முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
இதயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள் கருணாநிதி......!!!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 87
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 20 மே 2011 20:46

கனிமொழியின் முன் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப் பட்டு, உடனடியாக கனிமொழி மற்றும் சரத் குமாரை கைது செய்யுமாறு, டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. நீங்களும் என்னென்னவோ தில்லு முள்ளுகளைச் செய்து பார்த்தீர்கள். காவல்துறை அதிகாரி ஷகீல் அக்தர் மூலமாக சிபிஐ வழக்கறிஞருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தீர்கள். முடியவில்லை. இறுதியாக, உங்கள் கட்சியின் எம்.பி செல்வகணபதி மூலமாக, சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனிக்கு, 100 கோடி வரை கொடுக்கலாம் என முயற்சி செய்தீர்கள் முடியவில்லை. இறுதியாக இன்று இரவு உங்கள் மகள் திஹார் சிறையில் இரவு உணவு உண்ணப் போகிறார்.

 Kanimozhi2_20110520

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கனிமொழி கைது செய்யப் பட்டதை அடுத்து, உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்திற்காக அவள் சிறை சென்றால் உங்களது மனது எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது எனது மனது” என்று கூறினார்.

 

மனதைப் பற்றி கருணாநிதி பேசலாமா ?   என்ன தகுதி இருக்கிறது கருணாநிதிக்கு ?   இதே கருணாநிதிதான் ஒரு முறை, “சிலருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறது” என்று சொன்னார். இவருக்குத் தான் பள்ளம் இருக்கிறது. இதயமே இல்லாதவர் இந்தக் கருணாநிதி என்றால் அது மிகைச் சொல் அல்ல.

 Kanimozhi_20110425

 

சென்னை சங்கமம் எப்படி நடத்தறதுன்னு தெரியலையே... 

எத்தனை பேரை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார் கருணாநிதி ?   சீமான் அப்படி என்ன பேசி விட்டார் ? தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் வந்து, எமது மீனவனை சிங்களக் காடையன் சுட்டுக் கொல்கிறான், மீண்டும் இது தொடர்ந்தால், சிங்கள மாணவர்கள் இங்கே நடமாட முடியாது என்று பேசியதில் என்ன குற்றம் உள்ளது ?   தொடர்ந்து ஒருவன் சுட்டுக் கொண்டே இருப்பான், கருணாநிதியைப் போல கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா ?   இதற்காக, பெருங் கொள்ளையன் போல சீமானை நூற்றுக் கணக்கான போலீசை வைத்து கைது செய்தீர்களே கருணாநிதி….. …..   சீமானின் பெற்றோர் மனது அப்போது எப்படி இருந்திருக்கும் ?

 final_output

குமுதம் இதழில், இரண்டு பங்குதாரர்களுக்குள்ளே தகராறு. குரங்கு ஆப்பத்தை பங்கு வைத்த கதையாக, (உதாரணத்திற்காக குரங்கு என்று குறிப்பிடப் படுகிறது. குரங்கு இனம் வருத்தப் பட வேண்டாம்) இந்த விவகாரத்திற்குள் புகுந்து வரதராஜனை, ஒரு பொய்ப்புகாரின் அடிப்படையில் கைது செய்தார் கருணாநிதி. கைது செய்ய உத்தரவிட்டு, காவல்துறையினர் வரதராஜனை 4 மணி நேரம், காரிலேயே சென்னை நகரை சுற்றி வலம் வந்த பிறகு, ஜாமீனில் அவர் விடுவிக்கப் பட்டார். இதைத் தொடர்ந்து சட்டசபையில், கண்ணீர் வடித்த முதலை கருணாநிதி (முதலைகள் வருந்த வேண்டாம்)

 

“குமுதம் புகழ்பெற்ற வார இதழ்களில் ஒன்று. இந்த இதழை ஆரம்பித்து அதை நல்ல நிலைக்கு கொண்டு வந்த செல்வாக்கு மிக்க மூத்தவர்கள் மறைந்து விட்டார்கள். அவர்களின் பிரதிநிதியாக நடத்த முன்வந்த ஜவஹர் பழனியப்பன், வெளிநாட்டில் இருந்து அதை ஒருவரிடம் ஒப்படைத்து நடத்தி வந்தார். சமீபத்தில் நாடு திரும்பிய அவர் யாரிடம் ஒப்படைத்தாரோ அவரிடம் சில விளக்கங்களை கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறு குறித்து ஞானசேகரன் இங்கு குறிப்பிட்டார். அந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையினர் முயன்று வரதராஜன் என்ற நண்பரை கைது செய்து இருக்கிறார்கள். பொதுவாக பத்திரிகைகளை ஒடுக்குவது, வழக்கு தொடர்வது, சட்டசபை கூண்டில் நிறுத்துவது போன்றவற்றை திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்கட்சியாக இருந்தபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. பத்திரிகைகள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகைகளுக்கு நீதி தேடி தருவதில் ஆளுங்கட்சி முனைப்பாக இருக்கிறது. வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரை உடனடியாக விடுதலை செய்யும் நிலைமை இல்லை என்றாலும் அவர் சிறை புக வேண்டும் என வற்புறுத்த வேண்டியதில்லை என்று அரசு வக்கீல்களை நான் கேட்டுக் கொண்டு அவர் ரிமாண்ட் செய்யாமல் சில நிபந்தனைகளோடு வெளியே அனுப்பப்பட்டுள்ளார். வழக்கு பற்றி தெரியாது.” என்று முகாரி ராகம் படித்தார் கருணாநிதி.

 

வரதராஜன் கைது செய்யப் பட்ட போது, வரதராஜனின் 80 வயது தாயார் மனது என்ன பாடு பட்டிருக்கும் ?

