|
பிரகாஷ் அவர்கள், சவுக்கிடம், அவதூறாகப் பேசியதைத் தொடர்ந்து, பிரகாஷ் அவர்களை கடிந்து கொண்டது போலவே, சவுக்கைப் பற்றியும் பல்வேறு சந்தேகங்களை வாசகர்கள் எழுப்பியிருக்கிறார்கள். அந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது சவுக்கின் கடமை. சவுக்குக்கு அதன் வாசகர்களின் நம்பிக்கையைத் தவிர முக்கிய விஷயம் வேறு எதுவுமே இல்லை. சவுக்கு அதன் வாசகர்களின் நம்பிக்கையை என்று இழக்கிறதோ, அன்று சவுக்கை நிறுத்தி விடலாம். சவுக்கு நடத்துவதால், பத்து பைசா வருமானம் கிடையாது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். மாறாக, ஆண்டுதோறும், சர்வர் மற்றும், மாதந்தோறும், இணைய இணைப்புக்கான செலவு தான் உள்ளது. ஆனால், நன்கொடை கூட வாங்காமல், தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். விளம்பரங்களுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களைப் பற்றி விளக்கம் அளிப்பதற்கு, நண்பர் பத்மன் அவர்கள் பின்னூட்டமாக வெளியிட்டிருந்த கேள்விகளின் அடிப்படையில் தொடங்கலாம்.
1 - இந்த உரையாடல் இருவரிடையே நடந்த உரையாடல். பட்டி மன்ற பேச்சில்லை. உரையாடலின் அறிமுக பதிவு ஏன் இடம்பெறவில்லை?
முதலில் காலை 10 மணிக்கு, பிரகாஷ் அவர்கள் அழைத்ததும், வணக்கம் என்று பதில் அளிக்கப் பட்டது. எடுத்த எடுப்பில் இந்த உரையாடலில் உள்ளது போலவே பேசினார். காலையில், நீதிமன்றப் பணிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்த போது, இந்த உரையாடலை தொடர விரும்பவில்லை. அதனால், உடனடியாக இணைப்பு துண்டிக்கப் பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக பிரகாஷ் அழைத்த வண்ணம் இருந்தார். பிறகு தான், இந்த உரையாடலை பதிவு செய்யலாம் என்று உத்தேசித்து, அந்த அழைப்பு ஏற்கப் பட்டது. அதன் பதிவே இது.
2. சவுக்கின் நண்பர்கள் அன்பு மற்றும் பிறரைப்பற்றி எதற்கு சவுக்கிடமே குறை கூற வேண்டும்? இது தனிப்பட்ட உரையாடல். பொது விவாதமில்லை.
சவுக்குக்கு தகவல் தருபவர்கள் என்று, குறிப்பாக நக்கீரன் அலுவலகத்தில் நடைபெறும் விஷயங்களை சவுக்கிடம் சொல்வபர்கள் என்று, பிரகாஷ் அவர்களும், காமராஜ் அவர்களும், இந்தப் பத்திரிக்கையாளர்களை சந்தேகிப்பதாலேயே, அவர்களைப் பற்றி சவுக்கிடம் குறை கூறுகிறார்கள் என்று தோன்றுகிறது. குறிப்பாக, சவுக்கு அவர்களிடம் பணம் பெற்றிருக்கிறார் என்று கூறுவதிலிருந்து இந்தக் கருத்து உறுதி செய்யப் படுகிறது. மேலும், ஊடகத் துறையில் ஒரு அயோக்கியத்தனமான நியதி கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அது என்னவென்றால், ஊரில் எவன் தப்பு செய்தாலும் எழுதுவார்கள். ஆனால், ஊடகத்துறையைச் சேர்ந்த எவனும் தவறு செய்தால் எழுத மாட்டார்கள். இந்த மரபை மீறி, நக்கீரனைப் பற்றி சவுக்கு தொடர்ந்து எழுதி வருவதால், நக்கீரன் குழுவைச் சேர்ந்த அனைவரும், சவுக்கின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று அறிகிறோம். மேலும், காமராஜ் அவர்களை திருப்திப் படுத்துவதற்காக, காமராஜ் முன்னிலையில், ஸ்பீக்கர் போன் போட்டு, பிரகாஷ் பேசியதாகவும் அறிகிறோம்.
3 - அம்சா பத்திரிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்து இனப்படு கொலைகளை மறைத்தது உண்மை. பணம் பெற்றவர்கள் யார் யார்? சவுக்கின் நண்பர்கள் அம்சாவிடம் எதையும் பெறவில்லையென எப்படி அறுதியிட்டு கூறுகிறீர்கள்? அதுவும் ஒரு வரியில்? அப்படியெனில் தனிப்பட்ட உரையாடலில் எதற்கு அவர்களைப்பற்றி இது போன்ற குற்றச்சாட்டு? இவர்கள் பெறவில்லை என்றால் பிறகு வேறு யார்?. உண்மையிலேயே உங்களுக்குத் யார் எனத் தெரியாதா ?
