முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இப்போதே பயமாக இருக்கிறது…… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 29
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 18:21

எதற்காக இப்போதே பயமாக இருக்கிறது… ? வேறு எதற்கு…. அதிமுக பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்து, ஜெயலலிதா முதலமைச்சர் ஆனால், எப்படி இருக்குமோ என்று இப்போதே பயமாகத்தான் இருக்கிறது.

 

1996ம் ஆண்டு, தமிழகம் எங்கும், ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசியது. மக்களுக்கு, வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம், அங்கெங்கெனாதபடி, எங்கெங்கும் நிறைந்திருந்த ஊழல், அதிகாரிகளின் அட்டகாசம், எங்கெங்கும் கட்டவுட்டுகள், (அப்போது ப்ளெக்ஸ் போர்டுகள் இல்லை) என்று அந்த அராஜகத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது. ஒரு எதிர்க்கட்சி சேனல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சன்டிவி அன்று உதாரணமாகத் திகழ்ந்தது. இப்போது போல, அப்லிங்கிங் வசதி அப்போது இல்லாவிட்டாலும் கூட, பிலிப்பைன்ஸுக்கு கேசட்டை அனுப்பி ஒளிபரப்ப வேண்டிய நெருக்கடி இருந்தாலும் கூட, அற்புதமான எதிர்க்கட்சியின் பணியை செய்தது. அப்போது சன் டிவியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஆட்சி மாற்றத்திற்கான ஒரு அடித்தளமாக அமைந்தது என்றால் மிகையாகாது.    மக்கள் அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்ததன் காரணம், அன்றைய ஜெயலலிதா அரசாங்கத்தின் மீது அப்படி ஒரு வெறுப்பு. எப்போது இந்த அரசாங்கம் ஒழியும் என்று கடும் வெறுப்பில் இருந்தார்கள்.

2176838929_30c714cf74_b

கருணாநிதி அன்று இறுதியாக பேசிய தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழகம் இருந்த இடம், காலியாக இருக்கும் என்று கூறினார்.   ரஜினிகாந்த், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பேசினார். ஆட்சிக்கு வந்த திமுக, ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகளை தொடுத்தது. ஜெயலலிதாவும், சசிகலாவும், நீதிமன்றப் படியேறி அந்த ஊழல் வழக்குகளை சந்தித்தனர். அத்தோடு அதிமுகவின் கதை முடிந்தது, ஜெயலலிதா இதோடு எழுந்திருக்க மாட்டார் என்றுதான் கருணாநிதி நினைத்தார். ஆனால், 1998 மற்றும் 1999ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் கணிசமான எம்பிக்களை பெற்று, மீண்டும் எழுந்தார்.

 

1996 – 2001 திமுக ஆட்சியை பொறுத்த வரை, பெரிய அளவில் ஊழல் புகார்களோ, குற்றச் சாட்டுகளோ, இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப் போனால், திமுக கட்சியினரையே கருணாநிதி சம்பாதிக்க விடவில்லை என்பதுதான் அன்றைய திமுக ஆட்சியின் மீது இருந்த அங்கலாய்ப்பு. இந்த நேரத்தில் தான் 2001 தேர்தல் நடந்தது.

 

2001 தேர்தல் அறிவிக்கப் பட்ட பிறகு, அப்போது விஜய் டிவியில் அரசியல் விவாதங்கள் ஒளிபரப்பப் பட்டு வரும். அந்த விவாதங்கள் எவ்வித கட்சி சார்பும் இல்லாத காரணத்தால், மிகப் பெரிய வரவற்பைப் பெற்றன.   அப்போது, தேர்தல் முடிவுகளை விவாதித்துக் கொண்டிருந்த போது, ஜெயலலிதாவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று நிகழ்ச்சி நடத்துபவர் கேட்ட கேள்விக்கு, ஒரு பத்திரிக்கையாளர், கடந்த 5 ஆண்டுகளில், ஜெயலலிதா ஆட்சியில் இல்லாவிட்டாலும், கட்சியை நடத்தும் விதத்தைப் பார்க்கும் போதும், கட்சி நிர்வாகிகளை காலையில் ஒருவர், மாலையில் ஒருவர் என்று மாற்றும் போதும், ஜெயலலிதா மாறவேயில்லை என்று தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் அந்த பத்திரிக்கையாளர், பத்திரிக்கையாளர் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்து, தலைமைச் செயலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 

அதுதான் 2001 – 2006 வரையிலான அதிமுக ஆட்சியின் ஒரு சாம்பிள்.  ஆட்சிக்கு வந்த உடனேயே, ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் வார்த்தை யுத்தம் தொடங்கியது. ‘கஜானா காலி’ என்றார் ஜெயலலிதா. ’கஜானா காலியில்லை, அரிசியாக வைத்திருக்கிறேன்’ என்றார் கருணாநிதி.   ’அத்தனை அரிசியும், புழுத்த அரிசி’ என்றார் ஜெயலலிதா. பத்தாது என்று சட்டப்பேரவையில் வேறு அந்த அரிசியை காண்பித்தார்.   சட்டப் பேரவையில் ஜெயலலிதா சொன்னதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பத்திரிக்கை நிருபர்களை அழைத்துக் கொண்டு, பொன்முடி, அரசு கோடவுனில் நுழைந்து, அரிசி சாம்பிள் எடுத்து, ’எது புழுத்த அரிசி’ என்று சவால் விட்டார். அப்போது கோடவுனில் நுழைந்த சன் டிவி நிருபர் மீது அத்து மீறி அரசு அலுவலகத்தில் நுழைந்தார் என்று வழக்கு. அதற்கு எதிராகத்தான் அன்று பத்திரிக்கையாளர்கள், போராட்டம் நடத்தினார்கள்.

