முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கூட்டணிக் கட்சிகள் கடும் அதிர்ச்சி அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 10
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 17 மார்ச் 2011 07:09

சட்டப்பேரவை தேர்தலுக்காக அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலால் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10, மனிதநேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றிய ஆலோசனை சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்தனர்.

பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில்,  அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க.வுடன் அடுத்த சுற்று பேச்சு நடத்த காத்திருந்தன.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை மாலை வெளியிட்டார்.

இதில் கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற பல தொகுதிகளை இப்போது அ.தி.மு.க. எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அ.தி.மு.க. தலைமை  அலுவலகத்தில் பேச்சு நடத்திய பின் அங்கிருந்து புறப்பட்ட கூட்டணி கட்சியினர் தங்கள் அலுவலகத்தில் நுழைந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இதனால் அந்தக் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், சிவகங்கை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 தொகுதிகளிலும்  இப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அக்கட்சி இப்போது கேட்ட தொகுதிகளில் தளி உள்ளிட்ட ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 9 தொகுதிகளில்,  திண்டுக்கல், பெரம்பூர், அரூர், திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை (தெற்கு) ஆகிய 6 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அக்கட்சி கேட்டிருந்த கீழ்வேளூர் உள்ளிட்ட மிகப் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, ஒட்டபிடாரம், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளைக் கேட்டு வந்ததாக செய்திகள் வெளியாயின. எனினும், இப்போது அவ்விரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், பார்வர்டு பிளாக் கட்சி கேட்டதாகக் கூறப்பட்ட உசிலம்பட்டி தொகுதிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. தலைமையின் இந்த அறிவிப்பு அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் புதன்கிழமை நடத்திய பேச்சின்போது, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளோடு, மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து விட்டு, புதன்கிழமை இரவே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொகுதிகள் பற்றி இறுதி செய்வதாக  கூறினர்.

ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியிடப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், கடந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்ற 6 தொகுதிகள், நாங்கள் கேட்டு வரும் பிற தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இப்போதைய நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரனிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பாராதது. எனவே, இது பற்றி விவாதிக்க  எங்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியது:

4 தொகுதிகளின் பெயர்களை கூறுமாறு எங்களிடம் கேட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், அதிலிருந்து 2 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்குவதாகக் கூறியிருந்தனர்.

இதன்படி, வாசுதேவநல்லூர், ஒட்டபிடாரம், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் பெயர்களைக் கொடுத்திருந்தோம். இப்போது, 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.

தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பது தேமுதிக தரப்பிலும் எரிச்சலையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ""இப்படிப்பட்ட போக்கை அதிமுக தலைமை தொடருமானால், அந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்து எப்படி செயல்பட முடியும்'' என்று மூத்த நிர்வாகிகளிடம் கட்சித் தலைவர் விஜயகாந்த் சலித்துக் கொண்டதாகக் கேள்வி.

இது தவிர, 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துள்ளதன் மூலம், இதுநாள் வரை அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க.வுக்கு இனி அந்தக் கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது.

அதிருப்தியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து மதிமுக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்குமா என்பது சனிக்கிழமை நடக்க இருக்கும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்த வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும்  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமணி

 

Comments  

 
+2 #53 Padman 2011-03-18 08:24
Quoting சவுக்கின் விசிறி:
எனக்கு எப்போதும் மமதை
அடிக்கடி ஏற்றுவேன் போதை-நான்
ஏ.சி. அறைக்குள் வாழும் பேதை
யாருக்கும் கொடுக்க மாட்டேன் மரியாதை..

பிடித்தது கொடநாடு
பிடிக்காதது தமிழ்நாடு- எனக்கு
யாரும் விளைவிக்க முடியாது கேடு
காரணம்,கட்சியில ் இருப்பதுகள் ஆடு, மாடு..

எனக்கு பிடிகாதது பாசம்
ரொம்பவே பிடிக்கும் மோசம்-நான்
நல்லா கட்டுவேன் வேஷம்
என் கட்சியை செய்வேன் நாசம்.

-இப்படிக்கு
போயஸ் பாப்பா.


