முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 09 ஜூன் 2011 22:29

அரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது? ராஜீவ் சர்மா எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி' நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான்.

ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் - இவை அனைத்திற்கும் எதிரான ஒரு புத்தகத்தை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய காரணம் அந்தப் புத்தகத்தை பதிப்பித்திருப்பது நமது தோழர் சவுக்கு என்பதால்தான். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நமது தோழர்கள் விடுதலை இராசேந்திரன், தியாகு, வழக்கறிஞர் புகழேந்தி, கஜேந்திரன். (புத்தகத்தின் பாதகத்தன்மை குறித்து விழா மேடையிலேயே விடுதலை இராசேந்திரன் பேசினார்.) ஈழப் பிரச்சினையில் ஒத்த உணர்வுள்ள தோழர்கள் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள் என்பதும், சவுக்கு வெளியீடு என்பதும், தவறான ஒரு புத்தகத்திற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக ஆகிவிடக் கூடாது என்பதாலேயே இந்தப் புத்தகத்தை மறுக்க வேண்டியிருக்கிறது. 'இத்தனை நாள் நாங்க சொல்லிட்டிருந்தபோது நம்பலை.. இப்ப பாருங்க.. உங்க தோழர் சவுக்கு வெளியிட்ட புத்தகத்தில் இதெல்லாம் இருக்கு..' என்று ஈழத்திற்கு எதிரானவர்கள் பேசுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் இந்தப் புத்தகம் தருகிறது.

முற்றிலும் நம்புவதற்குத் தகுதியற்ற சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு, இந்திய உளவுத்துறை ஆகியவற்றின் குறிப்புகளின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நூலினை மறுப்பதாக இருந்தால் அதன் 90% பக்கங்களை நாம் மறுக்க வேண்டியிருக்க வேண்டும். ஆனால் இரண்டு குறிப்பிட்ட செய்திகளுக்காக இந்தப் புத்தகத்தை மறுக்க விரும்புகிறேன்.

1. புலிகள் பயங்கரவாதிகள்; காசுக்காக கொலை செய்யும் கூலிக்கூட்டம்

2. சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் நேர்மையான விசாரணை; இராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்

சமூக அல்லது அரசியல் விடுதலைக்காக போராடும் குழுக்களை பயங்கரவாதக் குழுக்கள் என்று முதலாளித்துவ ஜனநாயகம் பேணும் நாடுகள் முத்திரை குத்துவதை வரலாற்று நெடுகிலும் காண முடியும். பகத்சிங், சே குவேரா தொடங்கி பாலஸ்தீன விடுதலை இயக்கம், காலிஸ்தான் போராட்ட குழுக்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், காஷ்மீர் விடுதலை போராட்டக் குழுக்கள் எவையும் இந்த முதலாளித்துவ மதிப்பீட்டிலிருந்து தப்பியதில்லை. ஆயுத விற்பனைக்காக மூன்றாம் உலக நாடுகளில் போராட்டங்களைத் தூண்டிவிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பின்னர் உலகமயச் சூழலில் 'ஒரே சந்தை' எனும் நோக்கில் 'தேச ஒற்றுமை'யை டன்டன்னாக இறக்குமதி செய்தன. ஏகாதிபத்திய நாடுகளின் கைக்கூலிகளாக செயல்படும் ஊடகங்களுக்கும், அதன் செய்தியாளர்களுக்கும் அரச பயங்கரவாதம் தொடர்பான நிறக்குருடு நோய் இருப்பதும், போராளிக்குழுக்களின் மீது தீராத காய்ச்சல் இருப்பதும் உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குத் தெரியும். மாவோயிஸ்ட்களின் எதிர்த்தாக்குதல் குறித்து மணிக்கணக்கில் விவாதிக்கும் இவர்கள், மத்திய இந்தியாவிலும், வட கிழக்கிலும் இந்திய ராணுவம் நடத்தும் அரச பயங்கரவாதம் குறித்து ஒரு நிமிடம் கூட பேசமாட்டார்கள். காட்சி ஊடகங்களின் 'ஊடகப் பயங்கரவாதம்' குறித்துதான் நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். அதற்கு சற்றும் குறையாததுதான் எழுத்து ஊடகங்களும்.

rajiv_sharma_300பெரும்பாலான ஊடகங்கள், காவல்துறை/ராணுவம் தரும் செய்திகளை எந்த விசாரணையுமின்றி ஏற்றுக் கொண்டு வெளியிடுகின்றன. காவல்துறை அல்லது சிபிஐ‍-ஆல் கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் இந்தப் பத்திரிக்கையாளர்களைப் பொருத்தவரை குற்றவாளிகளே! குற்றத்திற்கான நோக்கம், குற்றம் நடந்த சூழல், விசாரணையில் கடைபிடிக்கப்படும் பாரபட்சம் இவை எதுவும் இவர்களுக்கு முக்கியமல்ல. பல பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்திற்கே போகாமல், காவல் நிலையத்தில் போட்டோவும் செய்தியும் வாங்கிக் கொண்டு காவல்துறை சொல்ல விரும்பும் கட்டுக்கதைகளை செய்திகளாக வெளியிடுகிறார்கள். ஊடக தர்மம் குறித்து கவலைப்படாதவர்கள் இந்தியாவின் பெரும்பாலான பத்திரிக்கைகளும், அதில் பணியாற்றுபவர்களும். அத்தகைய 'நேர்மையான' ஒரு பத்திரிக்கையாளர்தான் இந்தப் புத்தகத்தை எழுதிய 'ராஜீவ் சர்மா'. ராஜீவ் கொலை சம்பவம் நடந்த சிறிபெரும்புதூருக்கோ, கொலை விசாரணை நடந்த சென்னைக்கோ வராமலேயே அதுகுறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இவரது லட்சணத்தை... பின் எதை ஆராய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றால், சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு, இந்திய உளவுத்துறையின் குறிப்புகளின் பின்னணியில்… இவை இரண்டும் இந்தியப் பத்திரிக்கைகளில் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளை வெட்டி ஒட்டி சுவாரஸ்யமான ஒரு புத்தகத்தை தயாரித்திருக்கிறார். விடுதலைப் புலிகளைப் பற்றி சிபிஐயும், இந்திய உளவுத்துறையும் காலம் காலமாக கூறிவந்த கதைகளுக்கும், இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவற்றிற்கும் மயிரளவு வித்தியாசம் கூட இல்லை.

பொய் வழக்குகளில் ஓர் அப்பாவியை குற்றவாளியாக்க காவல்துறை, அவரின் பின்புலத்தைப் பற்றி பல கதைகளை ஜோடிக்கும். 'ஆறாம் வகுப்பில் பென்சில் சீவும் பிளேடால் சக மாணவரைக் கீறி விட்டார்; கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் கலாட்டா செய்திருக்கிறார்; பக்கத்து வீட்டுக்காரருடன் சாக்கடைத் தகராறு செய்திருக்கிறார்' என்று ஏகத்துக்கும் ஜோடிப்பார்கள். ஏனென்றால், 'இப்பேர்ப்பட்ட வன்முறையாளர், இந்தக் கொலையைச் செய்தார் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை' என்று நீதிபதி அய்யா ஒரு முடிவுக்கு வருவதற்காக... அப்படிப்பட்ட பல ஜோடிப்புகளை ராஜீவ் சர்மா துளியும் நேர்மையின்றி இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

புலிகள் பயங்கரவாதிகள், ஈவிரக்கமற்றவர்கள், எப்போதும் கொலைவெறியுடன் இருப்பவர்கள், அப்பாவி மக்களை கொல்லத் தயங்காதவர்கள் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளோடு போதை மருந்து கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டையும் இந்தப் புத்தகம் வைக்கிறது. புகைபிடித்தல், மது அருந்துதலைத் தடை செய்த - ‘கட்டுக்கோப்பானதோர் இயக்கம்’ என்று புலிகள் இயக்கம் பற்றி நாம் அறிந்திருந்ததுதான் தவறா? அதுமட்டுமா, மதிவதினியை பிரபாகரன் காதலித்து திருமணம் செய்தார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அவரை பிரபாகரன் கடத்திக் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக திருமணம் செய்தார் என்றும் கூறுகிறார் ராஜீவ் சர்மா. 'சுயநலவாதி, இரக்கமற்றவர், யார் சொல்வதையும் கேட்காதவர்' என்று பிரபாகரன் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள்...

சவுக்கு நூல் வெளியீட்டு விழாவிற்காகத்தான் முதன்முறையாக சென்னைக்கே வருகிறேன் என்று கூறும் ராஜீவ் சர்மா எந்த ஆய்வின் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறுகிறார்? அத்தனையும் சிபிஐயும் உளவுத்துறையும் புனைந்த கதைகளின் அடிப்படையில்...

அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முதல் நடவடிக்கை, போராளிகளை பயங்கரவாதிகள் என்று அறிவிப்பதுதான். காஷ்மீர் போராளிகள், மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகள் என அனைவர் மீதும் ஒடுக்குதலை மேற்கொள்ளும் அரசு இதைச் செய்திருக்கின்றது. அரசுகளின் இந்த மோசடித்தனத்தை பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் உணர வேண்டியது மிகமிக அவசியம். அப்படி உணர்ந்ததாலேதான் அருந்ததி ராய் அவர்களால், மாவோயிஸ்ட்களை தோழர்கள் என்று அழைக்க முடிகிறது. ஆனால், தனது புத்தகத்திற்கு சிபிஐயின் முன்னாள் இயக்குனரிடம் சர்டிபிகேட் வாங்கியிருக்கும் ராஜீவ் சர்மாவிடம் அந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?

prabhakaran_407இன்னொரு எரிச்சலூட்டும் செய்தியும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. உயரம் குறைவானவர் என்பதை மறைப்பதில் பிரபாகரன் எப்போதும் கவனமுடன் இருப்பாராம். அதை மறைக்கும்விதமாகவே புகைப்படம் எடுக்கச் சொல்வாராம். என்ன கொடுமை இது? எத்தனை புகைப்படங்களில் பிரபாகரன் தன்னை விட உயரமான போராளிகளுடன் உற்சாகமாக நிற்கும் காட்சியை நாம் கண்டிருக்கிறோம். அருகிலிருக்கும் ஒரு புகைப்படத்தைப் பாருங்கள்... ஒரு போராளியை இப்படி எல்லாமுமா கொச்சைப்படுத்துவது?

கிட்டு, பொட்டு அம்மான், காசி ஆனந்தன், குமரன் பத்மநாபா (இன்றைய கே.பி. மீது நமக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்), கரும்புலிகள் மீது கூறப்பட்டுள்ள அவதூறைகளையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரை மிக நீண்டதாகவிடும்.

ஒரு இடத்தில் கூட சிறப்பு புலனாய்வுப் பிரிவின் திறமையின்மை, விசாரணை என்ற பெயரில் அது நடத்திய மனித உரிமை மீறல்கள் மீது விமர்சனமே இல்லை. ‘அவர்கள் திறமைசாலிகள், அவர்களின் கைகளை மேலிடம் கட்டிவிட்டது’ என்ற தொனியிலான ஜால்ராவைத்தான் ராஜீவ் சர்மா புத்தகம் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். காவல்துறைக்கு இப்படி ‘சிங்குச்சான்’ அடிக்கும் பத்திரிக்கையாளர்களை அம்பலப்படுத்தி பல கட்டுரைகள் எழுதிய சவுக்கு, ராஜீவ் சர்மாவுக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளித்தார் எனப் புரியவில்லை.

