முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வாழ்த்துக்கள் ஜுனியர் விகடன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 23
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 15 ஜூன் 2011 10:30
ஜுனியர் விகடன் இதழுக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.  சவுக்கும், வாசகர்களும் எதிர்ப்பார்ப்பது இதைத்தான்.   ஸ்பெக்ட்ரம் பக்கம் என்று ஒதுக்கி, அதில் தயாநிதி மாறனை தோலுரிக்கும் இந்த வேலையை ஜுனியர் விகடன் செய்யவில்லையே என்றுதான் மிகுந்த வருத்தத்தில் இருந்தோம்.  அதை சுட்டிக் காட்டவும் செய்தோம்.   இப்போது, ஸ்பெக்ட்ரம் பக்கத்தில், தயாநிதி மாறனைப் பற்றிய, உருப்படியான செய்தி வெளியாகியிருப்பது, ஜுனியர் விகடன் இதழ் இத்தனை நாள் கட்டிக் காத்து, சில பல காரணங்களினால், தவற விட்ட இதழியல் நெறிகளை மீட்டு எடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.     வாழ்த்துக்கள்.  தொடர்ந்து பணியாற்றுவோம். மக்கள் பணியாற்றுவோம்.   
 

 


முதன் முறையாக நாடாளு மன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர்  தயாநிதி மாறன். இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்!

தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது...

''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை.

ஆ.ராசா என்ன செய்தார்? ஒரு டெலிகாம் சர்க் கிளில், எத்தனை மொபைல் ஆபரேட்டர்களுக்கும்உரிமங்களைக் கொடுக்கலாம் என்கிற முறையைக் கொண்டுவந்தார். இந்த முறை தொலைத் தொடர்புத் துறை வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மீறி 2005 டிசம்பர் மாதமே தயாநிதி மாறன் அனுமதி கொடுத்து உள்ளார். ஆக, மாறன்தான் விதிமுறைகளை மீறி முதலில் செயல்பட்டவர். இத்தகைய அனுமதிக்கு, தொலைத் தொடர்பு கமிஷனின் அனுமதி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) ஆலோசனை மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், இவற்றில் ஒன்றைக்கூட பெறாமல் தயாநிதி மாறன் உரிமங்களைக் கொடுத்தார். குறைந்த பட்சம் இதை டிராய் சிபாரிசின் அடிப்படையிலாவது செயல்படுத்தி இருக்க வேண்டும். டிராயின் சிபாரிசு 2007-ல்தான் வந்தது. அப்படியானால் மாறன் முன்கூட்டியே எப்படிச் செய்தார்?

பல ஆபரேட்டர்களை அனுமதிப்ப தன் மூலம் ஆரோக்கியமான போட்டியையாவது தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மத்தி யில் ஏற்படுத்தினார்களா? இல்லை என்பதே என் வாதம். பால்வா போன்ற - தொலைத் தொடர்புத் துறைக்கே சம்பந்தம் இல்லாத - ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை இந்தத் துறைக்குள் கொண்டுவந்தது எப்படி?'' என்று கேள்விகளை வரிசையாக அடுக்கிய அருண்ஷோரி, மேலும் பல விஷயங்களையும் எடுத்து வைக்கிறார்.

''என்.டி.ஏ. ஆட்சியில் கேட்டுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை அடுத்து, டிராய் அமைப்பு ஒருங் கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமம் சம்பந்தப்பட்ட சிபாரிசுகளை 18 மாதங்களுக்குப் பின்னர் கொடுத்தது. அந்த சமயத்தில் என்.டி.ஏ. ஆட்சி இல்லை. இந்த இறுதி சிபாரிசு வந்த 2005 அக்டோபரில் தயாநிதி மாறன்தான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சர். ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்களை வழங்குவது குறித்து அந்த சிபாரிசில் சொல்லப்பட்டது. ஆனால், மாறன் இந்த சிபாரிசுகளைக் கிடப்பில் போட்டார். இதனால், டிராய் சேர்மன் பிரதீப் பைஜாலுக்கும் மாறனுக்கும் மோதல் நடந்தது. பைஜால் இந்த சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், மாறன் மறுத்தார். காரணம், ஒருங்கிணைந்த அணுகுமுறைச் சேவையில் டெலிகாம் ஆபரேட்டர்கள் தொலைக்காட்சி சேவையிலும் ஈடுபடலாம் என்று இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக மாறன் இந்த சிபாரிசை முடக்கத் திட்ட மிட்டார்.

