முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அடுத்து என்ன செய்வது ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 54
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 05:30

சவுக்குக்கு எழுதிய பின்னூட்டத்தில் ஒரு அன்பர், 

“சவுக்கிடம் ஒரு கேள்வி,, சவுக்கு உங்களைப்போல் ஒன்றிரண்டு இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பார்க்கிறேன், இந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் கதை தொடர்ந்து அப்படியேதான் தொடர்கதையாக இருக்கிறது, நீங்களும் வருமானத்தையும் வாசகர்வட்டத்தையும் பெரிதாக்கிக்கொண்டு போகின்றீர்களேதவிர, இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ, மாற்றத்திற்கான எந்த ஒரு சலனமும் தட்டவில்லையே, உங்களைப்பொறுத்தவரைக்கும் ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி, இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா, ஏனென்றால் எவ்வளவுதான் கேவலமாக எழுதினாலும் எவரும் சட்டை செய்வதாகவும் தெரியவில்லை,அவர்கள் தங்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்து செத்தவீட்டை நடத்திக்கொண்டுதானே இருக்கின்றனர், savukku and Team Should answer this Question ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி,இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா ? What is next Step ? What we want to do Next ? “

என்று கேட்டிருந்தார். 

சமீபத்தில் சந்தித்த ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாளர் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்க வைப்பது. வெற்றிகரமான பத்திரிக்கையாளராக இன்று வரை இருந்து வரும் அவர், விரைவில் பத்திரிக்கை தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லப் போகிறேன் என்று கூறினார். 

ஏன் என்று கேட்டதற்கு, நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தொடக்கத்தில் நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்த போது, இந்தச் சமுதாயத்தையே மாற்றிப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன். ஆனால் நாளடைவில் பத்திரிக்கை தொழிலில் இருந்து கொண்டு அது போல எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து, ஏதோ நம்மால் இயன்றவற்றை செய்யலாம் என்று தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். 

ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பாவது பத்திரிக்கையில் எழுதினால் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும். நடவடிக்கை இருக்கும். ஆனால் இப்போது சூழல் மிக மோசமாக மாறி விட்டது. ஆதாரத்தோடு பத்திரிக்கையில் எழுதினால் கூட எதுவுமே நடக்க மாட்டேன்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ரோடு சரியில்லை, விவசாயிகள் பிரச்சினை, காவல்துறையிலும் மற்ற துறைகளிலும் ஊழல் என்று நான் எழுதியது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

இன்றும், சாலை சரியில்லை, ஊழல் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் போது, நான் எதற்காக பத்திரிக்கை துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் ? ஜனங்களே காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிலைக்கு சமுதாயம் சீரழிந்து விட்ட நிலையில் வேறு ஏதாவது நேர்மையான தொழில் செய்து பிழைக்கலாமே என்று அவர் கேட்ட கேள்வி, சவுக்கை சிந்திக்க வைத்தது.

இருபது ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் பின்னோக்கித் தானே செல்கிறது ? இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உண்ணாவிரதம் இருக்கவும், ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் இருந்த உரிமைகள் கூட இன்று இல்லையே ?

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது எழுந்த முந்த்ரா ஊழலால், டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேரிட்டதே. ஒரே ஒரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினாரே.. …. ?

25 ஆண்டுகளுக்கு முன்பு கூட, சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற குற்றச் சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகினாரே ?

இன்று என்ன நிலை ? சட்ட விரோதமாக எதிர்க்கட்சியினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வந்த போதும் குறைந்த பட்சம் குற்றம் சாட்டப் பட்ட நபரை அந்தப் பதவியை விட்டு மாற்றுவதற்கு கூட கருணாநிதி தயாராக இல்லை. மாற்றுவதற்கு தயாராக இல்லாததால், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பின் பின்னணியில் உள்ளது கருணாநிதி தானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஊழல் பரவிக் கிடக்கிறது. ஊழல் புற்று நோயைப் போல, அனைத்து இடங்களிலும் புரையோடிப் போய் இருக்கிறது. ஆனால் இந்த ஊழலோடு சமரசம் செய்து கொண்டு, இந்த ஊழலில் நாம் எப்படி பங்கு பெறுவது என்ற ஆர்வத்தோடு உள்ளது நமது சமூகம். இப்படிப் பட்ட சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் ?