 

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் ஒரு தொடக்கம் மட்டுமே…. தொடர்ந்து, ஆடுமாடு கோழி வெட்டத் தடைச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், புதிய நியமனத்திற்கு தடைச் சட்டம், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் குறைப்பு, என்று தொடர்ந்து சாமான்ய மக்களை பாதிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தார். அரசு ஊழியர்கள் மீது, சாமான்ய பொதுமக்களுக்கு ஒரு வெறுப்பு இருந்தாலும், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப் பட்டதையும், அவர்கள் குடியிருந்த அரசுக் குடியிருப்பில் புகுந்து, இரவோடு இரவாக அவர்களை காலி செய்ய்ச் சொல்லியதையும், மக்கள் ரசிக்கவில்லை.

j1

அடுத்த ஐந்தாண்டுகளில் அதிமுக ஆட்சி மீது பெரிய அளவில் ஊழல் குற்றச் சாட்டுகள் இல்லையென்றாலும், நற்பெயரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

 

தற்செயல் என்று சொல்ல முடியாத வண்ணம், ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும், நீதிமன்றங்கள் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தன.

 

2006 தேர்தல், யாருக்கும் சாதகமான அலை இல்லாமல், எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பு அலையும் இல்லாத ஒரு சூழலில் வந்தது.   அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கஷ்டப்பட்டுக் கரையேறி, ஆட்சி அமைத்தது.

 

2006 திமுகவின் ஆட்சி, கருணாநிதி குடும்பத்தின் அசுர வளர்ச்சியால், திமுக ஆட்சியாக இல்லாமல், கருணாநிதியின் குடும்ப ஆட்சியாகவே விளங்கியது. திமுக ஆதரவாளர்கள் கூட, இந்த ஆட்சி போக வேண்டும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர்.   குடும்பத்தின் கடும் ஆதிக்கமும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், அடித்த கொள்ளைக்கு அளவே இல்லாமல் போனது. சாமான்ய பொதுமக்கள் வாழவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டது.   ஊழலின் ஊற்றுக் கண்ணாகவே கருணாநிதி குடும்பம் மாறியது.   1996 பொதுத் தேர்தலின் கடைசி பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது, இன்று கருணாநிதிக்குத் தான் பொருந்தும்.   கருணாநிதி குடும்பம் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கும் இடத்தில் ஒரு காலியிடம் தான் இருக்கும்.

 

இப்படிப் பட்ட ஒரு மோசமான சூழலில் தான் இன்று 2011 தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தல் அறிவிக்கப் பட்ட உடனேயே, பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிமுக அணியை பலமாக்க வேண்டும் என்று, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் பலரும், கடுமையாக பணியாற்றினார்கள். சவுக்கக்குத் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் பலரும், இந்தக் கூட்டணியில் தேமுதிக வந்து சேரவும், மதிமுக வெளியேறாமல் இருக்கவும், பலரும் கடுமையாக பணியாற்றினார்கள். இவ்வாறு பணியாற்றிய அனைவருக்கும் அதிமுக ஆட்சி வந்ததும், சலுகைகளை பெற வேண்டும் என்றோ, மந்திரியாக வேண்டும் என்றோ, வீட்டு மனை ஒதுக்கீடு பெற வேண்டும் என்றோ ஆசையில்லை.   தமிழகத்தின் ஒரு மிகப்பெரிய கொள்ளைக் கூட்டம் அதிகார மையத்திலிருந்து அகற்றப் பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

2176839155_a6d9b3f088_b

ஆனால் கருணாநிதியை ஆட்சியை விட்டு அகற்றும் வல்லமை படைத்த ஜெயலலிதாவின், போக்கோ, மிகுந்த கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.   இந்த தேர்தல் கூட்டணி குறித்து ஜெயலலிதா நடத்திய பேச்சுவார்த்தைகளும், அதன் முடிவில், அதிமுக வெளியிட்ட வேட்பாளர்களின் பட்டியலும், அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

 

கூட்டணி கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கையிலேயே, கூட்டணி கட்சிகள் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் பல்வேறு தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்ததைப் போன்ற, மோசமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. அதுவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இவ்வாறு அறிவித்ததென்பது, கூட்டணிக் கட்சிகளை கடும் கோபம் கொள்ளச் செய்தது. இவ்வாறு, தான்தோன்றித் தனமாக நடத்து கொள்வதற்கு, ஜெயலலிதா ஒன்றும் மிக மிக வசதியான ஒரு சூழலில் இல்லை.   மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமானால், ஒரு காலத்தில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது என்று வரலாற்றுப் பாடத்தில் பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் ஒரு நிலையை கருணாநிதி உருவாக்கி விடுவார். ஜெயலலிதாவின் இருப்பே கேள்விக்குள்ளாகும் ஒரு சூழலை எளிதாக கருணாநிதி ஏற்படுத்துவார்.

 

இப்படிப் பட்ட ஒரு சூழலில், மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய கட்டாயம், ஜெயலலிதாவுக்கு உண்டு.   கூட்டணிக் கட்சிகளோடு நடத்தும் பேச்சுவார்த்தையின் விபரங்களே, பொதுமக்களுக்குத் தெரியாத வண்ணம், விரைவாகவும், ரகசியமாகவும், பேச்சுவார்த்தையை முடித்து, திமுகவுக்கு முன்னதாக, வேட்பாளர் மற்றும் தொகுதிப் பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும். அதிமுக கூட்டணி சுமூகமாக தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்டது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்ததையடுத்து, அதிமுக கூட்டணியில் பெரிய குழப்பம் என்ற எண்ணமே மக்களுக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், ஜெயலலிதா திருந்தவே இல்லை. அவர் மாறவே மாட்டார் என்றும் பரவலாக பேசத் தொடங்கினார்கள். தெளிவாக முடிவெடுத்து, சுமூகமாக அறிவிப்பை வெளியிட்டிருந்தால், சன் டிவியும், தமிழக உளவுத்துறையும், இந்தக் குழப்பத்தை பயன்படுத்தி வெளியிட்ட செய்திகளையும், ஏற்படுத்திய பிரச்சினைகளையும் தவிர்த்திருக்க முடியுமே… !

