முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சின்னக் குத்தூசி……. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 37
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 30 மே 2011 10:39

 

 

மறைந்த எழுத்தாளர் சின்னக் குத்தூசி அவர்களுக்கு நேற்று நக்கீரன் இதழ் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி பெரியார் திடலில் நடந்தது.   அந்தக் கூட்டத்தில் பேசிய பெரும்பாலானோர் சின்னக் குத்தூசியை கடவுளுக்கு நிகராக புகழ்ந்து பேசினர்.   அவருடைய நினைவாற்றலைப் பற்றியும், அரசியல் அறிவைப் பற்றியும் வானளாவப் புகழ்ந்தனர்.   ஆனால் விமர்சனப் பார்வை என்பது இல்லை. திமுக தலைவர் கருணாநிதியை யாராவது ஒரு வார்த்தை குறை கூறினால் கூட, சின்னக் குத்தூசிக்கு கடும் கோபம் வந்து விடும் என்று பலர் குறிப்பிட்டனர்.   சின்னக் குத்தூசி தூக்கிப் பிடித்த கருணாநிதியால் தான் இன்று திராவிட இயக்கம் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதை பேசிய அனைவரும் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.

 cinnakuthusi-

இணையத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், சின்னக் குத்தூசியைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.

 “சின்னக்குத்தூசி அவர்களை நான் பார்த்ததில்லை. அறிமுகமும் இல்லை. ஆனால் நான் அறிந்தவரை ஒரு சராசரி தமிழ் வணிக-கட்சி இதழாளர். எந்தத் துறையிலும் நீண்டநாள் இருந்தால் அதைப்பற்றிய தகவல்கள் நினைவில் இருக்கும். அவ்வளவுதான் அவரது திறமை. அந்தத் திறமையைக் கண்மூடித்தனமான தனிநபர் விசுவாசத்துக்காக மட்டுமே செலவிட்டவர், அதுதான் அவரது தகுதி.

மு.கருணாநிதி அவர்களின் இலக்கியத் தகுதி பற்றி நான் என் கருத்துக்களைச் சொன்னபோது சின்னக்குத்தூசிதான் அந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார். அதற்கு ஒருநாள் முன்னர் என் நண்பரிடம் கூப்பிட்டு நான் யார், என்ன எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் ஐந்துநிமிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். அதற்கு முன் அவருக்கு என் பெயர் அறிமுகமில்லை. என் நண்பர் கொடுத்த தொலைபேசி அறிமுகத்துக்கு அப்பால் எதையும் தெரிந்துகொள்ளவும் அவர் முயலவில்லை. அவர் எழுதிவந்த வசைமாரி கட்டுரைகளுக்கு அவ்வளவே போதுமென அவருக்குத் தெரிந்திருந்தது. எந்த விஷயத்திலும் அவருக்கு அவ்வளவுதான் அறிமுகம். அவரது கட்டுரைகளை வாசித்தால் தெரியும்.

அவருக்கு வரும் அஞ்சலிக் கட்டுரைகளைப் பார்க்கையில் தமிழ் இதழாளர்களின் தரம் என்னவென்று தெரிகிறது. குருநாதரே இந்த லட்சணத்தில் இருக்கிறார்.

தீப்பொறி ஆறுமுகம் ஒரு கூட்டத்திலே சொன்னார். கருணாநிதி அவர்களுக்காக இரவுபகலாக அவர் மேடையிலே பேசியநாட்கள். பெண்ணுக்குக் கல்யாணம் வைத்திருந்தார். யாரோ சொன்னார்கள் ‘முப்பது வருஷம் கட்சிக்காகப் பேசியிருக்கிறாயே, கட்சி உனக்கு என்ன தந்தது? பெண் கல்யாணத்துக்காகப் போய் உதவி கேள்’ என்று.

சென்னை சென்றார் தீப்பொறி ஆறுமுகம். கருணாநிதி அவர்களைச் சந்தித்தார். தீப்பொறியைக் கண்டதுமே கருணாநிதி கேட்டார். ‘’ஏய்யா கட்சியிலே முப்பது வருஷமா இருக்கியே, இந்தான்னு ஒரு ஆயிரம் ரூபா கொண்டாந்து எனக்கு குடுத்தியாய்யா நீ ?’ “

இந்த இரண்டு நிலைபாடுகளேமே, இரண்டு எக்ஸ்ட்ரீம்கள் என்பதாகத் தோன்றுகிறது. உண்மையில் சின்னக் குத்தூசி கடவுளா, சராசரியான மனிதரா ?

2241493328_ebcf2d56eb_o

தமிழகத்தில் இன்று அரசியல் ஆய்வாளர்கள் என்று எடுத்துக் கொண்டால் விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலும், நுணிப் புல் மேய்பவர்களாகவும், ஆழ்ந்த பார்வை இல்லாதவர்களாகவுமே பெரும்பாலும் இருக்கின்றனர்.

எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், தர்க்க ரீதியாக விவாதித்து, அலசி ஆராய்ந்து, அந்த விஷயத்தின் பின்னணியோடு விளக்கும், விவாதிக்கும் திறமை அறுகி வருகிறது.   சின்னக் குத்தூசி அப்படிப் பட்ட திறமை வாய்ந்தவர். ஆனால், ஜெயமோகன் குறிப்பிடுவது போல, தனது திறமையை கண்மூடித்தனமான தனிநபர் வழிபாட்டுக்கு அவர் பயன்படுத்தினார் என்பதே உண்மை.

நடுநிலையான விமர்சனம் என்பதே இருக்க முடியாது என்பதே குத்தூசியின் வாதம். குத்தூசியின் வார்த்தைகளில் “எனது எழுத்துக்களில் ஒரு போதும் நடுநிலைக்கு இடமேயில்லை.   அரசியல் கட்சிகளுக்கு கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ, அப்படியே அரசியல் விமர்சகர்களுக்கும், கொள்கைகள் இருப்பது மிக மிக அவசியம்.   இல்லாவிடில் அவர்களது விமர்சனம் அரசியல் விமர்சனமாக இருக்காது; அரட்டைக் கச்சேரியாகத் தான் இருக்கும்.”

