முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நீ வருவாய் என நான் இருந்தேன்…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 07 பிப்ரவரி 2011 23:39

 

இது 1980ல் வெளியான ‘சுஜாதா’ என்ற படத்தில் இடம் பெற்ற படம்.   எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், அதிகம் அறியப்படாத கல்யாணி மேனன் என்ற பாடகி. இவர் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் தாயார் என்பது கூடுதல் செய்தி.

 

 

 

இந்தத் தலைப்பு எதற்கென்றால், இன்று எழுதப் போகும் கட்டுரைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு இல்லை.

 

சவுக்கு யாரை இப்படி வழிமேல் விழி வைத்து அழைக்கிறது என்று வியக்கிறீர்களா ?   உங்கள் அனைவருக்கும் தெரிந்த, சவுக்கின் குடியரசு தின விருதாக டெட்டி பேர் விருது பெற்ற, தலைமைச் செயலாளர் மாலதி தான் அது.

Malathy_S

ஏன் சவுக்கு மாலதிக்காக காத்திருக்க வேண்டும். சவுக்குக்கும், மாலதிக்கும், நீண்ட நாள் உறவு இருக்கிறது.   ஆம், சவுக்கை உருவாக்கியதில், மாலதிக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது.   நம்ப முடியவில்லையா ? உண்மை தோழர்களே… உண்மை.

 

மாலதி உள்துறை செயலாளராக இருந்த போதுதான், சவுக்கு மீது, பல்வேறு பிரிவுகளில், அரசு ரகசியத்தை வெளியிட்ட குற்றத்திற்காக, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி புகார் அளித்தது.

 

மாலதியின் புகாரை ஒட்டியே, சவுக்கு கைது செய்யப் பட்டு, காவல்துறையால் ‘நையப் புடைக்கப் பட்டு‘ சிறையில் அடைக்க பட்டது. மாலதி கொடுத்த அந்தப் புகாரின் அடிப்படையில் சவுக்கு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் பிணையில் வெளி வந்தது.

Malathi

சவுக்கு மீது வழக்கு பதிவு செய்யப் படாவிட்டால், சவுக்கு என்ற ஒன்று உருவாகாமல், லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ‘சோம்பேறிகள் மடத்தில்‘ சவுக்கும் ஒரு ஓரத்தில், பென்ச்சை தேய்த்துக் கொண்டிருந்திருக்கும்

 

அதற்காக மாலதிக்கு சவுக்கு வாசகர்கள் ஒரு ‘ஓ‘ போடுங்கள். போட்டு விட்டீர்களா ?   சரி விஷயத்துக்கு வருவோம்.

 

இப்போது, சவுக்கு மீதான வழக்கு, விரைவு நீதிமன்றத்தில் தொடங்க இருக்கிறது.   இந்த வழக்குக்கென்றே, என்.ஆர்.இளங்கோ என்ற மூத்த வழக்கறிஞர் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

 

ஒரு வழக்கின் விசாரணையில் முதல் சாட்சியாக புகார் அளித்தவர் விசாரிக்கப் படுவது தானே முறை ?

 

ஒரு உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு கொலையை பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறீர்கள். வழக்கு விசாரணைக்கு வருகையில், அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை எப்படி பதிவு செய்யப் பட்டது என்பதை கண்டறிய, புகார்தாரரை முதலில் விசாரித்த பிறகே, மற்ற சாட்சிகள் விசாரணை தொடங்கும். புகார் கொடுத்த நீங்கள் சாட்சி சொல்ல வர மாட்டேன் என்றால், விசாரணை எப்படி தொடங்கும் ? இது எந்த வழக்குக்கும் பொருந்தும் தானே ?

 

ஆனால் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் மட்டும், புகார் தாரரான மாலதி சாட்சி சொல்ல வரமாட்டாராம் …. என்னய்யா அநியாயம் இது ?

 

இது அநியாயம் என்று உங்களுக்கு தோன்றுகிறதா ? சவுக்குக்கும் அப்படியே தான் தோன்றுகிறது. சவுக்கின் மீதான இந்த வழக்கில் விசாரணை தொடங்கப் போகிறது என்று தெரிந்த உடனேயே, மாலதி போட்ட முதல் நிபந்தனை நான் சாட்சி சொல்ல வர மாட்டேன் என்பதுதான்.

 

இந்த நிபந்தனையை உடனடியாக ஒட்டக் கூத்தரிடம் தெரிவிக்கிறார்.   அவரு பெரிய சீப் ஜஸ்டிஸ் இல்ல. அதான் அவருகிட்ட சொல்றாங்க. ஒட்டக் கூத்தர் உடனே, ‘மேடம் நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க. நான் வராம பாத்துக்கறேன், என்று கூறி விட்டார்.

சவுக்கு மீதுள்ள வழக்குக்காக என்.ஆர்.இளங்கோ என்ற மூத்த வழக்கறிஞர் நியமிக்கப் பட்டுள்ளார்.   இந்த வழக்கில் என்.ஆர்.இளங்கோவின் பெயர் பரிந்துரை செய்யப் பட்டு, அவர் வழக்கை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவர் சந்தித்த நபர், சிபி.சிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்தையோ, வழக்கின் புலனாய்வு அதிகாரியோ அல்ல.   இரண்டு வாரத்திற்கு முன், என்.ஆர்.இளங்கோ சந்தித்த நபர், நமது ஒட்டக் கூத்தர் தான்.

