முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
சவுக்கின் குடியரசு தின விருதுகள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 12
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 26 ஜனவரி 2011 00:53

ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழாவின் போது, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கப் படுவது வழக்கம். இந்தப் பதக்கங்கள், அதிகாரிகளின் சட்டையில் மாட்டிக் கொள்வதை விட, வேறு எந்தப் பயனையும் அளிப்பதில்லை என்று பல்வேறு உயர்அதிகாரிகள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

 

அதனால், கொடுக்கும் பதக்கத்திற்கு பதிலாக, அவரவர் தேவைகளுக்கேற்ப, அத்தியாவசியமாக பொருட்களையே சுதந்திர தின விருதுகளாக சிறந்த அதிகாரிகளுக்கு வழங்கலாம் என்று சவுக்கு தீர்மானித்து, அவ்வாறே விருதுகளை அறிவிக்கிறது.

 

முதல் விருது, வேற யார்… ? நம்ப ஜாபர் சேட் தான்.

 jaffer

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டு வருகிறார். ஒவ்வொரு போனாக ஆயிரக்கணக்கான போன்களை ஒட்டுக் கேட்டு கேட்டுக் கொண்டிருந்தால் காது என்ன ஆகும் ? அது ஐபிஎஸ் படித்த காதாக இருந்தாலும், காது காதுதானே ? இவ்வாறு தொடர்ச்சியாக ஒட்டுக் கேட்டதன் விளைவாக, ஜாபருக்கு காது மந்ததமாக ஆகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

 

hearingAid

அதனால் இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் விருதாக, ஜாபருக்கு, காது கேட்கும் கருவி ஒன்று குடியரசு நாளை முன்னிட்டு வழங்கப் படுகிறது.

 

இரண்டாவது விருது. லத்திக்கா சரண்.

 

லத்திக்கா தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி. 

 letika_1

வழக்கமாக காவல்துறை இயக்குநராக இருப்பவர்கள் காவல்துறை அதிகாரியைப் போல நடந்து கொள்வார்கள். ஆனால், லத்திக்கா சரண், அறிக்கை நாயகியாக மாறி விட்டிருக்கிறார். அரசியல் வாதியைப் போல, ஏதாவது விவகாரம் என்றால் உடனே அறிக்கை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். செங்கல்பட்டு அகதிகள் முகாமில், காவல்துறை அதிகாரி என்ற ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் ப்ரேம் ஆனந்த் சின்ஹா அகதிகளை மிருகத்தனமாக தாக்கப் பட்டார்கள் என்ற செய்தி வந்த போது, தடியடியே நடக்கவில்லை என்ற அரசியல்வாதி போல பத்திரிக்கைகளுக்கு அறிக்கை அளித்தார். சமீபத்தில், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் இயக்கத்தினர் நடத்திய சாலை மறியலின் போது, காவல்துறையினர் அவர்களை மிருகத்தனமாக தாக்கினர். இத்தருணத்தின் போதும், அறிக்கை நாயகி, தடியடியே நடக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

 2GB-Spy-Camera-USB-Pen-Hidden-Camcorder-DVR-Video

அதனால் மேலும் பல்வேறு அறிக்கைகள் எழுதும் வகையில், அறிக்கை நாயகி லத்திக்கா சரணுக்கு ஒரு பேனா பரிசாக அளிக்கப் படுகிறது.

 

லத்திகா,

இது உன் பேனா…

அதை என் பேனா என்பேனா ?

உன் முன்னால் வேற

டிஜிபி நிற்பானா ?

நின்ற பிறகு

சென்னையில் அவன் இருப்பானா ?

இருந்தாலும் அவனை நான்

விடுவேனா ?

உனக்கே உரித்தான

ரகசிய நிதியை நான்

வேறு யாருக்கும் தருவேனா ?

தந்தால் அது சரிதானா ?

 

லத்திக்காவின் பதவியில் ஒரு சிறப்பு இருக்கிறது. தன்னை விட பணியில் மூத்தவர்களை ஓரங்கட்டி விட்டு, இந்தப் பதவியை பிடித்திருக்கிறார். அதனால் அவருக்கு ஒரு இலவச கவிதை.

  

அடுத்து ராதாகிருஷ்ணன் என்ற பிச்சை நாயுடு.

 radhakrishnan

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி இவர். இவரின் அண்ணன் தம்பிகள் இருவரும் சேர்ந்து பிச்சை நாயுடு பெயரை சொல்லிக் கொண்டு, தமிழகம் முழுக்க கட்டைப் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.   தமிழகத்தின் தென் மாவட்டத்தில் தனது தெய்வ பக்தியை வெளிப்படுத்தும் வகையில், ஒரு கோயில் வேறு கட்டி வருகிறார்.   அவரது பக்தி நியாயமானதே. அந்த நியாயமான பக்தியை அவரது சொந்தக் காசில் அல்லவா வெளிப்படுத்த வேண்டும்.   ஆனால் சொந்தக் காசில் வெளிப்படுத்த மாட்டார். அதனால் தானே அய்யா அவர் பிச்சை நாயுடு..