மூன்று விதங்களில் தயாநிதி மாறன் பதவிக் காலத்தில் தவறுகள் நடந்து இருக்கின்றன. ஒன்று, டிராய் சிபாரிசு இல்லாமல் ஏராளமான தொலைபேசி ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கியது. இரண்டா வது, ஏர்செல் டிஷ்நெட் பங்குகளை அப்போலோ நிறுவனத்தையும் துணையாக்கி மாற்றியது. மூன்றாவது, 2003-ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவுப்படி, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்கள் வழங்குவது குறித்து டிராய் கொடுத்த சிபாரிசை முடக்கியது. இதனை எல்லாம் முறையாக விசாரித்தால், உண்மைகள் வெளிவரும். இந்த வகையில் சி.பி.ஐ-யின் அடுத்த டார்கெட் மாறன்தான்!'' என்றார்.

இப்போது சி.பி.ஐ. முன்பு வாக்குமூலம் கொடுத்து, பழைய யுத்தத்தைப் புதுப்பித்து இருக்கிறார் சிவசங்கரன். ஒரு பக்கம் சி.பி.ஐ-யே சிவசங்கரனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து தகவல்களைக் கறப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், தமிழக அரசியல் புள்ளி களின் ஆதரவு கிடைக்கவும், அதையட்டியே சி.பி.ஐ-க்கு சிவசங்கரன் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ சி.பி.ஐ-யின் புதிய அலுவல கத்தின் ஒன்பதாவது மாடி வரை சிவசங்கரன் படி ஏறிவிட் டார். ஆரம்பத்தில் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வெளியேயும்... பின்னர் அலுவலகத்தில் அதிகாரபூர்வமாகவும் தனது வாக்குமூலத்தை அவர் கொடுத்த தாகச் சொல்லப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சி.பி.ஐ. 2007 முதல் 2010 வரையிலான விஷயங்களை மட்டும் உள்ளடக்கி விசாரணையை முடித்து மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப்போகிறது. அடுத்த கட்டமாக 2001 முதல் 2007 வரையிலான விசாரணையைத் தொடங்க வேண்டும். இதற்கான ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், தயாநிதி மாறன் விவகாரம்தான் முன்னிலையில் இருக் கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். தயாநிதி மாறன் தன்னை நிர்ப்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை விற்கவைத்தார் என்று சிவசங்கரன் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சுமார் 10 சாட்சி களை சி.பி.ஐ. முன் நிறுத்தத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருப்பவர்களாம். வங்கி அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களும் இதில் அடக்கம் என்று கூறப் படுகிறது.

இந்த சாட்சிகளோடு, தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. சேகரிக்கும் எனத் தெரிகிறது. ஏர்செல் பங்குகளை வாங்கிய 'மேக்ஸிஸ்' அனந்த கிருஷ்ணனின் மலேசியாவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவனம், 'சன் டைரக்ட்'டில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டுக்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் முதலில் சம்பந்தப்பட்ட நாடுகளில் அனுமதியைப் பெறாமல் முடிவு எடுக்காது. இதன்படி, மத்திய அரசின் எஃப்.ஐ.பி.பி. பிரிவுக்கு மனு வந்து, 2007 மார்ச் 2 மற்றும் 19-ம் தேதிகளில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இறுதியாக, சன் டைரக்ட்டில் ஆஸ்ட்ரோ முதலீடு செய்ததை 2007 ஜூலை ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மாறன் 2007 மே மாதம் வரை பதவி வகித்தார். ''மேக்சிஸ் நிறுவனம் நான் அமைச்சராவதற்கு முன்பே எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளது. 15 வருடங்களாகத் தொடர்பு உண்டு!'' என்பது தயாநிதி தரப்பு விளக்கமாக உள்ளது.

