|
கருணாநிதி….. இந்தக் கருணாநிதி எப்படியெல்லாம் ஊழல் செய்தார் என்பதை, திமுக ஆட்சியைப் பற்றி விரிவாக விவாதித்து விசாரணை நடத்திய நீதிபதி சர்க்காரியா தெளிவாக சொல்லியிருக்கிறார்.
இன்று கருணாநிதி தேர்தல் அதிகாரி முன்பு தாக்கல் செய்துள்ள, ஆவணங்களின் படி அவர் மனைவியின் சொத்துக்களோடு சேர்த்து, மொத்த மதிப்பு 41 கோடி. இந்தச் சொத்துக்களில், இவரின், மொரீஷியஸ் தீவின் மொத்த ஜனத்தொகை அளவு உள்ள, இவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து சேராது. இவர், மனைவி தயாளு, துணைவி ராசாத்தியின் சொத்துக்கள் மட்டும் 41 கோடி…. இந்த 41 கோடியும் எப்படி வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதி, மேடை மேடையாகப் பேசி, தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கியதைத் தவிர வேறு எந்த தொழிலும், வேலையும் செய்யவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்று 41 கோடிக்கு அதிபதியாக இருக்கும் கருணாநிதி தன் வாழ்வை எப்படித் தொடங்கினார் தெரியுமா ? அவர் நெஞ்சுக்கு நீதியில் எழுதியதை பார்ப்போம்.
“குடியரசு துணை ஆசிரியனாக இரு என்று பெரியார் பணித்ததோடு மட்டுமல்லாமல், அந்த இதழில் என்னைக் கட்டுரைகள் எழுத அனுமதித்து அதைப் படித்து மகிழ்ந்தார். எனக்கு மாதம் நாற்பது ரூபாய் சம்பளம், அதில் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலைச் சிற்றுண்டி, மாலைச் சிற்றுண்டிக்கு மாதம் பத்து ரூபாய் ஆகி விடும். இதரச் செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் ஐந்து ரூபாயை என்னை அண்டி வந்த அருமை மனைவுக்கு பத்மாவிற்கு மாதந்தோறும் திருவாரூருக்கு மணியார்டர் செய்து வந்தேன்.”
“என் திருமணச் செலவுக்காக நான் எழுதிய தூக்கு மேடை நாடகத்தை அண்ண அவர்கள் தலைமையில் திருச்சியில் நடத்தினேன். நானே நடத்தேன். யாரிடமும் நாடகத்திற்காக நன்கொடை வசூலிக்கவில்லை. நாடகத்தில் மிச்சப் பட்ட தொகை எண்ணூறு ரூபாய்.”
“என்னிடமிருந்த மணிப்பர்ஸை கண்ணதாசனிடம் கொடுத்து சேலத்திற்கு இரண்டு டிக்கட் வாங்கக் சொன்னேற். டிக்கட் வாங்கிக் கொண்டு, கண்ணதாசன் மணிப்பர்சை என்னிடம் கொடுத்தார். என்னய்யா பர்ஸ் காலியாக இருக்கிறதே என்று கேட்டேன். இரண்டாம் வகுப்பு டிக்கட்டுக்கு உமது பணம் சரியாக இருந்தது என்று கூறினார். ஐயையோ உம்மை யார் இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்கச் சொன்னது… மூன்றாம் வகுப்பு போதாதா என்று நான் சலித்துக் கொண்டேன்.”

கண்ணதாசன் இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்கியதால், மதிய உணவுக்கு காசில்லாமல், பட்டினியாகவோ இருவரும் ஊர் போய் சேர்ந்திருக்கிறார்கள்.
இப்படித்தான் தொடங்கியது கருணாநிதியின் பொது வாழ்வு. இப்போது கருணாநிதி தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தின் படி, அவருக்கு இருக்கும் சொத்துக்களைப் பார்ப்போமா ?
