முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இப்போதும் மாற்றமில்லை. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 09 ஜூன் 2011 23:35

 

இன்று முத்துராமன் என்ற வாசகர், ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.   அந்த மின்னஞ்சலில், விகடன் குழுமத்தின் பங்கு உரிமம் தொடர்பான செய்திகளில் இருந்த அடிப்படைத் தவறை சுட்டிக் காட்டியிருந்தார். அதற்கான ஆதாரத்தையும் அவர் இணைத்திருந்தார். அந்த ஆதாரங்களின் படி, விகடனில் உள்ள மொத்த பங்குகளில் 53.85 சதவிகிதம், திரு.சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும், மீதம் உள்ள 46 சதவிகித பங்குகள், சரி பாதியாக, விகடனின் துணை நிறுவனமான, வாசன் ப்ரின்ட் ப்ராடக்ட்ஸ் மற்றும், விகடன் டெலிவிஸ்டா ஆகிய நிறுவனங்கள் வசம் உள்ளது. இந்த துணை நிறுவனங்களின் முழுமையான உரிமையாளர்களும், சீனிவாசன் குடும்பத்தாரே…

 
Vasan_Publication_SH_2010_Page_5

நேற்றைய கட்டுரைக்குப் பிறகு, விகடன் குழுமத்திலிருந்து மறுப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது.   ஆனால், இது வரை மறுப்பு ஏதும் வரவில்லை.

 

விகடன் குழுமத்தின் உரிமையாளர்கள் யார் என்ற ஆராய்ச்சியில் சவுக்கு இறங்கியதற்கான காரணமே, கடந்த இரண்டு இதழ்களாக தயாநிதி மாறன் குறித்த செய்திகளை வெளியிடாமல் இருந்தது மட்டுமல்ல…   தயாநிதி மாறனுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதும் தான்.   இந்த விபரங்கள் குறித்து, சவுக்கு சேகரித்த தகவல்கள் அடிப்படையிலும், மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் வழங்கிய தகவல்கள் அடிப்படையிலுமே, கேடி சகோதரர்களின் நாடித்துடிப்பு என்ற கட்டுரை எழுதப் பட்டது.

 

இந்தக் கட்டுரை எழுதிய பிறகு, வந்த பல்வேறு தகவல்கள், மாறன் சகோதரர்களை இப்போது மட்டுமல்ல, விகடன் குழுமம் தொடர்ந்து பாதுகாத்து வந்திருப்பது, பல்வேறு வாசகர்களின் கருத்து மூலமாக தெரிய வருகிறது. குறிப்பாக சொல்லப் போனால், ஹன்ஸ்ராஜ் சக்சேனா, செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய விவகாரமும், கேபிள் டிவியில் மாறன் சகோதரர்களின் ஏகபோகமும், மற்ற டிவி சேனல்களை இருட்டடிப்புச் செய்த விவகாரம் பற்றிய செய்திகளும் துளி கூட வரவில்லை. இது மட்டுமல்லாமல், மாறன் சகோதரர்களைப் பற்றி விகடன் டாட் காம் தளத்தில் இடப்படும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப் படுவதில்லை என்பதும், ராசா மற்றும் கனிமொழி பற்றி பிரசுரிக்கப் படும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிப்பிக்கப் படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கவை.

 

ஆனால், ஆ.ராசாவைப் பற்றி மட்டும், ஆறு மாத காலத்துக்கும் மேலாக, ஸ்பெக்ட்ரம் பக்கம் என்று தனியாக ஒரு பகுதியை உருவாக்கி, கடுமையாக எழுதி வந்தனர்.

 

ராசா மீதான இந்த விமர்சனம், இந்த இதழ் வரை தொடர்கிறது.   சிபிஐ சிக்கலில் தமிழக கோடீஸ்வரர்கள் என்று, அட்டைப் பட செய்தி வெளியிட்டு விட்டு, அதற்கான அட்டைப் படத்தில் அந்தத் தொழில் அதிபர்களின் பெயரைப் போடாமல், ஆ.ராசாவின் படத்தைப் போட்டிருக்கிறது. அந்த தொழில் அதிபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

 

இந்தத் தொழில் அதிபர்கள் குறித்த விபரங்களை சவுக்கு, கடந்த மார்ச் 15 அன்று Ceremonious burial to spectrum probe ? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