புலிகள் மீது இந்தப் புத்தகத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலேயே மிக மோசமானது அவர்கள் கூலிக்காக இராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் என்பது. மனசாட்சியுள்ள ஒரு இந்தியன், இராஜீவ் காந்தி என்ற கொடுங்கோலனைக் கொல்வதற்கு டெல்லி சீக்கியர்கள் படுகொலை, போபர்ஸ் ஊழல், இடஒதுக்கீடு எதிர்ப்பு என்று ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஈழத் தமிழனுக்கு இரண்டாயிரம் காரணங்கள் இருக்கின்றன. அமைதிப் படை என்ற பெயரில் சாத்தானின் படைகளை அனுப்பி இராஜீவ் காந்தி ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களை எந்த ஈழத் தமிழனும் மன்னிக்க மாட்டான். இராஜீவ் காந்தி ஒரு ஈழத் தமிழனால் கொல்லப்படாமல் போயிருந்தால்தான் அது ஆச்சரியம். தோழர் கொளத்தூர் மணியின் வார்த்தைகளைத்தான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். "ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம்".

ஆறாயிரம் ஈழத் தமிழர்களைக் கொன்றவன் இராஜீவ் காந்தி. அதுகுறித்து இந்தப் புத்தகம் ஏதாவது பேசுகிறதா? இராஜீவ் கொலை தொடர்பான 20,000 செய்திக்குறிப்புகளை படித்ததாக தம்பட்டம் அடிக்கும் ராஜீவ் சர்மா, 'சாத்தானின் படைகள்' என்ற புத்தகத்தையும் படித்திருக்க வேண்டும். படித்திருந்தால் யார் பயங்கரவாதிகள் என்பது புரிந்திருக்கும்.

இராஜீவ் காந்தி என்ற கொலைகாரன் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதால், ஈழ ஆதரவாளர்களும், தமிழ்த் தேசியவாதிகளும் அனுபவித்த அடக்குமுறைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவதே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயல் என்றளவில் காங்கிரஸ், ஜெயலலிதாவின் அடக்குமுறை இருந்தது. ஈழப் போராளிகள் மீது மாறாத அன்புடைய தமிழக மக்கள் பொதுவெளியில் அவர்கள் குறித்து பேசுவதற்கே அஞ்சினார்கள். புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டன. பழ.நெடுமாறன், வைகோ, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்கள். இன்று தமிழ்நாட்டில் புலிக்கொடி ஏந்தியும் ஈழப்போராட்டத்தை ஆதரித்தும் பொதுமக்கள் பேசுகிறார்கள் என்றால் அந்தச் சுதந்திரம் ஈழ ஆதரவாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்களாலும், பரப்புரைகளாலும், முத்துக்குமாரின் உயிர்க்கொடையாலும் கிடைத்ததாகும். புலிகளை பயங்கரவாதிகள் என்பதன் மூலம் அந்தச் சுதந்திரத்தின் மீது கொஞ்சம் மண்ணள்ளிப் போடும் வேலையை இந்தப் புத்தகம் செய்கிறது.

ஒரு சாதாரண பெட்டி கேஸில் கூட ஒழுங்காக விசாரணை நடத்த துப்பில்லாமல் அப்பாவிகளைப் பிடித்து, அடித்து துன்புறுத்தி குற்றவாளியாக்கும் மாண்பு மிக்கதுதான் இந்தியாவில் இருக்கும் அனைத்து மத்திய, மாநில புலனாய்வுப் பிரிவுகளும். பெட்டி கேசுக்கே அந்த நிலை என்றால், நாட்டின் மிக முக்கியமான அரசக்(அடத் தூ!) குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு என்னென்ன கூத்து நடத்தியிருக்கும்? அத்தனை கூத்துக்களையும் ஒரு கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு, கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் அக்மார்க் குற்றவாளிகள் என்கிறார் இந்த ராஜீவ் சர்மா. ராஜீவ் சர்மாவிற்கு வேண்டுமானால், உளவுத்துறை, காவல்துறையினரின் யோக்கியதை தெரியாமலிருந்திருக்கலாம். சவுக்கு சங்கருக்கு…?

இராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் 7 பேருக்கு எதிராக மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டவர்களுக்கும் எதிராகத்தான் இந்தப் புத்தகம் பேசுகிறது. 'இராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்டு இருக்கும் ஏழு தமிழர்களோடு கடந்த பத்து ஆண்டுகளாக பழகி வருவதாகவும், அவர்களுக்கு இந்தப் படுகொலையைப் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை என்பதை தன்னால் உணர முடிந்தது' என்றும் வழக்கறிஞர் புகழேந்தி கூறுவதற்கு மாறாக, அனைவரையும் குற்றச்சதியில் பங்கேற்றவர்களாகவும், குற்றம் புரிந்தவர்களாகவும் இந்தப் புத்தகம் கூறுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணைகளில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் யாரையெல்லாம் குற்றவாளிகள் என்று அறிவித்தார்களோ, என்னென்ன குற்றச்சாட்டுக்களை கூறினார்களோ அவையெல்லாவற்றையும் எந்தவொரு கேள்வியுமின்றி இந்தப் புத்தகம் ஏற்றுக் கொள்கிறது.

சாம்பிளுக்கு சில:

“…சிவராசன் தணுவிற்கு தாராளமாக செலவு செய்ய முடிவு செய்தார். மேலும் நளினி மற்றும் சுபாவிடம், தணுவின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு, உடை, பொழுதுபோக்கு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியும், பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்யுமாறும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். தணுவின் கடைசி 20 நாட்களில், நளினி மற்றும் சுபா சுமார் ரூ.10,000 அளவிற்கு செலவு செய்து இருந்தனர்..”

“..தணு சென்னைக்கு வந்த நாள் முதல் நளினி அவருக்கு மிகவும் நெருங்கிய தோழியாக மாறினார். நளினி கரும்புலிகளை சென்னையிலுள்ள சுற்றுலா தளங்களுக்கும் மார்க்கெட், கடற்கரை மற்றும் ஓட்டல்களுக்கு தினந்தோறும் கூட்டிச் செல்வது வழக்கம்..”

“…நளினி மற்றும் பாக்கியநாதனின் தாயான பத்மாவின் இல்லத்தில் இறுதிகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடைபெற்றது. தனு, சிவராசன், சுபா தவிர பாக்கியநாதன், நளினி, ஹரிபாபு, ஸ்ரீகரன் மற்றும் அறிவு ஆகியோர் அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். சிவராசன் அடுத்தநாள் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய குறிப்பிட்ட வேலையை அவரவர்க்குப் பிரித்துக் கொடுத்தார்..”

“…கொலைச்சதியில் ஈடுபட்ட 4 நபர்கள் தணு, சிவராசன், நளினி மற்றும் சுபா ஆகியோர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்..”

“…நளினி தடைகளைத் தாண்டி கொலைக்குழு கூட்டத்தினுள் செல்ல உதவி செய்தார்..”

“…ராஜீவ் அரசியல் கொலையிலும், பத்மனாபாவின் கொலையிலும் சிவராசனுக்கு உதவி செய்த சாந்தன் எஸ்.ஐ.டியிடம் 1991 ஏப்ரல் மாதம் தான், சிவராசன், சுபா, தனு ஆகியோருடன் செல்ல வேண்டுமென பொட்டு அம்மானால் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்..”

“…எல்டிடிஈ போராளி முத்துராஜாவின் உத்தரவுப்படி, பத்மா, பாக்யநாதன் மற்றும் நளினி ஆகியோர் சிவராசன், சுபா, தாஸ் என்கிற முருகன் ஆகியோரை வில்லிவாக்கத்தில் ஓரிடத்திலும் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள அவர்கள் இல்லத்திலும் தங்க வைத்துள்ளனர்…”

“…முருகன், பின்னாளில், எல்டிடிஈ-ன் உளவு பார்ப்பவராக மாறினார். சிவராசன் உட்பட கொலைக்குழுவின் அனைத்து நபர்களையும் கண்காணிப்பது அவரின் வேலை…”

“..தென்சென்னை நந்தனத்தில் மே 7 அன்று நடந்த வி.பி.சிங்-இன் கூட்டத்திலும், ஏப்ரல் 18 அன்று மெரினா கடற்கரையில் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திலும் எல்டிடிஈ மேற்கொண்ட இரண்டு வெள்ளோட்டத்தில் முருகன் கலந்து கொண்டார்…”

“…நளினி மற்றும் முருகன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மேலும் இரு முக்கியமான எல்டிடிஈ போராளிகள் எஸ்.ஐ.டி.யின் தேடுதல் வலையில் வீழ்ந்தனர். அந்த இருவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதுடைய ராபர்ட் பயாஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஜி.பேரறிவாளன் என்ற அறிவு. இலங்கைத் தமிழரான பயாஸ் சிவராசன், தனு மற்றும் சுபாவிற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை தயார் செய்தார். அறிவு, பாக்கியநாதன் மற்றும் பத்மாவுடன் தங்கியிருந்தார்..”

“…அந்தக் கொலைக் குழுவிலிருந்த மற்றொரு நபரான ஜெயக்குமார் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத் தமிழரான ஜெயக்குமார் சென்னையில் சிவராசன் மற்றும் சுபா தங்குவதற்கு வசதி செய்து தந்தார்..”

“…கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மட்டுமே வாங்கப்பட்ட பாக்கியநாதனின் அச்சகம் இந்தக் கொலைக் குழுவினர் கூடிப் பேசும் மற்றொரு இடமாகும். பாக்கியநாதன் தன்னுடைய போலியான அச்சகத்தைப் பற்றி வெளியே சொல்லிக் கொள்ளாமல் மிக ரகசியமாகவே இருந்தார். அந்த அச்சகத்திற்கு அருகில் அவர் யாரையும் வர அனுமதித்தில்லை..”

இப்படி கைதானவர்களுக்கு எதிரான செய்திகள் இந்தப் புத்தகம் எங்கும் விரவிக் கிடக்கின்றன.

சரி, உண்மை என்ன?

தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமே போதுமானது என்று அச்சட்டம் கூறுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கொலைவழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு கீழ்த்தரமான நடவடிக்கைகளால் அப்பாவிகளை சித்திரவதைக்குள்ளாக்கி வாக்குமூலம் பெற்றது.

தான் எப்படி குற்றவாளியாக்கப்பட்டேன், என்னவிதமாக சித்திரவதை செய்யப்பட்டேன் என்பது குறித்து சிறையிலிருக்கும் பேரறிவாளன் ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூலில் விவரித்திருக்கிறார்.

தோழர் பூங்குழலி தனது ‘தொடரும் தவிப்பு’ நூலில் இதுகுறித்து எழுதியிருக்கிறார்:

"..எத்தனையோ நாட்கள் மதியம் 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சாந்தி மறுநாள் அதிகாலை 3 மணி வரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டுச் சக்கையாய் வெளிவரும் நிலை. முகாமிற்குள்ளேயே இருந்த ஒரு அறைதான் விசாரணை அறையாய்ப் பயன்படுத்தப்பட்டது. அந்த அறையிலிருந்து சாந்தியின் அலறல் வெளிப்படும் ஒவ்வொரு முறையும் அதன் எதிரொலியாய்ப் பயந்து அலறும் அவரது மகனின் குரல் அறைக்கு வெளியே.."

"நாங்கள் கேட்பதை எழுதிக்கொடு உன்னை விட்டுவிடுகிறோம் என ஆசை வார்த்தைகள். செல்வி மிகுந்த தைரியத்துடன் மறுத்துவிட்டார். 'சுபாவும் தணுவும் என் வீட்டில்தான் தங்கியிருந்தனர். தணுவுக்குக் குண்டை நான்தான் கட்டிவிட்டேன். இதை மட்டும் ஒத்துக்கொள் உனக்கு அதிகம் சிக்கல் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார் விசாரணை அதிகாரி.

