முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
முதல் கோணல் …. ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 74
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 21:04

 

 குறைந்தது 100 நாட்களுக்காவது, விமர்சனம் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது ஜெயலலிதா அரசு என்றுதான் சவுக்கு நம்பியது. ஆனால், இன்று வெளியிட்டுள்ள அமைச்சரவையின் முடிவு, சவுக்கின் முடிவை மாற்றியுள்ளது. சமச்சீர் கல்வியை கைவிட்டு, இது தொடர்பாக வல்லுனர் குழு அமைப்பது என்பதே அது. சமச்சீர் கல்வி என்பது என்ன ?

 2405269796_0e12e55bb6_b

தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்ஈ என்று ஐந்து வகையான பாடத்திட்டங்கள் உள்ளன.   இந்த பாடத்திட்டங்களால், பல ஆண்டுகளாக ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தன.   மேலும், சமுதாயத்தில், மாணவர்கள் மத்தியில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி வந்தது.   தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை இந்த கல்வி முறைகள் ஊக்கப் படுத்தியும் வந்தன.

 dsc05802

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14ம் பிரிவு அனைவரும் சமம் என்று கூறினாலும், சாதி, சமயம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் காரணமாக, பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் தரமான கல்வியையும், பணமில்லாத ஒடுக்கப் பட்ட மக்களின் பிள்ளைகள், தரங்குறைந்த கல்வியையும் பெறும் சூழல் நிலவி வந்தது.

 

இந்தியா போன்ற ஏற்றத் தாழ்வு உள்ள நாட்டில் சமச்சீர் கல்வி என்பது அவசியத் தேவையாகும்.

 

கருணாநிதி அரசு செய்த ஒரு சில நல்ல திட்டங்களில் ஒன்று இந்த சமச்சீர் கல்வி முறை. செப்டம்பர் 2006ல் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முத்துக் குமரன் தலைமையில் ஒன்பது உறுப்பினர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, இக்கல்வி முறையில் உள்ள குறைகளை ஆராய்ந்து பரிந்துரை அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில், முத்துக்குமரன் கமிட்டி, தனது அறிக்கையை ஜுலை 2007ல் அளித்தது.  ஒரே விதமான பாடத்திட்டம், ஒரே அளவு கோல்கொண்ட மதிப்பெண்கள், ஒரே விதமானப் பொதுத்தேர்வு என்பதுதான் முத்துக்குமரன் குழு அறிக்கை பரிந்துரைத்த சமச்சீர் கல்வியின் அடிப்படை அம்சமாகும்.

 

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மாதம் 10 ஆயிரம் கட்டணம் வாங்கும் பணக்கார பள்ளியில் படிக்கும் மாணவனும், சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் படிக்கும் ரிக்ஷா இழுப்பவரின் மகனும் ஒரே பாடத்தைப் படிப்பார்கள்.   இந்த சமச்சீர் கல்வி முறை ஏற்றத் தாழ்வுகளை முற்றிலும் ஒழிக்காவிட்டாலும், ஓரளவுக்கு சமன் செய்யும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

 

அந்தக் கமிட்டியும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிக்கையை அளிக்கவில்லை. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் உள்பட கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர்களிடம் கருத்துக்களை கேட்டபிறகுதான் சமச்சீர் கல்வியை கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய திட்டம் குறித்து இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 pr040707f

4 பாடத்திட்டங்களால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கும் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுவது அவசியம் என்பதை அந்தக் குழு வலியுறுத்தியது. வெவ்வேறு பாடத்திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது பிரச்சினை உருவாகிறது. உயர்கல்வியை சிலர் பின்பற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

 

எனவேதான், எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் அதன்மூலம் மாணவர்களிடையே உள்ள வேறுபாட்டை தவிர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், ஒவ்வொரு கல்வி திட்டத்திலும் உள்ள உயர்ந்த கல்வி முறையை சமச்சீர் கல்வியில் அரசு சேர்த்துள்ளது. அதுமட்டுமல்ல மத்திய கல்வி திட்டம், என்.சி.இ.ஆர்.டி. கல்வி திட்டம் போன்றவற்றிலும் இருந்து பாடத்திட்டம் எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறையால் மாணவர்களிடையே வேற்றுமை விலகி சமூகநீதி ஏற்படும். புத்தக சுமை பெருமளவில் குறையும்.

 SCHOOL_CHILDREN-1

இந்த அறிக்கையை செயல்படுத்த, கருணாநிதி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இதற்கான பாடப்புத்தகங்களை உருவாக்க மேலும் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளின் படி, 9 கோடி புத்தகங்கள் தயாரிக்கப் பட்டு, தமிழகம் முழுக்க விநியோகிக்கப் பட்டு விட்டன.   இந்தப் பாடப்புத்தகங்களில் ஒரு குறை காண வேண்டும் என்றால், கருணாநிதியைப் பற்றி பாடம் உள்ளது. அந்தப் பாடத்தை மட்டும் நீக்கினால் போதாதா ? மேலும் நீக்குவது ஒரு பெரிய சிரமமா என்ன ? அத்தனை பாடப் புத்தகங்களும் விநியோகம் செய்து முடிக்கப் படுவதற்கு முன்பே, இப்பாடப் புத்தகங்கள் இணைய தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதிக்கப் பட்டது.

 

இந்தப் பாடப்புத்தகங்களை இணைய தளத்தில் தரவிறக்கம் செய்த 10ம் வகுப்பு மாணவர்கள், கடந்த ஒரு மாதமாக கோடை விடுமுறையில் இந்தப் பாடங்களை படிக்கத் தொடங்கி விட்டார்கள்.   பல பள்ளிகளில், கோடை விடுமுறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றி, தனியார் பதிப்பகத்தினர், கைடுகள் என்று அழைக்கப் படும், நூல்களை லட்சக் கணக்கில் அச்சடித்து விற்பனை செய்யத் தொடங்கி விட்டனர்.

