முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நக்கீரன் பொய்ச் செய்திகளை வெளியிடுவது வழக்கமே.. காமராஜ் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 31
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 06 ஏப்ரல் 2011 17:51

 

நக்கீரன் பத்திரிக்கை, எப்படிப் பட்ட ஒரு மிகக் கேவலமான பத்திரிக்கை என்பதை சவுக்கு வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.   உண்மைகளை மறைப்பது, பொய்ச் செய்திகளை வெளியிடுவது, நல்லவர்களை தூற்றுவது, பொய்யர்களையும், புரட்டுக் காரர்களையும், நல்லவர்களாக எழுதுவது (ஆ.ராசா போல) நக்கீரன் பத்திரிக்கைக்கு கைவந்த கலை என்பதை அறிவீர்கள். இது தவிரவும், நடிகை த்ரிஷா குளிக்கும் போது ரகசியமாக எடுத்த வீடியோ, இணையத்தில் உலவிய போது, அந்த படத்தை ஃப்ரேம், ஃப்ரேமாக போட்டு, இணைய வசதி இல்லாதவர்களிடமும் அதை எடுத்துச் சென்று, த்ரிஷாவை மானபங்கப் படுத்தியது நக்கீரனே….

 

நித்யானந்தாவை அம்பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ரஞ்சிதாவை மானபங்கப் படுத்தியதும் நக்கீரனே…. இது மட்டும் அல்லாமல், எண்ணிலடங்கா குடும்பங்களை நாசப் படுத்தியதில் நக்கீரனுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

 

இது தவிரவும், தற்போது, இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் 117 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட நக்கீரன், அவற்றில் 68 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று போட்டிருக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளுக்கான முடிவுகள் அடுத்த இதழிலாம்.   அதாவது இவர்கள் கணக்குப் படி, திமுக கூட்டணி 136 தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.

 

நக்கீரன் பத்திரிக்கையும், அதன் இணை ஆசிரியரான குருமாராஜும் செய்த ஊழல்களை முதன் முதலில் அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே.. சவுக்கு தளம் அதை அம்பலப்படுத்திய போது, சவுக்கு மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு, குருமாராஜ், சவுக்கைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார்.   சில பத்திரிக்கையாளர்கள் குருமாராஜைப் பற்றி தவறாக எழுதச் சொல்லி, சவுக்கைத் தூண்டுகிறார்கள் என்று குமுறினார். தான் அப்பழுக்கற்றவன் என்றார்…. நேர்மையின் உருவம் என்றார்….. ஆனால், அடுத்தடுத்து ஆதாரங்களோடு, சவுக்கு குருமாராஜை அம்பலப்படுத்தியதும், குருமாராஜின் வேஷம் கலைந்தது.

IMG_9359

இதற்கு முத்தாய்ப்பாக, டிசம்பர் மாதம், சிபிஐ குருமாராஜ் வீட்டில் நடத்திய சோதனைகள் அமைந்தன. முதலில், சிபிஐ எந்த ஆதாரங்களையும் எடுத்துச் செல்லவில்லை, எதையும் கைப்பற்றவில்லை என்று பொய்யுரை கூறிய குருமாராஜ், படிப்படியாக உண்மைகள் வெளிவந்ததும் வாயைப் பொத்திக் கொண்டார்.

 

அடுத்து, குருமாராஜ், சாதிக் மரணத்தில், வகித்த பங்கைப் பற்றியும் சவுக்கு செய்திகளை வெளியிட்டதும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்.   சிபிஐ தன்னைக் கைது செய்யுமோ என்ற அச்சத்திலே குருமாராஜ் இருப்பதாக குருமாராஜுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், நக்கீரன் பத்திரிக்கை பொய்ச் செய்திகளையும், உண்மைகளை திரித்தும், புகைப்படங்களை மோசடி செய்தும் வெளியிடுவது வழக்கமே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.   இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேற எங்கும் கொடுக்கவில்லை….. மாவட்ட நீதிபதி முன்பாக அளித்துள்ளார். நக்கீரன் பொய்ச் செய்திகள் வெளியிடும் என்பதை நக்கீரன் பத்திரிக்கையின் இணை ஆசிரியரான குருமாராஜே தெரிவித்த பிறகு, வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

 

குருமாராஜ் எங்கே இது போல சொன்னார் ?   மதுரை தினகரன் அலுவலகத்தில், நடந்த அந்த கொடூரச் செயலை மறந்திருக்க மாட்டீர்கள்…. அந்த வழக்கில் தான், இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப் பட்டது.

dinakaran

தினகரன் பணியாளர்கள் எரித்துக் கொல்லப் பட்ட உடனே, சன் டிவி, வெளியிட்ட தலைப்புச் செய்தி என்ன தெரியுமா ?

