முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
அன்னமிட்ட கை. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 01 பிப்ரவரி 2011 08:35

 

என்னடா இது சவுக்கு எம்ஜிஆர் விசிறி ஆகி விட்டதா என்று பார்க்காதீர்கள். இது நிஜ வாழ்வில் நாம் பார்க்கும் ஒரு அன்னமிட்ட கை.

அதுவும் அன்னமிட்ட கைக்குச் சொந்தக் காரர் ஒரு காவல்துறை உயர் அதிகாரி என்பதை அறிந்தால் அதிர்ந்து போவீர்கள்.   ஆம் தோழர்களே… அந்த அன்னமிட்ட கைக்குச் சொந்தக் காரர் காவல்துறை அதிகாரி தான்.

அவர் வேறு யாருமல்ல…. ? குடியரசு தினத்தை முன்னிட்டு, சவுக்கிடம் பல்லாங்குழி விருது பெற்றார் அல்லவா ? அதே துக்கையாண்டி தான்.

thukkiandi

இவர் இப்போது கூடுதல் டிஜிபி பதவி உயர்வு பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறையில், கூடுதல் இயக்குநராக இருக்கிறார்.

இதற்கு முன் சிபி.சிஐடியில் ஐஜியாக பணியாற்றினார்.   காவல்துறையில் இருக்கும் பல பசுத் தோல் போர்த்திய புலிகள் போலவே இவரும் ஒரு பசுத் தோல் போர்த்திய புலி என்பதை, சவுக்கு தனது வாசகர்களுக்கு ஏற்கனவே தோலை அகற்றிக் காட்டியிருக்கிறது.

 

அவர் தான் இந்த அன்னமிட்ட கைக்குச் சொந்தமானவர். அவர் கூடுதல் டிஜிபி பதவி உயர்வு பெற்றதையும், மகள் திருமணம் முடித்ததையும் கொண்டாடும் விதத்தில் அன்னமிட்டார். யாருக்கு அன்னமிட்டார் ?   லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்குத் தான். ஆம் தோழர்களே…

 

நேற்று சென்னையில் பணியாற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் கறி விருந்து. இந்த விருந்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வாரமாகவே செய்யப் பட்டு வந்தன.   இந்த ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வதற்காகவே, ஒரு டிஎஸ்பியும் ஒரு ஆய்வாளரும், இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் நான்கு காவலர்களிடம் பிரத்யேகமாக இப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது.

 

பிரியாணி விருந்து போடுவதற்கு எதற்கு டிஎஸ்பி என்று கேட்காதீர்கள்…. கறி சரியாக வேகவில்லை என்றால் “அய்யா“ கோபித்துக் கொள்ள மாட்டார் ?

 

காவல்துறையில் முக்கிய வழக்குகளில் புலனாய்வு செய்வதற்காக தனிப்படை அமைப்பதை கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா ?

 

அதே போல இந்த டிஎஸ்பியையும், அவருடைய குழுவையும், “பிரியாணிப் படை“ என்று அழைக்கலாம் தானே…. ?

 

இந்த பிரியாணிப் படை கடந்த வாரம் முழுக்க பம்பரமாய் வேலை செய்தது. பிரியாணிக்கான ஏற்பாடுகளை செய்வது முதற்கொண்டு, பிரியாணி விருந்துண்ணுபவர்களை அழைப்பது முதற்கொண்டு, அத்தனை வேலைகளையும் செய்தது.

 thukkiandi1

லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமையகத்தைத் தவிரவும், நகரப் பிரிவுகள் 1, 2, 3, 4, 5 மற்றும், சிறப்புப் பிரிவு 1 மற்றும் 3 பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் விருந்துக்கு அழைக்கப் பட்டனர்.

 

மதியம் 1.30 மணிக்குத் தொடங்கிய விருந்து, 3.30 மணி வரை நீடித்தது. கழுத்து வரை பிரியாணி தின்ற பிறகு, எந்த ஊழியராவது மதியத்துக்கு மேல் வேலை செய்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ?   நல்ல நாளையிலேயே கேட்க வேண்டாம். இது போல பிரியாணி போட்டால் கேட்க வேண்டுமா என்ன ?