'நீங்கள் கூறுபவர்களை எனக்குத் தெரியாது. நடக்காத ஒன்றை என்னால் எழுதித்தரமுடியாது' என செல்விப் பிடிவாதமாக மறுக்க.

'சரி! அப்படியானால் உன் கணவரையாவது நாங்கள் சொல்லும்படி நடக்கச்சொல். உன்னை விட்டுவிடுகிறோம். உன் குழந்தைக்கு வசதி வாய்ப்புகள் செய்து தருகிறோம்" – மீண்டும் ஆசைவார்த்தைகள்."

"'உன் பிள்ளைகளைக் கொன்றுவிடுவோம்' – என மிரட்டியே பத்மாவிடம் கையெழுத்து வாங்கிவிட்டனர்.

பாக்கியநாதனிடம் வாங்கிய முறை மிகக் கேவலமானது. அடிக்கும் உதைக்கும் அஞ்சாது, எந்தவித மிரட்டலுக்கும் மசியாது இருந்த அவரின் மன உறுதியையே பொடிப்பொடியாக்கும் வகையில் ஒரு மிரட்டலை அவர் முன் வைத்தனர். ஆம்! பெற்ற தாயையும் உடன் பிறந்த சகோதரிகளையும் கண் முன் நிர்வாணம் ஆக்குவதாகக் கூறினால் எந்த ஆணுக்குத்தான் மனம் பதைக்காது?"

"கைது செய்யப்பட்டபோது நளினி இரண்டு மாத கர்ப்பிணி. கைதான நொடி முதலே கொடுமைகள் துவங்கிவிட்டன. கைதான இடத்திலிருந்து மல்லிகைக்குக் கொண்டுவரும் வழியெங்கும், கணவனின் கண் முன்பே, கூட வந்த அதிகாரி நளினியிடம் தவறாக நடந்துகொள்ள முயல, பெரும் மன அதிர்ச்சிக்கு ஆளானார். மல்லிகையில் நடந்த கொடுமைகள் ஒவ்வொன்றும் வெளியே சொல்வதற்கே நாக் கூசும் அளவில் இருந்தன. கர்ப்பவதி என்றும் பாராமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர் பாவிகள். கணவன் கண் முன் மனைவியை நிர்வாணமாக்கி அடிப்பதும் மனைவி கண் முன் கணவனை நிர்வாணமாக்கி அடிப்பதும். இது போல எத்தனையோ ... ஒரு பெண்ணாக மற்றொரு பெண்ணிடம், ஏன் பெற்ற தாயிடம், கூட அதைச் சொல்வதற்குக் கூசினார் நளினி. அதையும் மீறிச் சொன்னவை போக, இன்னும் அவர் மனத்திற்குள் புதைந்து கிடப்பது எத்தனையோ?" (இராஜீவ் கொலைவழக்கு -‍ சித்திரவதைகளில் புதைந்த நீதி - பூங்குழலி)

இந்தக் கொலை வழக்கில் கைதாகி பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ரங்கநாத் சோனியாவுடனான தனது சந்திப்பு குறித்து கூறுகையில்,

"... இரண்டாவதாக, “உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?” எனக் கேட்க, நானும், “அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.

மூன்றாவதாக, “இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?” என்றார். “அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்” என்றேன்..." (http://www.keetru.com/literature/essays/ranganath.php)

savukku_book_450இத்தனை அயோக்கியத்தனங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்துதான் சிறப்பு புலனாய்வுப் பிரிவு 26 பேரையும் குற்றவாளிகள் என்றது. இவையெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், கண்ணை மூடிக் கொண்டு சிறப்பு புலனாய்வுப் பிரிவு சொன்னதைக் கொண்டு, 26 பேரையும் குற்றவாளிக் கூண்டுக்குள் ஏற்றுகிறது இந்தப் புத்தகம். ராஜீவ் சர்மாவிற்கு அதிகாரம் இருந்தால் 26 பேரையும் தூக்கிலேற்றியிருப்பார்.

இவர் அப்படியே நம்பும் 'அம்மாம்பெரிய' சிபிஐயின் யோக்கியதை என்ன என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா? அண்மையில் தேடப்படும் 50 தீவிரவாதிகள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்த சிபிஐ, அவர்கள் பாகிஸ்தானுக்குள் இருப்பதாகவும் கூறியது. பட்டியல் வெளியிடப்பட்ட இரண்டு, மூன்று தினங்களில் பட்டியலில் இருக்கும் வாஜுல் கமர்கான் என்பவர் மும்பை நகரத்தின் அருகே உள்ள தானேவில் பல ஆண்டுகளாக தங்கி வருவதாக அவருடைய குடும்பத்தினர் ஊடகங்களில் தெரியப்படுத்தியவுடன் சிபிஐ சூடு தாங்காமல் கையை உதறிக் கொண்டது; 'சாரி' சொன்னது.

இந்தச் சமாளிப்பு முடிவதற்குள்ளாக பட்டியலில் இருக்கும் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரும் இந்தியாவில் இருக்கும் தகவல் வெளியாகி அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. ஏற்கெனவே கைதாகி மும்பை சிறையில் இருக்கும் நபரைத்தான் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதாக கூறி பட்டியலை தந்துள்ளது இந்தியா. அது மட்டுமில்லாது ஆட்டுக் குட்டியை தோளில் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையாக சிறையில் இருக்கும் பெரோஸ்கான் மீது சர்வதேச போலீஸ் மூலமாக பிடிவாரண்ட் வாங்கி சிபிஐ உலகம் பூராவும் தேடித் திரிந்த தகவல் வெளியாகி சிரிப்பாய் சிரிக்கிறது. (நன்றி: மக்கள் ரிப்போர்ட்)

1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்ரா பகுதியில் பறந்த மர்ம விமானம் ஆயுதக் குவியலை வீசியது. அந்த விமானத்தை வழியில் மடக்கிய சிபிஐ அதிகாரிகள் ஆயுத வியாபாரி பீட்டர் பீளீஸையும், நீல்ஸ் கிரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம்டேவியையும் கைது செய்தனர். சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே கிம் டேவி மர்மமான முறையில் தப்பியோடி விட்டான். தங்கள் பிடியிலிருந்து தப்பி தலைமறைவாக இருக்கும் கிம்டேவியை தேடிப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக சீன்காட்ட ஆரம்பித்தனர். சிபிஐயின் அறிக்கைகளை கேள்விப்பட்ட கிம்டேவி, தான் மறைந்து வாழவில்லை என்றும், பல ஆண்டுகளாக கோபன் ஹேகனில் வெளிப்படையாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தான். மேலும் தான் தப்பிக்கவில்லை என்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சிபிஐதான் என்றும் பேட்டி கொடுத்து சிபிஐ மானத்தை கப்பலேற்றி விட்டான்.

இன்னும் ஒருபடி மேலேபோய், தான் கோபன் ஹேகனில் தங்கி இருப்பது சிபிஐக்கு தெரியும் என்றும், சிபிஐ அதிகாரிகள் தன்னைத் தேடுவதாக கூறி இத்தனை ஆண்டுகள் உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற குண்டைத் தூக்கிப் போட்டு சிபிஐயின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி விட்டான். (நன்றி: மக்கள் ரிப்போர்ட்)

இந்த சூரப்புலிகள் இராஜீவ் கொலை விசாரணையின்போது பத்திரிக்கைகளில்  வெளியிட்ட புரூடா கதைகளைத் தொகுத்துத்தான், 'அசல் நெய்யில்' செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதற்கு முன்னுரை முன்னாள் சிபிஐ இயக்குனர். நல்லா இருக்குப்பா உங்க காம்பினேஷனும் கொலாப்ரேஷனும்.

இத்தனை அனர்த்தங்களுக்கும் மேலாக இந்தப் புத்தகம் என்ன சொல்கிறது? இராஜீவ் கொலையில் புலிகளுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர்கள், ஜெயலலிதா, பிரேமதாசா, இஸ்ரேலின் மொசார்ட், அமெரிக்காவின் சிஐஏ-வுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறது. நன்கு கவனிக்கவும்.. அதற்கான யூகங்களைத் தருகிறது; ஆதாரங்களை அல்ல. அதுமட்டுமல்ல, கொலைச்சதியிலிருந்து புலிகளையோ, கைது செய்யப்பட்ட 26 தமிழர்களையோ அது விடுவிக்கவில்லை.

இராஜீவ் கொலைச் சதியில் சர்வதேச நாடுகளின் பங்கு குறித்தும், காங்கிரஸ் தலைவர்களோ, ஜெயலலிதாவோ ராஜீவுடன் இல்லாதது குறித்தும் தமிழகத்தில் நிறைய பேசியும், எழுதியும் ஆகிவிட்டது. தோழர் விடுதலை இராசேந்திரனின் ‘இராஜீவ் கொலை – மறைக்கப்பட்ட உண்மைகள்’ புத்தகம் தொடங்கி தமிழன் எக்ஸ்பிரஸ், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நந்தன், நக்கீரன் – ஏன் காலச்சுவடு உட்பட பல்வேறு பத்திரிக்கைகளில் இச்செய்திகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இராஜீவ் கொலை வழக்கு நிதி சேகரிப்பு தொடர்பாக அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் ஈழ ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி பேசியிருக்கிறார்கள். என்னுடைய கல்லூரி படிப்பின்போது வள்ளியூரில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் பழ.நெடுமாறன் இந்த செய்திகளை பேசக் கேட்டிருக்கிறேன்.

கால்மணி நேரம் இணையத்தில் தேடியதிலேயே இதுதொடர்பான சில தரவுகளைப் பெற முடிந்தது. அவற்றில் சில:

மாவீரன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=4110&Itemid=139) “ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கப் போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.” என்றும், “ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.” என்றும் எழுதியுள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 19, 1997 இதழில் சுதாங்கன் “ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் காட்டியாள நினைக்கும் தந்திரம்.” என்றும் “வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?” என்றும் “காமினி திசநாயகா, அதுலத் முதலி, விக்கிரம சிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்டபோது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?” என்றும் எழுதியிருந்தார். (விடை தெரியாத புதிர்கள் - சுதாங்கன்)

காலச்சுவடில் புலிகளுக்கு எதிரான கண்ணனின் கட்டுரைக்கு வந்த எதிர்வினையில் (http://www.kalachuvadu.com/issue-109/page118.asp) மலரவன் என்பவர் ‘ராஜீவ் காந்தி கொலை ஒரு கோணத்தில் மட்டும் விசாரிக்கப்பட்டு, ஒரு தரப்பினர் மட்டும் குற்றவாளிகளாக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டும்விட்டனர். உண்மையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும்தான் இந்த நிகழ்விற்குக் காரணமா? விசாரணையின் எல்லை காங்கிரசுகாரர்கள், அதிகாரவர்க்கம் அமெரிக்க சிஐஏ என்று இன்னும் கொஞ்சம் விரிந்திருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கும்.’ என்று எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பலர் பேசியும் எழுதியும் வந்த செய்தியைத்தான் இந்திய உளவுத்துறை குறிப்புகளோடு இந்தப் புத்தகம் சில பக்கங்களில் பேசுகிறது. பெரும்பான்மையான பக்கங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், கொலை வழக்கில் கைதானவர்களுக்கு எதிராகவும் பேசுகிறது. உச்ச நிதிமன்றம் நிரபாரதிகள் என விடுவித்த 19 பேரையும் குற்றவாளிகள் என்கிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க இந்தப் புத்தகம் எப்படி உதவி செய்யப் போகிறது? அவர்கள் அப்பாவிகள் என்பதையோ, அவர்கள் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதையோ இப்புத்தகம் எங்கேயாவது பேசுகிறதா? அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான சிறுமுகாந்திரத்தையாவது அளிக்கிறதா? சிஐஏ தொடர்பு குறித்து இந்தப் புத்தகம் பேசுவதால், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு விடுதலை கிடைத்துவிடுமா? அமெரிக்காவின் விசுவாசமான அடிமையாகிவிட்ட இந்தியா, சிஐஏவுக்கு எதிராக சிறுதுரும்பையாவது அசைக்க சம்மதிக்குமா? சிஐஏ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் அரசோ அல்லது வேறெந்த அரசோ அனுமதி அளிக்குமா? அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த தமிழர்களையும் கொல்வதற்குக் கூட இந்திய அரசு தயங்காது என்பதேதானே யதார்த்தம்.

