முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இந்து நாளேட்டின் கருணாநிதி. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 17:30

 

 

இந்து பத்திரிக்கை தான் இப்படி கருணாநிதியால் அன்போடு மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று அழைக்கப் பட்டது. இந்து பத்திரிக்கைக்கு, ஒரு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. வீரப்பனைப் பற்றி புத்தகம் எழுதிய கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி ஒரு நபர் இறந்த செய்தியை மூன்று நாள் கழித்து, அந்த நபரின் வீட்டுக்கே தெரியப் படுத்தும் தந்தியைப் போன்றது என்று இந்து நாளிதழை வர்ணித்திருந்தார்.

 The-Hindu

இந்து நாளேடு அப்படி சில நேரங்களில் செய்திகளை தாமதாக வெளியிட்டாலும், இந்து நாளேட்டில் ஒரு செய்தி வந்து விட்டால், அந்தச் செய்தி 100% உண்மை என்று எடுத்துக் கொள்ளும் அளவுக்கு, அந்த நாளிதழுக்கு ஒரு நம்பகத் தன்மை உண்டு. படித்த வர்க்கத்தின் மத்தியில் இந்த நாளிதழுக்கு, மிகுந்த ஆதரவு உண்டு.

 

ஈழப் போரின் போது, இந்த நாளிதழ் எடுத்த நிலைபாடுகள், நேரடியான தமிழின விரோத நிலைபாடு. இந்த நாளிதழின் ஆசிரியர், என்.ராமின் புலிகள் விரோத கொள்கையின் காரணமாகவே, பல்வேறு சமயங்களில் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் நிலைபாடுகளை எடுத்தது. இவ்வாறு தொடர்ச்சியாக இந்து எடுத்த தமிழின விரோத நிலைபாடுகளின் காரணமாகவே, சிங்கள அரசு, என்.ராமுக்கு லங்கா ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது.

 

யார் இந்த ராம் ? இந்த ராம் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்பவர். இடது சாரிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் தொடர்பான செய்திகளுக்கு இந்துவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படுகின்றன என்பது உண்மையே. ஆனாலும் தன்னை கம்யூனிஸ்ட், அழைத்துக் கொள்ளும் இந்த லங்கா ரத்னா, செய்து கொண்டிருக்கும் காரியங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 Nram_567798f

 

அதற்கு முன், இந்து பத்திரிக்கையின் வரலாறு என்ன என்பதைப் பார்ப்போம்,

20 செப்டம்பர் 1878ல் இந்து பத்திரிக்கையின் முதல் இதழ் வெளிவருகிறது. தஞ்சை மாவட்டம், திருவையாற்றைச் சேர்ந்த சுப்ரமண்ய அய்யர் வீரராகாவச்சாரியார், டிடி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், கேசவராவ் பந்துலு, மற்றும் சுப்பாராவ் பந்துலு ஆகியோராடு சேர்ந்து, ஒரு ரூபாய் 12 அணா முதலீட்டில் தொடங்கப் பட்டது.

 

பின்னாளில் மற்றவர்கள் விலகிக் கொள்ள, வீரராகவாச்சாரியார் மற்றும் சுப்ரமண்ய அய்யங்கார் மட்டும் இந்துவை தொடர்ந்து நடத்தினர்.

 

முதலில் வார இதழாக ஒவ்வொரு புதனன்றும், மாலையில் வெளி வந்தது. சென்னை மின்ட் தெருவில் தான் அச்சடிக்கப் பட்டது. வாரத்திற்கு 80 காப்பிகள் மட்டுமே அடிக்கப் பட்டன. 1 அக்டோபர் 1883 முதல், வாரத்திற்கு மூன்று இதழ்கள் வெளி வந்தது.   அப்போது இந்த பேப்பரின் சைஸ், இப்போது வரும் பேப்பரில் கால் பாகம். 1 ஏப்ரல் 1889 முதல், நாளிதழாக வெளி வரத் தொடங்கியது.

 

அக்டோபர் 1898ல் இந்து நாளிதழின் சர்குலேஷன் பெருமளவில் குறையவும், சுப்ரமணிய அய்யர் விலகிக் கொள்கிறார். பிறகு சில நாள், வீரராகவாச்சாரியார் மட்டும் நாளிதழை தொடர்ந்து நடத்தகிறார். அவருக்கும் கட்டுப்படயாகாததால், இந்துவை விற்க முடிவெடுக்கிறார்.

 

அப்போது, இந்த பத்திரிக்கையின் சட்ட ஆலோசகராக இருந்த, கும்பகோணத்தைச் சேர்ந்த கஸ்தூரி ரங்க ஐயங்கார், இந்து நாளிதழை விலை கொடுத்து வாங்குகிறார்.

 

இந்து நாளிதழ் கஸ்தூரி & சன்ஸ் என்ற பெயரில், ஜி.நரசிம்மன், எஸ்.பார்த்தசாரதி, எஸ்.ரங்கராஜன், ஜி.கஸ்தூரி, ஆகியோரால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது.

 

எண்பதுகளில், இவர்களின் வாரிசுகள் பொறுப்பேற்கிறார்கள். நரசிம்மனின் பிள்ளைகள், என்.ராம், என்.ரவி மற்றும் என்.முரளி.   பார்த்தசாரதியின் வாரிசுகள், மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், மற்றும் நளினி கிருஷ்ணன்.   ரங்கராஜனின் வாரிசுகள், ரமேஷ் ரங்கராஜன், விஜய அருண் மற்றும், அகிலா அய்யங்கார். கஸ்தூரியின் வாரிசுகள், கே.பாலாஜி, கே.வேணுகோபால் மற்றும், லட்சுமி ஸ்ரீநாத். (அது எப்டி கரெக்டா எல்லாரும் மூணு பிள்ளை பெத்துருக்காங்க ?)

