|
“இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” இந்த பிரபலமான வார்த்தைகளைச் சொன்னது யார் ? வேறு யார்…..? கருணாநிதி தான். இந்த வார்த்தைகளை இவர் சொன்ன தருணம் எது தெரியுமா ? மாறன் சகோதரர்கள், தயாளு அம்மாளுக்குப் பிறந்த இவரது மகள் செல்வியின் முயற்சியாலும், போலித் தற்கொலை முயற்சி காரணமாகவும், கருணாநிதியின் முதலைக் குடும்பத்தோடு இணைந்ததுதான் காரணம்.
சரி. இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பை ஏன் வைக்க வேண்டும் ? சவுக்குக்கும், இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும். எப்போது. கனிமொழி, திஹார் சிறையில் கால் வைக்கும் போது. எப்போது வைப்பார் ? நாளை தெரியும். இரண்டு வாய்ப்புகள். ஒன்று, கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டு, கனிமொழி உடனடியாக நாளை மாலையே கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் படுவார். அல்லது, இந்த முன் ஜாமீன் மனு, மே 13 அன்றைக்கு தள்ளி வைக்கப் படும். தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, கைது நடவடிக்கைக்கான நேரம் நிர்ணயிக்கப் படும். இவ்வளவுதான். கைது என்பது உறுதி. கனிமொழி, சிறை செல்லும் நேரம், சவுக்கின் இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும்.

இன்று ஜெத்மலானி குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 437ல், பெண் என்றால் கைது செய்யப் படாமல் பிணையில் விட வழிவகை இருப்பதாக சிபிஐ நீதிமன்றத்தால் வாதிட்டார். ஜெத்மலானியை பேசாமல் மறை கழன்ற கேஸ் என்று முடிவெடுக்கலாமா என்று தெரியவில்லை. ஜெத்மலானி ஒரு பிரபலமான வழக்கறிஞர் என்பதைக் குறித்து சவுக்குக்கு மாறுபட்ட கருத்தில்லை. பிரபலமான என்பதற்காகவே நல்ல மனிதர் என்று கருத முடியாதே ? குற்றம் சாட்டப் பட்ட அத்தனை பேருக்கும், வழக்கறிஞர் வைத்துக் கொள்ள உரிமை உண்டா என்றால் உண்டு. அவர்களுக்கு சட்ட ரீதியாக அனைத்து உதவிகளும் செய்யப் பட வேண்டும்.

அண்ணா வழியில் வந்த, பெரியார் வழியில் வந்த, திமுகவுக்கு இல்லாத வழக்கறிஞர்களா ? சட்டம் படித்த எத்தனையோ பேருக்கு, எம்எல்ஏ சீட்டும் எம்பி சீட்டும் வழங்கியிருக்கிறாரே கருணாநிதி ? சட்டம் பயின்றவர், சட்டத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர் என்று உரைத்திருக்கிறாரே… ? அத்தனை பேரையும் விட்டு விட்டு, எதற்காக ராம் ஜெத்மலானியை தேர்ந்தெடுத்தார் கருணாநிதி ? அவ்வளவு ஏன் ? நமது குஞ்சாமணியே வழக்கறிஞர் தானே ?

ஆனால், திமுக வழக்கறிஞர்களை நம்ப, கருணாநிதி இளிச்சவாயன் அல்ல. தன் மகளாயிற்றே…. அதனால் தான் ஒரு முறை நீதிமன்றம் வருவதற்கு 5 லட்சம் ரூபாய் கேட்கும் ராம் ஜெத்மலானியை பிடித்தார். இந்த ஜெத்மலானி ஒன்றும் நேர்மையான மனிதர் அல்ல. பிரேமானந்தா சாமியாருக்காக ஆஜராகி, அவர் ரொம்ப நல்லவர் என்று வாதாடியவர். டெல்லி வழக்கறிஞர் என்ற கித்தாப்பை நீதிமன்றத்தில் காட்டிய போது, அப்போது விசாரணை நீதிபதியாக இருந்த பானுமதியால் கண்டிக்கப் பட்டவர். நீதிபதி பானுமதியின் நேரம், அதற்குப் பிறகு, ஜெத்மலானி சட்டத் துறை அமைச்சரானார். இந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, பானுமதி உயர்நீதிமன்ற நீதிபதியாவதை, 4 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தார் ஜெத்மலானி.