நூல் வெளியீட்டு விழாவில், இராஜீவ் கொலை வழக்கில் தமிழர்கள் மீது வட இந்தியர்கள் குற்றம்சாட்டும்போது பதில் சொல்ல நம்மிடம் தரவுகள் இல்லை என்று மொழிபெயர்ப்பாளர் தோழர் ஆனந்த்ராஜ் பேசினார். அது வாசிப்பின் போதாமையைக் காட்டுகிறதா இல்லை அல்லது தமிழர்கள் நம்மிடையே எப்போதுமிருக்கும் தாழ்வு மனப்பான்மையைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தப் புத்தகம் தமிழர்களை எங்கேயாவது விடுவித்திருக்கிறதா? முன்னிலும் மோசமாக அல்லவா சித்தரிக்கிறது? எந்த அரசியலும் தெரியாத ஒரு புதிய வாசகர் இந்தப் புத்தகத்தைப் படித்தால், 'இராஜீவ் காந்தி இந்தியாவை வல்லரசாக்க வந்த உத்தமர். அதை விரும்பாத அந்நிய சக்திகளுடன் சேர்ந்து காசுக்கு ஆசைப்பட்டு புலிகள் இந்தக் கொலையை செய்துவிட்டார்கள். புலிகள் மோசமானவர்கள். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் உண்மைக் குற்றவாளிகள்' என்ற சித்திரம்தானே எழும்?

வட இந்தியர்களிடம் இந்தப் புத்தகத்தைக் காட்டி, நம் ஆட்களையே குற்றவாளியாக்குவதை விட, இராஜீவ் காந்தி ஆறாயிரம் தமிழர்களைக் கொன்ற ஒரு அயோக்கியன் என்று சொல்வதும், 'இது கொலையல்ல, மரண தண்டணை' என்று தோழர் கொளத்தூர் மணி போல் உரக்கச் சொல்வதும், இந்த வழக்கில் எப்படி அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டிருப்பார்கள் என்று விளங்கவைப்பதும்தான் சரியானது. அதற்கான தரவுகள் தமிழில் ஏராளமாக இருக்கின்றன. தோழர்கள் விடுதலை இராசேந்திரன், புகழேந்தி, பூங்குழலி உதவியுடன் ஆனந்த்ராஜ் 3 அல்லது 4 மாதங்கள் முயற்சித்தால் ஆங்கிலத்தில் அருமையானதொரு புத்தகத்தைக் கொண்டுவரலாம். அதைவிடுத்து, 26 பேருக்கும் பாதகமான இந்தப் புத்தகத்தை சிங்களத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப் போகிறேன் என்று தோழர் அச்சுறுத்துவது அழகல்ல…

விடுதலைப் புலிகளை மிகமிக திறமைசாலிகளாக தான் சித்தரித்த‌தாக கூறுவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக, கூலியாட்களாக சித்தரித்ததை சமப்ப‌டுத்தப் பார்க்கிறார் ராஜீவ் சர்மா. போராளிகள் மீது சேறடிப்பதன் மூலம் மறைமுகமாக போராட்டத்தின் நியாயத்தை மறுக்கும் கேடுகெட்ட அரசியலைத்தான் அவர் செய்திருக்கிறார்.

ராஜீவ் சர்மா எழுதுகிறார்:

“…எனது இந்தியா உயர்ந்தது (மேரா பாரத் மஹான் – My India is great) என்ற வாசகத்தைக் கொடுத்த முன்னாள் பிரதமர் இறந்துவிட்டார். ஆனால், இந்தியாவின் கௌரவம் நிலைகுலைந்தது. 1992 மே 22 அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பிரபாகரன் எங்கே? அவர் இப்பொழுதும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கொரில்லா ராணுவத்திற்குக் கட்டளையிட்டுக் கொண்டு ராஜாவைப் போல இருக்கிறார். ஏன் பிரபாகரனைப் பிடிப்பதற்காகத் தாக்குதல் நடவடிக்கை திட்டமிடப்பட முடியாது? ஈராக்கின் உள்ளே நுழைந்து ஈராக்கின் அணு உலைகளை அழித்து பாதுகாப்பாகத் திரும்பும் போர்விமானங்களை இஸ்ரேல் போன்ற சிறிய நாடுகள் அனுப்பும்பொழுது இந்தியாவின் அருகில் இருந்துகொண்டு இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிரட்டல் விடுக்கும் தீவிரவாத இயக்கத்தின் தலைவரைப் பிடிக்க ஏன் புதுதில்லி தைரியமான வெளிப்படையான தாக்குதலைத் துவங்கக்கூடாது?..”

மீண்டும் ஒரு இந்தியப் படையை ஈழத்திற்கு அனுப்பி, தமிழர்களைக் கொல்ல இந்திய அரசுக்கு 1998ல் யோசனை தந்திருக்கிறான் இந்த ராஜீவ் சர்மா (இந்த நாய்க்கு இனி என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது?). ஈழ ஆதரவாளர்கள் நிரம்பியிருந்த அவையில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவிட்டு, பத்திரமாக திரும்பியுமிருக்கிறான். நமது ஜனநாயகத்தன்மையில் நீடிக்கிறது எதிரிகளின் உயிர்.

யார் இந்த ராஜீவ் சர்மா?

சிபிஐ வசம் இருந்த இராஜீவ் கொலை வழக்கு தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவனுக்கு எப்படி கிடைத்தது?

சித்திரவதைகள் மூலம் அப்பாவிகளை குற்றவாளியாக்கிய சிபிஐ‍-ன் முறைகேடான விசாரணைகள் குறித்து இப்புத்தகம் மௌனம் சாதிப்பதேன்?

திரைப்படங்களில் நேர்மையானவர்களாகவும், திறமைசாலிகளாவும் காட்டப்படுவதுபோல், இந்தப் புத்தகத்தில் சிபிஐ அதிகாரிகளை காட்ட வேண்டிய அவசியம் ராஜீவ் சர்மாவுக்கு ஏன் வந்தது?

கொலை வழக்கு விசாரணையின்போது சிபிஐ இயக்குனராக இருந்த விஜயகரன் இந்தப் புத்தகத்திற்கு எப்படி முன்னுரை எழுதினார்?

சிபிஐக்கும், ராஜீவ் சர்மாவுக்கும் இடையேயான தொடர்பு என்ன?

தமிழகப் பத்திரிக்கையாளர்களை அம்பலப்படுத்தியதுபோல், இந்த ‘யோக்கிய சிகாமணி’ ராஜீவ் சர்மாவையும் தோலுரித்துக் காட்ட வேண்டிய‌ அவசியம் தோழர் சவுக்குக்கு இருக்கிறது.

தமிழினத்திற்கோ, தமிழர்களுக்கோ பயனளிக்கும் வகையில் – ஒரு குண்டுமணி அளவிற்குக்கூட புதிய செய்தியைக் கொண்டுவராத இந்தப் புத்தகம் யாருக்குப் பயன்படப் போகிறது? சோ.ராமசாமி, வாசந்தி, அ.மார்க்ஸ், ஜெயமோகன் கும்பலுக்குத்தான்.. இந்திய வல்லாதிக்கத்தின் குரலை ஊடகங்களில் பரப்பிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு லட்டு மாதிரியான செய்திகள் இதில் இருக்கின்றன. அவர்கள் அடுத்து எழுதும் கட்டுரைகளின் பின்னிணைப்புகளில் 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி, சவுக்கு வெளியீடு’ என்பதும் இடம்பெற்றால் அதற்கு யாரும் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. அதற்கான முழுத்தகுதியும் இப்புத்தகத்திற்கு உள்ளது.
கீற்று நந்தன்editor@keetru.com)
நன்றி கீற்று இணையதளம்
 

Comments  

 
+1 #77 TVS ARUL 2011-06-28 16:52
இன்று வரை சவுக்கின் நிலையை அறிய முடியவில்லை. சவுக்கு தன்னிலை விளக்கம் அளித்தாலும் தவறு தவறுதான். ஆகவே இந்த புத்தகத்திற்கான ஆதரவை சவுக்கு மீளப்பெற வேண்டும்.

மேலும் இத்தளத்தை அணுகும் போது, பார்ப்பனிய தினமலர் வாடை வருவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் அறிந்து சரி செய்து கொள்ளவும்.
Quote
 
 
+1 #76 Sakthivel_tup 2011-06-25 16:11
இங்கு இருக்கும் சில மொக்கைகள் மற்றும் கண்ணியமற்ற வார்த்தையை பிரயோகித்திருக் கும் (பின்னூட்டம் 69) அய்யர் நாயிக்கும் அந்த பதிவை அனுமதித்திருக்க ும் சவுக்குவிற்கும் :

http://vijayarmstrongcinematographer.blogspot.com/2011/06/blog-post.html#comment-form

இந்த ஒளிப்பதிவாளர் நீங்கள் சொல்லுவதைப்போல கனினி முன்பு அமர்ந்து வெட்டி பொழுது போக்குபவர் அல்ல.

முட்டாள் தனமாக, கண்ணைமூடிக்கொண் டு தொடர்ந்து சவுக்கை பின்னூட்டங்களில ் ஆதரிப்பவரும் அல்ல.

