முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
மக்களே பிரதானம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 53
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 13 மே 2011 23:46

காலையிலிருந்து சவுக்குக்கு வாழ்த்துக்கள், தொலைபேசியிலும், நேரிலும் குவிந்த வண்ணம் உள்ளன.   திமுகவின் இந்த வீழ்ச்சிக்கு சவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்தனர்.   திமுகவின் இந்த வீழ்ச்சி ஊர் கூடி இழுக்கப் பட்ட தேர் என்று சவுக்கு கருதும் அதே நேரத்தில், இந்த வெற்றியை சவுக்கு தனது வாசர்களின் காலடியில் சமர்ப்பிக்கிறது.

 

ஏற்கனவே எழுதியது போல, சவுக்கு தொடங்கப் படுவதற்கான காரணம், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஊடகச் சூழலே…. பல்வேறு காரணங்களால், ஊடகங்கள் கருணாநிதியின் கைப்பாவையாக இருந்தன. சவுக்கின் நண்பர்கள் மூலமாக கருணாநிதி குடும்பம் மற்றும் கடவுளுக்கு நிகரான அதிகாரம் படைத்திருந்த ஜாபர் சேட் ஆகியோரைப் பற்றி ஆதாரங்களோடு செய்தி வெளியிட முயற்சி செய்தாலும், ஜாபரை பற்றி ஒரு மூச்சு கூட எந்த பத்திரிக்கையிலும் வராது. நண்பர்களான பத்திரிக்கையாளர்கள், இந்த செய்தியை எடிட்டர் அனுமதிக்க மறுத்து விட்டார் என்று சொல்லும் போது, ஆதாரங்களோடு உண்மைச் செய்தியை வெளியிடக் கூட முடியாத அளவுக்கு, நெருக்கடி நிலையா அமலில் இருக்கிறது என்ற ஆச்சர்யம் வந்தது.

 

ஆனால், இணையம் என்ற அபாரமான தொழில்நுட்பம் இருக்கும் போது எதற்காக கவலைப் பட வேண்டும் ?   கருணாநிதி அரசும், வேலையிலிருந்து இடை நீக்கம் செய்து நேரம் ஒதுக்கிக் கொடுத்த போது இதை விட வேறு என்ன வேலை ? இப்படி ப்ளாகாக தொடங்கப் பட்டது தான் சவுக்கு.   நல்ல விஷயங்களுக்கு மக்கள் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதற்கு சவுக்கு ஒரு நல்ல உதாரணம்.   யாரோ ஒரு கிறுக்குப் பயல் ஏதோ எழுதுகிறான் என்று இல்லாமல், வாசகர்கள் கொடுத்த அமோக ஆதரவு என்பது மறக்கவே முடியாதது.

 

சவுக்கு எழுதத் தொடங்கிய பிறகு தான், கருணாநிதிக்கு விசுவாசமான செய்திகளைப் போட்டு கருணாநிதியின் ஜால்ராவாக மாறிப் போன ஊடகங்களைப் பார்த்து சலித்துப் போன ஏராளமான நல்ல உள்ளங்கள், சவுக்கு போன்ற ஒரு மாற்று ஊடகத்தை எதிர்ப்பார்த்தே இருந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.   சவுக்கு தொடங்குகையில் வைக்கப் பட்ட ஒரே ஒரு அளவு கோல், பொய்யை எழுதக் கூடாது என்பது மட்டுமே.

 

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும்

 

அல்லவா ?   இலவசமாகத்தானே படிக்கிறார்கள், அதனால் என்ன என்ற அலட்சியப் போக்கு ஒரு நாளும் இருந்தது கிடையாது. தங்களின் விலை மதிக்க முடியாத நேரத்தை அல்லவா, சவுக்கு வாசகர்கள் சவுக்குக்காக தருகின்றனர் ?   அந்த அடிப்படையில் தொடர்ந்து உண்மை சார்ந்து எழுதி வந்ததால், தொடக்கத்தில் தயக்கத்தோடு ஆதரவளித்த வாசகர்கள், தங்கள் முழுமையான ஆதரவை தரத் தொடங்கினார்கள். அது மட்டுமன்றி ஆதாரங்களோடு செய்திகள் வெளியிட்டதால், சவுக்கு மீது வாசகர்களுக்கு மெல்ல மெல்ல நம்பிக்கை ஏற்பட்டது.

 

நாட்கள் செல்லச் செல்ல, மற்ற ஊடகங்களுக்கு செய்தியை தருவதற்கு பதிலாக, சவுக்கிலேயே முக்கிய ஊழல்கள் அம்பலப் படுத்தப் பட்டன. சவுக்கின் வெற்யி எந்த அளவுக்கு என்றால், இன்று ஒரு நாள் மட்டும் இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரம் வரை 48,000 பேர் படித்துள்ளனர். இன்று சவுக்கின் ஹிட்ஸ் 30 லட்சத்தை கடந்தது.

 

ஜனவரி மாதம் தொடங்கியதுமே, தேர்தல் பணிகளை சவுக்கு தொடங்கி விட்டது. அயராது உழைத்தால், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.   ஊர் கூடி இழுத்த தேர் என்று சொன்னதற்கு காரணம், சவுக்கோடு சேர்ந்து திமுகவை வீழ்த்த பணியாற்றியவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. எத்தனை பேர் உழைத்தார்கள் தெரியுமா ?   அவர்கள் அத்தனை பேருக்கும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அமைச்சராக வேண்டும், சலுகைகள் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. நாடு நன்றாக இருக்க வேண்டும். ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே…… வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

 

திமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன ஆபத்து தெரியுமா ? இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கக் கூடும்.   தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கம், இந்தியா முழுவதும் பரவியிருக்கும். எத்தனை பெரிய ஊழல்கள், அயோக்கியத்தனங்கள் செய்தாலும், தேர்தல் சமயத்தில் மக்களுக்கு பணம் கொடுத்தால் வென்று விடலாம் என்ற இறுமாப்பு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் வந்திருக்கும். பிறகு தேர்தலைச் சந்திக்க யாராவது பயப்படுவார்களா என்ன ?   இந்தக் காரணத்துக்காகத் தான் திமுக வீழ்த்தப் பட வேண்டும்.

 

கடந்த வாரம் வரை எத்தனை இறுமாப்பாக பேசினார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.   திமுகவின் நலத் திட்டங்களுக்காக மக்கள் வாக்களிப்பார்கள், ஆரிய திராவிடப் போர் நடக்கிறது, தேர்தல் ஆணையம் நெருக்கடி நிலையை அமல்படுத்தியிருக்கிறது என்று.