 

தமிழகத்தின் முக்கிய காவல்நிலையங்களில் நிலம் தொடர்பான தகராறுகள் எங்கெங்கேல்லாம் இருக்கிறதோ, அங்கே பிச்சை நாயுடுவின் சகோதரர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். அவர்கள் செல்லும் காவல்நிலையத்துக்கு பிச்சை நாயுடுவே தொலைபேசியில் பேசி, தேவையான உதவிகளை செய்து வருகிறார். வசூல் வேட்டையிலும் உதவுகிறார். மேலும், தற்போது, ப்ளஸ் டூவில், ஒழுங்காக படிக்காமல், திருட்டுத் தனமாக அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெற்று, பொறியியல் முடித்த பிச்சை நாயுடுவின் மகன் சந்தீப்புக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காக வேறு கட்டைப் பஞ்சாயத்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 01_00031

ஆகையால் இவ்வளவு சிறப்பாக கட்டைப் பஞ்சாயத்து செய்யும், ராதாகிருஷ்ணனுக்கு, இந்த ஆண்டு குடியரசு தின விருதாக, ஒரு கட்டை வழங்கப் படுகிறது.

 

அடுத்த விருது, ஆன்டெனா தலையர் என்று அன்போடு அழைக்கப் படும் சங்கர் ஜிவால்.

 
jiwal1

இந்த சங்கர் ஜிவால், தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் மீது, பொய் வழக்குகள் போட்டு, அவர்களை வதைப்பதில் மிகச் சமர்த்தர்.   செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாம்களில் உள்ள அகதிகளை வெளியில் விடாமல், அவர்களை வெளியே விட்டால், பெரும் கலவரம் நடக்கும் என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி, நீதிமன்ற பிணையில் வந்த பின்னும் அவர்களை முகாம் என்னும் சிறையில் அடைத்து வதைத்து வருபவர்.

 

பதவி உயர்வு வந்த பின்னும், வேறு பணியிடத்திற்கு போகாமல், உளவுத் துறையிலேயே தொடர்ந்து ஜாபர் சேட்டின் ஒட்டுக் கேட்புப் பணிகளுக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து வருபவர்.

 

அரசு ஒட்டுக் கேட்டால், போதுமான அளவில் சிறப்பாக ஒட்டுக் கேட்க முடியாது என்ற காரணத்தால், சொந்தமாக ஒரு ஒட்டுக் கேட்பு நிறுவனத்தையே தொடங்கியவர்.

 

மேலும், தன் தலையிலேயே, ஒட்டுக் கேட்பதற்கான அனைத்து ஆன்டென்னாக்களையும் வைத்துக் கொண்டு, ஒரு நடமாடும் ஒட்டுக் கேட்பு நிலையமாக திகழ்பவர்.

 

helmet

இவ்வாறு அவர் வெளிப்படையாக இருப்பதால், மரத்தில் உள்ள காகங்கள் மற்றும் பறவைகள் எச்சமிட்டோ, காகங்கள் செத்த எலியை இவர் தலை மீது போட்டோ, இவரின் ஆன்டென்னாக்களை சேதம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அதை தடுக்கும் வண்ணம், இந்த ஆண்டின் குடியரசு தின விருதாக, இவருக்கு ஒரு ஹெல்மெட் வழங்கப் படுகிறது.

 

அடுத்த விருது பெறுபவர் மாலதி.

 Malathi_4

கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் உள்துறைச் செயலாளராகவும், பிறகு தலைமைச் செயலாளராகவும் இருப்பவர். வழக்கமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே குடியரசு தின விருதுகள் வழங்கப் படும். ஆனால், நமது வீட்டில் சின்னக் குழந்தைகள் சொன்ன பேச்சை கேட்டால் நாம் பரிசு கொடுப்பதில்லையா ? அது போலத் தான், விதிவிலக்கு அளித்து, ஐஏஎஸ் அதிகாரியான மாலதிக்கு இந்த முறை குடியரசு தின விருது.

 

உள்துறை செயலாளராக இருந்த போதே, ஜாபர் சொன்ன பேச்சை தட்டாதவர். ஜாபர் செய்யும் சட்டவிரோத ஒட்டுக் கேட்பை கண்டு கொள்ளாமல் ஜாபருக்கு ஒத்து ஊதி வருபவர். ஜாபர் செய்யும் போலி என்கவுன்டர் கொலைகளை, ஜாபரை விட அதிகமாக நியாயப் படுத்துபவர்.   ஜாபர் என்ன சொன்னாலும் கேட்கும் மாலதி மிக மிக நல்ல பிள்ளையாய் இருப்பதால், சொல் பேச்சு கேட்கும் மாலதியின் நற்குணத்தை பாராட்டி மாலதிக்கு குடியரசு தின விருதாக ஒரு டெட்டி பேர் பொம்மை பரிசு.

 snow_angel_teddy_bear_blue_wings

நல்ல பிள்ளை இல்லையா ? அதனால் கூடுதலாக அந்த நல்ல பிள்ளையை பாராட்டி, வண்ணக்கிளி படத்தில் வந்த ஒரு பாடல்.

 

சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா

சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா

சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா

 

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா

சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா

கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா

அப்போ..கலகலனு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா

 

அடுத்து கமிஷனர் கண்ணாயிரம்.

 Rajendran_T_IPS

காவல்துறையில் அதிகாரிகளுக்கு எடுப்பு வேலை செய்வதை பக்கெட் தூக்குவது என்பார்கள். கண்ணாயிரத்தை போன்ற ஒரு சிறந்த எடுப்பை நீங்கள் பார்க்கவே முடியாது.   ஜாபர் காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிக்கும் (இது அதிகப்பிரசிங்தித் தனம் இல்லையா ?) அளவுக்கு ஜாபருக்கு மிகுந்த விசுவாசமான பக்கெட்டாக இருந்து வருகிறார்.