குத்தூசியின் இந்த வாதம் ஏற்றுக் கொள்வதற்கில்லை. இந்தியாவின் சிறந்த நான் ஃபிக்ஷன் எழுத்தாளராக அறியப்படும், அருந்ததி ராய்க்கு என்ன அரசியல் சார்பு இருக்கிறது ?   மக்களை நேசிக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன சார்பு இருக்கிறது ?   மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தொடர்ந்து எழுதி வரும், மிகச் சிறந்த எழுத்தாளர் சாய்நாத்துக்கு என்ன அரசியல் சார்பு இருக்கிறது ?

கருணாநிதியை கண்மூடித்தனமாக ஆதரித்து எழுதியும், அவரிடமிருந்து எந்த சலுகையையும் எதிர்ப்பார்க்காமல், வாழ்ந்தார் என்பதனால், குத்தூசி இது போல பக்கச் சார்போடு எழுதும் மற்றவர்களையும் கருதக் கூடாது.     கருணாநிதிக்கு தேர்தல் முடிவுகள் வரும் வரை ஜால்ரா போட்ட, வீரமணி, சுப.வீரபாண்டியன், திருமாவளவன் ஆகிய அனைவரின் பேச்சுக்களுக்கும் எழுத்துக்களுக்கும் பின்னால், சுயநலம், சுயலாபம் என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

ஆனால், இது போன்ற சுயநலங்களைக் கூட விமர்சனம் செய்ய குத்தூசி மறுத்தார் என்பதுதான் வேதனை.   திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கடைசி வரை விமர்சிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த குத்தூசி, தொண்ணூறுகளின் தொடக்கத்தில், பார்ப்பனர் என்று குத்தூசியால் தரக்குறைவாக விமர்சனம் செய்யப் பட்ட ஜெயலலிதாவுக்கு, சமூக நீதிகாத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்து, வீரவாள் பரிசளித்த வீரமணியையும் விமர்சிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இது குறித்த கேள்விக்கு, “இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கேற்ப எந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதைக் கணித்து, அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் சரியாக இருக்கும்” என்று வீரமணியின் அந்த நிலைபாட்டுக்கு சப்பைக் கட்டு கட்டினார் குத்தூசி.

Veeramani-Karuna

திக, மற்றும் திமுகவை விமர்சிக்க மாட்டேன் என்று தெளிவாகவே சொன்னார் குத்தூசி.   “குறைகளைச் சொல்ல நிறைய பேர்கள் இருப்பதால், நிறைகளை மட்டும் விதந்தோதுவதையே எனது கடமையாக கருதுகிறேன்” என்று தனது நிலைபாட்டினை தெளிவாகவே எடுத்துரைத்தார்.

“தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் ஊழல், வன்முறை, தகுதியற்றவர்கள் பதவிகளுக்கு சுலபமாக வருதல் போன்ற சீரழிவுகள் திராவிட இயக்கத்தின் எழுச்சியோடு சம்பந்தப்பட்டதாக ஒரு குரல் தொடர்ந்து இருந்து வருகிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?” என்ற கேள்விக்கு, கருணாநிதி பாணியிலேயே, உத்திரப்பிரதேசத்தில் ஊழல், பீஹாரில் ஊழல், காங்கிரஸ் கட்சியின் ஊழல் என்று சுற்றி வளைத்து மழுப்புகிறாரே ஒழிய நேரடியாக பதில் சொல்லவே இல்லை.

தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரோடும் நெருங்கிப் பழகிய குத்தூசி, கம்யூனிஸ்ட் இயக்கத்தை விட, திராவிட இயக்கத்தின் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகிய கொள்கைகளே தன்னை பெரிதும் ஈர்த்ததாக தெரிவிக்கிறார்.   குத்தூசியின் இந்தப் பிடிப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஏற்பட்டிருக்குமே யானால், தனி நபர் துதிபாட வேண்டிய தேவை ஏற்படாமல், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தவராக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டிருப்பார்.

ஆனால் குத்தூசி தன்னை ஈர்த்ததாக குறிப்பிடும், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகிய அனைத்துக் கொள்கைகளையுமே திமுக கைவிட்டு விட்டது என்பது நிதர்சனம்.   சமத்துவபுரம் என்று கட்டி, அனைத்து சாதியினரையும் அங்கே குடியேற்றுவது போன்ற முகப் பூச்சு நடவடிக்கைகளைத் தவிர, வேறு எந்த உருப்படியான காரியத்தையும் திமுக செய்திதில்லை.   சாதி பார்க்காமல் வேட்பாளர்களை எந்தத் தேர்தலிலும் நிறுத்தியதில்லை. 

மதுரவாயல் போன்ற பொதுத் தொகுதிக்கு, தலித்தை வேட்பாளராக நியமிக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சல், திமுகவுக்கு என்றுமே இருந்ததில்லை. மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பதையெல்லாம் எப்போதோ மூட்டை கட்டி விட்டார்கள். அரசுக் கட்டிடமான புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட, பூமி பூஜை போட்டு, அதில் அமைச்சர் கலந்து கொள்வது வரை, இவர்களின் மூடநம்பிக்கை எதிர்ப்பு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

கடவுள் மறுப்பு என்பது, கடவுளை வணங்குவதையும் தாண்டி, தந்திரம் செய்யும் சாமியாரை வீட்டுக்கு வரவழைத்து, அந்த நபரிடம் தன் மனைவி மோதிரம் வாங்குவதை வேடிக்கை பார்த்து, தன் பிள்ளையை அந்த நபரிடம் ஆசி வாங்க புட்டபர்த்திக்கு அனுப்பி, அந்த சாமியார் இறந்ததற்கு, திமுக இரங்கல் தீர்மானம் போடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

 