காந்தி படத்தில் ஒரு காட்சி வரும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வெள்ளையர் அல்லாதவர்களுக்காக வழங்கப் பட்ட அடையாள அட்டையை கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார். அந்த போராட்டத்தில் காந்தி கடுமையாக தாக்கப் படுவார். அதையொட்டி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார். 

காந்தி தாக்கப் பட்டதையும், கைது செய்யப் பட்டதையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை பெரிய அளவில் செய்தியாக வெளியிடும். இதைக் கண்ட தென்ஆப்பிரிக்க ஆங்கிலேய அரசாங்கம், உடனடியாக காந்தியையும் மற்றவர்களையும் விடுதலை செய்து உத்தரவிடும்.

இன்று ஊடகங்கள் இருக்கும் சூழலை எண்ணிப் பாருங்கள். எண்பது விழுக்காடு பத்திரிக்கைகள் கருணாநிதியின் கட்டுப் பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில் கருணாநிதியை மீறி ஊடகங்களில் செய்தி எப்படி வெளி வரும் ? மீதம் உள்ள இருபது விழுக்காடு ஊடகங்கள் எதிர்க்கட்சி ஊடகங்களாக இருப்பதால் அதற்கான நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.

அதையும் மீறி ஏதாவது ஊடகத்தில் அரசுக்கு எதிரான செய்திகள் வருமானால், அதை எழுதிய செய்தியாளரைப் பற்றியும், அவர் சாதியைப் பற்றியும், விலாவரியாக ஆராய்ந்து, முரசொலியிலேயே, படிக்கக் கூசும் அளவுக்கு, சிலந்தி, காராபூந்தி என்று ஏதாவது ஒரு பெயரில் எழுதுவது.

இதுதானே இன்றைய சூழல் ? இன்று சவுக்கு தளத்தில் வெளிவரும் குற்றச் சாட்டுகளை வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயாராக இருக்குமேயானால் சவுக்கு என்ற தளம் எதற்கு ?

அரசியல் சீரழிந்து விட்டது. ஊடகங்கள் தரம் தாழ்ந்து தங்களது சுதந்திர மன நிலையை இழந்து விட்டன. நம்பகத் தன்மையை இழந்து விட்டன. சரி நீதிமன்றத்திலாவது நியாயம் கிடைக்குமா என்றால், இது எல்லாவற்றையும் விட, மோசமான சூழலில் தான் நீதிமன்றம் இருக்கிறது.

தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு அளித்ததால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் மொழி வளரவில்லை என ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு எப்படி வேண்டுமானாலும் வரி விலக்கு வழங்கலாம் என்று தீர்ப்பு.

போலி என்கவுண்டரில் தொடர்ந்து படு கொலைகள் நடந்து வருகின்றன என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஐபிஎல் மார்ச் மாதத்தில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், இது குறித்து மத்திய அரசுக்கு புகார் அனுப்பவும் என்று தீர்ப்பு.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் ஒரு நபர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு நியமித்துள்ள ஆர்.டி.ஓ விசாரணையை நம்பி, பொது நல வழக்கை தள்ளுபடி செய்யும் உயர்நீதிமன்றம்.

அணு உலை நஷ்ட ஈடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு நோட்டீஸ் கூட வழங்காமல் வழக்கை தள்ளுபடி செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் இருக்கும் போது அவனை கைது செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், பத்திரமாக டக்ளஸ் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் வரை, வழக்கை தள்ளி வைத்து விட்டு, இலங்கை சென்றவுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமை நீதிபதி.

கருணாநிதிக்கு வண்டி தள்ளுபவர்கள் திடீரென்று ஒரே நாளில் 75 லட்ச ரூபாய் கட்டுகிறார்கள். அது ஊழல் செய்து சம்பாதித்த சொத்தாக இருக்கும் அதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால் விசாரணை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவர்கள் மூன்று பேரும் அந்த மனையை “கை மாற்றி“ விட்டு விட்டதால் அவர்கள் மீது விசாரணை நடத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு கூறும் ஒரு நீதிபதி.

பள்ளிக் கட்டணத்தை சீரைமைக்க அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க தடை விதிக்கக் கோரி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் நீதிமன்றத்தை அணுகிய வழக்கில், மாணவர்கள் சார்பில் ஒரு பொது நல விரும்பி, அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டி அணுகிய போது, கோவிந்தராஜன் கமிட்டி வருவதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று கேட்கும் ஒரு பொறுப்பற்ற நீதிபதி.