 WhatYouEat

இந்த பிரியாணி விருந்தில், அத்துறையில் பணியாற்றும் துப்புறவாளர்கள், தண்ணீர் ஊற்றுபவர்கள், போன்ற விளிம்பு நிலை மக்கள் கலந்து கொண்டது, சவுக்குக்கு சந்தோஷமே….   ஆனாலும், ஊரில் தீண்டத் தகாதவர்களுக்கு விருந்தின் மிச்சம் வழங்கப் படுமே, அது போலவே, விருந்து முடிந்தவுடன் தான் இவர்கள் உண்ண அனுமதிக்கப் பட்டார்கள் என்பது வேதனையான விஷயம்.

 

சில காவல்துறை அதிகாரிகள், துக்கையாண்டியைப் பற்றி சவுக்கில் எழுதுவது குறித்து வருத்தத்தையும், கோபத்தையும் தெரிவித்தார்கள். அவர் ஒரு நேர்மையான அதிகாரி என்று கூறினார்கள்.   அவர் நேர்மையான அதிகாரி அல்லவே அல்ல என்பது சவுக்குக்கு நன்கு தெரியும்.   மற்றவர்கள் வெளியில் தெரிந்து செய்வதை, இவர் மறைமுகமாகவும், தந்திரமாகவும் செய்கிறார், அவ்வளவு தான்.

 

அதே அதிகாரிகள் இந்தக் கட்டுரையைப் பற்றி, பிரியாணி போட்டதற்கெல்லாம் குற்றம் சாட்டுவதா என்று கடிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. இந்தக் கட்டுரையை முழுமையாக படித்து விட்டு, அந்த அதிகாரிகள் சவுக்குக்கு தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

 

பசித்தவர்க்கு உணவிடுவதென்பதை தமிழ்ச் சமுதாயம் மிகப் பெருமையாகவே கருதி வந்திருக்கிறது.  உணவென்று வந்த சிவனடியாருக்கு உணவளிக்க அரிசி இல்லை என்பதற்காக, நட்ட விதை நெல்லை, எடுத்து கழுவி, காய வைத்து, குத்தி, அரிசியாக்கி, விருந்து படைத்த சான்றுகள் நம் இலக்கியங்களில் உண்டு.

 

ஆகையால் உணவிடுவது தவறில்லை. ஆனால் யாருக்கு ?   யார் இந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்கள் ? அரசு ஊதியம் வாங்கிக் கொண்டு, போலிப் பயணப்பட்டியல் தயாரித்து அரசு பணத்தை கொள்ளையடித்து, ரகசிய நிதியை மாதந்தோறும் கபளீகரம் செய்து, கொழுத்த இரை உண்டு நகர முடியாமல் புரண்டு கொண்டிருக்கும் மலைப்பாம்புகளைப் போல இருப்பவர்கள்.

 3d699_comermuito

பசித்தவனுக்கு பத்து பைசா கொடுக்க மறுப்பவர்கள்.   நான், எனது குடும்பம், என்பதைத் தவிர வேறு எதையுமே அறியாதவர்கள்.

 

இவர்களுக்கா கறி விருந்து ?   தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம் போன்ற நாட்களில், நட்சத்திரங்களும், சமூகத்தில் முக்கியமானவர்களும், அனாதை விடுதிகளுக்குச் சென்று, அந்தக் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கி வந்தார்கள் என்று நாம் செய்தித் தாள்களில் படித்திருக்கிறோம்.   அச்செய்தியை படித்த உடனேயே, நாம் இதெல்லாம் “ஸ்டண்டுப்பா“ என்று அலட்சிய வார்த்தையையும் உதிர்த்திருக்கிறோம். ஸ்டண்டாகவே இருக்கட்டும். ஆனால், தாய் தந்தைப் பாசத்தை அறியாத, அந்த அநாதைப் பிஞ்சுகள் முகத்தில் ஏற்படும் ஒளியைப் பார்த்திருக்கிறீர்களா ? அந்த ஒளியைக் காணவே, எத்தனை ஸ்டண்டுகளை வேண்டுமானாலும் இந்த நட்சத்திரங்கள் நடத்தட்டுமே… !

 

சவுக்குக்கு, ஓரிரு முறை, சேலத்தில் உள்ள லோட்டஸ் என்ற அனாதை விடுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.   தங்கள் பிறந்த நாளை முன்னிட்டு, உணவு வழங்கும் அந்த விஐபிக்கள் அமர்ந்திருக்கும் போது, உணவு உண்ணும் அந்தக் குழந்தைகள், இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு, உணவு அளித்த விஐபியை வாழ்த்தி விட்டு, அவருக்காகவும் இறைவனை வேண்டி விட்டு, உணவு உண்டு முடிந்ததும் அந்த விஐபிக்கு முத்தம் கொடுப்பார்கள் பாருங்கள்….. அப்பப்பா …. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நாட்கள் உணவிடலாம் அய்யா.