 

ஒரு வேளை, ஜெயலலிதாவுக்குத் தெரியாமலேயே, சசிகலா குழுமத்தினரால், இந்தப் பட்டியல் வெளியிடப் பட்டது என்ற தகவல் உண்மையானால், அது இன்னமும் மோசம்.   ஒரு முக்கியமான சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெரிவு செய்வதற்குக் கூட ஜெயலலிதாவுக்கு சுதந்திரம் இல்லாத நிலையில் அவர் ஆட்சி அமைத்தால், அது யாருடைய ஆட்சியாக இருக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

ஓ.பன்னீர்செல்வமோ, செங்கோட்டையனோ, இது போல ஒரு தவறைச் செய்திருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்… ? அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து அவர்கள் நீக்கப் பட்டிருக்க மாட்டார்கள் ?

 

கட்சியில் வேறு எந்தப் பதவியில் இருப்பவர்களும், இது போல நடவடிக்கைக்கு ஆளாகக் கூடிய சூழலில் இருக்கையில், சசிகலா குழுமத்தினர் மீது மட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இருப்பது ஏன்…. ? அப்படி சசிகலா குழுமத்தினர் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால், அதற்கு ஜெயலலிதாதான் முழுப் பொறுப்பாக முடியும்.   அப்போதும், அவரின் அடுத்த ஆட்சியைப் பற்றிய அச்சம் இன்னும் அதிகமாகிறது.

2881301163_7ffcb0a4c7_b

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட உடனேயே, சசிகலா குழுமத்தினரைச் சேர்ந்த, என் நடராஜன், எம்.ராமச்சந்திரன், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், திவாகரன் ஆகியோர், ‘உங்களுக்கு அதிமுக எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருகிறேன் என்று 40 முதல், 50 லட்சம் வரை வசூல் செய்து குவித்தது உங்களுக்குத் தெரியுமா ?

 

இப்படி ஆட்சிக்கு வரும் முன்பே இவ்வாறு வசூல் செய்பவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்வார்கள் ?   உங்கள் கட்சி வேட்பாளர்களைத் தெர்வு செய்யக் கூட முடியாத நிலையில் நீங்கள் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறீர்களா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லையே ?

 

இன்று, அதிமுக டிக்கட் வேண்டி வருவோரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, கோடிகளை குவிப்பவர்கள், நாளை திமுக ஆட்சியில் ஊழல் மன்னன்களாகத் திகழும், ஜாபர் சேட், ராதாகிருஷ்ணன், கண்ணாயிரம் போன்ற அதிகாரிகளிடம் நாளை வசூல் செய்து விட்டு, இவர்களுக்கு நாளை நல்ல பதவிகளை வாங்கிக் கொடுத்து, இவர்கள் மீது எந்த விசாரணையும் வராமல் தடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ?

மேலும் நீங்கள் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்கள், உங்கள் கூட்டணிக் கட்சிகள், மத்தியில் உங்கள் மீது எந்த அளவுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது தெரியுமா ?   நீங்கள் எப்போதும் மாற மாட்டீர்கள் என்று எவ்வளவு வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா ?

 

இந்தக் காரணங்கள் தான், உங்கள் மீதான அச்சத்தை ஏற்படுத்தி நீங்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன நடக்குமோ என்று இப்போதே பயமாக இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.

 

Comments  

 
-1 #88 srinivasan balaji 2011-04-21 20:59
karunanidhi parri mattume ealuthu. amma parri ealuthathe.
Quote
 
 
+1 #87 jaya 2011-03-25 22:21
Quoting ஏகா..:
ஜெ தான் ஆட்சிக்கு வரவேண்டும் ஆனால் பெருபாண்மை கிடைக்க கூடாது. விஜயகாந்த் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும்..
இவர் சசிகலா கும்பலை விட்டு எப்போது வெளிவருகிறாரோ அப்போது தான் எல்லாம் ஊருப்படும்

----------------------------------------
ஏகா உங்கள் கருத்து தான் சரி. ஏனென்றால் ஜ்ஜ் க்கு மிருக பலம் வரகூடாது. ஆடு மிநோரிட்டி அக இருக்கவேண்டும்.. இல்லையென்றால் ஆட்டம் ஜாஸ்தியாகி தமிழ்நாடு சசி பிடியில் போய்விடும். ஆட்டத்தை குறைக்கவேண்டும் எனில் மஜாரிட்டி வரக்கூடாது .
Quote
 
 
+1 #86 puli 2011-03-24 11:43
2013 இல் அத்வானி பிரதமர் வைகோ முதல்வர் . ஜெயா ஆந்திரா
Quote
 
 
0 #85 ராமசந்திரன் 2011-03-24 00:27
//////என் அரசியல் கனவு : இந்த தேர்தலில் கருணாநிதி கட்டாயம் தோற்க வேண்டும்.. ஜெயலலிதா ஜெயித்து வந்த சில மாதத்தில் அழகிரி மற்றும் கனிமொழியை தூக்கி நிரந்தர ஜெயிலில் போடவேண்டும் ... கீ வீரமணி , சுபவீரபாண்டியன் , ரமேஷ் பிரபா, ஜெகத் கஸ்பர் போன்றவர்கள் ஒரு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு தாங்களாகவே தன வீட்டுக்கு தீ வைத்துகொள்வார்க ள்../////

SelvanMani அவர்களே இந்த ஆட்சியின் தூண்களில் ஒன்றான கேடுகேட்டவர்களா ன நக்கீரன் கோவாலு ,காம ராசுவை விட்டுட்டீங்களே ...!
Quote
 