 

“ரவுடி அழகிரியின் அட்டகாசம்” என்பதுதான்..   அந்த செய்தி வெளியான போது, சட்டப் பேரவை நடந்து கொண்டிருந்தது.   வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டிருந்த கருணாநிதி, சட் டிவியில் என்ன செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். “ரவுடி அழகிரி” என்ற வார்த்தையை கேட்டவுடன், கொதித்துப் போன கருணாநிதி, குருமாராஜை அழைத்து, தாக்குதலுக்கு ‘அட்டாக் பாண்டி’ தான் காரணம் என நக்கீரனில் அட்டைப் பட செய்தி போடச் சொல்லி உத்தரவிட்டார்.

dinakaran_1

குருமாராஜ் பத்திரிக்கையாளராக இருந்தால், உண்மை என்ன, இதில் அழகிரியின் பங்கு என்ன என்பதையெல்லாம் விசாரிப்பார்.   அவர் ப்ரோக்கர் இல்லையா ? கருணாநிதியின் உத்தரவுப் படி அப்படியே செய்தியை வெளியிட்டார். நக்கீரன் இதழில், அட்டைப் படத்தில், அழகிரியைப் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்கள் கொதித்துப் போய் தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூன்று பேரை கொன்று போட்டதாக செய்தி வெளியிடப் பட்டது.

 

எப்படி விசாரணை நடத்துகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று நினைத்த கருணாநிதி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.   சிபிஐ தனது விசாரணையை முடித்த பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

 

இந்த நீதிமன்றத்தில் தான், குருமாராஜ், இப்படிப் பட்ட ஒரு வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

1

சம்பவம் நடந்த அன்று, நக்கீரன் மதுரை நிருபர் ஒளி ராஜா மற்றும், புகைப்படக்காரர் அண்ணல் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் எடுத்து அனுப்பிய புகைப்படங்களையும் செய்தியையும் வைத்துத் தான் நக்கீரன் கவர் ஸ்டோரி வெளி வந்தது.

 

இந்த அண்ணல், மதுரை நீதிமன்றத்தில் விசாரணையின் போது சம்பவம் நடந்த நாளன்று தனக்கு வயிற்று வலி (அன்னைக்குன்னு பாத்து எப்பிடிடா உனக்கு வயிறு வலிக்குது) என்பதால், மிகவும் தாமதமாக, மதியம் 2 மணிக்குத் தான் தினகரன் அலுவலகம் சென்றதாகவும், அங்கே கடும் புகை இருந்ததாகவும், அவற்றை புகைப்படம் எடுத்து சென்னை நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இவர் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்திலோ, சம்பவம் நடக்கத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே இருந்ததாகவும், நக்கீரன் இதழில் வந்த அட்டைப் படம் உள்ளிட்ட படங்களை தான்தான் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

 

நிருபர் ஒளி ராஜா, இன்னும் சூப்பர். சம்பவம் நடந்த அன்று தான் அந்த இடத்திலேயே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார்.

IMG_9358

இது தொடர்பாக சாட்சியம் அளித்தார் நக்கீரனின் இணை ஆசிரியர் குருமாராஜ்.   ஒளிராஜா மற்றும் அண்ணல் நக்கீரனில் பணியாற்று பவர்கள் தான்.   அவர்கள் இருவரும் அளித்த புகைப்படங்கள் மற்றும் செய்தியை வைத்துத் தான் நக்கீரன் 16.05.2007 நாளிட்ட கவர் ஸ்டோரி வந்தது.   ஆனால் அதற்குப் பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார் பாருங்கள் குருமாராஜ்….   அந்த புகைப்படங்களும், செய்தியும், சிடியில் வந்ததாம். ஆனால் எப்படி வந்தது என்பது தெரியாதாம். ஈமெயிலா, கொரியரா, தபாலா, அல்லது நேரிலா என்பது சுத்தமாக நினைவில் இல்லையாம்.   (திருவான்மியூர்ல பொண்டாட்டி பேர்ல வீடு வாங்குனதாவது ஞாபகம் இருக்கா இல்லையா ?) ‘நீங்கள் ஒளிராஜாவும், அண்ணலும் செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பியதாக தெரிவிக்கிறீர்கள், ஆனால், அவர்கள் நாங்கள் செய்தியும் அனுப்பவில்லை, புகைப்படமும் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்களே…. என்று கேட்டதற்கு, ‘அதுதான் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்.

 

குருமாராஜை, கவுண்டமணி பாணியில் தான் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.   ‘டேய் பச்சிலை புடுங்கி…. ஃபோட்டோ எப்டிடா வந்துச்சு ?’ என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் என்பதால் கேட்கவில்லை.