 

சமீபத்தில் ஜாபர் உத்தரவிட்டதன் காரணமாக, டிஐஜி தரத்தில், மிகுந்த மோசமான குற்றச் சாட்டுக்கு உள்ளான ஒரு தரங்கெட்ட அதிகாரியை (இது பற்றித் தனிக் கட்டுரை வருகிறது) காப்பாற்றுவதற்காக பல்வேறு தகிடுதண்டாக்களை செய்து அந்த அதிகாரியை காப்பாற்றினார். அந்த அதிகாரி, விரைவில் ஐஜியாக பதவி உயர்வு பெற இருக்கிறார்.

 

இது தவிரவும், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, வழக்கறிஞர்கள் சிலர் கருப்பு கொடி காட்ட திட்டமிட்டிருப்பதை அறிந்த கண்ணாயிரம், திமுகவின் மகாத்மா காந்தி, வி.எஸ்.பாபுவை மூலமாக நூற்றுக்கணக்கான ரவுடிகளை உயர்நீதிமன்ற வளாகத்தில் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து வரச் செய்து, வழக்கறிஞர்களையும் பத்திரிக்கையாளர்களையும் தாக்க ஏற்பாடு செய்தவர்.

 4438192

ஜாபர் சேட்டுக்கு மிகச் சிறந்த பக்கெட்டாக செயல்பட்டு வரும் ராசேந்திர வல்லம்பர் எனப்படும், ராஜேந்திரனுக்கு இந்த ஆண்டு குடியரசு தின பரிசாக ஒரு பக்கெட் அளிக்கப் படுகிறது.

 

அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் இயக்குநர் துக்கையாண்டி.

 thukkiandi1

இவர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் நிலுவையில் இருக்கும் ஒரே வழக்கு, பெங்களூரில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.

 

இந்த வழக்கைத் தவிர இந்தக் குழுவில் எந்த வேலையும் இல்லை. இந்த ஒரே வழக்கை கவனிப்பதற்காக, துக்கையாண்டிக்கு மாதந்தோறும் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப் படும் ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய். இது போக ரகசிய நிதியும் வழங்கப் படுகிறது.

 

ஒரே வழக்கைத் தவிர வேறு வேலைகள் இல்லாததால், துக்கையாண்டி, சாதிச் சங்க பிரதிநிதிகளை அடிக்கடி சந்தித்து பேசி பொழுதை போக்குகிறார்.   அப்படியும் பொழுது போகவில்லை என்றால், குருமாராஜை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அவரோடு அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார்.

 

இவருக்கு அடுத்தவர் இடத்தை அபகரிக்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்றாலும், அந்த வேலையையும், இவரிடம் கான்ஸ்டபிளாக உள்ள மணி மற்றும் இவரது மனைவி பார்த்துக் கொள்வதால், இவருக்கு ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் வேலையும் கிடையாது.

 

எவ்வித வேலையும் இல்லாமல் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியம் பெற்றுக் கொண்டு, பொழுது போக்க வழியில்லாமல் சிரமப்படுகிறார் துக்கையாண்டி.

 

அதனால், அவரது பொழுதை போக்க மிகுந்த உதவிகரமாக இருக்கும் வண்ணம், இந்த ஆண்டின் குடியரசுத் தலைவர் விருதாக துக்கையாண்டிக்கு ஒரு பல்லாங்குழி வழங்கப் படுகிறது.

 

 06072008151

பல்லாங்குழியை நீங்களே விளையாடலாம் துக்கையாண்டி. கம்பேனிக்கு ஆள் வேண்டுமென்றால், சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை இல்லாத நாட்களில், குருமாராஜை கூப்பிடுங்கள் சார்.

 

அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி சுனில் குமார்.

 Sunil_kumar

இந்த சுனில் குமார் என்றைக்கு, ஜாபர் சேட்டிக் பேச்சைக் கேட்கத் தொடங்கினாரோ, அப்போது தொடங்கியது இவருக்கு சனி. நாள்தோறும் ஜாபர் சேட், இவரை மிரட்டும் மிரட்டல் கொஞ்ச நஞ்சமல்ல.

 

ஜாபர் சேட்டின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நல்ல அதிகாரிகளை பழி வாங்குகிறார். மோசமான அதிகாரிகளை காப்பாற்றுகிறார். ஜாபர்சேட் பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்.

 

தனக்கு ஒரு அடுக்கு மாடி ஃப்ளாட் மற்றும் ஒரு வீட்டு மனையைத் தவிர எந்த சொத்துமே இல்லை என்று பகிரங்கமாக அறிவித்த உமாசங்கர் போன்ற அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை முடுக்கி விட்டு, அந்த அதிகாரியை கடும் அலைகழிப்புக்கு ஆளாக்கியவர். ஆனால் சாதாரண இன்ஸ்பெக்டர்களாக இருந்து கொண்டு, ஒரே நாளில் 1.5 கோடி ரூபாயை கட்டியதன் மூலம், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று ட்ராலி பாய்சின் மீதான புகாரை இவர் விசாரிக்காமல், லத்திக்காவுக்கு அனுப்பி தனது விசுவாசத்தை காட்டி கொண்டவர்.

 

ஜாபர் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக, அர்ச்சனா ராமசுந்தரத்தின் கணவர் ராமசுந்தரத்தின் மீது ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டு, அவரை அரசுப் பணியை விட்டே ஓட வைத்தவர்.