திரு.விகேஷ் அவர்களோடு, சவுக்குக்கு ஏற்பட்ட தொடர்பு, 2007ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது விகேஷ் ஜுனியர் விகடனில் இணை ஆசிரியராக இருந்தார். அப்போதெல்லாம் சவுக்கு அரசு ஊழியராக இருந்ததால், வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களோடு உரையாட இயலாது. பொதுத் தொலைபேசியில் இருந்து புனைப் பெயரோடு தான் உரையாட முடியும். அப்படி முன்னே பின்னே தெரியாத ஒரு நபராக, புனைப் பெயரில், விகேஷ் அவர்களை சவுக்கு தொடர்பு கொண்டு, அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து, செய்தி வெளியிட வேண்டும் என்று வேண்டியது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த உள்ளோம் என்றும் தகவல் கூறப்பட்டது. அந்த தொலைபேசி உரையாடல் நடந்த இடம் கூட இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ வளாக, பீரங்கியின் அருகே நடந்தது. அதற்கு அவர், “உங்கள மாதிரி ஆளுங்களோட இதான் சார் பிரச்சினை. தகவல் சொல்ல மாட்டீங்க.. அப்புறம், பத்திரிக்கை காரங்க நியூஸ் போட மாட்றாங்கன்னு எங்கள குறை சொல்வீங்க” என்று கடிந்து கொண்டார். அதன் பிறகு, ஜுனியர் விகடனில், ராதாகிருஷ்ணன் மற்றும், நரேந்திர பால் சிங் என்ற காவல்துறை அதிகாரிகளைப் பற்றி வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படித்தான் விகேஷ் அவர்களோடு பழக்கம். இதற்குப் பிறகு, தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக சண்முகம் கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்று, விகேஷ் அவர்களுக்கும், சவுக்குக்கும் சம்மன் வந்தது. அந்த கமிஷனில் தான் விகேஷ் அவர்களை சவுக்கு முதன் முதலாகப் பார்த்தது. “என்ன சார்… பெரிய ஆளா இருப்பீங்கன்னு பாத்தேன்… சின்னப் பையனா இருக்கீங்க.. சரி.. உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும் ? சொல்லுங்க.. உங்கள மாதிரி ஆளெல்லாம் சமுதாயத்துக்கு தேவை சார். நல்லது பண்ணிருக்கீங்க…. என்ன உதவி வேணும் சொல்லுங்க” என்றார். இதன் பிறகு, விகேஷ் அவர்களின் மீதான மதிப்பு மேலும் பன்மடங்கு உயர்ந்தது.
இதன் பிறகு, சவுக்கு அவரை சந்தித்தது செப்டம்பர் 2009 இறுதியில். சிறையில் இருந்து வெளி வந்ததும் முதலில் சந்தித்த நபர் விகேஷ். எந்தப் பத்திரிக்கையிலும், ‘டெட் லைன்’ நேரத்தில், சிறுநீர் கழிக்கக் கூட நேரம் இருக்காது. அப்படிப் பட்ட ஒரு நேரத்தில், சவுக்கு விகேஷ் அலுவலகம் சென்று, சந்தித்த போது, அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து, தேநீர் வாங்கிக் கொடுத்து, கவலைப் படாதீர்கள். நல்லதே நடக்கும் என்று சொன்னார்.
இதற்குப் பிறகு, விகேஷ் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பொறுப்பில் இருந்ததால், அது தொடர்பான அரசியல் காரணமாக, போட்டி சங்கத்தினர், இவரைப் பற்றி, துண்டறிக்கைகள் வெளியிடுவதும், அவதூறு பேசுவதுமாக இருந்தனர். சவுக்குக்கு விகேஷோடு இருந்த பழக்கத்தின் அடிப்படையில், இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
இதன் பிறகு ஒரு நாள் ஒரு பத்திரிக்கையாளர் சவுக்கை தொடர்பு கொண்டு, “என்ன சார்.. விகேஷ் அப்பிடி இப்பிடின்னு சொல்றீங்க… இன்னைக்கு இலங்கை துணைத் தூதரகம் போயிருந்தேன். அங்க கெஸ்ட் லிஸ்ட்ல விகேஷ் பேரு இருக்கே..” என்று சொன்னதும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. உடனடியாக விகேஷைத் தொடர்பு கொண்டு, “சார்… நீங்க அங்க போனீங்களா” என்று கேட்டதற்கு, இயல்பாக, “ஆமாம் சார்.. நேத்து கூப்புட்டு இருந்தாங்க.. மறந்துட்டேன்” என்று கூறியவரிடம், நீங்கள் அங்கே போவது தவறில்லையா என்று கேட்டதற்கு, “நான் பத்திரிகைக் காரன்… இரண்டு தரப்பையும் கேட்டு எழுதுவது எனது கடமை. அம்சாவை பார்க்கக் கூடாது என்று நீங்கள் சொல்ல உரிமை இல்லை. அம்சாவிடம் நான் அன்பளிப்பு பெற்றால், கேள்வி கேளுங்கள். அவரைப் பார்க்கவே கூடாது என்று சொல்வது, ஊடக தர்மத்தை மீறிய செயல்” என்று கூறினார். இது நியாயம் தானே ?
இதன் பிறகு, ஆகஸ்ட் 2009 22ம் தேதி அன்று, காலை 5.30 மணிக்கு ஒரு போன். “ஒழிந்தான் விகேஷ்…. பத்திரிக்கைத் துறையைப் பிடித்த பீடை ஒழிந்தது” என்று மகிழ்ச்சியோடு, சொன்னார். அதாவது, விகேஷ் வேலையை விட்டு நீக்கப் பட்டு விட்டாராம்.
விகேஷின் தொலைபேசியை தொடர்பு கொண்ட போது, Number not in use என்று வந்தது.