IMG_9358

அடுத்து குருமாராஜ், முக்கிய விஷயம் ஒன்றை தெரிவிக்கிறார். நக்கீரன் இதழில், புகைப்படங்களை, மார்ஃபிங் எனப்படும், ஒட்டு வேலை செய்து வெளியிடுவது வழக்கம் தான்.   இது போல பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறோம்.   முதலமைச்சரும், தயாநிதி மாறனும், அட்டாக் பாண்டியோடு இருப்பது போல, வெளியிட்டிருக்கும் புகைப்படமே நாங்கள் மார்ஃபிங் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சி என்று கூறியிருக்கிறார்.

kamaraj-060411

 

kamaraj-06048

 

kamaraj--c-060411

 

மேலும், தனது சாட்சியத்தில், “தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பிரபாகரன், தற்போதைய செய்தித் தாளை வைத்திருப்பது போல அட்டைப் படம் வெளியிட்டோம் என்று கூறியுள்ளார். (இதை வைத்து எத்தனை லட்சம் சம்பாதித்தீர்கள் அயோக்கியர்களே…. !) இதை விட, குருமாராஜ் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள்…..   அய்யய்யய்யய்யோ…. சூப்பரோ சூப்பர்.   “ஒரு ஆணின் முகத்தை, ஒரு பெண்ணின் ஒடலோடு பொறுத்தி, பல முறை நக்கீரனில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்.

 

எப்படி இருக்கிறது ? இதுதான் நக்கீரன். இந்த பத்திரிக்கையை 8 ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு நக்கீரன் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா ?

 

தாங்கள் அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும், நான் அனுப்பவில்லை என்று கூறிய நக்கீரன் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டாம் ? அந்த இரண்டு ஊழியர்களும், இன்னும் நக்கீரனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   இணை ஆசிரியராக இருக்கும் குருமாராஜே இப்படி பொய் செய்தி வெளியிடுவோம் என்று சொல்லும் போது, மற்றவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

DSC_5655

குருமாராஜைப் பற்றி சவுக்கு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பொறுப்பை தனது வாசகர்களிடமே விட்டு விடுகிறது.

 

Comments  

 
0 #58 muthukumar.c 2011-08-29 12:57
தங்கபாலு மூவரை தூக்கில் போட வேன்டும் என்ரு சொல்லுகிரார்,இத ை சொல்ல அவருக்கு தகுதி இருக்கிரத
Quote
 
 
+3 #57 cheeta 2011-04-11 19:04
நக்கீரன் ரொம்ப மட்டகரமான இதழ்,கருனாநீதிய ின்.மாமா.வேலை பார்க்கும் இதழ்
Quote
 
 
-16 #56 Puthiyavan Raj 2011-04-10 11:54
நக்கீரன் பொய் சொல்லி சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் ஜெ. வின் காட்டாட்சியின் போது ஜெ. துதி பாடி பிழைப்பு நடத்தி இருக்கலாம். ஜெ. ஆட்சிக்கு வந்த 1 வருடத்தில் பத்திரிகையாளர் மீது 125 மான நஷ்ட வழக்குகள் போட்டு மிரட்டி பார்த்தார். (அவருடைய ஜால்ரா பத்திரிக்கை துக்ளக் சோ மீதும் 3 வழக்குகள் போட்டார் ஜெ. ). எட்டிய காலை முத்தமிடும் ஈனப்பிறவிபோல அதில் பல பத்திரிகைகல் ஜெ. அடிவருடிகள் ஆகிவிட்டன (துகளக் சோ உட்பட) ஆனால் பொய் பொடா வழக்கு போட்டு சிறையில அடைத்த போதும் நக்கீரன் கோபால் துணிவாக ஜெ. வை எதிர்த்தார்.
Quote
 
 
+3 #55 thqanjai.G.jayaraj 2011-04-09 18:32
ஜெயலிதா ஆட்ச்சிக்கு வந்து சவுக்கை (உண்மையான சவுக்கை)
எடுத்து நல்ல பாடம் புகட்டனும் ...கோபால் மற்றும் அவரின் வகையறாக்களை !
Quote
 
 
+4 #54 thqanjai.G.jayaraj 2011-04-09 18:28
ஜெயலிதா ஆட்ச்சிக்கு வந்து சவுக்கை (உண்மையான சவுக்கை)
எடுத்து நல்ல பாடம் புகட்டனும் ...கோபால் மற்றும் அவரின் வகையறாக்களை ! :-x
Quote
 
 
-8 #53 பேரறிவாளன் 2011-04-09 18:27
Quoting வளவன்:
Quoting Man:
Quoting jaya:
டேய் .. வளவா. சவுக்கு என்ன ஜாதியாக இருந்தால் உனக்கு என்ன?