 

ராசா ஊழல் செய்தார், அவர் விமர்சிக்கப் பட வேண்டியவர், அவர் துகிலுரியப் பட வேண்டியவர் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மாறன் சகோதரர்களோடு ஒப்பிடுகையில் ராசா அவ்வளவு பெரிய குற்றத்தை செய்து விடவில்லை.   ராசா மீது, ஊடகங்களின் கழுத்தை நெறித்தார் என்ற குற்றச் சாட்டு இல்லை.   ராசா மீது, மற்ற டிவி சேனல்களை அழித்தார் என்ற குற்றச் சாட்டு இல்லை. ராசா மீது, திரைப்படத் துறையினரை மிரட்டினார் என்று குற்றச் சாட்டு இல்லை. அப்படி இருக்கையில், இந்த குற்றங்களையெல்லாம் செய்த, மாறன் சகோதரர்களை விகடன் குழுமம் காப்பாற்ற முற்படுவது ஏன் என்ற கேள்வி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

 

மாறன் சகோதரர்கள் விகடன் குழுமத்தில் பங்குதாரர்கள் இல்லையென்றால், அவர்களைப் பற்றி விகடன் குழுமம் எழுதுவதை தடுப்பது எது… ?

 

சன் டிவியில் ஒளிபரப்பாகும், திருமதி.செல்வம் மற்றும் தென்றலா ?   இதுதான் காரணம் என்றால், விகடன் குழுமத்தின் செயல்பாடுகள், நினைத்ததை விட இன்னும் மோசம்.   இரண்டு தொலைக் காட்சித் தொடர்களை சன் டிவியினர் நிறுத்தி விடுவார்கள் என்ற காரணத்துக்காக, ஒரு இமாலய ஊழலை மறைத்து, அதற்கு வக்காலத்து வாங்குவதென்பது, 9 ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் துரோகம் அல்லவா ? நீங்கள் எழுதுவதை உண்மை என்று நம்பும் லட்சக்கணக்கானோருக்கு செய்யும் அநியாயம் அல்லவா ?

 

சவுக்கை அதன் வாசகர்கள் இலவசமாக படித்தாலும், அவர்களிடத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தானே சவுக்கு நடத்தப் பட்டு வருகிறது ? விகடன் குழுமத்திடம் இருந்து எந்த விதமான மறுப்பும் வராத பட்சத்திலும், ஒரு வாசகர் சுட்டிக் காட்டியதும், அதை அப்படியே பிரசுரிப்பதற்கான காரணம், வாசகர்களிடம் உண்மையை மறைக்கக் கூடாது என்ற உறுதி தானே ?   இந்த உறுதியைத் தானே நாம் ஜுனியர் விகடனிடம் எதிர்ப்பார்க்கிறோம்.

 

ஒரு வேளை பத்திரிக்கை தொழிலில் கிடைக்கும் லாபத்தை விட, தொலைக் காட்சித் தொடர் அதிக லாபம் ஈட்டித் தரும் என்றால், வாசகர்களை ஏமாற்றாமல், பத்திரிக்கையை மூடி விட்டு, முழு நேரத் தொலைக் காட்சித் தொடர் தயாரிப்பு நிறுவனமாக விகடன் நிறுவனம் மாறி விடலாமே… ?

 

அந்தக் கட்டுரையை எழுதியதால், அரசல் புரசலாக பேசப் பட்டு வந்த, விகடன் குழுமத்தில் மாறன் சகோதரர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற விவகாரம் தற்காலிகமாக முற்று பெறுகிறது.   அது அந்தக் கட்டுரை எழுதியதால் தான். ஆனால், மாறன் சகோதரர்களைப் பற்றிய ஜுனியர் விகடனின் மௌனம் எதற்காக என்பது குறித்த கேள்விகளுக்கான விடை, இன்னும் வரவில்லை….

 

ஜுனியர் விகடன் என்ற பத்திரிக்கை 25 ஆண்டுகளை கடந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.   இந்தப் பத்திரிக்கை மேலும், பல்வேறு ஊழல்களை நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே சவுக்கின் விருப்பம்.   ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழல் செய்தால், சட்டவிரோதமாக நடந்தால், நமக்கு எதிராக செய்திகள் வரும் என்பதை உணர்ந்து அஞ்ச வேண்டும் என்பதே நமது விருப்பம். முரசொலியிலோ, தினகரனிலோ, நமது எம்ஜிஆரிலோ, நடுநிலை செய்திகளை வாசகர்கள் எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனால் விகடனில் எதிர்ப்பார்க்கிறார்கள்.