 

ஒட்டக் கூத்தரை சந்தித்த போது என்.ஆர்.இளங்கோவிடம் ஒட்டக் கூத்தர் போட்டது இரு நிபந்தனைகள்.   ஒன்று, ‘சவுக்குக்கு’ எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும். மற்றொன்று, மாலதி சாட்சி சொல்ல வரக் கூடாது.   இந்த இரண்டு நிபந்தனைகளையும், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஏற்றுக் கொண்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மாலதி வரவில்லையென்றால், சவுக்கு விட்டு விடுமா என்ன ? மாலதியை வர வைப்பதற்கென்று, உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடுக்காதா என்ன ?   மாலதி வராமல் இந்த வழக்கின் விசாரணை முடிவடையாது,    என்ன ஆனாலும் சரி. பார்த்து விடுவோம்.

 

சரி…. மாலதி வருவதற்கு ஏன் தயங்குகிறார். மாலதி தரப்பில் சொல்லப் படும் காரணம்…. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது. மாலதி புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ளார் என்பது உண்மை தான். இப்படிப் பட்ட ஒரு நோயால் பாதிக்கப் பட்ட ஒரு நபர், விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு, வீட்டில் ஓய்வு எடுப்பதுதானே முறை ?   உடல் நிலை சரியில்லையென்ற காரணத்தை காட்டி, நீதிமன்றத்துக்கு சென்று சாட்சி சொல்லும் கடமையிலிருந்து தவறுவது சட்ட விரோதம் ஆகாதா ?   உடல்நிலை சரியில்லாதவர்களை வைத்து கொண்டு வெட்டியாக மக்கள் பணத்தில் ஊதியம் அளிக்க தமிழக அரசு அலுவலகம் என்ன ‘சத்திரமா‘ ?



உடல் நிலை சரியில்லாத ஒரு நபருக்கு, பொறுப்புகள் அதிகம் மிகுந்த தலைமைச் செயலாளர் பதவி மட்டும் வேண்டுமா ? 24 மணி நேரமும் பணிச்சுமை இருக்கும் ஒரு பதவி வேண்டாமென்று விட்டு, ஆவணக் காப்பகம், எழுது பொருள் அச்சகத் துறை போன்ற அதிக வேலைப் பளு இல்லாத பணியை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே ? மாலதி தலைமைச் செயலாளர் ஆக வேண்டுமென யார் அழுதது ?

 

எதற்காக மாலதி இப்படி உடல் நிலை சரியில்லாத நிலையிலும், மல்லுக் கட்டிக் கொண்டு இந்தப் பதவியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அப்போது தானே, பிச்சை நாயுடு, ஒட்டக் கூத்தர் போன்ற அதிகாரிகள் செய்யும் தவறுகளை எல்லாம் மூடி மறைக்க முடியும்.

 

மாலதியை நேர்மையான அதிகாரி என்றெல்லாம் சொல்லுவார்கள். நேர்மையும் கிடையாது. ஒரு புடலங்காயும் கிடையாது. மாலதி இந்த அரசாங்கம் வந்த போது உள்துறை செயலாளராக இருந்த போதிலிருந்தே, கருணாநிதியின் சட்ட விரோத ஆட்சிக்கு உற்ற துணையாக, மனித உரிமை மீறல்களை மறைத்து காவல்துறையை விட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கியவர்.

 

கழிவு நீர் மற்றும் குடிநீர் குழாய்களை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி செய்த பணிகளில், பல கோடி ரூபாய் ஊழல் செய்தார் என்று, லஞ்ச ஒழிப்புத் துறையால், எஃப்.ஐ.ஆர் போட பரிந்துரை செய்யப் பட்டவர்.

 

உண்மையில் மாலதி எதற்காக வர மறுக்கிறார் தெரியுமா ? சவுக்கின் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி மாலதி அளித்த புகாரில், “இந்தக் கடிதத்தை, அரசுத் தரப்பு ஆவணமாக நீதிமன்றத்திலோ, துறை நடவடிக்கைக்கான ஆவணங்களிலோ, எந்த இடத்திலும் சேர்க்கக் கூடாது” என்று இருக்கிறது.

 

இது போல கேலிக் கூத்தான புகார் கடிதத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?   புகார் கொடுப்பார்களாம். அந்தப் புகார் கடிதத்தை எந்த இடத்திலும் குறிப்பிடக் கூடாதாம்.