 Picture_047

சேலம் லோட்டஸ் உறைவிடத்தில்

 

இது போன்ற அனாதை விடுதிகளுக்கு துக்கையாண்டி உணவளித்திருக்கலாம் தானே… ? அந்தக் குழந்தைகளின் வாழ்த்தை விடவா, லஞ்ச ஒழிப்புத் துறையின் சுயநலமிகள் வாழ்த்தி விடுவார்கள் ?

 

அன்பார்ந்த துக்கையாண்டி.... இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை.  இன்று தேதி ஒன்று.  புதிதாக திருமணமான உங்கள் மகளையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு, நீங்களும், உங்கள் மனைவியும், ஏதாவதொரு அனாதைக் குழந்தைகள் ஆசிரமத்திற்கு சென்று, இதே போல, (சொந்தக் காசில்) விருந்து கொடுங்கள் அய்யா.   அந்தக் குழந்தைகளின் மனதில் உள்ள சந்தோஷத்தைப் பாருங்கள்.   பிறகு நீங்களே சவுக்கை அழைத்து நீ சொன்னது சரி என்று சொல்லுவீர்களா இல்லையா என்று பாருங்கள்.  இன்றும் ஒன்றரை ஆண்டுகள் உங்களுக்கு அரசுப் பணி இருக்கிறது.   

 

துக்கையாண்டியை ஒரு பிரியாணி மாஸ்டர் என்று அழைக்கும் அளவுக்கு, பிரியாணி விருந்து வைப்பதில் மன்னன்.

 thukkiandi12

எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கு இருக்கிறதல்லவா ? அந்த வழக்கை சிபி.சிஐடியில் ஐஜியாக இருக்கும் போது துக்கையாண்டி தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.   அந்த வழக்கில் நெடு நாட்கள் துப்புத் துலங்காமலேயே இருந்தது.

 

அவ்வழக்கில் சம்பந்தப் பட்ட பானு என்ற பெண்மணி உளறியதால், வழக்கில் துப்பு துலங்கியது.   துலங்கியதும், மேலும் சிலர் கைது செய்யப் பட்டார்கள். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சவுக்கோடு, சிபி.சிஐடி லாக்கப்பில், இரண்டு பேர், காலில் விலங்கிடப்பட்டு ஜட்டியோடு உட்காரவைக்கப் பட்டு இருந்தார்கள்.   அவர்களிடம் எத்தனை நாட்களாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பத்து நாட்களாக வைத்திருக்கிறார்கள். எதற்கு என்று கேட்டதற்கு, விஜயன் என்பவர் கொலை செய்யப் பட்டது தொடர்பாக வைத்திருக்கிறார்கள். அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். பத்து நாட்களாக அடி பின்னி விட்டார்கள் என்றார்கள். இதுதான் சிபி.சிஐடி போலீசாரின் விசாரணையின் லட்சணம்.

 

அந்த வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப் பட்டதும், இதே போல துக்கையாண்டி பிரியாணி விருந்து வைத்தார். அந்த விருந்துக்காக, ரகசிய நிதியிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவிடப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. லஞ்ச ஒழிப்புத் துறை பிரியாணிக்கு ரகசிய நிதி எடுக்கப் பட்டதாக தகவல்கள் இல்லை என்றாலும், துக்கையாண்டி, தனது சம்பளத்திலிருந்து செலவழித்திருப்பார் என்பதில் சவுக்குக்கு நம்பிக்கை இல்லை.

 

அந்த ஒன்றரை லட்ச ரூபாய் ரகசிய நிதி, வயிற்றுக்கில்லாதவர்களும், ஏழைகளும், சாக்கடையில் அடைப்பை எடுப்பவர்களும், குப்பை அள்ளுபவர்களும் கட்டும் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கப் பட்டதல்லவா ?   வயிற்றுக் கில்லாதவர்கள் கட்டும் வரி பணத்திலிருந்து, உண்டு கொழுத்தவர்களுக்கு விருந்து வைப்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவுக்கு மோசமான ஒரு விஷயமாகவே சவுக்கு பார்க்கிறது.