 

ஆனால், தொடர்ந்து பல சமரசங்களை விகடன் குழுமம் செய்து வந்ததை தமிழகம் கண்டு வந்திருக்கிறது.    பல்வேறு சமரசங்களை செய்து வந்த விகடன் குழுமம், எந்த அளவுக்கு சென்று விட்டது என்றால், பொட்டு சுரேஷ் போன்ற ரவுடியிடம் மண்டியிடும் அளவுக்கு சென்று விட்டது.  விகடன் போன்ற பலம் வாய்ந்த நிறுவனம், பொட்டு சுரேஷை ஓட ஓட விரட்டியிருக்க வேண்டாம் ? இதுவா விகடனின் பாரம்பரியம் ?   சாதாரண நகைச்சுவை துணுக்கை வெளியிட்டதற்காக சிறை சென்றவர் விகடனின் முன்னாள் எம்டி, பாலசுப்ரமணியம் என்பதை மறவாதீர்கள்.

  

வரும் வாரங்களில், ஜுனியர் விகடனில், மாறன் சகோதரர்களின் ஊழல் பற்றி மட்டுமல்லாமல், பாரபட்சமில்லாமல் செய்திகளை வெளியிட வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். உங்கள் வாசகர்களின் விருப்பமும் கூட. அதை நீங்கள் செய்யும் பட்சத்தில், சவுக்கு உங்கள் நடுநிலையை சந்தேகிக்காது.   இல்லையென்றால், யாராக இருந்தாலும் சாட்டையை சுழற்ற சவுக்கு தயங்காது.

 

Comments  

 
0 #45 Baktha_Balaji 2011-06-14 12:15
உஙகளுடைய கட்டுரையை படித்த பிறகு நானும் உஜாலாவிற்கு மாறிவிட்டேன். ஜூ.வி. வாங்குவதை நிறுத்தி விட்டேன்.

பாலாஜி, சென்னை.
Quote
 
 
0 #44 keerthikumar 2011-06-13 09:49
I too like your words.100%,AS A J.V reader past 24 years.
Quote
 
 
0 #43 Vil Vam 2011-06-13 07:00
//9 ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் துரோகம் அல்லவா ?//எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்
விகடன் 15 ரூபாய்
குமுதம்தான் 9 ரூபாய்
Quote
 
 
0 #42 kanniyappan 2011-06-12 17:20
Sawukku
You appears to be big imposter.You told that Marans has stake and now you say that Vikatan favours due to some curcumstantial reasons.We strongly doubt your intentions.People first claim that they would do great social service,but,end up making inroads to some hidden agenda.Lot of news you posted appears bogus,with some motives,purely with an intention of sensationalism !!!Could be an another Baba Ramdev !!!
Quote
 
 
0 #41 gauthamtamilnadu 2011-06-12 11:30
நான் சவுக்குவை பாராடட விரும்புகிரென்.உங்களைப் போல உண்மையானவர்கலை நான் தெடிகொன்டுஇருகி ரென்.I am very proud of savuku,we are expecting more and more from you,we hope that you will continoue the same work, one day they will ask you to join with their politics , please dont go with them and dont join hands with them.we are here for you.
Quote
 
 
0 #40 RGK 2011-06-11 23:23
25 ஆண்டுகளாக விகடன் வாசகராக இருந்தேன். மிகவும் வேதனையாக உள்ளது.
Quote
 
 
+1 #39 விக்ரம் 2011-06-11 18:06
இன்றைய ஜூவி-யும் தயாநிதிக்கு வக்காலத்து வாங்குகிறது.........

தலைப்பு: சிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

என்னவோ சிவசங்கரன் விற்பதற்காக மட்டுமே ஏர்செல் நிறுவனத்தை தொடங்கியதாக சொல்கிறது.....

"என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்".....