இந்தக் கடிதத்தை அளித்த போது மாலதி உள்துறை செயலாளர்.   இது போன்ற முட்டாள் அதிகாரிகளை உள் துறை செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும் வைத்திருக்கும் ஒரு அரசு எப்படிப் பட்ட அரசாக இருக்கும் என்பதைத் தான் நீங்கள் பார்த்து வருகிறீர்களே…

 

அன்பார்ந்த மாலதி…. நீங்கள் பேசாமல் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு போய் விடுங்கள். சவுக்கு உங்களை சாட்சி சொல்லும் படி வற்புறுத்தாது.   விருப்ப ஓய்வில் செல்லாமல் தலைமைச் செயலாளராகவே நீடித்தீர்கள் என்றால், சவுக்குக்கு சிறைத் தண்டனை கிடைத்தாலும் கவலை இல்லை. உங்களை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, நான்கு நாட்களுக்கு தொடர்ந்து குறுக்கு விசாரணை செய்யும். நீங்கள் குறுக்கு விசாரணையில் திணறுவது, அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வரவழைக்கப் படும்.   உங்களின் நேர்மை என்னவென்பதை விளக்க,             DE 52/2001/PUB/HQ விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படும். இத்தனை பெரிய ஊழல் புகாருக்கு ஆளான ஒரு அதிகாரி, சவுக்கின் மீது எப்படி புகார் கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பப் படும்.

 

உங்களை குறுக்கு விசாரணை செய்யவென்றே, ஈரோட்டிலிருந்து, குறுக்கு விசாரணையில் மிகச் சிறந்த வழக்கறிஞரை சவுக்கு வரவழைக்க இருக்கிறது. சரியான படி, திட்டமிட்டு நேரம் இருந்தால், சவுக்குக்காக, டெல்லியிலிருந்தே வழக்கறிஞரை வரவழைக்கவும் திட்டம் இருக்கிறது.

 

உங்கள் நோய் உங்களுக்கு அளிக்கும் வேதனையை விட, சவுக்கின் குறுக்கு விசாரணையில் வழக்கறிஞர்கள் உங்களுக்கு அதிக வேதனையை தர காத்திருக்கிறார்கள்.

 

என்.ஆர்.இளங்கோ ஒட்டக் கூத்தருக்கு அளித்த உறுதி மொழி மூலமாக சாட்சி சொல்லாமல் தப்பி விடலாம் என்று மனப்பால் குடிக்காதீர்கள்.   சவுக்கு ஒரு ‘விடாது கருப்பு’.

malathi_and_sripathy

சவுக்கு சொன்ன இரண்டு யோசனைகளை பரிசீலியுங்கள். அப்புறம் நீங்களாக வந்து சிக்கிக் கொண்டால், சவுக்கு உங்களுக்கு பரிதாபமெல்லாம் பார்க்காது. பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள்.

 

பூந்தமல்லி, செங்கல்பட்டு முகாமில் நான்கு ஆண்டுகளாக அகதிகளை அடைத்து, அவர்களை வதைத்து வரும் நீங்கள் பெண் அல்ல பேய்.

 

காவல்துறை பொறுக்கிகளை ஆயுதம் கொடுத்து அனுப்பி, வழக்கறிஞர்களை மிருகத்தனமாக தாக்க உத்தரவிட்ட நீங்கள் பெண் அல்ல பேய்.

 

கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டிய நான்கு வழக்கறிஞர்களை திமுக ரவுடிகள், கருணாநிதி முன்பாகவே தாக்கிய போதும், பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்ட போதும், எந்த விசாரணைக்கும் உத்தரவிடாமல் மவுனம் சாதித்த நீங்கள் பெண் அல்ல பேய்.

 

தமிழகம் முழுக்க பல்வேறு நபர்களை போலி என்கவுண்டர்கள் மூலம் படு கொலை செய்த நீங்கள் பெண் அல்ல பேய்.

 

நியாயமான பதவி உயர்வு வரவேண்டிய நட்ராஜ் என்ற அதிகாரியை டிஜிபி ஆக்காமல், லத்திக்கா சரணை சட்டவிரோதமாக டிஜிபி ஆக்கிய நீங்கள் பெண் அல்ல பேய்.

 

இது போல நீங்கள் பெண் அல்ல பேய் என்பதற்கான காரணங்கள் ஏராளமாக உண்டு. ஆகையால் சவுக்கிடம் இரக்கத்தை எதிர்ப்பார்க்காதீர்கள்.

 

உங்கள் வருகையை சவுக்கு ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது.   ஏமாற்றாதீர்கள் மாலதி….

 

Comments  

 
+4 #61 Little John 2011-02-14 22:21
Dear Savukku,

Neengal Oru Nizhal Ulaga Ramana!!
All the best your future..
I appreciated
Quote
 
 
+5 #60 tamizselvan 2011-02-09 20:36
நீ கலக்கு சித்தப்பு....... :-)
Quote
 
 
+3 #59 Angel 2011-02-09 16:43
Maama joooper... ;-)
Quote
 
 
+7 #58 ஒண்டிவீரன் 2011-02-09 15:10
தி ’மன்கூஸ்’ வென்று அவர்களுக்கு!

தனக்கு தெரிந்த துறையைப் பற்றி, தான் அறிந்த உண்மைகளை வெளியிடுகிறது சவுக்கு. எதிர் கட்சிகளைப் பற்றி எதுவுமே இல்லையா? என்று கேட்டால், அதுவா இப்போது முக்கியம்?

எதிர் கட்சி என்பது ஒரு செத்துப்போன பாம்பு. அது அடிக்கடி கொடநாட்டில் தூங்கும் ஒரு சோம்பு. அதை அடித்து என்ன ஆகப்போகிறது நமக்கு?