 

அடுத்த விஷயம், இந்த விருந்து நடைபெற்ற நேரம். சிபி.சிஐடி விருந்தாவது, அலுவலக நேரம் முடிந்து, மாலையில் நடைபெற்றது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை பிரியாணி விருந்து என்பது, பகல் நேரத்தில் நடைபெற்றது.   இந்த விருந்தில் கலந்து கொள்ள, லஞ்ச ஒழிப்புத் துறையின் நகரப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அரசு வாகனத்தில், அரசு ஓட்டுனரை வைத்து ஓட்டி, அரசு டீசலில் வந்தார்கள்.

 IMG_8777

இந்த ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு ஊதியம் இருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள் ?   அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள், அரை மணி நேரத்தில் மதிய உணவை முடித்துக் கொள்ள வேண்டும் என்றுதானே, மாவட்ட அலுவலக நடைமுறை நூல் சொல்கிறது ?

 

இத்தனை அயோக்கியத்தனங்களை அரங்கேற்றும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் ஊழியர்களை ஊழல் வழக்கில் சிக்க வைக்க என்ன முகாந்திரம் இருக்கிறது ?

 

இதே போல பிரியாணி விருந்து போட்டு அரசுப் பணத்தை விரயமாக்கிய மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி, நாஞ்சில் குமரன்.

 

அப்போதெல்லாம் மாதந்தோறும் பிரியாணி விருந்து நடக்கும்.   ஊழியர்களுக்கு, பிரியாணி விருந்தென்றால், அவ்வளவு சந்தோஷம். அந்த விருந்துக்கான காரணம், நாஞ்சில் குமரனும், மற்ற அதிகாரிகளும், ரகசிய நிதியிலிருந்து அடிக்கும் கொள்ளைக்கு கைமாறாகத் தான் என்பது எந்த ஊழியர்களுக்கும் புரியாது.   சவுக்கு இந்த விஷயத்தைப் பற்றி விளக்கிக் கூறினாலும், அதற்கு அவர்கள் அளிக்கும் பதில் “அவங்கல்லாம் ஆபிசருங்கம்மா. அவங்க இதாவது தர்றாங்களேனு சந்தோஷப் படும்மா“ என்று சவுக்குக்கே சமாதானம் சொல்லுவார்கள். இதுதான் அத்துறை ஊழியர்களின் மனநிலை. இது போல அடிக்கடி பிரியாணி விருந்து நடந்து வந்த போது, நாஞ்சில் குமரன் மாறுதலாகி, உபாத்யாய் வருகிறார்.

 

உபாத்யாயிடம், பயந்து பயந்து, பொன்னுச்சாமி என்ற டிஎஸ்பி இந்த பிரியாணி விபரத்தை சொல்லியவுடன், உபாத்யாய் என்ன சொன்னார் தெரியுமா ? எதற்காக பிரியாணி… ? இவர்கள் சம்பளம் வாங்கவில்லை ? அரசுப் பணத்தை இது போல பிரியாணி போட்டு செலவு செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? என்று சத்தம் போட்டார். இன்றோடு இதை நிறுத்துங்கள் என்று உத்தரவிட்டார். உபாத்யாய் இருந்த வரையில் பிரியாணி போடப் படவே இல்லை.

 UPADHYAY

இதே போல உபாத்யாய், மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த போது, ரகசிய நிதியை தேவையற்ற முறையில் செலவி செய்யாமல், சேமித்து, 1.74 லட்சம் தொகையை சேர்த்து வைத்திருந்தார்.   உபாத்யாய் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மாற்றப் பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப் பட்டு, நாஞ்சில் குமரன் மதுவிலக்கு அமல் பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் படுகிறார்.

 

அந்தப் பதவிக்கு நியமிக்கப் பட்ட பத்தே நாட்களில், நாஞ்சில் குமரன் 1.74 லட்சத்தையும் ஆட்டையைப் போட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

 

உபாத்யாய் அந்த பணத்தை செலவழிக்காமல் சேமித்து வைத்தவர். அவர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கு காரணமாக பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். லத்திக்கா சரணை விட பணியில் மூத்தவரான அவர் இன்று வரை டிஜிபி பதவி உயர்வு அளிக்கப் படாமல், அவரது அலுவலகத்தில் ஒரு ப்யூன் கூட இல்லாத வகையில் மாநகர போக்குவரத்துக் கழககத்தின் விஜிலென்ஸ் அதிகாரியாக வைக்கப் பட்டுள்ளார்.

 

நாஞ்சில் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையாளராகி ஓய்வு பெற்றார்.