 

இந்த சமச்சீர் பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் தொடங்கப் பட உள்ளன.

 

இத்தனை ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்ட நிலையில் ஜெயலலிதா இன்று சமச்சீர் கல்வி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 IndiaCCS09043

இது குறித்து சவுக்கிடம் பேசிய கல்வியாளரும், கல்வி சீரமைப்புக்காக தொடர்ந்து போராடி வருபவரும், இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருப்பவருமான ப்ரின்ஸ் கஜேந்திர பாபு பேசினார்.

 DSC_01771

 

ப்ரின்ஸ் கஜேந்திர பாபு

“அமைச்சரவையின் முடிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமான முடிவு இது.   கல்வியாளர் அடங்கிய வல்லுனர் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையை, அரசு குப்பையில் போட்டுள்ளது வேதனையானது.     இப்போது உள்ள பாடத் திட்டத்தில் தவறுகள் இருக்கலாம். அந்தக் தவறுகளுக்கு திருத்தத்தை அச்சடித்து அனுப்புவதில் சிரமமே இருக்காது. மேலும் சீர் செய்ய வேண்டும் என்று அரசு கருதினால், அடுத்த ஆண்டு பாடப் புத்தகங்களை தாராளமாக மாற்றலாமே.. இந்த சமச்சீர் கல்வியை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற, மெட்ரிகுலேஷன் லாபியினர் மகிழும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இது வெறும் பண நட்டம், பொருளாதாரம் மட்டும் சம்பந்தப்பட்ட முடிவு அல்ல. மாணவர்களின் உளவியல் சம்பந்தப் பட்டது. இரண்டு மாதகாலமாக 10ம் வகுப்பு பாடத்தை படித்து வரும் மாணவனுக்கு, புதிய பாடம் என்றால் எப்படி இருக்கும் ?   இது மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை தரும்.   ஜெயலலிதா அரசு, பெருந்தன்மையோடு, இந்த முடிவை மாற்றும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

 

குறிப்பிட்ட தேதியில் கட்டாய ஹெல்மெட் என்று உத்தரவு வந்த போது, உண்மையோ இல்லையோ, கருணாநிதி அரசு ஹெல்மெட் தயாரிப்பாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்று விட்ட என்று அப்போது பேச்சு எழுந்தது.

 

இப்போதும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் மெட்ரிகுலேஷன் லாபியிடமிருந்து லஞ்சம் பெற்றுத் தான் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டு எழுவதற்கான முகாந்திரத்தை ஜெயலலிதாவின் இந்த முடிவு ஏற்படுத்தியுள்ளது.   அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலேயே இருந்தாலும், அது எழுவதை தவிர்க்க முடியாது.

 

இன்று சவுக்கிடம் பேசிய நண்பர், “தலைமைச் செயலகம் புதிய கட்டிடத்தில் இருந்தாலும், பழைய கட்டிடத்தில் இருந்தாலும் என்னை பாதிக்கப் போவதில்லை. ஆனால் எனது இரண்டு மகள்களுக்கும் 750 ரூபாயில் புத்தகம் வாங்கி முடித்திருப்பேன். இப்போது, என் மகள்கள் படிக்கும் கொள்ளைக்காரப் பள்ளியில் புத்தக விலையாக 3000 ரூபாய் என்று சொன்னால், என்னால் என்ன செய்ய முடியும் ?” என்று கேட்டார்.

 

இதுதான் இன்றைய அத்தனை பெற்றோரின் நிலையும். மிக மிக தவறான முடிவை எடுத்திருக்கிறார் செல்வி ஜெயலலிதா.

 jaya3434

கருணாநிதி அரசு எடுத்த எல்லா முடிவுகளுமே தவறு என்று அதை மாற்ற ஜெயலலிதா முயல்வார் என்றால், மக்களின் கடும் அதிருப்தியை சந்திக்க நேரிடும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அலசி ஆராயாமல் எடுக்கப் படும் முடிவுகள் ஜெயலலிதாவுக்கு மிகுந்த கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்.

24448625

கருணாநிதி போல, செய்யும் தவறுகளுக்கு மேற்குவங்கத்தை பாருங்கள், பீஹாரைப் பாருங்கள், ஆந்திராவைப் பாருங்கள் என்று சப்பைக் கட்டு கட்டாமல், தவறை உணர்ந்து திருத்தி இந்த முடிவை மாற்றுங்கள். இதனால், உங்கள் புகழுக்கு எந்த பங்கமும் வந்து விடாது.  முதல் கோணல் முற்றும் கோணலோ என்று எங்களை அஞ்ச வைத்து விடாதீர்கள்.

 

Comments  

 
0 #152 nithya 2011-09-07 19:07
i thank each an evry one for ur valuable reviews............. actually i hav a debate competition in my college 2mrw.......regarding SK..........
SO UR VALUABLE THOUGHTS HELPED ME TO CORE.......... thank you friends........ :-)
Quote
 
 
-1 #151 குமார் 2011-05-31 16:57
சமச்சீர் என்றால் அது இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை, ஏற்கனவே இவர் செய்த காரியத்தால் ஹிந்தி தெரியாமல் நாங்கள் இழக்கும் வேலை வாய்ப்புகள் அதிகம் , இப்போது இங்கே தமிழ் நாட்டில் மட்டும் சமச்சீர் என்றால் இன்னும் சில வருடங்கள் கழித்து கண்டிப்பாக தமிழ் நாட்டில் படித்தவர்கள் தரம் குறைந்த கல்வியை கற்றவர்களாக இருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . அதை விட்டு விட்டுடா அரசு பள்ளிகளின் தரத்தை மெட்ரிக் அளவுக்கு உயர்த்தலாம் .
Quote
 
 
+2 #150 kamarajan 2011-05-31 11:41
சமச்சீர் கல்வி அசியம் வேண்டும். இப்போது இருக்கும் கல்வி முறைகள் மனிதனை உருவாக்குவதில்ல ை;சந்தையில் போட்டிப் போடும் மிருகஙகளை உருவாக்குகின்றன .
Quote
 