 
+1 #84 வெத்துவேட்டு 2011-03-23 22:07
Quoting நாய் சேகர்:
அனேகமாக ஜெயலலிதாவிடம் நல்ல பல திறமைகள் இருந்தாலும், அவரின் சில குறைகள் பெரிதாக தெரிகிறது. அதில் முக்கியமாக ஆணவம், அனுசரித்து செல்லாமை, நானே ராஜா மந்திரி என்ற எண்ணம் போன்றவை அவரின் பெரும் வளர்ச்சியை தடுக்கிறது. சில நேரங்களில் அவரது தோழி அவரை அடிமை படுத்திவிட்டாரோ என்ற பயமும், அது எதனால் என்ற சந்தேகமும் மிரள வைக்கிறது. நல்ல மேலாண்மை என்பதே வேலையும், அதன் பயனையும் அனைவர்க்கும் பகிர்ந்து கொள்வதிலிருந்த ஆரம்பம். இதனை DELEGATION என்றும் கூறுவார். இது இவரிடும் குறைவு. இருந்தாலும் திமுக மறுபடியும் வர யாரும் விரும்ப வில்லை. அது ஒன்றே அவரின் வெற்றிக்கு வழிகோலும், ஆனால் அது மட்டும் நல்லாட்சிக்கு வழி வகுக்காது. அவரின் தோழியின் ஆட்டம் மறுபடியும் தொடுர்மெனில், அது தமிழர்களின் தலைவிதி. அது ஒரு புதிய கட்சிக்கு அடுத்த இந்தாண்ட்களில் வைப்பை எட்படுத்தும்.வைகோ மீது நிறையபேருக்கு நம்பிக்கையும் மரியாதும் உள்ளது, அனால் அவர் வெற்றி பெரும் அளவிற்கு வாக்கு வங்கி இல்லை என்பதால் அந்த வோட்டுக்கள் சிதறி வேறு கட்சிக்கு செல்கிறது. இந்த முறை எல்லா சின்ன கட்சிகளும் சேர்ந்து தேர்தலை சந்தித்து அப்துல் கலாமை முதல்வராக்கி இருந்தால் ஒரு விடிவு கிடைத்திருக்கும ் ஒரு நல்லாத்சியோடு.


போலீஸ் நாய் சேகர் என்கிற நபர தேடுறத பேப்பர்ல படிச்சேன் . முதல்ல பேர மாத்துப்பா.
Quote
 
 
+2 #83 வெத்துவேட்டு 2011-03-23 20:59
எல்லாம் நல்லா காமெடி பன்றீங்க. ஏன் லோக் சக்தி ய ஆதரிக்கக்கூடாது . விஜயகாந்த் ஒரு கொள்கை இல்லாத ஆசாமி . அந்த ஆள எதுக்கு பவர் ல கொண்டு வந்து வைக்கணும். அந்த ஆளு ஒரு காமெடி பீஸ். வைகோ பி.ஜ.பி யுடன் கூட்டணி வைத்து ஆட்சி பிடிக்கணும் . கம்யூனிஸ்ட் உதவியுடன். சீமானும் மற்றும் தமிழர் நலன் கொண்ட அனைவரும் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். என்ன தொழில் அதிர்பர்கள் தான் உள்குத்து வேலை பார்ப்பார்கள்.


இந்த தேசத்தின் நலன் கொண்ட கட்சி எதுவோ அதையே நம் எல்லோரும் ஆதரிக்க வேண்டும் . அந்த விதத்தில் இவை சரியான கூட்டணி என்பது என்னுடைய கருத்து.


அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரண்டும் கட்சி நலம் சார்ந்தவை . தே.மு.தி.க கொள்கையே இல்லாத கட்சி.

விஜயகாந்த் ஒரு குடுத்த எம்.எல்.ஏ வாய்ப்பில் அந்த தொகுதி மக்களுக்கு என்ன செய்து கிழித்தார் . அல்லது தமிழ் நாட்டு மக்களுக்காக சட்டமன்றம் சென்று பேசி கிழித்ததுதான் என்ன ?
Quote
 
 
-4 #82 பிலால் 2011-03-23 10:26
நீங்கள் சொல்லும் கண்க்கையை பார்த்தால் 91-96 அதிமுக அரசு மோசம், 96-01 திமுக அரசு நன்று, 01-06 அதிமுக மோசம் ,06-11 திமுக மோசம். ஆக மொத்ததில் திமுக அரசு நன்று என்று கூறிவிட்டீர்களே சவுக்கு.. அடுத்தவன் முதுவை புன் வரும் வரை சொறிஞ்சி அதில் இன்பம் கான்பது மனநலம் பாதித்தவர்களின் செயல். சவுக்குவும் அப்படித்தான் போல.....
Quote
 
 
+7 #81 நாய் சேகர் 2011-03-22 19:29
அனேகமாக ஜெயலலிதாவிடம் நல்ல பல திறமைகள் இருந்தாலும், அவரின் சில குறைகள் பெரிதாக தெரிகிறது. அதில் முக்கியமாக ஆணவம், அனுசரித்து செல்லாமை, நானே ராஜா மந்திரி என்ற எண்ணம் போன்றவை அவரின் பெரும் வளர்ச்சியை தடுக்கிறது. சில நேரங்களில் அவரது தோழி அவரை அடிமை படுத்திவிட்டாரோ என்ற பயமும், அது எதனால் என்ற சந்தேகமும் மிரள வைக்கிறது. நல்ல மேலாண்மை என்பதே வேலையும், அதன் பயனையும் அனைவர்க்கும் பகிர்ந்து கொள்வதிலிருந்த ஆரம்பம். இதனை DELEGATION என்றும் கூறுவார். இது இவரிடும் குறைவு. இருந்தாலும் திமுக மறுபடியும் வர யாரும் விரும்ப வில்லை. அது ஒன்றே அவரின் வெற்றிக்கு வழிகோலும், ஆனால் அது மட்டும் நல்லாட்சிக்கு வழி வகுக்காது. அவரின் தோழியின் ஆட்டம் மறுபடியும் தொடுர்மெனில், அது தமிழர்களின் தலைவிதி. அது ஒரு புதிய கட்சிக்கு அடுத்த இந்தாண்ட்களில் வைப்பை எட்படுத்தும்.வைகோ மீது நிறையபேருக்கு நம்பிக்கையும் மரியாதும் உள்ளது, அனால் அவர் வெற்றி பெரும் அளவிற்கு வாக்கு வங்கி இல்லை என்பதால் அந்த வோட்டுக்கள் சிதறி வேறு கட்சிக்கு செல்கிறது. இந்த முறை எல்லா சின்ன கட்சிகளும் சேர்ந்து தேர்தலை சந்தித்து அப்துல் கலாமை முதல்வராக்கி இருந்தால் ஒரு விடிவு கிடைத்திருக்கும ் ஒரு நல்லாத்சியோடு.
Quote
 
 
+5 #80 MDMK 2011-03-22 17:43
JJ will Take rest another 5 years ( Because of Mr.Vaiko) ...

