முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தொடங்கியது இசை நாற்காலிப் போட்டி … ….. … அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 7
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 29 ஜனவரி 2011 07:49

இசை நாற்காலிப் போட்டி தொடங்கி விட்டது நண்பர்களே… எதற்கு இப்போது இந்த இசை நாற்காலிப் போட்டி என்கிறீர்களா ? இந்தப் போட்டியை சவுக்கு நடத்தவில்லை நண்பர்களே…. இந்தப் போட்டியை தனிப்பட்ட யாரும் நடத்தவில்லை. ஆனால், ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்களாகவே, இந்தப் போட்டியை நடத்துகிறார்கள்.

 

சமீபத்தில் கூடுதல் டிஜிபி பதவி உயர்வு வழங்கப் பட்டதை அடுத்து, அடுத்த கட்ட பதவி உயர்வாக, டிஐஜியிலிருந்து, ஐஜி, எஸ்பி யிலிருந்து டிஎஸ்பி பதவி உயர்வுகள் அடுத்தடுத்து வர இருக்கின்றன. இந்த பதவி உயர்வுகளை ஒட்டியே, இசை நாற்காலிப் போட்டி நடந்து வருகிறது.

 

இந்த இசை நாற்காலிப் போட்டியில் கலந்து கொள்ளும் ‘காலிகள்’ யார் தெரியுமா ?

 IMG_8791

ஏற்கனவே, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் அருகே பணியாற்றுகிறார் என்று சவுக்கில் எழுதப் பட்டிருந்தது அல்லவா ? அந்த எம்.சி.சாரங்கன். பெரியய்யா, மவுரியா, ஸ்ரீதர், கே.என்.சத்தியமூர்த்தி, பாரி, எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்ரமணியன், தாமரைக்கண்ணன், செந்தாமரைக்கண்ணன், சேசஷாயி மற்றும் வரதராஜுலு, ஆகியோர்.

 

டிஐஜி பதவி உயர்வுக்குப் பிறகு, சாரங்கன் சென்னை மாநகரத்தின், தெற்கு இணை ஆணையாளர்.

 

டிஐஜி பதவி உயர்வுக்குப் பிறகு, பெரியய்யா மத்திய சென்னை இணை ஆணையாளர்.

 

மவுரியா, ரயில்வே துறையிலேயே, டிஐஜி.

 

மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர், புதிதாக உருவாக்கப் பட்ட பதவியில், குற்றப் பிரிவு இணை ஆணையாளர்.

 

தற்போது, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையாளராக இருக்கும் க.ந.சத்தியமூர்த்தி, போக்குவரத்து இணை ஆணையாளர்.

 

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாரி, மதுரை மாநகர காவல் ஆணையாளர்.

 

தென் மண்டல அமைப்புச் செயலாளர் மற்றும், தெற்கு மண்டல ஐஜியாக இருக்கும் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சென்னைக்கு வருகிறார்.

 

பாலசுப்ரமணியம், தெற்கு மண்டல ஐஜி.

 

தாமரைக்கண்ணன் மத்திய மண்டல இணை ஆணையாளர்.

 

செந்தாமரை கண்ணன், வடக்கு மண்டல சென்னை மாநகர இணை ஆணையாளர்.

 

தென்சென்னை இணை ஆணையாளர் சேஷசாயி, தன்னை மாற்றாமல் அதே பதவியில் நீடிக்க வேண்டும் என்று கோருகிறார்.

 

புறநகர் காவலில் உள்ள துணை ஆணையர் வரதராஜு, புறநகரிலேயே இணை ஆணையராக ஆகிறார்.

 

என்னடா, சவுக்கு உள்துறை செயலாளர் போல, பல்வேறு பதவிகளை வாரி வழங்குகிறதே என்று பார்க்கிறீர்களா ?

 

இதெல்லாம் சவுக்கு வழங்கிய பதவிகள் இல்லை. இந்தப் பதவிகளுக்கெல்லாம், வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் துடிக்கிறார்கள்.