 

இப்போது இந்த வாரிசுகளுக்குள் உள் குத்து உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வாரிசு மோதலில், முக்கிய பங்கை வகிப்பவர், என்.ராம். இவரை இந்து நாளேட்டின் கருணாநிதி என்று தாராளமாக வர்ணிக்கலாம். ஏனென்றால், 87 வயதிலும், அடுத்த முதல்வர் நான் தான் என்று பெற்ற பிள்ளைகளுக்குக் கூட வழி விடாமல், அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருப்பது போலத்தான் என்.ராமும் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நாளேட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60.   ஆனால், என்.ராம் மட்டும், 65 வயது வரை ஆசிரியராக தொடர்ந்தார்.   நிர்வாகக் குழுவில் இதற்குத் தகுந்தார்ப் போல, விதிகளை மாற்றிக் கொண்டார்.

 

இப்போது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால், 65 வயது முடிந்தும் கூட, ராம் ஓய்வு பெற மறுப்பதுதான்.   என்.ராம், இந்து நாளேட்டின் கருணாநிதி தானே ?

 

இப்போது ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் என்.ரவியை அந்தப் பதவியில் இருந்து நீக்க ராம் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இந்த முயற்சியை ஒட்டி, ராமின் சகோதரரும், இந்து பத்திரிக்கையின் மற்றொரு ஆசிரியருமான ரவி, இந்து பத்திரிக்கையின் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இதோ.

 c037ec24-38f6-11df-a4a6-000b5dabf613

அன்பார்ந்த சக பணியாளர்களே,

நாம் இப்போது நுழையும் அடுத்த விநாடியிலிருந்து, மிக நீண்டதொரு போராட்டமும், பிரச்சினையும் மிகுந்த ஒரு தருவாயில் நுழையப் போகும் சூழலில், உங்களின் புரிதலை வேண்டி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

மோசமான நடத்தையின் காரணமாக என்னைக் கவலையடையச் செய்யும் வகையில், என்.ராம் மற்றும் சில நிர்வாக இயக்குநர்கள் கடந்த 18 ஏப்ரல் 2011 அன்று கூடி, என்னை ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, 2004ல் இந்துவில் சேர்ந்த சித்தார்த் வரதராஜனை ஆசிரியராக்க முடிவெடுத்தள்ளனர்.

  

இந்தப் பத்திரிக்கையில் நிருபராகச் சேர்ந்த 1972ம் ஆண்டு முதல், நான் பல ஆண்டுகளாக, அனைவரின் நிறைவுக்கும் ஏற்ற வகையில் பணியாற்றி வருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நாளிதழின் முன்னேற்றத்திற்காக, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் பணியாற்நி வருவதை நீங்கள் அறிவீர்கள். 1991ம் ஆண்டு நான் பொறுப்பேற்றதிலிருந்து, சென்னையை மையமாகக் கொண்டு வெளியாகி வந்த இந்த நாளிதழை, மாநிலத்தின் பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்ததோடு, ஒரே பக்கமாக இருந்த உள்ளுர் செய்திகளை நான்கு பக்கங்களாக மாற்றியதோடு, தேசிய அளவுச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு கவர்ச்சிகரமான பகுதிகளை அறிமுகப் படுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.   வாசகர்களின் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி, வாசகர்களுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி இச்செய்தித்தாளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதையும் நீங்கள் அறிவீர்கள்.   செய்தித்தாளின் நேர்மையான கொள்கை மாறாமல், பல்வேறு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள், நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, அச்சமின்றி இச்செய்தித்தாள் செயல்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.

 

பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், நான் பொறுப்பேற்ற, ஜனவரி 1991ல் 4,52,918ஆக இருந்த இந்நாளேட்டின் விற்பனை, ஜுன் 2003 அன்று உள்ளபடி 9,33,458ஆக உயர்ந்துள்ளது.   குறிப்பாகச் சொன்னால், 4,80,540 காப்பிகள் (106%) விற்பனை உயர்ந்துள்ளது.   ஆனால், சமீபத்தில், இந்துஸ்தான் டைம்ஸுக்கு நிகராக இருந்த, இந்து பத்திரிக்கையின் விற்பனை, தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது.   சமீபத்திய சந்தை ஆய்வின் படி, வாசகர்கள், இந்து நாளேட்டின் மீது கோபத்தில் உள்ளதாகவும், பத்திரிக்கையில் உள்ள செய்திகள், ஆர்வக் குறைவை ஏற்படுத்துவதாகவும், இடதுசாரி அரசியலின் மீது, காழ்ப்புணர்வோடு இருப்பதாகவும் வாசகர்கள் கருதுவதாக தெரிய வந்துள்ளது

 blog

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 4 மே 2010 அன்று 65 வயதை அடைந்த ராம், தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி, நான் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.   ஆனால், தீய எண்ணத்தோடு, ராம் இந்த ஒப்பந்தத்தை மீறியதால், தலைமை ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்கும் விவகாரம் அப்படியே நின்று போயுள்ளது.

 

ராமின் நம்பிக்கை துரோகத்தின் ஒரு பகுதியாக, இயக்குநர்கள் குழுமத்திலிருந்த என்.முரளியின் அதிகாரங்களை பறித்து அவரை நீக்கியதை, கம்பெனி லா போர்டு (தீர்ப்பாயம்) ரத்து செய்ததோடு, மோசமான, நியாயமற்ற நடவடிக்கை என்றும் தீர்ப்பளித்துள்ளது.   இவ்வாறு தீர்ப்பு வந்த நான்கே மாதங்களுக்குள், அதே போன்ற நியாயமற்ற மற்றொரு நம்பிக்கை துரோகத்தின் வடிவாக ராமும், அவரது குழுவைச் சேர்ந்த மற்ற இயக்குநர் குழு உறுப்பினர்களும், இந்நாளேட்டின் பாரம்பரியத்திற்கு எதிராகவும், கம்பெனி லா போர்டின் தீர்ப்புக்கு எதிராகவும், நான் ஆசிரியர் பொறுப்பேற்பதை தடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியான ஓய்வு தேதிக்கு ஒரு ஆண்டு கழித்தும், கம்பென் லா போர்டின் தீர்ப்புக்கு பிறகு, பதவியில் தொடர எவ்வித அருகதையும் இல்லாத ராம், ஐம்பதுகளில் இருக்கும் மற்ற ஆசிரியர் குழு உறுப்பினர்களை, அழிக்கும் உத்தேசத்தோடு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூட ஆசிரியர் பொறுப்புக்கு வரக் கூடாது என்ற நோக்கில் ஒரு தீய திட்டத்தை இயற்றியுள்ளார்.   அடுத்து யார் ஆசிரியர் என்பதை முடிவு செய்யும் திட்டத்திற்கு பதிலாக, ஒட்டு மொத்தமாக, எல்லோரையும் அழிக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார்.   திடீரென்று, விதிகளை மாற்றி இந்து நாளிதழின் உரிமை வேறு, நிர்வாகம் வேறு, என்று பிரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, என்னோடு சேர்த்து, இணை ஆசிரியர் நிர்மலா லட்சுமணன் மற்றும் மற்றொரு ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி ஆகியோரும் பதவி விலக நிர்பந்திக்கப் படும் படி திட்டமிடப் பட்டுள்ளது.