 

இது போன்ற நேர்வுகள் எல்லாம், நேர்மையாக பணியாற்றுபவர்களுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்தும் சக்தி படைத்தவை.   ஏன் நான் நேர்மையாக இருக்க வேண்டும் ? நான் நேர்மையாக இருப்பதால் எனக்கு மட்டும் எதற்கு இவ்வளவு துன்பம் என்றெல்லாம் தோன்றும்.

 

ஆனாலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உலகமே எதிர்த்து நின்ற போதும், மிக மிக அதிகாரம் வாய்ந்த தேவாலயம் மரண தண்டனை விதித்த போதும், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றானே கலிலியோ… …

 

‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற கொள்கை தவறு, மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னதற்காகவே மரண தண்டனை விதிக்கப் பட்டானே சாக்ரடீஸ்…..

 

தேவாலயம் மிகுந்த அதிகாரத்தோடும், ஆணவத்தோடும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், கடவுள், வானத்தைப் படைத்தார், பூமியைப் படைத்தார், வெளிச்சத்தை படைத்தார், பின்பு மனிதனை படைத்தார் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் தோன்றினான் என்று உரக்கச் சொன்னானே சார்லஸ் டார்வின்….

 

அவர்களைப் பற்றி நாம் இன்றும் பேசிக் கொண்டிருப்பதற்காக காரணம், அவர்கள் மனசாட்சிப் படி, உண்மையை பேசியதுதான்.

 

சுயநலத்திற்காக சோரம் போனவர்கள், வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் மறைக்கப் படுவார்கள்.

 

Comments  

 
+2 #25 PVP 2011-02-09 00:23
துக்கையாண்டி சார், 'செஃப்' போஸ் சூப்பர் சார்! எங்க வீட்டுக்கும் வந்து பிரியாணி ரெசிப்பி சொல்லுங்க சார்! சவுக்குக்கு ஒரு பிளேட் பார்சல் அனுப்புறேன்!
Quote
 
 
+3 #24 Sfk 2011-02-08 17:35
Good work.
May God protect you from evil administration.
Quote
 
 
0 #23 jakkamma 2011-02-04 06:38
Anaathai enra sol thavaru. Aatharavu atravarhal enru sollalaame.
Quote
 
 
+1 #22 sundaram 2011-02-02 22:37
corrupt are mentally affected people. you cant cure the mentally affected so easily. these mentals will be running for money always. they can't stop. if they stop, they will die. they can't live a normal life. let them run to accumulate for the fourth generations. that's their fate. servants and slaves for the fourth generations.
Quote
 
 
0 #21 JP 2011-02-02 12:02
nice
Quote
 
 
0 #20 madhu 2011-02-02 10:17
superappu
Quote
 
 
+2 #19 mahi 2011-02-02 09:52
பல்வேறு நெருக்கடிகளுக்க ு மத்தியிலும், உலகமே எதிர்த்து நின்ற போதும், மிக மிக அதிகாரம் வாய்ந்த தேவாலயம் மரண தண்டனை விதித்த போதும், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றானே கலிலியோ… …



‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற கொள்கை தவறு, மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னதற்காகவே மரண தண்டனை விதிக்கப் பட்டானே சாக்ரடீஸ்…..



தேவாலயம் மிகுந்த அதிகாரத்தோடும், ஆணவத்தோடும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், கடவுள், வானத்தைப் படைத்தார், பூமியைப் படைத்தார், வெளிச்சத்தை படைத்தார், பின்பு மனிதனை படைத்தார் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் தோன்றினான் என்று உரக்கச் சொன்னானே சார்லஸ் டார்வின்….
Quote
 
 
+5 #18 Sundar 2011-02-01 21:30
I'm very moved by this post. You are doing an amazing job and I pray God to continue giving you strength and protection.

Our political system and government machineries are so irrevocably corrupt and I don't think it'll change in our lifetimes. However with people like you, I'm beginning to see light at the end of the tunnel.