கருணாநிதி கையில் உள்ள ரொக்கம் 15,000
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளையில் நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) 3 கோடி, 1 கோடி, 33,920 ரூபாய், 13,15,232 ரூபாய்.
அடையாறு கரூர் வைஸ்யா வங்கி 13,74,664 ரூபாய்.
கர்நாடகா வங்கி வைப்பு நிதி 39,62,995 ரூபாய்.
இந்தியன் வங்கி ராயப்பேட்டை கையிருப்பு ரூபாய் 10,956
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மஹாலிங்கபுரம் ரூபாய். 11,135
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் ரூபாய் 11,39,441
ராசாத்தி அம்மாளுடன் ஜாயின்ட் அக்கவுன்ட்.
இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலை ரூபாய் புரம் ரூபாய். 13,15,180

முதலில் மனைவி தயாளு அம்மாள்.
ரொக்க கையிருப்பு ரூபாய் 30,000
நிரந்தர வைப்பு நிதி இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளை
1 கோடியே 20 லட்சம்.
3 கோடியே 50 லட்சம்
ரூபாய் 3,90,373
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,98,247
ரூபாய் 32,50,255
இந்தியன் வங்கி கொத்தவால் பாசார்
ரூபாய் 6,98,250
ரூபாய் 6,93,579
ரூபாய் 13,92,503
ரூபாய் 1,40,723

கர்நாடகா வங்கி. கோடம்பாக்கம்
ரூபாய் 13,74,664
கரூர் வைஸ்யா வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய் 30 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.2,66,226
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.1,65,380

அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள்.
இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலை புரம்
நிரந்தர வைப்பு நிதி.
ரூபாய் 15,00,000
ரூபாய் 33,04,087
ரூபாய் 1,14,93,325
ரூபாய் 10,55,641
ரூபாய் 6 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 14
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய் 6 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 753
ரூபாய் 46,78,221
சேமிப்புக் கணக்கு, இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலைபுரம்.
கையிருப்பு ரூ.11,378
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய்.4,84,027
தயாளு அம்மாள் வணிக முதலீடுகள்.
கலைஞர் டிவி பங்குகள் ரூபாய் 6 கோடியே 60 லட்சம்
ராசாத்தி அம்மாள் வணிக முதலீடுகள்
வெஸ்ட்கேட் லாஜிஸ்ட்டிக்ஸ் பங்கு 2 கோடியே 50 லட்சம்
சொந்தத் தொழில் முதலீடு
ரூபாய் 2 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 878
வாகனங்கள்.
தயாளு அம்மாள்.
ஹோண்டா அக்கார்டு கார்
ரூபாய்.16,02,321
இது வரை சொன்ன படி, கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு
ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 855
மனைவி மற்றும் துணைவிகளின் சொத்து மதிப்பு
ரூபாய் 36 கோடியே, 2 லட்சத்து 47 ஆயிரத்து 287
இது போக தயாளு மற்றும் ராசாத்தியின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு
தயாளு ரூ.5,51,1000
ராசாத்தி ரூபாய் 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628
கருணாநிதி, மனைவி, துணைவி ஆகியோரின் பெயரில் இருக்கும், சொத்துக்களின் மதிப்பு மட்டும் 44 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 770.
தன் பெயரில் மட்டும் பல கோடி சொத்துக்களை வைத்திருக்கும், ராசாத்தி அம்மாளின் நிதி நிலைமை என்ன என்பது குறித்து சர்க்காரியா விசாரணை அறிக்கையில் கூறியிருப்பது.
