|
பாட்டாளி மக்கள் கட்சிக்கு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 28 இடங்களும், 2013ல் காலியாக உள்ள ராஜ்ய சபை இடத்தில் அன்புமணி ராமதாஸுக்கு மன்னிக்கவும், சின்ன அய்யாவுக்கு ஒரு இடமும் ஒதுக்க திமுக தலைமை ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த இடங்கள் ஒதுக்குவது குறைவே என்றாலும்,தற்போது உள்ள அரசியல் சூழலில், அரசியல் அனாதை ஆவதை தவிர்க்கும் பொருட்டு, கொடுத்ததை வாங்கிக் கொண்டு கரை சேரலாம் என்று ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொள்முதல் செய்வதற்கான அனைத்துக் கட்சிக் குழுவில் கலந்து கொண்ட கோ.க.மணி (ஜி.கே.மணி இல்லை. கோ.க.மணி, தமிழார்வமாம்) இன்று கலந்து கொண்டார். நேற்று, கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியிடம் 28 தொகுதிகள் என்ற எண்ணிக்கையையும், எந்தெந்த இடங்கள் என்ற விபரத்தையும் எழுதிக் கொடுத்ததில், அன்புமணிக்கு ராஜ்ய சபா இடம் என்ற ஒரே ஒரு மாறுதலோடு பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்தனுப்பிய காகிதத்தை, கோ.க.மணி கருணாநிதியிடம் இன்று ரகசியமாக வழங்கினார் என்றும், அந்த காகிதத்தை பார்த்த கருணாநிதி, தனது சம்மதத்தை கோ.க.மணியிடம் தெரிவித்தாகவும் தெரிகிறது.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி குழுக் கூட்டத்தில் கருணாநிதி அருகில், கோ.க.மணி
இதற்கான வெளிப்படையான அறிவிப்பு, காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகே வெளியிடப் படும் என்றும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு இத்தனை இடங்கள் ஒதுக்கி ஒப்பந்தம் நடைபெற்று விட்டது, அதனால், உங்களுக்கு இத்தனை இடங்கள் தான் தர இயலும் என்று, காங்கிரஸ் கட்சியை கிடுக்கிப் பிடி போடவும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்றும் தெரிகிறது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்களும், திமுக வட்டாரங்களும் இத்தகவலை உறுதி செய்ய மறுத்துள்ளன.

அன்பு மணி ராமதாஸுக்கு ராஜ்ய சபை சீட் கேட்டதற்கான பின்னணி, "நைனா... என்னை எம்பியாக்கு நைனா." என்று அன்புமணி தனது தந்தையுடன் மிகுந்த அடம் பிடித்ததே என்று தெரிகிறது. மக்கள் மன்றத்தில் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமலேயே, மத்திய அமைச்சராகி ஐந்து வருடங்கள் பிழைப்பை ஓட்டிய அன்புமணி, மீண்டும் எம்.பியானால், காங்கிரஸ் கையில் காலில் விழுந்தாவது அமைச்சராகி விடலாம் என்று உத்தேசித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
|
Comments
யார் காலில் யார் வீழ்வது கடந்த மருத்துவர் அய்யா அவர்கள் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகளுக்கு திமுக,காங்கிரசு தான் எங்கள் மருத்துவர் காலில் விழவேண்டும்..தைரியத்துடன் சவுக்கடி கொடுக்கும் நீங்கள் ஏனோ இவ்வளவு தரம் தாழ்ந்து எழுதுகிறிர்கள்...
(பேருக்கு ஏத்தமாதிரிதான் கருத்தும் இருக்கு.இப்படிபட்ட கோமாளிகள் இருக்குவரை எத்தனை பேமாளிகள் வேண்டுமானாலும் பல ராமதஸ்களாக உருவாவர்.தைரியம் இருந்தால் தனித்து நிக்கச்சொல்லவும ்.)
neengal thappaaga purinthu kondeerkal Mr. Italian. Naan solla vanththu Pa.Ma. Ka. oru katchi illai entraal athai patri vimarsanam seithu yen antha katchiyaiyo allathu athai sarnthavarkalai yo periya aalaaga aakka vendum.
Ennudaiya karuthu ithuthane ozhiya verillai. mattra padi ingu ellorukkum ellam kidaithidal vendum. athu uyarnthavan aanalum sari thazhnthavan aanalum sari. jaathi ingu kidaiyaathu.
matra jaathiyaiyum ingu yaarum thittavum koodathu.