My expectation:

ADMK- 85 ,DMDK-05 ,Communists (Both)- 20
DMK- 85 Congress-00 PMK-10 VC-5 Kongu-5 ( BJP & others)-19 seats...

So, nobody can come to the power...

( All Neutral peoples, Please vote for Form 49, O )
Quote
 
 
+6 #79 Sirutha 2011-03-22 17:28
சவுக்கு ஜெயாவையும் விமர்சிக்கிறாறா ம் அதுவும் எப்படி பட்டு குஞ்சத்தால வலிக்காம. ராஜ்பாக்ஸே பேச்சை கேட்டு வைகோவை தூக்கி எறிஞ்சி தன்னோட சுயர்ருபத்தை காட்டிய ஜெயா எப்போழ்துமே ஆட்சிக்கு வரகூடாது. கலைஞர் ஆட்சியில் பணக்காரனுங்களுக ்கு இடையில் காசு சம்பாரிப்பதில் பிரச்சினை ஆனால் சாதாரண மக்கள் நன்றாகவே வாச்கிறார்கள். அது தான் நாட்டுக்கு தேவை நீங்க பணம் சம்பாரிக்க வசதியா உள்ள கட்சி வர பொது மக்கள் வாழ்க்கையை பாழக்க துடிக்கிறீர்கள் .
Quote
 
 
+3 #78 ஏகா.. 2011-03-22 16:36
ஜெ தான் ஆட்சிக்கு வரவேண்டும் ஆனால் பெருபாண்மை கிடைக்க கூடாது. விஜயகாந்த் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும்..
இவர் சசிகலா கும்பலை விட்டு எப்போது வெளிவருகிறாரோ அப்போது தான் எல்லாம் ஊருப்படும்
Quote
 
 
+4 #77 Khan 2011-03-22 15:15
Tats tamil is like SUN TV..Don't belive tat website any more. There NEWS always support to DMK. Please avoid to read Thats tamil.Quoting sakthy:
சாவுக்கு விசாரிக்குமா
தூத்துக்குடி,கர ்நாடக தொழில் அதிபர்கள் இருவரும்,ராஜபக் சேயும் ஜேஜே க்கு பண உதவி செய்ய முன் வந்ததாகவும் அதனால் வைகோ வெளியேற்றப்பட்ட ார், என்றும் தற்ஸ்தமிழில் செய்தி வந்தது பற்றி உண்மையை அறிய விரும்புகிறோம்
Quote
 
 
+12 #76 Ravi 2011-03-22 13:35
சுமார் 20 வருடங்களாக ஒருவர் தவறு இழைத்துக் கொண்டே வரும்போது தொடர்ந்து அவரை நம்புவது நாம் செய்யும் முட்டாள்தனம் ஆகும். திருமதி. (!) ஜெயலலிதா இந்த ஜென்மத்தில் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை. அவரை குழந்தை முதல் தெரிந்தவர்கள் கூறியதை கேட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன் ஜெயாவின் பிடிவாதமும் அகந்தையும் கூடப்பிறந்தவை. எக்காலமும் மாறாது.
Quote
 
 
-1 #75 iranian 2011-03-22 13:26
GOOD SAVUKKU.... VALTHUGAL...
Quote
 
 
0 #74 KK 2011-03-22 11:23
Quoting Elan:
if it is DMK VS ADMK in the constituency, i will vote for DMK.

if it is CONGRESS VS ADMK in the constituency, THEN i will cast 49 O OR VOTE OR BJP

So 176000 crore corruption is okay??
Right.God save us after April 13th
Quote
 
 
-1 #73 Raasu 2011-03-22 11:13
Quoting sakthy:
சாவுக்கு விசாரிக்குமா
தூத்துக்குடி,கர ்நாடக தொழில் அதிபர்கள் இருவரும்,ராஜபக் சேயும் ஜேஜே க்கு பண உதவி செய்ய முன் வந்ததாகவும் அதனால் வைகோ வெளியேற்றப்பட்ட ார், என்றும் தற்ஸ்தமிழில் செய்தி வந்தது பற்றி உண்மையை அறிய விரும்புகிறோம்


Thatstamil.com Murasoli-yin innoru vadivam. ADMK/ BJP matrum Hindhu mathathirkku ethiraana seithikalai mattume poduvaan madhaveri pidiththa editor AK KHAN.
Quote
 
 
+2 #72 சுமன் 2011-03-22 10:51
Quoting Elan:
if it is DMK VS ADMK in the constituency, i will vote for DMK.

if it is CONGRESS VS ADMK in the constituency, THEN i will cast 49 O OR VOTE OR BJP


வாக்குகளை வீண் செய்யாமல் தயவு செய்து தமிழர் தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள்.
Quote
 
