முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
எள் எண்ணைக்காக காய்கிறது.... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 8
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 24 மார்ச் 2011 10:03

தினமணி தலையங்கம்.

 

தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 

இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக- தமிழக அரசிடம்கூட கேட்காமல்- இவர்களை மாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வருத்தம்.

 

தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் கூட, தேர்தல் முடியும்வரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது எதற்காக அதிகாரிகள் மாற்றத்துக்காக முதல்வர் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?

 

தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாகவும், பாரபட்சமின்றியும், ஆளும்கட்சியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நடவடிக்கையை முடுக்கியிருப்பது பொதுமக்களிடம் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கி வருகிறது.

 

வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறியதால் இந்த நடவடிக்கை என்று முதல்வர் கூறினாலும், தேர்தல் ஆணையம் மிக எச்சரிக்கையாகவும், இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதில் சொல்லக்கூடிய ஆதாரங்களுடனும்தான் செயல்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலாக, அரசு இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் டி.வி. கிடைக்கப்பெறாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி. கொடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையுத்தரவுக்குப் பிறகும் இத்தகைய நடவடிக்கை ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்றால் அது அந்த மாவட்ட வருவாய்த்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இணக்கம் இல்லாமல் இயலாது.

 

இத்தகைய ஆட்சியாளர்கள் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு எத்தகைய ஒத்துழைப்புத் தர முடியும்? ஆகவே தேர்தல் முடியும் வரை அவர்களை வேறு பணிக்கு மாற்றுவதில் என்ன தவறு?

 

இத்தகைய புகார்களை எதிர்க்கட்சிகள் கூறியதால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தும், விசாரித்தும், விடியோ பதிவுகள் மூலம் "ஷேடோ ரிஜிஸ்டர்' எனப்படும் நிழல்பதிவு மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கிடைக்கும் செய்திகளையும் வைத்துத்தான் இந்த இடமாறுதல்களைச் செய்துள்ளனர்.

 

நியாயமாகப் பார்த்தால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் துறைவாரி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யாமல் வெறுமனே இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது என்பதை முதல்வர் ஏன் ஏற்க மறுக்கிறார் என்று தெரியவில்லை.

 

கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.17 கோடி வரை, கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இதுபற்றிப் பேசாத முதல்வர், இப்போது சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது குரல் கொடுக்கிறார்.

 

தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தகைய வாகனச் சோதனைகள் சாதாரணப் பயணிகளுக்கும்கூட சில நேரங்களில் இடையூறாகவும் காலதாமதப்படுத்துவதாகவும் அமைகிறது என்பது உண்மையே. ஆனால் இந்த நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைக் கொண்டு செல்வோருக்கு மட்டுமே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கணக்கு உள்ள பணத்தைக் கொண்டு செல்வோர் தினமும் வங்கிகளுக்குக் கொண்டு செல்லவும் பணம் செலுத்தவும் தடை எதுவும் இல்லை.

 

அரசுக்குத் தெரியாமல், வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வியாபாரம் செய்வோர் மட்டுமே, காசோலைகளை, வரைவோலைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாக எடுத்துச் செல்கின்றனர் என்பதுதான் பல சோதனைகள், பணப்பறிமுதல்கள் மூலம் தெரியவந்துள்ள உண்மை. எதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குச் சரியான காரணமும் விளக்கமும் அளித்தவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்பட்ட செய்திகளும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.

 

தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால் கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.

 

தேர்தல் ஆணையம் இப்போது மிகத்தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. வாக்குப் பெறுவதற்காகப் பணம், பொருள் கொடுக்கும் அரசியல் கட்சி மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அதை வாங்கிக்கொள்ளும் வாக்காளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் பெறுவதும் குற்றம்.

 

இந்தக் குற்றத்தை நிரூபிக்க கைப்பேசியில் பதிவு செய்த புகைப்படங்கள்கூடப் போதுமானது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் கெடுபிடிகள் என்றே வைத்துக்கொண்டாலும் இது அடுத்துவரும் ஐந்தாண்டு கால ஆட்சிக்கானது என்பதைக் கருதினால் இந்த இரு வார கெடுபிடிகள் பெரிய விஷயமல்ல. சோதனையிடும்போது நேர்மையாளர்கள் சில சிரமங்களை அனுபவிக்கக்கூடும்தான். மக்களாட்சி முறையாக நடைபெறுவதற்காக கொஞ்சம் சிரமம் அனுபவித்தால்தான் என்ன?

 

வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள்தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கும், கண்டிக்கும், கூக்குரலிடும். எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல் அல்லவா கேட்கிறது, ஏன்?