நேற்று அளித்த பேட்டியில் கூட, நான் வழக்கறிஞராக கட்சிக்காரர்களுக்காக வாதாடுவதை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன என்று கூசாமல் புளுகிய ஜெத்மலானி, ஜெஸ்ஸிகா லால் என்ற இளம்பெண், ஒரு மது விடுதியில் நள்ளிரவுக்குப் பிறகு, சரக்கு தர மறுத்த காரணத்தால், 300 பேர் முன்னிலையில் அவளை பணக்காரத் திமிர் காரணமாக சுட்டுச் கொன்ற மனு ஷர்மா என்ற நபருக்காக வாதாடியவர்.

மிக மிக திறமையான வழக்கறிஞர் என்று அழைக்கப் படும் ஜெத்மலானி, ஒரு பத்திரிக்கையாளரான கரண் தாப்பர், ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்காக எப்படி ஆஜரானீர்கள் என்று கேட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியாமல், பேட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்றார். (ஜெத்மலானி பேட்டி, பாகம் 1, பாகம் 2, பாகம் 3)
அதனால், ஜெத்மலானி, கனிமொழிக்காக ஆஜராவது சாலப் பொருத்தமே.
ஒரு நபரை சிபிஐ விசாரித்ததாலேயே அவர் குற்றவாளியாக முடியாது, சிபிஐ கைது செய்ததாலேயே அவர் குற்றவாளியாகி விட மாட்டார், என்று பசப்பிய கருணாநிதி, ஆண்டிமுத்து ராசா பதவி விலகும் போது என்ன கூறினார் என்பதை சற்றே நினைவு கூர்வோம்.

“தி.மு.க. தலைமைக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், பிள்ளைப் பிராயத்தில் இருந்து தன்மான இயக்கத்தின் வழி பற்றி நடந்து வருபவரும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் போன்ற அரசியல் சமுதாய சீர்திருத்த தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்பவரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவராக விளங்கி வருபவரும்; பழைய திருச்சி மாவட்டம்-பெரம்பலூர் பகுதியில் பட்டிக்காட்டு பொட்டலில் பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளருமான அருமைத் தம்பி ராசா- தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக்கழகத்திற்கும் என்றென்றும் நம்பிக்கைக்குரியவராகவும்; ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து `தலித்` இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபவர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள். அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்று திட்டமிட்ட முயற்சி பல நாட்களாக நடைபெற்று, ஜனநாயகக் கூடங்களில் சந்தைக்கடை இரைச்சல் மேலிடவும், நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை விவாதித்திடவும், அணுகிடவும் முடியாத அளவிற்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நிகழ்த்தப்பெற்று வருகின்றன.
 அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது என்று பார்த்தால்; 1999 முதல் மத்தியில் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறை 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த முறையைக் கையாண்டு அளித்து வந்ததோ, அதே முறையைத்தான் தம்பி ராசா பின்பற்றினார் என்றெல்லாம் அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர் ராஜினாமா செய்தே தீர வேண்டுமென்று பிடிவாதம் செய்து-நாடாளுமன்ற அவைகளையே நடக்க விடாமல் செய்து வருகிறார்கள்.”
பிப்ரவரி மாதம் நடந்த திமுக பொதுக்கூட்டத்திலே

“தம்பி ராஜா இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று செய்திருக்கிற குற்றம் என்னவென்று பார்த்தால் - ஏழையெளிய மக்களுக்கு இந்தத் தொலைபேசியை - இதுவரையில் பணக்காரர்கள் மாத்திரம், சீமான் வீட்டுப் பிள்ளைகள் - சீமாட்டிகள் மாத்திரம் பயன்படுத்திய இந்தத் தொலைபேசியை - நடவு நட்டுக் கொண்டிருக்கின்ற நாகம்மாளும், தயிர் விற்றுக் கொண்டிருக்கின்ற தையல் நாயகியும் - போகும்போதே ஒரு கையிலே கலயம், தலையிலே சும்மாடு - அந்தச் சும்மாட்டின் மேலே தயிர் பானை, பால் பானை - காதிலே இந்தத் தொலைபேசி - அதிலே """"மோர் வாங்கலியோ, மோர்"" என்ற கூச்சலுக்குப் பதிலாக, """"ஹலோ, ஹலோ"" என்று இங்கிருந்து தொலைபேசி வழியாக இன்னொரு பகுதியிலே உள்ள அம்மையாரையோ, சொந்தக்காரர்களையோ, நண்பர்களையோ அழைத்துப் பேசுகிற அளவிற்கு - மிக மிகக் குறைந்த விலையில், குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கான ஒரு நிலையை - கோடானு கோடி மக்கள் அந்த வாய்ப்பைப் பெறுகின்ற அளவிற்கு ஒரு நிலைமையை ஏற்படுத்திய பெருமை - டில்லியிலே கைதாகியிருக்கின்ற நம்முடைய தம்பி ராஜாவுக்கு உண்டு.