பட்டயக் கணக்கர் திரு.ஜெகதீசன் மூலமாக வருமானவரி அதிகாரிக்கு அனுப்பி 1973ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாளிட்ட தனது கடிதத்தில் திருமதி தர்மா இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் கபாலியிடமிருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், எஞ்சியுள்ள 23 ஆயிரத்தை தனது சொந்த சேமிப்பிலிருந்து கட்டியதாகவும் கூறினார். ரூ.40 ஆயிரம் கொடுத்ததற்கு சான்றாக பதிவு பெறாத 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாளிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. இது கபாலியின் பெயருக்கு அவர் எழுதிக் கொடுத்ததாகும். அதில் மேற்படி தொகை ரூ. 15 ஆயிரம் என்று மூன்று ஆறுமாதத் தவணைகளில் திருப்பிக் கொடுக்கப் படும் என்றம், அப்படிக் கொடுக்கத் தவறினால் மேற்படி சொத்தை கபாலிக்கு விற்று விடுவதாகவும் அதில் நிபந்தனை குறிப்பிடப்டிருந்தது. மேற்சொன்ன கடனைத் தவணைகளில் செலுத்த வேண்டும். இதற்குச் சான்றாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மாவால் எழுதிக் கொடுக்கப் பட்டது.”
எழுபதுகளில், ராசாத்தி அம்மாளிடம் 40 ஆயிரம் இல்லாமல், கடன் வாங்கியிருப்பதை கவனியுங்கள்.
ஏழைகள் வயிற்றில் அடித்து, பணத்தை கொள்ளையடிப்பது குறித்து, கருணாநிதி எழுதிய கவிதையை இந்த நேரத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் ! பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை ! பிணம் தின்னும் கழுகு போல நீவிர்; பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை ! இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி! வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ; வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!! மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்? வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன் முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்? என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக் குன்றமெனச் செல்வன் குவிக்கின்ற மனிதரிடம்; மன்றமேறி அறிஞ்ர் அண்ணா கேட்டார் - அதனை மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் ! உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும் உண்மைதனை உணர்ந்த பின்னும், வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப் பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ? உலகில் பிறந்தார் அனைவருக்கும்; உடல், உள்ளத் தேவையெல்லாம் ஒன்றாக இருக்கும் போது - இதனை நன்றாகச் சிந்திக்காமல் வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்? பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்? தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத் தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்...! - கலைஞர் கருணாநிதி எழுதிய "சங்கத் தமிழ்" புத்தகத்திலிருந்து (பக்கம் 288) |
Comments
சில ஆண்டுகள் முன்னால் சென்று பாருங்க - அம்மா 50 கோடி ஊழல் செய்ததை சன் TV தினம் தினம் போட்டு காட்டி தானே ஆட்சியை பிடித்தார் கலைஞர்? இப்போது அவர் எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார ்? ஒரு லட்சத்தி எழுபத்தைந்தாயிர ம் கோடி சார் - தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பதிருக்கு ம் ஒரு கோடி ருபாய் கொடுக்கலாம் இந்த பணத்தை வைத்து.. நாம் இருவரும் கோடீஸ்வரர்கள் ஆகி இருக்கலாம் அனால் உண்மை அதில்லையே. நீங்களும் சரி நானும் சரி தினமும் வேலைக்கு சென்றால் தானே நம் குடும்பத்திற்கு சோறு கிடைக்கும்?
கலைஞர் 5 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார் என்றால் எனக்கும் அதில் சந்தோஷம் தான். என்னுடைய பதிவில் நான் அவர் எந்த நல்லதுமே செய்யவில்லை என்று சொல்லவில்லையே? அவர் நாட்டுக்கு ஒரு நல்லது செய்தால் அவர் குடும்பத்திற்கு பத்து நல்லது செய்துகொள்கிறார ் அவ்வளவு தான்.
உங்கள் கேள்விக்கு பதில்:
எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்த்தல் தீ மூ கா ஆட்சி தான் சிறப்பாக இருக்குமா? ஆமாம் - கலைஞர் குடும்பத்திருக் கு சிறப்பாக தன இருக்கும். மக்களுக்கு இலவச TV கொடுத்து அதில் அவர்கள் கேபிள் TV பார்க்க வேண்டுமென்றால் அதற்க்கு அவர் குடும்ப நிறுவனத்திருக்க ு தான் பணம் தர வேண்டும்.