 

இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்…. நியாயத்தைப் பேசும் பத்திரிக்கையாளர்களை நடு ரோட்டில் வெட்டுவதற்குக் கூட தயங்கியிருக்க மாட்டார்கள்.   அதற்கு, கருணாநிதியின் ஜால்ராக்களாக இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் துணை நின்றிருப்பார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாகவும், உயர்நிதிமன்ற நீதிபதிகள் முன்பாகவும், கருணாநிதி முன்பாகவும், நான்கு வழக்கறிஞர்களை 100 ரவுடிகள் சேர்ந்து தாக்கியதை வேடிக்கை பார்த்த பேடிகள் தானே இந்த காவல்துறை அதிகாரிகள் ? இந்த காரணத்துக்காகத் தான் திமுக வீழ்த்தப் பட வேண்டும்.

 

ஜனவரி மாதம் தொடங்கி, சவுக்குக்கு ஒரு நாளைக்கு 5 அல்லது 6 மணி நேர உறக்கம் தான்.   ஏற்கனவே ஒப்புக் கொண்ட மற்றொரு எழுத்துப் பணி காரணமாகவும், சவுக்கு வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்ற காரணத்துக்காகவும் உறக்கம் இழக்க வேண்டி வந்தது. இந்தத் தேர்தலில் சவுக்குக்கு கிடைத்த முதல் வெற்றி, ஜாபர் சேட் உளவுத்துறை பதவியிலிருந்து அகற்றப் பட்டதே.   ஜாபர் உளவுத்துறையில் தொடர்ந்திருந்தால், அதிமுக இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது என்பதில் சவுக்குக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

 

2010 ஜுலை மாதம் எழுதிய கட்டுரையிலேயே ஜாபர் சேட், உளவுத் துறை பதவியிருந்து அகற்ற வேண்டும் என சவுக்கு எழுதியிருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத் தகுந்தது.  ஜாபர் சேட்டுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி, அந்த ஆதாரங்களை, தேர்தல் ஆணையத்துக்கு சவுக்கு அனுப்பி வைத்தது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறது.   ஜாபர் சேட்டிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்திய போது, சவுக்கின் புகாரும் சேர்த்து விசாரிக்கப் பட்டது என்பதையும் உங்களோடு சவுக்கு பகிர்ந்து கொள்கிறது. அனைத்து ஊடகங்களும் என் கையில், கருணாநிதி என் கையில், அனைவரது தொலைபேசி உரையாடல்களும் என் கையில் என்று இறுமாந்து இருந்தார் ஜாபர்.   அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருந்த ஜாபரை, பல கோடி ரூபாய் பணத்தை தன் வசம் வைத்திருந்த ஜாபரை, சவுக்கு எதிர்த்தது, டேவிட்டுக்கும் கோலியாத்திற்கும் நடந்த யுத்தத்தைப் போன்றது தான். இறுதியில், டேவிட்டைப் போன்றே சவுக்கும் வென்றது. ஜாபர் வீழ்த்தப் பட்டார்.

 

திமுக வீழும் என்று சவுக்கு உறுதியாக நம்பியது. வீழ்த்தப் பட வேண்டும் என்று விரும்பியது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே சவுக்கில், திமுக ஆட்சி முடிய என்று கவுண்ட் டவுன் போடப் பட்டது. அந்த கவுண்ட்டவுனைப் பார்த்து, பலர் சிரித்தார்கள், கேலி பேசினார்கள். ஆனால், இதை நடத்தியே தீருவது என்று சவுக்கு உறுதியாக இருந்தது.   சவுக்கு வாசகர்கள் பலர், தொலைக் காட்சி சேனல்களில் வந்த கருத்துக் கணிப்பை பற்றி எழுதவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். எந்தக் கருத்துக் கணிப்பும், தமிழக மக்களின் மனதை படிக்க முடியாது என்பதில் சவுக்கு தீர்மானமாக இருந்தது.   தமிழகத்தில் இருந்த சூழலில், மக்கள் வெளிப்படையாக அதிமுகவுக்கு வாக்களித்தேன் என்று வெளிப்படையாக சொல்லும் நிலையா இருந்தது ? அப்படி இருக்கும் போது கருத்துக் கேட்பவர்களிடம் மக்கள் எப்படி உண்மையைச் சொல்லுவார்கள். இதன் காரணமாகவே தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பற்றி சவுக்கு எழுதவில்லை.

 

தேர்தல் முடிந்ததும், சில மூத்த பத்திரிக்கையாளர்கள் உட்பட, பலரும், அதிமுக இப்படி ஒரு வெற்றியை பெற வாய்ப்பே இல்லை, திமுகவை வீழ்த்த முடியாது, பணம் கொடுத்து விட்டார்கள், வென்று விடுவார்கள் என்று பேசினார்கள். ஆனால் சவுக்குக்கு மட்டும், மக்கள் மீது அபார நம்பிக்கை இருந்தது. மக்கள் முட்டாள்கள் அல்ல தோழர்களே…..   1975ல் இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை அமல் படுத்திய போது, நாடு முழுவதும் கோபம் எழுந்தது. அதற்குப் பிறகு, 1977ல் நெருக்கடி நிலை முடிந்து தேர்தல் வந்த போது, அசைக்க முடியாதவர், வீழ்த்தப் பட முடியாதவர் என்று கருதிய இந்திரா காந்தியை மக்கள் வீழ்த்தவில்லையா ? இப்போது இருப்பது போல தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத காலம். வானொலி மட்டும் தான். டிவி கூட இல்லை.   அதனால், மக்கள் மீது சவுக்குக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. மக்களே பிரதானம். எத்தனை பணம் கொடுத்தாலும், அவர்களை பிச்சைக்காரர்களாக கருதினாலும், எப்படி ஒரு தண்டனையை திமுகவுக்கு கொடுத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா ?

 

திமுக மீது இருந்த கோபம், ஏறக்குறைய எதிர்க்கட்சியே இல்லாத வகையில், செய்து விட்டது.   இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

 

ஆனால் நாம் எதற்கு இருக்கிறோம் ? சவுக்கு என்ற இயக்கமாக வளர்ந்துள்ள நாம் பொறுப்புள்ள எதிர்க்கட்சி செய்யும் பணியை செய்ய மாட்டோமா என்ன ?   நல்ல விஷயங்களை பாராட்டும் அதே நேரத்தில், தவறுகளை சுட்டிக் காட்ட சுணக்கம் காட்டுவோமா என்ன ?   நமது பணி மேலும் கூடியிருக்கிறது தோழர்களே….   தொடர்ந்து பணியாற்றுவோம். வருங்காலம் நமதே.