 

இது போல பதவி நீக்கம் செய்வதைத் தவிர்த்து, 2003ல் தலைமை ஆசிரியராக பொறுப் பேற்றதிலிருந்து, ஆசிரியர் குழுவின் அமைப்பை மாற்றும் பல்வேறு திட்டங்களை எங்கள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி வந்துள்ளார்.

 

ஆசிரியர் குழுவின் விவாதங்களின் போது, சில அரசியல் சக்திகளுக்கு தேவையற்ற ஆதரவை தருவதும், சில இடது சாரித் தலைவர்களுக்கு கூடுதலாக கவரேஜ் தருவதும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராசாவுக்காக வக்காலத்து வாங்கியதும், இதே போல ஊழல் குற்றச் சாட்டுகளில் சம்பந்தப் பட்ட, சுரேஷ் கல்மாடி அஷோக் சவாண் மற்றும் எடியூரப்பாவை பதவி விலக வற்புறுத்திய அதே வேளையில் இதே போல ஊழலில் ஈடுபட்டு, ஏராளமான ஆதாரங்கள் குவிந்தும், ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லாமல் தவிர்த்தது, சீன நாட்டுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது, சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது, இவை எல்லாவற்றையும் விட எந்த தலைமை ஆசிரியிரும் செய்யாத வகையில், என்.ராம் ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்களின் படங்களை பத்திரிக்கையில் பிரதானமாக வெளியிட்டு தனக்கே விளம்பரம் தேடிக் கொண்டது, ஆகிய செயல்கள், பன்னாட்டு முதலாளிகள் நடத்தும் நாளிதழ்களே வெட்கப் படக் கூடிய செயல்களாகும்.

 325

இந்த நாளேடானது, மற்ற எல்லா விஷயங்களையும் விட, கொள்கையில் நேர்மையையே தனது முக்கிய குறிக்கோளாய் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், சமீப காலமாக, இந்தக் கொள்கையையே கேள்விக்குறியாக்கும் வகையில், விளம்பரம் மூலமாக பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடும் அளவுக்கு இந்து நாளேடு தரம் தாழ்ந்து விட்டது.   விளம்பரத்துக்கும், செய்திகளுக்கும் இடையே இருந்து வந்த மதில் சுவரை, மதில் சுவருக்கு பதிலாக ஒரு நூலாக மாற்றும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.

 

இது போல ஒரு தந்திரமான உடன்பாட்டின் வெளிப்பாடாக, 22 மே 2010 அன்று, ராசாவின் லைசென்ஸ் கொடுத்த செயல்களை நியாயப் படுத்திய ஒரு பேட்டி வெளி வந்தது. இந்தப் பேட்டியை பிரதம மந்திரி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தப் பேட்டிக்கு கைமாறாக, அவசர அவசரமாக அதே நாளன்று, ராசாவால், தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளிக்கப் பட்ட தொலைத் தொடர்புத் துறையின் முழுப் பக்க வண்ண விளம்பரம் வெளியிடப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இது போன்ற நடவடிக்கைகளை தொடர்வதற்காகவே, ஆசிரியர் குழுவிற்கு இருக்கும் சுதந்திரத்தை மாற்றி, நாளிதழின் ஆசிரியர், வணிக பிரதிநிதிகள் உள்ள இயக்குநர் குழு சொல்வதைக் கேட்டு செயல்படும் கைப்பாவையாக ஆக்கும் வகையில், விதிகளை மாற்ற, முயற்சி நடைபெற்று வருகிறது. இந்துவின் மதிப்பீடு மற்றும் செயல்பாடுகளின் (Editorial function) மீது தொடுக்கப் பட்ட இது போன்ற நடவடிக்கைகள் இந்து நாளேட்டின் ஆன்மாவின் மீத தொடுக்கப் பட்ட தாக்குதலாகும்.   இது போல மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டு விட்டு, இந்துவின் செய்திக் கொள்கை மிக அதிக மதிப்பீடுகளை கொண்டது என்று இப்போது அறிவித்திருப்பது வெற்று கோஷமேயன்றி வேறல்ல.

 262661766_bb9fc5bd16

 

அனைத்து வகையான முதலீட்டாளர்களும் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரத் துடிக்கும் நேரத்திலும், ஊடகங்கள், பலப் பல கவர்சிகரமான விஷயங்களைக் கொண்டு வந்து வாசகர்களை கவர போட்டி போடும் நேரத்தில், இந்துவுக்கு இந்த நெருக்கடி, வந்துள்ளது.   பத்திரிக்கையாளர்களின் ஒரு அங்கம் என்ற முறையில், நீங்கள் அனைவரும் இந்து பத்திரிக்கையின் வளர்ச்சிக்கும், கடும் போட்டி நிலவும் ஒரு சூழலில் இந்துவின் கொள்கையை விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறீர்கள்.   அரை குறை உண்மைகளோடு பரவும் வதந்திகளைத் தடுக்கும் பொருட்டு, என்ன நடக்கிறது என்ற உண்மைகள், இயக்குநர் குழுவின் அறையோடு நின்று விடாமல், இந்தப் பத்திரிக்கையின் ஒரு அங்கம் என்ற முறையில் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.

