முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மதுரையில் மையம்கொண்ட மூன்று வணங்காமுடிகள்! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 6
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 08 ஏப்ரல் 2011 22:27

 

காயம், கண்ணப்பன், ஆஸ்ரா கர்க்... இந்த மூன்று பேரும்தான்

 

 

தமிழகத்தில் இன்றைய சூழலில் யாருக்கும் தலை வணங்காத வணங்காமுடிகள்!

 

மதுரையில் அழகிரியைத் தாண்டி எதுவும் நடக்காது என்பது எழுதப்படாத விதி. ஆனால், இந்த மூவரும் அந்த விதியைத் திருத்திப் புதிய தீர்ப்புகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கடந்த வந்த பாதையைப்பற்றி சில நினைவுக் குறிப்புகள்...

சகாயம் (மதுரை மாவட்ட கலெக்டர்): புதுக்​கோட்டை அருகே உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சகாயம். இவரது ஒரே பிரச்னை - நேர்மை!

நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, தனது சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்டு, ஒட்டுமொத்த அதிகாரிகளின் கோபத்தை சம்பாதித்தார். காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாக இருந்தபோது, பெப்ஸி பாட்டிலில் குப்பை இருப்பதாக ஒரு பெரியவர் புகார் செய்ய... அந்த கம்பெனிக்கு சீல் வைத்ததும் சகாயம்தான்!

கோவையில் சென்ட்ரல் எக்ஸைஸ் டெபுடி கமிஷனராக இருந்தபோது, அவரது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, மருத்துவமனையில் சேர்த்தார். அவர் கையில் இருந்ததோ  1,000-தான். அந்த சமயத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த 650 பிராந்தி கடைகளின் லைசென்ஸ்களைப் புதுப்பிக்க,  65 லட்சங்களோடு கடைக்காரர்கள் காத்திருந்தார்கள். யாருடைய மனதாக இருந்தாலும், அந்த நேரத்தில் சபலப்படும். ஆனால், சகாயம் அதைப் பொருட்படுத்தாமல், தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி மருத்துவச் செலவை சமாளித்தார்!

''அதிகாரிகள் சில வருடங்கள் நேர்மையாக இருப்​பது பெரிய விஷயம் இல்லை. சர்வீஸில் இருந்து ஓய்வு பெறும் வரைக்கும் அந்த நேர்மையைத் தொடர வேண்டும். அப்போதுதான் நாம் நேர்மையாக இருந்த​தாக அர்த்தம். நான் நேர்மையாகத்தான் இருந்தேன். இனியும் இருப்பேன்!'' நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறார் சகாயம்!

கண்ணப்பன் (மதுரை மாநகர போலீஸ் கமிஷனர்):  தமிழில் மட்டும் இல்லை... உலகத்தில் இருக்கும் எந்த மொழியிலும் கண்ணப்பனுக்குப் பிடிக்காத வார்த்தை 'சிபாரிசு!’

நியாயமான விஷயம் என்றால், சாதாரண ஆள் வந்து புகார் கொடுத்தாலும், உடனே காரியத்தை முடித்துக் கொடுப்பார். ஆனால், உண்மைக்குப் புறம்பான விஷயத்துக்கு எங்கு இருந்து பிரஷர் வந்தாலும், 'ஸாரி... என்னால் முடியாது!’ என்று பொளேரெனச் சொல்வார்.

கண்ணப்பன் நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி-யாகப் பணி ஆற்றியபோது அவர் மகன் தினமும் சைக்கிளில் பள்ளிக்குச் செல்வார். ஒரு நாள் கண்ணப்பன் வெளியே வந்திருக்கிறார். பையனது சைக்கிள் வாசலிலேயே இருந்தது. போலீஸ் ஜீப்பைக் காணோம். விசாரித்தபோது, மகன் ஜீப்பில் போனது தெரிய வர... உடனே டிரைவரைக் கூப்பிட்டு, 'இனிமேல் இதுபோன்று நடக்கக் கூடாது’ என எச்சரித்தார்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஐ.ஜி-யாக இருந்த​போது​தான், சேலத்தில் நடந்த ஆறு கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, அவரைக் கைது செய்ய உத்தரவு போட்டது இதே கண்ணப்பன்தான்.