இவர் தான் கருணாநிதி சொன்ன தயிர் விற்கும் தையல் நாயகியோ ?
நான் இங்கிருந்தவாறே, இந்த மக்களின் சார்பாக டில்லிச் சிறைச்சாலையிலே இருக்கின்ற தம்பி ராஜாவைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் - வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த ஏழை மக்கள், எளிய மக்கள் - அவரவர்கள் பயன்படுத்துகின்ற இந்தத் தொலைபேசி இவ்வளவு அதிகமாக இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அவர்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது என்றால், இந்தச் சாதனை புரிந்தவர் தம்பி ராஜா.”
பட்டிக்காட்டுப் பொட்டலிலே பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளரும், தலித் இனத்தின் தகத்தகாய கதிரவனுமான ஆண்டிமுத்து ராசா தான் அனைத்துச் சதிச் செயல்களிலும் ஈடுபட்டார் என்பதே கருணாநிதியின் கண்மணி கனிமொழி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜெத்மலானி நேற்று டெல்லி நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம்.
ராசா டிபி ரியாலிட்டீஸ் நிறுவனத்திடமிருந்து 200 கோடி ரூபாய் வாங்கினார் என்று வைத்துக் கொண்டாலும், அதனால் கனிமொழிக்கு என்ன பொறுப்பு வந்து விடப் போகிறது ? கனிமொழி ஏதாவது ஒரு காகிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று காட்டுங்கள் பார்க்கலாம் ? அவருக்கும் கலைஞர் டிவிக்கும் சம்பந்தமே இல்லை. 20 % பங்குகள் வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காகவே கனிமொழி குற்றம் செய்தவர் ஆகி விடுவாரா ?

ராஜாவை எனக்குத் தெரியவே தெரியாதுன்னா யாருமே நம்ப மாட்றாங்க...
இதுதான் நேற்று ராம் ஜெத்மலானி எடுத்துரைத்த வாதம். நேற்று சிபிஐ நீதிமன்றத்தில், கனிமொழிக்கு ஆதரவாக 11 திமுக எம்பிக்கள் வந்திருந்து, கனிமொழிக்கான தங்கள் ஆதரவையும் கருணாநிதி மீதும், எம்பி பதவி மீதுமான தங்கள் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், எந்த ராசாவுக்காக ஊர் ஊராக, ‘ஸ்பெக்ட்ரம் விவகாரம். நடந்தது என்ன ?’ என்று கூட்டம் போட்டார்களோ, அந்த ராசாவிடம் ஒருவரும் பேசக் கூட இல்லை.
ராசா இப்படிப் பட்ட பலி கடா என்றால், சரத் குமார் என்று அப்பாவியான ஆடாக இருப்பவர் இன்னும் மோசமான பலி கடா.

இப்படி சிரிச்சுகிக்கிட்டு இருந்த என்னை...
இந்த சரத் குமார், கேடி சகோதரர்களோடு லயோலா கல்லூரியில் படித்தவர். சன் டிவி தொடங்கியது முதலாக, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தவரை, கேடி சகோதரர்கள், என்ன காரணத்தாலோ ஓரங்கட்டினார்கள். ஓரங்கட்டப் பட்டவர் சில மாதங்கள் ஆந்திராவில் சென்று ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தினார் என்கிறார்கள். கேடி சகோதரர்களோடு யுத்தம் தொடங்கியவுடன், கலைஞர் டிவி தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப் படுகிறது. அதற்காக மிக திறமையான நிர்வாகியாக அறியப்படும், சரத் குமாரை, ஆந்திராவிலிருந்து அழைத்து வருகிறார் ஆற்காடு வீராச்சாமி. கலைஞர் டிவியும், தொடங்கப் பட்டு அமோகமாக நடந்து வருகிறது.
இப்படி பண்ணிட்டாங்களே.... ?
இந்த நேரத்தில், கருணாநிதியின் இதயம் இனித்து, கண்கள் பனித்து, குடும்பம் இணைந்ததும், நடந்த முதல் விவகாரம் என்ன தெரியுமா ?
கேடி சகோதரர்கள் புல்லாக சரக்கடித்து விட்டு, நேராக சரத் குமார் வீட்டுக்கு சென்று, “எங்களுக்கு எதிராகவாடா டிவி சேனல் தொடங்குகிறாய்” என்று அவரை அடித்து, சரத் குமாரின் காலை உடைத்து, பிறகு அவர்களே மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

எனக்கு கையெழுத்து போடவே தெரியாது.... நான் எப்படி டைரக்டரா கலைஞர் டிவிக்காக கையெழுத்து போட்ருக்க முடியும் ?