அன்று காலை 7 மணிக்கு சவுக்கு விகேஷ் வீட்டில் இருந்தது. விகேஷ் கண்ணில் கண்ணீர். ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவரை வேலையை விட்டு எடுப்பது சகஜம். ஆனால் எப்படி நீக்கம் செய்கிறார்கள் என்று ஒரு முறை இருக்கிறது. 20 அன்று இரவு வரை விகேஷ் விகடன் அலுவலகத்தில் பணியில் இருக்கிறார். 21 அன்று அலுவலகம் சென்றவுடன், அலுவலகத்தின் செக்யூரிட்டி, விகேஷிடம், “சார் உங்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று கூறுகிறார். விகேஷ் தனது தொலைபேசியை எடுத்து எடிட்டரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, நம்பர் deactivate செய்யப் படுகிறது. விகடன் மேலாண்மை இயக்குநரிடம் சவுக்கு கேட்க விரும்புவது, இன்று விகடன் குழுமத்தில் பணியாற்றும் அத்தனை பேரும் உத்தமர்களா ? விருப்பு வெறுப்பில்லாமல் செய்தி வெளியிடுபவர்களா ? இன்று ஒடுங்கிப் போய் கிடக்கும் பொட்டு சுரேஷிடிம் நீங்கள் மண்டியிடவில்லை ? நேற்று வரை ஜாபர் சேட்டுக்கு துதி பாடி, அவரிடம் பணம் வாங்கிய, இரா.சரவணனை விட, விகேஷ் மோசமானவரா ? அப்படியே இருந்தாலும், 19 ஆண்டுகாலம், விகடன் நிறுவனத்துக்காக ஓடாக உழைத்த ஒரு மனிதரை இப்படியா வெளியேற்றுவது ? விகடன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், இப்படி வெளியேற்றியதற்காக விகேஷிடம் மன்னிப்பு கேட்க கடமைப் பட்டுள்ளார். உங்கள் தந்தை நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் இப்படிச் செய்திருப்பாரா என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதற்குப் பிறகு, விகேஷ் தொலைபேசி ஒட்டுக் கேட்பு பற்றி செய்தி வெளியிட்டதால் கடும் பாதிப்படைந்த ஜாபர் சேட், விகேஷைப் பற்றி, கடும் அவதூறுகளைப் பரப்பினார். அவர் அம்சாவிடம் பெரும் தொகையைப் பெற்றுள்ளதாகவும், பல வீடுகள் வைத்திருப்பதாகவும், பல கோடிகளுக்கு அதிபதி என்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் செய்தி கொடிகட்டிப் பறந்தது. பல கோடிக்கு அதிபதியாக இருப்பவர், விகடனை விட்டு நீக்கப் பட்ட சில நாட்களில், பெட்ரோல் போட பணமில்லாமல் இருந்தார் என்பது, இப்படிப் பேசியவர்களுக்கு தெரியாது.
விகேஷைப் பற்றி, வினவு தோழர்கள் ஆதாரமில்லாமல் குற்றச் சாட்டுகளை சுமத்தியிருந்தார்கள். இன்று வரை, வினவு தோழர்கள் அந்தக் குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. விகேஷ் அம்சாவிடம் அல்ல, வேறு யாரிடமாவது, லஞ்சம் வாங்கினார் என்று ஆதாரத்தை கொடுத்தால், விகேஷுடனான நட்பை முறித்துக் கொள்ள சவுக்கு தயங்காது.
அன்பு.
அன்பு என்று அழைக்கப் படும் அன்பழகன். நக்கீரன் இதழின் தலைமை நிருபராக இருந்தார். 1993ம் ஆண்டு முதல் நக்கீரனில் பணியாற்றி வந்தார். நக்கீரன் இதழில் பல முக்கிய செய்திகளை வெளியிட்டதில் இவருக்கு பங்கு உண்டு.
2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், கோபால், மற்றும் நக்கீரன் பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகறை வாபஸ் பெற வைக்க காமராஜ், அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.
2007ம் ஆண்டு, இப்போது மின் வாரிய சேர்மேனாக அதிமுக அரசால் நியமிக்கப் பட்டிருக்கும், ஹன்ஸ் ராஜ் வர்மா என்ற ஐஏஎஸ் அதிகாரியும், அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதி, அவரது மகன், கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் சேர்ந்து நிலக்கரி இறக்குமதியில் பெரும் ஊழல் புரிந்துள்ளதாக நக்கீரனி செய்தி வெளி வந்தது. இந்தச் செய்தியை எழுதியவர் அன்பு.
இதையடுத்து, அன்பை அழைத்த காமராஜ், திரிபாதி தலைமைச் செயலாளர் உங்கள் மீது கோபமாக இருக்கிறார். அதனால் தலைமைச் செயலகம் போகாதீர்கள் என்று கூறுகிறார். ஆனால், அன்பு வழக்கம் போல தலைமைச் செயலகம் சென்ற வண்ணம் இருக்கிறார். அங்கீகரிக்கப் பட்ட பத்திரிக்கையாளர் அடையாள அட்டையை புதுப்பிக்கும் போது, அன்புவுக்கு பதிலாக, நக்கீரன் இதழில் இருந்த இளையசெல்வனின் பெயரை பரிந்துரைக்கிறார் காமராஜ்.
இதன் பிறகு நடந்த அரசுச் செயலாளர்களுடனான ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், அரசை தர்மசங்கடப்படுத்தும் வகையில் பல்வேறு கேள்விகளை அன்பு கேட்கிறார். இது திரிபாதியை மேலும் ஆத்திரப்படுத்துகிறது. இதன் பிறகு நக்கீரன் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக உள்துறை செயலர் மாலதி, திரிபாதி, சட்டத் துறை செயலர், தீனதயாளன், காமராஜ், வழக்கறிஞர்கள் பெருமாள் மற்றும் விடுதலை ஆகியோரோடு நடந்த கூட்டத்தில், திரிபாதி, நாங்கள் உங்களுக்காக உதவுகிறோம், ஆனால் அன்பு இப்படிக் கேள்வி கேட்கிறாரே என்று தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
அன்பு பணியில் தொடர்ந்தால், வழக்குகளை வாபஸ் பெறுவதில் சிக்கல் வரும் என்ற ஒரே காரணத்துக்காகவே, அன்பு நெருக்கடி கொடுக்கப் பட்டு நக்கீரனில் இருந்து வெளியேற்றப் படுகிறார்.