 

இந்த உத்வேகத்திலேயே நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.   மேலும், இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று உறுதியையும் நான் உங்களுக்கு அளிக்கிறேன். நம் அனைவருக்கும் மிகவும் நெருக்கமான, இந்துவின் நேர்மையான கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற இந்தப் போராட்டத்தில், உங்களின் புரிதலையும், ஆதரவையும் வேண்டியே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

 

என்.ராம் என்ற போலி கம்யூனிஸ்ட்டின் உண்மையான முகம் தெரிகிறதா ?   தன்னுடைய சொந்த நலன் காக்கப் பட வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்.

 

ராமின் இந்த முடிவை எதிர்த்து, மீண்டும் நீதிமன்றத்தை அணுக இருப்பதாக, ரவி தலைமையிலான டீம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 2280672661_f4dc889f02_b

இந்து நாளேட்டின் 50 பங்குதாரர்களின் கூட்டம் மே 20 அன்று, கூட்டப் பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

உரிமை உள்ள மற்றவர்களை வீழ்த்தி, இந்து பத்திரிக்கையை சட்ட விரோதமாக கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே ராம், 2006 முதலாகவே, கருணாநிதியின் கைப்பாவையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார் என்பதை, அவரது சொந்தத் தம்பி எழுதிய கடிதம் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

ராசாவைக் காப்பாற்றுவதற்காக, ராசாவின் பேட்டியை வெளியிட்டதோடு, ராசாவுக்கும் மன்மோகனுக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தையும் முழுமையாக வெளியிட்டு, அனைத்து விவகாரங்களும், மன்மோகனுக்கு தெரிவிக்கப் பட்ட பின்னரே நடந்தது போலவும், செய்தி வெளியிட்டது என்.ராம் தான். 66 கோடி ரூபாய் ஊழலான போபர்ஸ் ஊழலை தொடர்ந்து வெளியிட்டு, ஒரு அராசாங்கத்தையே கவிழ்த்த ஒரு நாளேட்டை தனது சொந்த நலனுக்காக, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலை மறைக்க பயன்படுத்துகிறார் என்றால், ராசாவை தலித் இனத்தின் “தகத்தகாய கதிரவன்” என்று அழைத்த கருணாநிதியை விட மோசமானவர் அல்லவா ?   இந்து என்.ராம் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் வலம் வரும், ஒரு மிக மோசமான தீய சக்தி என்றே சவுக்கு பார்க்கிறது.

hindu_ombudsman_letter_240411

ராமின் சதித் திட்டங்களை முறியடித்து, என்.ரவி, மாலினி பார்த்தசாரதி உள்ளிட்டோர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

Comments  

 
+2 #32 pirabukannan 2011-04-26 14:22
The saddest part is that many people equate the views of The Hindu with that of Tamil Brahmins. And towards this, N Ram has brought great dis-respect to the Tamil Brahmins...
// Well said. Tamil brahmins should protest in front of hindu for creating rift between them and their tamil brothers.
Quote
 
 
+1 #31 Kannan DK 2011-04-26 00:48
வெகு விரைவில் www.thehindumatrimonial.com துவங்க உள்ளேன். இது அவங்களுக்கு ஆப்பா, இல்ல எனக்கு ஆப்பா!
Quote
 
 
+5 #30 savuku fan 2011-04-25 20:51
Hope this useless english paper for Tamilnadu state dies soon. :lol:
Quote
 
 
+3 #29 anniyan 2011-04-25 18:44
Quoting நந்தன்:
அன்னியன்//
நீ கண்டிப்பாக கம்யுனிஸ்டுக்கு அன்னியன் தான்.
கம்யுனிசம் என்றால் என்னவென்று தெரியவில்லை என்றால் வாய்யை பொத்திக்கிட்டு இருக்கவேண்டும். .

உங்களுக்கு இன்னும் புரியவே ஆரம்பிக்கல சார்..
என்னோட எதியோப்பிய நீக்ரோ நண்பர் சொன்னார்: "அண்ணே, கம்யூனிஸ்டுங்க எங்க ஊர்ல இருக்கற ஏழை விவசாயிங்களை எல்லாரோட நிலத்தைப் புடிங்கிகிட்டு இந்திய ஜமீன்தாரர்கள் கிட்ட குத்தகைக்கு விட்டுட்டாங்க அண்ணே.. நாங்க எல்லாம் விவசாயம் பண்ணத் தெரியாத சோம்பேறிங்களாம் " அப்டீன்னார்..

ரத்திரிலேர்ந்து காத்தால ஏழு வரைக்கும் கண்டவுடன் சுடும் ஊரடங்கு உத்தரவாம்.. சும்மா " கம்யூனிஸ்டு இல்லையோன்னு சந்தேகமா இருக்கு" ங்கரதாலையே கொலை செய்து லாரி புல்லா பிரேதங்களை அள்ளிட்டு போவாங்களாம்.. என் நண்பனோட அப்பா கம்யூனிஸ்ட்டுங் கரதுனால விட்டுடான்களாம் .. அவங்க அப்பா ஏர்போர்ட் செக்யூரிட்டிங்க றதுனால காத்தால 4 மணிக்கு பிணக்குவியல பாத்துட்டே கவர்மென்ட் வண்டில போவாராம்..

இந்தக் கொலைகள் சீனா ( 60 லட்சம் விவசாயிகள்), ரஷ்யா (40 லட்சம் விவசாயிகள், கம்யூனிசத்தை எதிர்த்து ஜோக் சொன்னதாக கைது செய்யப்பட்டோர் 48 ஆயிரம் ) , கம்போடியா (14 லட்சம்), now Srilanka ....... என் சார் இன்னும் வெறி அடங்கல ?
Quote
 
 
+6 #28 சீனு 2011-04-25 17:00
இந்து ராம் இரண்டாவதாக கல்யாணம் செய்துகொண்டது சூசன் என்ற ஒரு வெளிநாட்டு பெண்மனியை. அவர் தான் இந்து-வை இப்போது கட்டுப்படுத்துவ தாக கேள்விப்பட்டிரு க்கிறேன். உதா, NDTV-Hindu-வில் முக்கியமாக முடிவெடுப்பது, ஜெனிஃப்பர் அருள். மேலும் அந்த சேனலில் கிருத்துவர்கள் மட்டுமே பெரும்பாண்மையாக ரிப்போர்டர்களாக உள்ளனர்.
Quote
 