எனவே, இந்தளவாவது உண்மை வெளியாகிறதே என்று சந்தோஷப்படு. இல்லை. எனக்கு துக்கம் வருகிறதென்று சொன்னால், சொல்லிக்கொள்லாம ல் ஓடு.
Quote
 
 
+3 #57 நொண்டி வீரனுக்கு, 2011-02-09 14:33
இதுமட்டும் இல்ல, அவனவன் ஆயிரட்தெட்டு கேச அசால்டா தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு போறானுங்க. இது ஒரு பெரிய விஷயமே இல்ல. இவ்ளோ எழுதியும், சவுக்க எதுவும் பண்ணலேன்னா, சவுக்க படிக்கிற வாசகர்கள தவிர குற்றம் சுமத்தப்பட்ட வேறு யாரும் இந்த குற்றச்சாட்டுகள ை ஒரு பொருட்டா எடுத்துகிடலைனு தான் அர்த்தம். அத முதல்ல புரிஞ்சிக்கோங்க .
Quote
 
 
0 #56 நொண்டி வீரனுக்கு, 2011-02-09 14:26
//இதுக்குப் பேர்தாண்டா, அடிச்சா திருப்பி அடிப்போம்னு சொல்றது//

இததாண்டா நானும் சொல்றேன்.
அடிச்சா தான் திருப்பி அடிப்போம்னு சொல்றீங்க, அடிக்காத வரைக்கும் நீங்களும் அதை கண்டுக்க மாட்டீங்க. இதுக்கு பேருதான் சுயநலம்னு சொல்றது. உங்களை யாராவது தொந்திரவு செஞ்சாத்தான் சவுக்க தூக்கிக்கிட்டு கிளம்புவீங்க. உங்கள யாரும் தொந்தரவு செய்யலின்னா, யாரு என்ன பன்னினாலும், கண்டுக்க மாட்டீங்க. எதுநடந்தாலும் நடக்கட்டும்னு இருப்பீங்க. அப்படித்தானே சொல்ல வர்ரீங்க.
Quote
 
 
+1 #55 eds 2011-02-09 13:58
Quoting குப்புசாமி:
Why you are suspended? what is the actual story behind?

Dont you know Savukk story.

Savukku was a quite and well behave public servant (Civilian) in the office of Anti corruption DGP (Police)
One day a Minister rang and told the Anti corruption DGP not to take any action on a corrupt Goverment officer (Under Investigation of Anti coruption Police) who was a relative of that Minister.

Savukku thought this is abuse of ministers power to force a senior police officer to spare ministers relative.

So savukku is blamed for relasing that ministers Unethical conversation to the media.

I thik savukku did a good job to expose the ministers bad deed.
The minister resigned (Only for a few months and later reiducted to the cabinet)

CM & Shadow CM (Ottakuthar) got angree and sent Home secratary, and CBCID IG to beat up Savukku and distroy him.

For exposing the truth to public Savukku has been beaten up, many false case put on him, constantly followed and suspended from Job.
Quote
 
 
0 #54 Vaedhampudhidhu 2011-02-09 13:58
Savukku neenga jayalalitha aatchiku vandhaalum edhey paniya thodaravaendum , matra media maadiri aalungatchi edhirkatchinu paarabatcham iruka koodathu. You already mentioned this on your 1000000 visitors blog. Irundhalum enudaya vaendukol edhu..
Quote
 
 
0 #53 Vaedhampudhidhu 2011-02-09 13:56
Eva pandradhuku thaan aandavanae oru aapu vaichirukaan adhu therinjum eva aadaraana, evaluku neenga aapadikuradhila thappae illai. Pls jail the ghost...
Quote
 
 
+1 #52 ganesh2k5 2011-02-09 11:37
எனக்கு என்னவோ உங்களின் இந்த பதிவே - உங்களுக்கு எதிராக வைத்து (Malafide Intention)வைக்க ப்படுமோ எனும் அச்சம் எழுகிறது. ப்ளீஸ் கவனம் தேவை
Quote
 
 
+1 #51 karthik.S 2011-02-09 08:37
Nijamave neenga O poda sonnavudane, OO nu kathineen!! All de best savukku!
Quote
 
 
+1 #50 Sfk 2011-02-09 02:42
I pray for your safety.
Quote
 
 
+3 #49 PrabaaDaasan 2011-02-08 23:32
கும்மு கும்முன்ன கும்மாவா சவுக்குன்னா சும்மாவா ?,
கருணா மரத்துல ஒரு வவ்வாலாம் சவுக்குக்கு நீ ஒரு சவாலா ?
இவரைபோன்ற்றோரை தொவைத்து தொங்கவிட வேண்டும். நல்ல செய்தியை எதிர்பார்க்கிறோ ம்.
Quote
 
 
+2 #48 sundar 2011-02-08 22:26
please be careful. you need protection more

than the corrupt politicians
Quote
 
 
+2 #47 wesleyrajan 2011-02-08 22:07
paaraatukkal.........................besafe..........................
Quote
 
 
+3 #46 wesleyrajan 2011-02-08 22:04
savukku...............vaazhthukkal................besafe....................
Quote
 