சாதாரண தளத்திலிருந்து, ஒரு வெகுஜன மனிதராக, இந்த்த புத்தகத்தைக்குற ித்து அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள ுக்கு, சவுக்கின் மற்றும் அவரின் சில்வண்டு ரசிக கூட்டத்தின் பதில் என்ன?
Quote
 
 
+1 #75 Anand 2011-06-19 14:13
இந்த புத்தகத்தை படித்ததும் எனக்கு தோன்றியது இது தான். ஒன்று சவுக்கு ஏமாந்திருக்க வேண்டும் அல்லது சவுக்கு அவர்கள் கூட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். எனக்கு இரண்டு இழப்புகள். ஒன்று, என்னுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு புத்தக வெளயீட்டு விழாவுக்கு சென்றது, இரண்டாவது ௨௨௦ ருபாய் செலவளித்தது. புத்தக ஆசிரியர் ஆனந்தராஜை பார்பதற்கு சிங்களவனை போலவே இருக்கிறார். புத்தகம் அதனை உறுதி செய்து விட்டது. என்ன ஒரு கருங்காலித்தனம் .
Quote
 
 
-3 #74 இளங்கோவன் 2011-06-18 19:47
அன்பு சவுக்கு,
தமிழ் கூறும் அறிவுலகுக்கு தாங்கள் அளித்த கொடையான 'விடுதலைப்புலிகள ுக்கு அப்பால்' படித்து முடித்த கையோடு இதை எழுதுகிறேன்.
வீண் மன உளைச்சல்கள் உங்களைப்பீடித்த ிருப்பதாக அறிகிறேன்.
இப்புத்தகம் தமிழகத்திற்கு தேவையான காலத்தில் வந்திருக்கிறது. ஒருபோதும் பின்னூட்டக் கூச்சல்களால் நீங்கள் மனச்சோர்வு அடையத்தேவையில்ல ை.
தமிழ்ச்சூழல் மிக மோசமானது. விடுதலைப்புலிகள ை ஆதரிப்பது என்பது திரையரங்கில் விசிலடிப்பது போல மலினமானது.
இது குறித்து விரிவான அறிவுப்பூர்வ விவாதம் இப்போதைக்கு இங்கு வாய்ப்பில்லை.
ராசீவ் படுகொலை மீதான வெளிச்சம் பாயச்சும் வேலையை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இப்புத்தகம் ஆற்றுகிறது.
இந்தியா முழுமைக்கும் விடுதலைப்புலிகள ுக்கு அரசியல் ரீதியான அடையாளம் இல்லாமல் பயங்கரவாத முத்திரையே குத்தப்பட்ட நிலையில் ராஜீவ் சர்மா புலிகளை நேரடியாக ஆதரிப்பார் என்று எதிர்பார்ப்பதே தமிழ் அறிவுலகின் அவலமாக உள்ளது.
விரிவும் செறிவும் மிக்க விவாதங்களை சவுக்கு இந்தப்புத்தகத்த ின் வழியாகத் துவக்கியிருக்கி றது என்றே நான் நினைக்கிறேன். எதிர்வினையாய் வரும் வசவுகளைக் கருத்திலெடுக்கத ் தேவையில்லை.
அதேபோல பாரப்பன முத்திரைக்கும் கவலைப்படத்தேவைய ில்லை.
தலைவர் பிரபாகரன் சொன்னதைப்போல நாம் அல்ல நம் செயல்கள்தான் நம்மைப்பற்றி பேசவேண்டும்.
சவுக்கின் 'விடுதலைப்புலிகள ுக்கு அப்பால்' நூல் நிச்சயம் சவுக்குக்குப் பெருமையானதுதான் .
விரிவாகப்பேசுவோ ம்.
இளங்கோவன்
பொள்ளாச்சி
Quote
 
 
+1 #73 Zertic 2011-06-17 22:56
I read your article related to ragiv Gandhi assassination, actually before reading your article i was thought LT TE only killed Rajiv Gandhi(i dint know about IPKF force also).And two days before when i was searching about these issues in you tube i found one malayalam movie MISSION 90 Days-RAGIV GANDHI ASSASSINATION, these malayalees always against us . This movie full of against LT TE and srilankan Tamils. So i request you to watch this movie and write something in your website.
Quote
 
 
+2 #72 k.haridas 2011-06-15 11:17
சவுக்கின் [நேர்மை] மீது எனக்கு சில காலமாகவே சந்தேகம் இருந்தது. அது இன்று வெளிப்பட்டிருக் கிறது. அதற்ககாக் என்னை நானே மெச்சிக்கொன்டேன ்.
Quote
 
 
+3 #71 Sakthivel_tup 2011-06-14 02:43
[ஃஉஒடெ நமெ="ப.ஏஅகலைவன்"]வெளியிடுவதற்கு ஒரு வாரம் முன்பாகவே இந்த புத்தகத்தை படித்து முடித்தேன். கீற்றுவின் கருத்து சரியானதே. என்ன நோக்கத்தோடு இதை கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. சி.பி.ஐ, மத்திய புலணாய்வு அமைப்பான ஐ.பி,, வெளிவிவகார உளவு அமைப்பான ரா மற்றும் கப்பல் படை தலைமையகம் ஆகியவை ‘தயாரித்து’ வைத்திருந்த ஆவணங்களை தொகுத்து இந்த புத்தகம்...பிறகு எப்படி இருக்கும்.? 90- வரையிலும் புலிகள் ஆயுதங்களுக்கு கஸ்டப்பட்டுகொண் டிருந்தார்களாம் . காரணம் இந்திய அமைதிப்படைக்கு எதிராக சண்டையிட்டது. 91- ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு கப்பல் கப்பலாக ஆயுதம் வந்தது எப்படி. கூலிக்காக கொலைசெய்தார்கள் . அதற்காக ஆயதத்தை பெற்றார்கள் என போகிறது அந்த புத்தகம். அதாவது ‘தயாரித்து’ வைத்த ஆவணணங்களின் படி எழுதியுள்ளார். பிறகு வேறு வேறு நாடுகளில் இருந்த கே.பி. ராஜீவ் படுகொலைக்கு பிறகு பாகிஸ்தானிலேயே உட்கார்ந்துகொண் டு ஐ.எஸ். ஐ யோடு சேர்ந்துகொண்டு போதை மருந்து மற்றும் ஆயுதங்களை, இயக்கத்திற்காக கடத்தினாராம்.. ஒரு கட்டத்தில் போதை மருந்துகள் கடத்தியே ஆயுதங்களை வாங்கினார்கள் என்று போகிறது..பிறகு மக்களை மிரட்டி வசூல் செய்தார்கள் என்கிறது ‘அவணங்கள்’.[/ஃஉஒடெ]

வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த புத்தகத்தை படித்தீர்களானால ், இந்த புத்தகத்தின் அபாயங்களை சவுக்கு சங்கரிடம் சொன்னீர்களா?
Quote
 
 
-3 #70 RabaSha 2011-06-14 01:06
சவுக்கு வாசகர்களே, நடுநிலமை என்பது உங்களுக்கு ஏற்ற, உங்கள் கருத்துக்கொப்ப செய்தி மட்டுமல்ல. இருப்பதை இருந்தவாரே எழுதுவதுதான். இவ்வாறு செய்யும்போது பல சமயம் நமக்கு ஒப்பில்லாத கருத்துகளும் படிக்க நேரிடும். அதற்காக சவுக்கை குறை கூறுவது தவறு. He has been quite open on his intentions with us so far. And he is doing a commendable job in bringing the evils out to public view. Please continue to support him. Savukku, please continue your good job. Cheers!
Quote
 
 
-3 #69 Iyer 2011-06-13 17:38
Keetru is a terrorist.. He has to be put behind bars, all his allegations are baseless.

Rizvan, you are also a terrorist, you have no right to speak about Cho or Subramanya swamy.. you are a distilled asshole.
Quote
 
 
-2 #68 வழிபோக்கன் 2011-06-13 17:00
பொதுவாக தமிழ்ச் சமூகத்தில் வீர வசனம் பேசும் கதாநாயகர்களுக்க ுத்தான் வரவேற்பும் ஆதரவும் அதிகம், அந்த வகையில் ஈழப் பிரச்சனையில் புதுப்புது கதாநாயகர்கள் உருவாகித் தங்கள் படத்தை நீண்ட நாட்களுக்கு ஓடவைத்து அதில் வசூல்வேட்டையும் நடத்தப் பார்க்கிறார்கள் . இவர்களுக்கு உண்மையிலேயே சாதாராண அப்பாவி மக்கள் ஒருவேளை சோற்றுக்குக்கூட கதி இல்லாமல் இருப்பதைப் பற்றி எந்த ஆவேசமும் வராது. ஆனால் இவர்களிடம் எதைக் கேட்டாலும் இனம், மொழி, நாடு என்ற அந்நிய மொழியில் பேசி தங்களை மறைத்துக்கொள்ளப ் பார்க்கிறார்கள் . நமது கவலை எல்லாம் தமிழகமானாலும் சரி, ஈழமானாலும் சரி சராசரி மனிதன் கவுரவமான வாழ்வை வாழ வேண்டும் என்பதே. அந்த வகையில் போராளி குழுக்களானாலும் , அரசாளும் பொரிக்கிகளானாலு ம் பாதிப்பு உண்மையாக சாதாரண மக்களுக்குத்தான ். முதலில் அதைப்பற்றிப் பேசுவோம். கீற்று போன்ற பட்டும் படாமலும் பயந்தாங்கொள்ளித ்தனமாக, மேம்போக்காக, ஒருசாராரை உசுப்பிவிட்டு சவுக்குக்கு எதிராகக் கிளப்பிவிட்டு அந்தத் தீயில் குளிர் காய்ந்து தனது வலைதளத்தை பொறம்போக்கு டி.வி சானல்கள் போல் ரேடிங்கில் முதலிடத்தில் கொண்டு வர எத்தணிக்கும் நரித் தந்திரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்தில் மிக நுட்பமாக மக்களுக்கு அந்நியப்பட்ட, மக்களுக்கு கொஞ்சமும் அறியப்படாத பல உலகங்களைப்பற்றி ய பல்வேறு தகவல்கள் இருக்கின்றன. முதலில் மக்கள் (மக்கள் என்றால் வெற்று வாய்ச் சவடால்களை தினம்தோறும் கணிணி முன்பு அமர்ந்துகொண்டு வடிவேலு போல் நானும் ரவுடி நானும் ரவுடி என்று சொல்லி மார்தட்டிக் கொள்ளும் குழுவை அல்ல) சாதாரண மொழியில் எந்த அரசியல் சார்பும் இல்லாத வெளியீடான இதைப் படித்துப் பார்த்து அவர்கள் நடுநிலையான கேள்விகளை சவுக்கு வலைதளத்தில் எழுப்பட்டும். இந்த ஆயாராம், கயாராம்களுக்கு எல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. கீற்று போன்ற சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சந்தர்ப்பவாதிகள ுக்கு இந்த விவாதத்தில் இடம் தராமல் இருப்பது ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல வழிவகை செய்யும்.
Quote
 
 
+4 #67 anniyan 2011-06-13 03:42
Quoting Gayathri Iyer:
என்னதான் இரூந்தலும் ரஜிவ் காந்தியை கொன்ட்ட்ரது தவருதனாஎ

அம்மா காயத்ரி ஐயர்,
நம்மைப் போன்றோர் ஒரு காலத்தில் தைரியமாக உண்மை பேசிக் கொண்டிருந்தனர். வார்ரன் ஹெஸ்டிங்க்ஸ் பிரபுவுக்கு பிராமணர்களையும் , துறவிகளையும் கண்டாலே ஆகாது. அவர் பிரிட்டிஷ் மகாராணிக்கு எழுதிய கடிதத்தில் 'இந்த மந்திரப் பக்கிரிகூட்டம் நாம் வரியாக வாங்கும் தானிய மூட்டைகளை கொள்ளையடித்து விடுகிறது. இந்த மூவாயிரம் பேர் அடங்கிய கும்பல் வங்காள நவாப் அனுப்பிய வீரர்களையும், தலைமை தாங்கிய நம் கேப்டன் தாமஸ்ஐயும் கொன்றுவிட்டு வண்டிகளோடு தானியங்களைக் கொன்றுவிட்டது' என்று எழுதுகிறார். சம்பல் கொள்ளையர்களில் வெள்ளைக்காரர்கள ைக் கொன்றுவிட்டு ஓடிய பிராமணர்கள் பலருண்டு.

ஆனால் கொடுமை என்னவென்றால் இப்போது இந்த பிராமணர்கள்தான் 'தி ஹிந்து' போன்ற தேசத்துரோகி நாளிதழ்களைப் படித்து புத்தி பேதலித்து இருகின்றனர். இவர்களுக்கு யார் எதிரி, யார் நண்பன் என்றே தெரிவதில்லை. சோ, சுப்ரமணியம் சுவாமி போன்றோர்கள் நேர்மையானவர்கள் தாம். ஆனால் அவர்கள் தி ஹிந்து போன்ற நாளேடுகளின் பொய்யான பிரசார செய்திகளைப் படித்து , விடுதலைப்புலிகள ் நமக்கு எதிரி என்று நினைத்துக் கொண்டு இருகின்றனர்.
{contd..]
Quote
 
 
+12 #66 anniyan 2011-06-13 03:41
[continuation...]
நாயகன் படத்தில் 'வாப்பாவை' கொன்ற இன்ஸ்பெக்டரை, 'வேலு நாயக்கன்' கமல்ஹாசன் கொல்கிறார். நாமெல்லாம் கைதட்டினோம். அந்த இன்ஸ்பெக்டர் போல ஆயிரம் மடங்கு கெடுதல்களைச் செய்தவர் ராஜீவ் காந்தி. அவரின் பிடிவாதமான செய்கையால் ஆயிரக்கணக்கில் நம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட னர். "ஒரு பெண் தன் தாயிடம் அழுது கொண்டே ஓடினாள்.. அவள் "தாயும்" அழுதுகொண்டிருந் தாள்" ..