Jan_20_f

இதையெல்லாம், பார்த்து விமர்சனம் செய்யத் தவறியவர் குத்தூசி.   இது ஒரு வகையில் சமூகத்துக்கு இவர் செய்த தீங்கே….   குத்தூசி போன்ற மதிக்கத் தக்க எழுத்தாளர், கருணாநிதியின் தவறுகளையும், 2ஜி ஊழலையும், குடும்ப அரசியலையும், நளினியை விடுதலை செய்ய மறுப்பதையும், நியாயப் படுத்தி எழுதுகையில், அப்பாவித் திமுக தொண்டனுக்கு உண்மையை தெளிவுபடுத்த மறுப்பதோடு பொய்யை எழுதுகிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஒரு எழுத்தாளனுக்கு தன்னளவில் நேர்மை உணர்ச்சி வேண்டும். தன்னளவில் நேர்மை உணர்ச்சி இல்லாத எழுத்தாளன் சோரம் போனவனாகவே கருதப்படுவான்.   ஆனால், குத்தூசியிடம் இது போன்ற குற்றச் சாட்டை சுமத்த முடியாது.   திமுகவில் நேற்று முளைத்த காளான்கள், காவல்நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்வதும், நிலத்தை ஆக்ரமிப்பு செய்வதும், மிரட்டிப் பணம் பறிப்பதும் என்று அலைகையில், கருணாநிதிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத சேவையைச் செய்த குத்தூசி, கருணாநிதியிடம் எந்தச் சலுகையையும் கடைசி வரை எதிர்ப்பார்க்காமல் இருந்தார் என்பதே அவரை சிறந்த மனிதராக ஆக்குகிறது.

பல கோடி ரூபாய்களை ஸ்பெக்ட்ரத்தில் சுருட்டிய, சலுகை விலையில் வீட்டு மனை பெற்ற காமராஜ், கருணாநிதிக்கு துதி பாடுவதும், எதுவுமே பெறாமல், உள்ளார்ந்த அன்போடு சின்னக் குத்தூசி கருணாநிதிக்கு துதி பாடுவதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா ?

ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசியைப் பற்றிக் கூறியதைக் குறிப்பிட்டு, இந்தக் கட்டுரையை முடிப்பது சிறப்பு.

HE REMAINED AN EXTRAORDINARILY UNSLEFISH MAN IN THESE TIMES OF EXTRAORDINARY GREED.

 

Comments  

 
0 #38 R.UMASELVI 2011-08-23 12:15
IT IS VERY EXCELLENT NEWS OF THE PM
Quote
 
 
+1 #37 பார்த்திபன் 2011-06-02 17:50
அருந்ததி ராய், எழுத்தாளராகவே ஏற்கனவே புகழ் பெற்றவர். காஷ்மீரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் போராடிக்கொண்டிர ுக்கும் இந்திய வீரர்கள் இன்னும் அங்குள்ள பிரச்சனையைத் தீர்க்கவே இல்லையே? இது ஏன்? இதற்கான தீர்வினை ஆயுதத்தின் மூலம் எட்ட முடியும் என்ற எண்ணமே தவறு. நக்சலைட்டுகள் வன்முறையைக் கையில் எடுக்கிறார்களே? அது சரியா? என்ற கேள்வி எப்போதும் எழுவது. அவர்கள் சாதரண மலைவாழ் குடிமக்களாக இருந்து, அவர்கள் வாழ்விடங்களைக் காலி செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத் தி போலீஸைக் கொண்டு வலுக்கட்டாயமாகக ் காலி செய்ய வைக்கப்படும் போது அது மட்டும் மட்டும் வன்முறை இல்லையா? அரசு செய்வதால் சட்டத்துக்கு உட்பட்டதாக ஆகிவிடுகிறதே? இதை எடுத்துச் சொல்வது அருந்ததி ராய் போன்றோர் தான்.
Quote
 
 
0 #36 திவ்யன் 2011-06-02 12:47
"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ......"
உனக்காக அந்த துரியோதணன் அறிக்கை விடவில்லையே ,நீலி கண்ணீர் விடவில்லையே, சிலை எழுப்பாவில்லையா ,
பத்தோடு பதின்னொனாக போய்விட்டாயே என் அருமை புலவ ............


"வாழ்வது வனமாலும் சேர்வது இனமாக இருக்கவேண்டும்"
Quote
 
 
0 #35 pandiyan 2011-06-02 12:01
அன்னியன்,
Read another article about him in thinnai . com written by pavannan and also dont forgot to read PINNOTTAM
Quote
 
 
0 #34 பசிக்கு சோறு 2011-06-01 17:03
சின்னக் குத்தூசி அவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திருவாரூரை சேர்ந்தவர்,பிரா மண எதிர்ப்பு?! கருணாநிதி குடும்பத்தின் "பாப்புலர் வெற்றியை" பிராமணர் சார்பில் ஆதரித்தவர்.அவரை பல முறை நேரில் சந்தித்தவன்(1982- 92)என்ற முறையில்,என் தந்தை அம்மையப்பன்,திர ுவாரூருக்கு பக்கத்து வீடு.புதிய "ஜாதி சமயமற்ற" இந்தியாவை உருவாக்க கடுமையாக ஆதரித்தோம்!.கடைசியாக மு.கருணாநிதி தன் ஜாதி புத்தியைதான்(மு ரசொலி)காட்டினார ்!. எல்லாம் வீண்,விழலுக்கு இறைத்த நீர்!."தி ஹிந்து உண்மையான நிறுவனர் கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் போல,இவருடைய ஆன்மாவும் சாந்தியடையட்டும ்!...இந்திய மக்களின் பணத்தை திருடியதற்கும், "வன்னி மக்களை" பலிகொடுத்து "பில்லியன் $" சம்பாதித்ததற்கு ம்,"பாக் நீரினையை சுற்றிய 150 கிமீ" க்குள் உள்ள "தமிழ் தலைமைகள்" "பரிகாரம்" தேட வேண்டும்... ஐயகோ!!
Quote
 
 
+4 #33 anniyan 2011-05-31 22:18
Quoting விகடகவி:
எனது கருத்து என்னவென்றால் இவரை 'பீஷ்மர்' என்று உயர்த்தி பீஷ்மரை கேவலப்படுத்தக் கூடாது என்பதே. ஏனெனில் பீஷ்மர் நாட்டின் நலனிற்காக கௌரவர்கள் கூட இருந்தார் என்பது எனது நம்பிக்கை. ஐயா சின்னகுத்தூசியோ ஒரு கொள்ளை கும்பலுடன் இருந்தார் என்பதை தினசரி திஹாருக்கும் கோர்ட்டிற்கும் ஓடும் குடும்ப உறவுகளை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.