2 - யாரை ஜெயலலிதா வேலையிலிருந்து நீக்கினார்? வருடா வருடம் - X மற்றும் XII பரீட்சை பேப்பர் திருத்த வேண்டிய நேரத்தில் அரசு ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் சம்பள உயர்வு கேட்டு. வருடா வருடம் தீபாவளி நேரம் பார்த்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் பண்டிகை காலத்தில் மக்கள் அவரவர் ஊருக்கு செல்ல கஷ்ட படுவார்கள் என்று நேரம் பார்த்து தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமென்று போர்க்கொடி தூக்குவார்கள். இது செரியா? இவர்களை தானே அம்மா தண்டித்தார்கள்? உங்களுக்கு எப்படியோ தெரியாது. வருட வருடம் என் குடும்பத்தை தீபாவளி அன்று சந்திக்க பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்.
நான் அம்மா கட்சி தொண்டன் அல்ல. ஆனால் கலைஞர் ஆட்சியில் அவர் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை பார்த்து - இதே புத்தியை நாட்டை மேம்படுத்த அவர் உபயோகித்திருந்த ால் நம் தமிழ் நாடு சுபிட்சம் அடைந்திருக்கும் .. அந்த ஆதங்கம் தான்.
அம்மா நல்லவர் என்று நான் சொல்லவே இல்லை. அவரிடமும் பல குறைகள் உள்ளன அனால் இவரைவிட கம்மியாக தான் ஊழல் செய்வார் என்று ஒரு நம்பிக்கை.
8. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாசாரம், பண்பாடு. ஒரு மனைவி, ஒரு துணைவி வேயத்துக்கொண்டு உன் தலைவர் தமிழ் நாகரீகத்தை பற்றி விமர்சிக்கிறார் .. அப்படியென்றால் அனைவரும் ஒரு மனைவி ஒரு துணைவி வேயத்துக்கொள்ளல ாம் என்று பொருளா?
9. 5 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார் என்று சொல்கிறீர்கள்.. அவர்களுக்கு அவருடைய சொந்த வங்கி கணக்கிலிருந்த சம்பளம் கொடுக்கிறார் உங்கள் தலைவர்? நாம் கட்டும் வரிப்பணம் தானே? என்னிடம் பணம் வாங்கி, எனக்கே அதை பரிசாக கொடுப்பதற்கு உனக்கு ஏனப்பா நான் பாராட்டுகள் தர வேண்டும்?
10. 63 தொகுதிகள் கேட்டதால் கூட்டணி முறிகிறது என்று சொல்லி ராஜினாமா கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு கும்பல் தில்லி சென்றது. சென்று சோனியா அம்மையாரை சந்தித்து அதே 63 தொகுதிகளை தந்துவிட்டு - மாபெரும் வெற்றி கூட்டணிக்கு என்று சொல்லிக்கொண்டு திரும்பினார்கள் . கேவலமாக இல்லை? 63 தந்து தான் ஆகவேண்டும் என்று தெரியும். அப்படி இருந்தும் எதற்கு இந்த நாடகம், எதற்கு இந்த மானம்கெட்ட பொழப்பு?
இதுவே போதும் என்று நினைக்கிறேன் ராஜ் அவர்களே. வேண்டுமென்றால் சொல்லுங்கள் இன்னமும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.