''தொலைத் தொடர்புத் துறையில் எந்த அந்நிய நாட்டு முதலீடும் 74 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது. இதன்படி ஏர்செல்லில் அனந்த கிருஷ்ண னின் 'மேக்சிஸ்' நிறுவனத்துக்கு அதிகபட்சமான 74 சதவிகிதம் போக, மீதி 26 சதவிகிதம் வேறு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை பிரபல அப்போலோ குழுமத்தின் பிரதாப் ரெட்டி குடும் பத்தினர் பெற்று உள்ளனர். இவர்கள் டெக்கான் டிஜிட்டல் நெட்ஒர்க் என்கிற நிறுவனத்தின் பேரில் அந்த 26 சதவிகிதப் பங்குகளைப் பெற்று உள்ளனர். இந்த டெக்கான் நிறுவனத்தில், ஆஸ்ட் ரோவின் 49 சதவிகிதப் பங்குகள் உள்ளன. அனந்த கிருஷ்ணனுக்காக மறைமுகமாக இந்தப் பங்குகள் வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் இதை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக ஊழல் விவகாரங்களில் சிக்கி காங்கிரஸ் அரசாங்கத்தின் பெயர் கெட்டு வருவதைத் தொடர்ந்து ஒரு தடுப்பணை போடுவதற்கு பிரதமர் முயற்சித்துள்ளார். அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதத்தில், 'அனைத்து அமைச்சர்களும் தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் குடும்பத்தினரின்  சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடத்தை விதிகள் ஏற்கெனவே இருப்பவைதான். என்றாலும், இப்போது பிரதமர் அலுவலகமே அதிரடியாக இறங்கி இருப்பது, விவகாரத்தின் கடுமை யைக் காட்டுகிறது!

- சரோஜ் கண்பத்

 

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
-3 #43 sattai 2011-06-19 11:49
சவுக்கு உன்வேசம் கலைய அரம்பித்து இருககிறது, இது ஆரம்பமே.
Quote
 
 
0 #42 sangi mangi 2011-06-18 21:01
முதலில் மாறன் சகொதரர் கலின் சொத்தை நாட்டுடமை ஆக்க வேன்டும் . எல்லா சொததும் மக்கலிடம் இருந்து கொல்லை அடிக்க பட்டவையெ
Quote
 
 
+2 #41 Padman 2011-06-18 07:55
சவுக்கு ... இது ரொம்ப ஓவரான பில்டப்.. தேவையில்லாத ஒன்றும் கூட.

மாறன் விடயத்தில் அப்படி ஒன்றும் இந்தக் கட்டுரையில் விகடன் எதையும் கிழிக்கவில்லை.

இன்று வந்த விகடனில் அழகிரி பற்றி பெரிய கட்டுக்கதை. என்னவோ ஜெ தில்லி போனதே அழகிரிக்காக மட்டுமே போன மாதிரி செய்தி. இவங்களுக்கு அழகிரி கொடுத்த இம்சைக்கு பதிலடியாம்!

நாட்டின் பிரதமரை பதவியேற்ற பிறகு மரியாதை நிமித்தமா சந்திக்க கிடைத்த 20 நிமிடத்தில் அழகிரி பற்றி புகார் செய்தார் அப்படின்னு அப்படின்னு.

இவங்க பத்திக்கையை படிக்கிறவங்க எல்லாம் என்ன முட்டாள்களா?

அவங்களுக்கு நீங்க பாராட்டு பத்திரம் வாசிக்கிரீங்க. இதுதான் காலக்கொடுமை.
Quote
 
 
+2 #40 தென்னை 2011-06-17 19:49
இந்த வாழ்த்தைப் பார்க்கும் போது உமக்கும் ஜூ.விக்கும் ஏதோ நடந்திருக்கும் என்பது போலதான் உள்ளது...புலனாய்வு தகவல்கள் விரைவில் வரும்....
Quote
 
 
0 #39 Thustan 2011-06-17 07:56
[ஃஉஒடெ நமெ="தஞ்சை குணா"]மாறனின் கொட்டத்தை தோலுரிக்கும் அணியில் ஒன்று அதிகரித்து இருக்கின்றது. நல்ல செய்தி தான்.