Super Kavithai. thank you very much. please contribute more.
Quote
 
 
+2 #52 SUMAN 2011-03-18 07:01
Quoting காலவன்:
இந்த அம்மையார் ஒரு காலமும் திருந்தப்போவதில ்லை. வைகோ,விஜய்காந்த ்,கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள ், புதியதமிழகம்,சர த்குமார் கட்சி, சீமான், போன்றோர் ஒர் அணியாக இந்த இரு கட்சிகளின் அராஜக போக்குக்கு சாவுமணி அடிக்கவேண்டும். இந்த சந்தப்பர்த்தை விட்டால் அதிமுக,திமுகவக் கு மாற்றாக ஒரு ஆட்சி இனி வரவேப்போவதில்லை . இதை விட ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தை திமுக அதிமுக மற்ற கட்சிகளுக்கு ஏற்படுத்தி தரமுடியாது வைகோ,விஜய்காந்த ் உடனடியாக இணைந்து பேசி ஒரு மாற்று கூட்டணியை அமைத்து போட்டியிட்டு தமிழக மக்களின் ஆவலை பூர்த்தி செய்ய முயலுங்கள். இது என் வேண்டுகோள்.

Quoting HARI:
கருணாநிதி வேட்டிக்கட்டிய ஜெயலலிதா,,,,,,

ஜெயலலிதா புடவைகட்டிய கருணாநிதி,,,,,,


இதிலும் கருணாநிதியின் பணம் விளையாடி இருக்குமோ?
Quote
 
 
+11 #51 சவுக்கின் விசிறி 2011-03-17 22:35
எனக்கு எப்போதும் மமதை
அடிக்கடி ஏற்றுவேன் போதை-நான்
ஏ.சி. அறைக்குள் வாழும் பேதை
யாருக்கும் கொடுக்க மாட்டேன் மரியாதை..

பிடித்தது கொடநாடு
பிடிக்காதது தமிழ்நாடு- எனக்கு
யாரும் விளைவிக்க முடியாது கேடு
காரணம்,கட்சியில ் இருப்பதுகள் ஆடு, மாடு..

எனக்கு பிடிகாதது பாசம்
ரொம்பவே பிடிக்கும் மோசம்-நான்
நல்லா கட்டுவேன் வேஷம்
என் கட்சியை செய்வேன் நாசம்.

-இப்படிக்கு
போயஸ் பாப்பா.
Quote
 
 
0 #50 Nithya Kalyani 2011-03-17 22:27
மூன்றாவது அணி உருவானால் தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அப்போது ஆட்சி அமைக்க நடக்கும் காட்சிகள் மிகவும் கேவலமாக இருக்கும். எனினும் மூன்றவது அணி கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால் எல்லாம் நல்லபடியாக முடியும். ஜேஜே, முக, ராமதாஸ், காங் நால்வரையும் கழட்டிவிட இதுவே நல்ல தருணம்.
Quote
 
 
+6 #49 Padman 2011-03-17 21:52
சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி.

நம்பிக்கைத் துரோகம் வெற்றி பெற்றதா சரித்திரமில்லை.

போனாப் போகுது அதுக்கு இது பரவாயில்லைன்னு நினச்சா... வரம் கொடுக்க வந்த வாக்காளர் தலையிலேயே கை வைக்க நினைக்கிறது ரொம்பத் தப்பு.

மகாபாரதத்தில் சகுனி ஆடிய ஆட்டத்திற்கும்... இப்போ ஜெ ஆடுகிற ஆட்டத்திற்கும் பெருசா வித்தியாசமில்லை . எதிர்ல ஆடறவங்க ஒன்னும் தர்மனுமில்லை... முழுசா நம்பி ஏமாற... இதுக்கு மேலயும் இந்த ஆட்டம் வேண்டாம்னு போயுடுவாங்க.

ஒருத்தருக்கு ஒதுக்கிட்டப் பிறகு அந்தத் தொகுதிய உங்களுக்கு மாற்றி கொடுத்தா முன்னாடி சீட் வாங்கினவர் எப்படி உங்களுக்கு உளமார தேர்தல் வேலை செய்வார்... கொஞ்சமா கூட அறிவு வேணாம்... நீ எல்லாம் என்னத்த அரசியல் பண்றன்னு ஒன்னும் விளங்கவில்லை.