THANK YOU for your services. God bless our people.
Quote
 
 
+1 #17 kali.krishna 2011-02-01 20:21
*/நாஞ்சில் குமரன் 1.74 லட்சத்தையும் ஆட்டையைப் போட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?/*

போங்க சவுக்கு, அவனவன் 1000 கோடி 5000 கோடின்னு அடிச்சிட்டு கம்முன்னு இருக்கான். இதெல்லாம் ஒரு மேட்டர் என்று சொல்ல வந்துடீங்கன்னு நாஞ்சில் குமரன் சாரு கோவிச்சுக்க போறாரு.
Quote
 
 
+3 #16 பாரதிக்குஞ்சு, 2011-02-01 20:07
தோழர்களே, முகம் தெரியாவிட்டாலும ் கருத்தால் ஒன்றுபட்ட நண்பர்களே! எவ்வளவு ஊடகங்கள் பத்திரிகைகள், இந்த அரசுமீது அதிகாரிகள்மீது விமர்சனங்களை அதிருப்திகளை தொடர்ந்து தெரிவித்துக்கொண ்டிருக்கின்றன, சரி விமர்சனமில்லாமல ் 100/100 விழுக்காடு எவரையும் திருப்திப்படுத் த முடியாது என்பது உண்மைதான், ஆனால் சமீபகாலமாக சவுக்கு இணையமும், ஆதாரபூர்வமாக "தரவுகளுடன்" வெளியிடும் குற்றச்சாட்டுக் களில் அதி மோசமானவற்றையாவத ு உடனடியாக அரசு கவனத்தில் எடுக்கவேண்டும், இல்லையென்றால் அந்தக்குற்றச்சா ட்டுக் கள் தவறு/ பொய் என்றால் குற்றச்சாட்டின் மீது மாற்று நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், ஆனால் எந்த அசைவும் இல்லை
Quote
 
 
+4 #15 ABDUL AZIZ 2011-02-01 20:04
பெய்ஜிங்,பிப்.1:சீன நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான லியோனிங்கில் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாங் யாங் (56) லஞ்சம் வாங்கிக்கொண்டு சலுகைகளை அளித்ததற்காக மரண தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே சமயம் தண்டனையை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டது.

மாகாண சட்டமன்றத்தின் நிலைக்குழு ஒன்றில் துணைத் தலைவர் பதவி வகித்த சாங் யாங், 23 தனி நபர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ம் அரசாங்க ஒப்பந்தங்களை வாங்கிக்கொடுத்த ார், கடன் வாங்கித் தந்தார், அரசு ஊழியர்கள் சிலருக்குப் பதவி உயர்வும் பெற்றுத்தந்தார் .

இதற்கு பிரதிபலனாக 16 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு இணையான சீன யுவான் நாணயத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டார ்.

லஞ்சப் புகாரின்பேரில் அதிகாரிகள் அவரை விசாரித்தபோது அவர் எதையும் மறைக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டதுட ன் லஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை (செலவழித்தது போக மீதி) பைசா திருத்தமாக ஒப்படைத்துவிட்ட ார்.

அவர்கள் விசாரித்த புகார்களைத் தவிர, அவர்களுக்கே தெரியாத வேறு பல முறைகேடுகளையும் லஞ்சத்தையும் தானாகவே தெரிவித்தார். இதனால் அவருடைய மரண தண்டனையை 2 ஆண்டுகள் ஒத்திவைத்திருக் கிறார்கள்.

இவர் சிறையில் திருந்தி நல்லவராக இருந்தால் தண்டனை மேலும் குறைக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவருகிறது.

தினமணி
Quote
 
 
+4 #14 anonymous 2011-02-01 19:32
காவல் துறையில் இதை விட நிறைய கேவலங்கள் நடைபெரும் . பணியில் உயிரிழந்த காவலர் நினைவு தினத்தில் கலந்து கொள்ள கூட அதிகாரிகள் மட்டத்தில் விருப்பம் இருந்தது இல்லை, அங்கு வரும் பத்திரிக்கைகாரன ுக்கு நடக்கும் உபசரிப்பு சொல்லி மாளாது, அதற்காக இந்த ஈன பயல்கள் போடும் ஆட்டம் ஐயோ அப்பா, ஆனால் அதற்காக பணியாற்றும் கடை நிலை ஊழியர்கள் பற்றி யோசித்ததே இல்லை,

அப்பொழுது நான் சொன்ன வாசகம்,

"இப்படி சாவடிச்சிட்டு அத நினைவுபடுத்த ஒரு நாள் வேற, எழவு.... இதுக்கு இந்த நாளே வேண்டாம், தூ...................." :sad:
Quote
 
 
0 #13 jai 2011-02-01 19:25
All problem in India from every nook and corner can only be solved if "PEOPLE ARE UNITED". But they change their self-image just for 100 rupees, they are splitted due to caste, religion, politics etc.... Either "PEOPLE SHOULD BE UNITED" or some leader like our sir should be born again....
Quote
 