 
-6 #71 KK 2011-03-22 10:13
SAVUKKU,
LIKE VAIKO YOU HAVE WRITTEN THIS ARTICLE EMOTIONALLY.
THINK OF THE WAR AHEAD -TO LIBERATE TAMILNADU SUBASH BOSE JOINED GERMANY TO FIGHT BRITISH AND LIBERATE INDIA.
ENEMY'S ENEMY IS FRIEND.
THERE IS TINA(THERE IS NO ALTERNATIVE) FACTOR IN TAMIL NADU.
SO JJ HAS TO COME IF JUSTICE IS TO BE GOT FOR 176000 CRORES MONEY PLUNDERED.
JUSTICE FROM FAMILY RULE. SO IF YOU TAKE A WISHY WASHY STAND ,ALL EFFORTS OF PAST ONE YEAR WILL GO WASTE.
FORGET ALL OTHER THINGS- VAIKO,SHASHI ETC.
IN 27 DAYS TAMIL NADU HAS TO BE LIBERATED.
YOU ARE THERE FROM DAY 1 TO MONITOR JJ RULE. SO DONT FEAR.
PAST ONE WEEK IS SAD STORY. BUT REMEMBER MORE THE CONSTITUENCIES AIADMK CONTESTS GREATER CHANCE FOR GETTING SINGLE MAJORITY.I AM VOTING AIADMK. I LOVE VAIKO BUT I ALSO FEAR FUTURE UNDER DMK RULE.
THIS IS MY LAST CHANCE.
I AM NOT GOING TO WASTE IT
I REQUEST YOU TO GIVE CLEAR DIRECTION TO YOUR FOLLOWERS. AT AROUND 3 MILLION HITS YOU ARE WORTH 10 LAC VOTES ATLEAST. ASK YOUR READERS TO CONVERT 25 VOTERS.
HISTORY WILL NOT PARDON THOSE WHO FAIL TO CONVERT OPPORTUNITIES AND VOTE OUT THIS CORRUPT REGIME
KK
Quote
 
 
-2 #70 Arivu 2011-03-22 10:12
ஒரு வேளை அதிமுக அறுதி பெரும்பான்மை பெறாமல் செய்து, அரசின் கடிவாளத்தை விஜயகாந்த் கையில் கொடுத்தால் இந்த பயம் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எனவே அதிமுக போட்டி இடும் தொகுதிகளை விட தேமுதிக போட்டி இடும் தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற வைக்க வேண்டும்.
Quote
 
 
-1 #69 Tamilar Thalaivan 2011-03-22 09:26
எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? (An Engineers view on Election Manifestos)

http://www.facebook.com/notes/tamilar-thalaivan/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-an-engineers-view-on-election-manifestos/119064301504815
Quote
 
 
+2 #68 லக்ஷ்மணன் 2011-03-22 07:01
சவுக்கு வெப்சைட்டில் புகைப்படங்கள் நல்ல க்லாரிட்டியுடன் அருமையாக உள்ளது. தொடரட்டும் தங்கள் சேவை.
Quote
 
 
+11 #67 Elan 2011-03-22 06:57
if it is DMK VS ADMK in the constituency, i will vote for DMK.

if it is CONGRESS VS ADMK in the constituency, THEN i will cast 49 O OR VOTE OR BJP
Quote
 
 
+16 #66 Padman 2011-03-22 05:28
You are 100% wrong. He was with BJP and later DMK joined in that alliance. In that circumstance what you will do if you are a leader of a party. The fact is everybody tried to utilize him and through away just like plastic glass. MK tried all the possible ways to destroy MDMK and he succeed to some level through LG, Gingee, Nellai university VC, Radhakrishnan and many more. He wanted to protect the party and went with ADMK. Now JJ playing MK role. To be frank we are unlucky and didn't get a chance to enjoy his administration. Believe me... i know him very closely when i was in Delhi. If you ask JK CM Omar's father Abdullah or any communist leader...like Inderjit Gupta... they will tell you about Vaiko. if you want to say some thing bad about Vaiko... go ahead... But, please don't compare Vaiko with Ramadoss.




Quoting peter john:
வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறத ா??
"தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா". அப்போது வை கோ கலைஞரை பார்த்து அழ , கருணாநிதி அழ, நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.

வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??

என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.
Quote
 
 
-2 #65 kudimagan 2011-03-22 05:24
Savukku, y dont u get into politics and do something good. U have the good heart and courage.
Quote
 
 
+5 #64 Padman 2011-03-22 05:15
Dear Savukku,

Many AIADMK supports received money from DMK minister Velu @ Tiruvannamalai. He gave 3,500 worth Titan watch and cash for most of the AIADMK members. Velu's aim is destroy the opposition camp without deposit money. Same situation @ Villupuram.

I am sure, Jaya will settle @ Kodanad estate after the 2011 election. I don't know what lesson she learnt from past five years.

let's wait and see.
Quote
 
 
+14 #63 விகடகவி 2011-03-22 04:48
யாருப்பா அது, சவுக்கு அதிமுகவைப் பற்றி எதுவும் எழுத மாட்டிங்கிறாரு, கண்டிக்க மாட்டிங்கிறாருன ்னு புலம்பிகிட்டு இருந்தது. இதோ ஒரு கட்டுரை வந்துருச்சுல, வந்துருச்சுல! சந்தோஷம்மா?
Quote
 
 
-19 #62 peter john 2011-03-22 02:39
வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறத ா??
"தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா". அப்போது வை கோ கலைஞரை பார்த்து அழ , கருணாநிதி அழ, நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.

வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??

என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.
Quote
 
 
0 #61 K Raman 2011-03-22 01:54
கருணானிதி பற்றி தெஹல்காவில் மிக அருமையான கட்டுரை வந்து உள்ளது.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne260311Coverstory.asp
Quote
 
 
+21 #60 PrabaaDaasan 2011-03-22 01:44
வைகோவை நினைத்தால் என் நெஞ்சு வலிக்கிறது.
நல்லவனுக்கு வாழ்வு கிடையாதா என் தமிழினமே ?. விதியே ! விதியே ! என்ன செய்ய போய்கிறாய் என் தமிழினத்தை.
Quote
 