 

சேஷசாயி, கண்ணே பாப்பா கனிமொழியின் வகுப்புத் தோழியும், இந்து நாளேட்டில் ஒன்றாகப் பணியாற்றியவருமான தனது மனைவி மூலமாக முயற்சிக்கிறார். சேஷசாயி சார், ஸ்டாலின் வீட்டில் கக்கூஸ் கழுவுபவர், தாம்பரத்தில் இருக்கிறார். சவுக்கிடம் முகவரி வாங்கிக் கொண்டு, அவரை அணுகினால், மத்திய சென்னை அல்ல, மாலத்தீவுக்கும் இணை ஆணையராக ஆகலாம்.

 

பத்திரிக்கையாளர் மன்றத்தின் அருகே, குதிரை மேய்த்துக் கொண்டிருக்கும் சாரங்கன், தொல்.திருமாவளவன் என்ற ப்ரோக்கரை அணுகியிருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.   இவர் அணுகும் அடிப்படை என்ன என்றால், சென்னை மாநகரில் ஒரு தலித் இணை ஆணையராவது வேண்டும் என்பதுதான். ஏனெனில், இவர் இணை ஆணையராக ஆனால், இவர் சரகத்தில் ஒரு தலித் கூட கவலைப் படமாட்டான். அனைவரது கண்ணீரையும் துடைப்பார்.

 

இது போல, ஒவ்வொரு அதிகாரியும், கருணாநிதியின் முதலைப் பண்ணை குடும்பத்தில் உள்ள பல பேரில் ஆளுக்கு ஒவ்வொருவரை அணுகி, எப்படியாவது எனக்கு இந்தப் பதவியை வாங்கி கொடுங்கள் என்று கோரி வருகிறார்கள்.

 

இதில் சிலர் பெரும் தொகையையும் கொடுத்திருக்கிறார்கள்.   இசை நாற்காலிப் போட்டியில் ஜெயிப்பதற்கு கூட நேர்மையான வழியை கடைபிடிக்க மறுக்கிறார்கள்.

 

இப்படி ஒவ்வொருவரும், ஆளுக்கு ஒருவரை பிடித்து, எப்படியாவது பசையான பதவிகளை பிடித்து விடலாம் என்று கடும் முயற்சி எடுக்கிறார்கள்.

 

வடிவேலு சொன்னது போல, “உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு“ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. திமுக ஆட்சி என்பது அணையப் போகும் விளக்கு.   இந்த அணையப் போகும் விளக்கின் வெளிச்சத்தில் குளிர் காயலாம் என்று துடிக்கும் இந்த அறிவிலிகளை என்னவென்று சொல்வது… ? ஐபிஎஸ் அதிகாரி என்பவர்கள், அரசு எந்தப் பதவி கொடுத்தாலும், அந்தப் பதவியில் பணியாற்ற வேண்டும். ஆனால், இது போல, கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும், மதுரையிலும், கோவையிலும், பெங்களுரிலும், ஆளும் வர்க்கத்தின் காலடியில் தவம் கிடக்கும் இந்த அதிகாரிகள், இந்தப் பதவியை பெற்ற பிறகு எப்படி இருப்பார்கள் ?

சவுக்கு வாசகர்கள், சவுக்கை படிக்கிறார்கள் என்பதற்காக, உங்கள் மீது பொய் வழக்கு போட்டு உங்களை சிறையில் தள்ளச் சொன்னால் தயங்குவார்கள் என்றா நினைக்கிறீர்கள் ?

 

சவுக்கை ரவுடிகளை வைத்து அடித்துத் துவையுங்கள் என்று உத்தரவிட்டால் செய்ய மாட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்…. இவர்களைப் பற்றி எழுதியது குறைவு தோழர்களே…. எழுதவே முடியாத செய்திகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.

 

பல்லைக் கடித்துக் கொண்டு அந்தக் கருமத்தையெல்லாம் சவுக்கு எழுதாமல் இருக்கிறது.