4. ஒருவரிடம் கடன் பெட்ட்ரார்கலம் அதை ஒரு வருடம் கழித்து திருப்பு கொடுத்து விட்டார்களாம். இதனால் இவர்களுக்கு ஊழலில் எந்த சம்பந்தமும் இல்லையம்? ஏன் தம்பி ராசா திருட்டு பணம் உன் கையில் இருக்குது என்று செய்து வந்த பிறகு அதை நீ வாங்கியவனிடம் வட்டியுடன் திருப்பி கொடுத்தால் அது நேர்மையின் வடிவமா? அந்த பணத்தை ஏன் திடீர் என்று CBI விசாரணை தொடங்கியதும் திருப்பி தரனும்? முன்னமே கொடுத்திருக்கலா மே? ஏன் கொடுக்கலை?
5. நம் மீனவர்கள் தினம் தினம் சின்கல ராணுவத்தினரால் தாக்க படுகின்றனர். அதை பற்றி உன் தலைவர் என்றாவது கவலை பட்டாரா? பிரதமருக்கு காதல் கடிதம் எழுதுவதை தவிர இந்த விஷயத்தில் உன் தலைவர் என்ன செய்திருக்கிறார ்? தேர்தல் வரப்போகிற நேரத்தில் ஒரு நாடக போராட்டம், கைது அவ்வளவு தான். நம் மீனவர்கள் உயிர் அவ்வளவு தான் மதிப்பா?
6. என் மனைவியும் மகளும் ஒரு நிறுவனத்தின் 80௦% பங்குதாரர்களாம் ஆனால் எனக்கும் அந்த நிறுவனத்திற்கும ் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று நான் சொன்னால் நீர் நம்புவீரா ராஜ்? அவர்கள் எடுக்கும் எந்தவித முடிவும் எனக்கு தெரியாது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ராஜ்? நம்பினால் உங்களை விட பெரிய முட்டாளை நாம் பார்த்ததில்லை என்று சொல்லலாம்...
7. சினிமா, அரசியல், தொலைகாட்சி, ரேடியோ எல்லா துறையிலும் உங்கள் தலைவரின் ஏதாவதொரு குடும்ப மக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்க ள். கிட்டத்தட்ட கட்ட பஞ்சாயத்து போல் அவர்கள் சொல்வது தன் சட்டம். சன் TV ஒரு படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் அந்த படம் ஓடும் இல்லையேன் அது ஓடாது என்ற ஒரு மமதை. எல்லா படமும் சன் Pictures தான் வெளியிடுகிறது. அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
8. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாசாரம், பண்பாடு. ஒரு மனைவி, ஒரு துணைவி வேயத்துக்கொண்டு உன் தலைவர் தமிழ் நாகரீகத்தை பற்றி விமர்சிக்கிறார் .. அப்படியென்றால் அனைவரும் ஒரு மனைவி ஒரு துணைவி வேயத்துக்கொள்ளல ாம் என்று பொருளா?
1. ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய் என்ற திட்டத்தின் மூலம் எத்துனை ஏழை எளிய மக்கள் பயன் பெற்றார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள். இந்த திட்டத்தால் எத்துனை தீ மூ கா மந்திரிகள் அந்த அரிசியை கடத்தி லாபம் சம்பாதித்தனர்? அதில் எவ்வளவு லாபம் உங்கள் தலைவருக்கு கிடைத்தது?
2. எல்லோருக்கும் இலவச TV என்று சொன்னார்கள். அந்த டிவி எத்தனை பேரை சென்றடைந்தது? எனக்கு வேண்டாமையா. நான் சொந்தமாக உழைத்து சம்பாதித்து TV வாங்கிக்கொள்கிற ேன். அனால் என் வீட்டில் வீட்டு வேலை செய்யும் அந்த ஏழை பெண்மணிக்கோ அல்லது என் தெருவின் முனையில் நின்று எல்லோரின் துணிகளையும் இஸ்திரி போடும் தொழிலாளிக்கோ அது கிடைக்கவில்லையே ? நானும் ஏன் பா உனக்கு இந்த TV கிடைக்கவில்லையா என்று கேட்டேன்? அதற்கு அவன் - சார் அந்த TV வேணும்னா முதல்ல நான் தீ மூ கா தொண்டனா நு கேக்குறாங்க. அதுக்கு மேல ருபாய் 1000 கொடுத்தா தராங்கலாம். அவ்ளோ பணத்துக்கு நா எங்க போவேன் சார் நு அவன் கேட்டான். காகிதத்தில் தங்களது தலைவரின் திட்டம் நன்றாக தன இருந்தது. அது அடித்தட்டு மக்கள் எத்தனை பேரை சென்று அடைந்தது?