 
+8 #27 Suresh Raja 2011-04-25 16:57
இந்து நாளேடு முன்பைப்போல நிச்சயமாக இல்லை. என் கல்லூரி நாள் முதல் படித்து வந்தேன். ஈழப்போரில் இவர்களின் நிலைப்பாடு என்னை இந்த நாளிதழ் படிப்பதை நிறுத்த வைத்து விட்டது. யார் பொறுப்புக்கு வந்தாலும் உண்மையை மட்டும் மக்களுக்கு சொல்பவர்களாக இருக்க வேண்டும். காவளிப்பசங்க இருக்குற வரைக்கும் நான் அந்த கருமத்த படிக்கப்போவதில் லை.
Quote
 
 
+3 #26 Usha 2011-04-25 16:41
Hi savuku
Even Mr Ravi is not a very good person. In fact, he & malini are the ones who started publishing pro-Left news and made money and the circulation started sliding. They brought Ram to the helm of affairs and the cure proved to be worse than disease. Crores of readers' interests are affected by this petty family politics! We want to see that Hindu with its pristine language & accuracy of facts! :(
Quote
 
 
+4 #25 நந்தன் 2011-04-25 16:24
அன்னியன்//
நீ கண்டிப்பாக கம்யுனிஸ்டுக்கு அன்னியன் தான்.
ஆனால் ராம் போன்ற வியாபார பத்திரிக்கையாளர ்களை எல்லாம் கம்யுனிஸ்ட் என்று சொல்ல எப்படிதான் முடியுதோ! கம்யுனிஸ்ட் என்று சொல்பவன் குறைந்தபட்சம் ஒரு கம்யுனிஸ்ட் அமைப்பில் வேலை செய்பவராக இருக்கவேண்டும். இந்த ராம் எந்த அமைப்பில் வேலை செய்கிறார் என்று சவுக்கு சொல்லவேண்டும். கம்யுனிசம் என்றால் என்னவென்று தெரியவில்லை என்றால் வாய்யை பொத்திக்கிட்டு இருக்கவேண்டும். இந்து ராம் போன்ற லாபவெறி கொண்ட மாமா வேலை பார்ப்பவனையெல்ல ாம் கம்யுனிஸ்ட்,போல ி கம்யுனிஸ்ட் என்று சொல்லி உங்கள் மனசில் இருக்கும் கம்யுனிச எதிர்ப்பு அரசியலை காண்பிக்காதீர்க ள்.
Quote
 
 
+1 #24 நந்தன் 2011-04-25 16:10
//மனிதன் சுதந்திரமாக முழு உரிமையோடு, வாழும் உரிமையை எந்த சிஸ்டெம் அனுமதிக்கிறதோ, அந்த சிஸ்டமே சிறந்தது. அந்த சிஸ்டெத்தை கம்யூனிசம் அனுமதிக்காது என்றால், கம்யூனிசமும் தேவையில்லை. மனிதனே, எல்லா சித்தாந்தத்தையு ம் விட உயர்ந்தவன்.//
என்ன சவுக்கு கம்யுனிசம் எல்லாம் பேசரிங்க! மனிதனைவிட எந்த சிந்தாந்தமும் உயர்ந்தது இல்லை என்று சொல்லுகிற நீ எவன் மனிதனாக இருக்கிறான் என்றும் சொல்லனும்.சக மனிதனை சுரண்டி தன் வயிற்றை நிரப்ப நினைக்கும் எல்லா பணக்கார மனிதனும்,அதிகார நாய்களும் மனிதனா?
Quote
 
 
+6 #23 தமிழன்01 2011-04-25 16:08
//ராமின் சதித் திட்டங்களை முறியடித்து, என்.ரவி, மாலினி பார்த்தசாரதி உள்ளிட்டோர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது//

சவுக்குவிற்கு நுண்ணரசியல் பிடிபடவில்லையோ என்று வாசகர்களாகிய எங்களுக்கு சில சமயம் சந்தேகம் வருகிறது.
மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எவரும் ஹிந்து பத்திரிக்கையில் உள்ள எவரையும் வாழ்த்தவே கூடாது.
ஹிந்து பத்திரிக்கையின் தமிழர் விரோதபோக்கு மனப்பான்மை ராமிற்கு மட்டும் அல்ல அங்குவேலையை செய்யும் அனைவருக்கும் உண்டு.
Quote
 
 
+1 #22 purush1 2011-04-25 15:52
Ram seems bent on taking all the editorial directors — most are in their 50s — into retirement with him, with a scorched earth policy to ensure that no one in the family succeeds him…In a sudden change of rules and under the specious plea of separating ownership from management, along with my removal as editor, Nirmala Lakshman is to be forced to “step down” as joint editor and Malini Parthasarathy as executive editor.”

Ravi’s letter also alleged there have been distortions creeping into the “editorial framework” of the paper. “Among the issues that I have raised with the other directors during the discussions in the Board and outside are: the unmerited coverage of certain political favourites on specific directions; excessive coverage of the activities of the Left and some of its leaders; for reasons that are bound to emerge sooner rather than later, turning the newspaper into an apologist for A Raja (former Union telecom minister, now in jail) through the 2G scam coverage, remaining deafeningly silent on his resignation in the face of mounting evidence even when demanding the resignation of Suresh Kalmadi, Ashok Chavan and Yeddyurappa in similar circumstances; pronounced pro-China tilt, blacking out or downplaying any news that is less than complimentary to the Chinese Communist regime,”
Quote
 
 
+12 #21 பாரதி 2011-04-25 09:27
எப்படியோ இந்து ஒழிந்தால் சரி......
Quote
 
 
+13 #20 S. Sankarapandi 2011-04-25 08:53
//ராமின் சதித் திட்டங்களை முறியடித்து, என்.ரவி, மாலினி பார்த்தசாரதி உள்ளிட்டோர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது//