 

உள்துறைச் செயலாளர் ஊரில் இல்லை.   கருணாநிதி டெல்லி செல்கிறார்.   கூடுதல் முதல்வர் ஜாபர் சேட், முன்னதாகவே டெல்லி செல்கிறார். அதனால், இந்த மாறுதல் ஆணைகள், பிப்ரவரி 2ம் தேதிக்குப் பிறகு தான் என்று கூறுகிறார்கள்.

 

அன்று இசை நாற்காலியின் முடிவுகள் தெரிய வரும்.

 

Comments  

 
0 #14 namakkallan. 2011-02-12 19:12
pari appointed as sp in namakkal by central minister s.vaanthi selvan (gandhi selvan).this vanthi sorry gandhi is the right hand of stalin to oppsose the soorapandi sorry veerapandi arumugam,then how?
Quote
 
 
+4 #13 டத்தோஸ்ரீ 2011-01-31 07:24
நக்கீரன்,ஜீனியர ் விகடன் எல்லாம் பைநிரப்பும் பத்திரிக்கைகள்.இலங்கை போரின் உச்சத்திலேயே நக்கீரன் பொய் செய்தியால் அந்த இடத்தை துடைக்கும் பத்திரிக்கையாகை விட்டது.ஐரொப்பியா,கனடா போன்ற நாடுகளுக்கு வந்துடதிங்க கோவலு.காமராஜு,போட்டிய ோட வந்தா பொட்டியிலெ போகவேண்டியிருக் கும்.
Quote
 
 
0 #12 ravikumar99 2011-01-30 12:31
Home Secratary Savukku IAS.
Savukku Ithuyellam Rembakalama nadakuthu.

Who ever will posting now will not last long as Amma will come and change them all. It is better to get promoted to dummy post like TSP Battalion Commandant or Railway or Fire Service than once Amma becomes CM they should lobby Sasikala Faamily members to get Lucrative post Like North Chennai, Food Cell CID,Narcotics, Prohibition etc.
Quote
 
 
+2 #11 suryaa 2011-01-30 10:38
எஸ்பி யிலிருந்து டிஎஸ்பி illa, dsp lendu da sp. correcta?
Quote
 
 
+2 #10 Sundaram 2011-01-29 22:21
Intha pozhapukku mama vela parkalam.
Quote
 
 
+19 #9 விஜயானந்த் 2011-01-29 14:21
யோவ் சவுக்கு, மவுரியா, சாரங்கன் பத்தியெல்லாம் ஏதேதோ செய்திகள் எழுதுறீங்க. ஆனா, இந்த சாரங்கன் நெல்லையில் இருந்தபோது, தன்னோட பணியாற்றிய ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஜல்ஸா பண்றதுக்காக தென்காசிக்கு அழைச்சுகிட்டு வந்து ரூம் போட்டு தங்கிட்டாரு. மீசை கோபாலகிருஷ்ணன் அப்ப திருநெல்வேலி டி.ஐ.ஜி. ரெண்டு பேரையும் கையும் உறையுமா பிடிச்சுட்டாரு. ரெண்டு அப்பு, அப்பி விரட்டி விட்டவரு... அரசாங்கத்துக்கு நோட் போட்டு அனுப்பிட்டாரு. உடனே, அப்போதைய ஜெயலலிதா சாரங்கனை தோட்டத்துக்கு வரவழைச்சு செருப்பால அடிச்சு அனுப்பிச்சாங்க. அதுக்கு பின்னாடி அ.தி.மு.க. ஆட்சி முடியற வரைக்கும் அவரால திரும்பவும் பதவிக்கு வர முடியலை. சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப்பெறப்ப டலை. அப்பவும், புரோக்கர்கள் திருமாவளவன், ரவிக்குமார் மூலமா பணக் கொடுத்து ஜெயலலிதாகிட்ட பதவியை பெற முயற்சித்தாங்க. நடக்கலை. புரோக்கர்கள் அறிவாலயம் பக்கம் வந்து, தி.மு.க.வும் ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டே மாதத்துல ச்ஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, சென்னையில் டி.சியாக பதவி ஏற்கிறார் சாரங்கன். இதுதான் இந்த ஆட்சியோட லட்சணம். பொம்பளைப் பொறுக்கியா இருந்தா, நல்ல பொறுப்பு கொடுப்பாங்க. புரிஞ்சுதா. இவங்கள பத்திரிகை ரீதியா பாதுகாக்குற பொறுப்பு ஜூனியர் விகடன்ல இருக்குற போலீஸ் பொறுக்கி பட்டம் பெற்றவருக்கு கொடுக்கப்பட்டிர ுக்கு. அந்த மாமாதான் அவங்ககிட்டயெல்ல ா பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு, அவங்களுக்கு ஆதரவா செய்தி போட்டுகிட்டு இருக்கான்.
Quote
 