 

வெற்றியை சுவைக்கும் இந்த நேரத்தில், இந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் என சவுக்கு குறிப்பிட விரும்புவது, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் ஆகிய இருவரையும்.   அஞ்சா நெஞ்சன் என்று வலம் வந்த சோனகிரியை, சாரி, அழகிரியின் கொட்டத்தை அடக்கி, வீட்டுக்குள் முடக்கி, ஆணவத்தை ஒடுக்கி, போட்டார் ஒரு கிடுக்கி.   பிரவீன் குமாரும், அவருடன் பணியாற்றிய அதிகாரி அமுதாவும், தேர்தல் ஆணையத்தின் மற்ற அதிகாரிகளும், செய்த பணி மட்டுமே, தமிழகத்தில் இந்த தேர்தல் நியாயமான முறையில் நடக்க உதவியது.   இவர்கள் இத்தனை கெடுபிடிகள் செய்யாதிருந்தால், சாலையில் நின்று, சட்டைப் பையில் பணத்தை திணித்து, திமுகவுக்கு வாக்களிக்க மறுத்தால், ரெண்டு அடி வேறு அடித்திருப்பார்கள்.

 

கர்நாடக மாநிலத் தலைமைச் செயலகத்தில் ‘அரசுப் பணி, ஆண்டவனின் பணி’ என்று எழுதிப் போட்டிருப்பார்கள்.   இவர்கள் செய்தது ஆண்டவனின் பணி மட்டுமல்ல, ஆண்டவனை ஆட்டி வைத்து, ஆள்வது நானில்லை என்று புலம்ப வைத்த பணி.

 

இந்த நேரத்திலே, சவுக்கு இவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறது.   ஜாபர் சேட், ராதாகிருஷ்ணன் போன்ற அயோக்கியர்கள் அதிகாரிகளாக இருக்கும் இதே தமிழ்நாட்டில் நீங்களும் அதிகாரிகளாக இருந்து சிறப்பாக பணியாற்றியதுதான் அனைத்தும் முடிந்து போகவில்லை என, எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது அய்யா. உங்களுக்கு சவுக்கு வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே……

 

Comments  

 
0 #185 Narendran 2011-05-18 15:55
http://dbsjeyaraj.com/dbsj/archives/2127 -savukku please read this. give your comments.
Quote
 
 
0 #184 Tiger 2011-05-18 10:20
இல்லை என்றால் மலையாளி புத்திசாலி ,பாண்டிகாரன் இழிச்சவையன் என்பது உண்மையாகி விடும் http://tamilnanbargal.com/tamil-articles/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
Quote
 
 
0 #183 நாய் சேகர் 2011-05-16 21:10
தமிழகத்தில் அரசாங்கத்தை எதிர்க்கும் நபர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர் அல்லது வெட்டி வீழ்த்தப்பட்டனர ். சொத்து நம்மைக்காக்கும் என்ற காலம்போய் அதுவே நமக்கு எமனாகிவிடுமோ என்ற பயமும், எப்படி முடிந்ததை காப்பார்றுவது என்று மிரட்டலுக்கு பயந்தவர்களதை விற்றவற்கள் பலபேர். காசுக்காக குழந்தைகளை கடத்துவதும் பயமின்றி கொல்வதும், பெற்றோரை நடு நடுஙகவைத்தது. கருப்புப்பணம் வைத்திருப்போர்க ளை கருப்பு அதிகாரிகளின் மூலம் விபரமறிந்து கலைஞரின் குடும்பத்திலுள் ளவரின் பெயரைச்சொல்லி திமுக ரவுடிகளால் பணம் பறித்தவர்களைப்ப ார்த்து அழுவதா? சிரிப்பதா என்று தெரியாமல் மனத்திற்குள் அழுதவர்கள் பலர். பிஹாரைவிட தமிழ் நாடு கேவலமகிவிட்டது என்று புலம்பியவர்கள் ஏண்ணிலடங்கா. கட்சியிடம் எதிர்பார்க்காமல ் உண்மையான திமுக தொண்டர்கள் தங்களின் சொந்த செலவில் கட்சிக்கு வேலைபார்த்தவர்க ள் ஓரங்கட்டப்பட்டா ர்கள். சொந்தக்காசை செலவு செய்து கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் வைகோவோடு சென்றுவிட்டார்க ள், மீதமிருந்தவர்கள ் பணத்திற்காக கூலிப்படை வேலை செய்யும் ரவுடிகாளால் புறந்தள்ளப்பட்ட ார்கள். கிட்டதட்ட தமிழ் நாட்டில் ஒரு கொடுங்கோலாட்சிய ே ஒரு குடும்பத்தலும், அவர்களின் அடிவருடிகளாலும் நடத்தப்பட்டது. ஏனெனில் கட்சிக்கும், தலைமைக்கும் பணத்தால் என்னவேண்டுமானால ் வாங்கிவிடலாம் என்ற மமதை 2ஜி, மணல், மற்றும் பல கொள்ளைப்பணம் ஊரெங்கும் விளையாடியது. இந்தக்கொடுமைகளை வெளியில்பேசக்கூ ட பயந்து ஒடுங்கி வாழ்ந்தது தமிழகம்.

----> தொடரும்
Quote
 
 
+1 #182 நாய் சேகர் 2011-05-16 21:09
கடவுளே! யாராவது உயிருக்கு துணிந்து தமிழகத்தை காப்பாற்ற கடமையைச்செய்யும ் தலைவர் வருவாரா? நல்ல திறமையான, நெர்மையான அதிகாரிகள் வருவாரா? பண்த்திற்கு விலைபோகாத பத்திரிக்கை வருமா? மக்கள் இயக்கம் வருமா? ஊழலற்ற ஒரு நல்லாட்சி வருமா? என்று ஏங்கிய பலருக்கு துக்ளக் மட்டுமே மிரட்டலுக்கு அடிபணியாமல் திமுகவின் தில்லுமுல்லுகளை வெளிப்படயாக விமர்சித்தது. அதற்கு காரணம் அவருக்கு இந்தியளவில் பெரிய தலைவர்களின் ஆதரவு இருந்தது. கருணாநிதிகூட தயங்கும் அத்வானி, மோடி, கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், நாயுடு போன்றதலைவர்கள் ஆதரவு அவரை பயமில்லாமலும் எழுதவைத்தது. ஏற்கெனெவே பலமுறை முயன்று மூக்குடைந்த கருண நிதி அதை பூணூல் பத்த்ரிக்கையென் று பத்திரிக்கைக்கே பூணூல் மாட்டிவிட்டு கண்டுகோள்ளாததுப ோல் நடந்துகொண்டார். இருந்தபோதிலும் துக்ளக் ஒரு சார்பு பத்த்ரிக்கையோ என்றும், அது சிலரால் மட்டுமே படிக்கபடுகிறது. அதைதவிர எந்த பத்த்ரிக்கையும் திமுகவை விமர்சிக்கவில்ல ை அல்லது அப்படிப்பட்ட பத்திரிக்கைகள் விட்டுவைக்கவில் லை. அது அடக்கிவைக்கப்பட ்டது, அல்லது விலைபோய்விட்டது .