3. காலம் காலமாக காவிரி நதி நமக்கும் கர்நாடகத்துக்கு ம் பிரச்சனையாக இருந்து வருகிறது. உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தும் நமக்கு வந்து சேர வேண்டிய தண்ணீர் நமக்கு வரவில்லையே? அது ஏன்? அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியோ அல்லது நம் மாநிலத்தை ஆளும் தீ மூ கா வோ அல்லது அவர்களின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் ஒ அதை பற்றி ஏன் பேச மறுக்கின்றனர்? தீ மூ கா மத்திய அரசில் ஒரு பங்கு தானே? அவர்களை தன் பேரனுக்கு மந்திரி பதவி கேட்கவோ அல்லது மகளின் மேல் CBI விசாரணை நடத்தாமல் இருக்கவோ நெருக்கடி செய்ய முடிகிறது அல்லவே? நம் தமிழ் மக்களின் நலம் கருதி காவிரி பிரச்னையில் ஏன் நெருக்கடி கொடுக்கவில்லை? மக்களின் நலத்தை விட குடும்ப நலம் பெரிதாகி போனது. இல்லையா?
To be continued...
http://english.samaylive.com/nation-news/676484654/2g-scam-cbi-to-file-status-report-in-sc.html
Mr. Raj. I donno for how many days you are going to support DMK. Rather than helping the people just think how mouch they have taken for them. Rather getting angry on your comments i doubt on you for all those statistics wherther you are in the inner circle of the paty.r
PULICHU PULICHU OOSAL VADAI VARUTHU...UNNODA KARTHAI NIRUTHUKIRAYAA ILLAYA?
PULICHU PULICHU OOSAL VADAI VARUTHU...UNNODA KARTHAI NIRUTHUKIRAYAA ILLAYA?
கட்சிப் பணத்தில் பூமாலை வீடியோ இதழ் துவங்க கருணாநிதியால் அனுமதி அளிக்கப்பட்டது.அது தோல்வி அடையவே தனியார் தொலைக்காட்சி அனுமதியளிக்கப்ப ட்ட காலத்தில் சன் டிவிக்கு அனுமதியளிக்கப்ப ட்டது.
கட்சிப்பண்த்தில ் கட்சி அலுவலகத்தில் சன் டிவி தொடங்கப்பட்டு அதன் அரவணைப்போடு வளர்ந்தது.இது அனைவரும் அறிந்த வரலாறு
Quoting Puthiyavan Raj:
Quoting Puthiyavan Raj:
இப்படியே சொல்லி சொல்லிதானே அரியம் திராவிடம் என்றெல்லாம் பேசி பேசி தமிழனை மூளை மழுங்கடித்து ஒரு லட்சம் கோடி கடைசி பேரனுக்கும் இன்னும் வயதுக்குள் இருக்கும் பேரனுக்கும் சேர்த்து சொத்து செர்தகிவிட்டது? இன்னும் என்ன தான் வேண்டும் தி முக சொம்புகள/ ஒரு உண்மையான தி முக தொண்டன் எப்படி சாகிறான் என்று பாரு? இப்படி போனால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி எல்லோரும் சாக வேண்டியது தான்.
கொஞ்சும் குஷ்பூவும் சுந்தருக்கே சொந்தமா? அடடா.............. என்ன அருமையாக சொன்னீர்கள் போங்கள்...........க க க போ....!!!!!!!!!!!!!!! !!