பெண் புத்தி பின் புத்தின்னு தெளிவாயிடுச்சி... வேற என்னத்த சொல்றது?
Quote
 
 
-1 #48 porelilan 2011-03-17 21:44
vijakanth mudivedukka vediya tharunam
Quote
 
 
-1 #47 porelilan 2011-03-17 21:42
vijakanth ADMK kootaniyil irundhal mattume avaruku arsiyal ethirkalam undu illa vittal saathi katchikalai pola pitchai edukkathan vendum
Quote
 
 
-2 #46 உமசங்கர் 2011-03-17 21:16
ஜெயலலிதா, இந்த தேர்தல் மனுதாக்கல் முடியிம் தருவாயில், காங்கிரஸ் தி.மு.க வை கழட்டி விடும் என்று உறுதியாக நம்புகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் காங்கிரஸை தமது கூட்டனிக்கு கொண்டு வருவதற்க்காகவே, கம்யுனிஸ்ட், தே.மு.தி.க மற்றும் ம.தி.மு.கவை தற்போது கழட்டி விட்டுள்ளார் என நினைக்கிறேன்.
Quote
 
 
-2 #45 ravir 2011-03-17 20:30
திமுக அதிமுக இவை இரண்டையும் வீட்டுக்கு அனுப்பும் நேரம் இது. வெல்க கேப்டன் தலைமையில் மூன்றாவது அணி
Quote
 
 
+6 #44 amoorthy 2011-03-17 20:29
ஜெயலலிதா பிடிவாதம்,அகங்க ாரம் கொண்டவர். இந்தக் குணங்களை விட்டு மற்றவர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.நிச்சயம் அவர் இறங்கி வருவார்.வேறு வழியே இல்லை.
ஜே திருடத் தெரியாது திருடுபவர். இவரின் குணங்கள் மற்றவரை நேரடியாகத் தாக்கும்.இதனால் உடனேயே மற்றவர்கள் புரிந்து கொண்டு விலகிக் கொள்ள முடியும்.ஆனால் கருணாநிதி அப்படியல்ல. குள்ளநரிக் குணம் படைத்தவர். கூட இருந்தே குளி பறிக்கக் கூடியவர்.இவர் விஷயத்தில் மிக அவதானம் தேவை.சமீப நாட்களாக நடந்து வரும் செயல்கள்,மாறன் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறு,சம்பத்,ந ெடுன்செழியன்,அண ்ணா,எம்.ஜீ.ஆர். போன்றவர்களுடனான நிலைபாடுகள் இவை இவரின் குள்ளநரிக் குணத்தை காட்டும் சான்றுகள். திட்டம் போட்டு திருடும் இவர் எந்த நிமிடத்திலும் தனக்காக எவரையும் காட்டிக் கொடுக்கவும்,கவி ழ்க்கவும் தயங்காதவர். ஜே யுடன் எச்சரிக்கையாக நடந்து கொண்டால் தப்பிக்கலாம்,வி லகிக் கொள்ளலாம். ஆனால் கருணாநிதியுடன் அப்படி செய்ய முடியாது.எப்போது குணம் மாறும், கவிழ்த்து விடுவார் என்பதை சொல்ல முடியாது.கூட இருந்தே குளி பறிக்கும் கருணாநிதியை விட ஜே சிறிது சிறந்தவர்.
ஜே எதிரே வரும் வாகனம்,கண்டவுடன ் விலகிக் கொள்ளலாம்.கருணாநிதி பின்னே காரன் அடிக்காது வரும் வாகனம், விலகிக் கொள்ள முடியாது.அடிபட்டு குற்றுயிராய் அல்லது உயிர் போய் விட வேண்டியது தான்.
பேசித் தீர்த்து ஊழல் சக்கரவர்த்தியை வீழ்த்துவதே இன்றைய முதல் செயல் திட்டமாகும்.
Quote
 
 
+3 #43 Ganpa 2011-03-17 18:45
JJ cleverly plans to form Govt with Ittalian lady.This ia clever move to get rrid of wealth case and also eradicate KK.
Third front should seal this move and teach a lesson to this lady back driven by CHO.
Ganpa Singapore
Quote
 
 
+18 #42 Kumar.T 2011-03-17 18:31
இந்த அம்மா எந்த காலத்திலும் திருந்தாது.. இதை பிடிக்காவிட்டால ும் கூட கருணாநிதி மேல் உள்ள வெறுப்பில் இதை ஆதரிக்கலாம் என்று எல்லோரும் நினைத்தால் கூட அந்த வாய்ப்பை சரியாக உபயோக படுத்த தெரியாத ஒரு ஜென்மம்...அவ்வளவு தான் சொல்ல தோணுது
Quote
 