அசதுல்லா.
இவர் தற்போது, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகியாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன், போலீஸ் செய்தி என்ற பத்திரிக்கையை நடத்தி பல காவல்துறை அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அதனால் காவல்துறையால் பல நெருக்கடிகளுக்கு ஆளானவர். இவர் தந்தை ஒரு ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் யாரையும் மிரட்டி பணம் பெற்றதாக சவுக்குக்கு இது வரை தகவல்கள் கிடையாது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் தானே….
சவுக்குக்கு இவர்களைப் பற்றி இவ்வளவுதான் தெரியும். அதற்காக இவர்கள் மூவரும் எந்தத் தவறையும் செய்யாதவர்கள், இவர்களைப் பற்றி சவுக்குக்கு தெரியாத விஷயங்களே கிடையாது என்றெல்லாம் சொல்ல இயலாது. அப்படி யாருக்குமே சான்றளிக்க முடியாது என்பது உங்களுக்கும் தெரியும்.
4 - தினமலர் பற்றி ஏன் எதுவும் சொல்ல தயங்குகிறீர்கள்?
தினமலர் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அது ஒரு தமிழின விரோத நாளேடு. ஆனால் தவிர்க்க முடியாத சக்தி. மற்றொரு ஊடக நிறுவனத்தை அடித்து நொறுக்குவோம் என்று ஒரு ரவுடி வெளியிட்ட விளம்பரத்தை முழுப் பக்கத்தில் வெளியிடும் அளவுக்கு ஒரு நேர்மையான நாளேடு.
5 - சவுக்கு தன்னை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவன் என கூறும்போது ஏன் விநாயக மூர்த்தி கருணாவின் பேட்டியை பக்கம் பக்கமாக வெளியிட்ட தினமலர் நாளிதழ் பற்றியோ, சோ மற்றும் சுப்பிரமணிய சாமி பற்றியோ எதையும் சொல்லவில்லை ?
தமிழின துரோகியாக இருந்தாலும் அவரின் பேட்டியை வெளியிடுவது தவறு என்று எப்படி சொல்ல முடியும் ? சோ மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியோர், தமிழின எதிர்ப்பாளர்கள், பார்ப்பன சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும் ? ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அந்தக் கருத்து வைத்துக் கொள்ள உரிமை இல்லையா என்ன ?
6 - சுப்பிரமணிய சாமியோடு சவுக்குக்கு எந்த தொடர்பும் கிடையாதா? சில குறிப்புகளை சு.சாமியிடம் நீங்களே பகிர்ந்து கொண்டதாக சொல்லியிருக்கிறீர்களே?.
ஊழலை வெளிக் கொணர்வதற்காக, சுப்ரமணிய சுவாமியோடு மட்டுமல்ல…. யாரைத் தொடர்பு கொள்ளவும் சவுக்கு தயங்காது.
7 - இலங்கை அரசுக்கு எதிராக பலமாக குரல் கொடுத்த வார இதழ் நக்கீரன். அதற்காக இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. பிரபாகரன் பற்றி அவர்கள் வெளியிட்ட செய்திகளில் எழுப்பபட்ட கேள்விகள் நியாயமானதே என்பதை சவுக்கு மறுக்கிறதா? நக்கீரன் திமுக அதரவு அதனால் அவர்கள் பெற்ற சலுகைகள் தவிர்த்து அவர்களின் இன உணர்ச்சியை சந்தேகிக்கிறதா? ஆம் என்றால் எதற்கு இலங்கை அரசு இவர்களை கடுமையாக எதிர்க்கிறது? எதற்கு இவர்களைப் பற்றி சவுக்கு கடுமையாக எழுதுகிறது?
இலங்கை அரசுக்கு எதிராக பலமாக குரல் கொடுத்தவர்கள் தான், கேணல் ராமின் பேட்டி என்று ஒன்றை போட்டார்களா ? பிரபாகரனைப் பற்றி செய்தி போட்டால் பத்திரிக்கை விற்கும் என்ற வியாபார நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் நக்கீரனுக்கு கிடையாது. மற்ற பத்திரிக்கைகளை சவுக்கு விமர்சிப்பதேயில்லை, நக்கீரனை மட்டுமே விமர்சிக்கிறது என்பது நியாயமற்ற குற்றச் சாட்டு.
8 - சில சமையங்களில் சவுக்கு செய்திகள் போடும்போது வழுக்கியிருக்கிறது. அதுபோலதான் இதுவுமா?
எந்த சமயங்களின் வழுக்கியிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தவும்.
9 - சவுக்கின் பிற பணிகள் என்ன? தமிழ் லீடர் மற்றும் சவுக்கு பதிப்பின் எதிர்கால நோக்க மென்ன? சவுக்குக்கு எதிர்காலத்தில் வார இதழ்கள் தொடங்கும் நோக்கமிருக்கிறதா? தராசு போல நக்கீரனை ஒழித்துவிட்டால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்கிற திட்டமா?
வார இதழ் தொடங்கும் நோக்கம் சவுக்குக்கு இல்லை. சவுக்கின் பிற பணிகள் என்ன, தமிழ் லீடரின் நோக்கம் என்ன என்பதையெல்லாம் பொது மேடையில் கூற இயலாது.