மகாபாரதப்படி பீஷ்மர் சந்தனு மகாராஜாவிடம், நம் வம்சம் முழுவதையும் காப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததனால், என்ன செய்தாலும் கௌரவர்களை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற ்கு உள்ளாகிறார். சின்னக் குத்தூசியின் நிர்ப்பந்தம் என்பதென்ன? ஒருவேளை அண்ணாத்துரை பெரியாரை பிரிந்து தி.மு.க ஆரம்பித்த பொழுது சேராமல், தி.க. விடம் ஒன்றியே இருந்த கருணாநிதியைக் காப்பேன் என்று பெரியாரிடம் சின்னக்குத்தூசி சத்தியம் செய்துவிட்டாரா? அப்புறம் பெரியாரே தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து பிரசாரம் செய்தாரே?..செஞ்சோற்றுக் கடன் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் சின்னகுத்தூசி சோற்றுக்கில்லாம ல் இருந்தபோது இவர்கள் ஒன்றும் உதவியதில்லை. அவர் பள்ளி ஆசிரியர் பணியைத் தொடர்ந்திருந்தா ல் திராவிடக் கும்பலிடம் பெற்ற சம்பளத்தை விட அதிகமே வாங்கியிருப்பார ்.
யாரேனும் மேலதிக தகவல்கள் கொடுத்தல் தெரிந்துகொள்வேன ்.
Quote
 
 
+1 #32 Kanian 2011-05-31 20:36
மக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ..

ஜனாதிபதி தகுதி :
முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.(true ??) குற்ற பின்னணி உடையவர்.

பிரதமர் :
முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் …

1) 2G ஊழலா .. தெரியாது

2) commonwealth games ஊழலா .. தெரியாது

3) adarsh ஊழலா .. தெரியாது

4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.

5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.

6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார ்களா ? தெரியாது.

தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.

நிதி அமைச்சர்:

மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

உள்துறை அமைச்சர் :
வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

முன்னாள் உள்துறை அமைச்சர் :
தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

தொலைதொடர்பு துறை :

முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு ). 2G “ஜீரோ லாஸ்” என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.
Quote
 
 
+1 #31 Nathan 2011-05-31 18:48
தனி மனித நேர்மை என்பது எல்லொருக்கும் இருக்க வென்டிய ஒன்று. எந்த ஆதயமும் எதிர்பார்க்கா விடினும் நடு நிலைமை மாறி நிற்ப்பதும் ஒருவரின் நிறைகளை மட்டும் போற்றுதலும் பத்திரிக்கை தர்மம் ஆகாது. கருணாநிதி போன்றவர்கள் இப்படி மனசாட்சியே இல்லமல் தவறுகள் பல செய்ய இவரைப்போன்ற துதி பாடிகளும் ஒரு காரணம் அல்லவா? பகல் என்பது மட்டும் ஒரு நாள் ஆகி விடுமா? நிறை மற்றும் குறை ஆகியவை சேர்ந்து தானே ஒரு மனிதனின் குணங்கள்? அதிலும் பொது வாழ்வில் உள்ள ஒருவரின் நிறைகளை மட்டும் புகழ்ந்து குறைகளை இருட்டடிப்பு செய்வது சமுதாயத்திற்கு நல்லது அல்ல. ஒரு எழுத்தாளரின் கடமை சமுதாய மேம்பாடேயன்றி தனி மனிதனை புகழ்வது அல்ல. பாபா அவர்களை திரு.சவுக்கு தந்திரம் செய்யும் சாமியார் என்று குறைப்பிட்டுள்ள ார்கள். பல்லாயிரம் பேர்கள் அவரால் பயன் பெற்றுள்ளர்கள். எனவே தரக்குறைவான விமர்சனம் வேன்டமே சவுக்கு.
Quote
 
 
+5 #30 விகடகவி 2011-05-31 01:14
நான் சின்னகுத்தூசி அவர்களின் கட்டுரைகள் எதையும் படித்தது இல்லை. சவுக்கு கட்டுரை மூலம் தெரிவது என்னவென்றால் அவர் மக்களுக்காக எழுதாமல் கட்சிக்காக எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் 'Spokesman' என்று சொல்லுவது போல், திமுகவின் 'Mouth piece'ஆக இருந்துள்ளார். அப்படி பார்க்கையில் அவர் பத்திரிகையாளர் என்ற வரையரையில் இருந்து வேறுபடுகிறார்.

கீழே, அன்பர் பாண்டியன், ஜூவி இவரை 'பீஷ்மர்' என்று கூறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய ுள்ளார். ஜூவி பல சமயங்களில் சங்கடங்களை குறைப்பதற்காக அல்லது பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக பூடகமாகவும், குறிப்பாகவும் எழுதிவிடுவார்கள ். ஆனால் அந்தச் செய்திகளில் ஒரு சில பொறிகள் மட்டும் வைத்திருப்பார்க ள். அந்த வார்த்தைகளை புரிந்து கொண்டால் தான், அவர்கள் என்ன சொல்லவருகிறார்க ள் என்பதே நமக்கு புரியும். பல வருடங்களாக ஜூவி வாசகர்களாக இருப்பவர்களே அதை புரிந்து கொள்ள தலையை பியித்து கொள்ள வேண்டியதாக இருக்கும்.

அப்படி தான் சின்னகுத்தூசியி ன் இரங்கல் கட்டுரையும் இருந்தது. 'பிஷ்மர்' என்று ஒற்ற வார்த்தையில் ஜெயமோகன் எழுதிய நீண்ட கட்டுரையை அடக்கி விட்டார்கள். பிஷ்மர் கௌரவர்கள் குற்றம் செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் கூடவே இருந்தார், அவர்கள் சார்பாக போரும் புரிந்து மாண்டார். ஜூவி சொல்லவருவது, சின்னகுத்தூசியு ம் செந்சோற்று கடனிற்காக தீய கட்சியின் தலைவருடனே இருந்திருந்தார் என்பதே.