இந்தச் சூழலில் தான் நாம் இருக்கிறோம். நமக்கு முன்னே இப்போது இருப்பது ஒரு சில வழிகள் தான்.

ஒன்று எது நடந்தாலும் கவலைப் படாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது

இரண்டு, கொள்ளையடிப்பவர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது பங்குக்கு கொள்ளையடிப்பது.

இந்த அநியாயங்களை காணச் சகியாமல், அஷோக் குமார் போல தற்கொலை செய்து கொள்வது.

அல்லது, எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது.

இதில் எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய தாராளமய பொருளாதார சூழலில், எந்த வழியிலாவது உடனடியாக பணக்காரனாக வேண்டும், ஊரை அடித்து உலையில் போட்டாவது நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 98 சதவிகித மக்களின் மனநிலை உள்ள சூழலில் எழுதுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தொடர்ந்து போராடுவதையும் தவிர வேறு என்னதான் செய்வது என்று சவுக்குக்கு தெரியவில்லை. சவுக்கின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லையா என்றும் தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

 

Comments  

 
0 #38 sivakumar 2011-03-31 18:36
Dear Mr.Savukku,

I am new in your site. I am reading regularly.Kindly arrange meeting for all the readers.we will meet & do .

we will make good society .
Quote
 
 
+1 #37 sathya 2011-03-03 18:43
நீங்கள் எடுத்துள்ள முயற்சி பாராட்டக்குரியத ு.
நம்மை சுற்றி அநீதியும் அவலங்களும் நடைபெற்று கொண்டு தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதை மக்களுக்கு எடுத்து சொல்ல தவறிய 'Mainstream newspapers', மத்தியில் "சவுக்கு" -ன் பணி வரவேற்கபடுகிறது .
அதே சமயம், தவறுகளை கேள்வி கேட்கும் "சவுக்கு", எங்களை வழிகாட்டவும் வேண்டும்.
நாட்டில் நடக்கும் நல்ல முயற்சிகளையும் எங்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அதை பின்பற்றி நாங்களும் எங்களால் முடிந்த செயல்களை செய்து பார்கிறோம்.
தவறுகளை சுட்டி காண்பது, "சவுக்கு"-ன் பணியின் ஒரு முனையாக இருப்பின், மறுமுனை நல்ல முயற்சிகளை எடுத்துகூறுவது.
அதை நீங்கள் செய்வீர் என்று நம்புகிறேன்!
'நாளைய பொழுது நமது,' என்று புறப்படுவோம்!
நன்றி.
Quote
 
 
0 #36 kamalinatarajan 2011-03-01 14:55
Nice real and interesting
Quote
 
 
0 #35 kps5755 2011-02-17 06:17
I am a person weeping with in mind and can do nothing and to be counted against the 98%. I am so much surprised about your boldness and for that I am bowing my head before you in respect
Quote
 
 
0 #34 CHITHJIRAI G 2011-02-05 16:24
thiravida munnetra kazhakam atchi olizha makkal anaivarum onru thiralavendum appothuthan makkal atchi malarum enbathu makkalin kannavu
Quote
 
 
+4 #33 அநானி 2011-01-22 09:38
சவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள து உண்மை. சவுக்கைப் படிப்பவர்கள் மற்றவர்களுக்கும ் அறிமுகப் படுத்த வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை
Quote
 
 
0 #32 Vaedhampudhidhu 2010-12-30 14:33
Anaithu thuraigalayum kanganikum RAW Intelligence in porupu naatil nadakum theemaigalai, adhu arasiyal aanalum satham podamal pootu thalluvaargalae , avargal kooda va urangivitaargal ?
Quote
 
 
0 #31 Devi 2010-12-25 16:07
nice & interesting news :eek:
Quote
 
 
+2 #30 Kanian 2010-11-17 11:50
----
MK says - all are blaming Raja because Raja is a dalit.

We fought for Bofors scam against Rajiv Gandhi.
We fought for Fodders scam against Lallu Prasad Yadav.
We fought for Corruption scam against Jaya.

Is Rajij Gandhi a dalit ?
Is Lallu Prasad a dalit ?
Is Jaya a dalit ?
Is Sukram dalit ?