அப்போது சவுக்கு எந்த பலமுமின்றி நல்ல அதிகாரிகள், பத்திரிக்கை நண்பர்கள் துணையோடு, வேலைகூட இல்லாத சவுக்கு ஆரம்பித்த இந்த வலைதள பத்திரிக்கை வாசகர்களின் துணையோடு, வாசகர்களின் வாய்மூலம் அறிமுகப்படுத்தப ்பட்டது. அந்த அலை பேரலையாகி மாறி, விஷ்வரூபமெடுத்த ு, அரச்சாங்கமே மாற துணைசெய்தது என்றால் மிகையில்லை.அதுமட்டுமில்லாம ல் வாசகர்களின் கருதுக்கள் மூலம், தெரியாத பல விஷங்களை வெளிகொண்ன்டுவர செய்தது. இதற்கு உதவிசெய்த அத்தனை உள்ளாங்கலுக்கும ் நன்றி! நன்றி! நன்றி! இது மேலும் வளர்ந்து ஒரு சிறந்த பத்திக்கையாக மலர்ந்து அனைவரையும் சென்றடையவேண்டும ்! தமிழகத்தை தவறானவர்களிடமிர ுந்து காக்கவேண்டும்!
வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!
Quote
 
 
0 #181 jaya 2011-05-16 20:32
Quoting jaya:
""ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஷீலா பாலகிருஷ்ணன், சம்பத், வெங்கட்ரமணன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தீயணைப்புத் துறை இயக்குனர் சியாம் சுந்தர் உட்பட பலர், "பொக்கே'வுடன் கார்டனுக்கு போய் வாழ்த்து சொல்லிட்டு வந்தாங்க" . ஆனால், கருணாநிதிக்கு நெருங்கி செயல் பட்டு வந்த உளவுத்துறை போலீஸ் அதிகாரி ஜாப்பர் சேட் தன் வயிற்று போக்கும் பேதியும் காரணமாக அவரால் போயஸ் கார்டனுக்கு போக முடியவில்லை என்பதை ஏனோ எந்த நாளேடுகளிலும் செய்தி வர வில்லை....

vaanthi bethi ippa thaan . suspend anavudan basemattum weak building strong endra comedy thaan ninaivukku varuthu? amma suspend order issue pannavudan appadiye jafar onnukku ponalum achariyamillai.
Quote
 
 
+1 #180 jaya 2011-05-16 20:28
Quoting பட்டிக்காட்டான் :
சவுக்கு சகோதரா!

உன் பணி போற்றுதலுக்குரி யது. கருணை கிஞ்சித்தும் இல்லாத நிதி வெறி பிடித்த கொடிய பாம்பின் பற்கள் பிடுங்கப்பட்டு விட்டது. பல்லை பிடுங்குவதில் சவுக்கின் பங்கு மகத்தானது. கொள்ளை கார குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நாம் அந்த இடத்தில் அமர்ந்து ஆட்சி அதிகாரத்துடன் நல்லாட்சி நடத்த போவதில்லை. அடுத்து நம் கவனம் திரும்ப வேண்டியது புதிய ஆட்சியை நோக்கி. எப்போதும் அதிகார வர்க்கத்துடன் போராட வேண்டியிருக்கும ் இந்த பணி சாதாரணமான ஒன்றல்ல. நாம் எப்போதும் எதிர்கட்சிதான். அதனால் நமக்கு நீண்ட இன்பம் துய்க்கும் வாய்ப்பு எல்லாம் இல்லை. ஒவ்வொரு முறையும் தீயவனை வீழ்த்தி விட்டு அதில் கிடைக்கும் மகிழ்ச்சி நீடிக்க முடியாமல் அடுத்த பாம்பை நோக்கி கம்பை (அல்லது சவுக்கை) திருப்ப வேண்டி இருக்கிறது. இந்த அயராத போராட்டத்தில் உன்னுடன் துணை நிற்போம் சகோதரா. சவுக்கு தொடர்ந்து சுழலட்டும். ஊழல் மாளிகைகள் சரியட்டும். உண்மையும் உயிரும் மட்டுமே நமது மூலதனம். மற்றதெல்லாம் நமக்கு மயிருக்கு சமம். சவுக்கு குடும்பமாய் ஒன்றிணைவோம். வென்றெடுப்போம்.

well said.... 100% true..
Quote
 
 
+1 #179 The Fuhrer 2011-05-16 17:21
Congrats Savukku....Let your(our) good work continue...
Quote
 
 
0 #178 M Ramaswamy 2011-05-16 16:33
:lol: HATS OFF TO YOU. JAI HIND
Quote
 
 
+4 #177 வடை போச்சே சங்கம் 2011-05-16 12:13
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:
1 . பெயர்: யுவகிருஷ்ணா, தொழில்: திமுக ஜாலரா, வயது: ஏழு கழுதை வயது
2 . பெயர்: புதியவன் ராஜ், தொழில்: திமுக இணைய கொ.ப.செ, வயது: 170000
3 . பெயர்: வடிவேலு, தொழில்: திமுக அல்லக்கை, வயது: வாயை அடக்கினால் அதிகரிக்கலாம்
4 . பெயர்: நக்கீரன் கோவாலு, தொழில்: பத்திரிகை விபசாரம், வயது: ங்கொய்யால இப்போ அதுவா முக்கியம்...?
Quote
 
 
0 #176 keshavan 2011-05-16 12:05
s v sekar veedu thaakapathu dmk local councillaral thaan
Quote
 