மேலும்.. எந்த ஜாதியா இருந்தால் என்ன, நல்லதத்தான் சவுக்கு சொல்றாரு. எந்த ஜாதிக்காரனா இருந்தால் என்ன, நல்லத சொல்லரவங்கள கொண்டாடுவோம்


கவுன்சிலருக்கு நிக்க வைச்சி ஓட்டு போடு,,,,

அட அறிவு கேட்ட முண்டமே உன்ன மாதிரி அடி வருடிகள் இருக்கறவரை சவுக்கு மாதிரி ஈனப்பிறவிகள் இருக்கத்தான் செய்வார்கள்....
Quote
 
 
-4 #52 வளவன் 2011-04-08 16:58
Quoting Man:
Quoting jaya:
டேய் .. வளவா. சவுக்கு என்ன ஜாதியாக இருந்தால் உனக்கு என்ன?


மேலும்.. எந்த ஜாதியா இருந்தால் என்ன, நல்லதத்தான் சவுக்கு சொல்றாரு. எந்த ஜாதிக்காரனா இருந்தால் என்ன, நல்லத சொல்லரவங்கள கொண்டாடுவோம்


கவுன்சிலருக்கு நிக்க வைச்சி ஓட்டு போடு,,,,
Quote
 
 
0 #51 குசும்பன் 2011-04-08 16:53
Quoting Anto:
Quoting வள்ளி:
சவுக்கு அவர்களுக்கு வேண்டுகோள்...
உண்மையான சர்வே-வை வெளியீடு செய்ய வேண்டும்.
அதிமுக கூட்டணி எவ்வளவு இடம் பிடிக்கும்?
திமுக கூட்டணி எவ்வளவு இடம் பிடிக்கும்?


ADMK + = 190
DMK + = 44

TAMIL PEOPLE = 0


dmk +190
admk +44
Quote
 
 
+1 #50 vaedhampudhidhu 2011-04-08 16:30
Quoting latha_1978:
savuuku and other followers iam reminding you one thing nakkeeran predicted 95% correct results in last 3 elections.when all papers pro jj where predicted jj victory nakkeran predicted the opposite and was correct.THIS TIME ALSO SAME SAME WILL HAPPEN.DINAMANI,DINAMA LAR AND VIKATAN FULL JALRA TO JJ.

You are right latha, other magazines running on their own fund, and nakeeran running with corrupt fund from DMK, see since past three elections they also taking part in all the scams of DMK, great applause for your prediction.
Quote
 
 
+1 #49 Anto 2011-04-08 15:01
Quoting ஏமாந்த தமிழன்:
எங்கே சென்றாலும், எந்த ஊழல் என்றாலும் அங்கே ஒரு தெலுங்கன், மலையாளி இருப்பது வழக்கம் தான். தன்னலமே முதன்மை என்றே நினைத்துப் பல செயல்கள் செய்வார் இவர். அந்தக் கொள்(கை)ளையை மறக்காமல் செய்து வந்திருக்கிறார் இவரும்.


தெலுங்கன் kaati koduppan (M.K) மலையாளி kooti koduppan (M.G.R)
Quote
 
 
0 #48 Anto 2011-04-08 13:48
Quoting வள்ளி:
சவுக்கு அவர்களுக்கு வேண்டுகோள்...
உண்மையான சர்வே-வை வெளியீடு செய்ய வேண்டும்.
அதிமுக கூட்டணி எவ்வளவு இடம் பிடிக்கும்?
திமுக கூட்டணி எவ்வளவு இடம் பிடிக்கும்?


ADMK + = 190
DMK + = 44

TAMIL PEOPLE = 0
Quote
 
 
-1 #47 Anto 2011-04-08 13:46
Quoting Kumbidren Saami:
Quoting VeththuVettu:
Quoting ம.பொன்ராஜ்:
Quoting VeththuVettu:
பிரபாகரன் உயிரோட இருப்பது நிஜமா? பொய்யா?

மறைந்து(?) வாழ்கிறார். ஆமாம் எதுக்கு பிரபாகரனை தேடுறீங்க? தமிழின வரலாற்று போராட்டத்தில் பிரபாகரன் ஒரு சகாப்தம். அவரின் வழியை பின்பற்றி உருப்படியான செயல்களை முன்னேடுக்கவேண் டுமே தவிர எல்லாவற்றுக்கும ் 'பிரபாகரன் வருவார். நம்மை காப்பார்' என்று நினைப்பது அறிவீனம். 'பிரபாகரன்' அவருடைய பங்களிப்பை செய்தார்...செய்கின்றார்(?)....செய்வார்(?)... நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இங்கு கேள்வி...!!!


நான் கேட்டது நக்கீரன் வெளியிட்ட அந்த கருத்து (பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று)உண்மையா இல்லை பொய்யா?

பிரபாகரன் இறந்து விட்டது இங்கு உள்ள அரசியல் வாதிகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் வெளிப்படியாக ஒத்துக்கொண்டால் தங்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்றும் தெரியும். அரசியல் என்று நான் குறிப்பிட்டது ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தினரையும ் சேர்த்து தான்.