 
+14 #12 பரதேசி 2011-02-01 19:06
சவுக்கு, திமுக அரசாங்கம் உங்களுக்கு எதிராய் காய் நகர்த்தி வருகிறது. சவுக்கு சங்கர் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர்
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையின் ஊழியர் சங்கர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளன ர். இவரின் கைது தொடர்பான தகவல்களும் அரசின் உயர் அதிகாரிகளையும் பற்றியும் சவுக்கு இணையதளத்தில் எழுதப்படும் பதிவுகள் கவனிப்புக்கு உள்ளாகின. இதனால் சங்கர் சவுக்கு சங்கர் என அழைக்கப்படுகிறா ர். அண்மைக்காலமாக, சவுக்கு தளத்தில் திமுக ஆட்சியைப் பற்றியும் உளவுத்துறை உயர் அதிகாரிகளைப் பற்றியும் மீண்டும் காட்டமாக எழுதப்படும் நிலையில், சங்கர் மீதான வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக என். ஆர். இளங்கோ நியமிக்கப்பட்டு ள்ளார்.

சிபிசிஐடி கூடுதல் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரத்தின் பரிந்துரையின்பட ி உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளா ர்.

செய்தியைப் படித்ததும் பக்கென்றாகி விட்டது. வெகு ஜாக்கிரதையாய் இருங்கள் சவுக்கு. உங்களை நினைத்துக் கவலையாய் இருக்கிறது சார். மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. உங்களுக்கு ஒன்றும் ஆகி விடாமல் இருக்க, இதோ இறைவனிடம் வேண்டிக் கொள்ள கோவிலை நோக்கி ஓடப்போகிறேன். கடவுள் உங்களுடன் துணையிருப்பார் சவுக்கு. ஜாக்கிரதை.
Quote
 
 
-1 #11 Manisankar 2011-02-01 18:36
Why no information on Thilagavathi IPS? Do you think she is a honest officer?
Quote
 
 
+5 #10 ஏகா.. 2011-02-01 17:42
மதுரையில்,அட்சய ா கிருஷ்ணன்.. தினமும் நூற்றுக் கணக்கான ரோட்டோர வாழ மக்களுக்கு மூன்று வேலையும் உணவளித்து வருகிறார்.. சி.என்.என் தேர்ந்து எடுத்த உலகின்
முதல்பத்து தலைசிறந்த மனிதர்களில் இவரும் ஒருவர்..
http://edition.cnn.com/SPECIALS/cnn.heroes/archive10/naryanan.krishnan.html
http://www.akshayatrust.org/

அதுவும் சாதாரண ஆள் கிடையாது.. வெளிநாட்டில் சிறந்த சமையற்கலை நிபுணராக பணியாற்றி வந்தவர்.. அவற்றை எல்லாம் உதறி விட்டு, முழுநேரமும் இப்பணியை செய்து வருகிறார்..
Quote
 
 
+4 #9 Shanthi 2011-02-01 16:03
wonderful job... well done Savukkuu.... :-)
Quote
 
 
+17 #8 sakthy 2011-02-01 14:43
ஒரு பக்கம் கண்ணீர் மறுபக்கம் கவலை. இந்த அநாதை குழந்தைகளை கண்டு கொள்ள இந்த பெருசாளிகள் மறந்து விடுகின்றனர். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில ் ஒரு அநாதை விடுதி குழந்தைகளை அழைத்து பொங்கல் விழா நடத்தினார்கள். இந்தக் குழந்தைகளையும், நிகழ்சியில் கலந்து கொண்ட மற்ற குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்த போது கண்ணீர் வந்தது.பட்டுப் பாவாடையுடன் ஒரு சிலர்,ஏழ்மைக்கே உரிய உடையுடன் வேறு சிலர்.அந்த ஏழைக் குழந்தைகளிடம் இருந்த ஏக்கம் கண்ணில் நீரை வரவழைத்தது. இளமையில் வறுமை கொடியது./இவர் மறைமுகமாகவும், தந்திரமாகவும் செய்கிறார்,/கருணாநிதியிடம் கற்றுக் கொண்டிருப்பாரோ. உண்மையில் சவுக்கு தமிழ் விக்கிலீக்ஸ் தான். வாழப் போகும் சில நாட்களில் நல்லதை செய்ய,தப்பை மறந்து முன் வர வேண்டும்.இவர்கள் ஒரு சிலரின் தப்பான சுயநல செயல்கள் பல இலட்சம் மக்களை பாதிப்பதை உணருவார்களா.
Quote
 
 
-4 #7 tweety 2011-02-01 14:01
you are f**king amazing
Quote
 
 
+7 #6 குசும்பன் 2011-02-01 13:31
+மற்றவர்கள் வெளியில் தெரிந்து செய்வதை, இவர் மறைமுகமாகவும், தந்திரமாகவும் செய்கிறார், அவ்வளவு தான்
#என்ன நம்ம முத்தமிழ் வித்தகர் போல் னு சொல்லுறீங்க.