 
+12 #41 HARI 2011-03-17 18:18
கருணாநிதி வேட்டிக்கட்டிய ஜெயலலிதா,,,,,,

ஜெயலலிதா புடவைகட்டிய கருணாநிதி,,,,,,
Quote
 
 
-3 #40 Sirutha 2011-03-17 17:45
யோவ் சவுக்கு இப்பாவது நம்ம நிலைமையை புரிஞ்சிக்கோ, சாதிக் பார்த்தியா ராசா ரொம்ப நல்லவர்னு சர்ட்டிபிக்கேட் கொடுத்துட்டு செத்து போய்ட்டாரு. நீ ஆடுன ஆட்டத்த, அடுத்து அம்மா ஆட்சில ஆட முடியும்னு நினைக்கிறியா......அதான நீ ஏன் ஆட போற அம்மா வாழ்க ந்னு எப்போழ்தும் ஜெயா பேர சொல்லிக்கிட்டு காசி ராமேஸ்வரம்னு பொழச்சிக்க போய்ட மாட்ட. திரும்ப கலைஞர் ஆட்சிவரும் போழ்து வந்து சவுக்க நடத்திக்கலாம்.
Quote
 
 
+7 #39 வெத்து வேட்டு 2011-03-17 17:38
1. யார் இந்த சோ? தமிழகத்தின் நீரா ராடியா. ராடியாவுக்கு நீண்டமுடி இருக்கும். சோவுக்கு மொட்டை தலை. ராடியா முதலாளிகளுக்கான புரோக்கர் என்றால் சோ பார்ப்பனியத்துக ்கு குறிப்பாக பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவிற்கும் புரோக்கர். தமிழகத்தின் பல தேர்தல் தலைவிதிகளை அதாவது அதற்கு காரணமான கூட்டணிகளை இந்த மொட்டைபாஸ்தான் தீர்மானிப்பார் என்று பலர் நம்புகிறார்கள்.

2. மக்கள் தமது சொந்த உணர்வின் காரணமாக கருணாநிதியை எதிர்ப்பது ஆரோக்கியமானதா, இல்லை இந்த மொட்டை பாஸ் புரோக்கரது லாபி வேலை காரணமாக எதிர்ப்பது போல சித்தரிப்பது ஆரோக்கியமானதா? முதலாளிகளுக்கு ஆதரவாக யாரெல்லாம் அமைச்சர்கள் என்று நீரா ராடியா தீர்மானிப்பதற்க ும், பார்ப்பனியத்துக ்கு ஆதரவான கூட்டணியை இவர் தீர்மானிக்கிறார ் என்பதற்கும் என்ன வேறுபாடு?
3. தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினி எனும் நடிகனுக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை. அடுத்த படத்தில் அண்டார்டிகாவில் ஏதோ இந்தி நடிகையுடன் கையைக் காலை அசைத்து ஆடப்போகிற இந்த சுயநலவாதிக்கு ஏதோ பெரும் வாய்ஸ் இருப்பதாகவும், அதை கண்டு தமிழகமே அஞ்சி நடுங்குவதாகவும் ஜூ.வி ஒரு தேர்ந்த மாமா போல சித்தரிப்பது பச்சையான அயோக்கியத்தனம்.

4.சொல்லப்போனால் ரஜினிக்கு இப்படி ஒரு வாய்ஸ் பவர் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கதையை உருவாக்கி வெளியிட்டு இன்று வரை அது வரலாற்றில் இடம்பெற்றிருப்ப தற்கு காரணமே துக்ளக் சோதான்.

பொது அரங்கில் இத்தகைய சகுணிகளும், வாய்ஸ் ஸ்டார்களும் என்று தூக்கியெறியப்பட ுகிறார்களோ அன்றுதான் தமிழகம் ஆரோக்கியமான அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். கருணாநிதி, ஜெயா போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளையும் வீழ்த்த முடியும். இல்லையேல் நமது தலையெழுத்தை ரஜினி, சோ போன்ற பாசிசக் கோமாளிகள்தான் தீர்மானிக்கப் போவதாக நம்மை மாற்றிவிடுவார்க ள். அதை அடிமைத்தனம் என்றும் அழைக்கலாம்.

