|
கடந்த வாரம், கலாநிதி மாறனும், காவேரி கலாநிதியும், திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றார்கள். இந்தச் செய்தி வெளியில் கசியக் கூடாது என்று அவர்கள் நினைத்தாலும், செய்தி பரவவும், உடல்நலக் குறைவுக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை சந்திக்கவே சிங்கப்பூர் செல்வதாக, மாறன்கள் தரப்பிலிருந்து தகவல் பரப்பப் பட்டது.
ஆனால், சவுக்கு எதிர்ப்பார்த்தது போலவே, அவர்கள் ரஜினியைப் பார்க்க சிங்கப்பூர் செல்லவில்லை. சிங்கப்பூர் சென்று, கலாநிதியும், காவேரி கலாநிதியும், தம்பதி சகிதமாக, சிவசங்கரனுக்கு நெருக்கமான உறவினர்களின் காலில் விழுந்திருக்கிறார்கள். சிவசங்கரனிடம் எப்படியாவது எடுத்துச் சொல்லி, புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், மாறன் குடும்பத்தினரால் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்ட, சிவசங்கரன் குடும்பத்தினர் இவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று தெரிகிறது. மேலும், நக்கல் செய்யும் விதமாக, எது வேண்டுமானாலும் செய்வேன் என்றால், சன் டிவியையும், ஸ்பைஸ் ஜெட் விமான சேவையையும் விற்க தயாரா என்று கேட்டதும், கலாநிதி அதிர்ந்து போயிருக்கிறார்.
பிறகு, சிவசங்கரன் தரப்பில், சிபிஐயிடம் புகாரும், வாக்குமூலமும் கொடுத்த பிறகு, அதை வாபஸ் வாங்கினால், இந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சிவசங்கரனுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்பது எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனாலும், சளைக்காத கலாநிதி மாறன், 2000 கோடி ரூபாய் வரை, லஞ்சமாக கொடுக்க முனைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், சிவசங்கரனுக்கு இவர்கள் மீதான கோபம் தணியவில்லை என்று கூறப்படுகிறது. அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு, ஏர் செல் நிறுவனத்தை விற்க வேண்டும் என்று மாறன்கள் நெருக்கடி கொடுத்ததும் விற்க முடிவு செய்த, சிவசங்கரனுக்கு அனந்தகிருஷ்ணன் 500 கோடி ரூபாய் கொடுக்காமல் பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் தொகையை கொடுத்த பிறகே, பங்கு விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், உடனடியாக பங்கு விற்பனையை முடித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த மாறன்கள், இதற்காக சென்னை காவல்துறையை பயன்படுத்தி, சிவசங்கரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்து, சிவசங்கரனையும், அவரது பெற்றோர்களையும், விரட்டியடித்து, மிரட்டியிருக்கிறார்கள். இதன் பின்புதான், சிவசங்கரன் மொத்த ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
மாறன்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும், சிவசங்கரனால் புகாரை வாபஸ் வாங்க முடியாத என்பதற்கு, இது மட்டும் காரணமல்ல. சிவசங்கரன் புகாரை வாபஸ் வாங்கினால், சிவசங்கரன் மீது, சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவசங்கரனுக்குச் சொந்தமான ஹைடெக் ஹவுசிங் என்ற நிறுவனம், கலைஞர் டிவிக்கு 50 கோடி ரூபாய் வழங்கியிருப்பதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சிவசங்கரன் இந்தத் தொகையை நேரடியாக வழங்காமல், சகாரா குழும நிறுவனங்கள் என்ற நிறுவனம் மூலமாகவும், மொரீஷியசைச் சேர்ந்த டெலிகாம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் மூலமாக முதலில் பணத்தை அனுப்பி, அதன் பிறகு, சென்னையைச் சேர்ந்த, வீட்டா டெவலப்பர்ஸ் அன்ட் பில்டர்ஸ் மற்றும், ஸ்கை சிட்டி பவுண்டேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டிவிக்கு இரண்டு தவணைகளில் 50 கோடியை வழங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
சிவசங்கரன் சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் பட்சத்தில், சிபிஐ, கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப் பத்திரிக்கை போலவே, மற்றொரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்து, சிவசங்கரனையும் சிறைக்கு அனுப்ப தயங்காது என்று கூறப்படுகிறது.