கூடிய விரைவில் சன் டிவி-இல் விகடன் நிறுவன தொடர்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம ்.[/ஃஉஒடெ]
விகடன் தன்மானத்தை(தன் பரம்பரை மானத்தையும் தான்) அடகு வைத்த பிறகே கேடி பிரதர்ஸ் தங்கள் சன்டீவியில் தொடர் போட விகடனுக்கு அனுமதி கொடுத்தனர்.
அப்படியிருக்க, விகடனின் இந்த செய்தி முழுக்க முழுக்க கண்துடைப்பே. மேலும் தயாநிதி மாறனால் எடிட் செய்யப்பட்டதே.
விகடன் செத்து நாளாகிவிட்டது. விகடனுக்கு பயந்துகொண்டெல்ல ாம் நீர் கட்டுரை போடத்தேவையில்லை .
Quote
 
 
+4 #38 குமார. இரவிக்குமார் 2011-06-17 03:49
ஜூனியர் விகடன் மாறவே இல்லை. இது ஒரு கண் துடைப்புக் கட்டுரை . குங்குமம் , தினகரன் வரிசையில் விகடனும் மாறன் குடும்பச் சொத்தாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. இதழியலில் தமிழ் மக்களுக்கு இது இழப்பு தான். ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற இதழ்களுக்கு மாற்றாக தமிழக அரசியல் என்ற இதழை படிக்கலாம்
Quote
 
 
+5 #37 பாபு 2011-06-16 23:33
உண்மை!
[ஃஉஒடெ நமெ="சொசொ"]அட், அப்படி என்ன அவசரம்.. வலிந்து வாழ்த்துக்களைக் கூற.. சவுக்கு.. உனக்கு ஒண்ணு தெரியுமா? ஜூனியர் விகடன் கட்டுரையைப் பார்த்து படித்து திருத்தங்கள் செய்து பிரசுரிக்க ஒப்புதல் அளித்தது சாட்சாத் தயாநிதியாகத்தான ் இருக்கும்.. நான் குட்டுற மாதிரி குட்டறேன்.. நீ வலிக்கிற மாதிரி ஆக்ட் கொடுத்துக்கோன்ன ு ஏதாச்சும் நடந்திருக்கும்.. இது கூட தெரியாத அசடா இருக்கியே சவுக்கு.. விகடன் குடுமி சும்மா ஆடாது தெரிஞ்சுக்கோ.. சாட்டையடி சாக்கோ[/ஃஉஒடெ
Quote
 
 
+4 #36 பாபு 2011-06-16 23:30
ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை. ஜூனியர் விகடன் அப்படி என்ன ஒரு பிரமாதமான புலனாய்வு சமாச்சாரத்தை செய்துவிட்டது? இந்த கிரிமினல் சகோதரர்களைப் பற்றி இதை விட காத்திரமான தகவல்களை சவுக்கே கொடுத்திருக்கிற து. நக்கீரன் தருகிறது. ஏன் குமுதம் ரிபோர்ட்டர்கூட தருகிறது. ஜூனியர் விகடன் – ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோ ல்- போனாராம், வந்தாராம்… என்னும் காதில் விழுந்த செய்திகளைத்தான் கொடுத்திருக்கிற து. நன்றாக ஊன்றி கவனித்தால்- ‘சார்… வேற வழியில்ல… அதனால நாங்க டைரக்டா கண்டுபுடிச்சமாத ிரி போடாம அருண்ஷோரி சொன்னார், கட்காரி சொன்னார்ங்கறமாத ிரியாவது நியூஸ் போட்டுத்தான் ஆவணும்… அப்படி எழுதி உங்ககிட்ட காட்டறோம். அதுல ஏதாவது கரெக்ஷன் இருந்தா நீங்க போட்டு அனுப்புங்க…. நாங்க பப்ளிஷ் பண்ணிடறோம்…’ என்று மாறன் ப்ரதர்ஸுக்கு சலாம் அடிக்கும் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளமு டியும். கருணாநிதியை நார் நாராகக் கிழித்து காற்றில் பறக்கவிட்ட திருமாவேலனை- இந்த கார்ப்பரேட் மோனாபலி பற்றியும் க்ராஸ் மீடியா ஓனர்ஷிப் விவகாரம் பற்றியும் விகடனிலோ ஜூனியர் விகடனிலோ எழுதச் சொல்லுங்கள்- அப்போது விகடனின் நடுநிலை பற்றி நாம் விழா எடுப்போம். போங்க பாஸ்…. நீங்க வேற!
Quote
 
 
+3 #35 விளையாட்டு விக்ரம் 2011-06-16 22:52
சவுக்கு,

- உன்னை விகடனும் பார்த்துக் கொண்டிருக்கிறது . இதுவே அதற்கு உதாரணம். உப்பு சப்பு இல்லாத ஒரு பக்கத்தை தயாநிதிக்கு ஒதுக்கி, எதோ நாங்களும் "நடுநிலை" என்பதற்கு....