--------
Quote
 
 
0 #29 Raj 2010-11-10 21:05
Respectful Mr. Savukku,

I really appreciate your effort in revealing the real faces of people in politics, police dept, and other government officials...

do you think organising a team like ramana mmovie would be a suitable way to purify the correpted india?
Quote
 
 
0 #28 citizen 2010-10-08 19:19
nenchu poorkuthilaya intha nilai ketta manithari ninthu vittal..
soolladi sivasakthi rnnai sudar mugum arivudan padithu vittai..
vallami tharoyoo intha manidam nilai pera valvathrkku..
mahakavi bharthi,,,,
Quote
 
 
+3 #27 lakshmidharan 2010-10-01 11:17
சவுக்கு போன்ற துணிவு கொண்ட நெஞ்சங்கள் எல்லாம் ஒன்றிணைந்து பாடுபட்டால் மட்டுமே பணம், பதவி, காவல் துறை, ஊடகம், அடியாள் ஆகிய அணைத்து பலமும் கொண்டவர்களை எதிர்ப்பது சாத்தியம் ஆகும்.
Quote
 
 
+2 #26 lakshmidharan 2010-10-01 11:10
சவுக்கில் வந்த கட்டுரையை அச்சடித்து வினியோகம் செய்தால் நல்லது.நாம் ஏற்படுத்தும் இதுபோன்ற சிறு அதிர்வுகள் பெரிய அலைகளை விரைவில் ஏற்படுத்தும். அப்போது இவ்வுலகத்தில் விடிவு பிறக்கும்.என்றாவது ஒரு நாள் ஒரு புரட்சி வெடிக்காமலா போகும்? ஊதுகிற சங்கை ஊதுங்கள். நிச்சயம் ஒரு நாள் விடியும்
Quote
 
 
+2 #25 Hoctal 2010-09-29 08:02
பொதுமக்கள் மாறாதவரை மாற்றம் என்பது இல்லை. பொதுமக்கள் மாற விழிப்புணர்வு வேண்டும். விழிப்புணர்வு வந்தால் புரட்சி வரும். புரட்சி வந்தால் மாற்றம் வரும்.
Quote
 
 
0 #24 neruppu 2010-09-24 17:59
ashok kumar pattri oru unmaiyai yella udagangalum maraithu vittana. ashok kumar payanitha perunthil oru veli nattu pennum payanithaal. oru sattam paditha miurgathai pola avalin andharanga idathai thottu kondum aluthi kondum vanthan ashok kumar. adhodu vidavillai avan. thanadhu satta thimirai police idam kaattinaan. naan yaaru theriyuma law college student yendru sonnadhodu mattum illamal. kaaval thuraiyinari kevalamaga thittinaan. idhai yellam kettukondu oru kaaval thuraiyil velai parpavargal vaayil viralai vaithu sappikondu irukkava vendum yena ninaikireergala . saatharana manithan seithal thappu satta kalluri manavan seithaal thappu illaya. idhil thalith yendra porvail adharavu kuralgal. veli naathu penn yenpadhaal periya prachanai varum yena melidathil irrundhu amaithi kaaka utharavu. police mugathi kilikkum savukkuku idu oru savaal. matra oodagangalai pol allaamal unmayai neengalavathu veliyidungal parkalam.
by neruppu
unmai sudum
Quote
 
 
+1 #23 Sri 2010-09-19 16:19
Hi Savukku, your blog is simply GREAT !! I really appreciate your courage and persistence. Good luck with everything !!!
Quote
 
 
+1 #22 warrior within 2010-09-19 12:37
Savukku avargalukku,

My friend told me about this website. Am a guy who is very patriotic. A guy who cries for his nation for being demolished by these politicians. Am unable to fight against these ppl. Terrorists are not those who are hiding in Afghanistan. They are here in the name of "Politicians". Only God can save our nation. thats no way possible.
Any IMMORTAL(Azhivi lladha Manidhan) there living in the country?? I don think so..

PEOPLE SHOULD OPEN THEIR EYES.. FORGET THEIR so called IT WORLD. THEY HAVE TO FEEL THE PAIN that OUR NATION IS EXPERIENCING.

HUGE DEMONSTRATIONS IN EVERY AREA, CONTESTED BY YOUTHS and RESPECTED CITIZENS can be done..

SAVUKKU BANNERS CAN BE HANGED OUTSIDE IN THE CITIES..

REVOLUTIONALIZE THE SITE..