உலகத்தின் பெரிய வன்புணர்வு விபச்சார விடுதியின் சொந்தக்காரர்தான ் ராஜீவ் காந்தி. கோமகன் ராஜீவ் மரணம் மிக நியாயமானது. கொன்றவர்கள் நிஜ ஹீரோ, ஹீரோயின்கள் .

உங்கள் தந்தையார் காலையில் மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு காபி குடித்துக்கொண்ட ே'தி ஹிந்து' பேப்பர் படிக்கக் கூடும். அவரிடம் சொல்லுங்கள், அது தேசத் துரோகப் பத்திரிக்கை. நேற்றுக்கூட கடவுளர்களை நிர்வாணமாக வரைந்த எம். எப். ஹுசைனுக்கு பெரிய பாராட்டு நினைவேந்தல் செய்திருந்தார்க ள். இந்தியாவின் மிகப்பெரிய துன்ப நிகழ்வாம் ஹுசைன் இந்தியாவில் இல்லாமல் போனது!!. "தி ஹிந்து" நம்மை வில்லனுக்குக் கைதட்டும் முட்டாள்கள் ஆக்கிவிடும் என்று. அவரிடம் சொல்லுங்கள் "நாம் தமிழர்".
Quote
 
 
+11 #65 tamilindian 2011-06-12 16:54
[ஃஉஒடெ நமெ="கயத்ரி ஈயெர்"]என்னதான் இரூந்தலும் ரஜிவ் காந்தியை கொன்ட்ட்ரது தவருதனாஎ[/ஃஉஒடெ]


ராஜீவ் காந்தியை கொன்றது தவறல்ல, ராஜீவ் செய்த கொடுஞ்செயலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையே. ராஜீவ் அனுப்பிய அமைதிப்படை ஆயிரக்கணக்கான அப்பாவி ஈழ மக்களை கொன்று குவித்தார்கள். அதற்க்கான தண்டனை தான் ராஜீவ் மரணம். அது கூட புலிகள் தான் செய்தார்கள் என்று யாரும் நிருபிக்க வில்லை. வேறு குழுவை செந்த ஈழ தமிழனாகவும் இருக்கலாம், அமைதிப்படையால் பாதிக்க பட்டவராகவும் இருக்கலாம். எவ்வாறாயினும் அது குறைந்தபட்ச தண்டனையே. இரட்டை கோபுரத்தை தகர்த்த ஒசாமாவை அமெரிக்கா கொன்றது சரியென்றால் ராஜீவ் மரணமும் சரியே. புலிகளை பயங்கரவாதிகள் என்பதே தவறு. இறுதி யுத்தத்தின் பொது கூட காட்டுப்பாட்டுட ன் இருந்தனர். அவர்களால் முடிந்தும் கொழும்பில் ஒரு கரும்புலி தாக்குதல் கூட நடத்தவில்லை, சிங்கள பொது மக்கள் மீது அவர்கள் கோபத்தை காட்டவில்லை. சில ஆயிரம் வீரர்களை மட்டுமே வைத்திருந்தாலும ் அவர்கள் மரபு வழி போரிலேயே ஈடுபட்டனர். போர்க்கைதிகளை மரியாதையுடன் நடத்தினார்கள், பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டார்கள். அவர்கள் போராளிகள் லட்சியவாதிகள் அவர்கள் தங்கள் தாய் நிலத்தை மீட்பதில் மட்டுமே உறுதியாக இருந்தனர், அதற்க்கு தடையாய் இருந்த எதிரிகளையும் துரோகிகளையும் மட்டும் அழித்தனர். கண்ணியம் கட்டுப்பாடுடன் விடுதலை இயக்கத்தை நடத்தி உலகத்தை வியக்க வைத்த மாவீரர்கள் அவர்கள்.
Quote
 
 
+8 #64 tamilindian 2011-06-12 16:24
நண்பர்களே சவுக்கை கேள்வி கேட்க நமக்கு உரிமையுண்டு அனால் அவர் மனம் புண்படும் படி விமர்சிப்பது நியாயமா? அவர் செய்ததில் உள்ள தவறை அவரே பதிவாக வெளியிட்டு விட்டார். அதன் காரணத்தையும் சொல்லிவிட்டார். அனால் சவுக்கை விமர்சிக்க வெறும் கணினி முன்பு அமர்ந்து செய்திகளை மட்டும் படிக்கும் நமக்கு தகுதியில்லை. இப்படி உணர்ச்சிவசப்பட் டு விமர்சிப்பது நல்லதல்ல. நல்லவர்களையும் மனம் வெறுக்க வைத்துவிடும். சட்டென்று புறக்கணிப்பதும் சில கால இடைவெளியில் மீண்டும் தலையில் வைத்து கொண்டாடுவதும் நம் தமிழர்களின் பிறவி குணமாக இருக்கிறது. இந்த குணத்தை தமிழக தேர்தல் வரலாற்றை பார்த்தே புரிந்து கொள்ளலாம். அரசியல் வாதிகள் மட்டும் திருந்தி ஒன்றும் ஆக போவதில்லை, மக்களும் திருந்தினால் தான் தமிழகம் உருப்படும்...
Quote
 
 
-1 #63 manikumar 2011-06-12 15:44
என்னுடைய கருத்துப்படி சவுக்கின் வளர்ச்சியில் கீற்று பொறாமை படுவதாகவே தோன்றுகிறது....அதனால் தான் கீற்று கட்டுரை புத்தகத்திகல் உள்ள நல்ல அம்சங்களை விட்டு விட்டு , புலிகளை விமர்சிக்கும் இடங்களை மட்டும் எடுத்து , விமர்சித்து மக்களை குழப்ப முயல்கிறது...ஆனால் மக்கள் தெளிவாகத்தான் உள்ளார்கள்...இந்த வெற்று கோஷங்களை தூக்கி எறிந்து விட்டு , நடு நிலையுடன் இப்புத்தகத்தை படிக்கவும்...
Quote
 
 
-3 #62 Yokaratnam 2011-06-12 15:43
இந்த புத்தகத்தை நான் முழுமையாக படித்து முடித்து விட்டேன். கீற்று.கொம் வெளிப்படுத்தியு ள்ள கருத்துக்கும் , இப்புத்தகம் வெளிப்படுத்தும் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. புத்தகம் அனைத்து தரப்பின் தவறுகளையும் , சரிகளையும் தான் ஆராய்கிறது . ஆனால் கீற்று , இப்புத்தகம் புலிகளை குற்றம் சாட்டுகிறது என மட்டுமே சரியான புரிதல் இன்றி உளறுகிறது. இதில் நிச்சயமாக ஏதோ அரசியல் காரணம் உள்ளது. ராஜிவ் கொலையில் புலிகள் வெறும் அம்புகளே , ஆனால் இந்த சர்வதேச சதிக்கு பின்னால் உள்ள உலகளவிலான நபர்கள் சரியாக விசாரிக்கப்படவி ல்லை என இப்புத்தகம் பேசுகிறது. அவர்களில் முதலமைச்சர்கள், பிரதமர்கள், உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைகள் , அதில் அவர்களின் வாக்குமூலங்கள் , அதில் அவர்களின் பொய்கள், முறையாக விசாரணை செய்யப்படாதது, ஜெயின் கமிஷனுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், தெளிவான வாக்குமூலங்கள் இருந்தும் அடுத்த கட்டத்திற்கு நகராதது ....என பல்வேறு விவரங்களுடன் இப்புத்தகம் ஒரு சார்பின்றித்தான ் இருக்கிறது. கார்த்திகேயன் புத்தகத்திலிருந ்து வெகு தொலைவில் உள்ளது இப்புத்தகம்....ரகோத்தமன் புத்தகத்தை விட ஏராளமான தகவல்களை இது வாசிப்பவருக்கு அளிக்கிறது.எந்த இடத்திலும் புலிகள் மட்டுமே காரணம் என பேசவில்லை.ராஜிவ் கொலையில் அவர்களின் பங்கு மிக சிறியதே. ஆனால் உலகின் பங்கு??? ஆனால் சிலர் ராஜிவ் கொலையில் , புலிகள் இல்லைவே இல்லை என வெட்டிவாதம் செய்கின்றனர்...அதை பொதுச்சமுதாயம் எப்பொழுதுமே நம்பியதே இல்லை ...ஏற்றுக்கொண்டதும ் இல்லை....புலிகள் செய்த மாபெரும் பிழை...ஆனால் மற்றவர்களின் பங்கு ??? அது முறையாக விசாரணை செய்யப்படவேண்டு ம் என்றுதான் இப்புத்தகம் பேசுகிறது....தெளிவான நடை...நல்ல மொழிபெயர்ப்பு...பேச்புக்கில் மனுஷ்யபுத்திரன் இப்புத்தகத்தை குறித்து எழுதியுள்ள கட்டுரையை படிக்கவும்...அது கீற்று போல ஒரு பக்க சார்பில் , மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன் , அர்த்தமில்லாமல் எழுதாமல் , நடு நிலையுடன் ஆராய்கிறது. வாசகர்கள் படிக்கவும்...
Quote
 
 
+2 #61 Rachel 2011-06-12 13:29
வரலாறு தெரியுமா கும்பு- சாமி.

பிரபாகரனை கூப்பிடடு ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட மிரட்டி டில்லியில் வீட்டூக்காவலில் வைத்து கொடுமைபடுத்தினா ர் ராஜிவ். அதனாலேயே கொல்லப்பட்டார் ராஜிவ்.
Quote
 
 
-5 #60 MDMK 2011-06-12 13:04
சவுக்கு ஆரம்பத்திலேய நீ ஒரு முட்டாள் என்று தெரிந்தது மகிழ்ச்சி. ஜெயமோகன் மனுஷ்யபுத்திரன் ரவிகுமார் சாரு நிவேதிதா லிஸ்டில் உள்ளவன் நீ.தேசியத்தலைவர் படத்தை முகப்பில் இருந்து நீக்கு.இதுக்கும் எதாவது சால்சாப்பு சொல்ல முற்படாதே உன்னை பார்ப்பன கைக்கூலி என முன்பே சந்தேகித்தேன். விகடனை குறை கூறும் தகுதி உனக்கு இருக்கிறதா?வாசகர்களுக்கு துரோகம் செய்தவன் நீ.
100 % உன்மை ..
Quote
 
 
-10 #59 Gayathri Iyer 2011-06-12 11:52
என்னதான் இரூந்தலும் ரஜிவ் காந்தியை கொன்ட்ட்ரது தவருதனாஎ
Quote
 
 
+6 #58 shankar kumar 2011-06-12 10:54
நானும் இந்த புத்தகத்தை படித்தேன்.ஒன்ட்ருக்கு இரன்டு வாங்கினேன்.I think the main motive of this book is to destroy ur good opinion about LTTE.This book never support's tamil thesiyam...what is the use of this book....Don't buy it...If any one want this book i will give my copy..Don't waste ur money...And for savukku am not expecting these kind of waste books from u...
Quote
 
 
+4 #57 புலிப்பாணி சித்தர் 2011-06-12 00:39
எம தமிழ் இனத் பிரபாரகரரை பற்றி விமர்சிக்க எவருக்கும் தகுதி இல்லை ..,!!