அன்புள்ள சவுக்கு,

அயோக்கியத்தனத்த ின் மொத்த உருவம் இராமைப் பற்றிய கருத்துகள் முற்றிலும் சரி. ஆனால் ரவி, மாலினி போன்றவர்கள் எந்தவிதத்திலும் மாறுபட்டவர்கள் அல்லர். இரவி எழுதிய கடிதத்தையே பாருங்கள். ஸ்பெக்ட்ரம் விதய்த்தில் இராமின் நாணயமற்ற அணுகுமுறையைக் குறிப்பிடும் இரவி கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இலங்கை அரசின் பொய்களை நிரப்பி இலங்காரத்னாவாகச ் செயல்பட்டு வருவதை இலேசாகக் கூட கோடிட்டுக் காட்டவில்லை. அதேபோல் இலங்கை அரசு உச்சக்கட்ட போரில் அப்பாவித்தமிழர் களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழ்நாட்டில் கண்டனங்கள் வலுத்துவிடக்கூட ாது என்பதற்காகவே மாலின் தீட்டிய விசத்தலையங்கத்த ைப் படித்துப் பாருங்கள்.
http://www.hindu.com/2008/10/14/stories/2008101454490800.htm

நன்றி - சொ.சங்கரபாண்டி
Quote
 
 
0 #19 kps5755 2011-04-25 08:26
Communism is the ultimate end for human social life. Commune means society. The political system for the society is communism. The person who calling himself communist and does things against the uplift of the poor are traitors. Traitors are the first enemy to the poor people.Those who could not compete with other undemocratic parties easily find place under the guise of communist but with out change in their basic qualities. All the black sheep should be identified and exposed.
Quote
 
 
+3 #18 விகடகவி 2011-04-25 04:53
மக்களை ஏழைகளாகவும் கூலி தொழிலாளிகளாகவும ் வைத்திருப்பதே கம்யூனிஸ சித்தாந்தம். அப்போதானே அவுங்க அரசியல் செய்ய முடியும்.
Quote
 
 
+2 #17 Ranganath 2011-04-25 02:50
Cannt just imagine that Ram stoops to this level.
Pray God for survival of Hindu's originality and unbiased publishing.
Quote
 
 
+7 #16 veerasamy 2011-04-25 00:44
I stopped reading THE HINDU starting Jan 2009 because his support to the genocidal SriLanka govt.I do not even click open the news paper website to avoid increasing no of hit to the website
Quote
 
 
+5 #15 anniyan 2011-04-25 00:44
என்னையும் மதித்து கருத்தளித்த சவுக்கு அவர்களே,
உங்களுக்கு வணக்கம்..

நீங்கள் சொல்ல முயற்சிப்பது கம்யூனிசம் அல்ல..சோஷலிச ஜனநாயகம் என்று வேண்டுமானால் அதைக் கொள்ளலாம்.. "பணம் ஏறியோர் இங்கு இல்லை" "தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" பாரதியார் சோஷலிச ஜனநாயகத்துக்கு ஒரு உதாரணம்..

கம்யூனிசம் என்றால் இதுதான்: கிட்டத்தட்ட பிடிக்காதவர்களை ஒழிப்பதுதான்.. நான் எதியோப்பியாவை பற்றி எழுதுகிறேன் .. நீங்கள் பிரசுரம் செய்வீர்களா? எனக்கு ஒரு நீக்ரோ நண்பன் இருக்கிறான்.. அவன் என்னிடம் சொன்னான் " எதியோப்பியா கம்யூனிஸ்ட்கள் தினமும் விடிகாலைகளில் ஜனநாயகத்தில் விருப்பமுடையவர் கள் என்று சந்தேகப்படுபவர் களை கொலை செய்து லாரிகளில் அள்ளி எடுத்து செல்வார்கள்.. என் காதலியையும் கொன்றனர்.. நீ இப்போது உண்மைகள் இலங்கையில் கொலையாவது பற்றி பேசுவது இதையே நினைவுபடுத்துகி றது..இப்போது எங்கள் நாட்டில் உள்ள ஆயிரம் சதுர மைல் நிலங்களை இந்திய ஜமீன்தரர்களுக்க ு குத்தகை விட்டிரிக்கிறது கம்யூனிச அரசு "

என்னை எழுத அனுமதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்களேன்? மொத்தம் எத்தனை ஐ.ஏ.எஸ் இடங்கள்? பார்ப்பனர் எவ்வளவு இடத்தைப் பிடித்துள்ளனர்?


Quoting சவுக்கு:
அன்பார்ந்த அந்நியன் அவர்களுக்கு, சவுக்கு உங்களோடு கடுமையாக முரண்படுகிறது. கம்யூனிஸ்ட் என்றால், அது சிபிஐ அல்லது, சிபிஎம் உறுப்பினர் என்று மட்டும் பொருள் ஆகாது. உலகில் ஏழ்மை அறவே ஒழிக்கப் பட வேண்டும் என்று நினைப்பவன் அத்தனை பேரும் கம்யூனிஸ்ட் தான். ஒரு வகையில் நீங்களும் கம்யூனிஸ்ட் தான். ஒரு கம்யூனிஸ்ட் என்பவன், சாதி வேறுபாடு பார்ககாமல், பார்ப்பனர் ஏழையாக இருந்தாலும், அவன் ஏழ்மையும் ஒழிக்கப் பட வேண்டும் என்று பாடு பட வேண்டும். அப்படிப் பட்டவன் தான் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப் பட வேண்டும். கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டு, சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுவதை சவுக்கு ஒரு போதும், ஆதரிக்காது. மனிதன் சுதந்திரமாக முழு உரிமையோடு, வாழும் உரிமையை எந்த சிஸ்டெம் அனுமதிக்கிறதோ, அந்த சிஸ்டமே சிறந்தது. அந்த சிஸ்டெத்தை கம்யூனிசம் அனுமதிக்காது என்றால், கம்யூனிசமும் தேவையில்லை. மனிதனே, எல்லா சித்தாந்தத்தையு ம் விட உயர்ந்தவன்.
Quote
 
 
+9 #14 madurai Raja 2011-04-25 00:32
Dear Savukku, I used to say my friends that the Hindu paper nowadays looks like theEnglish Murasoli.Thanks for bringing out this article.
Quote
 
 
+20 #13 பாமரன் 2011-04-24 23:41
திரு.ராம் அவர்கள் திரு.தயாநிதி மாறன் அவர்களின் மனைவி மூலம் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தம். அப்படி இருக்கையில் திரு.ராம் அவர்கள் எப்படி திமுக மற்றும் சார்ந்த வகையறாக்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடுவார்?.மேலும் செல்வி. ஜெயலலிதா அவர்களும் 2001 - 2006 ஆட்சியில் இந்து நாளிதழுக்கு பல நெருக்கடிகள் கொடுத்தார். அதோடு நிற்காமல் டைம்ஸ் அப் இந்தியா நாளிதழை சென்னையில் தொடங்க வைத்து இந்து நாளிதழுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்தினர். அதனால் திரு.ராம் அவர்கள் திமுக அனுதாபியாக தான் இருப்பார்.