நன்றி
வினவு
Quote
 
 
+4 #38 JP 2011-03-17 17:26
JAYA WILL REALISE HER MISTAKE AFTER THE ELECTION RESULT REGARDING VAIKO
Quote
 
 
+10 #37 வெத்து வேட்டு 2011-03-17 16:39
ஜெயலலிதா ஒரு மதம் பிடித்த யானை. இவர் எப்பொழுதும் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வார்.
வை.கோ தயவுசெய்து மூன்றாம் அணி அமைத்து அதை வழி நடத்தி செல்ல வேண்டும் அந்த கரும் பன்னி விஜயகாந்த் ஐ கூட்டணியில் தாம்தான் ஏதோ பெரிய தலை என்ற மிதப்பில் கூட்டணி தலைவர் வேணும் , சி.எம் கேண்டிடேட் அப்படின்னு பிதற்றும். அதனால அதை சேர்க்க கூடாது.
Quote
 
 
+11 #36 க.மு.சுரேஷ் 2011-03-17 16:35
இது நம்பிக்கை துரோகம். வைகோ அரசியல் தலைவர்களில் நேர்மையானவர்.அவரை அவமான படுத்திவிட்டார் ஜெயலலிதா.கருணாநிதியும் ஜெயலலிதாவும் திருந்த போவதில்லை.மற்று அணி ஒன்றே தீர்வு.இது நல்ல தருணம் திரு வைகோ போன்ற தலைவர்களை நாம் தேர்வுசெய்ய.
Quote
 
 
-4 #35 Puthiyavan Raj 2011-03-17 15:35
19 வருடங்கள் தன்னை எம். பி. ஆக்கி அழகு பார்த்த கலைஞர் கெட்டவர், 19 மாதங்கள் தன்னை தீவிரவாத முத்திரை குத்தி, சிறையில் வைத்து கொடுமைபடுத்தியத ோடு அல்லாமல், மதிமுக தீவிரவாத இயக்கம் அதை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடிட்யது ஜெ. அரசு, அந்த ஜெ. நல்லவராம். அவருடன் இவர் கூட்டணி வைப்பாரம். இதில் யார் முட்டாள்? ஜெயின் கமிசனில் கலைஞர் கொடுத்த வாக்குமூலம் - வைகோ மீதான கொலைப்பழி குற்றசாட்டை நான் நம்பவில்லை என்பது. இத்தனைக்கும் வைகோ அப்போது திமுக எதிர் அணியில் இருந்தார். அப்போது கலைஞருக்கு வைகோ நன்றியும் சொன்னார். உண்மையில் அந்த குற்றசாட்டு ஜெ. அரசு வெளியிட்ட உளவுத்துறை தகவல். கலைஞர் அப்படி சொல்லவில்லை. இங்கு கலைஞரை கண்ணியக்குறைவாக திட்டுபவர் நாகரீகம் என்னவென்று புரிகிறது. நடமாடும் பல்கலைக்கழகம் என்று திமுக வினரால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட நாவலரை, உதிர்ந்த மயிர் என்ற ஜெ.வுக்கு ஜால்ரா அடிப்பவர் புரிந்து கொள்ளவேண்டும்.
Quote
 
 
+3 #34 aha 2011-03-17 15:26
antha count down aa thookku.thodatrrum mega kollai.
Quote
 
 
+2 #33 Aaruvathu Sinam 2011-03-17 14:58
If JJ is not compromising with the alliance.. the votes will divide just like last time and DMK will win.. Even if other parties are joining against DMK and ADMK without the support of Congres they cant make a difference..Third part alliance without congress will not succeed..
Quote
 
 
+3 #32 Danny12 2011-03-17 14:38
It is frustrating to read the readers choices to rebound between ADMK and DMK. People must learn to recognise candidates and not parties, ask questions to candidates...when you dont question, you dont make your point.
1 thing is clear that Vaiko support is becoming visible. Kudos to Vaiko
Quote
 
 
0 #31 raguraman 2011-03-17 14:19
we will vote for lok satta (Makkal Sakthi Katchi)
Quote
 
 
+6 #30 Noni 2011-03-17 13:07
ivanga eppavume ippadithaan
Quote
 
 
+12 #29 saidai azeez 2011-03-17 12:26
what mr. savukku, now do you think it is wrong to put the count down for DMK govt. you beleive in that orrogant lady who is the only choice left over to the public of tamil nadu. now, as you disoppinted, even all the coalition party leaders also left out in dark. you used to say she is a well administrator. in the land of GANDHI AND KAMRAJ, we dont want HITLOR OR MUSOLINI
Quote
 
 
+13 #28 nadigan 2011-03-17 12:07
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி 40 இடங்களில் தனித்து போட்டியிடும் என்று கூறி அதன் பட்டியலையும் வெளிட்டார் அக் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக்.