 

ஜாபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் நடுங்குவதாகவும், இருந்த இடத்திலேயே சிறுநீர் கழித்து விடுவதாகவும் தெரிகிறது. இதனால், ஜாபரிடம் இருந்து போன் வரும் நாளிலெல்லாம் இவர் ஆடை மாற்றுவதாகவும் தெரிகிறது.

 diaper

இவ்வாறு இவர் ஆடை மாற்றுவதை தவிர்க்கும் விதத்தில், இந்த ஆண்டின் குடியரசு விருதாக, சுனில் குமாருக்கு ஒரு டையபர் பரிசாக அளிக்கப் படுகிறது.    

 

Comments  

 
0 #50 Logesh 2011-07-26 23:14
Vanakam .I like your commands .But savukku having probelm with these people i think.Any personal Issues are there .
Quote
 
 
0 #49 Prasanna 2011-02-14 14:15
Pls silent... maintain the que pls...
Quote
 
 
+1 #48 ம.பொன்ராஜ் 2011-01-30 19:20
ஆக, ஒரு சிறந்த காவல் துறை பணியாலராகவோ, ஐஎஎஸ் ஆகவோ வர வேண்டுமென்றால் இந்த பிதாமகன்களை கடை பிடித்தாலே போதும் போல இருக்கே...!!! பலே...பலே...
Quote
 
 
+1 #47 அமைதிப்படை அமாவாசை 2011-01-30 19:15
நல்ல சிட்டியில லா அண்ட் ஆர்டர் கெடச்சா செம சில்ற....!!! இந்த வசனம் எல்லா காலத்துக்கும் பொருந்துது.....!!!
Quote
 
 
-2 #46 jeya iyengar 2011-01-28 19:10
ADMK FOR SALE 99 % DISCOUNT .. CONTACT .. MR CHO Iyer
Quote
 
 
+1 #45 Italian 2011-01-28 15:15
Super Appu
Quote
 
 
0 #44 sri 2011-01-27 22:38
Quoting ஊர்க்குருவி:
வரிசைகள் கேட்கின்
விடை பகிர்வேன் யான்,
வரிசை வரிசை
முதல் எதைச்சொல்ல,

இடை யூடை கட்டும் டையபர் சிறப்பு,

இரண்டாய்க்கொண்ட ால்
மாலதி பெற்ற மழலையர் பொம்மை,

மூன்றாவதுதான் நாயகி லத்தி.
வென்றாள் பேனா
விதைப்பாள் அறிக்கை,

பிச்சை புகினும் துக்கையாண்டி
நான்காய் வென்றான் பல்லாங்குழியை,

தலைக்குள் மூளை இருக்கோ இலையோ
தலைக்கவசத்தை சங்கர்ஜி வென்றான்.

உண்டிக்கழிவு உகப்புடன் கழுவும்
சொம்பை விடுத்து வாளியை பெற்ற
கண்ணாயிரம்தான் விண்ணன் என்பேன்,

காகிதப்பூவின் காவலன்,
ஜாபர் சேட்டின்
செவிட்டுக்கருவி சிறப்பிலை என்பேன்,

நாயுடு வென்ற கட்டை கடைசி
ஏனெனக்கேட்பீர் பதிலுரைப்பேன் யான்
கட்டை அதுதான் கடைசி தெரிவு,
arumai
Quote
 
 
+1 #43 ஜஃபர் ரஹ்மானி 2011-01-27 19:57
Nalla virudhukaL.
Varudaa varudam thaalaam.
Aamaa "jaalra" yaarukku?
Quote
 
 
+1 #42 vetri 2011-01-27 13:40
ஏன் கொஞ்ச நாட்களாக குருமாராஜைப் பற்றி கட்டுரை எதுவும் இல்லை. என். ஆர். இளங்கோ என்கிற டுபாக்கூர் வழக்கறிஞரைப் பிடித்து உங்கள் மீதும் வழக்குப் போட முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார ாம். அதுமட்டுமல்ல, இப்பல்லாம் நக்கீரன் கோபால் இவர் சொல்வதைக் கேட்பதே இல்லையாம். ...ம், திருவேங்கிமலை சரவணன் குறித்து செய்திகளோடு கட்டுரை போட்ட உங்களுக்கு அந்த செய்தியை கொடுத்தது கோசல்ராம் தானே?
Quote
 
 
0 #41 vijay_dl 2011-01-27 13:23
பின்னிடிங்க போங்க எப்படித்தான் இப்படி எல்லாம் தோணுதோ போங்க ஆனால் இதையெல்லாம் நினைத்தால் உள்ளம் அழுவுது நெஞ்சம் துடிக்குது Quoting saran:
1. New units of Indian Rupee
Government of India has decided that the new units of money measurement are needed. Lacs & Crores no longer work ~ too many zero's to handle; we have to reckon with Lac crores, etc.

As part of globalisation, one unit which works best is $Bn . makes it easier for all to benchmark against their local systems

But for India another simpler system also emerges

New Units of Money

The huge amounts mentioned in the recent scams have an upside: they have given us convenient new units for communicating large figures:




New Indian Currency Units


1000 Crores = 1 Radia (10000000000 )

10 Radia = 1 Kalmadi (10000 Crores=100000000000)

10 Kalmadi = 1 Raja (1 lac Crores=1000000000000)

100 Raja = 1 Sonia (100000000000000)


This will make it easier for us to easier to comprehend and communicate large numbers. For example:

* Anil Ambani's new home in Pali Hill will cost Rs 4.5 Radias
* India’s total annual subsidy on kerosene is Rs 2 Kalmadis
* ONGC’s annual output is worth Rs 1.2 Rajas
* India’s loss in the 3G scam is approximately Rs 1.7 Rajas
* Poor Pramod Mahajan left behind only Rs 1.4 Radias
* Indian corrupted people money savings in Swiss Bank is more than Rs 1 Sonia
Quote
 
 
+4 #40 saran 2011-01-27 09:49
1. New units of Indian Rupee
Government of India has decided that the new units of money measurement are needed. Lacs & Crores no longer work ~ too many zero's to handle; we have to reckon with Lac crores, etc.