இவருக்கு NDTVயிலும் பங்கு உண்டு. திமுக அரசுக்கு எதிராக அனைத்து வட இந்திய மீடியாக்கள் செயல்பட்டாலும் NDTV மட்டும் திமுக மீது தனி பாசம் காட்டும்.

பொறுத்திருங்கள் . இந்த சண்டையில் தலையை நுழைத்து மாறன் சகோதரர்கள் இந்து நாளிதழையும் வாங்கி தங்கள் சொத்தாக்கி கொள்வார்கள்.
Quote
 
 
+6 #12 K Raman 2011-04-24 22:59
Quoting aha:
U can accuse Ram of political bias.He never wrote against Karunanidhi.But nature of LTTE is known in TN.Do you support their killings of Tamil?Do you support sending pregnant woman as suicide bombers?Dont they contribute to the worse situation Tamils are facing now??


Dear Aha (do I know you from Time poll?) : Why are you bringing LTTE into this? I agree that N Ram opposed LTTE very viciously. But that does not imply agreeing with Rajapakse and propogating his views!

Do you remember the interview of Rajapakse carried by 'The Hindu' just after the May 18 massacre? I clearly saw that as an effort of Rajapakse to camouflage the genocide and N Ram did not have any problem in acting as the courier boy of Rajapakse.

That is exactly my problem with him. Not everyone has to agree with LTTE. The violence let loose by LTTE is definitely condemnable. But then is LTTE not a product of the circumstances?

I believe N Ram's behaviour is not as straightforward as it seems. He was not wanting freedom and equality for the Tamil people. That is my conclusion. I hate to say this but it may be due to his misguided belief that an independent tamil nation may be detrimental to his newspapers' interest or to his 'clan's interest' in tamil nadu, particularly when prabakaran is not from his clan!

The silence of the Hindu group on the corruption and misdeeds of Karuna's Govt is also shocking.

It is informed that Karunanidhi's family and The Hindu's family are related through some marriage alliance. If this aspect has affected the impartiality of the newspaper, dont you think it is highly condemnable?

Can I request mr savukku to enquire this information, so that his readers can get a full perspective on the downfall of the The Hindu newspaper!

On my part, I never read The Hindu come what may. That is my way of boycotting it for its treachery to Tamils!
Quote
 
 
+1 #11 KK 2011-04-24 22:26
Quoting சவுக்கு:
I completely agree with you Mr.K.Raman. I am happy that whoever ditched and backstabbed our brethren are being taught a lesson. A costly lesson.


Ravi is also anti tamil but little better than Ram.
http://wearethebest.wordpress.com/2011/04/23/the-four-great-wars-of-n-ram-on-hindu-soil/

http://savethehindu.blogspot.com/2011/04/save-chennai-based-hindu-newspaper.html
Quote
 
 
+9 #10 சவுக்கு 2011-04-24 21:18
I completely agree with you Mr.K.Raman. I am happy that whoever ditched and backstabbed our brethren are being taught a lesson. A costly lesson.
Quote
 
 
+14 #9 சவுக்கு 2011-04-24 21:12
அன்பார்ந்த அந்நியன் அவர்களுக்கு, சவுக்கு உங்களோடு கடுமையாக முரண்படுகிறது. கம்யூனிஸ்ட் என்றால், அது சிபிஐ அல்லது, சிபிஎம் உறுப்பினர் என்று மட்டும் பொருள் ஆகாது. உலகில் ஏழ்மை அறவே ஒழிக்கப் பட வேண்டும் என்று நினைப்பவன் அத்தனை பேரும் கம்யூனிஸ்ட் தான். ஒரு வகையில் நீங்களும் கம்யூனிஸ்ட் தான். ஒரு கம்யூனிஸ்ட் என்பவன், சாதி வேறுபாடு பார்ககாமல், பார்ப்பனர் ஏழையாக இருந்தாலும், அவன் ஏழ்மையும் ஒழிக்கப் பட வேண்டும் என்று பாடு பட வேண்டும். அப்படிப் பட்டவன் தான் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப் பட வேண்டும். கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டு, சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுவதை சவுக்கு ஒரு போதும், ஆதரிக்காது. மனிதன் சுதந்திரமாக முழு உரிமையோடு, வாழும் உரிமையை எந்த சிஸ்டெம் அனுமதிக்கிறதோ, அந்த சிஸ்டமே சிறந்தது. அந்த சிஸ்டெத்தை கம்யூனிசம் அனுமதிக்காது என்றால், கம்யூனிசமும் தேவையில்லை. மனிதனே, எல்லா சித்தாந்தத்தையு ம் விட உயர்ந்தவன்.
Quote
 
 
-6 #8 aha 2011-04-24 20:54
U can accuse Ram of political bias.He never wrote against Karunanidhi.But nature of LTTE is known in TN.Do you support their killings of Tamil?Do you support sending pregnant woman as suicide bombers?Dont they contribute to the worse situation Tamils are facing now??
Quote
 
 
+2 #7 Priyan 2011-04-24 20:15
Yes. Mr. Ram is a shame for Hindu. Mr.Cho also suspected the way Hindu acted in 2G spectrum. Thanks a lot Savukku to bring all these facts.
Quote
 
 
+10 #6 K Raman 2011-04-24 20:03
Brilliant Write-up. Would be nice if you had also published the English transcript.

