|
நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான "தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு' அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை என்பது கடந்த இரு நாள்களாக அனைத்துத் தரப்பிலும் எழுப்பப்படும் கண்டனங்களிலிருந்தும் குமுறலில் இருந்தும் தெரியவருகிறது.
சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட பெரிய பள்ளிகளில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம், ஏற்கெனவே நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு அறிவித்த கட்டணத்தைக் காட்டிலும் ரூ.7,000 அதிகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. எஸ்பிஒஏ மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 வகுப்புக்கு கோவிந்தராஜன் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட ரூ.11,000, இப்போது ரூ.25,000-மாக அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
பொதுவாகப் பார்க்கும்போது இந்தக் கட்டணங்கள், தனியார் பள்ளிகளைத் திருப்தி செய்யும் விதத்தில் சராசரியாக 40 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, நகர்ப்புறத்தில் உள்ள பெரிய பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளின் நலனைக் காக்க வேண்டும் என்ற முடிவோடு கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பது போலவும் தோற்றம் அளிக்கிறது.
சில பள்ளிகள் மிகக் கூடுதலாகவே கட்டணம் பெற்றுள்ளன என்பதோடு, மிகச் சில பள்ளிகளுக்கு மட்டுமே கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைவான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிகச் சில பள்ளிகளுக்கு முன்பைக் காட்டிலும் சில நூறு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டிருப்பதும்கூட நடைபெற்றுள்ளது. மொத்தத்தில் பார்த்தால் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணங்களை உயர்த்துவதற்காகவே இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டதோ என்றுகூடப் பெற்றோர்கள் அங்கலாய்க்கும் விதத்தில்தான் ரவிராஜபாண்டியன் கமிட்டியின் பள்ளிக் கட்டண நிர்ணயம் இருப்பதாகத் தெரிகிறது.
டிசம்பர் 2009-ல் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி, மிகக் குறுகிய காலத்தில் 10,500 பள்ளிகளையும் ஆய்வு செய்து, கட்டணத்தைத் தீர்மானித்திருப்பது இயலாத காரியம் என்று தனியார் பள்ளிகள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ரவிராஜபாண்டியன் இக்குழுவின் தலைவராக நவம்பர் 2010-ல் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின்னர் நவம்பர் 15-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை 6 மாதங்களில் இந்த 6,400 பள்ளிகளில் எப்படி ஆய்வு நடத்தியிருக்க முடியும்? ஒவ்வொரு பள்ளியாகத் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து இந்தக் கமிட்டி கட்டணம் நிர்ணயித்தது என்பது மட்டும் நம்பக்கூடியதாகவா இருக்கிறது?
கட்டணங்கள் தங்களுக்குச் சாதகமாக இல்லாமல் இருந்திருந்தால், இத்தகைய கேள்வியைத் தனியார் பள்ளிகள் கிளப்பியிருக்கும். ஆனால், தாங்கள் எதிர்பார்த்தபடியே இக்கட்டணங்கள் அறிவிக்கப்பட்டதால், இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல அவர்கள் என்ன அத்தனை அப்பாவிகளா?
மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலரால் இந்தக் கட்டண விவரக் கடிதம் அளிக்கப்பட்டபோது அதைப் பார்த்த ஒரு தனியார் பள்ளித் தாளாளர், ""அட ஐநூறு ரூபாய் குறைஞ்சா என்னப்பா, புத்தகம் சீருடைக் கட்டணங்களை விருப்பம்போல வசூலிக்கலாம் என்று சொல்லிவிட்டார்களே, இதுபோதும்'' என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் சத்தமாகவே சொல்ல, அனைவரும் புன்முறுவல் செய்தனர் என்று கேள்விப்படும்போது, நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவில் குறை இருப்பதைக் காணமுடிகிறது.
திமுக ஆட்சியால் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் நீதிபதி ரவிராஜ்பாண்டியன். அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் வந்தால் வந்துவிட்டுப்போகட்டுமே என்ற எண்ணத்தில், இத்தகைய பாரபட்சமான ஒரு கட்டணத்தை அறிவித்துவிட்டு, பதவி விலகிச் சென்றுவிட்டாரோ நீதிபதி ரவிராஜ்பாண்டியன் என்றுகூட சந்தேகிக்க இடமிருக்கிறது.
எதற்காகப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை ஆகியவற்றைப் பள்ளிகளிலேயே வாங்க வேண்டும்? ஷு, கேன்வாஸ் ஷு ஆகியவற்றுக்கும்கூட இவர்கள் கடைவிரித்து கமிஷன் பார்க்கிறார்கள் என்று பெற்றோர் புலம்பியழும் நிலையில், இதனை அவர்கள் விருப்பம்போல வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் அதன் வசதிகள், தேர்ச்சி விகிதம், ஆசிரியர் எண்ணிக்கை, இடவசதி, கல்வித் தளவாடங்கள் அனைத்தின் அடிப்படையிலும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கப்பட வேண்டும். அந்தத் தரத்துக்குள் வரும் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தையும் இதேபோன்று நான்கு விதமாகப் பட்டியலிட்டாலே போதுமானது. நகரங்களில், பெருநகரங்களில் அமையும் பள்ளிகள் தங்கள் கட்டணத்தில் எத்தனை விழுக்காடு அதிகரித்துக்கொள்ளலாம் என்று அனுமதி தந்தாலும் போதும்.
ஓர் அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், வாடகைப் படி ஆகியன அவரது பதவி, அவர் பணியாற்றும் இடத்தைப் பொறுத்து ஒரே சீராக நிர்ணயிக்கப்படும்போது, பள்ளிகளையும் ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கவும், நகர்ப்புறத்துக்கு ஏற்பக் கட்டணத்தை உயர்த்தும் அளவையும் அரசு தீர்மானிப்பதில் என்ன சிக்கல்?