தூ... விகடன்.... மஞ்சள் பத்திரிக்கைக்கு ம் உனக்கும் என்ன வித்தியாசம்......
Quote
 
 
0 #38 ரமீஜா 2011-06-11 15:29
விகடனா.............அதர்சியாக தான் இருக்கு ?!
Quote
 
 
+1 #37 உண்மை விளம்பி 2011-06-11 12:54
இன்றைக்கு ஜூ.வியில் அட்டைப்படத்திலே யே சின்னவன (தயாநிதி) பத்தி எழுதியிருக்கு....தான் இன்னும் நடுநிலைமை வகிப்பதாக காட்டுவதற்கான முயற்சிதான் இது...முதலில் செக்கர்ஸ் ஹோட்டல் தாக்குதல் மற்றும் பொட்டு சுரேஷிடம் மண்டியிட்டது இதன் பின்னணியில் நடந்த பேரங்கள்..இது ரெண்டுக்கும் விளக்கம் அளித்து தன் நேர்மையை நிரூபிக்கட்டும் ஜூ.வி..!
Quote
 
 
+1 #36 Thustan 2011-06-11 11:19
[ஃஉஒடெ நமெ="ஸுரெஷ் றஜ"]கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் விகடன் ஒரு நடுநிலை இதழ் என்றே நண்பி இருந்திருக்கிறே ன். எனக்குத்தெரிந்த ு எப்போது ராசா வசமாக மாட்டிக்கொண்டார ோ அப்போதிருந்துதா ன் விகடன் "ஸ்பெக்ட்ரம் பக்கம்" வெளியிடுகிறது. கேடி விஷயங்கள் நன்றாக வெளியில் வரும் போது கேடிகளின் படெக்ஸ் புண்ணாக்கப்படும ் என்று நம்புகிறேன். அப்போதும் விகடன் மெளனம் சாதித்தால் விகடனை புறக்கணிக்கலாம் . ஏனென்றால் இப்போது விகடன் தடம் மாறியிருக்கிறது என்று நம்பும் வாசகனாக நான் இருக்கிறேன். :-|[/ஃஉஒடெ]
எங்க வெளியில் வருகிறது? விகடன் மாதிரி வட இந்திய, ஆங்கில பத்திரிக்கை டீவியில் எல்லாம் ஆள் செட் பண்ணிவிட்டதாக கேள்விப்படுகிறே ன். என்டிடீவி, சி என் என் ஐ பி என் கூட இப்போதெல்லாம் மாறன் செய்திகளை வெளியிடுவதில்லை . எல்லாம் பணத்துக்கு அடிமைகள்தான்.


மாறன் மாதிரி எவ்வள்வு ஊழல் பண்ணியிருந்தாலு ம் பணத்தோடு கொஞ்சம் அறிவு இருந்தால் தப்பிச்சுக்கலாம ். அறிவு இல்லாமல் பணம் மட்டும் இருந்து ஊழல் பண்ணா, ராசா மாதிரி மாட்டிக்குவோம்.

இதுதான் உண்மை.
Quote
 
 
+1 #35 Thustan 2011-06-11 11:10
[ஃஉஒடெ நமெ="ஈன்டிஅனுச"]சவுக்கு சார்,
நான் விகடன் ரொம்ப நாளா படுசுகிடு இருக்கேன் . அவனுக ரொம்ப நல்லவனுக்க அப்படினு நினச்சேன். இந்த கேடி சகோதரகள பத்தி
அமுக்கி வாசிக்கும்போதே நினச்சேன், வைகோ சொன்னது சரிதனு. சன் டிவி யா கூடிய விரைவில் அரசாங்க டிவி ஆகிடனும், கேடி ரெண்டு பேதுல சின்ன கேடிய திகார் சிறைக்கும் பெரிய கேடிய புழல் சிறைக்கும் அனுபிடனும். அதுக்கு பிறகு பாருங்க, தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் வந்துடும். ஒரு நல்ல அதிகாரிகிட்ட இந்த கேடி பயலுகளா உள்ளர போடற வேலைய குடுத்துடணும். உமா ஷங்கர் சார் தான் கரெக்டா இருக்கும். அவர இந்த கேடி பயலுக எப்படி எல்லாம் தொல்லை குடுத்தாங்க.[/ஃஉஒடெ]
ரொம்ப ரொம்ப கரிக்ட்டா சொன்னீங்க. இந்த சன் டீவி தொல்ல தாங்க முடியலை. தமிழினப் பெண்கள் அழும் கலாச்சாரத்திற்க ு கொண்டு போனதே இந்த சன்டீவிதான்
Quote
 