இந்த சரத் குமார் தான் இன்று கருணாநிதி குடும்பத்தால் மஞ்சள் தண்ணீர் தெளித்து அறுக்கப் பட இருக்கிறார். கடந்த வாரம், சரத் குமாரின் மனைவி, கருணாநிதி காலில் விழுந்து தன் கணவரை காப்பாற்றுமாறு கதறியிருக்கிறார். அப்போது காப்பாற்றுகிறேன் என்று வாக்கு கொடுத்த கருணாநிதி, நேற்று “கலைஞர் டிவி ஆவணங்களில் கையெழுத்திட்டவர் கனிமொழி அல்ல” என்று வாதிட்டுள்ளார். கனிமொழி அல்ல என்றால், கையெழுத்து போட்ட சரத் குமாரை பிடித்து சிறையில் அடையுங்கள் என்று பொருள்.
சரத்குமாரோடு, தற்போது, கலைஞர் டிவியில் இயக்குநராக இருக்கும், கருணாநிதியின் மருமகன் அமிர்தத்தையும் சிறையில் அடையுங்கள் என்று ஜெத்மலானியை வாதிடச் சொல்வாரா கருணாநிதி ?

அமிர்தம் : சைட் அடிச்சுக்கிட்டே போய் சிபிஐல சிக்கிட்டான். நல்ல வேளை நம்ப உஷாராயிட்டோம்.
கலைஞர் டிவிக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை, கலைஞர் டிவிக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை, தயாளுவுக்கும் கலைஞர் டிவிக்கும் சம்பந்தம் இல்லையென்றால், அப்புறம் யாருதுதாண்டா கலைஞர் டிவி ?
கேடி சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்ட உடன், கலைஞர் டிவி தொடங்க வேண்டும் என்றால், யாரை வைத்து வேண்டுமானாலும், தொடங்கியிருக்கலாமே…. கருணாநிதிக்கு ஒரு அடிமை சிக்காமலா போயிருப்பான் ? ஆனால், அந்த அடிமை பத்து இருபது ரூபாயை திருடி விட்டால் ? அந்த பத்து இருபது ரூபாயும், தன் குடும்பத்துக்கே வர வேண்டும் என்ற பேராசைதான் இன்று கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.
சிபிஐ அடுத்த கட்டமாக தனது விசாரணையையும் தொடங்க வேண்டியிருக்கிறது. கலைஞர் டிவி பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டோம் என்கிறார்களே… அந்தப் பணத்தை எப்படித் திருப்பிக் கொடுத்தார்கள் தெரியுமா ?

கலைஞர் டிவியா ? அப்டின்னா ?
அஞ்சுகம் பிலிம்ஸ் (கருணாநிதி குடும்பத்துடையது) சார்பில் 70 கோடி. கலைஞர் டிவியில் விளம்பரம் கொடுப்பதற்காக அட்வான்ஸ் 96 கோடி. வங்கியில் ஓவர் ட்ராப்ட் 70 கோடி. அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 70 கோடி எப்படி வந்தது என்று விசாரித்தாலே, கலைஞர் டிவியில் மேலும் சிலர் திஹார் செல்வார்கள்.
96 கோடி ரூபாயை மூடுவிழா நடத்தப் படப் போகும் கலைஞர் டிவிக்கு எந்த முட்டாள் கொடுத்தான் என்று விசாரித்தால், இந்தியா சிமென்ட்ஸின் சீனிவாசன் சிக்குவார். எதற்காக அய்யா இந்தப் பணத்தை கொடுத்தாய் என்று கேட்டால், ஜாபர் சேட் சிக்குவார். ஜாபர் சேட் மூலமாக, கருணாநிதி குடும்பத்தின் அத்தனை வண்டவாளங்களும், தண்டவாளத்தில் ஏறும்.
கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் சவுக்கு நினைவூட்ட விரும்புகிறது. இன்று நீங்கள் இருவரும் மிகுந்த மனக்குழப்பத்திலும், அச்சத்திலும் இருப்பீர்கள். எங்கே தன் மகள் சிறை சென்று விடுவாளோ என்று கருணாநிதி கலக்கத்தில் இருப்பார். ஆனால், 2009ம் ஆண்டு, இதே மே மாதத்தில், முள்ளி வாய்க்கால் பகுதியில், பெண்களும், குழந்தைகளும், குண்டு வீச்சுக்கு இறையாகிக் கொண்டிருந்த போது, வேடிக்கை பார்த்தவர்கள் நீங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று உலகமே இறைஞ்சிய போது, நீரா ராடியாவோடு, கனிமொழி, அமைச்சரவை குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததை மறந்து விடக் கூடாது. போலி உண்ணாவிரதம் இருந்தும், எம்பிக்கள் ராஜினாமா என்று நாடகம் நடத்தியும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி என்று நடித்தும் போர் நிறுத்தத்திற்கான போராட்டத்தை கருணாநிதி நீர்த்துப் போகச் செய்ததை மறந்து விடக் கூடாது.














இந்த ஒரு காரணத்துக்காகவேனும், கனிமொழி, திஹார் சிறையில் அடைக்கப் பட வேண்டும். அந்த காட்சியை கருணாநிதி கண்டு, வேதனையிலும், கையறு நிலையை நினைத்தும், கதறி அழ வேண்டும்.
அப்போதுதான் சவுக்கின் இதயம் இனிக்கும். கண்கள் பனிக்கும்.
|
Comments
அதீதன்சுப்ரமணிய ம்
Arumai iyya Arumai, not able to control my laughter
Very good comment
Irunthum paraata manam illai!
Oppari azhagaga irunthenna payan!
Iranthuvittalae en THAAI!
PADITHATHILLAI ITHU POLA
IRUNTHUM PAARATTA MANAM ILLAI,
OPPARI AZHAGAGA IRUNTHU ENNA PAYAN!
IRANTHATHU EN THAAI!
நன்றாக சொன்னாய் நண்பா!! படித்த முட்டாள்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை காப்பத்த முடியாது
இதை தான் அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்களோ?
sorry Tamil Nadu was ruled by one only tamilan so called Karma Veeran, Padikkada Medai K.Kamaraj only!! when he left this world, Tamilan is buried alive. they are just walking walking corpse!
Sure
throw away all religious and caste differeces, Even region & language, first be united as human.Love the nature. Be a kind humanity, point out who makes the mistake for not only to punish him, make correction to stop further mistake happen by followers or others. Its responsible for every person to correct his own mistake and point out where mistakes happen according to his knowledge. Cast,religion,r egion & language are used for human to develop good city,then good state,then good nation and finally result is better world in universe. All target for this.Today Cast,religion,r egion & language are used to separate humanity from us. If mistake happen we must forgive or take strong decision against it to develop good societies. Each and every big mistake are not only done by single person since its start from us.Everyone in this world done mistakes like careless,due to selfish, neglect,overtak e others with money,coward..Do thing benefit for all not only for u.Think twice before what we are going to do which will not affect others directly or indirectly. Its impossible for you or me to change the world, but we must try one day its change that's start from us. Everyone must love their city,love their nation and world ,love all creatures exist in this world. Rise your voice for our society that helps to develop your family and also you. .
HI ,please uderstand todays spectator i tommorows Victim .This is the right time for TN people to uderstand and throw away all religious and caste differeces and be united as tamils.Else what ever happened in ELAM ,will happen in Tamilnadu in just 10 to 15 yrs .while you are able to believe some medias false propoganda on tamils ,whats stopping you to believe your fellow brothers.Please believe uN report atleast.I will request you to read only good foreign news papers Channel4,times UK ,Savuku etc .
GOOD COMMENT
ஏன் இந்த கொல வெறி. அவர் தங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்.
போகட்டும். மன சாட்சியோடு பதில் சொல்லுங்கள். இலங்கை பிரச்சினையில் ஒரு மாநில முதல்வருக்கு உள்ள அதிகாரத்தை வைத்துக் கொண்டு பெரிதாக என்ன செய்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள் . அவரிடம் என்ன ராணுவமா இருக்கிறது.
UNQUOTE :
YES. I AGREE WITH YOU HE DOES'T HAVE ARMY WITH HIM. BUT HAS HE TAKEN UP THE ISSUE WITH THE CENTRAL GOVERNMENT SERIOUSLY. HE IS GIVING A CHRONOLOGICAL EVENTS OF HIS MEETINGS, RESOLUTIONS, BANDHS CONDUCTED, HUMAN CHAIN ETC., IN MURASOLI, AS IF HE HAS FOUGHT FOR THE EELAM PROBLEMS. HE DISMISED VAIKO FROM THE PARTY, WHO IS/WAS SINCERE TO SRILANKAN TAMILS UNDER SOME PRETEXT. WHEN NEDUMARAN PRAYED FOR HIS ACTIVE INDULGENCE IN THE ISSUE, WHAT KARUNANIDHI HAS DONE.