 
-7 #45 மன்கூஸ் 2011-02-08 21:43
சவுக்கு அவர்களே தமிழ் நாட்டில் உள் துறை, ,போலீஸ் துறை,கருணாநிதி தவிர வேறு ஓன்றுமே இல்லையா? அல்லது வேறு துறையில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களா?அல்லது தற்போது எதிர் கட்சிகள் முறையாக ஜனநாயக கடைமை ஆற்றுகிறதா?எப்பொழுதும் நடக்கின்ற நிகழ்வுகளை கடந்த கால நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பாருங்கள் .
Quote
 
 
+2 #44 So what 2011-02-08 21:28
Quoting வெற்றி:
//சவுக்கு மீது வழக்கு பதிவு செய்யப் படாவிட்டால், சவுக்கு என்ற ஒன்று உருவாகாமல், லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ‘சோம்பேறிகள் மடத்தில்‘ சவுக்கும் ஒரு ஓரத்தில், பென்ச்சை தேய்த்துக் கொண்டிருந்திருக ்கும்//

அன்புள்ள சவுக்கு, உங்களின் படைப்பு மிகவும் நன்றாக உள்ளது. பல செய்திகளை பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன்பாகவே தங்கள் தளத்தில் கண்டிருக்கிறேன் . சில பதிவுகள் மிகவும் மிகைப்படுத்தப்ப ட்ட பழிவாங்கும் உணர்ச்சியில் / நோக்கத்தில் எழுதியது போன்று எனக்கு தோன்றி இருக்கிறது. அது இந்த பதிவை படித்த பிறகு உண்மை என விளங்கிக்கொண்டே ன். தமிலகத்தில் எவ்வளவோ நிகழ்சிகள் நடக்கின்றது, ஊழல்கள் பல துறைகளிலும் விளையாடுகிறது, அதை எல்லாம் விடுத்து ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ளவர்களை பற்றிய செய்தியே அதிகம் பதிபிக்கப்படுகி றது. காரணம் உங்களின் பழிவாங்கும் படலம். உங்கள் மேல் அவர்கள் குற்றத்தை சுமத்தியவுடன், நீங்கள் உங்களை நீதிமான் போல் காட்டிக்கொண்டு உங்களின் பழிவாங்கும் படலத்தை சவுக்கு பதிவின் மூலம் தீர்த்துக்கொள்க ிறீர்கள். கிராமத்தில் சண்டைகள் நடக்கும் போது ஒண்டிக்கு ஒண்டி வாடா பாக்கலாம் என்று அழைப்பார்கள், அதைப்போல் தான் உங்களின் பதிவும், பழிவாங்கும் உணர்ச்சியும் தெரிகிறது. உங்களை நியாயவான், நீதிமான் என்றெல்லாம் நினைத்துக்கொண்ட ிருந்த எனக்கு, நீங்களும் ஒரு சராசரி மனிதன் என்பதை உங்களின் இந்த பதிவின் மூலம் தெளியபடுத்தி விட்டீர்கள்.


Needhmaan illayaa? Appadi enna nadunilai thavari vittaar?
Quote
 
 
+5 #43 jai 2011-02-08 21:09
தமிழக இள ரத்தங்களின் முழு ஆதரவும் சவுக்கு தோழர்களுக்கு உண்டு........ பின்னி பெடல் எடுத்துடுங்க ... வாழ்த்துக்கள்.......நாட்டின் மீது பற்று உள்ள ஒவ்வொரு இளைஞனும் சவுக்கின் பால் ஒன்றிணைவோம் .......
Quote
 
 
+4 #42 Tiamlan 2011-02-08 20:45
We should help and Co operate for Suvuku.

Who are all lawyers readings in this BLOG please help to savuku...
Quote
 
 
0 #41 ஆனந்த் 2011-02-08 19:35
//இது போன்ற முட்டாள் அதிகாரிகளை உள் துறை செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும் வைத்திருக்கும் ஒரு அரசு எப்படிப் பட்ட அரசாக இருக்கும் என்பதைத் தான் நீங்கள் பார்த்து வருகிறீர்களே…//

இது போன்ற செய்திகளைப் பார்க்கும் போது இங்கே துக்ளக் தர்பார்தான் நடக்கிறது என்று சொல்ல வேண்டியிருக்கிற து. இன்னும் என்னென்ன கோமாளிக் கூத்துகள் நடந்ததோ, நடக்கிறதோ, நடக்குமோ தெரியவில்லை.
Quote
 
 
+1 #40 A regular visitor 2011-02-08 19:17
Keep up the good work .. Be continuous in exposing these black sheep ... You are an unstoppable force ....
Quote
 
 
+1 #39 tamizselvan 2011-02-08 19:09
(to savukku ) நீ கலக்கு சித்தப்பு.... :-)
Quote
 
 
+6 #38 eds 2011-02-08 18:41
Savukku,
You are challenging the most powerfull official in the state.
Do you know that the Cheif Secratary Malathy is the senior most and most powerful bureacrate.

You have already challenged the Itelligence DGP, Director of V&AC, ADGP V&AC, DGP of TN, ADGP l&O.
They are all powerfull people with protection of CM and they have the whole goverment, Courts and Police at their diposal.

Savukku you are fighting against many mighty mountains - Be very very careful.

It is a David & Goliath battle. Savukku and powerful Goverment battle.