1. ஆனந்த் சர்மா, 2. ஏ.கே. அந்தோணி, 3. அசுவினி குமார், 4. குலாம் நபி ஆசாத், 5. முரளி தியோரா, 6. விலாசுராவ் தேசுமுக், 7. எம். எசு. கில், 8. எசு. எம். கிரிருட்டிணா, 9. செயராம் ரமேசு, 10. வயலார் ரவி, 11. முகுல் ராய், 12. மன்மோகன் சிங், 13. அம்பிகா சோனி, 14. சி.கே. வாசன் - ஆகிய 14 பேர் இப்போது கொல்லைப்புற வழியாக வந்து நடுவண் அமைச்சராக இருக்கிறார்கள். இவர்களிடம் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.
4. பா.ம.க'வினர் எவரும் "மக்கள் மன்றத்தில் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமலேயே, மத்திய அமைச்சராகி ஐந்து வருடங்கள் பிழைப்பை ஓட்டிய அன்புமணி" என்று கருதவில்லை. அப்படி எவரும் கூறவும் இல்லை. மாறாக பா.ம.க'வை ஆதரிக்கும் வன்னியர்கள் தமது குடும்பத்தில் ஒருவர் அமைச்சரானதாகவே அப்போது கருதினர்.
1. எவரும் மாநிலங்களவை உறுப்பினர் ஆக அரசியல் சட்டப்படி வாய்ப்பு இருக்கிறது. அந்த வழியை பயன்படுத்துவதில ் என்ன தவறு என்பதற்கு ஒரு காரணமும் இல்லை.
2.நாட்டின் பிரதமர் கொல்லைப் புற வழியாகத்தான் வந்திருக்கிறார் . அது தவறு என்று விமர்சிப்பவர்கள ் - அரசியல் அமைப்பிலிருந்து மேலவையை தூக்க முயலட்டும், அதைவிடுத்து விமர்சிப்பது தேவையற்றது.
வெரி குட்
சரியாக சொன்னீர்கள்
தமிழகத்தில் யார் நல்ல இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன
வன்னியன் வாழ்ந்தால் போதும்
மற்றவர்கள் எல்லாம் தேவடியா புள்ளிகள்
வாழ்க வன்னிய இனம்
இந்த ரோசம் 40 எம்.பிக்கள ராஜினாமா செய்யச் சொன்னப்ப, காட்டிருக்க வேண்டியது தானே..? அப்ப கலெக்ஷன் பணத்தை எண்ணிகிட்டு இருந்தீரோ....?
இவர்கள் நடத்திய போராட்டங்கள் பல.
1. மது ஒழிப்பு போராட்டம்.
2. ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தார்கள் .
3. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கொள்ளை போவதை எதிர்த்தார்கள்.
4. மணல் கொள்ளையை எதிர்த்தார்கள்
இன்னும் பல.
மேலும் மக்கள் டிவி யில் தமிழ் ஈழ பெண்ணுக்கு செய்தி வாசிக்க வேலை கொடுத்து உள்ளார்கள். வேறு ஏதாவது டிவி இதுபோல் அணு மதித்து உள்ளதா.
தயவு செய்து காழ்ப்புணர்ச்சி யில் எதை வேண்டுமானுலும் எழுதாதிர்கள். எப்படி பார்ப்பினியம், தலித் பற்றி எழுதும் போது அதை சார்ந்தவர்களுக் கு கோவம் வருகிறதோ அது போலத்தான் . பா.ம.க வை பற்றி பேச வன்னியர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. ஏன் எனில் ராமதாஸ் ஏமாற்ற நினைத்தால் இவர்களை தான் ஏமாற்ற முடியுமே தவிற பிறரை அல்ல. மற்றவர்கள் ஏன் ஏமாறுகிறீர்கள் .
மவனே பொதுமக்கள விட்டுப்புட்டு, ஒங்கபாட்டுக்கு வீட்டோட நடத்துங்க, எவன் கேக்கப்போறான்,அ த விட்டு கூட்டம்போட்டு உசுப்பேத்தி எங்கதலயில மொளகா அரச்சி மந்திரிப்பதவிக் கு தூண்டில் போட்டா கேக்கத்தான் செய்வோமுங்க,
எந்த அரசியல் கட்சியையும் விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு.
யாரோ ஒருவர் மலேசியாவில் கேட்டார் என்பதற்காக இங்கே வந்து மாற்றுவது தமிழுணர்வு இல்லை என யார் சொன்னது?.
கோ.க.மணியின் அனைத்து செயலையும் நான் ஆதரிக்கவில்லை. கருணாநிதியின் நடிப்பு பல்லாயிரக்கணக்க ான மக்களை அழித்தது. கோ.க.மணியின் இந்த செயலால் ( இது நடிப்பே ஆனாலும் ) யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை. இது தான் பெரிய வித்தியாசம். அதனால் தான் அவரின் பெயர் மாற்றத்தை நான் பாராட்டுகிறேன். இதற்கு மேல் இதைப் பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இந்த கட்டுரையில் முக்கியமான விஷயம் இதுவல்ல.