 
0 #149 vaedhampudhidhu 2011-05-31 10:33
Quoting கௌஷிக் பாலாஜி:
ஏம்பா மாசம் பத்தாயிரம் கட்டி ஏசி வகுப்பறையில் என் பையனை படிக்க வைக்கிறேன் அதே பாடத்தை ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கிரவனும் படிப்பான்னா நான் என்ன சொம்பையா?தங்கம் வாங்க முடியுதா?ஜோஸ் ஆலுகாஸ் போ கவரிங்தான் வாங்க முடியுதா கல்யாணி கவரிங் போ.சமச்சீர்லாம் வெளிநாட்டு கலாசாரம் அங்க செய்யிறதெல்லாம் அப்படியே இங்க செய்ய முடியாது.அம்மா வந்து வச்சாங்கள்ள ஆப்பு.

Indha maadiri panathimir pudicha unudaya magan enga padithaalum eduka povadhu pitchayae...
Quote
 
 
+1 #148 Kalaichelvan 2011-05-30 11:29
When you go to a market to buy Brinjal, you want to have two opr three shops to be inspected before buying for a days' meal preaparation. The subject before us is concerning the education standard of the children, i-e. the future generation. If the earlier Government thought of having good standard in education, why not implement CBSE system? Some how they wanted to put their hand in the private educational system in order to make money. We heard that lot of schools were pressurised to pay Rs. 20.00 Lakh if they wanted the present fee structure. Their intention was to lower the standard and make money from the private schools.
Allow people to have choices before them to decide which one is suitable for their children. The present Chief Minister has not resorted to abolishing the SAMACHEER KALVI. Instead she has said that this system will be studied prperly before implementation.
Quote
 
 
0 #147 ARUTPERUNCHITHAN 2011-05-30 08:25
+ 2 வில் எங்க பசங்க எடுக்கும் 1100 க்கு மேற்பட்ட மார்க்கை கிராமத்து பசங்களும் எடுத்துடுறாங்க....சபாஷ்...சமச்சீர் கல்வி திட்ட பாட நூல்கள் தயாரித்து கொடுத்த அறிஞர் குழுவில் பிராமண அறிவு ஜீவிகள் ஏன் இடம் பெறவில்லை?...பலே...உயர்குடி மக்கள் தம் பிள்ளைகளை எங்கு சேர்ப்பார்கள்?...பேஷ்..பேஷ்.ஏசி வகுப்பறையில் என்பையன் படிக்கும் அதே பாடத்தை ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கிரவனும் படிப்பான்னா நான் என்ன சொம்பையா?...அற்புதம் போங்கோ....
Quote
 
 
+1 #146 Baashyam 2011-05-29 11:59
Quoting nithya seshadhri:
+ 2 வில் எங்க பசங்க எடுக்கும் 1100 க்கு .....நுழைவு தேர்வு(entrance exam) கொண்டு வந்தால் தான் engg மற்றும் medical தரம் உயரும்...

While there cannot be a second opinion in the intake of really talented students in colleges, I strongly point out that the abolished entrance exam system was not the way to achieve it. Do you mean to say that by attending special coaching classes the IQ and/or EQ of the students will improve?. Definitely not. The students who attended coaching classes where given tips/shortcuts to face the entrance exams which helped them in securing comparatively more marks in the entrance exams. More importantly this objective evaluation of students is not at all good, some kind of subjectivity should be there in the evaluation. Please note that if the students with higher marks are more talented they why there should be interviews for recruitments.

The real solution lies in the improvement of the education and examination systems. I feel the recently abandoned or deferred syllabus (Samacheer Kalvi) is one of the ways in achieving the same.

This syllabus aims to prepare the students for higher education in a better way by, not restricting them within the text book and give them scope to search for additional references to do their class activities (including writing own essays, group discussions, limited research exposure etc). Many of extra curricular activities are now a part of curriculum itself.

Please note that the social, cultural, academic differences between the students from rural and urban background gets reduced with time (Gap in their final year are found to be very low compared to their first year), because of the same level of exposure.
Quote
 
 
0 #145 lali 2011-05-29 11:41
jayalalitha changes everything done by karunanithi due to her hatred and jealousy... there is no own intellectual for jayalalitha...
Quote
 
 
0 #144 திவ்யன் 2011-05-29 10:05
சவுக்கு சகா அவர்களே ,
ஓர் வேண்டுகோள் ,விக்கி லீக்ஸ் தோலுரிக்கும் பல அப்பட்டமான உண்மைகள் பலருக்கும் போய் சேருவதில்லை என்பது
என்னை போன்ற ஆர்வகொலாருகளின் ஆதங்கம்...........நீங்கள் மனது வைத்தல்,சவுக்கி ன் ஓர் மூலாயில் இடம் ஒதுக்கினால்

எங்கள் மூளாயில் நாங்கள் அதை பதிவு செய்து புலம்புவோம் ......
எனவே சகா "சிந்தனை செய் மனமே"
Quote
 
 
+1 #143 M.P.Murugaiah 2011-05-28 22:59
தமிழ் நாட்டின் தலை விதி.
Quote
 
 
0 #142 jeyaraj 2011-05-28 22:35
கல்வியில் மாருதல் வரும்.
Quote
 
 
+2 #141 Virudhu 2011-05-28 22:18
The temporary stop made for Samacheer Kalvi by our Chief Minister is 100% correct. Its not just due to vengeance or egoistic behavior.
Also not only because Kalaignar's song there.
Its because mainly the books are of sub-standard nature, and in this competitive world the future generations need to suffer a lot.
For instance, a student in first standard only learns the numerals till 100, and spelling till twenty. These would have been done in Kinder Garden(K.G) itself. Even the students ask their staffs why they are repeating the same which they knew already.
So Ms.Jaya being a former students of a Convent- Matriculation School, she knows the standards to be kept for Schools for this generation.........