எஸ்டெல் என்ற நிறுவனம், முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, சிவசங்கரன் மறைமுகமாக, சென்னையைச் சேர்ந்த வீட்டா டெவலப்பர்ஸ் அன்ட் பில்டர்ஸ் மற்றும், ஸ்கை சிட்டி பவுண்டேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமாக எஸ்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, உதவி செய்து விட்டு, ஒதுக்கீடு முடிந்ததும், சிவா குழுமம் என்ற சிவசங்கரனின் நிறுவனம் மூலமாக எஸ்டெல் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும் சிபிஐ கவனத்துக்கு வந்திருக்கிறது.
எஸ்டெல் நிறுவனத்துக்கும், குறைந்த விலையில் லைசென்ஸ் ஒதுக்கப் பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கையிலேயே சுட்டிக் காட்டப் பட்டிருந்தது குறிப்பிடித் தக்கது.

இந்த சூழலில், எஸ்டெல் நிறுவனத்தை சிவசங்கரன் வளைத்ததும், அவர் நிறுவனங்கள் கலைஞர் டிவிக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததையும் வைத்து, எளிதாக ஒரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியும்.
ஆனால், பெரிய முதலைகளான மாறன் சகோதரர்களைப் பிடிப்பதற்காக, சிவசங்கரன் மீது, இப்போதைக்கு நடவடிக்கை இருக்காது என்றே சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவசங்கரனிடம் நடத்திய பேச்சுவார்த்தை, எதிர்ப்பார்த்த வெற்றியை தராத காரணத்தால், மாறன்கள் மிகுந்த கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனைத்து பத்திரிக்கைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்த மாறன்கள், இப்பொதெல்லாம் நோட்டீஸ் அனுப்பும் பழக்கத்தையும் கைவிட்டு விட்டார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
மாறன்களின் இந்த நிலைக்கு காரணமாக, அவர்கள் தொழில் நடத்துகையில் துளி கூட நியாயம் பார்க்காமல் நடந்து கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது. சிவசங்கரனோடு மோதல் ஏற்பட்டவுடன், அவரது ஸ்டெர்லிங் நிறுவனம் தொடர்பாக எந்தச் செய்தி வந்தாலும், அதை தவறாக சித்தரிக்குமாறு, பல முறை உத்தரவிடப் பட்டிருப்பதாக, சன் டிவி ஊழியர்களே குறிப்பிடுகிறார்கள்.

மாறன்கள் ஈடுபட்ட எந்தத் தொழிலிலும், அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டதே இல்லை என்று தொழில் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர்களின் இந்த நாணயமற்ற போக்கு எரிச்சலை ஊட்டினாலும், அவர்களின் அரசாங்க செல்வாக்கு காரணமாக, எந்த தொழில் அதிபரும் அவர்கள் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், ரத்தன் டாடாவே உரிய நேரம் வரும் வரை அமைதியாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
வழக்கமாக, நன்றாக லாபத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால், அந்தத் தொழில் அதிபரை அணுகி, தொழிலை தங்களுக்கு விற்று விடுமாறு கேட்பார்களாம். அவ்வாறு விற்கப்படவில்லை என்றால், சன் டிவியில் அந்த நிறுவனம் தொடர்பாக மோசமாக சித்தரித்து செய்தி வெளியிடுவது இவர்களுக்கு கைவந்த கலை என்றும், சுட்டிக் காட்டப் படுகிறது.
இப்படி அநியாயத் திமிரில் அலைந்து கொண்டிருந்த மாறன் சகோதரர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து இவர்கள் மீளுவது மிக மிக கடினம் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
|
Comments
தெருவில் இட்லி கடை வைத்துள்ள பெண்மணிக்கு உள்ள நியாய உணர்வும், நேர்மையும், இந்த சனியங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது.[/ஃஉஒடெ]
WELCOME TO THE CORPORATE WORLD WHERE YOU CAN FIND NO MERCY...!!!
- தினகரன் முன்னாள் நிருபர்
WHEN IS HE GOING TO FALL IN THE FEET JAYA.
தெருவில் இட்லி கடை வைத்துள்ள பெண்மணிக்கு உள்ள நியாய உணர்வும், நேர்மையும், இந்த சனியங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது.
நெஞ்சில்நினைததி ல்நடந்தது தான் எட்தனையொ
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
அநியாயமக மற்றவர்க்கு ட்தொன்டிய குழியில் அவனெய் விழுவான்
Good news coming up. Happy New year 2011 to all..
We wish more happenings likewise.
Basha bhai, Idea nalla iruku sonia auntyku maaran a romba pudikum. Rahul ku advisor a ellam potaanga adhanala edhukum konjam gavanama seiyanum edha..