I have my gut feelings that Prabha will come back again.
Quote
 
 
0 #46 Man 2011-04-08 11:12
Quoting jaya:
டேய் .. வளவா. சவுக்கு என்ன ஜாதியாக இருந்தால் உனக்கு என்ன?


மேலும்.. எந்த ஜாதியா இருந்தால் என்ன, நல்லதத்தான் சவுக்கு சொல்றாரு. எந்த ஜாதிக்காரனா இருந்தால் என்ன, நல்லத சொல்லரவங்கள கொண்டாடுவோம்
Quote
 
 
-2 #45 ஏமாந்த தமிழன் 2011-04-08 11:02
எங்கே சென்றாலும், எந்த ஊழல் என்றாலும் அங்கே ஒரு தெலுங்கன், மலையாளி இருப்பது வழக்கம் தான். தன்னலமே முதன்மை என்றே நினைத்துப் பல செயல்கள் செய்வார் இவர். அந்தக் கொள்(கை)ளையை மறக்காமல் செய்து வந்திருக்கிறார் இவரும்.
Quote
 
 
-1 #44 Man 2011-04-08 10:56
Quoting Suresh Raja:
சரியான சொறிச்சந்திரன். அவன் கண்ண பாத்தாலே தெரியுது இவன் ஒரு காவளிபயன்னு. இவனால கோவாலும் தூக்கு போட்டுக்கப்போறா ரு...


கோவாலு ஒன்னியும் உத்தமபுத்திரன் இல்ல. ராஜ்குமார்.....வீரப்பன்....சில கோடிகள்...அபேஸ்....நியாபகம் இருக்கா.
Quote
 
 
-1 #43 Kumbidren Saami 2011-04-08 10:21
Quoting வள்ளி:
சவுக்கு அவர்களுக்கு வேண்டுகோள்...
உண்மையான சர்வே-வை வெளியீடு செய்ய வேண்டும்.
அதிமுக கூட்டணி எவ்வளவு இடம் பிடிக்கும்?
திமுக கூட்டணி எவ்வளவு இடம் பிடிக்கும்?

இரண்டில் எது எத்தனை பிடிச்சால் உனக்கு என்ன? உனது குரல் வளையை இரண்டு கட்சிகளும் மாறி மாறி பிடித்து நெரிக்கிறது. மாற்றாக வந்தவனும் ஒரு தண்ணி வண்டி. ஒருத்தனிடம் தப்பிக்க வேண்டும் என்றால் இன்னொருவனிடம் சரண்டர் ஆக வேண்டிய சுழல். ஞாபகம் உள்ளதா சுப்பிரமணியன் சுவாமி அறிவாலயத்தில் கொளைழரை சந்தித்து கொள்ளை காரியிடம் இருந்து தப்பியது.
Quote
 
 
-2 #42 Kumbidren Saami 2011-04-08 10:13
Quoting VeththuVettu:
Quoting ம.பொன்ராஜ்:
Quoting VeththuVettu:
பிரபாகரன் உயிரோட இருப்பது நிஜமா? பொய்யா?

மறைந்து(?) வாழ்கிறார். ஆமாம் எதுக்கு பிரபாகரனை தேடுறீங்க? தமிழின வரலாற்று போராட்டத்தில் பிரபாகரன் ஒரு சகாப்தம். அவரின் வழியை பின்பற்றி உருப்படியான செயல்களை முன்னேடுக்கவேண் டுமே தவிர எல்லாவற்றுக்கும ் 'பிரபாகரன் வருவார். நம்மை காப்பார்' என்று நினைப்பது அறிவீனம். 'பிரபாகரன்' அவருடைய பங்களிப்பை செய்தார்...செய்கின்றார்(?)....செய்வார்(?)... நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இங்கு கேள்வி...!!!


நான் கேட்டது நக்கீரன் வெளியிட்ட அந்த கருத்து (பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று)உண்மையா இல்லை பொய்யா?

பிரபாகரன் இறந்து விட்டது இங்கு உள்ள அரசியல் வாதிகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் வெளிப்படியாக ஒத்துக்கொண்டால் தங்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்றும் தெரியும். அரசியல் என்று நான் குறிப்பிட்டது ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தினரையும ் சேர்த்து தான்.
Quote
 
 
+2 #41 Kumbidren Saami 2011-04-08 09:00
Quoting குமார்:
நக்கீரனை திட்டி திட்டியே வளரவேண்டும் என்று நினைக்கின்றாய்.., வாழ்த்துக்கள். அடுத்தவன் அழிவில் இருந்து வளர்வது நீண்ட நாள் நிலைக்காது....?