- இந்த கட்டுரை வெறும் கண்துடைப்பு. இரண்டு வாரத்திற்கு முந்தய செய்தி... டமாசு....
Quote
 
 
+8 #34 choco 2011-06-16 21:46
அட், அப்படி என்ன அவசரம்.. வலிந்து வாழ்த்துக்களைக் கூற.. சவுக்கு.. உனக்கு ஒண்ணு தெரியுமா? ஜூனியர் விகடன் கட்டுரையைப் பார்த்து படித்து திருத்தங்கள் செய்து பிரசுரிக்க ஒப்புதல் அளித்தது சாட்சாத் தயாநிதியாகத்தான ் இருக்கும்.. நான் குட்டுற மாதிரி குட்டறேன்.. நீ வலிக்கிற மாதிரி ஆக்ட் கொடுத்துக்கோன்ன ு ஏதாச்சும் நடந்திருக்கும்.. இது கூட தெரியாத அசடா இருக்கியே சவுக்கு.. விகடன் குடுமி சும்மா ஆடாது தெரிஞ்சுக்கோ.. சாட்டையடி சாக்கோ
Quote
 
 
+5 #33 Nai Sekar 2011-06-16 14:12
ஜூவியின் நம்பகத்தன்மை பறிபோவதைத்தடுக் கவே இந்த ரெண்டுங்கெட்டான ் மாறன் செய்தி. ஜூவி தன் தொழிலை காப்பாற்றிக்கொள ்ளபோடும் நாடகம். இது ஒரு ஆரம்பம்,இன்னும் காத்திருக்கவேண் டும் உண்மையறிய!
Quote
 
 
0 #32 தஞ்சை குணா 2011-06-16 12:50
மாறனின் கொட்டத்தை தோலுரிக்கும் அணியில் ஒன்று அதிகரித்து இருக்கின்றது. நல்ல செய்தி தான்.

கூடிய விரைவில் சன் டிவி-இல் விகடன் நிறுவன தொடர்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம ்.
Quote
 
 
+8 #31 katrhi 2011-06-16 10:59
ஜீ.வீ.யால் மாறனை முலுமையாக வெளீப்படுத்த முடியவில்லை
Quote
 
 
+8 #30 sathishr 2011-06-16 08:32
ஜுவி இன்னும் முழுமையான தகவல்களை வெளியிடவில்லை. அவசரம் வேண்டாம்.
Quote
 
 
+1 #29 rajesan 2011-06-16 02:56
shamw to tamil nadu ans ahame ro tamil media for sleeping so far
Quote
 
 
+4 #28 RabaSha 2011-06-16 01:23
துவைக்காத சாக்ஸ் துவைக்கபடும் அறிகுறிகள் இதோ தினமலர் செய்தி...

"தூசு தட்டப்படும் மிரட்டல் விவகாரங்கள்; ஆளுங்கட்சி அதிரடி: ""பழைய வழக்கை தூசு தட்டப் போறாங்க பா...'' என்று சொல்லியபடியே பெஞ்சில் வந்து அமர்ந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

"கடந்த ஆட்சியில், சென்னை சின்னமலை பகுதியில உள்ள நட்சத்திர ஓட்டலில் புகுந்து, ஒரு கும்பல் அடிச்சு நொறுக்குச்சு பா... இதன் பின்னணியில், "டிவி' நிர்வாகி ஒருத்தர் மேல, ஓட்டல் நிர்வாகத்தில, புகார் கொடுத்தாங்க... ஆனா, அவர் அப்போதைய ஆளுங்கட்சி பின்னணி உள்ளவர்ங்கிறதால , நடவடிக்கை ஏதும் எடுக்கலை... இப்போ, ஓட்டல்காரங்க போலீசில் புகார் கொடுத்ததை வைச்சு, வழக்கிற்கு, மறுபடியும் உயிர் கொடுக்கப் போறாங்க... இந்த புகார்ல குறிப்பிட்டிருக ்கிற, சபரிமலை சாமி பெயர் கொண்டவரை, முதல்ல வளைக்கப் போறாங்க... கடந்த ஆட்சியில் நடந்த பல மிரட்டல் விவகாரங்கள், இந்த நபருக்கு அத்துப்படியாம்... இவரைக் கொண்டு பல மிரட்டல் விவகாரங்களை தூசு தட்டப் போறாங்க பா...'' என்று சொல்லி முடித்தார் அன்வர்பாய்."
Quote
 