ஆனால், அவர் அறிவித்த அந்த பட்டியலில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடலாடி, இளையான்குடி, சமயநல்லூர் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றிருந்தன. இதன்மூலம் இல்லாத தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார் .
Quote
 
 
+9 #27 PUGAL 2011-03-17 12:02
MDMK will WIN..
Quote
 
 
+9 #26 ARULRAM 2011-03-17 11:59
ADMK THANUKKU THANAE MANNA ALLI POTTUKKUTHU
Quote
 
 
+32 #25 நாய் சேகர் 2011-03-17 11:46
இந்த தேர்தலில் மக்கள் பெரும் வெறுப்போடு தி.மு.க. விற்கு எதிராக வாக்களிக்கும் மன நிலையில் உள்ளனர். இருந்தபோதும் தி மு க எல்லாவிதமான தகிடுதத்தன்ன்கள ையும் செய்து வெற்றி பெற முயற்சிக்கும். எனவே நல்ல ஒரு கூட்டணி அ.தி.மு.கவிற்கு தேவை தே மு தி க வின் கூட்டணி அ.தி.மு.க., அணிக்கு பெரும் வலிமை சேர்க்கும். கம்யூனிஸ்ட் பார்ட்டி மேலும் இதன் வெற்றிக்கு உதவும். ஆனால் இவை அனைத்தும் புதிதாக வந்தவை, ம தி மு க இக்கட்சியோடு இணக்கமாக நீண்ட நாளாக உள்ளது. என்னதான் வைகோ விற்கு ஆதரவு இல்லாவிடினும், நீண்ட நாள் தோழமை கட்சி என்ற முறையில் ஒரு கணிசமான இடம் ஒதஈகீடு செய்யப்பட்டிருக ்கவேண்டும். புதிய கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால் அவரை கலட்டி விட நினைப்பது துரோகம். அதுவும் அவர் ஒரு நல்ல பேச்சாளர், நேர்மையானவர், அந்த நேர்மயாலேயே அவரின் அரசியல் வாழ்வு சுருங்கியது. சென்ற தேர்தலில் எல்லா தொகிதியிலும் வேறுபாடு இல்லாமல் பிரச்சாரம் செய்தார். இதுபோன்ற தன்னால மற்ற தலைவர்களை., களட்டி விடுவது துரோகம். கருணாநிதி எவ்வளவு தான் சுயனலக்காரரக இருந்தாலும் அவரின் இணக்கமான போக்கு கூட்டணியை இந்த கடினமான சூழ்நிலையிலும் தக்கவைக்க முடிந்தது. வைகோ இனிமேல் எங்கேயும் போக முடியாது என்ற நிலையில் அவரை ஓரம் கட்டுவது முறை ஆகாது. இன்னும் சொல்லப்போனால் அவருக்குத்தான் முதலி செஅட் ஒதுக்கீடு செய்திருக்கவேண் டும். ஜெயலலிதாவிடக்கு ஒரு நல்ல வாக்கு வங்கி இருந்த போதும், அவரின் தலைகணமே அவரின் வெற்றி வாய்ப்பை நழுவ விட வைக்கும். இத்போன்ற அரக்கத்தனம் நடுநிலை வாக்காளர்களை முகம் சுழிக்கவைக்கிறத ு. ஒரு நல்ல வாய்ப்பு ஜெயலலிதா விற்கு உள்ளது. அது தவறுமேயானால் அது அவரின் தலைக்கனத்தலேதான ். தன் பழைய தவுர்களில் இருந்து திருந்துவாரா?
Quote
 