As part of globalisation, one unit which works best is $Bn . makes it easier for all to benchmark against their local systems

But for India another simpler system also emerges

New Units of Money

The huge amounts mentioned in the recent scams have an upside: they have given us convenient new units for communicating large figures:




New Indian Currency Units


1000 Crores = 1 Radia (10000000000 )

10 Radia = 1 Kalmadi (10000 Crores=100000000000)

10 Kalmadi = 1 Raja (1 lac Crores=1000000000000)

100 Raja = 1 Sonia (100000000000000)


This will make it easier for us to easier to comprehend and communicate large numbers. For example:

* Anil Ambani's new home in Pali Hill will cost Rs 4.5 Radias
* India’s total annual subsidy on kerosene is Rs 2 Kalmadis
* ONGC’s annual output is worth Rs 1.2 Rajas
* India’s loss in the 3G scam is approximately Rs 1.7 Rajas
* Poor Pramod Mahajan left behind only Rs 1.4 Radias
* Indian corrupted people money savings in Swiss Bank is more than Rs 1 Sonia
Quote
 
 
0 #39 Sundaram 2011-01-27 08:31
Anbana savukku avargale, Intha vetti pasangalukku etharrkku intha virthu vera kudthu waste pannanum..vetti pannigal
Quote
 
 
+1 #38 tamizselvan 2011-01-27 00:40
Quoting ஆனந்த்:
எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இருப்பினும் இவர்களுக்கு பதிலாக வேறொருவர் வந்தாலும் ஏறத்தாழ இதையேதான் செய்யப் போகிறார்கள் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இவர்கள் சரியில்லை என்றால் யார் வந்தால் சரியாக இருக்கும் என்று தங்களால் சுட்டிக் காட்ட முடியுமா. அப்படியே தாங்கள் சுட்டிக் காட்டும் நபர்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பர்கள் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா.


sailenthar babu IPS, Mauriya IPS,Vijay kumar IPS...All this officers in TN police are doing their job Perfectly...
Quote
 
 
+1 #37 கூத்தாடி 2011-01-27 00:07
முறையே தரவைசை

1' >, கோமணம், >சுனில் குமார்

2;>: அடிக்கழுவிற வாளி,> கண்ணாயிரம்

3; > செகிட்டு மிசின். >ஜாபர் சுலுத்தான்

4';> விறகுகட்டை, >ராதா கிட்டுணன்

5; > பாவை புள்ளை, >மாலதி ஆச்சி

6.> பாண்டிக்குழி >துக்கையாண்டி

7;> தலைக்கவசம் >சங்கர் ஜிவால்

8;> எழுதுகோல் >லத்தி சரண்
Quote
 
 
0 #36 anbuselvan 2011-01-26 23:10
Classic savukku sir
Quote
 
 
-1 #35 saraswathi 2011-01-26 23:09
room pottu yosipingala, illa pottutu ( thanni ) roomla yosipingala...
chumma kalakuringa savukku
great stress buster...
check bbctamil.com on police atrocity where they have murdered a man and raped his wife and his son fights for justice
Quote
 
 
+7 #34 tamil anban 2011-01-26 22:24
எல்லாவற்றுக்கும ் கருணாநிதியின் பெயரை சூட்டியாகிவிட்ட து, காங்கிரெஸ் காரர்கள் வேறு ராஜீவ் காந்தி பெயரை அதற்க்கு வையுங்கள் இதற்க்கு வையுங்கள் என்று கூவிகொண்டுள்ளனர ், இதற்க்கு மேல் எதற்ககெல்லாம் இவர்கள் பெயரை வைக்கலாம்,
கலைஞர் இலவச கழிப்பிடம்
கலைஞர் இலவச சுடுகாடு
கலைஞர் இலவச பிணவறை
கலைஞர் பொதுமக்கள் வயிறு எரிக்கும் திட்டம்,
கலைஞர் இலவச வாய்க்கரிசி திட்டம்
கலைஞர் இலவச நெத்திகாசு திட்டம்
கலைஞர் இலவச சங்கு, தாரை தப்பட்டை திட்டம்
கலைஞர் இலவச ------ திட்டம் என்று அடுக்கலாம்
வரும் தேர்தல் வாக்குறுதி: வீட்டுக்கு ஒரு பிள்ளை இலவசம்

இனி ராஜீவ் காந்தி, இவர் பெயரை ஆம்புலன்சுக்கு வைக்க வேண்டுமாம், அரசு மருத்துவமனைக்கு வைக்க வேண்டுமாம்.
இந்த பட்டியலில்

ராஜீவ் காந்தி சுடுகாட்டு சாலை
ராஜீவ் காந்தி சாராய கடை
ராஜீவ் காந்தி ---- விடுதி
ராஜீவ் காந்தி பாதாள சாக்கடை திட்டம்

சோனியா அம்மையார் மன்னிக்கவும் அந்தோனியோ மாயனோ பெயரை எதற்காவது வைக்க விரும்புகிரிர்க ளா காங்கிரெஸ் கார பெருமக்களே?