''சட்டத்துக்கு முன்னாடி எல்லோரும் ஒண்ணுதானே... அது அமைச்சரா இருந்தா என்னா, ஆண்டியப்பனா இருந்தா என்ன?'' என்று கேட்பாராம் கண்ணப்பன்!

ஆஸ்ரா கர்க் (மதுரை எஸ்.பி.): பஞ்சாப் பாட்டியாலாவைச் சேர்ந்த ஆஸ்ரா கர்க், எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் பட்டதாரி. ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானதும் வேலூர் மாவட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால், அவரது அதிரடி நெல்லையில்தான் தொடங்கியது. காரணம், அப்போது டி.ஐ.ஜி-யாக இருந்தவர் கண்ணப்பன்.

அவரிடம் பால பாடம் படித்ததால், நேர்மை, எளிமை, கண்டிப்பு, துணிச்சல் என அத்தனையும் கர்க்கிடம் மிளிரத் துவங்கின. இவரின் பலமே, மக்களோடு நேரடித் தொடர்புதான்.

நெல்லை மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்றபோது, மாவட்டம் முழுவதும் கந்து வட்டியும், சாதி மோதலும் தலை விரித்து ஆடின. சிலை உடைப்புகள், பழிக்குப் பழி கொலைகள் என சட்டம் - ஒழுங்கு அதல பாதாளத்தில் கிடந்தது. அதனைச் சரிப்படுத்தினார்.

காற்றாலைத் தொழில் வேகமாகப் பரவி வருவதால், பெரிய நிறுவனங்களுக்காக, அடுத்தவர்களின் சொத்துகளை அபகரிக்கும் வழக்குகள் அதிகம் உண்டு. அவை கோர்ட்டுக்குக்குப் போனால், பல ஆண்டுகள் நடக்கும். ஆனால், ஆஸ்ரா கர்க்கின் கண்டிப்புக்குப் பிறகு அத்தகைய மோசடிகள் முழுமையாக நின்றன!

''மக்களுக்குச் சேவை செய்யவே, இந்த வேலைக்கு வந்திருக்கிறோம். அதை தைரியமாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும். பூச்சாண்டி காட்டுபவர்களுக்குப் பயப்பட்டால், வேலை பார்க்க முடியாது!'' என புன்னகைப்​பார் ஆஸ்ரா கர்க்.

இந்த மூன்று பேர் மீதுதான் வழக்குத் தொடரப்போவதாக சொல்லி இருக்கிறார் அழகிரி.

கலி முத்திடுச்சு!

 

நன்றி ஜுனியர் விகடன்

 

 

 

 

 

 

Comments  

 
+1 #21 VIVEK.N 2011-05-26 23:46
A perfect Government officials.They are the example of young generations.
Quote
 
 
0 #20 Ganesan 2011-04-11 16:28
i proud of them
Quote
 
 
0 #19 ரசிகன் 2011-04-10 10:47
Heartening to read that, there are good officers too in the police force. Kudos to M/S Kannappan, Asra Garg, Sagayam. Thanks Savukku.
Quote
 
 
+1 #18 Sivaprakash 2011-04-09 20:55
Hats off real leaders..
Quote
 
 
+1 #17 Js 2011-04-09 18:21
சகாயம் உண்மையில் நேர்மையானவர்
i like this good job
Quote
 
 
-1 #16 balachandran 2011-04-09 16:44
ஆட நம் ஊர் காரர்தான ? பலே...
Quote
 
 
+5 #15 சோழன் 2011-04-09 14:54
வணக்கம் ஆப்பீசர்களே! நல்லா ஆப்பு வையுங்கோ! உங்களுக்கு எங்களின் நன்றி கலந்த வணக்கங்கள்!
Quote
 