HATS OFF TO SAVUKKU for taking the INITIATIVE..
Quote
 
 
+2 #21 2009kr 2010-09-19 09:46
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள், எறும்பு ஊற கல்லும் தேயும்... கண்டிப்பாக நல்ல மாற்றம் வரும்...
Quote
 
 
+3 #20 kumarkk 2010-09-18 23:21
என்றாவது ஒரு நாள் ஒரு புரட்சி வெடிக்காமலா போகும்? ஊதுகிற சங்கை ஊதுங்கள். நிச்சயம் ஒரு நாள் விடியும்
Quote
 
 
+1 #19 சிராஜ் தீன் 2010-09-18 20:09
தனிமனித ஒழுக்கமே தீா்வு, இதனை எந்த வித மான புரட்சியாலோ, அல்லது புத்தகங்களில் துாங்கும் சட்டதிட்டங்களால ோ கொடுக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை!!!
Quote
 
 
0 #18 Dilipkumar 2010-09-17 06:45
Continue what you are doing now relentlessly. Dont be disheartened. Many people are not aware of savukku.Try to give more publicity to the website through sms.Try to reach out to people who cannot read tamil by linking up with similar other langauage sites.I myself came to know about it only a few days ago.A day will come when all these politicians will be overthrown by the fury of the public as it happened during the French revolution and the public hanging of Marcose and Imelda. We have to continue patiently and vigorously.
Quote
 
 
+2 #17 ரோஸ்விக் 2010-09-17 04:07
இதுதான் வேண்டும். நாம் ஏற்படுத்தும் இதுபோன்ற சிறு அதிர்வுகள் பெரிய அலைகளை விரைவில் ஏற்படுத்தும். அப்போது இவ்வுலகத்தில் விடிவு பிறக்கும்.

வாழ்த்துக்கள் சார்.
Quote
 
 
+2 #16 ரோஸ்விக் 2010-09-17 04:05
//எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது.
//

இதுதான் வேண்டும். நாம் ஏற்படுத்தும் இதுபோன்ற சிறு அதிர்வுகள் பெரிய அலைகளை விரைவில் ஏற்படுத்தும். அப்போது இவ்வுலகத்தில் விடிவு பிறக்கும்.

வாழ்த்துக்கள் சார்.
Quote
 
 
0 #15 Boobalan 2010-09-16 12:03
ஆண்டனி வளன், You have expressed whatever I have in my mind!! What to do, it's the fate of India!! No one can change until people themselves start KILLING those who involves in corruption!!!
Quote
 
 
0 #14 seshadri 2010-09-15 14:41
erumbu oora kallum theyum.
Quote
 
 
+2 #13 Eswaran 2010-09-13 22:49
மக்கள் என்ன நடந்தால் என்ன நமக்கு பிரச்னை வராமல் இருந்தால் சரி என்று நினைக்கும் வரை பத்திரிகைகளால் ஒன்றும் செய்ய முடியாது.....இல்லா விட்டால் ராகுல்காந்தி, அசின் போன்ற தமிழ் இன துரோகிகள் தமிழ் நாட்டுக்குள் வந்து பல்லை காட்ட முடியுமா..........
Quote
 
 
0 #12 saravanankm 2010-09-13 18:25
we want to implement new rules in our country. then only we can decrease this type of illusions.
Quote
 
 
0 #11 Senthil.S 2010-09-13 09:26
Savukku sir,

Everybody will act to Indian (thatha) or to kill corrupted politician and govt officers like Ramana movie.
Quote
 
 
+2 #10 dhanasekar 2010-09-12 07:50
WE PEOPLE BELIEVE YOU ARE THE PRIME PERSON NEEDED IN THIS SOCIETY.
DONT DISCOURAGE YOURSELF
BE POSITIVE
YOU ARE POINTING FEW JUDGES. BUT REST?
THEY WILL SUPPORT DEMOCRATIC ONLY.
WE HAVE MORE FAITH ON INDIAN JUSTICE.
ALL THE BEST....
Quote
 
 
0 #9 ezhilamudhan.e 2010-09-11 12:01
SAVUKKU THOZHARGALUKKU! NAAM SEYYUM PANIGALAI THODARNDHU SEIDHUKONDE IRUPPOAM KAALAM NALLA MUDIVAI THEERMAANIKKUM! SAMUGATHTHIL 2 OR 3% UNMAIYAANAVARGA LIN SEYALGALDHAAN VARALAARAAGA ULAGHIL NIGAZHNDHUKONDU LLADHU YENAVE THOYVILLAAMAL THODARVOAM.... TAMIZHARGALUKKU OOR THAAYAGAM AMAIYUM VARAI.....
Quote
 