 
+4 #175 ம.பொன்ராஜ் 2011-05-16 11:58
அன்புள்ள சவுக்குக்கு,
இணையம் என்பதை தாண்டி சவுக்கு ஒரு வெகுசன பத்திரிக்கையாக வளர்த்தெடுக்கப் படவேண்டிய காலம் கனிந்து உள்ளது. எவ்வளவோ செய்துவிட்டீர்க ள்... இதை செய்ய முடியாதா உங்களால்? எனவே மாதம் இருமுறையோ, வாரம் ஒருமுறையோ வெளி வருவது போல ஒரு பத்திரிகை தொடங்குமாறு வேண்டுகிறோம். காரணம், சவுக்கில் வெளிவரும் பதிவுகள் அனைத்தும் 'வாக்கு வங்கி' என்று சொல்லப் படும் மக்களுக்கும், இந்த இனத்தின் மீது அக்கறை உள்ள படித்த இளைங்கர்களுக்கு ம் போய் சேர்ந்தே ஆக வேண்டும். கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை. அதற்க்கான சந்தா தொகையோ அல்லது தொடக்கத்திற்கு தேவையான பொருளுதவியோ கொடுப்பதை உங்கள் வாசகர்கள் கடமையாக நினைக்கிறோம். உங்களின் உழைப்பின் மீதும், நேர்மை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அது போல எங்களையும் நீங்கள் நம்பலாம். (குறிப்பு: ஒரு ஓட்டுக்கு ரூ.500 என்று கே.என்.நேரு என் குடும்பத்திற்கு கொடுத்த பணம் மொத்தம் ரூ.2500 என்னிடம் உள்ளது. அதை 'சவுக்கு' பத்திரிகை தொடங்க உங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளேன், பாவப்பட்ட பணம், புண்ணியத்தை சம்பாதிக்க போகிறது என்ற மகிழ்ச்சியுடன்....!!!)
Quote
 
 
+1 #174 Ramya 2011-05-16 10:51
வாழ்த்துக்கள் சவுக்கு அவர்களே. தலைக்கனம் பிடித்த ஊழல் பெருச்சாளிகளை தமிழக மக்கள் செருப்பால் அடித்து விரட்டி விட்டதில் உமது பங்கு மிக முக்கியமானது. இவர்கள் ஆட்சியில் செய்த அத்தனை அராஜகத்தையும் தட்டிக் கேட்க, அம்பலப்படுத்த ஆளே இல்லையா என்று அனைவரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது துணிச்சலாக நீங்கள் வந்தீர்கள். எங்கள் ஆதரவு அநியாயத்தை எதிர்த்து துணிந்து போராடும் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு.
Quote
 
 
0 #173 NADAGAPRIYAN 2011-05-16 08:54
savukuu nee oru indian thahta maddri... eppavume engaloda irrukanum.....
Quote
 
 
+2 #172 தமிழ் திரு 2011-05-16 06:31
வாழ்த்துகள் தோழரே !!!...உங்கள் பணி இந்த ஆட்சியிலும் தொடர வாழ்த்துகள் ...தேவை உங்கள் சேவை !!! நன்றி !!!
Quote
 
 
+1 #171 Anto 2011-05-15 12:19
Quoting tamil2175:
வாழ்த்துக்கள் சவுக்கு! உங்களின் பணி மென்மேலும் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கின ்றேன். சவுக்கு வாசகர் வட்டம் ஒன்றை துவக்கலாம் தானே! இதன் மூலம் சவுக்கு ஒரு இயக்கமாக மாறும். முயற்சிக்கலாமே!


No, let him be free as he can!!! when its turned to be a party/front ... its high risk to cop with others. do not bring him in the circle, let him run down like a river!!
Quote
 
 
0 #170 tamil2175 2011-05-15 09:11
வாழ்த்துக்கள் சவுக்கு! உங்களின் பணி மென்மேலும் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கின ்றேன். சவுக்கு வாசகர் வட்டம் ஒன்றை துவக்கலாம் தானே! இதன் மூலம் சவுக்கு ஒரு இயக்கமாக மாறும். முயற்சிக்கலாமே!
Quote
 
 
+5 #169 பட்டிக்காட்டான் 2011-05-15 06:42
சவுக்கு சகோதரா!

உன் பணி போற்றுதலுக்குரி யது. கருணை கிஞ்சித்தும் இல்லாத நிதி வெறி பிடித்த கொடிய பாம்பின் பற்கள் பிடுங்கப்பட்டு விட்டது. பல்லை பிடுங்குவதில் சவுக்கின் பங்கு மகத்தானது. கொள்ளை கார குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நாம் அந்த இடத்தில் அமர்ந்து ஆட்சி அதிகாரத்துடன் நல்லாட்சி நடத்த போவதில்லை. அடுத்து நம் கவனம் திரும்ப வேண்டியது புதிய ஆட்சியை நோக்கி. எப்போதும் அதிகார வர்க்கத்துடன் போராட வேண்டியிருக்கும ் இந்த பணி சாதாரணமான ஒன்றல்ல. நாம் எப்போதும் எதிர்கட்சிதான். அதனால் நமக்கு நீண்ட இன்பம் துய்க்கும் வாய்ப்பு எல்லாம் இல்லை. ஒவ்வொரு முறையும் தீயவனை வீழ்த்தி விட்டு அதில் கிடைக்கும் மகிழ்ச்சி நீடிக்க முடியாமல் அடுத்த பாம்பை நோக்கி கம்பை (அல்லது சவுக்கை) திருப்ப வேண்டி இருக்கிறது. இந்த அயராத போராட்டத்தில் உன்னுடன் துணை நிற்போம் சகோதரா. சவுக்கு தொடர்ந்து சுழலட்டும். ஊழல் மாளிகைகள் சரியட்டும். உண்மையும் உயிரும் மட்டுமே நமது மூலதனம். மற்றதெல்லாம் நமக்கு மயிருக்கு சமம். சவுக்கு குடும்பமாய் ஒன்றிணைவோம். வென்றெடுப்போம்.
Quote
 
 
+1 #168 Nellai nanban 2011-05-15 01:48
"ஆனால் நாம் எதற்கு இருக்கிறோம் ? சவுக்கு என்ற இயக்கமாக வளர்ந்துள்ள நாம் பொறுப்புள்ள எதிர்க்கட்சி செய்யும் பணியை செய்ய மாட்டோமா என்ன ? நல்ல விஷயங்களை பாராட்டும் அதே நேரத்தில், தவறுகளை சுட்டிக் காட்ட சுணக்கம் காட்டுவோமா என்ன ? நமது பணி மேலும் கூடியிருக்கிறது தோழர்களே…. தொடர்ந்து பணியாற்றுவோம். வருங்காலம் நமதே."

Vaalthukkal savuku. un panee thotara valthukirom.
Quote
 
 
+5 #167 tamilin anban 2011-05-15 01:31
இன துரோகியையும், இன எதிரியையும் வீழ்த்திய தமிழக பெருமக்களுக்கு எனது கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் காங்கிரெஸ் எப்படி ஐந்து இடங்களில் வென்றது?