முத்தமிழ் வித்தகர்?,, இராமதாசு?,, தொல். திருமாவளவன்?,. கோ க மணி?,, சுப வீரபாண்டியன்?,,இந்த அரசியல் வியாபாரிகள் ஒருவனாவது உண்மையாக
நடந்திருக்கிறான ுகளா? டொக்க்டர் மாணிக்கம் சேர், தவிச்ச வாய்க்கு தண்ணிர் தரமறுத்து தாலியறுத்த கூட்டங்கள், பெயரில் மட்டும் கொம்பன் சிங்கன்
குலோத்துங்கன் என்று உசுப்பேத்தாமல், தமக்குப்பொருத்த மா குரங்கு,கோட்டான ், நரி,கொலைகாரன் என்று உண்மையை வைக்கலாமே, நான் வேறு
நாட்டுக்காரன் இருந்தும் மேலே குறித்த வியாபாரிகளை பலகாலங்களாக மனதார நம்பி ஏமாந்தவன்.
தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு ஒரு தமிழ் எதிரியை (ஜெயலலிதா) எப்படியாவது தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்க நீங்கள் ஒரு தமிழ் பாதுகாவலன் போல காட்டிகொண்டு நடத்தும் நாடகங்களை நானும் பார்க்க தான் செய்கிறேன். என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் மீண்டும் திமுக ஆட்சியில் வருவது உறுதி. திரு சங்கர் அவர்களே நீங்கள் இந்த பின்னூட்டத்தை போட்டால் உடனே சில அறிவு ஜீவிகள் POOR COMMENT கொடுப்பார்கள். நீங்கள் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமானவர்கள ் என்பதை அறிய அந்த அறிவு ஜீவிகளை இந்த link சென்று பார்க்க சொல்லுங்கள்.
http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=297:2011-01-08-15-24-26&catid=1:2010-07-12-16-58-06&Itemid=௨
நீங்கள் கருணாநிதி மற்றும் அவரை சேர்ந்தவங்கள் மட்டுமே தவறு செய்தவர்களை போல சொல்கிறீர்கள். அப்படியானால் ஜெயலலிதா தவறே செய்யவில்லையா. ( உடனே ரெண்டையும் COMPARE பண்ண வேண்டாம்). இவ்வளவு சொல்லும் நீங்கள் இந்த தமிழ்நாட்டிலே இனி ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ் இல்லாமல் ஒரு ஆளுக்கு ஒட்டு போடா சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது 49 O பத்தி சொல்லலாமே???????????????? தயவு செய்து தமிழ் என்று பேசி ஜெயலலிதாவுக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம்.
முதலில், எந்த ஒரு கட்சியும் நேர்மையாக செயல்படவில்லை. அனைத்து கட்சிகளும் தங்களுடைய உண்மையான நோக்கத்தை மறந்து அல்லது புறக்கணித்து சுய லாபத்திற்காக செயல்படுவது மக்கள் விரோதமே.
இதில், நீண்ட காலம் அரசை நிர்வகித்த கட்சிக்கே அதிக பொறுப்பு. நான்காவது தூணை முடக்க ஏராளமான வழிமுறைகள் ஆள்வோரிடம் உண்டு.
ஒரு சக்திவாய்ந்த அரசை, எதிர் கட்சியோ, பொதுஜனமோ ஏதும் செய்துவிட முடிவதில்லை.
அப்படி நடந்திருந்தால், அ.இ.அ.தி.மு.க. சாராயத்தை அரசே விற்க முயற்சித்ததை, மணல் கொள்ளைக்கு வித்திட்டதை மக்கள் தடுத்திருக்க முடியும் ( இதில், தி.மு.க விற்கு உடண்பாடிருந்ததா ல் அவர்கள் ஏதும் செய்யவில்லை.)
ஜாதிவாரி வாக்கு கணக்கு மற்றும் வேட்பாளர் தேர்வு என்பது அனைத்து கட்சிகளிடமும் உள்ள தேர்தல் வியூகம். பா.ம.க, அதில் வெளிப்படை, மற்ற கட்சிகளின் செயல்பாடு மறைமுகமானது.
தேர்தலுக்கு கூட்டணி மாறும் போக்கு என்பது, விதிவிலக்கிலாமல ் அனைத்துக் கட்சிகளிடமும் உள்ள நடைமுறை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தே.மு.தி.க உள்பட ( மக்களிடம் மட்டும் என்று இருந்தது, அ.இ.அ.தி.மு.க-விடமோ மற்ற ஒருவரிடமோ என்றாகிவிட்டது.) மேலும், அதை தவறாக கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
பொது எதிரியை சந்திக்க கூட்டாக போராடுவது இயல்பு. அரசியல் பரிணாமத்தில், சுய நலம் அதோடு சேர்ந்தது துரதிட்டவசமானது .