 
0 #34 Thustan 2011-06-11 11:08
[ஃஉஒடெ நமெ="றபஸ்ஹ"]சவுக்கு, அந்த மீதி பங்குகளைப்பற்றி விவரம் தெரிந்தவுடன் விளக்கமளித்தது அவரது நடுநிலை பண்பு - மெச்சுகிறோம். ஆனால் விகடன் தொட்ர்ந்து 'கேடி'களுக்கு சாமரம் வீசுவது ஏன்? அது தெரியும் வரை அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே . விகடனாரே - விளக்கமளிப்பதோ அல்லது திருந்திக்கொள்வ தோ... உன் கடமை.[/ஃஉஒடெ]
தயாநிதிக்கு சொம்பு தூக்கிய கையில் இருந்து உண்மை எழுத்துக்கள் வரும் என்று எதிர்பார்க்க கூடாது. விகடன் குரூப் பத்திரிக்கை வாங்குவதை தவிர்ப்பது ஒன்றே நாம் செய்யக்கூடியது. உறவினர்க்க்கும் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். நாம் முரசொலியும் நமது எம்ஜிஆரும் வாங்குவதில்லையல ்லவா? அதுபோலத்தான்.
Quote
 
 
0 #33 paandiyan 2011-06-11 10:16
See today vikatan. they are attacking now siva instead of exposing maran fraud. whatever they are writing about siva is totally wrong. as per today article siva is looted some plot and maran is behind to comming out truth and now siva is taking revenge. vikatan is not Pathrikkai Viayapari -- now PATHRIKKAI VIPASHARAM. valga their vipasharam.....
Quote
 
 
+1 #32 nadodi 2011-06-11 09:52
அம்பானி கம்பனியில் தயாநிதிக்கும் பங்கு! வந்து விழுகிறது அடுத்த இடி!!

புதுடில்லி, இந்தியா: தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் தோண்ட, தினமும் வெவ்வேறு பூதங்கள் வெளியாகின்றன. இன்று புதிதாகக் கிளம்பியுள்ள பூதம், அம்பானியின் கம்பனிகளில் தயாநிதிக்கு பங்குகள் இருக்கின்றன என்பதே! இந்த பங்கு விவகாரம் தயாநிதியை மேலும் இறுக வைக்கிறது!


மாறனுக்கும், அவரது மனைவிக்கும் பங்குகள் இருக்கும் அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்கள்: றெலிஅன்செ ஈன்டுச்ட்ரிஎச், றெலிஅன்செ ணடுரல் றெசொஉர்செச் ள்ட்ட், றெலிஅன்செ சொம்முனிசடிஒன்ச ் (ற்சொம்). இவற்றில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.

தயாநிதி, தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக 2004௨007 காலப்பகுதியில் இருந்திருக்கிறா ர். அதே காலப்பகுதியில் அம்பானியின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்திருக்கின் றார்! இது ஒரு அப்பட்டமான சொன்ஃப்லிச்ட்ச் ஒஃப் இன்டெரெச்ட்!

இதை வைத்துக்கொண்டு, 2004௨007 காலப்பகுதியில் அம்பானி குரூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள், அல்லது ஒப்பந்தங்கள் பற்றி குற்றச்சாட்டுகள ை எழுப்ப முடியும். முடிவெடுக்கும் அதிகாரமுள்ள கபினெட் அமைச்சரின் சொன்ஃப்லிச்ட்ச் ஒஃப் இன்டெரெச்ட், இந்தியக் குற்றவியல் சட்டத்தில் லேசான விடயமல்ல.

இருந்து பாருங்கள், அம்பானி குரூப்பின் போட்டி நிறுவனங்கள், இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கப் போகின்றன!