கடலோர மாவட்டமான கன்னியாகுமரியில ் காங்கிரெஸ் மூன்று தொகுதியை கைப்பற்றியுள்ளத ு! தினம் ஒரு தமிழக மீனவனின் சடலம் சிங்களவன் வெறியாட்டங்களில ் ஒதுங்கும் மாவட்டம் அது. மீனவ நண்பர்களின் மரணங்களுக்கு தமிழகம் முழுவதும் காங்கிரெஸ்ஐ தண்டித்தார்கள் மக்கள். ஆனால் மீனவனின் பிணவாடை வீசுமிடத்திலே கொலைகார காங்கிரெஸ்ஐ வெல்ல வைத்தது வேதனை அளிக்கிறது..
Quote
 
 
-4 #166 asrj 2011-05-15 00:38
செம்மொழி நூலகத்தை அதிரடியாக அகற்றுவதில் இருந்து அந்த திமிர் தனம் தெரிகிறது, அம்மாவோட கவுண்டvuன் ஆரம்பமாகிவிட்டத ு அஹங்காரம் புதிய தலைமை செய்யலகதிற்கு போகமாட்டாராம் ....ஐந்து வருஷம் அனுபவித்து தான் தீரவேண்டும் ....
Quote
 
 
0 #165 j.chandran 2011-05-14 23:44
you can start your opposition party work right now...JJ is shifting the secreteriat from new building to old building.utter waste of govt money.what she is going to do the new building?i cast my vote to admk.
Quote
 
 
0 #164 rishaba 2011-05-14 22:11
Dear Savukku,

Thanks for everything. But do not hestitate to blow whistle in ADMK regime too. I sincerely hope that you will maintain an un-biased approach.

Also,Junior Vikatan has come-up with an article today about the recent kidnapping of a girl for ransom and later saved by the Police. JV has interviewed the boy's(framed as kidnapper) father who has released some photos which shows that the boy and the girl were actually lovers and that the girl's father had actually hatched a plan with the esteemed TN Police. Throw some more light about this.
Quote
 
 
0 #163 Gnanavel 2011-05-14 21:59
Hi,
I am regular reader of you blog and added your blog in my facebook also. I am really happy to get all the true details about each and every corruption in tamil nadu. Please continue these things then only we are very much happy. We expecting even after the new government is come in power in tamil nadu. Thans a lot Savukku... Keep rocking -- Gnanavel, Pune
Quote
 
 
0 #162 sugumaran 2011-05-14 21:51
Savukku
You need to be congratulated for being a great force in bringing down Corrupt,Nepotis tic,non Governance DMK government.When there was no media to raise their voice against DMK Govt, Savvuku, Dinamani and to certain extent Dinamalar contributed your might.But i would rate yours as the most daring expose of DMK.Many might not had time to read your articles visiting your site but i copied and pasted and sent to many of my friends.Likewise they have forwarded.
Once again we all citizen of Tamilnadu salute Savvukku for your great contribution.in decimating DMK.
Quote
 
 
+2 #161 பார்த்திபன் 2011-05-14 21:35
இன்று அடிக்கும் கருத்து போல மகிழ்ச்சியான ஒன்று இருந்ததே இல்லை. ராம் பிரசாத்தின் கருத்து தான் என்னுடையதும். நம்பிக்கை முற்றிலும் அறுந்து போன சூழலில் மக்களின் முடிவு அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. தினமணி யில் சொல்லியது போல மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி பெரிய கேள்விக் குறியை எழுப்புகிறது. பிரேம் குமார் கொடுத்த முதல் பேட்டி, அவர் மீது ஒரு நக்கல்-நகைச்சுவை உணர்வையே ஏற்படுத்தியது. ஆனால், அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி அவரும், சகாயம் மற்றும் குரேஷி போன்றோரும் செய்த பராக்கிரமங்கள் 'சும்மா அதிருதில்ல' ரகம் தான்.

ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு ஈட்டிய இந்த மாற்றம், சட்டியில் இருந்து அகப்பையில் குதித்தது போன்ற நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. சவுக்கு அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு, இணைய தளத்தை மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கும் தளமாக மாற்றலாம். நிச்சயமாக மிகப் பெரிய அளவில் வாசகர்கள் இணைந்து ஆதரவு தருவர். சந்தா கட்டி மட்டுமே படிக்க முடியும் விகடன், குமுதம் போன்ற மின்னிதழ்கள் பல இணை தளங்களில் காப்பி எடுக்கப் பட்டு வெளியிடப் படுவதைப் போல, சவுக்கும் சந்தா கட்டாத பலராலும் படிக்கப் படும் என்பதில் ஐயமில்லை. ஆட்சி மாறினாலும், ஆட்சியாளர்கள் மீதான பயம் ஊடகங்களுக்குப் போகவே போகாது. 5 வருடங்களுக்குப் பிறகு தான் அடக்கி வைத்ததை எல்லாம் பொங்கி வெளியிடுவர். இப்படியான சூழலில் சவுக்கின் சேவை மிகவும் முக்கியம். நாட்டின் எதிர்கால நலனின் முதல் படி இது தான். வாழ்த்துகள்.
Quote
 
 
0 #160 Jayaprakash.R 2011-05-14 21:15
Congradulations savukku, keep it up.
Quote
 
 
0 #159 Rangaraj Rajendran 2011-05-14 20:54
Dear Savukku.I am very proud of you.The anger against corruption,The interest on Democracy,tired less hard work,Brave heart all made you to achieve this.We the readers of Savukku always fear about your security.People save all of us.Even though please take care and take rest.
Quote
 
 
+2 #158 Abdul Rahman - Dubai 2011-05-14 20:18
தரமான தளத்தை படிப்பது ஓசியிலே... இதிலே சொகுசு வேறே வேண்டிக் கிடக்கிறதா? என்ற எண்ணத்தில் இத்தனை நாட்களாய் நான் சொல்லாமல் இருந்து விட்டேன். இருப்பினும், இந்த நன்னாளில் சவுக்குவிடம் இப்போது சொல்ல விரும்புகிறேன்.

தங்களது திரையின் BACKGROUND நிறத்தை (TEMPLATE-ஐ) பழுப்பு அல்லது கருப்பு நிறத்தை தவிர வேறு நிறத்தில், அதாவது, படிப்பதற்கு எளிதாக இருக்குமாறு மாற்றியமைக்கவும ்.

சவுக்கை தினமும் படிக்க பல நேரங்கள் நாங்கள் எடுத்துக் கொள்வதால், படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கிறது.