நக்கீரனின் அழிவில் சவுக்கா!!!!. ஜோக்கா?? அல்லது நக்கீரனை புரிந்து கொள்ள விரும்பவில்லையா ?? பிரபாகரனின் போட்டோவில் அடித்த காசு பாவப்பட்ட காசு. அந்த பாவத்திற்கு குருமராசும் அவர் கூட்டமும் குழ்ட்ட வியாதி வந்து போவார்கள். பிரபாகரன் உயரோடு இருப்பதாக தெரிந்தே பொய் செய்தி போட்டு மக்களை முட்டாள் என்று காட்டி தனது பெட்டியை நிரப்பியது பஞ்சமாபவம்.
Quote
 
 
0 #40 janakiraja 2011-04-08 01:54
அண்ணா.... தமிழகத்தின் த(ண்ணி)னிப்பெறு ம் தலைவர் புரட்சிக்கலைஞர் விஜய(ஸ்கி)காந்த ் குறித்து ஏதேனும் எழுதுங்களேன்.
Quote
 
 
+2 #39 aravindh 2011-04-08 00:25
Dear Savukku,
Time is nearing to cover Kar nai nidhi and family arrest news including all grqand sons and daugthers, awaiting your blog as very first , plz prepare your self, may be a first move from AMMA after power
Quote
 
 
+2 #38 LL 2011-04-07 23:22
Former telecom minister A Raja's nephew dies at gym
Quote
 
 
-5 #37 latha_1978 2011-04-07 23:15
savuuku and other followers iam reminding you one thing nakkeeran predicted 95% correct results in last 3 elections.when all papers pro jj where predicted jj victory nakkeran predicted the opposite and was correct.THIS TIME ALSO SAME SAME WILL HAPPEN.DINAMANI,DINAMA LAR AND VIKATAN FULL JALRA TO JJ.
Quote
 
 
+4 #36 jaya 2011-04-07 22:59
டேய் .. வளவா. சவுக்கு என்ன ஜாதியாக இருந்தால் உனக்கு என்ன?
Quote
 
 
0 #35 VeththuVettu 2011-04-07 22:51
Quoting ம.பொன்ராஜ்:
Quoting VeththuVettu:
பிரபாகரன் உயிரோட இருப்பது நிஜமா? பொய்யா?

மறைந்து(?) வாழ்கிறார். ஆமாம் எதுக்கு பிரபாகரனை தேடுறீங்க? தமிழின வரலாற்று போராட்டத்தில் பிரபாகரன் ஒரு சகாப்தம். அவரின் வழியை பின்பற்றி உருப்படியான செயல்களை முன்னேடுக்கவேண் டுமே தவிர எல்லாவற்றுக்கும ் 'பிரபாகரன் வருவார். நம்மை காப்பார்' என்று நினைப்பது அறிவீனம். 'பிரபாகரன்' அவருடைய பங்களிப்பை செய்தார்...செய்கின்றார்(?)....செய்வார்(?)... நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இங்கு கேள்வி...!!!


நான் கேட்டது நக்கீரன் வெளியிட்ட அந்த கருத்து (பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று)உண்மையா இல்லை பொய்யா?
Quote
 
 
+4 #34 sharath 2011-04-07 12:37
www.thatstamil.com supports DMK full time, any comments
Quote
 
 
+4 #33 david 2011-04-07 12:02
We need a good article from you regarding Anna Hazare's Fasting.. Tamil nadu media is not much exposing it to people...
If we collectively chose 49 o what will happen in tamilnadu?
Quote
 
 
-17 #32 வளவன் 2011-04-07 11:13
உனக்கும் ஜாபருக்கும் பிரச்சனை, காமராஜ் ஜாபர் பிரண்டு அதனால் காமராஜை எதிர்க்கின்றாய் நக்கீரன் எழுதும்போத பார்த்து எழுது,, நீ என்ன ஐய்யனா?
Quote
 
 
+7 #31 D.M.Nagarajan 2011-04-07 02:59
[quote name="ஏசுதாஸ்"]2011 தேர்தலில் யார் ஆட்சி அமைக்கின்றனர். திமுக-விற்க எத்தனை இடம்? அதிமுக-விற்கு எத்தனை இடம்? சவுக்கு அவர்களே... நீங்கள் சர்வே முடிவு வெளியிட வேண்டும். எதிர்பார்க்கின் றேன்[/qu

Dear Mr.Savukku,

I started reading your website from past 3months only and it is been recommented by one of my friend who is working in UK now.I like all your article because it is been written with proof and evidence. Please keep going with your good work.

I would like to request you to release prepoll survey report done by you because we are now confused by somany surveys done by others and all of them contradictory to one and another. Please let us know your survey report.

For your information, i recommented most of my friends to read your website and i am even posting your very important article in my facebook wall.

http://www.facebook.com/home.php?ref=hp#!/nag1998

Best of Luck to Madam Jeyalalitha and all people of tamilnadu for their success in coming election

D.M.NAGARAJAN
SAUDI ARABIA
Quote
 
 
+5 #30 KK 2011-04-07 00:22
New Delhi: Sources have told CNN-IBN that Karunanidhi's daughter and DMK MP Kanimozhi is likely to be charged on April 25 in the 2G spectrum case.