 

ஜெயந்தன் என்ற ஈழத் தமிழர் ஒருவர். அவர் லண்டன் குடிமகன். சென்னையில் நண்பரின் திருமணத்திற்காக வருகிறார். வருகையில், சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் எனக்கு ஒரு லேப்டாப் வாங்கி வாருங்கள் என்று கேட்டதற்காக ஒரு லேப்டாப் வாங்கி வருகிறார். அவர் இந்தியா வந்த போது, அவரது மனைவி 3 மாத கர்ப்பம். கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை இழந்தவர்.

 Karunanidhi

திருமணத்திற்கு வந்த நபரை, கருணாநிதியின் காவல்துறையினர் சேட்டிலைட் போன் வைத்திருந்தார் என்று கைது செய்தனர். அவரோடு மேலும் 4 நபர்களை கைது செய்தனர்.   இவர் கைது செய்யப் பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. முதலில் செங்கல்பட்டு முகாமிலும், பிறகு பூந்தமல்லி முகாமிலும்,   அடைத்து வைக்கப் பட்டார்.   பிறகு தமிழக மக்கள் உரிமைக் கழகம் எடுத்த தொடர்ந்த நடவடிக்கைகளாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும், அவர் சிறப்பு முகாமிலிருந்து வெளி வந்து தற்போது திருவெல்லிக்கேணியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். தினமும், திருவெல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும். தற்போது அவரது குழந்தைக்கு 2 வயது. தன் குழந்தையின் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை.

 

இரண்டு ஆண்டுகளாக எந்த வேலையும் இல்லாமல், புதிதாக பிறந்த பிள்ளையின் முகத்தைக் கூட பார்க்காமல், திருவெல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் சும்மாவே இருப்பது என்பது என்ன நெருக்கடி என்பது உங்களுக்குத் தெரியுமா கருணாநிதி ?

 

இரண்டு ஆண்டுகளாக கருணாநிதியின் காவல்துறை இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.   விசாரணையையும் முடிக்கவில்லை. அவரால் லண்டனுக்கும் செல்ல முடியாது.

 

சவுக்கின் வழக்கையே எடுத்துக் கொள்ளுங்கள்.   கருணாநிதியின் தலைமைச் செயலாளர், தற்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா மீது, ஒரு பொய் வழக்கை பதியச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு நெருக்கடி கொடுக்கிறார்.   அவர் முடியாது என்று மறுத்தும், மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுக்கிறார்.   கருணாநிதியின் அமைச்சரான நாடார் இனக் கொழுந்து, கனிமொழியின் உற்ற தோழி பூங்கோதை லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக, சட்டத்தை வளையுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு நெருக்கடி கொடுக்கிறார். இந்த உரையாடல்களை வெளியிட்டால் என்ன தவறு ?   நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா ? இது போன்ற உரையாடல்கள் வெளியானதால் தானே, உங்கள் குடும்பத்தின் பதவி ஆசையும், பணம் மற்றும் அதிகாரி வெறியும் நாட்டு மக்களுக்குத் தெரிய வந்தது. இல்லையென்றால் நல்லவன் வேஷம் அல்லவா போட்டுக் கொண்டு திரிந்திருப்பீர்கள் ?

 

மேலும், அந்த உரையாடலை வெளியிட்டது கூட இவன்தான் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே, திமுகவின் அல்லக்கையாக இருந்த சண்முகம் என்ற நீதிபதி கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும், ஜாபர் சேட்டின் ஜால்ராவாக இருந்த, கபில் குமார் சரத்கர் சிந்துராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும் கைது செய்ய உத்தரவிட்டீர்களே கருணாநிதி …. !!!

 

இன்று உங்கள் மகள் கனிமொழியை டெல்லி போலீசார் கவுரவமாகவே நடத்துவதை தொலைக்காட்சியில் காண முடிகிறது. கைது என்று முடிவு செய்தாலும், எதற்காக சவுக்கின் தாய் முன்பாக போலீசார் அடிக்க வேண்டும் ?   அரசு ஊழியராக 18 ஆண்டுகள் கவுரவமாக பணியாற்றிய ஒரு மகனை காவல்துறையினர் தன் கண் முன்பாக அடிப்பதைக் கண்ட அந்த தாயின் மனது என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா கருணாநிதி ? அன்று பலவீனமான சவுக்கின் தாயின் உடல்நிலை இன்று வரை சரியாகவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா கருணாநிதி ?

 

இதையெல்லாம் விட்டு விடுங்கள். இந்தப் படங்களைப் பாருங்கள் கருணாநிதி.

 IMG_3880

IMG_2591

IMG_3816

 

IMG_2592

IMG_3875

 

IMG_3822

 

IMG_3813

IMG_3829

IMG_3831

IMG_3876

இதயம் உறையவில்லை ? இதயம் இருப்பவர்களுக்கு உறையும்.   இதயத்தில் ஈரம் இருப்பவர்களுக்கு உறையும். உங்களுக்கு உறையாது.

 

இந்தப் படங்களில் உள்ள பெண்களும் குழந்தைகளும் என்ன பாவம் செய்தார்கள் கருணாநிதி ?   214 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்று டிவி சேனல் தொடங்கினார்களா ? சென்னை சங்கமம் என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் நிறுவனங்களில் இருந்து லஞ்சம் வாங்கினார்களா ?   டாடா நிறுவனத்தை மிரட்டி, வோல்டாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தை லஞ்சமாக வாங்கினார்களா ? மக்கள் சொத்தைக் கொள்ளையடித்தார்களா ? இவர்கள் குற்றுயிரும், குலை உயிருமாக செத்துக் கொண்டிருந்த போது, அவர்களுக்கு மருந்து கடத்தியவர்களைக் கூட, கைது செய்து இன்று வரை சிறையில் வைத்திருக்கிறீர்களே கருணாநிதி ? உங்களுக்கு மனது இருக்கிறதா என்ன ?   நீங்கள் ஒழுங்காக நடவடிக்கை எடுத்திருந்தால், எதற்காக முத்துக்குமார் தீக்குளிக்கப் போகிறான் ? அவனது தாயின் மனது என்ன பாடு பட்டிருக்கும் ?   போராட்டத்தின் வீச்சைக் குறைக்க, கடற்கரையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் ஆடினீர்களே கருணாநிதி ?   உங்களுக்கா இதயம் இருக்கிறது ?