You are the bravest man I have seen, Good luck.
Quote
 
 
+1 #37 uthavumKarangal 2011-02-08 18:39
Summa pinni edunga..Vazhthukal, Eppo intha case court ku varuthu..Nangal ellorum
Quote
 
 
+1 #36 arunan 2011-02-08 18:07
BEWARE OF KARUNANITHI DOGS WE ARE ALWAYS WITH YOU ARUNAN
Quote
 
 
+4 #35 கிரி..அனகை .. 2011-02-08 18:00
சவுக்கின் வெற்றி நம் வெற்றி..
Quote
 
 
+3 #34 ஒண்டிவீரன் 2011-02-08 17:26
அதுபோல, இந்த அதிகாரிகள் மட்டுமல்ல, இவர்களது குடும்பம், நண்பர்களும்கூட சவுக்கடி கொடுக்கப்படவேண் டியவர்கள்தான்.

அப்படி கொடுத்தால்தான், இப்படி பொது இடத்தில் அசிங்கப்படவேண்ட ி வரும் என்று இவர்களுக்கு பயம் வரும்.

ஒரு சவுக்கு அல்ல. பாதிக்கபடும் ஒவ்வொருவனும் சவுக்காக மாறவேண்டும்.

அவனுக்கு தெரிந்த உண்மைகளை இங்கே பதிவேற்றவேண்டும ். சவுக்கு வாசகர்கள் தயாரா?
Quote
 
 
+3 #33 ஒண்டிவீரன் 2011-02-08 17:24
Quoting வெற்றி:
//

அன்புள்ள சவுக்கு, உங்களின் படைப்பு மிகவும் நன்றாக உள்ளது. பல செய்திகளை பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன்பாகவே தங்கள் தளத்தில் கண்டிருக்கிறேன் . சில பதிவுகள் மிகவும் மிகைப்படுத்தப்ப ட்ட பழிவாங்கும் உணர்ச்சியில் / நோக்கத்தில் எழுதியது போன்று எனக்கு தோன்றி இருக்கிறது. அது இந்த பதிவை படித்த பிறகு உண்மை என விளங்கிக்கொண்டே ன். தமிலகத்தில் எவ்வளவோ நிகழ்சிகள் நடக்கின்றது, ஊழல்கள் பல துறைகளிலும் விளையாடுகிறது, அதை எல்லாம் விடுத்து ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ளவர்களை பற்றிய செய்தியே அதிகம் பதிபிக்கப்படுகி றது. காரணம் உங்களின் பழிவாங்கும் படலம். உங்கள் மேல் அவர்கள் குற்றத்தை சுமத்தியவுடன், நீங்கள் உங்களை நீதிமான் போல் காட்டிக்கொண்டு உங்களின் பழிவாங்கும் படலத்தை சவுக்கு பதிவின் மூலம் தீர்த்துக்கொள்க ிறீர்கள். கிராமத்தில் சண்டைகள் நடக்கும் போது ஒண்டிக்கு ஒண்டி வாடா பாக்கலாம் என்று அழைப்பார்கள், அதைப்போல் தான் உங்களின் பதிவும், பழிவாங்கும் உணர்ச்சியும் தெரிகிறது. உங்களை நியாயவான், நீதிமான் என்றெல்லாம் நினைத்துக்கொண்ட ிருந்த எனக்கு, நீங்களும் ஒரு சராசரி மனிதன் என்பதை உங்களின் இந்த பதிவின் மூலம் தெளியபடுத்தி விட்டீர்கள். என்னுடைய இந்த கருத்தை பதிபீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன் வெற்றி
//

வெற்றி என்கிற வெட்டி ஆபீசருக்கு.

‘இது உயிரையே பணயம் வைத்து எழுதப்படும் ஒரு பதிவு’ என்பது உன் மூளைக்கு விளங்காமல் போனது ஏன்?
இதுக்குப் பேர்தாண்டா, அடிச்சா திருப்பி அடிப்போம்னு சொல்றது. இங்கு முகமூடி கிழிக்கபடுபவர்க ள் என்ன யோக்கிய சிகாமணிகளா?

கழுதைப்புலிகளை( ஹெய்னா)விட கொடூர மனம் படைத்த அரசு அதிகாரிகளை, அரபுநாட்டு தண்டனைக்கு உட்படுத்தினால்க ூட அது மிகை ஆகாது.

பல கோடி குடும்பங்களை சீரழுத்துவிட்டு இவர்கள் சுகமாக வாழ்வார்கள். இந்த சொறிநாய்களை பற்றி எழுதினால் தனிப்பட்ட விமர்சனம் என்று எத்தனை நாட்களுக்கு சப்பை கட்டு கட்டுவீர்கள்?

ஒரு குடும்பத் தலைவனை கொன்றுவிட்டால், அவனை நம்பியிருக்கும் அத்தனை பேருக்குமே அது பாதிப்பு என்பது உனக்கு தெரியாதா?
Quote
 
 
+2 #32 குப்புசாமி 2011-02-08 17:20
Why you are suspended? what is the actual story behind?
Quote
 
 
+1 #31 Varadhan 2011-02-08 17:09
All the best dear Savukku. Defenetly you will won the game.

ennama pindran enth savukku, kalakku savukku kalakku.
Quote
 
 
+12 #30 A Visit to Savukku 2011-02-08 14:48
சும்மா பின்னி பெடலெடுங்க சவுக்கு!
அதிகாரத்தயும் பலத்தையும் வைச்சிருந்தா வானத்தையும் வளைத்து விடலாம் என்ற நினைப்பு இவர்களுக்கு.