நன்ரி: விருருப்பு.காம்

சவுக்கு please investigate and confirm wether it is true or not?
Quote
 
 
0 #31 RabaSha 2011-06-11 01:22
சவுக்கு, அந்த மீதி பங்குகளைப்பற்றி விவரம் தெரிந்தவுடன் விளக்கமளித்தது அவரது நடுநிலை பண்பு - மெச்சுகிறோம். ஆனால் விகடன் தொட்ர்ந்து 'கேடி'களுக்கு சாமரம் வீசுவது ஏன்? அது தெரியும் வரை அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே . விகடனாரே - விளக்கமளிப்பதோ அல்லது திருந்திக்கொள்வ தோ... உன் கடமை.
Quote
 
 
0 #30 Daniel 2011-06-10 23:35
ஜுனியர் போஸ்ட் வந்ததில் இருந்து வாசிக்கிரேன். சுஜாதாவின் கட்டுரைகள் தொடங்கி மதன் கேள்வி பதில்கள் வரை. இந்த நிமிடம் இந்த செய்தியை படித்த உடன் ஜு.வி. இந்த அளவுக்கு தரம் கெட்டுள்ளதே...
Quote
 
 
-1 #29 Sakthivel_tup 2011-06-10 21:56
@ சவுக்கு:

இந்த பதிவில் எங்குமே சவுக்கு, விகடன் பங்குகள் பற்றிய தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை . அது தவறு. ஒரு வாசகர் சரியான பங்குகள் பற்றிய விபரம் தந்ததும், சவுக்கு விகடன் பற்றிய பதிவு இட்டதனாலேயே இப்பொழுது நமக்கு சரியான தகவல் தெரியவந்துள்ளது என்பது சப்பைக்கட்டு கட்டுவதே. முதலில் தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவியுங்கள்.
Quote
 
 
0 #28 raviranga 2011-06-10 21:13
Of late, the news items and articles published in the magazine "Thamizhaga arasiyal" are more reliable, to the point and hard hitting. Hope the magazine picks up its circulation so that it may turn out to be an alternative the wretched juvi
Quote
 
 
0 #27 Anonymous 2011-06-10 20:06
karunanithi ஏற்காட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான100 எக்கர் நிலத்தை கனிமொழிக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. Can you investigate on this? This happened well before Kanimozhi's arrest. just to cool her off.
Quote
 
 
0 #26 jwala 2011-06-10 18:41
everyday vikatan is getting 10 lakhs profit in doing serials for sun network. are they fools to antogonise maran brothers?
Quote
 
 
+2 #25 gnanaveln 2011-06-10 15:33
http://adrasaka.blogspot.com/2011/03/blog-post_9706.html

Please find the above article it is published in Vikatan some months back.... particularly "kodampakkamae Gopalapuram" section in this article they didn't publish anything about "Sun Pictures"... even in this complete article they never used the name of maran brothers.....
Quote
 
 
+1 #24 govindarajan 2011-06-10 15:08
Arasial pathirikkaikal eppothu varam erumurai endru Aanatho appothay athan tharamum mariponathu.. jambavan JooveeA thadam marinal..?
Quote
 
 
+3 #23 ramanathan 2011-06-10 14:30
Not only the 2 shows in Sun TV, Vikatan Televistas is doing 8 shows in Sun Group Channels. The same Thirumathi Selvam & Thendral is being remaked in Kannada, Telugu & Malayalam. So it is 8 Shows & Not just 2 shows. Out of this 8 shows... 3 shows were given very recently based on Vikan Groups extreme loyalty. This Srinivasan is a Poisenous Snake
Quote
 
 
+9 #22 Sundarwipro 2011-06-10 14:29
ஜூனியர் விகடன் ஒரு தரமிக்க பத்திரிகை என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதை சீனிவாசன் போன்றவர்கள் வியாபாரமாக்க முற்படும்போது தான் மாறன் போன்ற ஒட்டுண்ணிகள் அதை அவர்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்கிறார்கள். தயவு செய்து மாறன் பற்றிய விமர்சனங்களை கடுமையாக வைத்து அவர்களின் நடு நிலைமையை மெய்பிபார்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால் என்னைய போன்று பல வாசகர்களை அவர்கள் இழப்பார்கள்.
Quote
 
 
0 #21 IYENGAR 2011-06-10 13:53
The annexure sent to you does not have a date of the AGM. This could be a older date before Kt Brothers entered. Let the person send the list from MCA or from the Vikatan duly authenticated as of date to enable the viewers to accept. I am sure it will not come. Hence Savukku's article may be correct.
Quote
 
 
+1 #20 cmbe 2011-06-10 12:37
all business organisations are supposed to make public their financial condition by advertising in newspapers which is leagally mandatory.but no political party trusts are never required to make it ,despite we the common public all are
shareholders of it ?!!!!.
like balace sheet of a company, every parties sholud do it.
our FMs wont dare.......
Quote
 