 

நம் மண்ணைச் சேர்ந்த மீனவன் தினந்தோறும் சுட்டுக் கொல்லப் பட்ட போது, அவனுக்கும் மனைவி, பெற்றோர்கள் இருந்திருப்பார்கள் தானே….. ?   அவர்கள் மனது என்ன பாடு பட்டிருக்கும் கருணாநிதி ?

 

உயிர்களை இழந்த மக்கள் கதறும் போது, பாராட்டு விழாவில் கலந்து கொண்டீர்களே கருணாநிதி…. நீங்கள் இதயத்தைப் பற்றிப் பேசலாமா ?   உங்களுக்கு இந்தத் துன்பம் போதாது. உங்கள் மனைவி தயாளுவும், துணைவி ராசாத்தியும் கூட, திஹாரில் அடைக்கப் பட வேண்டும்.   ஈழத்தில் அனாதையாக சாலையில் தமிழ்ப் பிணங்கள் கிடந்தது போல, நீங்கள் தள்ளுவண்டியைத் தள்ள ஆள் இல்லாமல் அனாதையாக இருக்க வேண்டும்…….   இது ஈழத் தமிழன் மட்டுமல்ல…. அத்தனை தமிழனின் விருப்பம். 

 

Comments  

 
0 #120 Tamizhan 2011-05-30 21:39
"மனிதன் தமிழ் வார்த்தை தான்
ஆனால் அதன் அர்த்தம் ஆங்கிலத்தில் தான்
செயல் படுகிறது - Money then"
Quote
 
 
+1 #119 Nalliah Thayabharan 2011-05-29 01:01
முதன்முறையாக முத்துவேல் கருணாநிதி முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, கருணாநிதிக்கு பெருமளவில் உதவி செய்த என்.கே.டி.சுபிரமணியம் வெளியிட்ட ஜவகரிஸ்ட் பத்திரிகையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு பிறந்த கனிமொழி என்ற பெண் குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் அந்த பெண் குழந்தை கனிமொழியின் தந்தையின் பெயர் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்ட ிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்த தை மறக்க முடியுமா?

ராசாத்தி என்றழைக்கப்படும ் தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது; தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை; என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார்; நீதிமன்றத்துக்க ு நீதி கேட்டு சென்றார்: பெண் குழந்தை...மகள்...என்று யாருமே தனக்கு கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி.

கருணாநிதிக்கான அரச வாடகைப் பணத்தில் ஒலிவர் தெருவில் உள்ள வீட்டில்தான் கனிமொழியும் தாயாரும் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் கோபாலபுரத்துக்க ு அருகில் உள்ள ச்.ஈ.ட் கொலனியில் தாயாரோடு வாழ்ந்தவர். கருணாநிதிக்கு தினமும் இரவுத் தூக்கம் ச்.ஈ.ட்.கொலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு ச்.ஈ.ட்.கொலனி. சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு ச்.ஈ.ட் கொலனிக்கு போய்விடுவார்.

எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி முழங்கினாரோ…எந் த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…அந்த மகள் கனிமொழிக்காகத்த ான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார ் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.


-நல்லையா தயாபரன்
Quote
 
 
0 #118 AnanthMKrishnan 2011-05-28 16:58
தவருகல் கட்டாயம் தன்டிக்கபட வேன்டும். தவரு செய்யும் போது மனிதன் சிந்திக்க வேன்டும்.
Quote
 
 
0 #117 Ramamurthy 2011-05-28 13:04
பஞ்சைப்போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக்காரனடா
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா


கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெங்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில்நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
உன் வாழ்வெல்லாம் வாழவல்ல

--கண்ணதாசன்
Quote
 
 
0 #116 Mkumaresh 2011-05-25 08:53
இந்தியாவில் யார் வேன்டுமாலும் என்ன வென்டுமலாலும் செஇயாலாம் ஒரு அரசியல் வாதியை எதிர்தூ கேள்வீ கேக்கா ஒரு சாதாரன குடிமகனால் முடியாது இவர் பொன்ரவர்கலை நாம் என்ன சேய்யா வேன்டும்
Quote
 
 
+5 #115 murugan covai 2011-05-24 12:15
நீங்கள் சொன்னது சரி ... கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்...அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார ் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டி ருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அ தன் ஆசிரியர்,ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டி ருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில் ,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்ட ிருக்கிறது.யார் அந்த கருணாநிதி?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்த ார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.அரசியலில் நேர்மை,தூய்மை,அ ப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்த ு அப்படியே எடுத்துக் கொண்டவரல்லவா..? "ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை"என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடா து...என்று நீதிமன்றத்துக்க ும் போனார்...பெண் குழந்தை ..மகள்.என்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந் த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது... சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.... எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்த ான் இன்று தனது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார ் கருணாநிதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட் டார்..ஊர் அறிய உலகறிய! தகவல் உபயம் ஜூவி வாசகர் பரேஷன, நன்றி
Quote
 
 
+4 #114 ஆர்.தியாகு 2011-05-24 10:57
நான் தமிழனாக இருப்பது தவறா..? இனத்தை மேம்படுத்திய குருனாக் பிறந்த மண்ணில் இப்படி கருனாக்கள்!!!
Quote
 
 
+3 #113 rajesh devendhiran 2011-05-23 21:51
Quoting Indianusa:
ராஜேஷ் , கவலை படாதிக்க. அதுக்குதான் அவன் குடும்பம் இப்ப அனுபவிக்குது.
சவுக்கு சார் பாருங்க, அவரும் உங்கள மாத்ரி அடி பட்டு வந்தவரு, இனிக்கு பாருங்க, அவர எழுதியது படிக்கச் 20000 பேரு தினம் வராங்க.அரசியல் மாற்றம் வந்ததுக்கு அவரும் ஒரு காரணம். நீங்களும் அவர் குட சேர்ந்து எழுதுங்க.