Sari andha vetti paya p.chidambaram ena seiraan? avanapathi yaen savukkula onumae varadhillai. Andha payaloda magan sariyana pombala porukinu kelvipataen
Quoting mahesh12:
Kd சகோதரர்கள் மீது நமக்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. ஆனால் அவர்கள் மிகவும் மோசமான வியாபார உத்திகளை கையாண்டிருக்கிற ார்கள். இப்படிப்பட்டவர் கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு அது பாடமாக அமையும். மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட தவறான வியாபார உத்தியை கடைபிடித்ததர்க் காக தண்டிக்கப்பட்டத ே. இவர்கள் அவர்களைவிட பலமடங்கு மோசமான வியாபார உத்திகளை கையாண்டிருக்கிற ார்கள்.
யாரும் இவர்களுக்காக பரிந்து பேசாதீர்கள்.
Quoting சோழன்:
எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நிதானமாகவும், தைரியமாகவும் இருக்கும் நீ, உன்னைப் பற்றி சில வாசகர்கள் ஏதோ கூறிய கருத்தினால், நேற்று மிகவும் மன வேதனைப்பட்டு, சவுக்கை நிறுத்தலாமா? என்ற எண்ணத்தின் உச்சிக்கே சென்று விட்டாய்.
நேற்றைய உனது பதிவைப் பார்த்து, (குறிப்பு: பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே, அதுவும் விடுமுறை நாளான ஞாயிறு அன்று) எத்தனை நூற்றுக் கணக்கான வாசகர்கள் உனக்காக ஓடோடி வந்தார்கள் என்று கவனித்தாயா? (அவற்றில் ஒரு சிலர் உன்னை திட்டியும்தான் - அது வேறு விஷயம்).
காரணம், விடுமுறையைக்கூட பெரிது படுத்தாமல், பல ஆயிரம் பேர் உன்னை தினமும் (ஒவ்வொரு நிமிடமும் - ஒவ்வொரு நொடியும்) கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று உனக்கு புரிகிறதா??
நூறு சதவீதம் நல்ல பெயர் யாராலுமே எடுக்க முடியாது. நடிகர் சிவாஜி கணேசனை "நடிகர் திலகம்" என்று பலரும் பாராட்டுகிறோம். அவரையே "ஓவர் ஆக்டிங் பேர்வழி" என்று நகைப்பு செய்வோரும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
"படையப்பா" படத்தில் வரும் பாடலில் ஓர் அருமையான வரி: "வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா.... தடைக் கல்லும் உனக்கொரு படிக்கட்டப்பா..." என்று உன் பணியை தொடரு.
இது இவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்திற்கு ம் பொருந்தும்.
நீங்கள் எப்போது மாறுவீர்கள் என்று பார்போம்!
இப்படியே நீங்கள் தொடர்ந்தால் பல நடுநிலையாளர்களை இழக்க நேரிடும்
Quoting Pandiak:
ஒருவர் போன் செய்து மீரா ஜாஸ்மின் மற்றும் ஸ்ரீகாந்த் என்று சொல்கிறார். இன்னொருவர் சினேகா மற்றும் லாரன்ஸ் என்கிறார். இப்படியே மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்கள் சொல்கிறார்கள். போட்டியை நடத்துபவர் தவறான பதில் என்கிறார். நேயர்களை மீண்டும் மீண்டும் போன் செய்யுமாறு தூண்டுகிறார். ஆனால் போன் செய்பவர்கள் தவறான பெயர்களையே சொல்கிறார்கள். விக்ரம், விக்ராந்த், பரத், ஷ்ரேயா, என தவறாகவே சொல்கிறார்கள். நிகழ்ச்சி முடிய கொஞ்சம் நேரம் இருக்கையில் ஒருவர் ஜோதிகா என சொல்கிறார், நிகழ்ச்சியை நடத்துபவர் சரியான விடை என்கிறார். ஆனால் அவருக்கு நடிகர் யாரென்று தெரியவில்லை என்கிறார். இப்படியே ஒரு அரை மணிநேரம் மக்களை ஏமாற்றுகிறார்கள ்.