மக்களை சந்திக்காமல் பின்வாசல் வழி வந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஏராளம்..... பிரதம அமைச்சர் மன்மோகன் உள்பட.
மக்களை ஏய்க்கும் பாதகர்களைக் கண்டு விலக்கி உண்மையான ஜன நாயகத்தை நிலை நிறுத்த மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட வேண்டும்.
உண்மை. மக்கள் தொலைக்காட்சியின ் தமிழ் சேவை மகத்தானது.
இத இத இதன் கருணாநிதியும் செய்கிறார். அங்கே மக்கள் கொல்லப்படும் போது, இங்கே மனித சங்கிலி, 3 மணி நேர உண்ணாநோன்பு, சட்ட மன்றத்தில் தீர்மானம்.... இது எப்படி நாடகமோ, அதேபோல்தான் கோ.கா.மணியின் நடவடிக்கையும்.
இன்னொன்றையும் பதிவிக்கிறோம். கோ.கா. மணி மேட்டூரை சொந்தமாய் கொண்டவர். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர், ஊரில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் சுற்றிக் கொண்டிந்தார். அப்படிப்பட்டவர் தற்போது சென்னையில் பங்களா என்ன, தனது மகன் தமிழ் மாறன் தான் மக்கள் தொலைக்காட்சியி ன் நிர்வாக இயக்குநர்....என்ன இதெல்லாம் எங்கிருந்து வந்தது. வீரப்பனுக்கும் தமிழ் (கு)(க)டி தாங்கிக்கும் உறவை ஏற்படுத்தியதே இந்த மணிதான். முன்னே சொன்னேனே சென்னையில் பங்காளா... அதுவெல்லாம் வீரப்பனிடமிருந் து பெற்றது என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிந்திருக்கும ்....
இப்ப சொல்லுங்கு, நீங்க ஜி.கே. மணியை பாராட்டலாமா? வேண்டாமா?
.
One wears the Mask and makes to laugh.
The other wears the laugh and makes you weep.
Maniya paartha avaru oorukaey mani adipaaru pola theriyudhu..
Mani ku oru advice yaerkanayae kaniku mani adichavanga mudhalla panatha enunaanga apuram kambinu pala parimanagalla ennikai maarudhu, apo unga gadhi??
pinkuripu, enai thayavu seidhu maniyungal epdi eludhuvadharku, sila unmai ninaithal nenju porupathillayae indha nilai keta maandharai ninaithuvittal..
Mozhi namadhu adayalum, maanam namadhu uyir, edhu erandumae atravan arasiyalvaadhi.
Namaku paadhugaapungra thu egypt maadiri oru kalavaram senju evangala gaali panina thaan.
இது தான் சரியான தலைப்பு.பொருத்தமான தலைப்பு.அதான் அன்புமணியே அழகா கையை தூக்கி அசைக்கின்றாறே போய்ட்டு வாறேன்னு!!!!
நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள். அல்லது நான் சரியாக விளக்கவில்லை. கோ.க. மணியை நான் தமிழ் உணர்வாளன் என சொல்லவில்லை. ஆனால் அவரது பெயர் மாற்றம் என்ற சிறு செயல், சுயநலத்துக்காக செய்து இருந்தாலும் பாராட்டப்பட வேண்டியது தான் என்பது எனது கருத்து.
தமிழர்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆனால் என்னை பொறுத்தவரை தமிழுணர்வு அழிந்ததும் தமிழர்கள் அழிவதற்கு ஒரு காரணம். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
ஆனால் கருணாநிதி போன்ற போலி தமிழுணர்வாளர்கள ் தான் தமிழ் மீது தமிழர்கள் நம்பிக்கை இழப்பதற்கு முதல் காரணம்.
கோ.கோ.மணியை நான் ஆதரிக்கவில்லை. அவரின் இந்த சிறு செயலை பாராட்டுகிறேன்.
சவுக்கு ஒரு விண்ணப்பம். கோ.கே.மணியின் தமிழார்வம் சுயநலம் மிகுந்ததா என எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை தயவு செய்து பாராட்டுங்கள்.
கோ.கே. மணி நீங்கள் எவ்வளவு தூரம் உண்மையில் உணர்ந்து செய்தீர்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஆனால் உங்களுக்கு எதிராக தான் எனது ஓட்டு.
தம்பிஇடம் (தலைவன்) நல்ல பெயர் பெற்றவர் ஐயா.
RSS feed for comments to this post