Moreover apart from political ideas, i would like to say that Kalaignar in his previous reign has ruined even the education field in total...!!!!
Quote
 
 
+2 #140 TMS 2011-05-28 12:58
சமச்சீர் கல்வித் திட்டம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், சமூகநீதியை நாம் காலங்காலமாக புறக்கணிப்பது போலாகும். சமச்சீர் கல்வி என்பது ஒரு கட்சி அல்லது ஆட்சியின் திட்டம் அல்ல. இதற்கென பல மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட பொதுவான திட்டம். சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டுப் பாடல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதா ல், திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை . புத்தகங்களில் பிழைகள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. எந்த காலத்திலும் புத்தகங்களில் தவறுகள் இடம்பெறாமல் இருந்ததில்லை. அதை களைய முயற்சிக்க வேண்டுமே தவிர, கைவிடுவது ஆரோக்கியமானதல்ல . கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்பது மிகவும் அவசியமானது. எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக தனது கொள்கையை வெளியிட வேண்டும்
Quote
 
 
+5 #139 கண்ணப்பன் 2011-05-28 08:53
யாரவது புரட்சி கலைஞர் விஜயகாந்திடம் சமச்சீர் கல்வி பற்றி பொறுமையாக விளக்கி கூறினால் போதும். அவர் ஒருவர் தான் விருப்பு வெறுப்பின்றி ஏழைகளுக்காக சிந்தித்து தைரியமாக சட்டசபையில் இப்போதைக்கு பேசக்கூடியவர் அவரை நம்பித்தான் இப்போது தமிழகமே இருக்கிறது. அவர் குரல் கொடுத்தால் மீண்டும் சமச்சீர் கல்வி உரிய மாற்றங்களோடு வரும் என்று நினைக்கிறேன்.
Quote
 
 
+4 #138 nithya seshadhri 2011-05-28 08:46
+ 2 வில் எங்க பசங்க எடுக்கும் 1100 க்கு மேற்பட்ட மார்க்கை கிராமத்து பசங்களும் எடுத்துடுறாங்க. அவங்களை தடுத்து உயர் கல்வி தரம் உயர அம்மா எடுத்த முடிவுதான் entrance test .எங்க பசங்க கோச்சிங் கிளாஸ் போய் படித்து அம்பதுக்கு அம்பது எடுப்பாங்க,கிரா மத்து பசங்க பத்தோ பதினஞ்சோ தான் எடுக்க முடியும்......ஆனால் that old man had abolished Engg and Medical entrance exams...... அம்மா மீண்டும் நுழைவு தேர்வு(entrance exam) கொண்டு வந்தால் தான் engg மற்றும் medical தரம் உயரும்...
Quote
 
 
+1 #137 pamara makkal 2011-05-28 05:43
Education system may be improved and uniform for all.If Honble CM feels that matriculation syllabus is superior,let it be a syllabus to all and control fees structure among pvt schools.
Thank u
Quote
 
 
+1 #136 tam 2011-05-28 02:13
:sad: பலருக்கும் ஒரே வேண்டுகோள் அம்மா என்பவர் நம்மை பெற்றவர் மட்டுமே... ஜெயலலிதா 1980 களில் ஒரு நல்ல நடிகை... அதைதான் இப்போதும் செய்கிறார். எ
அவரின் சுய ரூபம் சட்டமன்றம், சமச்சீரிலே தெரிகிறது.

இன்னும் தெரியும்


அவரை திருத்த கடவுளாளும் முடியாது.....
Quote
 
 
+2 #135 ஜெயகோபால்.க 2011-05-27 22:59
சமச்சீர் கல்வி என்பது மாற்றி அமைக்கப்பட்ட பாடதிட்டங்கலே அதில் நிறைய பாடங்கள் (ஸ்ய்ல்லபுச் ) சேர்க்கப்பட்டுள ்ளது,
இத் திட்டம் நம் நாட்டில் உள்ள படித்த அறிஞ்சர்களை வைத்து செயல் பட்ட குழுவின் முடிவே ஆகும்,வெறும் கருணாநிதியின் அசை அல்ல.
மக்களே சமசீர் கல்வி அவசியம் அது எப்பொழுதும் நம் மாணவர்களின் வளர்ச்சிக்கு தடை கிடையாது ,புரிந்து அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் ஆதரவை சமசீர் கல்வி திட்டத்துக்கு தாருங்கள்
Quote
 
 
-2 #134 TMS 2011-05-27 22:04
யானை தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட கதையாக மக்கள் மாற்றம்வேண்டும் என்ற நோக்கில் பதவிக்கு வரக்கூடாத ஒருவரை தவறாக தேர்ந்தெடுத்தன் விளைவு இன்று அருமையான ஒருதிட்டம் திட்டமிட்டு சீர்க்குலைக்கப் படுகிறது. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்ற நிலையை அகற்றி எல்லோருக்கும் சமமான கல்வி என்ற நிலை கல்வியில் ஏற்பட்டு சமுதாயத்தில் புரட்சி உண்டாக்கும் சமச்சீர்க் கல்விமுறையை நிறுத்தி வைத்திருப்பதல் வழியாக, தன் இனம் எப்போதும் மேலே இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சி வலை பின்னிய ஆதிக்ககூட்டத்தி டம் தமிழன் ஏமாந்து விட்டானே! தமிழர்களே நீங்கள் ஏமாறுவதற்கு என்றே பிறந்த கூட்டமா? சோ ராமசாமி, சுப்பிரமணியசுவா மி, ஜெயலிலதா போன்றவர்கைளைப் பார்த்தாவது நீ்ங்கள் திருந்தக்கூடாதா ? தமிழா இன உணர்வு கொள்! சமசீர் கல்வி முறையை அமுல் படுத்தினால்தான் வருங்கால மக்கள் சமுதாயம் சமதர்ம சமுதாயமாக அமையும். தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி எதற்கெடுத்தாலும ் ஏட்டிக்குப்போட் டி நடவடிக்கைகள். ஆளும் கட்சி மாற்றம் வேண்டும் என்ற மனநிலை இவருக்கு சாதகமாக அமைந்து விட்டது. இவரை விரும்பி யாரும் ஓட்டு அளிக்கவில்லை என்பதே உண்மை. இப்படி வந்த இவர் மீண்டும் பழையபடி ஏட்டிக்குப்போட் டி அரசியல் பண்ணுவது சரி இல்லை. சமச்சீர்க் கல்வி அருமையான திட்டம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். அது முதலில் கல்வியில் ஆரம்பிக்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சமுதாயப்புரட்சி திட்டம் இவரின் ஈகோ பிரச்சினையால் இன்று நிறுத்தி வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக ்கிறது. மேலும் ரூபாய் இருநூறு கோடி அளவில் அச்சிடப்பட்ட நூல்கள் வீணாக்கப்பட்டிர ுக்கிறது. ஒரு தனிநபராக இருந்துகொண்டு கோடி கோடியாக தமிழ்நாட்டு மக்களின் பணத்தை வீணடிக்கிறார் . இவர் திருந்த வேண்டும். திருந்தாவிட்டால ் தேர்தல் பரிசு தரும்.
Quote
 