என்ன ஏமாற்றுகிறார்கள ் என கேட்கிறீர்களா? நம் பணம் தான் அவர்களுக்கு தேவை. போன் கால் ஒரு நிமிடத்துக்கு ரூபாய் பத்துக்கும் குறையாமல் வசூல் செய்கிறார்கள். அதிலும் நாம் போன் செய்த உடனே லைன் கிடைக்காது. வெய்ட்டிங் இருங்கள் என சொல்வார்கள். அப்போதிருந்தே நம் பணம் அவர்களால் பிடுங்கப்பட ஆரம்பிக்கும். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். நமக்கு லைன் கிடைக்கவே கிடைக்காது. ஆமாங்க, நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் அவர்களாகவே போன் செய்த மாதிரி தவறான விடையை சொல்வார்கள். இதனால் மக்கள் போன் செய்யும் போது வெய்ட்டிங் கால் ஆகும். ஆனால் நம்முடைய கால்கள் நிகழ்ச்சி முடியும் வரை வெய்ட்டிங்லேயே இருக்கும். அதற்குள் நாம் பல நூறுகளை இழந்திருப்போம். இது போல ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்.
வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்.
மேற்கண்ட பிரபலங்கள் யாரென்று நீங்களே சொல்லுங்கள
kathil then paynthaal ee moikkum
உடனே என்னை மானுஷ்ய புத்திரனின் விசுவாசி என்று நினைத்து விடாதீர்கள். அந்த வரி பிடித்ததாலும் உங்களுடைய போக்கு மாறிக்கொண்டிருப ்பதாலும் இதைவிட அதைச் சுட்டிக்காட்டுவ தற்கு வேறு அழகான வாக்கியம் எனக்குத் தெரியாததாலும் பதிவு செய்தேன்.
உங்களுடைய துணிவும், உழைப்பும் வீணாகிறது அல்லது தவறாகப் பயன்படுகிறது என்றே உங்களின் சமீபத்திய போக்குகள் காட்டுகின்றன.
"
மாறன்கள் ஈடுபட்ட எந்தத் தொழிலிலும், அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டதே இல்லை என்று தொழில் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர்களின் இந்த நாணயமற்ற போக்கு எரிச்சலை ஊட்டினாலும், அவர்களின் அரசாங்க செல்வாக்கு காரணமாக, எந்த தொழில் அதிபரும் அவர்கள் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், ரத்தன் டாடாவே உரிய நேரம் வரும் வரை அமைதியாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள் ."
யார்தான் நேர்மையாக தொழில் செய்கிறார்கள்? குறிப்பாக கார்ப்பரேட் கம்பெனிகள். டாடாவே என்கிற பொழுது உங்கள் உள்ளே இருக்கிற பூணைக் குட்டி வெளியே வருகிறது. இல்லை நான் சிவசங்கரனின் தகிடுதங்களையும் எழுதி உள்ளேன் என்று வாதாடுவீர்கள். நான் நடு நிலையானவன் என்று காட்டிக்கொள்ள திணிக்கப்பட்ட பகுதி அவை என்று வாசகர்களுக்கு எளிதில் விளங்கும். சமீப காலமாக உங்கள் நடுநிலையை நிறுபிக்க நிறைய முயற்சி செய்கிறீர்கள்.
தனி மனிதர்களை எதிர்த்து நீண்ட நாள் அரசியல் செய்து கொண்டிருக்க முடியாது. நாம் எதிர்க்க வேண்டியது அதற்கு பின்புலமான கட்டமைப்புகளை. கருணாநிதி தோற்கடிக்கப்பட் ட உடனேயே உங்களது போக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் தொடர் கட்டுரைகள் சலிப்பையும் சந்தேகத்தையுமே ஏற்படுத்துகின்ற ன.
கலாநிதி மாறா!
தயாநிதி மாறா!
உலகம் உங்கள் மீது கொண்டுள்ள
வெறுப்பு இனி மாறா!
நீங்கள் தாத்தனைப்போல்
தப்பிப்பத்தற்கு போடும் தாளம் மாறா!
சிபிஐ
உங்கள்மீது சிலப்பதிகாரம்
வாசிக்கப்போவது போவது மாறா!
தாத்தாவுக்கே தண்ணிகாட்டிய
மூக்குப்பேணிகள்
ஆணி அடிக்கப்பட்ட அந்தப் பெயர் மாறா!
சுருங்க சொல்லின் மாறாஸ்
நீங்கள்
மக்கள் மனதிலிருந்து
விரட்டப்பட்டு நீண்ட நேரமாகிவிட்டது மாறா!
ஆனாலும்
ஆண்டவன் கட்டளைப்படி
தண்டனைக்காக
சிக்கிவிட்டீர்க ள் அதுவும் மாறா!
அஸ்தமனம் வரும் வரை
உங்கள் பெயர் ஓடிக்கொண்டிருப் பதும் மாறா!
RSS feed for comments to this post