10 - சவுக்கு சந்தித்த இடர்களுக்கு எதிராகத்தான் இந்த பத்திரிகை துறையா? தனிப்பட்ட விமர்சனங்கள் தவிர்த்து வேறு என்ன நோக்கம் உங்களுக்கு ?
ஊடகங்கள் தங்கள் பணியை செய்யத் தவறியதால் தான் சவுக்கு உருவானது. பொது வாழ்வில் உள்ளவர்கள் தவறு செய்தால், அது தனிப்பட்ட விமர்சனங்களாக இருந்தாலும், தவிர்க்க இயலாது.
11 - வைகோ பற்றி எழுதப்போகிறேன் என சொல்லி விட்டு எதையும் எழுதவில்லை. ஏன்? யாரிடம் பயம்? அவரைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக எதிராகத்தான் எழுதியிருப்பீர் என்கிற சந்தேகம் உண்மையா?
வைகோவைப் பற்றி தமிழ் லீடர் தளத்தில் விரிவான கட்டுரை வந்திருக்கிறது. அதற்குப் பிறகு, மீண்டும் எதற்காக என்ற காரணத்தாலேயே எழுதவில்லை.
12 - பகையாளியை உறவாடி கெடுத்தல் போல விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என சொல்லிக்கொண்டு விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா ?
இதற்கு, சவுக்கு வாசகர்கள் பதில் சொல்வார்கள். செங்கல்பட்டு, மற்றும் பூந்தமல்லி முகாமில் உள்ள அகதிகளைக் கேட்டுப் பாருங்கள். சவுக்கும், வழக்கறிஞர் புகழேந்தியும் யார் என்று சொல்வார்கள். நீங்கள் பின்னூட்டம் இட்டு, தெரிவிக்கும் புலி ஆதரவு, ஈழ ஆதரவை விட, பல மடங்கு உருப்படியான காரியங்களை செய்தே வருகிறோம்.
13 - கடைசியாக நீங்கள் யார் ? எதற்கு முகமூடி ?
முகமூடி எதுவும் அணியவில்லை. வரும் சனிக்கிழமை அன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்தால் சந்திக்கலாமே…
அன்பு வாசகர்களே…. போதுமான விளக்கம் அளித்தாகி விட்டது என்றே தோன்றுகிறது. இந்த பிரச்சினையை இதோடு விட்டு விட்டு, அடுத்த விவகாரத்துக்கு போகலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்று நம்புகிறோம். |
Comments
உங்கள் நம்பிக்கையோ , சவுக்கின் நம்பிக்கையோ ஒருவரின் நம்பகத் தன்மையை தீர்மானிக்காது. விகேஷ் இலங்கை தூதரகத்திற்கு சென்றது தவறு. குறிப்பாக அந்த நேரத்தில் இலங்கை தூதரகம் எப்படி ஊடகங்களை வாங்கியது என்பது தெரிந்த பின்பும் போனது மிகப் பெரிய தவறு. வன்னியில் இருந்து தப்பி வந்த பல்லாயிரக்கணக்க ான மக்களில் ஒருவரை இந்த விகேஷ் தனியாக சென்று பேட்டி எடுத்து வெளியிட்டு இருந்தால் நான் பாராட்டி இருப்பேன். அவர் உண்மையிலேயே நல்ல நிருபராக இருக்கலாம். ஆனால் அவர் செய்தது தவறு.
tamilinavirothi galal veliitappatulat hu itarkkusavukku eppati sammathitthadu
தூரத்தி்லிருந்த ு பார்க்கும் உங்களுக்கு வைகோ நல்லவராக தெரியலாம். பேசி பேசி எத்தனை பேர் வாழ்க்கையை அழித்திருக்கிறா ர் தெரியுமா? தயவு செய்து வைகோவை நம்பாதீர்கள். தேர்தலில் போட்டியிடாமலிரு க்க சன் டி.வி.யிடம் நூறு கோடி ரூபாய் பணம் வாங்கியவர். ஆறு மாதங்களுக்கு முன்பே கலிங்கப்பட்டி் வீட்டிலலிருந்த ஜெயலலிதா படத்தை கழற்றியவர். தேர்தல் பிரச்சாரத்துக்க ான வாகனத்தை கடைசி வரையில் தயார் செய்யாதவர். அவரின் பசப்பு வார்த்தைகளை நம்பாதீர்கள். ஏமாந்து போகாதீர்கள்.
இயக்கமே ஒரு குடும்பமாய் வளர்ந்தது -
இன்று ஒரு குடும்ப்பத்தால் அழிந்தது...
எனக்கு புரியவில்லை. தலைவரை அவன் என்று எங்கு சொல்லி இருக்கிறார்?. "பிரபாகரனை" என்ற சொல்லை நீங்கள் சொல்லுவதாக இருந்தால் அதில் எனக்கு தவறு இருப்பதாக தெரியவில்லை. ஈழ மக்கள் தலைவரை மரியாதையாக தலைவர் என சொல்லுகிறார்கள் . அவர்கள் பிரபாகரன் என்ற வார்த்தையை பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. தமிழக மக்கள் "பிரபாகரன்" என சொந்த அண்ணனை கூப்பிடுவது போல சொல்வது வழக்கம். அதற்காக தமிழக மக்களுக்கு தலைவரிடம் மரியாதை ஈழ மக்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.
"ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது" வைகோ அவர்களுக்கு சரியாய் பொருந்தும்.
பேசிவிட்டால் போதுமா ? உங்களுக்கு காவடி தூக்கும் இளைஞர்களுக்கு தலைவனாய் ஏமாற்றம் ஒன்றை மட்டுமே பரிசாக தருவிர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்தை போல.