 
+3 #133 ramya 2011-05-27 21:27
நான் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு செல்ல போகும் ஒரு மாணவி. ச்ப்செ பாடத்திட்டத்தை தமிழக அரசு ஒன்றும் செய்ய போவதில்லை. சமச்சீர் கல்வி புத்தகங்கள் எங்கள் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. அப்புத்தகங்களை படித்தால் எங்கள் கல்வித்தரம் நிச்சயமாக உயரப் போவதில்லை. தேசிய அளவில் நடைபெறும் ஈஈட், ஈஈம் போன்ற தேர்வுகளில் ச்ப்செ மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறும் நிலை உருவாகும். ஆந்திர மாணவன் ஈஈட் தேர்வில் முதல் மதிப்பெண் பெறக் காரணம் என்ன? அங்கு அரசுப் பள்ளி மாணவர்கள் கூட ச்ப்செ, இச்செ போன்ற பாடத்திட்டங்களை படிக்கும் மாணவர்களை விட திறமைசாலிகளாக இருக்க காரணம் என்ன? அரசுப் பாடத் திட்டம் சிறப்பானதாக இருப்பதே. இந்த சமச்சீர் கல்வி புத்தகங்கள் இல்லாமல் போய் தரமான கல்வி முறை அமலுக்கு வர எவ்வளவு கொடிகள் செலவானால் என்ன? இந்த மாற்றதிற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன்.
Quote
 
 
+8 #132 வல்லரசாகும் இந்தியா 2011-05-27 17:40
சமத்துவபுரம் மாதிரி சமச்சீர் கல்வி கொண்டு வந்து எல்லோருடைய குழந்தைகளும் ஒரே பாடம் படிக்க வைத்து விடவேண்டும் என்றால் பாரம்பரிய குடும்பங்கள், பெரும் தொழில் அதிபர்கள், மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள்,உய ர்குடி மக்கள் தம் பிள்ளைகளை எங்கு சேர்ப்பார்கள்? ஏன் கருணாநிதி குடும்பத்தாரே பேரக்குழந்தைகளை எந்தப்பள்ளியில் சேர்ப்பார்கள்?மெட்ரிக் பள்ளிகளில் கொடுக்கும் கோச்சிங் ரிவிஷன் எல்லாம் கவர்ன்மென்ட் வாத்தியாரும் கொடுக்க முடியும் ஆனா மாட்டான் தனியார் வாத்தியாரை விட பத்து மடங்கு சம்பளம் மட்டும் வாங்கிக்குவான்.
Quote
 
 
+3 #131 Jeyanthi 2011-05-27 15:46
I wont agree with this article. Samacheer kalvi(SK) will equalize state, matric,anglo. But what about CBSE? Even if u implement SK, there will be difference between students following SK and CBSE. If SK is the one thats going to root out differences in educational standard, then why the karunanithi govt didnt had the guts to ban CBSE? Already that old man had abolished Engg and Medical enterance exam, which is now screwing the standard of Engineers and doctors from Tamilnadu. This SK will screw even other streams like commerce, accountancy etc. I expect Savuku to be a whip in a ring master's hand, not a whip in a beggar's hand. Pl publish proper article. Dont spoil your name
Quote
 
 
0 #130 nanban 2011-05-27 15:38
நம் நாட்டு அரசியல்வாதிகளிட ம். திட்டம் நல்லதா, கெட்டதா என்று பார்ப்பதைவிட யார் கொண்டு வந்தது என்று பார்ப்பதுதான் அதிகமாக இருக்கிறது. முந்தைய அரசு கொண்டு வந்ததை செயல் படுத்துவதா என்று எண்ணாமல் மக்கள் நலனுக்கு உகந்ததா என்று மட்டும் பார்த்து செயல்பட்டால் புதிய அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும்
Quote
 
 
0 #129 கும்பிடறேன் சாமி 2011-05-27 12:21
Just look at the two links I have given. One is the Srilankan 8th Standard Maths and another is Tamil Nadu Text Book society's 8th STandard. Just tell which syllabus is worthy.
http://www.edupub.gov.lk/Mathemetics%20Gr%208(T).html
http://www.textbooksonline.tn.nic.in/Books/08/Std08-Maths-TM.pdf
Quote
 