Other beneficiaries in the 2G spectrum scam will also to be chargesheeted. The supplementary chargesheet will focus on the Rs 200 crore money trail from Swan to Kalignar TV. Loop Telecom is also on the radar.




The CBI had earlier raided the office of Kalaignar TV in Chennai in which Tamil Nadu Chief Minister M Karunanidhi's wife Dayaluammal was one of the owners.
Quote
 
 
+18 #29 ம.பொன்ராஜ் 2011-04-07 00:14
Quoting VeththuVettu:
பிரபாகரன் உயிரோட இருப்பது நிஜமா? பொய்யா?

மறைந்து(?) வாழ்கிறார். ஆமாம் எதுக்கு பிரபாகரனை தேடுறீங்க? தமிழின வரலாற்று போராட்டத்தில் பிரபாகரன் ஒரு சகாப்தம். அவரின் வழியை பின்பற்றி உருப்படியான செயல்களை முன்னேடுக்கவேண் டுமே தவிர எல்லாவற்றுக்கும ் 'பிரபாகரன் வருவார். நம்மை காப்பார்' என்று நினைப்பது அறிவீனம். 'பிரபாகரன்' அவருடைய பங்களிப்பை செய்தார்...செய்கின்றார்(?)....செய்வார்(?)... நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இங்கு கேள்வி...!!!
Quote
 
 
+7 #28 ponandril 2011-04-06 23:34
இந்த மாதிரியான பேர்வழிகளால் தான் பத்திரிகை துறைக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது. இவர்களின் சொத்து மதிப்பு, இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது. இதனை சவுக்கு தன் பாணியில் விசாரித்து இவர்களின் தண்டவாளங்களை வெளிப்படுத்துமா ?
Quote
 
 
+9 #27 jaya 2011-04-06 23:21
Dear Savukku Kindly note Anna Hazare is in fast in Delhi against corruption in India. Please write about this and update your magazine's pride.
Quote
 
 
+4 #26 moorhty 2011-04-06 22:56
I bought this Nageeran weekly every month without fail past 6 years. but its quality of news and approach is entirely differ. Nagerann is a very worst weekly in tamilnadu and no like and hope its news
Quote
 
 
+6 #25 ஹிட்லர் 2011-04-06 22:28
Dirty fellow சார் இந்த குருமா ராஜ் ....
Quote
 
 
+16 #24 sakthy 2011-04-06 22:09
ஒவ்வொரு செய்தி வந்த போதும் நக்கீரனுக்கு அது தவறென்று சுட்டிக் காட்டிய போதும்,அதை நக்கீரன் திருத்தவில்லை.வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. இலங்கையில் புலிகளின் தளபதி ராம் காடுகளில் இருந்து தாக்குதல் நடததுவதாகவும்,அ வருடன் நக்கீரன் நிபர் பேட்டி கண்டதாகவும் ஒரு பொய்யான செய்தி, சமீபத்தில் புலி உறுப்பினர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழக அரசியல்வாதி ஒருவரை சந்தித்ததாகவும் இன்னொரு செய்தி,போலி பாதிரி காஸ்பரின், ஈழத் தமிழர் பற்றி, பல பொய்யான தகவல்களுடன் ஒரு தொடர்,ஈழத் தமிழர்கள் சிலரை ஏமாற்றி பாதிரி வெளிநாடுகளில் பண முதலீடு,தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய சில பொய்யான தகவல்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
Quote
 
 
+3 #23 radharavi 2011-04-06 21:55
thamil ithazhiyal thurayil nakkiran ponra
nacchuruvikalum atikkum kottam enru adangum ?
Quote
 
 
+3 #22 Rangaraj rajendran 2011-04-06 21:43
Thiru.Prabakaran avargal urirodu irukkirar endru seithi veliyittu kodikkanakkil kollai adithuvittu ippothu avar irandhuvittar enru solli etthanai perin unarvukalai kollukirathu Nakkeeran engira pitthalattakkar a fraud
Quote
 
 
+12 #21 ஏசுதாஸ் 2011-04-06 21:24
2011 தேர்தலில் யார் ஆட்சி அமைக்கின்றனர். திமுக-விற்க எத்தனை இடம்? அதிமுக-விற்கு எத்தனை இடம்? சவுக்கு அவர்களே... நீங்கள் சர்வே முடிவு வெளியிட வேண்டும். எதிர்பார்க்கின் றேன்
Quote
 
 
+4 #20 bss 2011-04-06 21:21
nakkeeran padippavan muttal. ice rod is ready for guru maharaj.
Quote
 