சவுக்கு சார்,
உங்கள மாதிரி பாதிக்க பட்ட அனைவரையும் ஒன்று சேருங்கள் போராட.
Quoting rajesh devendhiran:
பொய் வழக்கு என்று சொல்லுறான் இந்த கொலைஞர் எது பொய் வழக்கு என்பது போக போக தெரியும் செம்மொழி மாநாடு நீ நடத்தும் போது தமிழ் உணர்வாளர்களை எல்லாம் எப்படி பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பினாய் என்று எனக்கும் தமிழ் உணர்வாளர்களுக்க ும் அல்லவா தெரியும் நாடாளும் மன்ற தேர்தல் நேரத்தில் இனி என்ன செய்ய போகிறோம் என்கிற ஈழ குறுந்தகடு 500 பிரதி போட்டு எண் தமிழ் மக்களுக்கு கொடுத்த என்னை கருணா காவல் துறை என்ன செஞ்சது ஆபாச படம் பதிவு செஞ்சு கொடுத்த கடை ஊழியர் கைது வியாபாரி தப்பி ஓட்டம் என்று தமிழ் முரசில் போட்டு கேவல படுத்தின என் தாய் தகப்பன் முகத்தில் என் அக்கா தங்கை முகத்தில் கூட முழிக்க விடாமல் உண்மை மாதிரியே தமிழ் முரசு செய்தி தாளில் எழுதினிங்க என் கணினி கொண்டு போய் ஆபாச படம் பதிவு செஞ்சு சந்தோஷ பட்டிங்க என் தொழில் முடங்கி 60,000 கடன் காரன் ஆக்கினிங்க அப்போ என் மனசு என்ன நிலமையில் இருக்கும் சொல்லுடா கருணாநிதி நாயே நீ மட்டும் செத்து போனால் அந்த நாளில் 10,000 கடன் வாங்கியாவது எல்லோருக்கும் இனிப்பு வழங்குவேன்
நன்றி நண்பரே இந்த இளைஞர் கூட்டம் அதிகமா வந்து ஓட்டு போட்டதற்கு சவுக்கு கூட ஒரு முக்கியமான காரணம் ஏன் என்றால் நிறைய இந்த கருணாவால் பாதிக்க பட்டவங்க எல்லாம் அவனுக்கு எதிர் ஓட்டு போட்டது ஒரு காரணம் ஈழ பிரச்சினைக்கு கடிதம் எழுத வாஸ்து மீனுக்கு இரை போட திரிஷா சதை ஆட்டம் பார்க்க என்று இவன் ஒரு 23 இம் புலிகேசி வடிவேல் போல இவன் ஒரு லூசு முதல் மந்திரி மாதிரி நடந்து கிட்டான் முத்து வேலன் போல இவனும் நாதஸ்வரம் ஊத பொய் இருக்கலாம் இசை வேளாளர் என்று இவனுக்கு இவனே சாதி பெயர் வைப்பது என்ன கொடுமை சாதி வாரியான கணக்கெடுப்பு வரட்டும் இசை வேளாளர் என்ற சாதிய்ல் எத்தனை சதவீதம் வரும் என்று பாப்போம் இவன் குடும்பம் மாறுமே வரும் என நினைக்கேன் ?
Quote
 
 
+5 #112 RayJaguar 2011-05-23 21:21
super stunning article!!! this rotten politician should be castigated without mercy
Quote
 
 
+4 #111 SASI KUMAR 2011-05-23 18:53
மிகவும் உண்மை .. இந்த நாய் தெருவில் அடித்து கொள்ள பட வேண்டும் . இவர் செய்த கொடுமைகளை தமிழ் மக்கள் பட்ட அவஸ்தைகளை இவன் குடும்பம் அனுபவிப்பதை பார்த்து சாக வேண்டும்
Quote
 
 
+4 #110 முத்துராஜா 2011-05-23 17:44
அய்யா...உங்களுக்கு மனசாட்சி என்பது ஒரு இருக்கின்றதா? தான் செய்த தவறை காலம் தாழ்த்தி கூட இன்னும் உணராத போது என்னவென்று சொல்வது.

ஒரு சம்பவத்தை மட்டும் நினைத்து பாருங்கள்.ஒரு வயதான முதியவள் , சிகிச்சைக்காக தானே தமிழ்நாட்டிற்கு வந்திறங்கினார்.கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தன் பதவி,மகன்களின் பதவிக்காகவே அந்த அம்மையாரை மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பியதை நினைத்து பாருங்கள்.நீங்களும் சக்கர நாற்காலியில் தான் வலம் வந்துகொண்டிருக் கிறீர்கள்.அந்த முதியவள் எத்தகைய மன உளைச்சலில் திரும்பி போயிருப்பாள்.அந்த பாவமே உங்களுக்கு சரியான தண்டனைகளை கொடுக்கும்.
Quote
 
 
+1 #109 s.sakthivel 2011-05-23 17:04
tamil olunga theriyatha kanimozhi entha kaalathil kavithai eluthinaal. ellam jaaldrakkalin eluthukal. mangaiyarkasi anmeegam pesuvathu tamil. kanimolikku therithathu ellam aduthavan purusanai amukarathutahn. entha maavatathu secretary mattinar rajavirku munbu. valga muthur kuppannaswamy kadavul. kaapithite sami. s.sakthivel
Quote
 
 
+2 #108 aNu 2011-05-23 16:14
Quoting Abdul Rahman - Dubai:
நான்கூட ராம் ஜெத்மலானியைப் பற்றி, ஏதோ வீராதி வீரர்! சூராதி சூரர்!! வல்லவ ராயன் ரேஞ்சுக்கு என்னென்னவோ நினைத்து இருந்தேன்.