 
-17 #128 ஸ்ரீராம் பரத்வாஜ் 2011-05-27 09:08
தனியார் பள்ளிகளை நடத்துவது யார்?அங்கு வந்து குழந்தைகளை சேர்ப்பது யார்?தரமாக நடத்த வேண்டும் என்பதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார் கள்?இதெல்லாம் தெரியாமல் இஷ்டத்துக்கு கமெண்ட் போடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.சமச்சீர் கல்வி திட்ட பாட நூல்கள் தயாரித்து கொடுத்த அறிஞர் குழுவில் பிராமண அறிவு ஜீவிகள் ஏன் இடம் பெறவில்லை?தரமற்ற கல்வியை எங்கள் குழந்தைகள் தலையில் கட்டுவதை எப்படி ஏற்க முடியும்?அதுதான் ஆப்பு.
Quote
 
 
-2 #127 satixsh 2011-05-26 22:37
சவுக்கு ஜெயாவின் கை கூலி
Quote
 
 
+2 #126 Hari TN 2011-05-26 18:17
Dear Savukku,

While i agree with your point of bringing equality among childer, please do not forget that our studnets are currently ill equiiped to deal with comeptitve exams, and the pass percentage in prestigous instituation in IIT and IITms are very minimal from Tamil Nadu.

This Samacheer kalvi instead of raising the standards, is all set to bring down the existing standards in Matriculation and Anglo schools by the name of eqauality. The end reult if implemented would bring in eqaulity in out state, as well as bring about the down fall of entire student fraternity.

Please let me know if you guys have other thoughts...
Quote
 
 
+2 #125 பாலா 1981 2011-05-26 16:44
[ஃஉஒடெ நமெ="ஆ க் ட் சாந்தமூர்த்தி"

இன்டர்நேஷனல் பாட திட்டத்தில் படிப்பவர்கள் ஒன்பதாம் வகுப்பிலேயே இளங்கலை பட்ட பாட திட்டத்தை முடித்து விடுகிறார்கள் . சமசீர் கல்வி தொடர்ந்தால் பத்தாவது படிப்பவன் ஆறாம் வகுப்பு அறிவோடு மட்டுமே இருக்கமுடியும்.
[/ஃஉஒடெ]

இது முற்றிலும் தவறான கருத்து. உண்மையில் இந்திய மாணவர்கள் தான் அதிக பாடங்களைப் படிக்கிறார்கள். வெளிநாட்டினர் சற்று அதிகமாக சிந்திக்க கற்றுக்கொடுக்கி றார்கள்.
--
தன்மானத் தமிழன்.
Quote
 
 
+1 #124 பாலா 1981 2011-05-26 16:37
There are many comments by the people in this forum reflecting as though Goverment Schools are inferior to Private Schools. But, the Fact is that,

1. In private schools there will be better infrastructure (class room, toilet, water, library and computer facilities). On the otherhand in Goverment schools, more competent teachers are there (please keep in mind that those who couldn't compete and win the teacher recruitment exams are generally working in private schools). Also, for information, many of the high class private schools are mainly dependant on the proficient, retired Goverment School teachers.

2. In private schools, the admission is based on meritt they will chuck off a non-performing students (according to the standards of the respective school) eventhough their parent are ready to pay the stipulated fees. Whereas, in goverment schools, they admitt everybody (i repeat everybody). For the information of the users in this forum, many students are coming to Government schools mainly to get SSLC certificate (inorder to facilitate obtaining passport, driving license etc,). If these Goverment Schools also start to take bright students only then where will the dull students go? Can we drop them and make them as third degree (hardship) labours?

3. Inspite of the intake of dull students, the Goverment Schools are able to produce good results (even in class XII exams where the syllabus is common).

-contd in next comment-
Quote
 
 
+1 #123 பாலா 1981 2011-05-26 16:36
-contd--

4. There are some comments that the Government school teachers are not accountable. My dear friends, those days were gone long back unless the teacher give good results they are being punished.


Thus (I hope), every body would accept that, while the scope of the private schools is to make money the scope of the Goverment schools is to give education to all. Considering the difference in scope of these two different entities one cannot compare them on same scale.

I sincerely request comments on my opinion please.

--

Thanmaanath thamizhan
Quote
 
 
0 #122 பாலா 1981 2011-05-26 16:34
There are many comments by the people in this forum reflecting as though Goverment Schools are inferior to Private Schools. But, the Fact is that,

1. In private schools there will be better infrastructure (class room, toilet, water, library and computer facilities). On the otherhand in Goverment schools, more competent teachers are there (please keep in mind that those who couldn't compete and win the teacher recruitment exams are generally working in private schools). Also, for information, many of the high class private schools are mainly dependant on the proficient, retired Goverment School teachers.

2. In private schools, the admission is based on meritt they will chuck off a non-performing students (according to the standards of the respective school) eventhough their parent are ready to pay the stipulated fees. Whereas, in goverment schools, they admitt everybody (i repeat everybody). For the information of the users in this forum, many students are coming to Government schools mainly to get SSLC certificate (inorder to facilitate obtaining passport, driving license etc,). If these Goverment Schools also start to take bright students only then where will the dull students go? Can we drop them and make them as third degree (hardship) labours?

3. Inspite of the intake of dull students, the Goverment Schools are able to produce good results (even in class XII exams where the syllabus is common).
--contd--
Quote
 
 
0 #121 rajaram 2011-05-26 15:54
Jathigal kooda olinthu vittathu. Intha syllabus pirachinai oliyathu pola.
valga jaya.
Quote
 
 
+1 #120 பாலா 1981 2011-05-26 15:47
#77 சரவணன் 201105௨3 17:19
அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஒரு யோசனை...

அணைத்து அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் இவர்களின் பிள்ளைகள் அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு போதும்.

அப்போது தான் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் தரம் உயரும். சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஒழுங்காக கடமையை செய்வார்கள். தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையும் தடுக்க முடியும்.

புதிய அரசு இதை செயல்படுத்துமா?

நன்றியுடன்,
சரவணன்


-----


இது விஷமத்தனமான யோசனை. மற்றவர்கள் தங்கள் குழந்தைகளை விரும்பிய பள்ளியில் படிக்கவைக்க சுதந்திரம் உள்ளது போல் அரசு ஊழியர்களுக்கும் உரிமை உள்ளது.
இப்படி யோசனை வழங்கும் நீங்கள் அரசுப் பணியில் இருந்திருந்து உங்கள் குழந்தைகளை கட்டயப்படுத்தி சேர்ப்பதை அனுமதிப்பீர்களா .