I am very happy that finally all those people who have contributed to the defeat of the Tamil Struggle will meet their end in the near future. N Ram's role in this aspect can never be forgiven. The saddest part is that many people equate the views of The Hindu with that of Tamil Brahmins. And towards this, N Ram has brought great dis-respect to the Tamil Brahmins...

With N Ram's eventual exposure, Karunanidhi's defeat, his family members in jail, Congress party impending decimation in Tamil Nadu elections, release of UN report on the genocide of Ealam Tamils, all those who worked for the defeat and genocide of the Tamil people are being punished. Two main characters Manmohan and Sonia will also meet their defeat but we may have to wait for that...

As the great valluvar said -

பிறக்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

They all deserve it...
Quote
 
 
+5 #5 Kaathavarayan Marmay 2011-04-24 19:19
This Hindu Ram shamelessly calls himself a communist... he is worth several thousands of crores..he has a got a stable of high bread dogs the expenses on whom alone you can feed a small town!!!!
Quote
 
 
-1 #4 m.perumal 2011-04-24 19:09
CONGRATS SAVUKKU. N.RAVI,RAM'S OWN BROTHER HAS SPELT OUT THE CONSPIRACY THEORY. RAM IS A TRAITOR AND ALWAYS LOYAL TO CHINA & RAJAPAKSHE.RAM-CHO=S.SWAMY MAKE A DEADLY COMBINE WHO SHAMELESSLY ATTEMPT TO JUSTIFY GENOCIDE IN SL.
AFTER JOINING THE BAND-WAGON OF KK, HE IS DEFENDING 2G-RAJA AND SUPPRESSING ALL FORMS OF PROTEST LETTERS IN THE HINDU.
HE IS THE ONLY EDITOR TO DEFEND CORRUPTION AND IN THE PROCESS THE HINDU LOST ITS CREDIBILITY.
HE IS A SHAM COMMUNIST AND LIVES A BOHEMIAN LIFE.HE HAS NO SENSE FOR MORAL VALUES.
I APPEAL TO ALL IYENGARS/IYERS OF 50 AGE TO RALLY BEHIND N,RAVI AND OBSERVE A DAY'S PROTEST IN FRONT OF THE HINDU PREMISES TO RETRIEVE THE GLORIOUS DAYS OF THE HINDU OF CREDIBILITY,NEU TRALITY IN NEWS REPORTING AND ICESSANT CRITICISM/FIGHT AGAINST CORRUPTION.
Quote
 
 
-2 #3 anniyan 2011-04-24 19:07
//என்.ராம் என்ற போலி கம்யூனிஸ்ட்டின் உண்மையான முகம் தெரிகிறதா ? தன்னுடைய சொந்த நலன் காக்கப் பட வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்.//


"அதென்ன போலி கம்யூனிசவாதி"? ராம் அவர்கள் கம்யூனிசத்தை சரியாகவே பின்பற்றி, கம்யூனிஸ்டுகள் செய்வதை சரியாகவே செய்கிறார்.

கம்யூனிசத்தின் அடிப்படை இவை :

மரபு சார்ந்த கலை, பண்பாடுகளை ஒழிக்க வேண்டும். மக்கள் சக்தியை ஒன்று சேர்க்கும் எதுவாயினும் ஒழிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் அதுவரை பயன்படுத்திகொண் ட மக்கள் சக்தியை ஒடுக்க வேண்டும். விவசாயிகளை அழிக்க வேண்டும். (சீனா, பர்மா, கம்போடியா, ரஷ்யா, இலங்கை , மலேஷியா ஆகிய இடங்களில் கோடி, லட்சம், ஆயிரம், நூறு என மக்கள் சாக விட்டனர்கள் இந்த கம்யூனிஸ்ட்கள். பெரும்பாலும் விவசாயிகள்தான்.. மேற்கு வங்கத்தில் , விவசாயிகள் தங்கள் நிலத்தை டாடா தொழிற்சாலைக்கு தரமுடியாது என்ற போது, கம்யூனிஸ்ட்கள் அவர்களை கொன்று புதைத்துவிட்டு செய்தி கூட வெளியாகாமல் பார்த்துகொண்டனர ்; ஜஸ்ட் சும்மாவே சீனா திபெத்தைக் கைப்பற்றியது. )

மக்களுக்கு தவறான செய்திகளைக் கொடுக்க வேண்டும். (டாட்டா தொழிற்சாலை கொலையில் இருந்து, ரஷ்யாவில் சொத்துகில்லாமல் தெருவில் மக்கள் கிடந்தபோது கூட மக்கள் ராஜ வாழ்க்கை வாழ்வதாக செய்தி போடுவார்கள்; அயோத்தியில் கும்மட்டம் இருந்த இடத்தில் 21 பள்ளங்கள் தோண்டியதில் 5 இடங்களில் ராமர் போன்ற விக்ரகங்கள் கிடைத்தன. ஹிந்து நாளிதழ் இப்படி செய்தி வெளியிட்டது : "21 ல் 16 பள்ளங்களில் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை"; ஹிந்து நாளிதழ் தமிழர்கள் இலங்கையில் ஆயிரம் பேர் செத்தால், மலேசியாவில் சிறையில் தவித்தால் கவலையே படாமல் உலகம் அமைதிப் பூங்கா என்று செய்தி போடுவார்கள் )

இதை ஏன் போலி கம்யூனிசம் என்று போடுகிறார் சவுக்கு? சீனர்கள் கம்யூனிஸ்ட். ராம் கம்யூனிஸ்ட். ஆதரவாக செயல்படுவது இயற்கைதானே?
Quote
 
 
0 #2 jaya 2011-04-24 18:40
Sontha karanangalukkag a pathirikkaiyai adagu vaikkum RAM. RAVI athai ethikkirar. nalla parampariyamikk a pathirikkai seer kedu adayum nilai.
Quote
 
 
+14 #1 davis 2011-04-24 18:36
இந்து நாளிதழை மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று வர்ணித்தவர் கருணாநிதி அல்ல. அந்த வர்ணனையை ஆரம்பித்தவர் குடி அரசு, விடுதலை இதழ்களின் முன்னாள் ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 243 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3803
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week3803
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month216622
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12738741