DEAR ANAND, DON'T TELL WHAT KARUNANIDHI COULD DO FOR SRILANKAN TAMILS. WHEN HIS DAUGHTER IS GOING TO THE COURT, HE SENT ALL HIS MPs TO DELHI TO SHOW THE SOLIDARITY. HAS HE EVER DONE LIKE THIS EARLIER FOR SRI LANKA TAMILS ? HE IS UNFIT TO BE CALLED AS "TAMILINA THALAIVAR'. DON'T SUPPORT KARUNANIDHI.
ஒன்னும் பண்ண முடியாது என்று படித்தும் முட்டாள்களை போன்று பேசும் உங்களை போன்றவர்களால் தான்
அந்த திருட்டு கூட்டம் இந்த அளவுக்கு ஆடிக் கொண்டிருக்கிறது ...
ஈழ பிரசினைகளுக்கு எல்லாம் கடிதம் எழுதிய இந்த திருவாரூர் தே**** மகனால் தன மகள் (கலியுக கண்ணகி) பெயர்
குற்ற பத்திரிகையில் இடம் பிடித்ததும் எல்லா உறுப்பினர்களையு ம் டெல்லி க்கு ஏன் அனுப்ப முடியவில்லை அல்லது அனுப்பவில்லை?
படித்தவர்களே இப்படி இருக்கும் பொது கிராமத்து மக்களை எப்படி நாம் புரிய வைப்பது? அவனை பிடிக்கும் என்றால் கட்டுரையை படிப்பதோடு நிறுத்திக்கோ,
தேவை இல்லாமல் கருது தெரிவிக்காதீர்க ள் அவன் மக்களுக்காக உழைத்தான் என்று...
Mr.Karunanidhi, has went for Manidha Sangili, during rain season, to Save only Arcot Veeraswamy, becoz of power shortage in that period, not for our Brothers.
I have been commenting wiht name 'anniyan'.. why do you also take this name? please try some name like 'panniyan' or whatever you prefer.
thanks
original anniyan
Quoting anniyan:
நீ செத்தும் இல்லாம இந்த கட்சிய அழித்து விட்டாயே. உன் குடும்ப வளச்சிக்காக ஊரையே நாறடித்து விட்டாயே. நீ இருந்து உன் பெண்டாண்டி பிள்ளைகள் சிறைக்கு செல்வதை பார்த்து சாக வேண்டும்
தமிழ் நாட்டில் இதுபோல எத்தனை கல்வெட்டுகளோ
எல்லவேற்றையும் தேடி பிடித்து சரி செய்ய வேண்டும் சவுக்கு சொடு கினால் தான் முடியும் l
இது போல்தான் இராஜராஜ சோழ னை கௌரவி விக்கிறேன் பேர்வழி என்று 30 ஆண்டுகளுக்கு முன் இராஜ ராஜனின் சிலை ஒன்றை தஞ்சை பெரிய கோவில் வளகத்தில் உள்ளே நிறுவ முனைந்தார் நம்ம சோழ ராஜா சும்மா சொல்லகூடாது அதனை திறந்து வைத்தது தான்தான் என்று தம்பட்டம் அடித்த வகையில் திறப்பு விழா அடிக்கல்லில் பொறித்து..வைத்து. அப்படியெ தானும் சரித்ரதில் நுழைந்து கொள்ள முயன்ற போது archealogical சர்வே of india கடுமையாக எதிர்த்து அனுமதி மறுத்தது.இப்போது அந்த சிலை கோவில் வளாகத்துக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள து
சவுக்காரே சொடுக்குங்கள் உங்கள் சவுக்கை
மாற்று அரசியல் என்பது எக்காலத்திற்கும ் கிட்டாத எட்டா கனியாகிவிடுமோ என்ற அச்சம் தான் வருகிறது !!!!???
எப்பொழுது மாறும் இந்த தமிழ்நாட்டின் மற்றும் இந்தியாவின் நிலைமை ????
தமிழ் பிரியன்
Idiot Americans/Brit went silent coz india didn't respond.(secretly supplied weapons thats another case) now wait and see for Chinese to come out and start to claim arunachal pradesh like. soon china will wipe out Indians!! just sit and sing "Jai Ho" like AR Rehman!
It was a chance that India could able to dominate Indian ocean region, but they didn't grab the chance. Its all gone over the past until Indra Gandhi's era. she made Bangladesh from Pakistan and helped out our Tamils in lanka, but her son betrayed Tamils by sending IPKF. and result he lost his life,
anyway i can see many people here dunno basics of history! i pity them, one day they will cry out loud. that day nobody will hear them!