கனிமொழிக்காக அவர் வாதாடியபோது "குழந்தைகளுக்கும ், முதியவர்களுக்கு ம் மற்றும் பெண்களுக்கும் ஜாமீன் பெற சட்டத்தில் இடம் உண்டு" என்று சொன்னார்.

சமூக விரோதிகள் இந்த வாதத்தை கேட்டால் அவர்களுக்கு ஒரு புதிய சிந்தனை பிறக்காதா?? அதாவது "எல்லாவிதமான சமூக விரோத செயல்களையும் குழந்தைகளையும், முதியவர்களையும் , பெண்களையும் வைத்து செய்யலாம். மாட்டிக் கொண்டால் இந்த சட்ட விதிமுறைப்படி வெளியே வந்து விடலாம்" என்று???

வழக்கு இந்த ரீதியிலேயே போவதைக் கண்டு, "கல்மாடிக்கு ஒரு நீதி! கனிமொழிக்கு ஒரு நீதியா??" என்று பாமரனும் கேட்கிறானே?? அதற்கு என்ன பதில்???


ஜெத்மலானிக்கு moral ethics எதுவும் கிடையாது. போபர்ஸ் பிரச்சனையின் பொது ராஜீவ் காந்தியை தினமும் பத்து கேள்வி கேட்டு பெரிய ஆளாயிட்டார்.
Quote
 
 
+2 #107 Madhavan 2011-05-23 15:47
savukku you are great job i like you,

nee eppadi venumunalum eluthu tamilanai muttalakkiya karunanithiyai patri . ithupol ini oru mosamana
thalaivanai nam tamilnudu parkkave ventam. naan tamilanda.
Quote
 
 
+3 #106 ezhan 2011-05-23 13:34
உங்களுக்குத் தெரியுமா கருணாநிதி ? ( அந்த கரு நாயி கு என்னங்க மாறியதே?)
Quote
 
 
+3 #105 manithn 2011-05-23 10:30
kadvul irundhal dmk azhiyum vuyirudan irukkumbodhe karunanithi dhandanai anubavithu saavarrrr (nnnnnnn)
Quote
 
 
+2 #104 Tamilachi 2011-05-22 20:57
"Inna seitharai oruthal avar naana nannayam seidhu vidal"

Enakku therindhavarai, Karunanidhi avarga Rajabakshevidam sendrum em-tamil-ina makkalai aliyungal enna sollavillai. Maanam ketta arrivu ketta Rajabakshevai tittuvathai vitu Karunanithiya tituvathu niyayame illai.

Enraikume mudhugil kutthu congress thaan indiavai aandu varuguruthu, akatchiyinar ninaithu irunthaal nam tamilina makkalai kaapathri irukkal, ellorum sernthu Rajabakshavaiyu m, congressaiyum edirpom, athai vitu vitu, saaga kidakum kudumbathukkaga kavalaipadum karunaninithiya tituvadal nam tamilargalukku nal vaalkai kidaika povadillai. ethirpom kologaaran Rajabakshevai...
Quote
 
 
+2 #103 maikadu sekar 2011-05-22 17:27
ni saitha pavam unnai suma vitathu
Quote
 
 
+9 #102 நீதிதேவன் 2011-05-22 12:16
கருணாநிதியின் குடும்பம் ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடப்போவதை நம் தமிழ் சமுகம் காணத்தான் போகிறது. ஈழ செஞ்சோலையில் இறந்து போன அந்த குழந்தைகளின் புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு சமயமும் என் மனது இப்படி சபித்தபடியே இருக்கும். விதி பற்றி எனக்கு எந்த நம்பிக்கை இல்லை என்றாலும் அப்பாவி மக்களின் ஆன்ம ஒலம் எந்த சக்தியையும் தீயிட்டு பொசுக்ககூடியது எனும் நம்பிக்கை எனக்கு ஆழமாக இருக்கிறது.
Quote
 
 
+3 #101 kannnn 2011-05-22 11:36
savuuku,

All the information sounds true and who ever done mistake should be punished accordingly. No second thought in that.

Will you have the guts in commenting Jayas activity... sounds no.. The first loss she had made is using the Fort building instead of the newly constructed Thalaimai cheyalagam. what is your stand on this...

But is that you are trying to comment on MK to the great extend because you have been affected by him? Looks like that....

Try to be a Neutral media in pointing out the mistakes irrespective of personnel revenge.