நாங்கள் ஒன்றும் சவுக்கைப் போல இளவயது காளைகள் கிடையாது. மூக்குக் கண்ணாடி அணியாமல் எங்களைப் போன்ற சிலரால் சில வரிகள்கூட படிக்க முடியாதே!!

- நன்றி !!!
Quote
 
 
+2 #157 MayiladuthuraiRajesh 2011-05-14 20:15
dear savukku


ஆனால் நாம் எதற்கு இருக்கிறோம் ? சவுக்கு என்ற இயக்கமாக வளர்ந்துள்ள நாம் பொறுப்புள்ள எதிர்க்கட்சி செய்யும் பணியை செய்ய மாட்டோமா என்ன ? நல்ல விஷயங்களை பாராட்டும் அதே நேரத்தில், தவறுகளை சுட்டிக் காட்ட சுணக்கம் காட்டுவோமா என்ன ? நமது பணி மேலும் கூடியிருக்கிறது தோழர்களே…. தொடர்ந்து பணியாற்றுவோம். வருங்காலம் நமதே."

இதே போன்று 2G விசாரன்லையும் சிபிஐ அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு, நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும்


by
Rajesh ( mayiladuthurai)
Quote
 
 
+3 #156 Abdul Rahman - Dubai 2011-05-14 19:56
சவுக்கு வாசகர்களின் சார்பாக, சவுக்கிற்கு "உண்மையான அஞ்சா நெஞ்சன்!!" என்ற பட்டத்தை வழங்குகிறோம்.

இனி, சவுக்கைத்தவிர, வேறு எந்த தொடை நடுங்கி, மொள்ளமாரி, முடுச்சவுக்கியா வது 'அஞ்சா நெஞ்சன்' என்று சொல்லிக் கொண்டு திரிந்தால், அவனைப் பிடித்து குனிய வைத்து பின்னாடியே துப்புங்கள்!!

(அடடே... பின்னாடி என்றால், முதுகிலேயே....!)
Quote
 
 
0 #155 tasmac ethiri tamila 2011-05-14 19:35
Thank u, savukku, ur sufferings now been addressed by the people. Stand as neutral as possible, we badly need a kamaraj type cm and sahayam like district collector, and kannappan like police officials now. Savukku, please record this orathanadu ADMK candidate bribed voter Rs.500 per vote, vijayabaskar Rs.500/- while ragupathi bribed Rs.250/-, in Lalgudi, Sehthooreswaran DMDK candidate bribed voters with Rs.100/per vote,most of the dmk cong people bribed voters less than 200/ per vote, and also distributed Rs.300, Ubayadullah bribed voters Rs.500/-. The nitensity of the election commission to be vigil on the last 2 days not there, that is why these bribing works clearly done by all the parties who contested this election. beyond these attempts, tamils showed their disapproval and rejection of the MUTHUVEL KARUNA ( TAMIL TRAITOR) family from politics, DMK has no future hereafter. Tamils gave up them. this is a warning to the new Government, do not treachery TAMILS, we wont forgive you traitors. be genuine to people.
Quote
 
 
0 #154 Karthick chennai 2011-05-14 19:29
Proud of YOU ... :)
Quote
 
 
-1 #153 TMS 2011-05-14 19:25
SPECIAL NEWS, SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS SPECIAL NEWS

SASIKALA KUDUMBA AATCHI AARAMBAM ( TAMIL NADU UNDER THE CONTROL OF - (1) NADARAJAN (2) SASIKALA (3) NADARAJAN BROTHER RAMACHANDRAN (4) EX JAYA PERAVAI SEC. DR. VENGADESH (5) MANNARKUDI DEVAAHAR (6) BASKARAN (7) SUDAKARAN, (8) ELAVARASI MANNAARKUDI KUDUMBA AATCHI GAME STARING FROM 13TH MAY REALY SORRY TAMILIAN
Quote
 
 
0 #152 Rajeev 2011-05-14 19:23
நீங்கள் செய்யும் பணி மிகவும் பாராட்ட தக்கது. கீப் இட் அப் சவுக்கு அவர்களே.
Quote
 
 
0 #151 Rajeev 2011-05-14 19:06
கள் செய்யும் பணி மிகவும் பாராட்ட தக்கது. கீப் இட் அப் சவுக்கு அவர்களே.
Quote
 
 
0 #150 Srivathsan KM 2011-05-14 19:03
My congrats and wishes for your work. I have been reading and spreading your messages to my fraternity. May your good work continue.
Quote
 
 
0 #149 வெற்றி எ இம்தியாஸ் 2011-05-14 18:48
வாழ்த்துக்கள் சவுக்கு! உங்களின் பணி மென்மேலும் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கின ்றேன். சவுக்கு வாசகர் வட்டம் ஒன்றை துவக்கலாம் தானே! இதன் மூலம் சவுக்கு ஒரு இயக்கமாக மாறும். முயற்சிக்கலாமே!
Quote
 
 
0 #148 surya algatz 2011-05-14 18:35
thankz savukku
:-) :-)
surya algatz
Quote
 
 
0 #147 Amil 2011-05-14 18:33
வாழ்த்துக்கள்!! !
Quote
 
 
+2 #146 Avinash 2011-05-14 18:05
Savukku fans... see dis and enjoy!!!

http://www.youtube.com/watch?v=Py9tk4WqX0o
Quote
 
 
+1 #145 anniyan 2011-05-14 17:50
ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு பேசுகிறீர்கள் போலத் தெரிகிறது. மறுபடியும் சொல்கிறேன், சவுக்கு வாசகர்கள் நீங்கள் வேறு பதிவில் எழுதியது போல் பாமரத்தனமானவர்க ள் அல்ல. ஜெயலலிதா ஆட்சியில் தேனும் பாலும் ஓடும்.. தங்கத்தால் சாலைகள் போடப்படும்.. இலங்கையில் பாதியைப் பிரித்து தமிழ் ஈழம் உருவாகிவிடும் என்றெல்லாம் நாங்கள் பகல் கனவு காணவில்லை.