India will never be super power since then they cannot dominate the little country so called Sri Lanka, where in da hell they gonna be Super Power, Dr.Abdul Kalam's dream is just nothing but "KAANALNEER"
earkenave karunanithi cholan enru kalvettil porithayitru.poombuhar 14 madikoodam nulaivayilil edathupuram antha koodam karunanithi cholanin pathavathu andil kattappattathen ru kevalamaga vetkamindri tharkala chola raja porihu vaithullar.andra poorvigam enbadanal kulothunga cholano?
They take care of their own breed and blood.
There is no point in blaming Tamil Nadu or India. If you are so interested in Srilanka why didnt you go and live there or fight for whom you think they are geniunue.
These LTTE killed innocent Tamil people.
What do you say about that?
How many assasination they did?
All those that live by the sword will die by the sword.
Stop wasting your time in blaming someone, but instead think how you can make a difference.
The British Courts and Crown too should answer the Tamils who were parties to the covenant along with Sri Lankan Government to preserve and protect the minority Tamils in the land. The British Courts and Crown ought to have intervened for solving the problem as and when the Sri Lankan Government broke the clauses of the covenant affecting the minority Tamils. So called people supporting poor Tamil people’s cause whether know this or not, I do not know!!! (ended.!)
A Minister of Constitutional Affairs of Sri Lanka publicly acknowledged the fact that, “a constitutional safeguard was provided for the minorities by Section 29(2) of the Soulbury Constitution”. It prevented parliament from conferring benefits on the majority community and imposing disabilities on the minorities.
(contd.....)
தனது வைப்பாட்டிக்குப ் பிறந்த மகளின் நிலை கண்டு பதறும் இந்தத் துரோகிதான் ஆயிரமாயிரம் ஈழத் தமிழச்சிகள் தம் தலைமுறை அழிவது கண்டு பதறியபோது போலிக் கிறித்துவச்சியி ன் புடவை துவைக்க டெல்லி குட்டையில் எருமையாய்க் கிடந்தான்.
அரசை அடித்து உலையில் போடும் கலையில் வல்ல கலைஞனின் வித்தில் உதித்த முத்து அரசியலில் புகுந்த சில நாட்களிலேயே ஊழலில் மலையையே விழுங்கும் அற்புதத்தை நிகழ்த்தி அசத்தியிருக்கிற து. திகார் சிறையில் பாம்புகளும் இல்லை, பல்லி பூரான்களும் இல்லை. நிம்மதியாய் இனி நேர்மை குறித்து நீ கவிதை எழுதலாம் கனிமொழி!
பெண் என்று எந்த சலுகையும் கோரமாட்டேன் என்ற கவிதாயினி அதைத்தவிர வேறு எதையும் கோரவில்லை. முன்ஜாமீன் கோராமாட்டேன் என்ற பெரியாரியலின் வழி நடக்கும் முற்போக்குப் புரட்சிக்காரி முழந்தாளிட்டுக் கேட்டது அதைத்தானே! போதும் இந்தப் பம்மாத்துக்காரி யின் அறிவுஜீவிக் கயவாளித்தனம்.
அறம் வெல்லும் என்ற எம் ஆன்றோரின் மொழியும், அறவழியில் ஈட்டாத பொருள் துன்பத்தைத் தரும் என்ற வள்ளுவனின் வாக்கும் இந்தப் பொறுக்கிகளின் வாழ்வியலுடாக தமிழ்ச்சமூகத்தி ற்கு விளங்கட்டும். ஒரு முட்டாளின் பிணம் ஒரு மருத்துவரின் அறிவிற்கு எவ்வாறு உதவுகிறதோ அது போல இந்தப் பொல்லாக் கிழவனின் வாழ்வும் தமிழருக்கு பாடமாகட்டும்.
their son.His treacherty is as old as his political carrier
உன்னைப் போன்ற நாய்களால்தாண்டா அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும ் கெட்ட பெயர்.. பின்லேடனுக்கு இரங்கல் கூட்டம் நடத்துற உன்னை மாதிரியான ஆட்களை பாகிஸ்தானுக்கு ஓட,ஓட விரட்டி அடிக்கணும்.ஒரு இண்டர்நெட் கனெக்சன் கிடைச்சுட்டா என்ன வேணும்னாலும் எழுதிவியா.நீயா ஓடிரு
உன்னைப் போன்ற நாய்களால்தாண்டா அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும ் கெட்ட பெயர்.. பின்லேடனுக்கு இரங்கல் கூட்டம் நடத்துற உன்னை மாதிரியான ஆட்களை பாகிஸ்தானுக்கு ஓட,ஓட விரட்டி அடிக்கணும்.ஒரு இண்டர்நெட் கனெக்சன் கிடைச்சுட்டா என்ன வேணும்னாலும் எழுதிவியா.நீயா ஓடிரு
http://tamil.unitymedianews.com/2011/05/08/raja-2g-scam-prostrates-before-rajaththiammal/
thanks
ganesh
yaaraiyya neer?