இவர்களால் இவர் வீட்டு வண்ணான் வெளுக்கும் துணிகளை கூட சவுக்கின் முன்னால் வளைக்கமுடியாது என்று நிரூபியுங்கள்...
Quote
 
 
-15 #29 வெற்றி 2011-02-08 14:44
//சவுக்கு மீது வழக்கு பதிவு செய்யப் படாவிட்டால், சவுக்கு என்ற ஒன்று உருவாகாமல், லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ‘சோம்பேறிகள் மடத்தில்‘ சவுக்கும் ஒரு ஓரத்தில், பென்ச்சை தேய்த்துக் கொண்டிருந்திருக ்கும்//

அன்புள்ள சவுக்கு, உங்களின் படைப்பு மிகவும் நன்றாக உள்ளது. பல செய்திகளை பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன்பாகவே தங்கள் தளத்தில் கண்டிருக்கிறேன் . சில பதிவுகள் மிகவும் மிகைப்படுத்தப்ப ட்ட பழிவாங்கும் உணர்ச்சியில் / நோக்கத்தில் எழுதியது போன்று எனக்கு தோன்றி இருக்கிறது. அது இந்த பதிவை படித்த பிறகு உண்மை என விளங்கிக்கொண்டே ன். தமிலகத்தில் எவ்வளவோ நிகழ்சிகள் நடக்கின்றது, ஊழல்கள் பல துறைகளிலும் விளையாடுகிறது, அதை எல்லாம் விடுத்து ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ளவர்களை பற்றிய செய்தியே அதிகம் பதிபிக்கப்படுகி றது. காரணம் உங்களின் பழிவாங்கும் படலம். உங்கள் மேல் அவர்கள் குற்றத்தை சுமத்தியவுடன், நீங்கள் உங்களை நீதிமான் போல் காட்டிக்கொண்டு உங்களின் பழிவாங்கும் படலத்தை சவுக்கு பதிவின் மூலம் தீர்த்துக்கொள்க ிறீர்கள். கிராமத்தில் சண்டைகள் நடக்கும் போது ஒண்டிக்கு ஒண்டி வாடா பாக்கலாம் என்று அழைப்பார்கள், அதைப்போல் தான் உங்களின் பதிவும், பழிவாங்கும் உணர்ச்சியும் தெரிகிறது. உங்களை நியாயவான், நீதிமான் என்றெல்லாம் நினைத்துக்கொண்ட ிருந்த எனக்கு, நீங்களும் ஒரு சராசரி மனிதன் என்பதை உங்களின் இந்த பதிவின் மூலம் தெளியபடுத்தி விட்டீர்கள். என்னுடைய இந்த கருத்தை பதிபீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன் வெற்றி
Quote
 
 
-9 #28 வெற்றி 2011-02-08 14:42
//சவுக்கு மீது வழக்கு பதிவு செய்யப் படாவிட்டால், சவுக்கு என்ற ஒன்று உருவாகாமல், லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ‘சோம்பேறிகள் மடத்தில்‘ சவுக்கும் ஒரு ஓரத்தில், பென்ச்சை தேய்த்துக் கொண்டிருந்திருக ்கும்//

அன்புள்ள சவுக்கு, உங்களின் படைப்பு மிகவும் நன்றாக உள்ளது. பல செய்திகளை பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன்பாகவே தங்கள் தளத்தில் கண்டிருக்கிறேன் . சில பதிவுகள் மிகவும் மிகைப்படுத்தப்ப ட்ட பழிவாங்கும் உணர்ச்சியில் / நோக்கத்தில் எழுதியது போன்று எனக்கு தோன்றி இருக்கிறது. அது இந்த பதிவை படித்த பிறகு உண்மை என விளங்கிக்கொண்டே ன். தமிலகத்தில் எவ்வளவோ நிகழ்சிகள் நடக்கின்றது, ஊழல்கள் பல துறைகளிலும் விளையாடுகிறது, அதை எல்லாம் விடுத்து ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ளவர்களை பற்றிய செய்தியே அதிகம் பதிபிக்கப்படுகி றது. காரணம் உங்களின் பழிவாங்கும் படலம். உங்கள் மேல் அவர்கள் குற்றத்தை சுமத்தியவுடன், நீங்கள் உங்களை நீதிமான் போல் காட்டிக்கொண்டு உங்களின் பழிவாங்கும் படலத்தை சவுக்கு பதிவின் மூலம் தீர்த்துக்கொள்க ிறீர்கள். கிராமத்தில் சண்டைகள் நடக்கும் போது ஒண்டிக்கு ஒண்டி வாடா பாக்கலாம் என்று அழைப்பார்கள், அதைப்போல் தான் உங்களின் பதிவும், பழிவாங்கும் உணர்ச்சியும் தெரிகிறது. உங்களை நியாயவான், நீதிமான் என்றெல்லாம் நினைத்துக்கொண்ட ிருந்த எனக்கு, நீங்களும் ஒரு சராசரி மனிதன் என்பதை உங்களின் இந்த பதிவின் மூலம் தெளியபடுத்தி விட்டீர்கள்.
Quote
 