ஜெயலலிதா பகலில் சீறும் மஞ்சள் நாகம், பார்வைக்கவது அகப்பபடும் ; கருணாநிதி இருளில் சத்தமில்லாமல், வலியே தெரியாமல் கடிக்கும் கருநாகம். அவ்வளவுதான் வித்தியாசம்

உங்கள் பாமரத்தனத்துக்க ு ஒரு செய்தி: ஏற்கெனவே சசிகலாவும் சோனியாவும் பேரம் பேசிவிட்டார்கள் . (Press statement from Dr.Subrmanian Swamy)
*
Congress managers have now begun looking for new coattails for Lok Sabha
elections which can come early. *It is** shocking to learn that yesterday
barely hours after the final results were in, Sasikala, Maitreyan MP and
Ahmed Patel held a three way conference call to assure that "Sonia Madam's
interest will be protected" by the new Tamil Nadu elect CM Jayalalitha.*

Quoting ம.பொன்ராஜ்:
நீ கலக்கு சித்தப்பு...!!!
ஜெயலலித்தா "ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்ற கூண்டில் ஏற்றுவேன்" என்று (செய்கிறாரோ இல்லையோ) சூளுரைத்தாரே.....? அட அந்த வீணா போன கருணாநிதி ஒரு பேச்சுக்கு கூட இப்படி சொல்லலியே? இது தான் சவுக்கு எனக்கு ஆத்து ஆத்து போகிறது...!!! உண்மையிலேயே ஜெயலலித்தா ஈழத் தமிழனுக்கு எதையும் செய்யாவிட்டாலும ், அவர் எந்த தீங்கையும் துரோகத்தையும் செய்யமாட்டார் என்று அவரது வார்த்தைகள் தெரிவித்து விட்டன. ஒண்ணா சேர்ந்து சிங்களனை பின்னி பெடல் எடுப்போம்... இனி முட்டுக்கட்டை போட ஒரு நாயும் கிடையாது...கம் ஆன்....!!!
Quote
 
 
0 #144 ravittp 2011-05-14 17:44
வாழ்த்துக்கள். உங்கள் பணி இந்த ஆச்சிலும் தொடர வேண்டும்.
Quote
 
 
0 #143 Kannan 2011-05-14 17:39
சவுக்கு அவர்களுக்கு

உங்கள் ஓய்வு இல்லாத உழையிப்புக்கு மிகவும் நன்றி
உங்கள் பயம் இல்லாத மனதுக்கு மிகவும் நன்றி

உங்களை எழத துன்டியவுர்களுக ்கு மிகவும் நன்றி
உங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கு மிகவும் நன்றி

இடிப்பார் இல்லாத மன்னர் (JJ) நல்லாட்சி தர மாட்டார்
உங்கள் பணி தொடரும் என்று நினைக்கிறேன்....

மிக்க நன்றி

-கண்ணன்
பெங்களூர்
Quote
 
 
0 #142 Suresh Raja 2011-05-14 17:39
அப்புறம், இந்த திமுக சொம்படிச்சான் பிரிவு தலைவர் யுவகிருஷ்ணா எங்கப்பா? யாரவது அவரோட வலைதள முகவரி குடுத்தால் மகிழ்ச்சி. என்ன தான் கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஓட்டலன்னு சொல்லி சப்ப கட்டு கட்டிருப்பாரு... பாத்து சிரிக்க வேண்டாமா!!!! (எல்லாம் ஒரு வில்லத்தனம் தான்) :-?
Quote
 
 
0 #141 Suresh Raja 2011-05-14 17:34
வாழ்த்துக்கள் தோழா. நீங்க சொல்றது 95% நடப்பது உண்மையில் ஆச்சர்யம். நீங்க பேசாம ஜோசியம் சொல்லப்போகலாம்.... சரியான காசு.... :-) நானும் உங்களை (வலைதளத்தை) பல மாதங்களாக கவனித்து வருகிறேன். மிக்க மகிழ்ச்சி... என்னைப்பொறுத்தவ ரை நீங்கள் ஏற்கனவே எதிர்க்கட்சி செய்யும் வேலையை பல வருடங்களாக சிறப்பாக செய்துவருகிறீர் . அது தொடர வேணும்.
உங்களுக்கு திரும்பவும் உங்கள் உளவுத்துறை வேலை கிடைக்கும். அதுக்கு கவுண்டவுன் போடுங்க... :-)
ஆமா நம்ம கூத்தர் ஆளையும் காணும் பேரையும் காணும்... பாவம்ப்பா... அவருக்கு ஒரு TGP post (Toilet Governing Police) குடுத்திருங்கப் பா... :cry:
அப்புறம் நம்ம குஞ்சாமணி எதோ சொல்லிக்கிட்டு திரியுதாமே? அட கொஞ்சம் தண்ணி வைங்கப்பா....
காவளிப்பய திருமா அப்படிங்கிற தெருநாய் எல்லா தொகுதிலையும் தோத்தது ரொம்ப சந்தோசம்.
டவுசர்தாஸ், காங்கிரஸ் மொத்தம் 8 தொகுதில ஜெயிச்சது தான் கொஞ்சம் வருத்தம். :eek: இவிங்கள எல்லாம் கோமணம் கூட இல்லாம ஓட விட்டுருக்கணும் .
Quote
 
 
0 #140 Madan Sundararaju 2011-05-14 17:33
அன்புள்ள சவுக்கு,
மனமார்ந்த வாழ்த்துக்கள்... பல நாட்கள் எனக்கு பயமாக இருக்கும், இப்படி தைரியமாக எழுதுகிறாரே, இவருக்கு எதுவும் தப்பாக நடந்து விடக்கூடாதே என்று..

நீங்கள் சொன்னது போலே, தமிழன் "தன்மான தமிழன்" என்பதை நீருபித்து விட்டன!!!!

மனசுக்கு நிறைவாக இருக்கிறது!!!

-மதன்
Quote
 
 
0 #139 SureshBabu 2011-05-14 16:58
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்கும் முன் அதிமுகவின் பொற்கால ஆட்சி தொடங்கியது
இரவோடு இரவாக எஸ். வீ சேகர் வீடு அதிமுக ரௌடிகளால் தாக்கபட்டது... Keep It Up
Quote
 
 
0 #138 tamil_123 2011-05-14 16:30
%%பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?%%


வீரமணி என்ற குஞ்சாமணி எழுதியது மேற்சொன்ன வார்த்தைகள் தமிழக தேர்தல் முடிவுகளை பற்றி.

திமுக அரசு மக்களுக்கு உதவிகளை செய்ததாம், உதவி.. என்ன ஒரு பொறுப்பற்ற/ கேவலமான வார்த்தைகள்? அரசு என்பது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அமைப்பு.. அது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை என்பது உதவி ஆகாது.. இது கூட இந்த குஞ்சாமநிக்கு புரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது.
Quote
 
 
0 #137 nalloril oruvan 2011-05-14 16:28
nallor ulla variyil aram vellum.
Quote
 
 
0 #136 savukkufan 2011-05-14 16:23
Thanks a lot for your service.
Please continue this.
All the best.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 172 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4777
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week36990
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month271037
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13187404