ராமன் இறைவனே ஆனாலும் வாலியை மறைந்து இருந்துதான் தாக்கியாக வேண்டும் !!

கிருஷ்ணன் இறைவனே ஆனாலும் வஞ்சகம் செயிதுதான் பாரதம் வேன்று எடுத்தாக வேண்டும் !!
Quote
 
 
-2 #56 aha 2011-06-12 00:28
I strongly condemn the statements made by the author.I am surprised to see he says, if some leader oppose reservation that legitimizes assassination. Remarks of Kashmir terrorists and Maoists are highly condemn-able.If you talk of guilt of the Govt,any Govt with proof we will support.But if you go in the way of anti nationalism,ant i Brahmin,anti Hindu agenda like Karunanidhi we will strongly oppose it.
Quote
 
 
-3 #55 புலிப்பாணி சித்தர் 2011-06-12 00:09
"பிரபாகரன் ஒசாமா இருவருமே ஓன்று தான். தோழரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்". --குட்டி சவுக்கு

யோவ் ...,!! குட்டி சவுக்கு நீர் மனிதனா ?? உன் சுவாசம் கூட பிணத்தின் நாற்றமடா ...,!!! ராஜபக்ஷேவைவின் பெயரைவிட உன் பெயர் கொடியதடா ...!!!
Quote
 
 
-4 #54 Rizwan 2011-06-11 20:52
சுப்பிரமணியசாமி சவுக்கில் விமர்சிக்கபடுவத ில்லை, புலி எதிர்பாளர் சோ விமர்சிக்கபடுவத ிலை, தினமலர் விமர்சிக்கபடுவத ில்லை, ஆர்.எஸ்.எஸ் விமர்சிக்கபடுவத ில்லை இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை பூனூலை தவிர வேறு என்ன இருக்க முடியும்

Now We Know Why you are alaways belam ஜாபர் சேட்

You too? unbelivable
Quote
 
 
+2 #53 periyar 2011-06-11 19:53
முதலில் சவுக்கு நிறைய புத்த்கங்கள் படிக்கவேண்டும் அதன் பிறகு புத்தகம் வெளியிடும் வேலை பார்க்கலாம். படிக்கவேண்டிய புத்தகம் ஈழம் - இந்திய உளவு நிருவனங்களின் சதி - ஆசிரியர் தோழர் விடுதலை ராசேந்திரன்

முதலில் பிரபாகரன் படத்தை எடுக்கவும்- முடியல?
Quote
 
 
-22 #52 குட்டி சவுக்கு 2011-06-11 19:06
நேர்மை,துணிவு ,தெளிவு, தெளிவு தெளிவு என்றால் சவுக்கு தான் உங்கள் புத்தகம் உண்மைகளை அப்படியே பேசுகிறது. இந்த தமிழ்தேசிய போலிகளை கண்டு பயப்படாதீர்கள் சவுக்கு.நீங்கள் விக்கிலீக்ஸ் போல தெளிவாக பணிசெய்யுங்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் .பிரபாகரன் ஒசாமா இருவருமே ஓன்று தான். தோழரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Quote
 
 
-16 #51 indian2011 2011-06-11 18:14
useless buggers. Rajapakse avlo periya aaapu vechane. Innum neenga thirundhalayada . LTTE is a terrorist organization. This is the truth.
Quote
 
 
+3 #50 jaya 2011-06-11 17:11
I feel that the opponenets statements are somewhat true. The LTTE may not indulge in this murder. May be some people have done with the help of chandra swamy subramanian swamy and premadasa and mosad. So The comments against savukku should be with drawn.
Quote
 
 
+5 #49 harichchanran 2011-06-11 17:08
சவுக்கு தளம் பால்க்குடமா இருந்தது கண்டு பூரிச்ச நான். இன்னிக்கு பல்லி விழுந்த் பால் குடிக்கவேனாம்ன் னு குழந்தைகளை தடுத்திட்டன்
Quote
 
 
+16 #48 பாரதி 2011-06-11 16:47
46வது. பின்னூட்டத்தில் இளிச்சவாயன் என்ற நண்பர் எழுதிய கருத்து. சவுக்குக்கு பொருந்துவது போலவே படுகிறது. இதுவரை சுய விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.
1, சவுக்கு விடுதலைப்புலிகள ுக்கு அப்பால். புத்தகத்தை படிக்கவில்லை என்று எண்ணத்தோன்றுகிற து,

2, அல்லது மெல்ல மெல்ல மக்களை ஈர்த்து. ஜனக்கூட்டம் கூடியதும் நஞ்சுக்குண்டை வீசியிருக்கிறது .

விடுதலைப்புலிகள ் ஏன் உருவானார்கள் என்பதை ஆராயாமல். விடுதலைப்புலிகள ை சமூக விரோதிகள் என்று சித்தரிப்பதற்கு இன்று நேற்றல்ல நீண்ட நாளாக பல சக்திகள் போட்டி போட்டு வேலை செய்கின்றன.
விடுதலைப்புலிகள ும் தேசியத்தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. அப்பளுக்கற்ற சூரியன் கூட வெய்யில் காலங்களில் விமர்சிக்கப்பட் ட ஒன்றுதான்.
சூரியன் விமர்சனத்துக்கு ள்ளாவதைவிட சூரியனை விமர்சித்தவர்கள ் அப்போதைக்கு தப்பினாலும் பின் அவர்கள் புறக்கணிக்கப்பட ுவார்கள் தீண்டதகாதவர்களக ஒதுக்கப்படுவார் கள் என்பதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு.

இங்கு குறிப்பிடும் கருத்து வெட்கக்கேடானது என்றாலும் நிறைய உண்மை இருப்பதால் தெரியப்படுத்துக ிறேன் விடுதலைப்புலிகள ின் நீண்ட வரலாற்றில் நிறைய குறுக்கீடுகள் செய்து அழிப்பதற்கு பாடுபட்ட பெருமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் உண்டு. அந்த சேர்த்தியில் சவுக்கு இணைந்துகொண்டது அதிர்ச்சி அதிசயமில்லை. என்றாலும் நம்பவைத்து கழுத்தறுக்கும் துரோகம் அருவருப்பாக வலிக்கிறது. சிலவருடங்களுக்க ு முன்புவரை திருமாவளவன். வைத்தியர் ராமதாஸ். சுபவீரபாண்டியன் . ஜெகத் கஸ்ப.ர் இறுதியாக சவுக்கு, இந்தப்பட்டியல் தொடரத்தான் செய்யும் இருந்தும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் மீண்டும் தர்மம் தான் வெல்லும் என்று நம்புவோம்.
Quote
 
 
-12 #47 நானும் தமிழன் தான் 2011-06-11 14:35
சவுக்கின் நிலைபாட்டை நான் ஆதரிக்கிறென். தமிழ் நாட்டில் ஈழ பிரச்சினைப்பற்ற ி பேசுபவர்கள் அனைவரும் புலி ஆதரவாளராகத்தான் இருக்க வேண்டும் என நினைப்பது எவ்வகையிலும் சரியானதாக இருக்காது. இராஜிவ் மரணம் சம்பந்தமாக ஒரு சரியான நிலைப்பாடு தோழர் சவுக்கிற்கு இருக்கும் என நான் நினைக்கிறென். இந்த புத்தகத்தால் உடனே சவுக்கை தமிழின துரோகியாக்கி பேசுவது சரியல்ல.. இந்த விவாதத்தை இந்த நிலையில் நிறுத்துவது சரியாகும்...
Quote
 
 
+15 #46 இளிச்சவாயன் 2011-06-11 14:34
நன்றி சவுக்கு,
உங்கள் புளுகு மூட்டை ஸ்பாட்டை இத்துடன் மூட்டை கட்டிக்கொள்ளவும ்.இதில் வரும் அனைத்து செய்திகளுமே ஒரு விதத்தில் உங்கள் சுயநலம் சார்ந்ததாகவே இருப்பதை நான் வெகுகாலமாகவே கவனித்து வருகிறேன்.இதோ இந்த மழையில் உங்கள் சாயம் வெளுத்துவிட்டது .உங்களை தொடர்ந்ததற்காக நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறே ன்.உங்களுக்கு ஆகாதவர் என்றால் அவரைப்பற்றிய செய்தி உடனடியாக வந்துவிடும் உங்கள் தளத்தில் மேற்கண்ட செய்திக்காக இதுவரை ஒரு பதிலுமே இல்லையே ஏன்?யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை.நல்லவ மாதிரி நடிக்கறதுக்கு பதிலா நான் தேவுடியாதான்னு ஊரறிய ஒத்துக்கறதுதான் நல்ல பிறப்புக்கு அழகு.சவுக்குக்கு நான் அநானியாகவே இருந்துவிட்டு போகிறேன், ஏன் என்றால் தமிழன் என்றாலே இளிச்சவாயன் என்று தானே அர்த்தம்.தொடருங்கள் உங்கள் சமூக சேவையை ஆனால் என் கண்ணில் மட்டும் பட்டுவிடாதீர்கள ்.
Quote
 
 
-1 #45 சாட்டைக்குச்சி 2011-06-11 12:25
[ஃஉஒடெ நமெ="புரவி"]//வழவழவென்று எழுதாமல் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். "இந்திரா காந்தியை கொன்ற ஒரு இனத்தில் இருந்து ஒருவர் 10
ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆள்கிறார்// .

அவர் இனத்தில் ஒருவர் ஆள்வது இரண்டாவது கதை. இந்திரா வை கொன்ற பெஅன்ட் சிங்ஹ் ஹை தியகி என்ட்ரு பொற்கோவிலில் வைத்துள்ளனர்.
நாம் எப்போது நம் தனு அக்காவுக்கு சிலை அமைக்க போகிறோம்?.