 
+7 #27 thayaparan 2011-02-08 14:23
சவுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
Quote
 
 
+10 #26 கடல் அன்பன் 2011-02-08 13:33
தமிழ் நாட்டோட தலைமை பதவில இருக்கிறவங்க கூட வழக்கு, சவுக்கு நீ கலக்கு!
Quote
 
 
+6 #25 Force 2011-02-08 13:25
'வாய்மையே வெல்லும்' அர‌சின் சின்ன‌ம் அதைத்தான் சொல்கிற‌து.
'அறம் தோற்கா' என்கிறார்க‌ள் என்கின்ற‌ர் த‌மிழ்க் கிழ‌வ‌னும்,கிழத ்தியும் முண்டாசுக் கவிஞனும்.
Quote
 
 
+14 #24 சோழன் 2011-02-08 13:16
:-? :sad: சவுக்கு, உண்மையாவே உங்களுக்கு பயமா இல்லையா? உங்கள நெனச்சா எனக்கே பயமா இருக்கு! எப்படி இந்தமாதிரி அயோக்கியர்களை உங்களால் எதிர்க்க முடியுது? இவனுங்க எல்லாம் ரொம்ப மோசமானவனுங்கலாச ்சே! கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்! நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும ் அதை நீங்க சமாளிக்கும் விதத்தையும் எங்களுக்கு விளக்கினா நல்லா இருக்கும்! உங்களோட பாதுகாப்ப எப்படி உறுதி படுத்திக்குறீங் க நு சொன்னா நல்ல இருக்கும்! :-) :lol:
Quote
 
 
+2 #23 அப்துல் ரஹ்மான் 2011-02-08 13:06
வரும்... ஆனா, வராது...
Quote
 
 
+1 #22 Sajirou 2011-02-08 12:34
மாலதி அவர்களே,
நீங்கள் நரி மூஞ்சியில் முழுச்சா நல்லது நடக்கும், எங்க குள்ளநரி மூஞ்சியில் முழுச்சா ooooohhhhh தான்
Quote
 
 
0 #21 அநானி 2011-02-08 12:33
கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய் பெரியோரொடும்
மறம் கொடு இத் தரை மன்னுயிர் மாய்த்து நின்று
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ?
கம்ப ராமாயணத்தின் இப்பாடல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது
Quote
 
 
+3 #20 KArvind 2011-02-08 12:32
Savukku, This is my first comment. Officers are the main culprits for the corruption and most of the time , they are helping to politicians to do this.So keep it up . Provide your account number and i want to contribute to handle your case with high profile and capable lawyer.
Quote
 
 
+4 #19 selvam_in 2011-02-08 11:57
"DE 52/2001/PUB/HQ விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படும். இத்தனை பெரிய ஊழல் புகாருக்கு ஆளான ஒரு அதிகாரி, சவுக்கின் மீது எப்படி புகார் கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பப் படும்." supper savukku ithan correct tana time call Malathi to court - weldon savukku
Quote
 
 
+7 #18 ஏகா.. 2011-02-08 11:15
அம்மையாருக்கு ஓ... கோ..,
நீங்க பண்ணுறது எல்லாம் சரிதான் உங்கள் தைரியத்தை பாரட்டுகிறோம். ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் தைரியமாக பின்னி பெட்ல் எடுக்குறிங்க ஒரு பக்கத்தில் சந்தோஷ்மாக இருந்தாலும் சில நேரங்களில் புளியகரைக்குது..
வாழ்த்துக்கள்.. be safe...
Quote
 
 
0 #17 kudimagan 2011-02-08 10:59
savukku you will succeed with your intelligence...
Quote
 
 
+5 #16 அநானி 2011-02-08 10:49
’நீ வருவாய் என நான் இருந்தேன்’ என்கிற தலைப்பைக் காட்டிலும், “இவள் பெண்ணல்ல பேய்’ என்பதே சாலப் பொருந்தும்.

புற்றுநோய் பீடித்தபோதும், பணத்தாசை, பதவி ஆசை கொண்டு திரியும் இந்த அரக்கி மீது சவுக்கடி தொடர்ந்து வீசப்படவேண்டும் .
Quote
 
 
0 #15 Nithi 2011-02-08 10:48
சவுக்கு வெற்றி பெற வாழ்துக்கள்........
Quote
 
 
+5 #14 விகடகவி 2011-02-08 10:39
அப்போ அந்த வழக்கு நடக்கும் போது, நாம் நீதிமன்றத்துக்க ு போனால் யார் சவுக்கு என்பதை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். :lol:
Quote
 
 
+1 #13 கல்கியின் நந்தகி 2011-02-08 10:29
good. savukku take care of yourself. I think now you are in almost all of the criminals hitlist. be extra cautious.
Quote
 
 
+2 #12 tamil212000 2011-02-08 10:14
சவுக்கு வெற்றி பெற வாழ்துக்கள்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 92 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4950
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week37409
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month240141
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12762260