 
+17 #24 sakthy 2011-03-17 11:45
இது ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியம் அல்ல.அவர் இறங்கி வர வேண்டும்.தமிழருவி மணியன் சொல்லியது போல் ஆட்சியை மட்டும் கருத்தில் எடுக்காது,ஊழல் லஞ்சம் இவற்றால் மக்கள் படும் வேதனையை கருத்தில் கொண்டு, மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும்.கடந்த கால தவறுகளை திருத்தி மக்களுக்காக செயல்படா விட்டால், அ.தி.மு.க.வின் எதிர்காலம் இந்தத் தேர்தலுடன் முடிவடைந்து விடும். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பும் இன்றைய சூழலில் அகங்காரம்,பிடிவ ாதத்தை விட்டு,மற்ற கட்சிகளை மதித்து ஒன்று பட்டால் இந்த ஊழல் குடும்ப ஆட்சியை ஒழித்து விடலாம். வெற்றி நம்பிக்கை கண்களை சில சமயங்களில் மறைத்து விடுவதால்,எதிரி க்கு சாதகமாக வாய்ப்புகளை நாமே உருவாக்கி விடுகிறோம். சிந்திப்பார்களா இல்லை மீண்டும் சாக்கடையில் நம்மை விழுத்துவார்களா .
Quote
 
 
+14 #23 Premkumar SJ 2011-03-17 11:44
அம்மணியை திருத்தவே முடியாது :)
Quote
 
 
+8 #22 venketesan 2011-03-17 11:44
Jaya has shown her arrogance again. She has ensured that DMK+ will sweep the elections.
Quote
 
 
+12 #21 tamizhan 2011-03-17 11:38
third front should be formed
m.k and j.j should be defeated
Quote
 
 
+18 #20 சித்திரகுப்தன் 2011-03-17 11:18
ஜெயலலிதாவின் இந்த ஆனவபோக்கு கருநாநிதிக்கு சதகமாக அமையப்போவது உறுதி.இவர் எல்லாவற்றையும் கையகப்படுத்தி எதனை சதிக்கபோகிறார் எனத்தெரியவில்லை ?திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? கொடநாடு, போயஸ் கார்டன் என இவர் தலையில் எழுதியிருக்கும் போது யார் என்ன செய்யமுடியும்?
Quote
 
 
-7 #19 friend of savukku 2011-03-17 11:15
தனியா நின்னா டேபோசிட் கூட கிடைக்காது. இவர்களுக்கு 41 சீட் எதுக்கு குடுக்கணும் ?
Quote
 
 
+17 #18 பா 2011-03-17 11:12
ஜெயலலிதாவின் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' அரசியல் எதற்கும் உதவப் போவதில்லை. அமாவாசை, பௌர்ணமி நெருங்கும் நேரங்களில், ஜெயலலிதா இது போன்று செய்த பல காரியங்களை உதாரணம் காட்ட முடியும். சர்ச்சைக்குரிய வைகோ, ஜெயேந்திரர் கைதில் இருந்து டெஸ்மா வரை எவ்வளவோ.

இப்போதும் கூட, நாளை (19 பிப்ரவரி 2011) பௌர்ணமி, அதுவும் நிலவு பூமிக்கு மிக அருகில் வேறு வருகிறதாம். கேட்கவே வேண்டாம். ஓட்டு பிரிந்து மீண்டும் திருடர்கள் ஆட்சி வந்தால் அதற்கு ஜெயலலிதா மட்டுமே காரணமாக இருக்கும்.தமிழர்களும், தமிழகமும் வீழ்ச்சியடைய காரணமாக இருந்தார் என்று வரலாறு சொல்லும்.
Quote
 
 
+11 #17 1983 2011-03-17 10:45
MDMK & BJP have to make joint and defeat DMK,AIADMK,Cong ress to save India from the Bitches
Quote
 
 
+20 #16 vasu, 2011-03-17 10:38
ஜெயலலிதா இன்னும் திருந்தவும் இல்லை,இனியும் திருந்துவதற்க்க ுரிய அறிகுறியும் தென்படவில்லை.கருணாநிதியும் இதேபோல் தான், இந்த இரண்டு பேயையும் பிசாசையும் விட்டு விட்டு வலுவான ஒரு முன்றாவது அணி உருவாக வேண்டும் தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க தயாராய் இருக்கிறார்கள், இந்த குரங்கு சேட்டை விடுவதை இத்துடன் நிறுத்த மற்றைய கட்சிகள் முயற்சிக்க வேண்டும்,செய்வா ர்களா?
Quote
 
 
+13 #15 Suriyan 2011-03-17 10:36
Why did ADMK oust MDMK from their alliance?
It is very strange!. MDMK matters for ADMK to capture the DMK's regime. Mr Vaiko is a true political leader, he could add strength to ADMK if it gets power to govern TN.
Quote
 