சவுக்கு சங்கரின் வைகோ மீதான கருத்து ரொம்ப ரொம்ப சரி தான்.
//அரசியலில் எப்போதுமே, தவறான முடிவு எடுப்பவர் வைகோ. நல்ல பேச்சாளர்...நல்ல பண்பாளர்...நல்ல மனிதர்..
ஆனால், நாட்டில் நல்ல தலைவராக அவரால் வரமுடியவில்லையே ! //
மாற்றுகருத்தை விவாதிக்காமல், நேரடியாக சங்கரை ஜெயாவின் ஜால்ரா என்பவர்களும், கருணாநிதியை கண்மூடித்தனமா ஆதரிப்பவர்களும் ஒரே குட்டை தான்.
// உங்களின் இந்தப் பதிலில் நீங்கள் என்ன கேள்வி கேட்பது என்ற தொனி இருக்கிறது. உங்களிடம் நாங்கள் கேள்வி கேட்பது நீங்கள் செய்யும் நல்ல காரியங்களை அறிந்து உரிமையுடன் கேட்பது. அது இது போன்ற கடுமையான கேள்வியாக இருந்தாலும் நீங்கள் பொறுமையாக பதில் சொல்லுதல் நல்லது. இந்தத் தொனியை தவிர்க்கலாம். அதை சொல்ல என்னை விட நீ என்ன செய்து விட்டாய் என நீங்கள் கேட்கலாம். நான் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அது நல்ல பதிலாக இருக்காது.
மிக மிக முக்கியம் சவுக்கு அண்ணாச்சி, விரைவில் இதைபற்றி ஒரு வரைவு எதிர்பார்க்கிறோ ம் ...
as soon as she took the power, she started spoiling people's money again. What is the need to start Mono Rail when Metro rail is fully in progress of implementation. HOw many crores of rupees the country is going to lose because of this.. why dont you publish that. Not using new secretary made 1200 crore loss to TN, now cancelling samacheer kalvi.. and cancelling Kalaignar kaappeettu thittam.. Just like last time she cancelled uzhavar sandhai, periyar samathuvapuram, etc.. If DMK starts some good policies, Jayalalithat just cancels and it make BIG loss to the country. Wondering why she didnt tell like gajaana gaali.. if DMK spoiled all the government money, how can she get money for giving away free rice, and making all her new policies.. why dont you write anything about this savukku ??
நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள், சென்னையிலேயே செய்தி சேகரித்து உண்மை செய்திகளை
அய்யோ சவுக்கை நான் விமர்சிக்கவில்ல ை.இணையதளம் நடத்த நீங்கள் என்ன அம்பானியா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தா ர்.அதற்கான பதில் அவ்வளவே.தவறாக புரிந்து கொண்டீர்கள்.[/ஃஉஒடெ]
மன்னிக்கவும் நண்பரே நான் தவறாக சொல்லவில்லை, சவுக்கின் சிரமங்களை சொன்னேன். தைரியத்தில் சவுக்கு அம்பானிகளை விட பணக்காரர். அம்பானிகள் கூட மோத தயங்குபவர்களிடம ் மோதும் தைரியம் சவுக்குக்கு இருக்கிறது, அதன் பின்னால் அவருக்கு பல இழப்புகளும் இருக்கிறது. நான் இதைத்தான் குறிப்பிட விரும்பினேன் நண்பரே, உங்கள் மனதை என் சொற்கள் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் நண்பரே..
எண்ணுவம் என்பது இழுக்கு
வளர்க உங்கள் பணி.
திரு. வை.கோ அவர்களின் கட்டுரையை மறு ப்ரிசீலனை செய்ய வெண்டுகிறேன்.
இன்னும் ஜாக்கிரதையாக இருக்கவும்.
நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள், சென்னையிலேயே செய்தி சேகரித்து உண்மை செய்திகளை
அய்யோ சவுக்கை நான் விமர்சிக்கவில்ல ை.இணையதளம் நடத்த நீங்கள் என்ன அம்பானியா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தா ர்.அதற்கான பதில் அவ்வளவே.தவறாக புரிந்து கொண்டீர்கள்.
உமது விடுதலைப்புலி ஆதரவில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை... தமிழனின் நிலைக்கு முழு முதல் காரனம் இவர்கல்தான்...
இன்று கூட அவர் ஐரோப்பிய யூனியனில் ஆற்றிய உரை நெஞ்சை நெகிழ வைக்கும்படி இருந்தது. ஈழப் பிரச்சினையை பதினெட்டு நிமிடத்தில் தெளிவாக விளக்கயுள்ளார். புலிகளுக்கு இந்த காலகட்டத்தில் என்ன பெரிய ஆதாயம் இருந்துவிடபோகிற து அவருக்கு? வைகோ உரை பற்றிய மேலும் விபரங்களுக்கு தட்ஸ்தமிழ் தளத்தை பார்க்கவும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் இணையதளம் சிரமமான ஒன்றாக இருக்கலாம்.
இன்று இந்தியாவில் பிழைக்க துப்பில்லாமல் வெளி நாட்டில் பிழைப்பவன் எல்லாம் இதைப்பற்றி பேச தேவையில்லை...
"நல்லது செய்தல் ஆற்றீர்.. ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்"
இந்த ஆயிரம் வருட பழமொழியைப் படித்ததால் சில விஷயங்கள் தெரியவரும் :
௧) அப்போவே நல்லதை நல்லதுக்காக மற்றும் செய்பவர்கள் இருந்திருக்கிறா ர்கள்.