Arumai! aRUMAI!
He did Not bother about the Deaths of thousnds but worried about his son. Kindly publish that article from Murasoli with Your Comments
[color=red]50 கேட்டவனைத்தான் சிறையில் போட்டோம் ஆனா
50 கோடி அடிச்சவனுக்கு வோட்டு போட்டோம் .[/color]
சால பொருத்தம் நம்ம நாட்டுக்கு.
Dear Sulaiman : By far, this is the best comment I have seen in this site to an article. I have to salute you for the clarity and dignity that comes across in your message.
I agree with your sentiments about delayed justice.
This is a long drawn out battle. In the end, I am almost certain that nothing will happen to Kani. She may actually escape because the fundamental ground of hers that being a shareholder does not mean that she directed the day-to-day operations may stick unless CBI provides strong evidence.
We all wanted to see her atleast been taken into custody for interrogation so that we can feel satisfied that she was impriosoned atleast. Nothing beyond that! The charges have not yet been proved. So she cannot be legally punished now.
I am actually looking forward for the May 13 election results and the shape of DMK after Karuna. These events would be decisive for Kani's future.
I myself was angry in the morning. But when you look at the judgement of O P Saini dispassionately , you realise that Kani has to appear before ED on May 12. Election reults are to be announced on May 13. I also believe that since Ram Jethmalani had appeared for Kani, the judge would want to give a judgement which is very strong. He may actually need a weeks time to read the case files properly. This is the advantage for Kani for engaging someone senior like Ram Jethmalani. So Saini may require a weeks time! also dmk mps were there and they may have created problems...so may 14 probably!
These are my suppositions. But believe me, the biggest punichment for them is to loose power in TN...that will finish them once for all!
Best wishes
Until we have useless, brainwashed guys like you we are not going to prevent corruption or terrorism. Please go and sit in Pakistan and tell all your Karuthu. Until savukku has readers and supporters like us, nothing will happen to them..
ur thinking very narrow if karunanithi could done a lots of things because of India at the last mini the world can not anything if tn govt put pressure on center govt may be the word would help us. if u want i would list lot of thing for eg: if India stay away the us willing to send ship to save people in mulivaikal, but India did not allowed us to do it. sad think that us can not do any thing over India in south east Asia. pls do not comment like this anywhere . if u dont understand pls ask some one ,
karan form toronto
I wish this aberration is corrected and the Judge reconsiders his decision on the date of passing the order. Let not an impression be created that being the daughter of Karunanidhi really helps – not only for her own self but also for her party in helping to keep in tact the alliance partners.
The developments in the Patiala Court today on the bail application of Kanimozhi shattered the hopes of millions of people, particularly those residing in Tamilnadu that Justice will be done in the 2G Spectrum case. It is said that it is not enough that Justice is done, but it is necessary that Justice must be seen to be done. The postponement of the order on Kanimozhi's bail application to the 14th of May raises the worry whether Justice can be seen to be done in the 2G case. For, the date of judgment on the bail application falling just after the date of election- results in TN raises questions in the minds of ordinary folks like me whether Judiciary in this case is insulated against the tricks of those in power. Any other date would not have raised this doubt. But this date certainly creates doubts in the minds of people. Justice O.P. Saini must have taken this (declaration of election results in TN) into consideration and avoided a situation that raises questions on the credibility of the Justice System.
It is everyone's knowledge that the 2G case is one where those in power in the Centre and in Tamilnadu have a huge stake and have worked over the board to bury it somehow. It is because of this, the judges who initially heard this case made every conceivable method to discourage any delay or derailment of this case and made it known that no power on earth can play with the fair trail of this case. Their pronouncements created hope in the minds of the people that we started to have faith in the Highest Court. When the CBI issued the charge sheet on Kanimozhi after the elections were over, we thought that this is after all the way the CBI is known to work, but pinned our hopes on the Judiciary that it would not create any semblance of lack of Justice being done. But by reserving the order on the bail application to the 14th, an impression has been created that something is happening behind the screen.
RSS feed for comments to this post