 
+5 #19 sagamanithan 2011-04-06 21:20
என்னஙக... இது என்ன ஆட்சியோ நிர்வாகமோ தெரியவில்லை!! பொய்களின் மொத்த உருவமாக ஒரு அரசு செயல்பட்டால், மக்க்ள் நிலை தான் என்ன?? தட்டிகேட்க ஆளில்லேன்னா தம்பி தண்டப்ரசன்னன் என்பார்களே-இது தானா அது?? இஙகே கொஞ்சம் வாங்களேன்!!
http://sagamanithan.blogspot.com/
Quote
 
 
+9 #18 jaya 2011-04-06 21:19
இந்த குருமராஜ் பற்றி தான் நிறைய போட்டகிவிட்டதே.. இவனெல்லாம் ஒரு ஆள் என்று உன் நேரத்தை ஏன் வேஸ்ட் செய்கிறாய் சவுக்கு. தேர்தல் நேரம் இந்த வெண்ணையை பற்றியெல்லாம் எழுதி டைம் இ வேஸ்ட் பண்ணாதே..
Quote
 
 
+12 #17 VeththuVettu 2011-04-06 21:18
பிரபாகரன் உயிரோட இருப்பது நிஜமா? பொய்யா?
Quote
 
 
+10 #16 வள்ளி 2011-04-06 21:18
சவுக்கு அவர்களுக்கு வேண்டுகோள்...
உண்மையான சர்வே-வை வெளியீடு செய்ய வேண்டும்.
அதிமுக கூட்டணி எவ்வளவு இடம் பிடிக்கும்?
திமுக கூட்டணி எவ்வளவு இடம் பிடிக்கும்?
Quote
 
 
+6 #15 VAKKEEL, TRICHY 2011-04-06 21:13
THE ABOVE EVIDENCE REVEALS THE NAKEERAN MAGAZINE MAY BE PROSECUTED UNDER COPYRIGHTS ACT AND ALSO FORGING & CREATING FALSE NEWS TO CHEAT THE PUBLIC.

ON THE CONFESSION GIVEN BY KAMARAJ "ATTACK PONDY" MAY BE EXAMINED AND ORIGINAL ACCUSED MAY BE TRACED & THE PROSECUTION MAY REOPEN THE CASE AND FIND OUT THE REAL ACCUSED OF THE CASE

THE MAGAZINE SHOULD BE BANNED. PUBLIC SHOULD AVOID TO PURCHASE THE MAGAZINE

THIS TYPE OF MAGAZINE SHOULD BE ELIMINATED.
Quote
 
 
-53 #14 sss 2011-04-06 21:01
ஏண்டா XXXXX காமராஜை மட்டும் திட்டு நக்கீரனை திட்ட வேண்டாம். உனக்கு தேர்தல் முடிவு வரும்போது தெரியும். நக்கீரன் சர்வே எப்படி பட்டது என்று...
Quote
 
 
-58 #13 குமார் 2011-04-06 20:55
நக்கீரனை திட்டி திட்டியே வளரவேண்டும் என்று நினைக்கின்றாய்.., வாழ்த்துக்கள். அடுத்தவன் அழிவில் இருந்து வளர்வது நீண்ட நாள் நிலைக்காது....?
Quote
 
 
+16 #12 Suresh Raja 2011-04-06 20:36
ஹா ஹா ஹா... :lol:
சவுக்கு ரூம் போட்டு யோசிக்கும் போல. அதென்ன? பச்சில புடுங்கியா?? ஆபீஸ்னு கூட பாக்காம விழுந்து விழுந்து சிரிச்சேன். இந்தாளு என்ன அரிச்சந்திரனா? சரியான சொறிச்சந்திரன். அவன் கண்ண பாத்தாலே தெரியுது இவன் ஒரு காவளிபயன்னு. இவனால கோவாலும் தூக்கு போட்டுக்கப்போறா ரு... இவன சிபிஐ கூட்டிக்கிட்டு போயி ரவுண்டு விடுற நாள் ரொம்ப தூரத்துல இல்ல..
Quote
 
 
+3 #11 LL 2011-04-06 20:33
evanai thukil eda vendum
Quote
 
 
+2 #10 kanian 2011-04-06 20:26
Please write the below messagein a Post Card (50 paise) to our PM.


Mr PM, Please Enact Jan Lokpal Bill.

To,
Prime Minister Office (PMO)
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857.

Pls visit

http://indiaagainstcorruption.org/

http://indiaagainstcorruption.org/citycontacts.php

Chennai Kris Dev

Chennai Venkata Narayan Krishnan 9940066327

There is a activity in Chennai this Friday.
Quote
 
 
+4 #9 Attack Paandi 2011-04-06 20:26
Ithukku nanungatikitu nakka pudungikkitu sakalam.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 25 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1857
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week1857
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month204589
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12726708