 
-3 #14 mary 2011-03-17 10:15
thiruttu naai
Quote
 
 
-4 #13 kaka 2011-03-17 10:13
This is Newton's 3rd law.Last election he betrayed MK and went with JJ. This time he got betrayed. Now interesting to see how he will face this election. But 1 thing is sure those who are not satisfied with MK and JJ may vote for him.
Quote
 
 
+29 #12 ஏகா.. 2011-03-17 10:11
கூட்டணி உடையும் பச்சத்தில் இத்தோடு ஜெ.வின் கதை முடிந்துவிடும். தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் எல்லாம் சேர்ந்து மூன்றாம் அணி அமைப்பது நல்லது.... வைகோவை ஒதுக்கிவைப்பது ஜீரணிக்க முடியாத விசயம் வைகோ இல்லை எனில் கரைசேர்வது கடினம்.. அதையும் தான்டி இது முதுகில் குத்தும் செயல்....ஜெவின் வாழ்க்கையில் எடுத்த மிக மோசமான முடிவாக இருக்கும்.. அம்மாவிற்கு END CARD -‍ போட போறங்க‌
Quote
 
 
+21 #11 காலவன் 2011-03-17 10:02
இந்த அம்மையார் ஒரு காலமும் திருந்தப்போவதில ்லை. வைகோ,விஜய்காந்த ்,கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள ், புதியதமிழகம்,சர த்குமார் கட்சி, சீமான், போன்றோர் ஒர் அணியாக இந்த இரு கட்சிகளின் அராஜக போக்குக்கு சாவுமணி அடிக்கவேண்டும். இந்த சந்தப்பர்த்தை விட்டால் அதிமுக,திமுகவக் கு மாற்றாக ஒரு ஆட்சி இனி வரவேப்போவதில்லை . இதை விட ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தை திமுக அதிமுக மற்ற கட்சிகளுக்கு ஏற்படுத்தி தரமுடியாது வைகோ,விஜய்காந்த ் உடனடியாக இணைந்து பேசி ஒரு மாற்று கூட்டணியை அமைத்து போட்டியிட்டு தமிழக மக்களின் ஆவலை பூர்த்தி செய்ய முயலுங்கள். இது என் வேண்டுகோள்.
Quote
 
 
+11 #10 Anand1 2011-03-17 09:51
DMDK, MDMK, CPI, CPI(M), BJP, and Karthik, will form 3rd front? What will happen to the election results. My god mind boggling calculations and alingnments.
Quote
 
 
+12 #9 சுமன் 2011-03-17 09:44
நாம் ஏன் தமிழர் தேசிய முன்னணிக்கு ஆதரவு தரக்கூடாது? திராவிடம் வேண்டாம் தமிழினம் வேண்டும் என்போருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தோன்றுகிறது. தமிழர் தேசிய முன்னணி பற்றி சவுக்கு என்ன சொல்கிறது?
Quote
 
 
+16 #8 Ashok - USA 2011-03-17 09:30
நம்பிக்கை துரோகம் !!! ஆணவம் ... அகங்காரம்.... திமிரு !!!
Quote
 
 
+9 #7 KK 2011-03-17 09:15
I am disappointed. But AIADMk wants to get more seats to get single majority.
So it may end up contesting 230 seats.

DMK-Congress got lifeline by default

AIADMK arguement is that- DMDK without symbol can't win more seats
Marxist/CPI always win by AIADMK support.So constituencies dont matter
MDMK betrayal is something unimaginable
Let us hope by afternoon all ends well
Quote
 
 
+23 #6 K Raman 2011-03-17 08:57
கருணா 2ஜியால் அழிவார். அம்மா அகந்தையால் அழிவார். யானை மதம் ஏரினால் மண்ணை வாரி தன் மேல் போட்டுக் கொள்ளும். தமிழக கதி ?
Quote
 
 
+8 #5 PREM ANANTH,SINGAPOR 2011-03-17 08:55
always jayalalitha do this kind of very nonsense things,if she want get the enough seats to make the government, she should change her attitude,otherw ise these robbers will come again in the crown.
Quote
 
 
+4 #4 chozhavandhan 2011-03-17 08:33
DMK vai thorkadikka nalla koottani uruvaagi vittadhey endru santhosha patten but indha amma konjam kuda thannoda ego va vittu kuduka matenranga.. makkalai pathi yosikkama ipdi thannichaiya mudivu edukkara gunam innum ivangala vittu pogala.. election la vote podratha venaama nu puriyala
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 108 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4534
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week73786
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month276518
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12798637