 
+7 #14 ஜோதிடர் 2011-04-09 13:27
நண்பா, அழகிரி, என்ன மன்னிச்சிர்டா, ஒன்னோட பேஸ்மென்ட் இப்ப வீக்கா இருக்கு. ஒனக்கு டைம் இப்ப சரியில்ல. ஒனக்கு ஏழரை அடுத்த மாசத்துல இருந்து ஸ்டார்ட் ஆகுது. எழுதி வச்சிக்க. ஒனக்கு மேல திமிரு பிடிச்ச ஒரு பெண்மணியை நீ அடுத்த மாசத்துலருந்து தரிசனம் காண்பாய். வெயிட் அண்ட் ஸீ
Quote
 
 
0 #13 saravana_ask 2011-04-09 12:48
Each district in TN needs few officials like this... Kudos, good job done.
Quote
 
 
+1 #12 Aaruvathu Sinam 2011-04-09 12:43
Hats Off... 8)
Quote
 
 
+1 #11 DO NOT overinterpret 2011-04-09 12:18
We have to beleive what Savukku says. We have to beleive again in near future when he says NOO! I made a mistake these three are not good now. This site is completely supporting ADMK, under ADMK rule you cant even run this site. I dont want to say DMK is good. But ADMK is not the alternative even if you cant find one.
Quote
 
 
+1 #10 Ranjith 2011-04-09 12:13
Please try to publish weekly book.That will help you financially and that will reach more person than your website.
Quote
 
 
+5 #9 Ranjith 2011-04-09 12:01
We really proud about these peoples,god bless them.
Quote
 
 
+4 #8 karthi 2011-04-09 10:39
We are support these officers..
Quote
 
 
+4 #7 karthi 2011-04-09 10:38
We are support these officers...
Quote
 
 
+3 #6 JK.Singapore 2011-04-09 06:55
:D :-) :-| :cry: :-?
hands up to these officers.im worried because in India now tomuch corruption,poli ticians are like mafias.because im owkring 5 yrs in abroad but still now i hve no house,but MLS,Ministers,M PS running engineering college with his low salary.How can it is possible???? monthly im getting 4 lacs.
Quote
 
 
+10 #5 Gopi... 2011-04-09 05:43
நம்ப அஞ்சா நெஞ்சர் ஆப்பு மேல தானா போய் உட்கார போறார்!!
Quote
 
 
+5 #4 MUTHUKUMAR1953 2011-04-09 01:24
IPADI ORU NALA MANITHARALKAL THAN INTHA NATIRKU THEVAI MUKIYAMAGA MADURAIKU
Quote
 
 
+4 #3 Azhagiri 2011-04-09 00:44
This is one of the best article that every people of TamilNadu must read.
Quote
 
 
+3 #2 V.Jai 2011-04-08 23:16
Well done 3 roses.satyamay jai...
We will wish their sucesses in future.
Quote
 
 
+17 #1 jaya 2011-04-08 23:02
சபாஷ் சவுக்கு.. நீ உண்மையில் இந்த அதிகாரிகளை பற்றி சொன்னது அனைத்தும் மெச்சத்தகுந்தது . அதிலும் சஹாயத்தை நான் நன்கு அறிவேன். அவரது குடும்பம் பற்றியும் அறிவேன் . ஒரு ஆசிரியராக இருந்தம்யினால் நான் நன்கு அறிவேன். பெருஞ்சுனை என்ற ஊரைசெர்ந்தவர்தா ன் அவர். எளிமையானவர். நேர்மையானவர். எப்படிப்பட்ட பயமுறுத்தலுக்கு ம் அஞ்சாதவர்.உண்மையிலேயே அவர் தான் அஞ்சா நெஞ்சன், உண்மையான கிறித்தவர். அழகிரி அழுகின குஞ்சன்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 32 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2830
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week24029
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month226761
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12748880