Regards

Mohan
Quote
 
 
+11 #100 போராளி 2011-05-22 11:31
நான் இறைவனிடம் வேண்டி கொள்வது ஒன்றே ஒன்று தான். தி.மு.க செய்த பாவங்கள் அனைத்துக்கும் தண்டனை அனுபவிக்காமல் ஈன மனமும், கெட்டபுத்தியும் கொண்ட திருந்தாத ஜென்மமான இன துரோகி "கருணாநிதி" இறக்கக்கூடாது. இனி நடக்க போகும் குடும்ப பிரச்சனைகள் அனைத்தையும் கண்டு "சொட்டையன்" மனது வெந்து நாளும் கலங்க வேண்டும்.
Quote
 
 
+3 #99 போராளி 2011-05-22 11:30
நான் இறைவனிடம் வேண்டி கொள்வது ஒன்றே ஒன்று தான். தி.மு.க செய்த பாவங்கள் அனைத்துக்கும் தண்டனை அனுபவிக்காமல் ஈன மனமும், கெட்டபுத்தியும் கொண்ட திருந்தாத ஜென்மமான இன துரோகி "கருணாநிதி" இறக்கக்கூடாது.
இனி நடக்க போகும் குடும்ப பிரச்சனைகள் அனைத்தையும் கண்டு "சொட்டையன்" மனது வெந்து நாளும் கலங்க வேண்டும்.
Quote
 
 
+3 #98 DGP.Shankar 2011-05-22 10:43
Quoting புலிப்பாணி சித்தர்:
ஒன்றல்ல இரண்டல்ல முன்னூறாயிரம்
கொன்றொழித்தீர் கொன்றொழித்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

உணவும் தடுத்தீர் மருந்தும் தடுத்தீர்
குடிசைகள் அழித்தீர் மாளிகைகள் அழித்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

துணையென வந்தீர் துரோகிகளாயினீர்
காக்கவென வந்தீர் கருவறுத்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

பூவையும் கருக்கினீர் பிஞ்சையும் கருக்கினீர்
தாயையும் கசக்கினீர் தந்தையைக் கந்தலாக்கினீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

எம்மினம் ஒழித்த சிங்கள நாய்களே
ஆதரவு கொடுத்த் காங்கிரசுப் பேய்களே
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
-- www.veltharma.blogspot.com

நன்றாக சொல்லி இருகிறீர்கள்.......
ஆனால் சிங்கள நாய்களையும், காங்கிரசுப் பேய்களையும் விட கொடூரமான தமிழ் இன துரோகிகளை (திகார் முன்னேற்ற கழகம்) பற்றி சொல்லாமல் விட்டதேனோ???????
Quote
 
 
+5 #97 DGP.Shankar 2011-05-22 10:33
சத்தியமான வார்த்தை சொன்னீர்கள் சவுக்கு......தள்ளுவண்டியைத் தள்ள மட்டும் அல்ல இந்த பிணம் தின்னும் பிசாசுவின் பிணத்தை எடுக்க கூட ஆள் இல்லாமல் அனாதையாக நாறிப் போக வேண்டும்........
Quote
 
 
+4 #96 peacelover 2011-05-22 08:46
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"
"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்"
"அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும்"
"WHAT GOES AROUND COMES AROUND"
"EVERY ACTION HAS AN EQUAL AND OPPOSITE REACTION"
Quote
 
 
0 #95 Gopinath Jambulingam 2011-05-22 08:32
uppaith thinravan thanneer kudiththe Aga vendum. 3 thalaimuRai vaazhnthavarill ai; 3 thalaimuRai thaazhnthavaril lai. UlagiRkku intha uNmaiyaip puriya vaippom.
Quote
 
 
+4 #94 pandiyan 2011-05-22 05:23
today dinmani published the truth. ofcourse savukku updated to viewers 48hours before...
÷""நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவ ிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்ட ார்'' என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாரா ம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.
Quote
 
 
+8 #93 Vanni 2011-05-22 03:18
குற்றம் செய்யாத ஒருவர் தண்டனை அனுபவிக்கிறார் என்று நீங்கள் சொல்வது இந்திய நீதித்துறையை அவமதிப்பது ஆகும். அல்லல்பட்டு தமிழீழ மக்கள் அழுத கண்ணீர் இப்போது கருணாநிதி குடும்பத்தை அழிக்கிறது.
Quote
 
 
+14 #92 சூனாபானா 2011-05-22 00:33
சொன்னாம்பாருயா வள்ளுவன் ரெண்டாயிரம் வருஷம் முன்னாடியே ....

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.
Quote
 
 
+1 #91 anniyan 2011-05-22 00:10
nalla sonneenga..

The way Ram Jeth Malani argued and the points he mentioned looked like, he decided to get rob some money from DMK and put same side goal or jail.

Sondha selavula Sooniyam :-)


Quoting Abdul Rahman - Dubai:
நான்கூட ராம் ஜெத்மலானியைப் பற்றி, ஏதோ வீராதி வீரர்! சூராதி சூரர்!! வல்லவ ராயன் ரேஞ்சுக்கு என்னென்னவோ நினைத்து இருந்தேன்.

கனிமொழிக்காக அவர் வாதாடியபோது "குழந்தைகளுக்கும ், முதியவர்களுக்கு ம் மற்றும் பெண்களுக்கும் ஜாமீன் பெற சட்டத்தில் இடம் உண்டு" என்று சொன்னார்.

சமூக விரோதிகள் இந்த வாதத்தை கேட்டால் அவர்களுக்கு ஒரு புதிய சிந்தனை பிறக்காதா?? அதாவது "எல்லாவிதமான சமூக விரோத செயல்களையும் குழந்தைகளையும், முதியவர்களையும் , பெண்களையும் வைத்து செய்யலாம். மாட்டிக் கொண்டால் இந்த சட்ட விதிமுறைப்படி வெளியே வந்து விடலாம்" என்று???