 
+1 #19 Bala K 2011-06-10 12:05
These 2 Kedi Brothers needs to be hanged till to die.
And their wealth should be taken up by the Govt.
Quote
 
 
+10 #18 பொன்சந்தர் 2011-06-10 10:40
விகடனின் தரம், என்றைக்கு அவர்கள் விகடனின் வடிவத்தை மாற்றினார்களோ அப்போதே தரமும் குறைந்து விட்டது. விகடனுக்கு இருந்த மரியாதை போய் ரொம்ப நாளாச்சு. நான் ஆறாவது படிக்கும் போதே விகடனை அட்டை டூ அட்டை வாசித்தவன். இப்போது விகடன் வாங்குவதில்லை. எப்போதாவது வாங்கினாலும் மதன் கேள்வி பதில் மட்டுமே படிக்கிறேன்
Quote
 
 
+7 #17 Srinivasan.D 2011-06-10 10:25
நெத்தி அடி.... நானும் பல வாரங்காளாக மாரனெ பற்றி விகடனில் எழதினாலும் விகடன் அதை பிரச்சுரிக்காதத தின் அர்த்தம் இப்போது புரிந்தது.
Quote
 
 
+20 #16 a.chandar singh 2011-06-10 10:09
இந்த விஷயத்தை கேள்விப் பட்டதில் இருந்து ,நான் ஜூனியர் விகடன்,ஆனந்த விகடன் இரண்டையுமே வாங்குவதை நிறுத்தி விட்டேன்.
Quote
 
 
+1 #15 shekar 2011-06-10 10:09
kedi brothers, oliga
Quote
 
 
0 #14 satur rajan 2011-06-10 10:05
savukku,
olalukku ethira makkal therivikka vendiya karuthai pamara makkalukkum poi serumpadi article ezhithavum allathu prasaram seiyavum.
Quote
 
 
0 #13 satur rajan 2011-06-10 10:03
Yov dubukku savukku,
Ulalukku ethira makkal karuthu therivikka vendiya phone no matrum vazhimuraiya poduya.
022 6155 0789.
Quote
 
 
+14 #12 tamil123 2011-06-10 09:48
இந்த ஆவணத்தை வைத்து எதுவும் முடிவு செய்யமுடியாது. விகடன் ஒரு தனி நிருவனம். பங்கு மார்க்கெட்டில் இல்லை. ஆனால் சன் குழுமம் இருக்கிறது. எனவே அதைவைத்து அவர்கள் எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள் என கன்டுபிடிக்க முயலலாம்.

எப்படி இருந்தாலும், கேடி பிரதர்ஸின் கேடித்தனத்தை விகடன் தொடர்ந்து மறைப்பதன் உன்மையான பின்னணி என்ன??
Quote
 
 
+32 #11 Ravi 2011-06-10 09:30
உண்மை தெரிந்தவுடன் உடன் அதை வெளியிட்டு தம் தவற்றை ஒத்துக் கொண்டதின் மூலம் சவுக்கு இன்னும் உயர்கிறது. இன்று இது ஒரு சறுக்கலாகத் தெரியும். ஆனால் இது ஒரு படிப்பினையாகக் கொண்டு தொடருங்கள். வாழ்த்துக்கள். ரவி/இங்கிலாந்து.
Quote
 
 
+3 #10 Raj, Singapore 2011-06-10 09:06
It is true that JV does not publish any comments on Dayanidhi. They simply ignore!
Quote
 
 
-24 #9 Ennaku oru Sandhegam 2011-06-10 09:02
சவுக்கு? என்னக்கு ஒரு சந்தேகம், இதயும் தெளிவு படுத்தவும்.... நக்கீரனை நாசமாக்கியாச்சு அடுத்து விகடன்.... புதிதாக சவுக்கு பத்திரிக்கை ஆரம்பிக்கும் என்னமோ..... தவராக எண்ண வேண்டாம்.
Quote
 