நீங்கள் ஜூவியை இணையத்தளத்தில் படித்திருந்தால் ஜூவி வாசகர்கள் சிலர் இதே கருத்தை கூறியிருப்பதை கண்டிருக்கலாம். இது தான் ஜூவியின் புத்திசாலிதனம். ஒரு ஜூவி வாசகர், கருணாநிதி வாஜ்பாய் பற்றி கூறியதை நினைவுகூர்ந்தார ். அது - 'சரியான மனிதர் தவறான பக்கம் இருக்கிறார்'.

எனது கருத்து என்னவென்றால் இவரை 'பீஷ்மர்' என்று உயர்த்தி பீஷ்மரை கேவலப்படுத்தக் கூடாது என்பதே. ஏனெனில் பீஷ்மர் நாட்டின் நலனிற்காக கௌரவர்கள் கூட இருந்தார் என்பது எனது நம்பிக்கை. ஐயா சின்னகுத்தூசியோ ஒரு கொள்ளை கும்பலுடன் இருந்தார் என்பதை தினசரி திஹாருக்கும் கோர்ட்டிற்கும் ஓடும் குடும்ப உறவுகளை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
Quote
 
 
+2 #29 Prabhakaran A 2011-05-31 00:14
நல்ல் கட்ரை
Quote
 
 
+4 #28 anniyan 2011-05-30 23:28
சவுக்கின் நல்ல கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

திரு பாண்டியன், ரகுராமன் கருத்துக்கள் அருமை. திரு. பொன்ராஜ் பாண்டியன் ஏற்கனவே எழுதியதை எடுத்து போட்டிருந்தாலும ் நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிற ார்.

//அந்த "நபரிடம்" தன் மனைவி மோதிரம் வாங்குவதை வேடிக்கை பார்த்து, தன் பிள்ளையை அந்த "நபரிடம்" ஆசி//

இலக்கியம் படிப்பவர்களுக்க ு இதில் உள்ள குத்தூசி புரிந்திருக்கும ்.. சவுக்கின் எழுத்துத் திறமை வளர்ந்துகொண்டே போகிறது.. வாழ்த்துக்கள்..

சாய்பாபா கிளம்பியபின்:
தயாளு அம்மாள்: "என்னங்க, மந்திரத்துல வந்த மோதிரத்த வாங்கிகிட்டேனு எம்மேல கோவம் இல்லையே"?
கருநாய்நிதி: "பகுத்தறிவில்லாம பேசாத.. தானா வர்ற சொர்ண லெட்சுமிய யாராவது வேணாம்பாங்களா? பதிலுக்கு தட்சணை எதுவும் குடுத்துடலை இல்ல?"
Quote
 
 
+4 #27 Baashyam 2011-05-30 23:20
"இந்தியாவின் சிறந்த நான் ஃபிக்ஷன் எழுத்தாளராக அறியப்படும், அருந்ததி ராய்க்கு என்ன அரசியல் சார்பு இருக்கிறது ? மக்களை நேசிக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன சார்பு இருக்கிறது ? "
-----

மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் அருந்ததி ராய் போன்ற "cheap hypocrite" களுக்கு பொறுந்தாது.

காஷ்மீரில் போராடும் நமது பாதுகாப்பு படையினரை publicity stunt க்காக இழிவு படுத்திய தேச துரோகியை சவுக்கு இப்படி கௌரவித்தது வருத்தமாக இருக்கிறது.
Quote
 
 
+1 #26 Ram Prasad 2011-05-30 23:02
The hottest places in hell are reserved for those who in times of great moral crises maintain their neutrality” - Dante Alighieri
Quote
 
 
+13 #25 நான் கடவுள் 2011-05-30 21:38
சமீப காலமாக சிலர் சவுக்கின் எழுத்துக்களை குறை கூறி வருவது தெரிகிறது. ஜெயலலிதாவிற்கு துணை போவதாகவும் எழுதப்பட்டிருந் தது. ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.நமக்கு சரியாக தெரிவது இன்னொருவருக்கு தவறாக தெரிகிறது.அத்துடன் தவறு செய்யாதவர்கள் எவரும் இவ்வுலகில் இல்லை. கருணாநிதி ஆட்சியில் ஊழல், அராஜகம்,ரவுடித் தனம் எங்கும் மேலோங்கி இருந்தது. சினிமா உட்பட அனைத்தும் கருணாநிதி குடும்பத்தின் கையில் சிக்கிக் கொண்டது. பதவி,பணத்திற்கா க ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையில் கருணாநிதி கண்ணை மூடிக் கொண்டார். இந்நிலையில் ஒரு கொடிய ஆட்சியை அகற்ற வேண்டிய அவசியம் மக்களுக்கு இருந்தது. கருணாநிதியின் குடும்ப ஊழல் ஆட்சியை அகற்ற இருந்த ஒரே வழி ஜெயலலிதாவை ஆட்சிக்கு கொண்டு வருவது தான். வேறொரு உறுதியான கூட்டணி இல்லாத நிலையில் கருணானநிதி வருவதை விட ஜெயலலிதா எவ்வளவோ மேல் என மக்கள் எண்ணிக் கொண்டார்கள். ஒரு நல்ல திடமான மூன்றாவது கூட்டணி இருந்திருந்தால் நிச்சயம் அந்த மூன்றாவது கூட்டணி வர வாய்ப்பிருந்தது . சமீபத்தில் நடந்த கனடா தேர்தலில் இப்படியான நிலையை நாம் கண்டிருக்கலாம். எனவே அவசரப்பட்டு சவுக்கின் மேல் குற்றம் சுமத்தாது உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு சிறந்த மூன்றாவது கூட்டணியை உருவாக்குவதன் மூலம் அடுத்த தேர்தலிலாவது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம். அத்துடன் வரும் உள்ளூராட்சித் தேர்தல்,இடைத் தேர்தல்களில் ஜே ஆட்சி தவறான வளியில் செல்லும் பட்ச்த்தில் இரண்டு கட்சிகளையும் துரத்தி மூன்றாவது கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கலாம். இது இரண்டு கட்சிகளுக்கும் ஒரு சாட்டை அடியாகவும் இருக்கும்.இளையோரின் வாக்கு வங்கி அதிகரித்த இன்றைய நிலையில் இது நிச்சயம் சாத்தியமே.
Quote
 
 
+2 #24 JP 2011-05-30 19:55
அருமை
Quote
 
 
-1 #23 aha 2011-05-30 18:30
What communists did when UPA was doing 2G scam?They were supporting the Govt.Right?
Quote
 
 
-6 #22 aha 2011-05-30 18:29
Arunthathi Rai,She has Maoist links and Kashmir separatist links and wants to participate in all anti Indian activities.What else you want?Even if u say,Indian army are doing atros in CHennai she will come to protest with u.
Quote
 
 
+6 #21 Ganesh 2k5 2011-05-30 17:42
அருமையான பதிப்பு.பாராட்டுகள் .