 
+22 #59 D.G.P.Shankar 2011-03-22 01:34
Quoting SelvanMani:
என் அரசியல் கனவு : இந்த தேர்தலில் கருணாநிதி கட்டாயம் தோற்க வேண்டும்.. ஜெயலலிதா ஜெயித்து வந்த சில மாதத்தில் அழகிரி மற்றும் கனிமொழியை தூக்கி நிரந்தர ஜெயிலில் போடவேண்டும் ... கீ வீரமணி , சுபவீரபாண்டியன் , ரமேஷ் பிரபா, ஜெகத் கஸ்பர் போன்றவர்கள் ஒரு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு தாங்களாகவே தன வீட்டுக்கு தீ வைத்துகொள்வார்க ள்.. மானங்கெட்டவர்கள ்.. பிறகு ஒரு வருடத்தில் .. உச்ச நீதிமன்றம் எதாவது ஒரு கேசில் ஜெயலலிதாவை முதல் அமைச்சர் என்றும் பாராமல் ஒரு பத்து வருடத்திற்கு வெளியே வராத படி ஜெயிலில் போட்டுவிடவேண்டு ம்.. விஜயகாந்த் போன்ற கூட்டணி தலைவர்கள் ஒன்று கூடி வைகோவை (வளர்ச்சி ஒப்பந்த அடிப்படையில்) இரண்டு வருடம் முதல் அமைச்சர் ஆகவேண்டும். பிடித்திருந்தால ் வைத்துக்கொள்ளலா ம்.. இல்லையென்றால் தமிழருவி மணியன் போன்றவர்கள் இருக்கிறார்கள்.. இந்த இரண்டு திராவிட கழகத்தையும் தொலைத்தால் நாடு உருப்படும்.. ஸ்டாலின் அழகிரி இருவரும் அடித்துக்கொண்டே காணாமல் போய்விடுவார்கள் ..



சரியாக சொன்னீர்கள் திரு. செல்வமணி அவர்களே.......... இது மட்டும் நடந்தால் சத்தியமாக தமிழ்நாடு உருப்பட்டு விடும்...... நானும் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் திரு. தமிழரு மணியன் அவர்களோடு சேர்ந்து......
Quote
 
 
+3 #58 சைதை அஜீஸ் 2011-03-22 01:27
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
இவர் தேர்த்தலில் ஜெயித்து அடுத்த ஐந்தாண்டு எப்படி இருப்பார் என்பது எதிர்க்காலம். அதை ஜோசியர் சொல்வார். கடந்த ஐந்தாண்டுகள் எப்படி கழித்தார்? எதிர்க்கட்சி தலைவியாக என்ன சாதித்தார்? மக்களுக்காக என்ன செய்தார்? சட்டசபைக்கு வந்து தன் கடமையை ஒழுங்காக செய்யாத இவரை எப்படி நம்புவது? இன்றுவரை இவர் புரியாத புதிராகவே உள்ளார். இவர் நினைத்திருந்தால ் புதிய சட்டசபையை துவக்காமலே இருந்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இவரிடமும் TV நிறுவனம் இருக்கிறது. தாத்தாவும் ஏகப்பட்ட ஊழல் செய்தார். இவரால் வெளிக்கொண்டுவர முடிந்ததா? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கும் போது,திருவல்லிக ்கேணி ரத்னா கேப், கோயம்புத்தூர் அன்னபூரணா அல்லது மதுரை முருகன் இட்லி கடைகளில் இரண்டு இட்லி என்ன விலைக்கு விற்கிறது? தவறு எங்கே நடக்கிறது? யார் கண்டுபிடிப்பது? யார் கேட்ப்பது? நாட்டை ஆள்பவர் தவறு செய்தால் ... உங்களிடம்தான் கடிவாளம் கொடுத்தோமே! ஏன் பயன்படுத்தி மக்களுக்கு புரியவைக்கவில்ல ை? மக்களை மாக்களாகவே இருக்க விட்டீர்கள்!
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது யாருக்கும் எண்ணமில்லை. நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நாமும் சுரண்டிக்கொள்ளல ாம் என்று நினைக்கின்றார்க ள். அன்று PH பாண்டியன் வானளாவிய அதிகாரம் என்றார். மத்திய அரசு பணிந்தது...TN சசேஷன் தன் அதிகாரத்தை சரியாக பயன்படுத்தினார் . இன்று வரை நாம் அதன் பயனை அனுபவிக்கிறோம். நம்மிடம் வாக்குச்சீட்டு இருக்கு ஆனால் சரியான வேட்பாளர் இல்லை.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...
சவுக்குக்கு வேலை இல்லை பின்னூட்டம் போட்டுவிட்டது. சைதை அஜீசுக்கு வேலை இல்லை. பின்னூட்டத்திற் கு பதில் எழுதியாகிவிட்டத ு.
அம்மாவுக்கு ஒரு வேண்டுகோள்
ஒரு பொது தொலைக்காட்சியில ்/மேடையில் தாத்தாவுடைய "கதாநாயகி"யை விவாதியுங்கள். இதை நிறைவேற்றினால் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு என்னவாகும் என்று மக்களுக்கு புரியவையுங்கள். அதை விட்டுவிட்டு அவர் கிரைண்டர் கொடுத்தார்...நான் FRIDGE கொடுப்பேன் என்று கதை விடாதீர்கள்.
உங்கள் வாக்குறுதிகளைக் கொண்டே அவருடைய கதாநாயகியை அவருக்கே வில்லி ஆக்குங்கள்
Quote
 
 
+7 #57 sriram sharma 2011-03-22 01:13
vaiko should come again..vaiko will come again...in different form
Quote
 
 
+6 #56 K Raman 2011-03-22 01:05
கருணானிதி, வைகோ தி மு க பக்கம் வர முரசொலியில் ஏற்கனவே அறிக்கை விட்டுள்ளார். இப்போது புரிகிறது எங்கிருந்து வருகிறது வீரமணியின் பைசா என்று!
Quote
 
 
+12 #55 sakthy 2011-03-22 00:43
சவுக்கு விசாரிக்குமா
தூத்துக்குடி,கர ்நாடக தொழில் அதிபர்கள் இருவரும்,ராஜபக் சேயும் ஜேஜே க்கு பண உதவி செய்ய முன் வந்ததாகவும் அதனால் வைகோ வெளியேற்றப்பட்ட ார், என்றும் தற்ஸ்தமிழில் செய்தி வந்தது பற்றி உண்மையை அறிய விரும்புகிறோம்
Quote
 