வழக்கு இந்த ரீதியிலேயே போவதைக் கண்டு, "கல்மாடிக்கு ஒரு நீதி! கனிமொழிக்கு ஒரு நீதியா??" என்று பாமரனும் கேட்கிறானே?? அதற்கு என்ன பதில்???
Quote
 
 
+9 #90 Anu varathan 2011-05-21 22:35
மண்டியிட்டு கெஞ்சி மன்றாடி கதறி அழுதோமே .......காப்பாற்றுங்கள்
எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள் என்று... கண் முன்னே எங்கள் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டார ்களே....நாங்கள் வடித்த இரத்த கண்ணீர் இன்று உங்கள் குடும்பத்தையே கூண்டோடு கூண்டு ஏற்ற போகிறது. இது தமிழ் இனம் உங்களுக்கு போட்ட சாபம்......!!!
Quote
 
 
+21 #89 sayanthan 2011-05-21 20:19
வலி சுமந்த ஒர் தமிழன் சொல்லுகின்றேன். இவனும் இவன் குடும்பமும் நாசமாய் போக...
Quote
 
 
-4 #88 tang vel 2011-05-21 19:32
Ok pls stop! Nadanthu muditathai patri pesuvathai veda inimel ena,epadi nadakka, tirutikkola vedum endru puthiya aatchike vanthavrgalku eduthu solungal, mendum entha thavaru yearpadamal eruka...
Quote
 
 
+20 #87 Ashok US 2011-05-21 18:45
"ஈழத்தில் அனாதையாக சாலையில் தமிழ்ப் பிணங்கள் கிடந்தது போல, நீங்கள் தள்ளுவண்டியைத் தள்ள ஆள் இல்லாமல் அனாதையாக இருக்க வேண்டும்……. இது ஈழத் தமிழன் மட்டுமல்ல…. அத்தனை தமிழனின் விருப்பம்." --> உண்மை !!! இந்த காட்சியை காண பல மனிதர்கள் ஆவலாக உள்ளனர் !!!
Quote
 
 
0 #86 rama.pillappan 2011-05-21 18:23
Quoting yemanthooran:
நண்பர்களே வசை பாடுவது என்றால் கூட சற்று நாகரீகமாக பாடுங்கள்.
இதை தான் வள்ளுவர் அன்றே சொன்னார்

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருக்க ராசாத்தி கவர்ந்தற்று "

NANBARE!IVARKAL AIPPATRI NINAITHAAL NAAGARIGAMAANAV ANUM ANAAGARIGANAAGA MAARIVIDUKINRAA NE ENNA SEYYA!
Quote
 
 
+7 #85 gobu 2011-05-21 17:45
கருணாநிதிக்கு
மனசாட்சி இல்லை... பணசாட்சி தான் இருக்கிறது.....
குடும்பம் இருக்கிறது.... தமிழகம் இல்லை....
கட்சி இருக்கிறது..... கடமை இல்லை...
இன்னும் என்னென்னவோ இருக்கிறது.... ஆனால் எதுவும் தெரியாதது போல இருப்பார்....
Quote
 
 
+2 #84 Kaliyarajalu 2011-05-21 16:49
Ethelam oru polapa? Sun Tv yen kanimozhi kaithu news podala. oru udakam than kadamaila erunthu thavariduchu, etheva vera yaravathu eruntha viduvingala, kilichi eruka matinga ?
Quote
 
 
+2 #83 poy thamizan 2011-05-21 16:18
Quoting யாழ்:
அட எல்லாவற்றையும் விடுங்கள். ஒரு வயதான எழுந்து நடக்க்க கூட முடியாத ஒரு மூதாட்டி தனது நோய்க்கு வைத்தியம் பெற வந்தபோது இந்த கொடூர பாவி என்ன செய்தான். இரக்கமே இல்லாத இவனுக்கு இதயம் எப்படி இருக்க முடியும்? கதறக் கதற ஈழத்து அப்பாவி தமிழரை அழிக்கும் போது கதறிய குரல் கேட்டும் காதை மூடிக் கொண்டிருந்தவனி டம் எப்படி இரக்கத்தை இதயத்தை எதிதிர்பார்க்க முடியும்? ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு சமம். சிறுகச் சிறுக நீ புத்திரபாசத்தில ் ஏற்படும் சோகத்தை உணர்ந்து துன்பப்பட வேண்டும்.


antha moothaatti yaar enpathaip poruththathu.
Quote
 
 
+15 #82 Dayanand 2011-05-21 16:16
கருணாநிதிக்கு இது முள்ளிவாய்க்கால ் நினைவுப்பரிசு.
Quote
 
 
-5 #81 Anto 2011-05-21 16:14
Quoting TMS:
அன்புள்ள சவுக்கு வாசகர்களுக்கு

ஜெயலலிதா என்ன யோக்கியமா

1. இண்று வரை வாய்தாராணியின் சொத்து குவிப்பு வழக்கு பெங்குளுரிள் நடந்து கொண்டுள்ளது

2. ஒரு நாட்டில் வேபார் என்று நடந்தால் பல அப்பாவிகள் கொல்லபடுவது சகஜம் என்று சொன்னது யார்

3. பிரபாகரனை கேவலமாக சட்டமன்றதில் பெசியது யார்


உனக்கு துரோகிக்கும் எதிரிக்கும் வித்யாசம் தெரியல, ஜெயா புலிகளுக்கு எதிரி ஆன தமிழ் மக்கள் அகதிகளக வந்தப்போ ஆஸ்திரேலியா போல திருப்பி அனுப்பல. கருணா ஆட்சி போல சுடல.
Quote
 
 
+19 #80 Vel 2011-05-21 15:43
தமிழர்களின் விருப்பம் என்பதை விட தமிழர்களின் சாபம் என்று முடியுங்கள் இக் கட்டுரைக்கு சரியாக இருக்கும்
Quote
 
 
+7 #79 deva singapore 2011-05-21 15:39
சவுக்கு மீது சிறிய வருத்தம்.. எம் அன்னை சிகிச்சைக்காக தமிழகம் வந்த போது கருணாநிதி செய்த தில்லாலங்கடி வேலைகளை விட்டு விட்டீர்களே..?
அப்போது எம் மனநிலை எப்படி இருந்தது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை..
Quote
 
 
+1 #78 saravana 2011-05-21 15:22
Indha alluku varum saavai paarthu ovvuruthanum paya padanum. Indha allin sothukalai pidingi Ezha tamilnanuku koduthal enna?
Quote
 