மற்றொரு விஷயம்: ராஜா வுக்கு துணையாக,கேடி சகோதரர்களும் போக போகிறார்கள். இந்த வார டேஹேள்கா வில் கவர் ஸ்டோரி யே இதை பற்றியது தான் .
Quote
 
 
-5 #20 surya algatz 2011-05-30 16:47
சவுக்கு நியூஸ் இனி அதிகம் எதிர் பார்க்க வேண்டாம். இனி அவர் வேலை (கேஸ்) விசயமாக கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்
Quote
 
 
+8 #19 Arun-Perur 2011-05-30 16:42
தனி மனித நேர்மை என்பது எல்லொருக்கும் இருக்க வென்டிய ஒன்று. எந்த ஆதயமும் எதிர்பார்க்கா விடினும் நடு நிலைமை மாறி நிற்ப்பதும் ஒருவரின் நிறைகளை மட்டும் போற்றுதலும் பத்திரிக்கை தர்மம் ஆகாது. கருணாநிதி போன்றவர்கள் இப்படி மனசாட்சியே இல்லமல் தவறுகள் பல செய்ய இவரைப்போன்ற துதி பாடிகளும் ஒரு காரணம் அல்லவா? பகல் என்பது மட்டும் ஒரு நாள் ஆகி விடுமா? நிறை மற்றும் குறை ஆகியவை சேர்ந்து தானே ஒரு மனிதனின் குணங்கள்? அதிலும் பொது வாழ்வில் உள்ள ஒருவரின் நிறைகளை மட்டும் புகழ்ந்து குறைகளை இருட்டடிப்பு செய்வது சமுதாயத்திற்கு நல்லது அல்ல. ஒரு எழுத்தாளரின் கடமை சமுதாய மேம்பாடேயன்றி தனி மனிதனை புகழ்வது அல்ல. பாபா அவர்களை திரு.சவுக்கு தந்திரம் செய்யும் சாமியார் என்று குறைப்பிட்டுள்ள ார்கள். பல்லாயிரம் பேர்கள் அவரால் பயன் பெற்றுள்ளர்கள். எனவே தரக்குறைவான விமர்சனம் வேன்டமே சவுக்கு.
Quote
 
 
-6 #18 Nathan 2011-05-30 15:28
திரு ஸத்யஸாய் பாபா அவர்களை தவறாக கூறவேஈண்டாம்
Quote
 
 
+3 #17 Nathan 2011-05-30 15:17
திரு சவுக்கு அவர்களூக்கு ஓரு பனிவன வேண்டுகோள்[ [உ]கடவுள் மறுப்பு என்பது [/ப்]கடவுளை வணங்குவதையும் தாண்டி, தந்திரம் செய்யும் சாமியாரை வீட்டுக்கு வரவழைத்து, அந்த நபரிடம் தன் மனைவி மோதிரம் வாங்குவதை வேடிக்கை பார்த்து, தன் பிள்ளையை அந்த நபரிடம் ஆசி வாங்க புட்டபர்த்திக்க ு அனுப்பி, அந்த சாமியார் இறந்ததற்கு, திமுக இரங்கல் தீர்மானம் போடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.[/உ] இது கன்னடிக்கதக்கது ச
Quote
 
 
+14 #16 su.raghuraman 2011-05-30 14:32
மறைந்த சின்ன குத்தூசி அவர்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்து இருந்திருக்கலாம ் என்று நண்பர் வருத்த பட்டு இருக்கிறார். குத்தூசி கருணாநிதியின் அக்கா மகனா ? துணைவியின் உறவா ? மனைவியின் அண்ணனா ? கவிஞர் வாலி, ஹிந்து ராம்,
கமல்ஹாசன் போன்ற அக்ராஹரத்து அல்லக்கை. அவரும் கருணாநிதிக்கு ஒரு முதுகு சொரியும் (சொரிந்த) பாப்பான். 'அவாள்' 'இவாள்' என்று கருணாநிதி இவரை தன் முரசொலியில் எழுதி தாக்காத வரை விட்டதே அவருக்கு தந்த பெரிய பதவி.
Quote
 
 
-2 #15 snnadurai 2011-05-30 13:44
வார பத்திரிகைகலில் கிலிச்சில்ட்டான ்க என்ட்ரு சொல்வது பொல சின்னக்குத்துசி யை பட்ரி எலுதிட்டேன்க அவரொட திரமைகலையும் கொஞம சொலலி இருக்கலாம்
Quote
 
 
0 #14 Prabhu2012 2011-05-30 13:37
http://www.vinavu.com/2011/05/28/rowdy-mariam-pichai/
Quote
 
 
+2 #13 naan kadavul 2011-05-30 13:15
இருக்கும் போதே ஒரு சிலருக்கு கோயில் கட்டும் ஒரு சிலர் நம்மிடம் இருக்கும் போது, இறந்தவர்கள் செய்லகளை எடுத்துக் கூறுவதில் தப்பே கிடையாது. அப்படி கூறாவிட்டால் அவர்களுக்கும் கோவில் கட்டி கடவுள் ஆக்கி விடுவார்கள். நான் கடவுள் இருக்கும் போது இராமனுக்கும்,அன ுமனுக்கும் கோவில் கட்டியவர்கள் அல்லவா தமிழ் நாட்டவர்கள்.
இது தவிர,ஒரு கட்சி ஆட்சிக்கும் வரும் போது ஒரு சில மாதங்களாவது விமர்சனங்களை தவிர்ப்பது நல்லதே.இருந்தும் சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்ட போது சவுக்கு குரல் கொடுத்தது.வரவேற்கிறோம்.
தூற்றுபவர் தூற்றட்டும்,போற ்றுபவர் போற்றுபவர் தொடர்ந்து செல் சவுக்கு.
Quote
 