 

நன்றி தினமணி

 

Comments  

 
+2 #12 NANBENDA 2011-03-24 19:52
தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால் கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.
Quote
 
 
-15 #11 Puthiyavan Raj 2011-03-24 19:14
கலைஞா கேட்பது சரியான கேள்விதான். தேர்தல் ஆணையம் தன்னை சர்வாதிகாரியாக நினைத்து செயல்படுகிறதா? என்று நீதிபதிகளே சவுக்கால் அடிப்பது போல கேட்டு இருக்கிறார்கள். பூனைக்கு மணி கட்டிய கலைஞரின் துணிவு பாராட்டத்தக்கது .
Quote
 
 
0 #10 manithan 2011-03-24 16:51
எலிபி தர்மாராவ் போன்ற ஊழல் நீதிபதிகளை சவுக்கு வானளாவ புகழ்ந்து தள்ளியது இப்போது சாதாரண குடிமகன் கூட ஏன் கருணாநிதிக்கு ஆதரவாக இப்படி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு தருகிறார் என்று கேட்கின்றனர். அப்பட்டமாக கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றே இப்படி ஒரு உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளா ர் என்பது வெட்கக் கேடானது பல வழக்குகளில் அந்த நீதிபதி லஞ்சம் வாங்கியது பல வழக்கறி ஞகர்களுக்கு தெரியும் சவுக்கு தனது வாசகர்களுக்கு தவறான தகவலை தந்திருக்கிறது ஊரில் தவறு செய்யும் பலரையும் சுட்டி காட்டும் நீங்கள் உங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் எலிபி ஒரு ஊழல் நீதிபதி தனபால் , தினகரன் , பால கிரிஷ்ணனை போல.உங்களுக்கு மக்கள் ஆதரவு தருவது என்பது நீங்கள் பல உண்மைகளை மக்கள் மன்றத்தில் வைப்பதன் மூலம் இந்த சமுகத்தின் அவலங்களை வெளிகொண்டுவருகி ன்றீர்கள், நீங்கள் உண்மையான போராளி என்பதால் தான்.அதை இழந்துவிட்டால் கஷ்டம் சவுக்கு
Quote
 
 
+4 #9 Kaliraj 2011-03-24 14:20
என்னன்னதான் இலவசமா கொடுக்கிறதுன்னு வெவெஸ்தையே இல்லையா?ஏற்க்கனவே இப்பவே கூலி வேலைக்கு ஆள் கிடைக்காமல் மொத்தம் பீஹாரில் இருந்தும், ஜார்க்கண்டில் இருந்தும் சென்னைக்கு ஆள் வரத்தொடங்கியாச் சு.100 நாள் வேலைத்திட்டம் வந்த காரணத்தால் விவசாய அடிப்படை பணிகளுக்கு ஆள் இல்லை. வருஷத்துக்கு 100- நிமிடம் கூட அங்கு வேலை இல்லை. 10 ஏக்கரில் விவசாயம் செய்த முதலாளி, இப்ப ஒரு ஏக்கரில் தன் வீட்டு உறுப்பினர்களைக் கொண்டு வேலைசெய்ய வேண்டியதாய் இருக்கிறது. தேர்தல் அறிக்கயில் ஒரு தொலைநோக்கு திட்டம் உண்டா??????????ஏதேனும் வேலை வாய்ப்பை அளிக்கும் திட்டம் உண்டா?????மின்சாரத்தடையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை உண்டா????
அரசு அலுவலகங்களில் மக்களை மற்றும் வேலையை அலட்சியப்படுத்த ும் ஊழியர்கள் மீது நடவடிக்கை உண்டா????தரமான கிராமப்புற சாலைகள் மற்றும் மூடிய சாக்கடை திட்டத்திற்க்கு வழி உண்டா??தமிழகத்தின் நீர் வள ஆதாரங்களை அதிகரிக்கவும், காடுகளை பெருக்கவும் வழி உண்டா????உணவு உற்ப்பத்தியை பெருக்கவும், தரிசு நிலங்களை விளைநிலம் ஆக்க வழியுண்டா???? ( இருக்குற விளைநிலத்தை ஃபிளாட் போட்டு வீடு கட்ட அல்லவா அரசு முயல்கிறது )

மீனைக்கொடுப்பதற ்க்கு பதில் ஒருவனுக்கு மீன் கொடுக்க கற்றுத்தருவதே சிறந்தது அல்லவா?இந்த மஞ்சத்துண்டுதான ் இலவசத்தால் மக்களை சீரழித்தார் என்றால், எதிரணியில் மற்றவர்களும் இன்னும் நிலைமையை மோசமாக்குகிறார் கள்.அரிசி, ஆடு,மாடு, மிக்ஸி, கிரைண்டர்,ஃபேன் இலவசம் என்கிறார்கள்.இதெல்லாம் தனித்தனியா கொடுக்கிறதுக்கு பேசாம மூணு வேலை சோறு அரசே போடலாம். இருக்குற 1-லட்சம் கோடி கடனை அடைப்பது யார்?
செல்வத்தில் திளைக்கும் நாடு கூட நாட்டின் அடிப்படைக்கட்டம ைப்பை சீர்படுத்துமே தவிர, இப்படி இலவசங்களைக்கொடு த்து சீரழிப்பதில்லை.இந்த திட்டங்களுக்கு பணம் கொடுக்கப்போவது யார்? கதை எழுதும் கருணாநிதியா? நடிகை ஜெயலலிதாவா? முழுக்க முழுக்க உண்மையாய் உழைக்கும் வர்க்கமும், சிறு தொழில் செய்வோரும்தான்.