நாம் இந்திய ஏகதிபத்யதில் இருந்து விடுதலி பெற்று இறையாண்மை உள்ள தமிழ் தேசியத்தை அமைக்க முன் வர வேண்டும்.[/ஃஉஒடெ]
------------------------------
இந்திராகாந்தியை ஒரு இந்தியந்தான் கொன்றான்,அதுவும ் மெய்க்காப்பாளன் .ஆனார் ராஜீவ்காந்தியை ஒரு வெளினாட்டுக்கார ி கொன்றாள்!(அதாவத ு இந்திய எதிர்ப்புணர்வு காரணமாக(சமூக அமைப்பு),ராஜீவ் எதிர்ப்புணர்வு காரணமாக அல்ல)!.
Quote
 
 
-9 #44 சாட்டைக்குச்சி 2011-06-11 12:04
[ஃஉஒடெ நமெ="குமார்"]தயவு செய்து பிரபாகரன் படத்தை நீக்கிவிடுங்கள் . உங்கள் வியாபாரத்திர்க் கு பிரபாகரன் படம் வேண்டுமா.. மற்றவர்களை புண்படுத்தாதீர் கள்..[/ஃஉஒடெ]
--------------------------------
யோவ் குமார்.. உண்மையை சொன்னால் ஏன்ய்யா எரியுது உனக்கு...?
Quote
 
 
+4 #43 suryan 2011-06-11 11:28
சவுக்கு இன்னமும் எப்படி பதில் எழுதுவது என்ட்ரு சிந்தனையில் இருக்கிறார் என்ட்ரு நம்புவஒமாக!
Quote
 
 
+7 #42 che 2011-06-11 11:11
சவுக்கின் பதிலை எதிர்பார்கிறோம் .இந்த விசயத்தில் மட்டுமல்ல. தமிழின எதிர்பாளர்களான தினமலர்,சோ,சுப் பிரமணியசாமி ஆகியோர் விமர்சிக்கபடாதத ற்க்கும் பதிலை எதிர்பார்க்கிரோ ம். பார்பனியத்தை எதிக்காமல் வெறுமனே ஊழலை எதிர்பது இறுதியாக மோடி போன்ற ஆசாமிகளிடம் மக்கள் மாட்டிகொள்ள உதவுமே தவிர நன்னை பயக்காது. ஊழல் எதிர்ப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் பார்பனிய எதிர்ப்பு.2000 ஆண்டுகளாய் அடிமைபட்ட நாம் இனியும் அடிமைபட தயாரில்லை.சவுக்குக்கு இது வேண்டுகோள்.
Quote
 
 
+3 #41 new citizen 2011-06-11 00:53
ஒரு விசயத்தில் இரு வேரூ கருத்துகள் உண்டு அதை சீர் தூக்கி பார்க்க சொல்லி இருப்பார் போல்,
தாங்கும் மன நிலைமை நமக்கு இல்லை.
ஆனால் உண்மை ஒன்றே உள்ளது.
காலம் ஒரு நாள் மாறூம் நம் கவலை தீறும்.

citizen
Quote
 
 
+13 #40 Jack 2011-06-10 23:51
ஷார்ப்பா இருந்த சவுக்கு இப்படி "சவக்கு சவக்குன்னு" நமத்து போச்சே. ஏன் இப்படி?
Quote
 
 
+1 #39 jaya 2011-06-10 21:09
It is not so easy to publish a book. Savukku tried to publish this book. But the comments from pro LTTEs is not expected like this. Any way Savukku should be careful.
Quote
 
 
+3 #38 புரவி 2011-06-10 20:11
//வழவழவென்று எழுதாமல் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். "இந்திரா காந்தியை கொன்ற ஒரு இனத்தில் இருந்து ஒருவர் 10
ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆள்கிறார்// .

அவர் இனத்தில் ஒருவர் ஆள்வது இரண்டாவது கதை. இந்திரா வை கொன்ற பெஅன்ட் சிங்ஹ் ஹை தியகி என்ட்ரு பொற்கோவிலில் வைத்துள்ளனர்.
நாம் எப்போது நம் தனு அக்காவுக்கு சிலை அமைக்க போகிறோம்?.

நாம் இந்திய ஏகதிபத்யதில் இருந்து விடுதலி பெற்று இறையாண்மை உள்ள தமிழ் தேசியத்தை அமைக்க முன் வர வேண்டும்.
Quote
 
 
-13 #37 ஆனந்த் 2011-06-10 19:23
புலிகள் பயங்கரவாதிகள்தா ன். தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நடுநிலையாளர்களை யே கொன்றவர்களாயிற் றே. இவர்களுடைய கொலை வெறிக்கு பலர் பலியானார்கள். கடைசியில் சிங்கள ராணுவத்தின் கொலை வெறிக்கு இவர்கள் பலியாகிவிட்டார் கள் என்ற ரீதியில்தான் புலிகள் இயக்கத்தின் தலைவர்களுக்கு ஏற்பட்ட முடிவைப் பற்றி என்னால் யோசிக்க முடிகிறது. அவர்கள் விதைத்த வினையை அவர்களே அறுவடை செய்துக் கொண்டார்கள்.
Quote
 
 
+3 #36 V.Jai 2011-06-10 19:07
All expectations are vanished after this issue
Quote
 
 
0 #35 பெ.செந்தில்குமார் 2011-06-10 18:36
dear all,

pls read the book and you should provide your suggestions, the savukku is lot of work before election, but unfortunately savukku is mistake, in further periods he shoould not any mistakes,

one more think savukku, this is unbeliveable
Quote
 
 
+11 #34 குமார் 2011-06-10 17:56
தயவு செய்து பிரபாகரன் படத்தை நீக்கிவிடுங்கள் . உங்கள் வியாபாரத்திர்க் கு பிரபாகரன் படம் வேண்டுமா.. மற்றவர்களை புண்படுத்தாதீர் கள்..
Quote
 
 
0 #33 சாட்டைக்குச்சி 2011-06-10 17:41
டெலோ- தமிதேசிய கூட்டமைப்பு- சிவாஜிலிங்கம் கட்சியை சேர்ந்த "சிரீகாந்தாவும்", லண்டன் ஈராஸ் - கேபி கட்சியை சேர்ந்த ரவி.சுந்தரலிங்கமுமே இத்தகையவர்கள்.ஆனால் நெடியவனும் ஃபாதர் இமானுவேலும் இதே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் - தயாநிதி- கலாநிதி மாறன்களும் மு.க.அழகிரியும் அடித்துக் கொண்டு,சிலரை கொன்று இருவரும் மத்திய அமைச்சர்களாக ஆகி நம்மை முட்டாளாக்குவது போல!.
--------------
இதில் வழுதி ஊடாக அமெரிக்காவில் உள்ள செயற்பாட்டாளர்க ளுடன் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தொடர்பைப் பேணுவதை இந்நாடாளுமன்ற உறுப்பினர்(இதால ிய கத்தோலிக்க அமைப்பு)வலியுறு த்தியிருந்தார். அதாவது யாரை நம்பாவிட்டாலும் வழுதியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் நம்ப முடியும் என்பதே இந்நாடாளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதத்தின் தொனிப்பொருளாக அமைந்திருந்தது. இந்நாடாளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதத்திற்கு ஒத்தூதும் வகையில் வழுதியை அப்பழுக்கற்றவரா க நியாயப்படுத்தும ் முயற்சியில் அப்பொழுது விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவரும், தற்பொழுது கே.பியுடன் இணைந்து கிளிநொச்சியில் சிங்கள அரசின் செயற்திட்டங்களை ஒருங்கிணைத்து வருபவருமான சுந்தரலிங்கம்.ரவி அவர்கள் ஈடுபட்டிருந்தார ். இதுவே உருத்திரகுமாரனு டனான தொடர்பை 2008ஆம் ஆண்டு யூன் மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான முக்கிய காரணியாக அமைந்திருந்தது.
Quote
 
 
-2 #32 சாட்டைக்குச்சி 2011-06-10 17:15
இலங்கைத் தமிழர்களெல்லாம் விடுதலைப்புலிகள ும் அல்லர்,விடுதலைப ்புலிகள ் வேறு இலங்கைத்தமிழர் வேறும் அல்ல!.
என்ன பகவத் கீதை போல் குழப்பமாக இருக்கிறதா?.சிறு விளக்கம்!.
தங்கள் சொந்தப் பிரச்சனைக்காக "தமிழை(கலைஞரைப்ப ோல்)" பிடித்துக் கொண்டவர்கள் இலங்கைத் தமிழ் தலைமைகள்- சிங்களவனே இல்லாத யாழ்ப்பாணத்தில் இனப்பிரச்சனை என்று!.வாய்பேச்சுமட்டு ம் பேசும் இவர்கள் உடல்வலிமையால் முரட்டு தொழில் செபவர்களை "புலிவேஷம்" போடவைத்து மற்றவர்களை கிலியேற்றி தாங்களும் பயந்தார்கள்.வசூல் குவிந்தது,குவிந ்தது குறைய சேர்த்ததை ஆயுதம்,கீயுதம் என்று செலவு செய்யாமல் காப்பாற்ற, முல்லியவாய்க்கா லுக்கு முட்டுக் கொடுத்தார்கள்!.ஆகையால் இவர்கள் "விடுதலைப்புலிகள ் அல்ல"!.ஆனால் இவர்களின் சமூக அமைபின் பரிணாமத்தில் "சர்வைவல்" லுக்கு ஆபத்து என்றுதான் அவர்கள் "புலிவேஷம்" போட்டார்கள்!.ஆகையால் இவர்களும்,அவர்க ளும் வேறு அல்ல(ஒரே சமூக அமைப்பு)!.
Quote
 
 
-8 #31 venugopal 2011-06-10 16:12
முதலில் இங்கு கருத்து எழுதும் எல்லோரும் புத்தகத்தை வாங்கி படியுங்கள் ,அதற்கடுத்து உங்கள் விமர்சனங்களையும ் கேள்விகளையும் முன் வையுங்கள் .ஒரு எதிர் கருத்து வந்து விட்டால் உடனே "நான் உங்களை பற்றி அப்படி நினைத்தேனே இப்படி நினைத்தேனே என்று கூப்பாடு போடாதீர்கள் " .
Quote
 
 
+9 #30 saran 2011-06-10 16:09
this comment is from Mr. Vijay " கண்டவர்கள் வந்து போக தமிழ்நாடு என்ன சத்திரமா என்று கேட்ட சுப்பிரமணியசாமி சவுக்கில் விமர்சிக்கபடுவத ில்லை, புலி எதிர்பாளர் சோ விமர்சிக்கபடுவத ிலை, தினமலர் விமர்சிக்கபடுவத ில்லை, ஆர்.எஸ்.எஸ் விமர்சிக்கபடுவத ில்லை இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை பூனூலை தவிர வேறு என்ன இருக்க முடியும். சந்தேகமாக இருக்கிறது எப்படி...... பார்பன சாநாதனம் அதாவது மனு தர்மம் அதாவது சாதி ஒடுக்குமுறை சுரண்டல் ஒரு சநனாயக கருத்து. சனனாயகத்தில் சொல்ல உரிமை இருக்கிறது. வக்காலத்து வாங்குவது யார் தெரியுமா இராமகோபாலனோ சோ வோ அல்ல சூத்திரன் சவுக்கு தான்.
Quote
 
 
+10 #29 saran 2011-06-10 16:07
சவுக்கில் தினமலரை, திணமணியை, சோ, சுப்பிரமணியசாமி யை விமர்சிப்பதில்ல ை என்ற கேள்விக்கு பதிலை பாருங்கள் சோ மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியோர், தமிழின எதிர்ப்பாளர்கள் , பார்ப்பன சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும் ? ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அந்தக் கருத்து வைத்துக் கொள்ள உரிமை இல்லையா என்ன ? எப்படி......பார்பன சாநாதனம் அதாவது மனு தர்மம் அதாவது சாதி ஒடுக்குமுறை சுரண்டல் ஒரு சநனாயக கருத்து.சனனாயகத்தில் சொல்ல உரிமை இருக்கிறது. வக்காலத்து வாங்குவது யார் தெரியுமா இராமகோபாலனோ சோ வோ அல்ல சூத்திரன் சவுக்கு தான்.
Quote
 
 
+6 #28 saran 2011-06-10 16:05
சவுக்குவின் சாதியை பற்றிய கருத்தை பார்க்கவும்" சோ மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியோர், தமிழின எதிர்ப்பாளர்கள் , பார்ப்பன சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும் ? ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அந்தக் கருத்து வைத்துக் கொள்ள உரிமை இல்லையா என்ன ? இது எப்படி இருக்கு?????? இதுதான் இவரின் புரிதல் . ஊழலை ஒழிக்கவும் ilangai தமிழருக்காகவும் குரல் கொடுப்பதால் மட்டும் நீ என் தோழன் அல்ல.... சாதியை தூக்கி பிடிக்கும் அல்லது சாதிதானெ அது இருந்து விட்டு போகட்டும் , or சாதியை அழிக்க முடியாது என சப்ப்பை கட்டு கட்டும் நீ தமிழ் இனம் மட்டும் அல்ல மனித குலத்தின் எதிரியாகவே காட்சி அளிக்கிறாய்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 132 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5431
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week37890
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month240622
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12762741