 
0 #12 kuttysavukku 2011-05-30 12:45
கல்வி திட்டங்களில் மாற்றம். புதிய பாட புத்தகங்களுக்கா க பதினைந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை. 200 கோடி வீணாகி இன்னுமொரு 200 கோடி செலவாகிக் கொண்டிருக்கிறது . காரணம் எதுவும் சொல்லப்பட்டிருக ்கிறதா? பொறுமை என்னும் குணமும் சகிப்புத்தன்மை என்னும் குணமும் இல்லாத முரட்டு சுபாவம் படைத்த ஒரு பெண்மணியால் நாடு சீரழியப் போவதையும் நானும் நீங்களும் பார்த்து வேதனை அடையும் சூழ்நிலை தோன்றிவிட்டது.இதெலாம் கண்டுகாம சவுக்கு என்னத்த பு...........ட்டு இருக்கு . இறந்து போன ஒரு தருக்க எதுக்கு வெட்டி விவாதம்
Quote
 
 
+1 #11 ம.பொன்ராஜ் 2011-05-30 12:33
[ஃஉஒடெ நமெ="பன்டியன்"]தி மு க ஆரம்பித்த அன்று கருணாநிதி அங்கு இல்லை . திமுக தொடங்கப்பட்ட அன்றைய கூட்டத்தில் கருணாநிதியின் பெயர் இருக்கவில்லை. செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராபின்ஸன் பார்க்கில் கூடிய ஒரு கூட்டத்தில் அண்ணாவின் தலைமையில் வெளியேறியவர்கள் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள ், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில். அக்கூட்டத்தில் பெரியாரின் அண்ணன் மகன், ஈ.வி.கே.எஸ் சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே நீலமேகம் அன்பழகன் சி.பி.சிற்றரசு போன்ற முன்னனணி தலைவர்கள் இருந்தனர். ஆனால் பின்நாளில் ஈ.வி.கே.எஸ் சம்பத் இருட்டடிப்பு செய்தனர் . தி மு க வரலாறில் . இளங்கோவன் கூட அறிவாலயத்தில் உள்ள கண்காட்சியில் ஏன் ஈ.வி.கே.எஸ் சம்பத் இல்லை என்று சூடாக விவாதம் பணியாத நினைவு . விவாதம் வருவோம் . ஜூ வி இவர் மறைவதற்கு முன்பு ஒரு வரம் முன் இவரை குறை கூறி ஒரு கேள்வி பதில் வெளியிட்டது . மறுவாரம் இவர் மறைந்தார் அதன் பின் பத்திரிகை பீஷ்மர் என்று வெட்கம் இல்லாமல் ஒரு கட்டுரை வெளியிட்டது . இதுதான் இன்றைய தமிழ் பத்திரிகை லட்சணம். இந்த கட்டுரையில் சொல்லி இருபது போல குத்தூசி ஒன்றும் தி க தி மு க சார்ந்த கட்டுரையாளர் இல்லை . அப்படி இருந்தால் செழியன் கண்ணதாசன் போன்றோரின் கருதும் இவர் பிரதிபலித்து இர்ருகவேண்டும். கருணாநிதி என்ற தனி மனித துதிபாடி இந்த மனிதர் . சொல்ல போனால் சென்ற ஆட்சியில் கருணாநிதி பாராட்டு மலையில் , தனி மனித துதி யில் நனைதற்கு இவர்தான் முன்னோடி . ஒரு தனி மனித துதிபடிக்கு எதற்கு இந்த அள்ளவு முக்கியதுவம் ? ஒருவர் ஒருவரை அளவு கடந்து பாராட்டுவது சொந்த விஷயம் அதை இந்த மனிதர் சரியாக செய்தார். நாம் நம் வேலயை பர்கல்லாம். கூரை மீது எறிந்தால் ஆயிரம் காக்கை .. கருணாநிதிக்கு இன்னும் ஒரு காக்கை இநேரம் கிடைக்காமல் இருக்குமா என்ன ?[/ஃஉஒடெ]

அப்படி ஒரு காக்கை தான் "லக்கிலுக்" என்ற பெயரில் 'தப்பு' கிழிந்தது கூட தெரியாமல் 'தப்பு தப்பாக' கருணாநிதிக்கு ஜால்ரா அடித்து காதை பிளக்கிறது...!!!
Quote
 
 
+2 #10 ம.பொன்ராஜ் 2011-05-30 12:29
[ஃஉஒடெ நமெ="ஜய"]ஒரு வாதத்துக்காக தங்கள் கூறுவது உண்மை என்று எடுதுகொண்டலும் இறந்துபோனவரை விமர்சனம் செய்வது தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.[/ஃஉஒடெ]அவர் உயிரோடு இருந்தபோது ஒருவரும் சென்று பார்க்கவில்லை. ஆனால் அவரது பூத உடலை பார்க்க மட்டும் ஏன் சாரை சாரையாக செல்கிறார்கள்? ஒரு மனிதன் இறந்த போது தான் அவனது நிறை குறைகள் அதிகமாக அலசப் படும். இது நியதி. சாவுக்கும் அதையே செய்திருக்கிறது என்று நம்புவோம்.
Quote
 
 
+1 #9 auctuskps 2011-05-30 12:23
உஙகள் கருத்து மிகௌவும் சரி
Quote
 
 
+3 #8 ம.பொன்ராஜ் 2011-05-30 12:22
சின்னகுத்தூசியை பற்றி கருணாநிதி என்றாவது இப்படி நினைத்திருப்பார ்: "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி. என்ன ஜால்ரா சத்தம் தான் காதை பிளக்கிறது...!!!"
Quote
 