+நட்ட விதை நெல்லை, எடுத்து கழுவி, காய வைத்து, குத்தி, அரிசியாக்கி, விருந்து படைத்த சான்றுகள் நம் இலக்கியங்களில் உண்டு
#அது யாரு நடிச்ச படம்ங்க?

+மலைப்பாம்புகளை ப் போல இருப்பவர்கள்.
#சின்ன திருத்தம் நம்ம தலித் கதிரவன் ஆட்டம்ன்னு சொல்லுங்க.

+ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நாட்கள் உணவிடலாம் அய்யா
#.எத்தின சுளியம் வருங்க?

+குழந்தைகளின் வாழ்த்தை விடவா, லஞ்ச ஒழிப்புத் துறையின் சுயநலமிகள் வாழ்த்தி விடுவார்கள் ?
#தொழில் தர்ம கூட்டாளிங்கள உட்டுட முடியுங்களா?

+மாவட்ட அலுவலக நடைமுறை நூல் சொல்கிறது.
# நைலோனா, பருத்தியா? வீட்டுக்கும் கொஞ்ச நூல் தேவைப்படுது, ஒருத்தனும் சொல்லவேயில்லையே .

+அரசு வாகனத்தில், அரசு ஓட்டுனரை வைத்து ஓட்டி, அரசு டீசலில் வந்தார்கள்
#அரசு? அப்புடின்னா என்ன? தலிவர் "குடுப்பம்" ன்னு கரக்கட்டா சொல்லுங்க.

+அரசுப் பணத்தை விரயமாக்கிய மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி, நாஞ்சில் குமரன்.
#பேரு மட்டும் ஒண்ணும் கொறச்சலில்லை<

+நாஞ்சில் குமரன் 1.74 லட்சத்தையும் ஆட்டையைப் போட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
#கறுப்பி கனி, மாமா ராசா, அடிச்சத்துக்கு இத ஒரு கணக்குன்னு சொல்றீங்க,

+தேவாலயம் மரண தண்டனை விதித்த போதும், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றானே கலிலியோ…
# இப்ப மட்டும் என்னவாம் (தீ)முக சூரியன சுத்துங்கன்னுதா னே தலவர் சொல்ல்றாரு.

+பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் தோன்றினான் என்று உரக்கச் சொன்னானே சார்லஸ் டார்வின்…
#அப்போ நம்ம தலவருக்கு அது கொறஞ்சுத்தான் ஒத்தகண்ணு இல்லாம வண்டியில் வந்திட்டிருக்கா ரா>

+சுயநலத்திற்காக சோரம் போனவர்கள், வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் மறைக்கப் படுவார்கள்.
#முசோலினியயும் ஹிட்லரயும் மறச்சா வச்சிருக்கானுக?
Quote
 
 
+9 #5 498ஏ அப்பாவி 2011-02-01 12:12
..அவர்களைப் பற்றி நாம் இன்றும் பேசிக் கொண்டிருப்பதற்க ாக காரணம், அவர்கள் மனசாட்சிப் படி, உண்மையை பேசியதுதான்...

ஆம் உண்​மை...
Quote
 
 
+5 #4 Sivaram 2011-02-01 11:57
Excellent posting and justification. keep it up.
Quote
 
 
+5 #3 saran 2011-02-01 11:18
Evergreen Truth!!
Quote
 
 
+14 #2 டத்தோஸ்ரீ 2011-02-01 10:30
அப்படின்னா பதவிக்காக பணத்துக்காக வீட்டில யாரையும் கூட்டி கூட விடுவனுங்கன்னு சொல்வதெல்லாம் உண்மைதானோ?
Quote
 
 
+9 #1 AMDHARAN 2011-02-01 10:29
Very nice article. My salute to people like Upadhaya
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 134 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11788
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week69365
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month291625
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13207992