 
+9 #27 ம.பொன்ராஜ் 2011-06-16 00:20
//முதலில் ஜூனியர் விகடனை மிரட்ட இந்த சவுக்கு யார் என்பதை உலகுக்குச் சொல்ல வேண்டும்// யப்பா கந்தசாமி... ஊருக்கு புதுசா நீ? இல்ல... இவ்ளோ நாள் உள்ள இருந்தியா? போ... போய் வீட்டுல பெரியவஙக இருந்தா வந்து கமெண்டு போட சொல்லு
Quote
 
 
+5 #26 RabaSha 2011-06-15 21:09
இது ஆரம்பம் மட்டும் தான் என்று நம்புவோம். ராசா மீது காட்டிய அதே தீவிரத்தை கேடி பிரதர்ஸ் மீதும் காட்டும் வரை கொஞ்சம் நிதானிப்போம். 323 திருட்டு போன்லைனைப் பற்றியோ, சிவசங்கரன் விவகாரத்தில் முழு விவரத்தையும் இன்னும் வெளியிடவில்லை விகடன்.
Quote
 
 
+7 #25 Oru Tamilan 2011-06-15 20:17
This article is nothing what maran bros has done to the country. This is kinda eye washer so am not at all convinced. This is not even 5% of the news what other media has published.
Quote
 
 
+3 #24 ilichchavaayan 2011-06-15 18:28
This is a mere eye wash by JV.

It gave nothing nothing newer than what Savukku or Dinamalar already posted.

All readers should send mails to Vikatan group for clarification and pressure them. Look at Chinna kundoosi's comment. How valid it is.

JV are using people's emotion to cheat their readers.
Quote
 
 
+6 #23 Suresh Raja 2011-06-15 17:45
இத தானே நாங்க அன்னிக்கே சொன்னோம் :-*
ராசவோட டவுசர விகடன் கிழிக்கிரதுக்கு முன்னாடியே சிபிஐ அதுல ஏகப்பட்ட மார்க் போட்டுருந்தது.... அதே மாதிரி கேடியோட படக்ஸ் புண்ணாகும் போது அவுங்க டவுசரும் கிழிக்கப்பட்டு ஊர் உலகத்துக்கெல்லா ம் காட்டப்படும். விகடன் மேல இருந்த நம்பிக்கை வீணாகவில்லை. :-) :-)
Quote
 
 
+9 #22 Selvam S 2011-06-15 16:20
Junior vikatan is still silent on the BSNL scandal. This is because the allegation is more clear with genuine proofs. Still , in the last 3 editions , JuVee is clearly trying to create a villainous image on sivasankaran & Maran as a victim of corporate politics. In fact the last two kazhugu section tries to pose a picture of Juvi's Integrity as an answer to savukku's allegations. So savukku should wait for sometime before praising Ju.vi. And again Indian English media is completely silent on Channel 4 videos, not even a small article. As usual the Tamilnadu Ettappans like Dinamalar & The hindu have totally blacked out this news. Cho ramasamy will continue his unconditional support to SL govt. Really I have no idea as why the brahmin media is hell bent on suppressing eezham tamil issue. I am not accusing all the brahmins , pls forgive me if I have hurt any of your sentiments. Just cannot hide my disapppointment s. Thanks
Quote
 
 
+1 #21 nandu 2011-06-15 16:18
சூப்பர் ஜால்ரா,,,,பதிவு ,,,,, ஜாதி பாசமோ,,,,?
Quote
 
 
+39 #20 tamil123 2011-06-15 15:04
சவுக்கு இவ்ளோ ஈசியா ஏமாறுமா?!? ஜூனியர் விகடன் இன்னும் தயாநிதியின் பி.எஸ்.என்.எல் ஊழலைப்பற்றி வாய் திறக்கவில்லையே...

சவுக்கு, நிதானிக்கவும்.விகடன் போக்கில் இன்னும் நிறைய மாற்றம் தேவை.
Quote
 
 
+1 #19 Covai Jaffer 2011-06-15 14:59
வாழ்த்துக்கள் ஜுனியர் விகடன்.