--
தன்மானத் தமிழன்.
Quote
 
 
+2 #119 Nayaki 2011-05-26 12:53
புதிய அரசின் இந்த முடிவு மிக சரியனதே.. இந்த கட்டுரையில் குரிப்பிடுலபடி சாதரன யேலை மக்கல் தரம் குரைந்த கல்வியும் பனகார மக்கல் உயர்ந்த கல்வியும் பெருகிரார்கல் யென்ட்ரால் அரசு தரம் குரைந்த கல்வியை உயர்த்த வேன்டுமே தவிர தரம் மிக்க கல்வியை குரைப்பது எப்படி நியாயம்.. நம் மானவர்கல் உலகம் முலுவதும் சென்ட்ரு சாதனை படைக்க சம்சேர் கல்வி உதவதாது
Quote
 
 
-24 #118 கௌஷிக் பாலாஜி 2011-05-26 09:33
ஏம்பா மாசம் பத்தாயிரம் கட்டி ஏசி வகுப்பறையில் என் பையனை படிக்க வைக்கிறேன் அதே பாடத்தை ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கிரவனும் படிப்பான்னா நான் என்ன சொம்பையா?தங்கம் வாங்க முடியுதா?ஜோஸ் ஆலுகாஸ் போ கவரிங்தான் வாங்க முடியுதா கல்யாணி கவரிங் போ.சமச்சீர்லாம் வெளிநாட்டு கலாசாரம் அங்க செய்யிறதெல்லாம் அப்படியே இங்க செய்ய முடியாது.அம்மா வந்து வச்சாங்கள்ள ஆப்பு.
Quote
 
 
+1 #117 Kothandapanimani 2011-05-26 02:33
உஙகள் கருதுபடி பார்தாலும் +2 ல் அனைது பள்ளிகலிலும் ஒரெ வகை படதிட்டம்தன் இதுவரை பின்பட்றபட்டு வந்ததெ. சாதாரண பள்ளிகளில் படிதவர்கலள் சோடை போக வில்லையே. அரசுக்கு ஏற்ட்றாவரு ஜால்ரா அடிப்பதெ நிபுணர் குழு என்பது அனைவரும் அரிந்ததெ. 3000 கட்டமல் இருக்க 400 ரூபா பள்ளியில் சேர்க்க வென்டியது தானே.
Quote
 
 
+3 #116 மன்மதன் 2011-05-26 00:41
அதிக முட்டாள் மாணவர்கள் சித்தியடைய வேண்டும் என்பதற்காக கல்வித்தரத்தினை க் குறைப்பது தவறானது. சமச்சீர் கல்வி தேவையற்ற ஒன்று. ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திய ஜெ இற்கு நன்றி.
Quote
 
 
+2 #115 pavithra 2011-05-25 15:59
:-) amma aduthdhurukkum mudiv sarilla , amma mudiva maththalam :) Pls......... amma
Quote
 
 
-1 #114 A K T சாந்தமூர்த்தி 2011-05-25 13:34
Quoting SUGUMARAN:
THIS DECISION IS TAKEN BY GOVERNMENT AND IT HAS ALL RIGHT TO DO SO.SAVUKKU YOU ARE STEPPING TO MUCH AND YOUR RUNNING COMMENTARY ON EACH AND EVERY ISSUE IS NOT RECEIVED WELL.ALLOW THE GOVERNMENT TO FUNCTION AND THERE IS NO CRIME IN CHANGING POLICY.
//

In Spectrum issue, Rasa followed the previous govt. policy then why all the dramma. If the govt do the wrong thing everyone has rights to question. If savukku opposes DMK, you are satisfied. But the same Savukku opposes ADMK you are saying these type of commnet. Very Well done keep it up
Quote
 
 
-6 #113 A K T சாந்தமூர்த்தி 2011-05-25 13:24
[ஃஉஒடெ நமெ="கும்பிடறேன் சாமி"][ஃஉஒடெ நமெ="சம்"][ஃஉஒடெ நமெ="ஜொஎல்"]இன்டர்நேஷனல் பாட திட்டத்தில் படிப்பவர்கள் ஒன்பதாம் வகுப்பிலேயே இளங்கலை பட்ட பாட திட்டத்தை முடித்து விடுகிறார்கள் . சமசீர் கல்வி தொடர்ந்தால் பத்தாவது படிப்பவன் ஆறாம் வகுப்பு அறிவோடு மட்டுமே இருக்கமுடியும்.[/ஃஉஒடெ]
முழுவதும் உண்மை.சமசீர் கல்வி நோக்கத்தை விட்டு பாடத்திட்டத்தில ் கோட்டை விட்டு விட்டது. இன்று மத்திய செகோண்டரி CBSE பாடத்திட்டதிற்க ு அமோக வரவேற்ப்பு ஏற்படும் ஏனெனில் கல்வியின் தரம். சம சீர் கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பும் ச்ப்செ ஏழாம் வகுப்பும் சமமே.[/ஃஉஒடெ]
// சமச்சீர் கல்வி திட்டம் பத்தாம் வகுப்பு வரைதான். பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் ஏழாம் வகுப்பிற்கு சமமாக உள்ளது என்பது அதீத கற்பனை. மேலும் ஒரு விஷயம் பன்னிரெண்டாம் வகுப்பு பாட திட்டம் எந்த வித விவாதமும் இல்லாமல் அவசர அவசரமாக 2005 ல் இன்றைய முதல்வரின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு மூன்று வருடங்கள் வரை அதில் மாற்றங்கள் செய்யப்பட்டது.
Quote
 