 
0 #8 FORCE 2011-01-29 13:55
In TN Law and Order is in ORDER!!
Quote
 
 
0 #7 kumar68 2011-01-29 13:35
check the 2nd paragraph pls.change the DSP with DIG. Type error.
Quote
 
 
+3 #6 Akm vetriyur kolkata 2011-01-29 12:33
காக்கி சட்டை போட்டலே… சூடு சொரணை எல்லாம் காணாமல் போய்விடுமா..?

என்ன பிரகாஷ் இப்படி சொல்லிட்டீங்க...

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் நல்லவரா நேர்மையா இருக்கார்...
அது யாருன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன், தெரியலன்னா தெரிஞ்சுகோங்க....

அவர் பெயர் சவுக்கு சங்கர்...
Quote
 
 
+2 #5 venugopal 2011-01-29 11:51
// பல்லைக் கடித்துக் கொண்டு அந்தக் கருமத்தையெல்லாம ் சவுக்கு எழுதாமல் இருக்கிறது.

Why ?.if it is true u can post it right ?.
Quote
 
 
0 #4 saran 2011-01-29 11:29
http://meenakam.com/2011/01/27/19803.html
Quote
 
 
0 #3 rajaangam 2011-01-29 11:25
yov savukku ennayya Loyola college opinion poll result mudivu ennayya solludhu. Pechu mooche kaanome???
Quote
 
 
+6 #2 Nithi 2011-01-29 11:24
(Quote - இவர்களைப் பற்றி எழுதியது குறைவு தோழர்களே…. எழுதவே முடியாத செய்திகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.
பல்லைக் கடித்துக் கொண்டு அந்தக் கருமத்தையெல்லாம ் சவுக்கு எழுதாமல் இருக்கிறது.- Quote)

சவுக்கு - இன்னும் ஏராளமாக இருக்கின்ற கருமத்தையெல்லாம ் சவுக்கு எழுதாமல் எங்களை ஏமாற்றா வேண்டாம்.
Quote
 
 
+14 #1 prakesh 2011-01-29 09:04
சவுக்கு சார் வணக்கம்.. புலனாய்வு பத்திரிகை எல்லாம் சவுக்கு பின்னாடி க்யூ நிற்கும் காலம் வந்துவிட்டது…
மெளரியா, ராசாத்தி அம்மாள் இடம் நெருக்கமாக இருந்து, வருவாய் புலனாய்வுத்துறை ரெய்டில் சிக்கி, மயிலாப்பூர் துணை கமிசனர் பதவியை இழந்தவர்..ஜெயலலிதா பக்கம் சாய முயற்சிகள் மேற்க்கொள்ள, எங்கே..ராசாத்தி அம்மாளின் ரகசியம் எல்லாம் வெளியாகிவிடுமோ என்று, இரயில்வே எஸ்.பியாக மாற்றி, முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றவர்…
காக்கி சட்டை போட்டலே… சூடு சொரணை எல்லாம் காணாமல் போய்விடுமா..?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 69 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3550
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week61933
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month195891
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12718010