 
+27 #77 Arun-perur 2011-05-21 14:21
கருணாநிதி நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்!! !!!!!!! பின்ன என்னங்க இன்னும் பார்க்க வேண்டியது எவ்ளோ இருக்கு? கருணாநிதியை சென்னை to திகார் வரைக்கும் ஓட விட்டா என்ன?
Quote
 
 
+12 #76 கவி 2011-05-21 14:11
ராசா கைது ஆனபோது, இவர் "இளைஞன்" படம் பாத்துட்டு இருந்தார்ரு. இவரு பெண்ண கைது பண்ணா மட்டும் வலிக்குதா.... என்ன ஒரு நியாயம்....." சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு" ன்னு ஒரு பாட்டு வருதே அது மாதிரிதான்.
Quote
 
 
0 #75 Ada_Narayana 2011-05-21 13:16
Paratheesigale, What you are going to take when you leave this world? why this much peeraasai?
Quote
 
 
0 #74 pandiyan 2011-05-21 13:13
ஆமை புகுந்த வீடும் அமமினா புகுந்த வீடும் என்றாவது உருப்பட்டு இருகின்றதா???

Quoting Abdul Rahman - Dubai:
நான்கூட ராம் ஜெத்மலானியைப் பற்றி, ஏதோ வீராதி வீரர்! சூராதி சூரர்!! வல்லவ ராயன் ரேஞ்சுக்கு என்னென்னவோ நினைத்து இருந்தேன்.

கனிமொழிக்காக அவர் வாதாடியபோது "குழந்தைகளுக்கும ், முதியவர்களுக்கு ம் மற்றும் பெண்களுக்கும் ஜாமீன் பெற சட்டத்தில் இடம் உண்டு" என்று சொன்னார்.

சமூக விரோதிகள் இந்த வாதத்தை கேட்டால் அவர்களுக்கு ஒரு புதிய சிந்தனை பிறக்காதா?? அதாவது "எல்லாவிதமான சமூக விரோத செயல்களையும் குழந்தைகளையும், முதியவர்களையும் , பெண்களையும் வைத்து செய்யலாம். மாட்டிக் கொண்டால் இந்த சட்ட விதிமுறைப்படி வெளியே வந்து விடலாம்" என்று???

வழக்கு இந்த ரீதியிலேயே போவதைக் கண்டு, "கல்மாடிக்கு ஒரு நீதி! கனிமொழிக்கு ஒரு நீதியா??" என்று பாமரனும் கேட்கிறானே?? அதற்கு என்ன பதில்???
Quote
 
 
+34 #73 Abdul Rahman - Dubai 2011-05-21 13:06
ஆடிய ஆட்டம் என்ன? = மானாட மயிலாட.
பேசிய வார்த்தை என்ன? = மகளை காப்பாற்றுவது, கட்சியைக் காப்பாற்றுவது போல.
தேடிய செல்வம் என்ன? = 2-G (அடேங்கப்பா!!)
திரண்டதோர் சுற்றம் என்ன? = தேர்தல் தோல்விக் கூட்டணி.
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? = தள்ளுவண்டி.
வீடுவரை உறவு = அறிவாலயம் வரையும்தான்.
வீதிவரை மனைவி = ஒன்றா? இரண்டா?? மூன்றா???
காடுவரை பிள்ளை = அதிலும் சண்டை, சின்னவனா? பெரியாவனா??
கடைசிவரை யாரோ? = ஈழத் தமிழர்களின் கண்ணீர்.
Quote
 
 
+6 #72 Abdul Rahman - Dubai 2011-05-21 12:44
நான்கூட ராம் ஜெத்மலானியைப் பற்றி, ஏதோ வீராதி வீரர்! சூராதி சூரர்!! வல்லவ ராயன் ரேஞ்சுக்கு என்னென்னவோ நினைத்து இருந்தேன்.

கனிமொழிக்காக அவர் வாதாடியபோது "குழந்தைகளுக்கும ், முதியவர்களுக்கு ம் மற்றும் பெண்களுக்கும் ஜாமீன் பெற சட்டத்தில் இடம் உண்டு" என்று சொன்னார்.

சமூக விரோதிகள் இந்த வாதத்தை கேட்டால் அவர்களுக்கு ஒரு புதிய சிந்தனை பிறக்காதா?? அதாவது "எல்லாவிதமான சமூக விரோத செயல்களையும் குழந்தைகளையும், முதியவர்களையும் , பெண்களையும் வைத்து செய்யலாம். மாட்டிக் கொண்டால் இந்த சட்ட விதிமுறைப்படி வெளியே வந்து விடலாம்" என்று???

வழக்கு இந்த ரீதியிலேயே போவதைக் கண்டு, "கல்மாடிக்கு ஒரு நீதி! கனிமொழிக்கு ஒரு நீதியா??" என்று பாமரனும் கேட்கிறானே?? அதற்கு என்ன பதில்???
Quote
 
 
+11 #71 புலிப்பாணி சித்தர் 2011-05-21 12:14
ஒன்றல்ல இரண்டல்ல முன்னூறாயிரம்
கொன்றொழித்தீர் கொன்றொழித்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

உணவும் தடுத்தீர் மருந்தும் தடுத்தீர்
குடிசைகள் அழித்தீர் மாளிகைகள் அழித்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

துணையென வந்தீர் துரோகிகளாயினீர்
காக்கவென வந்தீர் கருவறுத்தீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

பூவையும் கருக்கினீர் பிஞ்சையும் கருக்கினீர்
தாயையும் கசக்கினீர் தந்தையைக் கந்தலாக்கினீர்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்

எம்மினம் ஒழித்த சிங்கள நாய்களே
ஆதரவு கொடுத்த் காங்கிரசுப் பேய்களே
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
-- www.veltharma.blogspot.com
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 136 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday12059
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week56059
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month278319
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13194686