 
+9 #112 A K T சாந்தமூர்த்தி 2011-05-25 13:16
சவுக்கு சார்
நீங்கள் நடுநிலை வஹிப்பவர் என்று எல்லோரும் உணர வேண்டும் என்று எண்ணி இந்த கட்டுரை எழுதிநிர்கள்
சமசீர் கல்வி விஷயம் அடித்தேன் கவுத்தேன் என்று செய்ய வேண்டிய விஷயமல்ல
Standard of implemnetation is இம்போர்டன்ட். Please give some time to Jaya If we want to raise standard of education we need decisive plan and not quick fix solutions. // சமச்சீர் கல்வி திட்டம் என்பது அடித்தேன் கவிழ்த்தேன் என்று செய்தது அல்ல, ஒன்பது பேர் கொண்ட ஒரு குழு கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு மேல் தமிழகம் முழுதும் பயணம் செய்து நிறைய தரப்பினரிடம் கருத்து கேட்டு அதற்கு பிறகு பாடத்திட்டம் வகுக்கப்பட்டு பிறகு அதன் மீது விவாதங்கள் நடத்தப் பெற்று பாடபுத்தகங்கள் தயாரிக்கப்பட்டு ள்ளுன. இதை தரமில்லை என்று காரணம் கூறி கைவிட்டிருப்பது மிக மோசமான அரசியல் விளையாட்டு.
Quote
 
 
+1 #111 A K T சாந்தமூர்த்தி 2011-05-25 13:07
[ஃஉஒடெ நமெ="குமார்"]வடிவேலு இம்சை அரசனில் சொல்வது போல "வரலாறு முக்கியமல்லவா" அது போல நம்ப முக சமசீர் கல்வி என்ற பெயரில். தன்னை ஒரு காந்தியாக சித்தரித்து ஒரு வரலாறு உருவாக முயன்று இர்ருப்பர். அதனால் தான் அம்மா அதை தள்ளி வைத்து விட்டார்[/ஃஉஒடெ]
// புத்தகத்தை படித்து விட்டு கருத்து பதிவு செய்ய வேண்டும். படிக்காமல் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
Quote
 
 
+1 #110 ssthanu 2011-05-25 12:52
The current government is not going to stop "SAMCHEER KALVI" permanently. As they need more time to evaluate the pro and cons of the system they are not going to implement for this year. May be next year onward we will have samcheer kalvi with a improved version.
Quote
 
 
+3 #109 T.Indran.B.E., 2011-05-25 11:52
மாணவர்களின் அடிப்படைக்கல்வி தரமானதாக இருந்தால்தான் எதிர்காலத்தில் படிக்கவிருக்கும
மேற்படிப்புகளுக ்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களா ன,சிபிஎஸ்.மெட்ரிகுலெசன்,ஆ ங்கிலோ இந்தியன்,ஸ்டேட் போர்ட் ஆகிய ஏதாவது ஒன்றை,ஒரு மாணவன் தனது திற்மைக்கேற்ப,வ சதிக்கேற்ப தேர்ந்தெடுத்து படிக்கும் உரிமையை தடுக்கும அரசின் செயல் கண்டிக்கத்தக்கத ு.சமச்சீர் கல்வி என்பது தமிழக மக்களுக்கு செய்யப்படும் துரோகச்செயல்.சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும ் உடனடியாக நீக்க வேன்டும்.
ஏற்கனவே இந்தி மொழி படிப்பதை தடுத்ததால் தமிழ் நாட்டினர் தேசிய நீரோட்டத்திலிரு ந்து நாம் ஒதுக்கப்பட்டுள் ளோம் என்பதை அன்வரும் கவணத்தில் கொள்ளவேண்டும்.
Quote
 
 
0 #108 Ravikumar.R 2011-05-25 10:46
சவுக்கு அளித்துள்ள கருதுகள் முழுவதுமாக ஏற்க முடியவிலை. இந்த அசு எடுக்கும் முடிவிற்கு பிறகு நாம் கருத்து சொல்வது நன்று.
Quote
 
 
+2 #107 பார்த்திபன் 2011-05-24 22:56
சவுக்குக்கு இருந்த அதே எண்ணம் தான் எனக்கும் உறுத்தியது. பல கோடி ரூபாய் கொடுத்து அடித்த புத்தகங்கள் அத்தனையும் மோசமானவையாக இருக்கு முடியாது. தேவையற்ற பாடத்திட்டங்களை அகற்றி விட்டு, கூடுதல் பாடங்களை மட்டும் சேர்த்து அச்சடித்துக் கொடுக்கலாம். செலவும் குறைவதோடு, கூடுதல் பாடங்கள் சில மாதங்கள் கழித்து விநியோகிக்கப் படலாம். அதுவரை இப்போதுள்ள புத்தகத்தின் பாடங்களை நடத்தலாம்.
Quote
 
 
+3 #106 vaayaadi 2011-05-24 22:16
இந்த சமச்சீர் கல்வி என்பது ஆசிரியர்கலுக்கு இன்னும் புரியவில்லை.அது மட்டுமல்ல செம்மொழி மானாடு கருணாநிதி கவிதை இதுவெல்லாம் சமச்சீர் கல்வி கிடையாது. ஆகவெ மருபரிசீலனை தெவை
Quote
 
 
0 #105 karthikc 2011-05-24 20:51
SN Raja has done a good analysis on this subject. Appreciate it. Savukku we expect you to do the same before charging someone. Its easy to point fingers but we should be careful in doing that.
[ஃஉஒடெ நமெ="ஸ்ண்றஜ"]அம்மா செய்தது சரியே!
ஏன் !
Quote
 
 
+2 #104 Annathurai 2011-05-24 17:07
Pls current government should allow to give equal education to everyone. Please don't use students on your battleground. Let them study without any disturb..
Quote
 
 
0 #103 Annathurai 2011-05-24 17:06
Pls current government should allow to give equal education to everyone. Please don't use students on your battleground. Let them study without any disturb..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 132 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6348
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week16435
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month219167
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12741286