இத எதுக்கு கோயிலுக்கு போய் பணன்னும்? அவிங்க வீட்டுலயே அந்த கெழத்த ஒக்கார வச்சி பண்ணி இருக்கலாமே.....இத விட பெரிய சனி இந்த உலகத்தில் உந்டோஓஓஓ.........................
kalakiteega arumai...
இந்த நாட்டில் நீதியும் நேர்மையும் குப்பைதானா.?
1,ஜெமினி பாலம் ஒன்றும் கருணா தனது சொந்த செலவில் கட்டவில்லை,
2,ஜெமினி பாலம் மட்டுமல்ல சேர்த்து சிவாஜி பாலத்தையும் உளுந்தூர்பேட்டை யில் கட்டுவதற்குத்தா ன் கருணா திட்டமிட்டிருந் தார்.
ஜெமினிபாலத்துக் கு செலவழித்ததாக கணக்குகாட்டிய ++++கோடியில் அரைவாசி கருணா வீட்டு கல்லாவில் விழுந்துவிட்டது , பாலம் கட்டுவது ஒன்றும் இலாபாமில்லாமல் செய்யப்படவில்லை .
3,35 வருடத்துக்கு முன்னய கை வண்டி மாறி ஆட்டோ வந்தது காலமாற்றம் கருணாநிதியின் மாற்றமல்ல,, கருணா மாறாமல் இருப்பதுதான் காலக்கொடுமை.
4, பல பாலங்கள். தெருக்கள். குளங்கள். பள்ளிகள். பொன்றவற்றின் தேய்மானந்தான் CID கொலனியிலும் கோபாலபுரத்திலும ். சன் ரிவியிலும் ரெட் ஜெயண்ட் மூவியிலும். க்ளவுட் நைன் மூவியிலும். வோல்டாஸாகவும். ரோயல் ஃபெர்ணிச்சர்ஸ், ம்ற்றும் கலைஞர் ரிவி, இன்னும் ஆயிரம் தொழில்ப்பேட்டைய ாக வளர்ந்து நிற்கிறது. உங்க அழுகையைப்பார்த் தா கலைஞ்ரின் குடும்பத்தவர்கள ் ரிக்க்ஷா ஓட்டி பிழைப்பது போலல்லவா இருக்கிறது. நீங்கள் சூடம் ஏற்றி கருணாவை வழிபடுவதற்காக மற்றவர்களை அழைப்பது தவறு!
அப்படியா சவுக்கு?
இது சட்டமா அல்லது சட்டத்தில் உள்ள ஓட்டையா? அதனால் தான் பேறரிஞர் அண்ணா, சட்டம் ஒரு இருட்டரை என்று சொன்னாரோ?
என்ன பண்ணினாலும் இந்த முட்டா பசங்க இவனுங்களுக்கு தான் ஒட்டு போடுவாங்க ......
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=213145
கீழ்கண்ட சுட்டியில் ஒரு கனிமொழி-கருணாநிதி தொடர்பான செய்தி கொடுக்கப்பட்டுள ்ளது. முடிந்தால் படிக்கவும்.
கனிமொழி = வரதட்சிணை + கிவிதை + பேராசை + ஊழல்
http://othisaivu.wordpress.com/2011/03/27/post-2/
நன்றி.
சவுக்கு தமிழினத்தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை போட்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறது. சவுக்கின் நோக்கங்கள் என்ன ? விடுதலை புலிகளை தடை செய்ததவர், நுற்றுக்கணக்கான ஈழ ஆதரவாளர்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவித்த ஜெயலலிதாவை ஆட்சில் ஏற்ற்ற சவுக்கு பார்ப்பன பிண வாசனையுடன் சு சாமியின் திரைக்கு பின்னால் இயங்குகிறது. சவுக்கின் வேடம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது
Tamilnadu Assembly Elections Opinion Poll – AIADMK Set for Return
March 17, 2011 · Author: editor· Category: /
The OUTLOOK-MDRA opinion poll for the forthcoming assembly elections in the state of Tamilnadu indicate that AIADMK headed by Jaylalitha will be back in power according to 54% of the people.