 
+5 #7 ம.பொன்ராஜ் 2011-05-30 12:20
//கருணாநிதியை கண்மூடித்தனமாக ஆதரித்து எழுதியும், அவரிடமிருந்து எந்த சலுகையையும் எதிர்ப்பார்க்கா மல், வாழ்ந்தார் என்பதனால், குத்தூசி இது போல பக்கச் சார்போடு எழுதும் மற்றவர்களையும் கருதக் கூடாது. //
சின்னகுத்தூசியை பற்றி கருணாநிதி என்றாவது இப்படி நினைத்திருப்பார ்: "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி. என்ன ஜால்ரா சத்தம் தான் காதை பிளக்கிறது...!!!"
Quote
 
 
+5 #6 ம.பொன்ராஜ் 2011-05-30 12:18
// ‘’ஏய்யா கட்சியிலே முப்பது வருஷமா இருக்கியே, இந்தான்னு ஒரு ஆயிரம் ரூபா கொண்டாந்து எனக்கு குடுத்தியாய்யா நீ ?’ “//இந்த வரிகளை மட்டும் 'ராசாவுக்கு' தந்தி அடிக்கவும்....!!!!
Quote
 
 
+6 #5 rk guru 2011-05-30 11:32
திறடனுக்கு துணை போனவனும் திறடந்தான். அவன் உயிருடன் இருந்தாலும் திறடனே, இறந்தாலும் திறடனே....இதில் அவனின் தனிப்பட்ட திறமைகள் கணக்கில் எடுத்துகொள்ளபடா து. சின்னகுத்தூசி சேராத இடம் சேர்ந்து துருபிடித்த ஊசியாய்தான் போனது...

கலைஞசரை போற்றி புகழ்ந்த ஜல்டாவில் ஒரு எண்ணிக்கை குறைந்தது.....
Quote
 
 
+29 #4 pandiyan 2011-05-30 11:17
தி மு க ஆரம்பித்த அன்று கருணாநிதி அங்கு இல்லை . திமுக தொடங்கப்பட்ட அன்றைய கூட்டத்தில் கருணாநிதியின் பெயர் இருக்கவில்லை. செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராபின்ஸன் பார்க்கில் கூடிய ஒரு கூட்டத்தில் அண்ணாவின் தலைமையில் வெளியேறியவர்கள் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள ், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில். அக்கூட்டத்தில் பெரியாரின் அண்ணன் மகன், ஈ.வி.கே.எஸ் சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே நீலமேகம் அன்பழகன் சி.பி.சிற்றரசு போன்ற முன்னனணி தலைவர்கள் இருந்தனர். ஆனால் பின்நாளில் ஈ.வி.கே.எஸ் சம்பத் இருட்டடிப்பு செய்தனர் . தி மு க வரலாறில் . இளங்கோவன் கூட அறிவாலயத்தில் உள்ள கண்காட்சியில் ஏன் ஈ.வி.கே.எஸ் சம்பத் இல்லை என்று சூடாக விவாதம் பணியாத நினைவு . விவாதம் வருவோம் . ஜூ வி இவர் மறைவதற்கு முன்பு ஒரு வரம் முன் இவரை குறை கூறி ஒரு கேள்வி பதில் வெளியிட்டது . மறுவாரம் இவர் மறைந்தார் அதன் பின் பத்திரிகை பீஷ்மர் என்று வெட்கம் இல்லாமல் ஒரு கட்டுரை வெளியிட்டது . இதுதான் இன்றைய தமிழ் பத்திரிகை லட்சணம். இந்த கட்டுரையில் சொல்லி இருபது போல குத்தூசி ஒன்றும் தி க தி மு க சார்ந்த கட்டுரையாளர் இல்லை . அப்படி இருந்தால் செழியன் கண்ணதாசன் போன்றோரின் கருதும் இவர் பிரதிபலித்து இர்ருகவேண்டும். கருணாநிதி என்ற தனி மனித துதிபாடி இந்த மனிதர் . சொல்ல போனால் சென்ற ஆட்சியில் கருணாநிதி பாராட்டு மலையில் , தனி மனித துதி யில் நனைதற்கு இவர்தான் முன்னோடி . ஒரு தனி மனித துதிபடிக்கு எதற்கு இந்த அள்ளவு முக்கியதுவம் ? ஒருவர் ஒருவரை அளவு கடந்து பாராட்டுவது சொந்த விஷயம் அதை இந்த மனிதர் சரியாக செய்தார். நாம் நம் வேலயை பர்கல்லாம். கூரை மீது எறிந்தால் ஆயிரம் காக்கை .. கருணாநிதிக்கு இன்னும் ஒரு காக்கை இநேரம் கிடைக்காமல் இருக்குமா என்ன ?
Quote
 
 
-30 #3 jaya 2011-05-30 11:17
ஒரு வாதத்துக்காக தங்கள் கூறுவது உண்மை என்று எடுதுகொண்டலும் இறந்துபோனவரை விமர்சனம் செய்வது தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.
Quote
 
 
+10 #2 KK 2011-05-30 11:09
He was given good impotance because even though a brahmin he involved in dravidian thoughts.
He did not expect anything from DMK but DMK could have given him Rajya sabha seate etc to make him more aware of broader issues.
He remained confined as a frog in the well.
Even though a good writier he was not considered seriously by mainstream media because of bias and blind faith in Karunanidhi
Quote
 
 
-52 #1 DUBUKKU 2011-05-30 11:08
என்ன சவுக்கு பாவி பசங்க இப்டி பனிடன்களே .எப்டி இருந்த சாவுக்க இப்டி டப்பா நியூஸ் பிரஸ் ரிலீஸ் லம் அடிச்சி போடா விடுட்ன்களே .ஓகே ஓகே சரி நாம டீல் கு வருவம் அம்மா அட்சி பத்தி ஒரு வார சோதனைகள் பத்தி வைகோ மாறி தில் ல நியூஸ் போடமுடிம ???????

இல்ல இனிமேல் ஒன்லி பிரஸ் ரிலீஸ் மட்டும்தானா சாவுக்குள ???
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 128 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2763
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week71319
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month284138
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12806257