 
+1 #8 ரோமிங் ராமன் 2010-09-11 08:29
//ஒன்று எது நடந்தாலும் கவலைப் படாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது
இரண்டு, கொள்ளையடிப்பவர் களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது பங்குக்கு கொள்ளையடிப்பது//
இந்த தேசத்தின் மீது பெரும் பக்தியும்,காதலு ம் கொண்ட எனக்கும் சில நாட்களாக இதே எண்ணம்தான் உள்ளது!! நாம் எல்லோருமே குடும்ப மற்றும் சமூக நிர்பந்தங்களுக் கே முக்கியத்துவம் தர வேண்டி உள்ளதாலா??
Quote
 
 
0 #7 babu 2010-09-10 21:46
there is no other way except to write.corruption has swallowed every thing. money & power is ruling all the things. Root for all this bad things started from 1967.
Quote
 
 
+2 #6 ஆண்டனி வளன் 2010-09-10 18:00
சரித்திரத்தில் படித்த அத்தனை புரட்சியாளர்களை யும் இப்போது ஒருசேர கொண்டு வந்தால் கூட இங்கு எதுவும் செய்ய முயாத சூழ்நிலை..ஓன்று மட்டும் ஆறுதல்..நாட்டில் என்ன நடக்கிறது ,சரியா தவறா என்று சிந்திக்க கூட மக்கள் இல்லாத சூழலில்,சமூகத்த ின் அவலங்களின் மீது கோபப்பட இன்னமும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பது கண்டு மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்!! ..தோழமையுடன் ஆண்டனி வளன்...
Quote
 
 
+2 #5 eazhavirumbi 2010-09-10 14:22
தி.மு.க. ஆட்சி அகலும் என்று காத்திருக்கும் இன உணர்வாளர்களில் நானும் ஒருவன். அது நடக்க தான் போகிறது. அதே சமயம் காங்கிரஸ் எதோ நல்ல கட்சி போலவும் அது யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும் என்பது போலவும் ஒரு மாயத்தோற்றம் ஊடகங்களால் உண்டாக்கபடுகிறத ு. காங்கிரஸ் இனி தமிழ் நாட்டில் உருப்படி ஆவதில்லை என்பதை உணர்ந்து விட்டார்கள் மக்கள். நின்று நிதானமாய் யோசித்தால் தமிழ் நாட்டில் கட்சிகள் எல்லாம் தகாத உறவு கூட்டணி வைத்துள்ளதை கண்கூடாய் உணரலாம். திருமா வைகோ நெடுமாறன் அய்யா இவர்கள் எல்லாம் என்றோ இனநிந்திருக்க வேண்டும் ஆனால் எல்லாம் மாறி மாறி கிடப்பதால் மக்கள் குழம்பி கிடக்கிறார்கள். தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை விட முக்கியம் ஈழம் மலர வேண்டும் என்பது தான். மக்கள் எதோ அதை மறந்து விட்டது போன்ற தோற்றம் ஏற்படுத்த முயலும் ஒரு சில ஊடகங்களை சவுக்கு தான் மக்களக்கு உணர்த்தி கவுன்ட்-டோவ்ன் ஆரம்பிக்க வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன் . தொடரட்டும் சவுக்கின் சத்யபயணம். மாறட்டும் தமிழ் நாட்டின் தலைவிதி. மலரட்டும் ஈழத்தில் புதுவிதி.
Quote
 
 
0 #4 radhakrishnan 2010-09-10 13:15
Potrubhavar potrattum!!
puzhudhi vaari thootrubhavar thootrattum!

makkal pani thodarattum!

maatram oru naal malarndhe theerum!!
Quote
 
 
+2 #3 சிவக்குமார் 2010-09-10 12:14
எதிற்மறை கருத்துக்களை ஒதுக்கிவிட்டு , ஜனநாயகம் தளைத்தோங்க ஆவன நாம் செய்ய வேண்டும் ... இப்படிக்கு மீதமுள்ள 2% - ல் ஒருவன் ...
Quote
 
 
0 #2 Karthick 2010-09-10 11:58
naan en nanban vayilaga intha website therinthu konden. really superb... yarukkum bayabadama neega ezhuthura unga thiriyam, kuttrasaattukal ai aatharapoorvama ga solra unga paangu.

Vaazhukkal
Quote
 
 
0 #1 chinna 2010-09-10 04:53
your service is valuable and needy for social awareness of our nation particullary Tamilnady.Please continue your service
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள் மற்றும் 3 உறுப்பினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6436
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week38895
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month241627
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12763746