இத இத தான் எதிர்பார்த்தொம்
Quote
 
 
+24 #18 Irumbu Manidhan 2011-06-15 14:56
மாரன் ஒரு திருடன். முகத்தை பார்த்தாலெ தெரியும்.
Quote
 
 
-9 #17 suresh babu 2011-06-15 14:52
ஜுனியர் விகடனின் வாச்கன் எனக்கும் மகிழ்ச்சி தான் !!!
Quote
 
 
+9 #16 Arunkumar 2011-06-15 14:29
விகடன் ஒரு தலை பட்சமாக செயல்படுவதை சவுக்கு கண்டித்ததையும் தற்போது செய்தி வெளியீட்டுக்குப ் பின் பாராட்டுவதையும் வாசகர்கள் நடு நிலையோடு ஆமோதிக்கிறார்கள ்.
Quote
 
 
-1 #15 prabha trichy 2011-06-15 14:27
தவற விட்ட இதழியல் நெறிகளை மீட்டு எடுத்த
ஜுனியர் விகடன் இதழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Quote
 
 
+18 #14 NADAGAPRIYAN 2011-06-15 14:05
சவுக்கு சொல்வதை பார்த்தால் கேடி பிரதர்ஸ் நல்லவர்களாக மாறிவிட்டார்கள் என தெரிகிறது! அதனால் தான் அவர்கள் தவறை அவர்களாகவே செய்தி வெளியிட தொடங்கி விட்டார்கள் போல் இருக்கிறது! இல்லையா சவுக்கு ?
Quote
 
 
+14 #13 Loganathan 2011-06-15 13:57
ஜூனியர் விகடனை திட்டுவதும் பாராட்டுவதும் இருக்கட்டும். முதலில் சவுக்குக்கு இந்த நடுநிலைமை இருக்கிறதா? புலிகளுக்கு எதிரான ஒரு புத்தகத்தைப் போட்டீர்களே... அதில் கூறப்பட்டிருக்க ும் விஷய்ங்களை ஒத்துக் கொள்கிறீர்களா? ஒண்ணு ரெண்டு நல்ல விஷயங்களுக்காக 99 சதவீத அபாண்ட குற்றச்சாட்டுக் களை எப்படி பிரசுரித்தீர்கள ்? அந்த புத்தக்கத்தில் முரண்படும் விஷயங்கள் எவ்வளவு என்பதை பட்டியலிட்டு பேசுங்கள்... எல்லோரும் விமர்சித்த பிறகு நீங்கள் எழுதிய சமாதானத்தையும் இப்போது எடுத்து விட்டீர்கள்.. இது சரியா? ஜூனியர் விகடனுக்கு இருக்கும் நேர்மை கூட உங்களிடம் இல்லையே...? இந்த விஷயத்தில் உங்களுக்கு சார்பான பின்னூட்டங்களை மட்டுமே பிரசுரிக்கிறீர் கள் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். இந்த பின்னூட்டத்தையு ம் பிரசுரிக்காவிட் டால் நான் தனிக்கட்டுரை சவுக்கு தொடர்பாக எழுத வேண்டியிருக்கும ்..
Quote
 
 
+24 #12 ரம்மி 2011-06-15 13:49
ஜூ.வி இப்போதும், மாறன் விவகாரத்தில் பட்டும் படாமலும் இருப்பதாகவே தோன்றுகிறது! ராசா மேல் இருந்த வேகம், இக்கட்டுரையில் காணப்படவில்லையே ?!
Quote
 
 
+24 #11 ம.பொன்ராஜ் 2011-06-15 13:19
//இப்போது பிரதமர் அலுவலகமே அதிரடியாக இறங்கி இருப்பது, விவகாரத்தின் கடுமை யைக் காட்டுகிறது!//
ஏமாளி மக்கள்: "அய்யய்யோ கைப்புள்ள அருவாளோட கிளம்பிட்டாரே... எத்தனை தலை உருளப் போகுதோ தெரியலியே?"

மண்ணுமோகன்: "இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது..."
Quote
 
 
+11 #10 ம.பொன்ராஜ் 2011-06-15 13:16
(மேலே உள்ள தயாநிதியின் படத்தை பார்த்தவுடன் தோணுனது).
நேற்று மீடியா மற்றும் சிவசஙகரனை நோக்கி: "கொன்னு புடிவேன் கொன்னு...!"