மக்கள் பணத்தில் செய்யும் திட்டங்களுக்கெல ்லாம் கண்டவன் பெயரை ஏன் வைக்க வேண்டும், மக்கள் யோசிப்பார்களா?
Quote
 
 
+1 #33 sella 2011-01-26 20:51
இது போன்ற சிற்றின்பம் தவிர்த்து பேரின்பமாய் 'எதாவது' கொடுத்தால் நலம். Mark the occassion with lifetime gift.
Quote
 
 
+3 #32 ஆனந்த் 2011-01-26 19:05
எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இருப்பினும் இவர்களுக்கு பதிலாக வேறொருவர் வந்தாலும் ஏறத்தாழ இதையேதான் செய்யப் போகிறார்கள் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இவர்கள் சரியில்லை என்றால் யார் வந்தால் சரியாக இருக்கும் என்று தங்களால் சுட்டிக் காட்ட முடியுமா. அப்படியே தாங்கள் சுட்டிக் காட்டும் நபர்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பர்கள் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா.
Quote
 
 
0 #31 ravikumar99 2011-01-26 18:41
What will Jafer Sait do when Jaya becomes CM in May 2011?

Will he escape by applying for deputation to Central Goverment (Railway police,CRPF,BSF etc)

or

will he have the gutts to face Jaya and remain in TN.

or

Will he give VRS and go like Ramasundaram IAS, Vivek Harinaryanan IAS etc ?

OR

Will he use his magic and influence Jaya and remain powerfull in TN police like (Sivanandi IPS who was Jaya's pet Inteligence cheif and hated by MK but some how manged to gain favor with MK later)
Quote
 
 
+1 #30 ஊர்க்குருவி 2011-01-26 18:20
வரிசைகள் கேட்கின்
விடை பகிர்வேன் யான்,
வரிசை வரிசை
முதல் எதைச்சொல்ல,

இடை யூடை கட்டும் டையபர் சிறப்பு,

இரண்டாய்க்கொண்ட ால்
மாலதி பெற்ற மழலையர் பொம்மை,

மூன்றாவதுதான் நாயகி லத்தி.
வென்றாள் பேனா
விதைப்பாள் அறிக்கை,

பிச்சை புகினும் துக்கையாண்டி
நான்காய் வென்றான் பல்லாங்குழியை,

தலைக்குள் மூளை இருக்கோ இலையோ
தலைக்கவசத்தை சங்கர்ஜி வென்றான்.

உண்டிக்கழிவு உகப்புடன் கழுவும்
சொம்பை விடுத்து வாளியை பெற்ற
கண்ணாயிரம்தான் விண்ணன் என்பேன்,

காகிதப்பூவின் காவலன்,
ஜாபர் சேட்டின்
செவிட்டுக்கருவி சிறப்பிலை என்பேன்,

நாயுடு வென்ற கட்டை கடைசி
ஏனெனக்கேட்பீர் பதிலுரைப்பேன் யான்
கட்டை அதுதான் கடைசி தெரிவு,
Quote
 
 
+4 #29 சவுக்கு 2011-01-26 17:42
அன்பான ஆர்டர்லி, Whiskey Woman என்று நாம் லத்திக்கா சரணுக்கு விருது கொடுத்தால், ரம், ஜின், வோட்கா, ரெட் ஒயின், ஒயிட் ஒயின், டெக்கீலா, மார்ட்டினி, பியர், இந்த ரகங்களெல்லாம் கோபப் படாதா ?
Quote
 
 
+8 #28 riazkhan 2011-01-26 17:32
ஜாபர் செட்டுக்கு ஒரு சொம்பையும் சேர்த்து கொடுத்து விடுங்கள். சரியாக இருக்கும் அவர் முகத்திற்கு. என்ன ஜாபர் சார் இந்த இணையதளத்தை நீங்கள் தினம் தோறும் பார்ப்பீர்கள் என்று தெரியும். இதை பார்த்தாவது கருணாநிதி மற்றும் திமுக அடிவருடிகளுக்கு சலாம் போடுவதை நிறுத்தி விட்டு படித்த படிப்புக்கு மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் குடும்பத்தினரே அவமானமாக நினைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. வரலாறு முக்கியம்.
Quote
 
 
+1 #27 jai 2011-01-26 17:29
Quoting Sundaramurthy .K:
Dear Mr. Savukku

We had enough sir, every day reading only unwanted and bad people, for change please write an article about good people and good things happend to the society (of course we cannot expect any good things till such time of this bloody manjal thundu & his robbery group, however please try)
Thanks

Yeah, But where to find the gud people? All gud people are dead now ....
Quote
 
 
+1 #26 jai 2011-01-26 17:28
சவுக்கின் வேண்டுகோளுகிணங் க யாருக்கு என்ன பரிசு பொருத்தமாய் இருக்கிறது என்ற என் தர வரிசை கீழே:

எட்டாவது இடம்: சங்கர் ஜிவால்

ஏழாவது இடம்: ராதா கிருஷ்ணன்

ஆறாவது இடம்: மாலதி

ஐந்தாவது இடம்: லத்திகா சரண்

நான்காவது இடம்: துக்கையாண்டி

மூன்றாவது இடம்: கண்ணாயிரம்

இரண்டாவது இடம்: ஜாபர்

முதலிடம்: சுனில் குமார்
Quote
 
 
+5 #25 jai 2011-01-26 17:20
சவுக்கின் பாரபட்சம் என்னை வருத்தமடைய செய்கிறது, கூலி வேலை பார்பவர்களுக்கு மட்டும் பரிசு வழங்குகிறது, நம் நாட்டை பாதுகாக்கும் தலைவர்களுக்கு பரிசு வழங்கவில்லை... அதனால் நான் வழங்குகிறேன்.....