இவர்கள் ஆட்சிக்கு வந்ததும், இந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதை காப்பற்றினால், நம்ம தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது
மக்கும் குப்பை கூட மண்ணுக்கு உரமாகும். இந்த கழகங்கள் இரண்டும் பல மக்களை சீரழிக்கும் மக்காத குப்பை....
Quote
 
 
+1 #8 KK 2011-03-24 13:44
Read the full manifesto. it is just not freebies.Lot of schemes and also for all sections of society irrespective of caste creed or religion
Link


http://www.dinamani.com/edition/Electionstory.aspx?SectionName=Statements&artid=395192&SectionID=240&Title=2011-%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20-%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Quote
 
 
+4 #7 பச்சைமாலு. 2011-03-24 13:39
//எதிர்க்கட்சிகளி ன் குரல் கேட்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல் அல்லவா கேட்கிறது, ஏன்?//

யாருக்கு உக்காரும் இடத்தில் நோவும் கட்டியும் இருக்கிறதோ அவர் மட்டும்தானே துள்ளிக்குதித்த ு கூச்சல் போடக்கூடியவர். மறைவு ஸ்தானத்திலுள்ள கட்டியை கண்டுபிடிக்க தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கும் சிகிச்சை சூப்பர். தொடரட்டும் !
Quote
 
 
+3 #6 sakthy 2011-03-24 13:26
கருணாநிதியின் இந்த கூக்குரல் அவ்ர் குடும்பம் தான் தேர்தல் ஊழல்களை கச்சிதமாக செய்கிறது என்பதை தெரியப்படுத்துக ிறது. விக்கிலீக்ஸ் கூட சாட்சி கூறியது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
Quote
 
 
+3 #5 KK 2011-03-24 13:23
AIADMK Manifesto beats DMK on freebies
In Savukku the idea of Mixie plus Grinder was floated and they have taken it up.
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்க ு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட ும்.

* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.

* மாணவர்கள் இடை நிறுத்தம் குறைப்பதற்காக நடவடிக்கை.

* 10-12ஆம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.
இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும்.


* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கா ன உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.


* பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்க ு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.


* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.


* தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.


* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.


* முதியோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக் கு சிறப்புத் திட்டம்:


* 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
Quote
 
 
+5 #4 சைதை அஜீஸ் 2011-03-24 13:00
முக்கிய சாலைச் சந்திப்புகளில் சிக்னல் விளக்கு வைத்து போக்குவரத்து சீர் செய்கிரார்கள். எனக்கு சிவப்பு விளக்கில் நின்றால் 2 நிமிடங்கள் தாமதம் ஆகும் என்பதால் அது எனக்கு பிடிக்கவில்லை. என்னிடம் அதிகாரம் உள்ளதால், அந்த சிக்னல் விளக்கையே எடுத்திட நினைக்கிறேன். அது எனக்கும் ஆபத்து, மட்றவர்க்கும் பெரிய ஆபத்தை ஏர்படுத்தும்.
மிகச்சிறந்த நிர்வாகம் செய்கிறது தேர்தல் ஆணையம். பாராட்டுக்கள்!! தலைப்பை மாத்துங்க சவுக்கு...சோளியன் குடுமி சும்மா ஆடுமா?...என்று.
Quote
 
 
+3 #3 Force 2011-03-24 12:11
என்ன‌ கேள்வி இது? யாருக்கு வ‌லிக்கிற‌தோ அவர்க‌ள்தான் துடிப்பார்க‌ள், க‌த்துவார்க‌ள்.
சிலர் ச‌மய‌ங்க‌ளில், திருட‌னுக்குத் தேள் கொட்டிய‌து போல் ப‌ல்லைக் கடித்துக் கொண்டும்,
பொறுமிக் கொண்டும் இருக்க‌லாம்.
Quote
 
 
+1 #2 சுமன் 2011-03-24 11:11
சீமான் தேர்தலில் நிற்கிறார் போல தெரிகிறதே! உண்மையா?
http://thatstamil.oneindia.in/news/2011/03/24/seeman-party-contest-assembly-elections-aid0091.html
Quote
 
 
+1 #1 ஒசை 2011-03-24 10:38
இது பற்றிய ஒரு பதிவு இங்கே.
http://oosssai.blogspot.com/2011/03/blog-post_24.html
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 168 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7665
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week65242
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month287502
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13203869