பா ர் த் தென் . முரசொலி மாரனின் தாயர்ர் பெயர் மட்டும் தென் பாராலுமன்ரத்தில ் போட்டு இருக்கிரார்கல். மு க வின் ப்ராசக்த் வச்னத்தில் வரும் பெஙல் சமாசாரம் இவர் குடும்ப விவகாரம் தான். மு க் வின் இரன்டு சகொதரிகலும் கோவில்க்லிகலில் செய்த் சே வை மிக பெரிது. அதனல இவ்ர் பெரிய ஆல் ஆனர.
PIRAN MANAI NOKKA PERANMAI VENDUM....... ithu valluvam.....
RAASATHI..... YARODA PON DATTI... ?
SARI... ORU MAVATTA THALAI VAR VEETLA SAPPIDA POITTU... KARUNANITHI AVAN PONDATIYA KAIYODA KOOOTTTI VANTHUTANAMAY.... SAVUKKU PLEASE ATHU YARUNU... KONJAM SOLLUNGALAYN......
count down starts from now!
Nalla Kudumbam Oru Palkalai Kalagam Endru Soll Anaal ???
Nalla Kudumbam Palla Pallai Pudungam Kalagam
how can i key-in thamil in this site for comments. pls help
'Desi Wikileaks'
If they continue again, Pancha Boothangal will be owned by Family members of Karunanidhi... We will be paying rent to use Air,Water,Land, Sky,Fire to their family..Edhan Kali yugam pola...Sleeping Police, Active Rowdies, Onion Raitha is expensive than Chicken Biriyani Savuku....Sabhaaa, Mudiyala..
our people should take good decision and TRY to save tamilnadu from D.M.K Corruption PARTY D - DONKEY,M- MONKEY K - kARUNANITHI
he developed a BLACK MUMBA in Tamil Nadu. cation !!! Just for his family he killed two hundred thousand Tamil brothers and sisters in Elam ( The real Tamil Nadu ). For his Son he killed Krittinan. If he comes to power again forget Tamil Nadu is ours. Then it belongs to him.
CHE Mohamad Ali
Karunanidhi kudumbama, enaku enamo sandhegama iruku, edhu DMK employees ellarukum share iruku, adhaan avaraey soluvar katchi oru kudumbam nu, pls don't take it in second meaning
Ada pavi karunanithi atchiyila atleast unnalae dairiyama karunanithiku etira votu poduvenu solla mudiyudhu,ana nee yaruku votu podaporennu solriyoe avanga atchiku vanda solra un vayu vettiduvanga.nalla yosichu boothu pakkam poooo
Because we, people, are having very soft nature, these vultures are dare to eat out flesh. We must have Bharathi's braveness in our heart and fight these vultures.
I think Karunanidhi is going to give the CM post to Kanimozhi and Party leadership to the 'Godmother' Rajathi instead to Stalin and Alagiri.
Special thanks to Savukku for being bold like Bharathi in bringing true news to common people. Savukku, you will get all the blessings from our freedom fighters and great leaders.
சவுக்கு செய்யும் இந்த தொண்டினை நான் உளமார பாராட்டி நன்றி கூறிக்கொள்கிறேன ்.
இதற்கு கைமாறாக, வரப்போகும் சட்ட மன்ற தேர்தலின் போது, நானும் என் குடும்பத்தினர் நால்வரும், தவறாமல் ஒட்டுசாவடிக்குச ் சென்று, எங்கள் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணியின், முக்கிய எதிரணிக்கு எங்கள் வாக்குகளை இட்டு, தமிழக மற்றும் இந்திய ஜனநாயகத்தை, காப்பாற்றுவோம் என சவுக்கிற்கு உறுதி அளிக்கிறேன்.
இவண்,
கண்பத்
பி.கு:சவுக்கு செய்வது ஒரு சிறந்த தேச சேவை என கருதும் அனைத்து நண்பர்களும் ,மேற்கண்ட உறுதி மொழியை எடுத்துக்கொள்ளு மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிற ேன்.நன்றி.
muthal manaivi uyurudan irrukkum poluthu irandavathu tirumanam seithal avarkalukku ration card kidaikkathu endru padithathaka gnabagam... Ippo rasathi ammavirku ration card irukiratha illaiya... Ration card ah than ellathirkume athatchiya ketkirarkal... Athanal ketkiren... Ivarkal business thodankum poluthu ration card katirukkanum allava????
அவர் என்ன சொல்ல போகிறார். அந்த அம்மா ஒரு நாடார் வீட்டு பொண்ணு இந்த அம்மா அந்த நாடார் வீட்டு பொண்ணு. அவங்க ரெண்டு பெரும் சேர்ந்து என்னமோ பண்ணறாங்க உங்களுக்கு என்ன
1. I am the CM's thunaivi...
2. My daugter is CM's daughter....
3. I am CM's wife....
4. The CM is my husband....
5. I am a business woman....
6. I am a poet.....
Come on readers... complete the list please
எனக்கொண்ணுமே புரியல, 1) பாராட்டு விழான்னா, நாயகன் மூதேவி கருணாநிதிதான். பக்கவாத்தியம் குடும்பமே இல்லாத குடும்பம் நடத்ததெரியாத படுக்கையே குறியான கமலஹாசன், ஒப்பாரி வைரமுத்து, கூலி கம்மனாட்டி வாலி, கன்னட தந்திரம் ரஜனி, இன்னும் சில சினிமா கூத்தாடிகள் சினிமா பாட்டு புனைவோர்,,,, 2), கவியரங்க்கென்று வந்தாலும் மூதேவி முன்னிலை,, ஒன்றுமில்லாத கனிமொழி , ஒப்பாரி வைரமுத்து ஓலம்பாடி வாலி ,மற்றும் சினிமா பாவாடைகள் நா முத்துக்குமார் ,பா விஜய்,,,, 3), நடனம் நாட்டியம் என்று வந்தால் ,செல்வியின் மகள் அழகீரி மகள், குடும்ப கூட்டம் மட்டும், 4) கடசியா இப்ப பாத்தா ஒண்ணும் தெரியாத ஒரு மண் ராஜாத்தி /கனிமொழி முன்னிலையில், புதுவை தமிழன்பன் அப்துல் ரஹுமான் அவர்களை வாழ்த்த வந்த கோழைகள், கலைக்குள் ஏனிந்த மூதேவிகளின் தலையீடு, அரசியலையும் ஸ்பெக்ரத்தையும் தின்றது காணாதென்று தொடருது இந்தக்கூட்டம்,
எனக்கு தெரிந்து ராஜாத்தி அம்மாளின் இந்த திடீர் பேராசைக்கு காரணம் யார் என்று யோசிக்க வேண்டும். 2002க்கு பிறகுதான் இந்த குடும்பம் துணிந்து வெளியே வந்து சொத்து சேர்க்க ஆரம்பித்தது. மேலும் சொல்றேன்.
RSS feed for comments to this post