 
+8 #54 sakthy 2011-03-22 00:43
சாவுக்கு விசாரிக்குமா
தூத்துக்குடி,கர ்நாடக தொழில் அதிபர்கள் இருவரும்,ராஜபக் சேயும் ஜேஜே க்கு பண உதவி செய்ய முன் வந்ததாகவும் அதனால் வைகோ வெளியேற்றப்பட்ட ார், என்றும் தற்ஸ்தமிழில் செய்தி வந்தது பற்றி உண்மையை அறிய விரும்புகிறோம்
Quote
 
 
+17 #53 கலை 2011-03-22 00:16
இதுவரை வந்த கட்டுரைகளில் இதுதான் உருப்படியான கட்டுரை. கட்சியின் வேட்பாளர் பட்டியலையே காப்பாற்ற முடியாதவர் எப்படி ஐந்தாண்டு காலம் தமிழகத்தை காப்பாற்ற போகிறார்? புதிய பிசாசுக்கு பழசே தேவல என
மக்களை நினைக்க வைத்துவிட்டார் அம்மா..
Quote
 
 
-7 #52 manmadhan 2011-03-22 00:04
Savukku is changing the color. Soon it will start writing MK is the best.
Quote
 
 
+23 #51 சவுக்கு 2011-03-21 23:45
அன்பான உறவுகளே, வைகோவைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை வரும். தெரிந்தே தான் வைகோவைப் பற்றி இந்தக் கட்டுரையில் தொடவில்லை. பொருத்தருளுங்கள ்.
Quote
 
 
0 #50 baba 2011-03-21 23:32
Savukku,
Have a look at candidates list published in Vikatan website - under election special 2011,in Thiruvarur it says the dmk candidate name as "Thalaivar Kalaingar"- how can vikatan do this?I thought vikatan is a neutral magazine..may be some Gurumaraj in Vikatan would have done this.I have sent a mail to vikatan to correct this,lets see..
they should change the name to Mr.Karunaidhi-I cant take it him being called a thalaivar by a media...let these JALRAA names be within his party
Quote
 
 
+2 #49 raj2k11 2011-03-21 23:05
Dear Savvuku,

In the period 2001 -06
Cm ordered govt official to do their duty.
discipline is common for all not only to private employees. their may be internal problems in ADMK alliance but you know what mr MK recently breaks alliance with congress(after meet) next immediate day they joined again. do they think the peoples are idiot. no one knows the real assets of MK and co maybe he himself too Central govt recommend sixth pay apart from MK announces lot of offers only to the govt servants. hereafter the increment should be directly 0n the basis of performance. the pay commission recommend depend upon inflation. the central as well as state never ever think or work about controlling the inflation. Dear people i request all to think and vote for the right candidate.
Quote
 
 
+2 #48 Rathnam 2011-03-21 22:57
we(Tamil nadu people) need to see good film after may 15th. a smart solution for this issue is 'election boygot'. so please aware dear my sisters and brothers.

Rathnam.
Quote
 
 
0 #47 reverse 2011-03-21 22:50
பயப்பட வேண்டாம் ஜெயலலிதா ஆட்சிக்கு வரமாட்டார்
Quote
 
 
+12 #46 gjjjp 2011-03-21 22:31
You are 100 % true,She had not learnt the lessons from her past.
Quote
 
 
+2 #45 arivali 2011-03-21 22:28
All are same. All other parties shd have formed a new alliance except dmk/admk/congress.They all missed a great chance of winning this time.This type of chance will not come often...No one can save Tamilnadu...
Quote
 
 
-1 #44 ernill 2011-03-21 22:27
Savukku,

Regret to post irrelevant link here. But no other go.
Doctor Who Performed Batcha's Autopsy Resigns

http://news.outlookindia.com/item.aspx?715810

any update on this.
Quote
 
 
+21 #43 குமார.இரவிக்குமார் 2011-03-21 22:21
பயப்பட வேண்டாம். கருணாநிதி இடத்தில் ஜெயலலிதா இருப்பார். மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. ஒருகால் அமைச்சர் குஞ்சுகளின் அட்டகாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உறுதியாக நல்லாட்சியாக இருக்காது. சில காலத்திற்கு பிறகு சவுக்கு மீண்டும் எண்ணிக்கை குறைப்பை துவங்க வேண்டியது தான். ஆனால் இப்போது நமக்கு வேறு வழி ஏதும் தென்படவில்லை. பேயை விரட்ட பிசாசை ஆதரித்த கதை தான்.
Quote
 
 
+12 #42 ramadass 2011-03-21 22:07
சரியா சொன்னிங்க சவுக்கு . இது வரை அ தி மு க க்கு ஓட்டு போடலாம் என்று நினைத்திருந்தேன ் .அனால் இந்த ஹிட்லரை நினைத்து பயமாக தான் இருக்கு . என் ஓட்டு அம்மாவுக்கு இல்லை .
Quote
 
 
-2 #41 Simbu 2011-03-21 21:51
Don't Worry Savukku.This is a political game played by JJ. JJ will come to Power at the end of may 2013.

JJ will seek help from Congress afetr election result, if needed. Vaiko could have been dropped from alliance for this reason. But i would say, 12 seats are more for the party like MDMK. at the same time, DMDK should have been given less than 30. Tamilnadu People will teach a lesson to MK, Vijayakanth . JJ is keeping Vijayakanth aside becuase he holds the key for splitting votes in most of constituiencies . ADMK is contesting 160 seats this election. They will surely win in this election by huge margin.
Quote
 
 
+15 #40 vetri 2011-03-21 21:48
உண்மை முற்றிலும் உண்மை சவுக்கு அவர்களே. அதிமுக அனுதாபி இல்லை என்றாலும் இந்த முறை திமுக வரகூடாது என்று நினைக்கும் என்னை போன்றவர்களின் பயமும் அதுவே. உங்களை போன்ற உண்மையான பதிரிகையாளர்களி னால் இவர்கள் போன்றவர்கள் ஆட்சிக்கு வருவதும் பின்பு இவர்களை போன்றவர்களை மாற்ற முயல்வதும் சகிக்கமுடியவில் லை.
Quote
 
 
-6 #39 Simbu 2011-03-21 21:44
JJ is far better than MK in all kind of characters
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 140 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7899
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week64801
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month267533
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12789652