நீர ராடியாவுடன், ஒரே ஒரு ஆங்கில வார்த்தை பேசி விட்டு ஓரங்கட்டியதால் அடுத்த முறை நன்றாக பேச ஏதுவாக ராசாத்தி அம்மாள் அவர்களுக்கு "Learn english in 30 days" புத்தகம் பரிசாக வழங்குகிறேன்... அஞ்சா நெஞ்சன் அவர்களும் இந்த புத்தகத்தை பரிமாறி கொள்ளலாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.....

மேலும் பேனா நீங்கள் இலத்திகாவிர்ற்க ு பதில் தமிழின தலைவர், வாழும் வள்ளுவருக்கு கொடுத்து இருந்தால் தந்தி எழுத வசதியாய் இருந்து இருக்கும்.... சரி விடுங்க, அவங்களுக்கு உள்ள இலாத அட்ஜஸ்ட்மேண்டா ???

Spectrum மூல கரு கன்னி பாப்பா கணியம்மா, சன் நிறுவனத்தை அழிக்க முயற்சித்தார், அவருக்கு உறுதுணையாய் இருக்க Nataraj Eraser பரிசாய் தருகிறேன்....
Quote
 
 
+2 #24 Shanthi 2011-01-26 16:53
lol, ivlo nala vidhama inda program ah host panadhuku, republic day gift ah Savukku ku Kalimark Paneer Soda valanga paduhiradhu.... elarum oru thadava jore ah kai thatunga.... :D
Quote
 
 
+4 #23 சவுக்கு 2011-01-26 16:49
தோழர்களே, விசிறியார் சொன்னது போல, விருதுகள் யாருக்கு சிறப்பாக பொருந்தி வருகிறது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாமே .. விருதுகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப் படுத்துங்கள் பார்ப்போம்.
Quote
 
 
0 #22 ஆர்டர்லி 2011-01-26 16:39
லத்திகாவுக்கு pen விருதை விட சிறந்த விருது தந்திருக்கலாம்.
அதுதான் "wisky women".
you ask thier batchmets. they accept it
Quote
 
 
0 #21 சவுக்கின் விசிறி 2011-01-26 16:36
மதிப்புமிக்க வாசகர்களே...
எந்த விருதுக்கு அதிக ஓட்டு என்பதை பதிவு செய்தால், அந்த விருது பெற்றவருக்கு ஒரு ஜிலுஜிலுப்பு இருக்குமே.
என் முதல் ஓட்டு உருட்டைக்கட்டைக ்கு..
இரண்டாவது ஓட்டு டையாபருக்கு...
Quote
 
 
0 #20 Sundaramurthy .K 2011-01-26 15:57
Dear Mr. Savukku

We had enough sir, every day reading only unwanted and bad people, for change please write an article about good people and good things happend to the society (of course we cannot expect any good things till such time of this bloody manjal thundu & his robbery group, however please try)
Thanks
Quote
 
 
+5 #19 குசும்பன் 2011-01-26 15:22
அதுசரி வாளி அந்த வாளியாட்டம் தெரியல்லயே? சாம்பார் வாளியாட்டமா தெரியுதே, பித்தளை வாளியைத்தூக்கிட ்டு பிளாஸ்டிக் வாளி வையுங்க்ங்கிறேன ்.
Quote
 
 
+2 #18 பாரதிக்குஞ்சு 2011-01-26 14:42
சும்மானாச்சும் கூவி நானுங்கூடன்னு பறந்தடிக்கும் குஞ்சாமணிக்கும் ஞானபீட விதுக்கணக்கா ஒரு விருத பரிந்துரைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கிறேன், ,
Quote
 
 
+6 #17 சவுக்கு 2011-01-26 14:00
மன்னிக்கவும் திரு.ராம்கி அவர்களே. ராதாகிருஷ்ணன் எவ்வளவு சாதி வெறிப் பிடித்தவர் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். நேர்மையான அதிகாரி என்று தன்னை கூறிக்கொள்ளும், ராமானுஜம் எத்தனை பெரிய சாதி வெறியர் என்பதும் உங்களுக்குத் தெரியாது. இது போன்ற சாதி வெறியர்கள் இருக்கும் வரை, சாதி பெயரை குறிப்பிடுவதை தவிர்க்க இயலாது. மற்ற அதிகாரிகளின் சாதி என்னவென்று சவுக்குக்கு தெரியாதா என்ன ? மிகுந்த சாதிப் பற்றோடு இருப்பவர்கள் மட்டுமே சாதி அடைமொழியோடு குறிப்பிடப் படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ராம்கி.
Quote
 
 
+4 #16 Kasuppar 2011-01-26 13:24
எனக்கு எதும் விருது இல்லையா?
Quote
 
 
+6 #15 Kumar.T 2011-01-26 13:01
வழக்கமா முதலமைசர் தான் விருதுகளை நேரடியாக அதிகாரிகளுக்கு வழங்குவார்..அதன்படி பார்த்தால் சுனில்குமாருகான விருத கருணாநிதி எப்படி அணிவிப்பார்னு கற்பனை செய்தா ஒரே சிப்பு சிப்புபா வருது போங்க...
Quote
 
 
-5 #14 Ramki 2011-01-26 12:34
ஜாதி பெயர் போடுவதை நிறுத்த வேண்டும் (பிச்சை நாய்டு)
Quote
 