AIADMK has formed an alliance with DMDK (a party led by a popular former film star Vijaykanth). In the previous state election, DMDK was not part of any alliance and had won a single seat. However, it had garnered a vote share of ~8%, which is quite significant. Therefore, the DMDK-AIADMK alliance could meaningfully hurt DMK’s prospects. Another strong factor in support is, since 1984, DMK and AIADMK have led the government alternately.
Rampant Corruption together with high Inflation is likely to hurt the Congress DMK alliance. Alleged involvement of former telecom minister A. Raja (member of DMK party) in the 2G scam has hurt the party’s image.
இவ்வாறு செய்வதால் இரண்டு நன்மைகள் ஏற்படும்.
1. இதுவரை தோல்வியை சந்திக்காத தாத்தாவின் வேட்புமனுவையே நிராகரித்து, அவருக்கு ஓய்வு கொடுப்பது.
2. தேர்த்தல் கமிஷன் தன்னுடைய அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்தல். அடுத்த முறை ஒழுக்கமில்லாதவர ்கள் தேர்த்தலில் போட்டியிட தயங்குவர்.
நம்புவோமா தேர்த்தல் கமிஷனை?
அண்ணா சாலையில் வோல்டாஸ் நிலம் இருப்பதால் அதை அன்னமிட்டு பொங்கலிட்டு உண்ணத்தான் முடியுமா..!
வயற்று பசியாக இருப்பினும் நீ ராயல் பர்னிச்சர் கடையின் இறக்குமதி மர சாமான்களை மர கறி என எண்ணி உண்ண தான் முடியுமா..!
அல்லது பூங்கி ஆடையகத்தின் ஆடை அணிகலன்களை உண்டு பசியாரதான் முடியுமா..!
வறுமையில் பலர் வாட; வளமிகு நீலகிரியில் பல ஏக்கரில் எஸ்டேட் வாங்குவது நீதிதானோ?
வாங்கி போட்ட பொறியியல் கல்லூரிகளை தான் பொரியலாக்கி பசியாரதான் முடியுமா...!
தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத் 230 கோடியை பல்லுயிர் ஓம்பும் பொருட்டு கலைஞர் டிவிக்கு கொடுத்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்...!
தலைப்பு பிரம்மாதமாகவும் பொருத்தமாகவும் உள்ளது.
கேட்டாயா உடன்பிறப்பே!
நான் சேர்க்கிறேனாம் சொத்து
அப்படி சொல்கிறவன் முகத்தில் விடு குத்து!
பட்டு வேட்டி அய்யருக்கு சொந்தமா?
குடும்ப ஆட்சி நேரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமா?
கோடிகளும் கோபுரங்களும் புருணை சுல்தானுக்குத்த ான் சொந்தமா!
கொஞ்சும் குஷ்பூவும் சுந்தருக்கே சொந்தமா?
செங்கிஸ்கான் கொள்ளை
கோரிமுகமது கொள்ளை
கஜினிமுகமது கொள்ளை
சோமாலிய கொள்ளை-இவற்றை
வரலாற்றில் பிள்ளையாக படித்த போதே
கொள்ளை மீது
எல்லையில்லா கொள்ளை கொண்டேன்!
தனி ஒரு குடும்பம் கொள்ளையடிப்பதை தடுக்க நினைத்தால் இந்த ஜகத்தினை அழிப்போம் உடன் பிறப்பே!
இறுதியாக
தம்பி சவுக்கு !
நீயோர் இழுக்கு!
எனக்கு கிடையாது அப்பழுக்கு!
நீ எழுதுவதை போடு முழுக்கு!
இல்லையேல் உனக்கு சுளுக்கு!
RSS feed for comments to this post