௨) அப்போவே நல்லதை செய்யலைன்னாலும் பரவால்ல.. கெட்டது செய்யாதீங்கன்னு சொல்ற அளவுக்கு கெட்டதை இருந்திருக்காங் க..
கௌதமர் பட்டத்து இளவரசர்.. அவரை புத்து (budhoo )(முட்டாள்) என்று எல்லாரும் கிண்டல் செய்யும் வகையில் "உலகத்துக்கு உண்மை சொல்வேன்" என்று அலைந்தார். ஆதி சங்கரர் எல்லாரும், எல்லாமும் பரம்பொருளே என்று சொல்லி இந்தியா முழுக்க எழு முறை வெறும் காலிலேயே நடந்தார்.. பாரதியாருக்கு பைசா லாபம் இல்லாம மாகாணம், மாகாணமா அலைஞ்சாரு.. இவங்க மூணு பெரும் சரியா சாப்பிடாம, ஓய்வெடுக்காமதான ் இளவயசிலேயே செத்தாங்க.. இவங்களுக்க் அளவு கடந்த ஞானம் மட்டுமில்லாம உள்ள ஒரு நெருப்பு எரிஞ்சது. அதையும் இவங்கள்ல ஒருத்தர் சொல்லி இருக்கார்:
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாக ி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?
எல்லாரையும் நம்மள மாதிரியே நினைக்கக் கூடாது.. நம்மை விட நல்லவர்களும், நம்மை விட கேட்டவர்களும் இருக்கிறார்கள், பணத்துக்கு அலைபவர்களும் இருக்காங்க...
http://viruvirupu.com/2011/05/31/2995/
இது பற்றி ஏதாவது தெரியுமா?
நன்றி.
அவருக்கும் நீதி மன்ற வேலை ( அல்பம் தாசில்தார் ஆபீச்லையே அஞ்சு மணி நேரம் நிக்க வைப்பாங்க நீதிமன்றத்துல அஞ்சு நாள் கூட நிக்க வைப்பாங்க),தாயா ரை கவனிக்க வேண்டியது, சொந்த வேலை, உடல் நல சங்கடங்கள் இருக்கலாம்..
அவரை நிர்ப்பந்தப் படுத்தும் வகையில் 'விளக்கமளிக்கவேண ்டும்' என்று கோருதல் சரியல்ல.. வாசகர்கள் கொஞ்சம் அனுசரித்து நடந்துகொள்ளவும் .
'வினவு'ம் ஒரு மட்டமான பத்திரிக்கை.
வினவு பத்திரிகைக்கும் சவுக்குக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
சவுக்கின் அணி இது: இந்தியா மோசமான நிலையில் மோசமானர்வர்களால ் ஆட்சி செய்யப்படுகிறது . விட மாட்டேன் இந்த கேடுகெட்ட *பாவிகளை* ஒழிப்போம்.. அழிப்போம்..
வினவின் அணி இது: இந்தியா மோசமான நிலையில் மோசமானர்வர்களால ் ஆட்சி செய்யப்படுகிறது .விட மாட்டேன்.. இந்த கேடுகெட்ட *இந்தியாவை* ஒழிப்போம்.. அழிப்போம்..
சவுக்கின் பதிவுகளிருந்து நான் கண்ட ஒரே விடயம் ""அநியாயத்துக்கும ், அயோக்கியத்தனத்த ுக்கும் எதிர்ப்பு"". இதில் சாதி , கட்சி, மத, கொள்கை வேறுபாடெல்லாம் சவுக்கு பார்க்கவில்லை. தகவல்களில் தவறிருந்தாலும், அதை திருத்திக்கொள்ள வும் சவுக்கு தயங்கியதில்லை.
இலங்கை இராணுவத்தையும், அவர்களுக்கு உதவும் துரோகிகளையும் எனக்கு பிடிக்காது. அதைவிட புலிகளை எனக்கு சுத்தமாக பிடிக்காது. அதற்கு எனக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனாலும் சவுக்கு அவர்களே, உங்களுக்கு எனது ஆதரவு 100 % உண்டு. எனது மின்னஞ்சல் உங்களிடம் இருக்கும் என்று நினைக்கின்றேன். தேவை ஏதும் வேண்டின் கண்டிப்பாக தொடர்பு கொள்ளவும்.
காளி.கிருஷ்ணா - லண்டன்.
nice. When you ready face the challenges, you become a complete man
செலவு ஒன்றும் அதிகம் ஆகாது நண்பரே, இன்றைய நிலவரத்தில் செலவு சொற்பம் தான், அனால் தில் இருக்கணும், சவுக்கு போல செய்திகளை வெளியஈடவும் அதிகார வர்க்கங்களின் முகத்திரையை கிழிக்கவும், சிறைக்கு செல்லவும், மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து செயல் பாடவும் தில் இருக்கணும். நீங்கள் கால்பந்து பற்றி இணையதளம் நடத்தி எதை சாதித்தீர்கள்? ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்தீர்களா? தவறான காவல் துறை உயர் அதிகாரிகளை எதிர்த்தீர்களா? அனால் அதையெல்லாம் சவுக்கு செய்கிறது! அது சுலபமான காரியமா? உங்களால் முடியுமா? சவுக்கு ஆரம்பிக்கப்பட்ட ு இரண்டு வருடங்கள் ஆக போகிறது. ஆனால் இன்று வரை லாப நோக்கத்தோடு செயல்படவில்லை, உண்மைகளை உரக்க கூறும் தைரியம் சவுக்குக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா? கருணாநிதியை பற்றி, ஜாபர் சேட் பற்றி, உங்களால் உங்கள் வலைதளத்தில் விமர்சிக்க முடியுமா? எதாவது சிக்கல் எழுமோ என்று அஞ்சுவீர்கள். பணத்தை மட்டும் மனதில் வைத்து இழப்புகளை எடை போடாதீர்கள்,
நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள், சென்னையிலேயே செய்தி சேகரித்து உண்மை செய்திகளை வெளியிடுங்கள், மிரட்டலுக்கு அஞ்சாமல் காவல்துறையில் நடக்கும் தவறுகளை பற்றி செய்தி வெளியிடுங்கள். அதன் பிறகு வந்து சவுக்கை விமர்சியுங்கள்.