 
+2 #13 inbaa 2011-01-26 12:29
ithu tv programe vida hot'a iruukku
Quote
 
 
+2 #12 thaya 2011-01-26 11:29
adidaa adidaa viddathai savukku
Quote
 
 
+11 #11 Rk Guru 2011-01-26 11:15
சுனில் குமாருக்கு கொடுத்த பரிசுதான் சூப்பர்....ஆமாம் உங்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம். பரிசு வேண்டாம் பட்டம் கொடுக்கலாம் "இணையத்தின் இணையில்லா நாயகன்" என்ற பட்டம் கொடுக்கலாம். எங்களின் சார்பாக வாங்கிகொள்ளுங்க ள்.
Quote
 
 
+2 #10 சங்கர்.ப 2011-01-26 10:35
எல்லா பீஸும் வேஸ்ட் பீஸு
Quote
 
 
+6 #9 காலவன் 2011-01-26 09:48
தமிழக அரசின் நிர்வாக தூண்கள் இப்படி செல்லரித்து வெறும் அட்டைத்தூண்களாக காட்சியளிக்கின் றன. அப்படியெனில் தமிழக நிர்வாகம் எந்தஅளவுக்கு சீர்கெட்டு போய் உள்ளது என்பதை நிணைக்கும்போது.வெட்கமாகவும் பயமாகவும் உள்ளது. என்ன செய்வது..? பேய் ஆட்சிசெய்தால் பன்றிகள் மீத எலும்புகளை நக்கித்தின்கிறத ு.
Quote
 
 
0 #8 Nirubar 2011-01-26 09:46
Athaavathu nammalai yaar irukka thatti ketka, kelvi ketka endru irumaappudanum, thalaikanathuda um adaavadi aniyayam rowdithanam saithu kondu kaduvulukku kooda payappadaamal theripavarkalai kadavul enna saivaar yendral yaaridamavathu pidithu koduthu avarkal saitha akkirmangalukke llam thandanai anupavikka pidithu konduthu viduvan appadithan ungaldam (Savukku) pidithu koduthirikkiran Iraivan
Quote
 
 
+1 #7 Natarajan.P 2011-01-26 09:15
nice and liked it
Quote
 
 
+4 #6 ram1304 2011-01-26 08:40
savukku

please add a free jalra for all the above capable officers
Quote
 
 
+14 #5 கோவைக்காரன் 2011-01-26 08:17
ஒரு போலி என்கவுண்டர் நடத்தி ஒரு கொடூரமான கொலைவழக்கில் பலரை தப்ப வைத்து, ஒரே நாளில் ஹீரோ ஆனா நம்ம பாம்படி சித்தர் சைலேந்திர பாபுவுக்கும் எதாவுது விருது குடுத்து அவரை குஷியாக்கி இருக்கலாம் .
Quote
 
 
+7 #4 anbu 2011-01-26 06:19
அன்புள்ள சவுக்கு..
வர,வர உனக்கு மறதி அதிகமாயிடுச்சு… பதக்கம் வழங்கும் பட்டியலில் இன்னும் சில அதிகாரிகளை விடுப்பட்டுள்ளத ு…பத்திரிகையாளர ் பெயரில் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடும் அண்ணன் காமராஜிக்கு விருது கொடுக்க வேண்டும்..வன்னியர் குருவைப்பற்றி நக்கீரனில் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வர, காமராஜிக்கு செல்போனில் மிரட்டல் வர, செல்போனில் வந்த நம்பர்களை, ஜாபர்சேட் மூலம் கண்டுபிடித்து, அவர்களை அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய காவல்நிலையங்களி ல் வைத்து மனிதாபிமானம் இல்லாமல் அடித்தார்கள்.. அதனால் காமராஜிக்கு சைக்கிள் பெல்லை விருது அளிக்கலாம்..
விருது பட்டியலில் ராஜரத்தினம், ராஜமாணிக்கம், சுப்புராஜ் ஐ.ஏ.எஸ், இவர்களையும் சேர்க்க வேண்டும்…
Quote
 
 
0 #3 Indian 2011-01-26 04:14
who are trolley boys?
Quote
 
 
+23 #2 குவார்ட்டர் கோவிந்து 2011-01-26 03:27
கொய்யால! ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி, என் நைனாகிட்ட போய் நான் போலீஸ் ஆக போறேன் நைனானேன்.... அதுக்கு என் நைனா, செருப்பு பிஞ்சிரும்டா....ஒழுங்கா படிச்சு என்ஜினியரா ஆக பாருன்னாரு..... எனக்கு அப்ப ஒண்ணுமே புரியல.....இப்பதான் புரியுது! போலீஸ் டிபார்ட்ட்மேண்ட ுனா, பிச்சக்கார டிபார்ட்ட்மேன்ட ுன்னு.... ரொம்ப தாங்க்சு நைனா.....இதுக்கு தான் " தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை" சொன்னங்க அவ்வையார் பாட்டி.....அப்புறம் நம்ம போலீஸ் மாமன்களுக்கு ஒரு சின்ன கோரிக்கை! எப்ப டைம் கிடைக்குதோ, என் வீட்டு பக்கம் வந்தா ஒரு குவாட்டர் கள்ளசாரயமும், போன வாரம் வாங்குன கோழி பிரியாணியும் வாங்கிட்டு போலாமுங்கோ!!!!! !!!
Quote
 
 
+18 #1 சேனா 2011-01-26 01:34
இவனுங்களுக்கு எல்லாம் ஜிப்பா போட்டு விட்டு G.B ரோட்ல மாமா வேல பாக்க சொல்லலாம் போல, நல்ல வேலை நான் எங்க அப்பா மாதிரி போலீஸ் ஆகல.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 143 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday12922
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week56922
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month279182
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13195549