 
+14 #8 விகடகவி 2011-06-10 08:44
வழக்கம் போல பெயரை கலங்க படித்திவிட்டார் கள் என்று சவுக்கு மீது விகடன் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு தொடுத்தாலும் தொடுக்கும். அதையெல்லாம் கண்டு அஞ்சுபவரல்ல சவுக்கு என்று விகடனுக்கும் தெரிந்திருக்கும ். எதுக்கு எல்லோரும் சொல்லி வைத்தது போல் 5 கோடி ரூபாய்க்கு நஷ்ட ஈடு வழக்கு போடுறாங்கன்னு தெரியவில்லை. சட்டத்துல எதுவும் இருக்கா?
Quote
 
 
+9 #7 சரவணன் 2011-06-10 08:06
நீங்கள் சொல்வது சரிதான் . மாறன்கள் என்றாலே அவர்கள் பம்முவது ஏன் என தெரியவில்லை.
Quote
 
 
+4 #6 MUTHURAMAN 2011-06-10 07:58
ARUMAI SAVUKKU SIR! MY RESPECT FOR YOU AND THIS JOURNAL HAS GONE UP MANIFOLD! HOPE YOU WILL CONTINUE TO EXPOSE CORRUPT PEOPLE WITH THE SAME ZEAL!
Quote
 
 
+15 #5 reader 2011-06-10 06:37
ஏன் விகடன் கேடி சகோதரர்களின் சார்பாக ரெட்டை நாயனம் வாசிக்கணும்?

என் அனுமானத்தில் தம்பி பா.சீனிவாசன் பற்றிய அந்தரங்கப்பிடி ஏதேனும் கேடிகள் வசம் இருப்பதாலோ? இது என் சந்தேகம் மட்டுமே.

இப்படித்தான் தறுதலை சிறுத்தைகளின் தலைவன் குருமாவை தாத்தா ஏவல் அடிமையாக்கி இருப்பதாக வதந்திகள் விளம்புகின்றன.
Quote
 
 
+10 #4 Suresh Raja 2011-06-10 03:35
கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் விகடன் ஒரு நடுநிலை இதழ் என்றே நண்பி இருந்திருக்கிறே ன். எனக்குத்தெரிந்த ு எப்போது ராசா வசமாக மாட்டிக்கொண்டார ோ அப்போதிருந்துதா ன் விகடன் "ஸ்பெக்ட்ரம் பக்கம்" வெளியிடுகிறது. கேடி விஷயங்கள் நன்றாக வெளியில் வரும் போது கேடிகளின் படெக்ஸ் புண்ணாக்கப்படும ் என்று நம்புகிறேன். அப்போதும் விகடன் மெளனம் சாதித்தால் விகடனை புறக்கணிக்கலாம் . ஏனென்றால் இப்போது விகடன் தடம் மாறியிருக்கிறது என்று நம்பும் வாசகனாக நான் இருக்கிறேன். :-|
Quote
 
 
+12 #3 ManickBadsha 2011-06-10 02:30
வாழ்த்துக்கள் சவுக்கு,
உங்களைப் போல் உண்மையானவர்கள் அடுத்து மேலும் அதிகமாக மக்களைச் சென்றடைய முயற்சியுங்கள். நன்றி.
Quote
 
 
+16 #2 Indianusa 2011-06-10 01:09
சவுக்கு சார்,
நான் விகடன் ரொம்ப நாளா படுசுகிடு இருக்கேன் . அவனுக ரொம்ப நல்லவனுக்க அப்படினு நினச்சேன். இந்த கேடி சகோதரகள பத்தி
அமுக்கி வாசிக்கும்போதே நினச்சேன், வைகோ சொன்னது சரிதனு. சன் டிவி யா கூடிய விரைவில் அரசாங்க டிவி ஆகிடனும், கேடி ரெண்டு பேதுல சின்ன கேடிய திகார் சிறைக்கும் பெரிய கேடிய புழல் சிறைக்கும் அனுபிடனும். அதுக்கு பிறகு பாருங்க, தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் வந்துடும். ஒரு நல்ல அதிகாரிகிட்ட இந்த கேடி பயலுகளா உள்ளர போடற வேலைய குடுத்துடணும். உமா ஷங்கர் சார் தான் கரெக்டா இருக்கும். அவர இந்த கேடி பயலுக எப்படி எல்லாம் தொல்லை குடுத்தாங்க.
Quote
 
 
+13 #1 ம.பொன்ராஜ் 2011-06-10 00:11
விகடனுக்கு இது நெகடிவ் பப்ளிசிட்டி....
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 34 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3428
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week14540
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month227359
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12749478