நம் தமிழ்ச்சாதிக்கு கோடி போட துணையிருந்த இந்த ஐ.நா மன்றத்தில் முன்பு தமிழீழ கொடி எப்பொழுது பறக்கும் என அந்த மன்றத்தின் முன்பு நின்று வெறித்து பார்த்தவன் நான். எம் மக்களை காப்பாற்றுங்கள் என கூட்டம் கூட்டமா வெள்ளை மாளிகை முன்பும் அமெரிக்க காங்கிரஸ் சபை முன்பு கதறிய நம் தமிழ் மக்களை எதோ பிச்சை கேட்பவர்கள் என நினைத்து விட்டது இந்த அமெரிக்க அரசு. போரை நிறுத்து என கடுமையாக ஒரு வார்த்தை சொன்னால் போதுமே... மிச்சமிருப்பவர் களை காப்பாற்றிவிடலா மே என ஏங்கிய போதும் ஒருத்தனும் நம்மை திரும்பி பார்க்கவில்லை. சரி மக்களுக்குத்தான ் மரியாதை இல்லை. தனிப்பட்ட மனிதர்கள் யாரவது சொல்வார்களா என பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. வெள்ளை மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்தினார் நம்ம ஊர் ஏ ஆர் ரகுமான். அய்யா நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கெஞ்சியது நம் சொந்தங்கள். என்ன செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். எமைஏ எதோ ஒப்ராவிடம் வேண்டுகோள் வைத்தாக படித்தேன். சரி இது முதலாளித்துவ நாடு... சிவசங்கரன் ஒரு தமிழர்... டாடா விடம் மிகுந்த செல்வாக்கு கொண்டவர். டாடா உலக அளவில் செல்வாக்குடையவர ். ... இவர் மூலமாக டாடா ஏதாவது செய்யலாமே என அவருக்கும் வேண்டுகோள். ஒருத்தனும் திரும்பி பார்க்கவில்லை. தப்பா எடுத்துக்காதிங் க. நம்ம ஊர் அரசியல்வாதிகளின ் எஜமானர்கள்தான் இந்த தொழிலதிபர்கள் அதனால்தான். சிகாகோ கிருட்டிணமூர்த் தி ஒபாமாவுக்கு, வைகோவிற்கும் மிகவும் வேண்டப்பட்டவர். யாருமே எதுவும் செய்யலையே அப்படின்னு தோணுது.
----தொடர்ச்சி அடுத்த பின்னூட்டத்தில் -----
எஹிப்தில் ஒரு உயிர் போனால் கெய்ரோ-விலிருந்து லைவ் டெலிகாஸ்ட் செய்து ஆட்சியையே மாற்றுகிறீர்களே ... மதிக்கவில்லை என்பதால் கடாபியை கொல்ல துடிக்கிறீர்களே ... அங்கு இலட்சம் உயிர் போய்விட்டது... ஏதாவது ஒரு செய்தி போட்டீர்களா... என சிஎனென் தொலைக்காட்சிக்க ு எவ்ளோ வேண்டுகோள் வைத்தது நம் தமிழ்சாதி. ஆண்டர்சன் கூப்பருக்கு தனி பிளாக் போட்டு ஆதரவு திரட்டியும் ஒரு பயனுமில்லை. இதுபோன்று உலகம் முழுக்க கதறி அழுது நிக்கும் போதுதான் என்னென்ன கூத்துக்கள் நம் தமிழகத்தில்? மனிதமே இல்லாத மனித சங்கிலி, புதுவகையான உண்ணாவிரதம்... இதுக்கு மத்தியில் சிங்கள கைக்கூலியாக நம் தமிழ் பத்திரிகைகள். நான் தினமணி தவிர்த்து எந்த பத்திரிக்கையும் படிக்கிறது கிடையாது. உங்களைப் போன்ற இணையம்தான் கொஞ்சம் ஆறுதல்.
நான் உங்களை தவறான கண்ணோட்டத்தில் புண்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்கவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் துரோகிகளாக தெரிகிறது. யாரையும் நம்ப மனம் வரவில்லை. இருக்கும் கொஞ்சநெஞ்ச ஆதரவையும் இழக்க மனமில்லை. அதனால்தான் தெளிவுபெற விரும்பினேன்.
என்னைப் போன்ற பலருக்கு புத்தக வெளியீட்டுக்கு வெளிநாடுகளிலிரு ந்து உடனடியாக வர இயலாது. பதிவு செய்து யொஉடுபெ தளத்தில் போடா முடியுமா?
நம்பிக்கையோடு,
வே. பத்மநாபன்.
எனக்கு உங்களது பெயர் தெறியாது, உங்கள் மிகுந்த மரியாதை வைத்து உள்ளேன் உங்களுக்கு ஒரே ஒரு அறிவுரை தயவு செய்து பாதுகாப்பாக இருக்கவும்
pls take care of yourself anna, i am wishing u all the best for your future na and one more request na if u can pls publish ur photo na, if it is problem for u no need na, bye take care
RSS feed for comments to this post