இன்று சி.பி.ஐ விசாரணை ஆரம்பித்ததும்:
"ஒன்னுக்கு வருது...!!!" :lol:
Quote
 
 
+11 #9 ss 2011-06-15 12:08
செ .. இவன் எல்லாம் திருந்த மாடடான். இவன ஜெயில பொடரதுகு பதிலா சுட்டு கொல்லனும்
Quote
 
 
+7 #8 Naresh 2011-06-15 11:49
Good one....

I want to raise an unheard scam here.

During DMK regime the door no's in chennai were changed( not sure whether they were changed overall tamilnadu
)

If you check in every street there are a lot of missing door no's For example: in my street there are only 20 houses. Buth the numbers are more than 40... which means there could have been lot of fake addresses made for fake voters list.... however Election commision was strong and it ruled out the fake votes
Quote
 
 
+20 #7 Venkatraman Nagaraja 2011-06-15 11:46
நல்ல செய்தி.

தயாநிதி கைது உறுதியாகி உள்ளது. ஆனால் ராசாவைப்போல தயாநிதி வாய் மூடி இருக்க மாட்டார் என்றே தெரிகிறது. இவர் கைது செய்த பின்னரோ, அல்லது விசாரணையின் போதோ நிச்சயம் பல தி மு க பிரமுகர்களின் பங்கையும் கூறிவிடுவார்.

நான் மட்டும் களி திங்கணுமா? அஸ்கு புஸ்கு...
Quote
 
 
+13 #6 jaya 2011-06-15 11:40
இந்த விஷயங்கள் ஒன்றும் புதிது இல்லையே? இது ஜூனியர் விகடன் சொன்னது என்பதை தவிர/ வேறு ஒன்றும் புதிது இல்லை சவுக்கு.
Quote
 
 
+5 #5 jp 2011-06-15 11:31
JUNIOR VIKATAN SHOULD REMAIN ITS GOOD NAME
Quote
 
 
+6 #4 thamilachi 2011-06-15 11:28
சவுக்கு சார்! நீங்க சீ.பி.ஐ ஆனா என்னா!
Quote
 
 
+6 #3 வாலி. 2011-06-15 11:28
கேடி சகோதரர் கிங்கிணி அவர்கள் திஹார் 08 இலக்க கூட்டுக்கு வருகிறார் பராக் பராக் பராக்.
தொடர்ந்து அண்ணாத்தை கலா நிதியாருக்கும் கண்டம் உண்டாகக்கூடும் என்று பட்சி சொல்லுகிறது. பராக் பராக் பராக்!
Quote
 
 
+30 #2 சின்ன குண்டூசி 2011-06-15 11:22
என்னவேனாலும் நீங்க சொல்லிக்குங்க...எங்கோ சின்ன கிராமத்துல ஒரு சாமியார் கோமாளித்தனமா எதாவது பண்ணுனா உடனே அத பத்தி பெருசா செய்தி போடுற ஜூ.வி, ஏன் தலைநகர் சென்னைல, முக்கியமான இடத்துல இருக்குற செக்கர்ஸ் ஹோட்டல் தாகுதல பத்தி எந்த ஒரு செய்தியும் போடாம இருட்டடிப்பு செஞ்சுது?....அதே மாதிரி பொட்ட சாரி பொட்டு சுரேஷோட பிரச்சினை ஆனபோது முதலில் 'அவர் யார் ..அவருக்கு என்ன தகுதி.. பகிரங்கமா ஒரு பத்திரிக்கையை மிரட்டுற அளவுக்கு என்ன தைரியம்?' என்றெல்லாம் செய்தி போட்டு வாசகர்கள் ஆதரவை திரட்டிய ஜூ.வி...பின்னர் ஏன் கப் சிப்புன்னு சரண்டர் ஆனது மட்டுமில்லாம...அத பத்தி எந்த மூச்சும் விடல..? இந்த சந்தேகங்கள விளக்க வேண்டிய கடமை ஜூ.விக்கு உண்டு...விளக்கம் அளிக்கும் வரை இப்போதைய ஜூ.வி பழைய நடுநிலை வகித்த ஜூ.வியே அல்ல என்றுதான் கருத வேண்டியிருக்கிற து.
Quote
 
 
+5 #1 MARAIKA 2011-06-15 11:07
எனக்கு கொஞம் கொடுங்கப்பா
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 31 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1287
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week33746
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month236478
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12758597