தனியார் பள்ளி ஆசிரியர்களின் தரம், சம்பளம் என்றெல்லாம் பேசுகிறார்களே, அப்படியானால் எல்லா தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தைத் தங்களது பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க முன்வருவார்களா?
கல்வியறிவிலும் தொழில்வளர்ச்சியிலும் தமிழகத்திலேயே கடைநிலையில் உள்ள தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பள்ளிக்கூடத்தில் எல்கேஜி படிப்புக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த ரூ.4,000-த்தையே அதிகம் என்று கூறிய நிலையில், அந்தப் பள்ளிக்கு ரூ.6,400 (அவர்கள் ஏற்கெனவே வசூலித்ததைக் காட்டிலும் ரூ.300 குறைவு) வசூலிக்க நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு அனுமதித்துள்ளது என்றால், மாவட்டத்தில் சாதாரண நடுத்தரவர்க்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எப்படித் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அனுப்ப முடியும்?
பள்ளிகளை நான்குவிதமாகத் தரம் பிரித்து, தமிழ்நாடு முழுவதும் நான்குவிதமான கட்டணங்கள் மட்டுமே இருக்க வகைசெய்தால் அனைத்துப் பெற்றோருக்கும் நன்மை தரும். மேலும், இப்போதைய கட்டணத்தைப் பள்ளியில் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறையைக்கூட அலட்சியப்படுத்தும் இந்தப் பள்ளிகளைத் தரவரிசைப்படுத்தினாலாவது, இதன் கட்டணம் இதுதான் என்பதை அரசு அறிவிப்பதிலும் சிக்கல் இருக்காது.
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்துக்கும் மேலாக வசூலிக்கும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்வது அல்லது அரசுடைமையாக்குவது என்பதை ஓரிரு பள்ளிகளில் செய்தாலும்கூட போதும், தமிழ்நாட்டின் தனியார் பள்ளிகள் அனைத்தும் சட்டத்தின் ஆட்சிக்குள் வந்துவிடுவார்கள்.
இதற்கு அதிகாரிகளுக்கும் மனதில்லை. அரசியல்வாதிகளும் தயாரில்லை. ஆட்சியாளர்களுக்கும் துணிவில்லை. முந்தைய அரசின் நிலை இதுவாகத்தான் இருந்தது. இன்றைய ஜெயலலிதா அரசு பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்துவதன் மூலம், தன்னை ஒரு மக்களின் அரசாக நிலைநிறுத்த முடியும். இந்த வாய்ப்பை முதல்வர் நழுவவிடலாகாது!
 |
K Raviraja Pandian Retired Justice, Madras High Court
PLOT NO: B2/5, THIRUVANMIYUR EXTENSION DATE: 11 NOVEMBER 2009 SIZE: 3,117 SQ FT PRICE: Rs. 68.54 LAKH CURRENT MARKET PRICE: Rs. 3.2 CRORE
VIOLATIONS Close relative of DMK supremo Karunanidhi and the Chairman of the School Fee Determination Committee. Little wonder then he was also the recipient of special favours while he was still a serving judge. At the time of the allotment, the judge owned a 50 percent share in an ancestral house at Thiruveezhimizhalai village. The judge had also sold a property he owned at Pazhavatthankattali village near Kumbakonam. The land was purchased in 1991, a house was constructed on it in 1992 and sold in 2009. He had also sold the landed property of his wife in 2009.
|
நன்றி தினமணி மற்றும் டெஹல்கா
|
Comments
As for as Dinamani daily concerned some feedbacks made comment on Dinamani.I was a reader of Dinamani for its valuable articles and Editorials.But I too have no belief on their democracy.
On death of Sri Saibaba,they wrote in their Editorial,prais ed Saibaba and worstly criticized the Rationals,unbel ievers of God.
I want to make my feedback on critize the Editorial.But It was totally rejected.Somebody may say that it is technical mistake.Believe me I have tried many times to register my feedback.But it was purposely denied.What is the reason.Dinamani also biased and have some vested interests.Thank you for Savukku if this is publised.
///பள்ளிகளை நான்குவிதமாகத் தரம் பிரித்து, தமிழ்நாடு முழுவதும் நான்குவிதமான கட்டணங்கள் மட்டுமே இருக்க வகைசெய்தால் அனைத்துப் பெற்றோருக்கும் நன்மை தரும்.///
தினமணி வெளிப்படையாகவே தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவு/idea தான் தருகிறது... நடுத்தர வர்க்கத்தின் தேவைக்கு / பணபலத்துக்கு ஏற்ற (B or D)தனியார்ப் பள்ளியில் படித்தாலும், அதிலும் ஏற்றத் தாழ்வு தானே? A பள்ளியில் படித்தவன், D பள்ளியில் படித்தவன் என்று பாகுபாடு மேலும் வளரும் தானே? the discrimination will be there till the college admission(esp. prof college).
B,C,D தனியார் பள்ளி முதலாளிகளும் தரத்தை எத்தி கட்டணத்தை உயர்த்த தான் (எல்லா தனியார் பள்ளி முதலாளிகளும் சம்பாதிக்க தானே இந்த ஆலோசனை?)
அப்புறம் சமச்சீர் கல்வி என்பதற்கு அர்த்தமே இல்லையே...
தனியார் பள்ளியில் ஏ.சி.யில் படித்தாலும், அரசுப் பள்ளியில் கட்டாந்தரையில் படித்தாலும் ஒரே கல்வியை கொடுங்கள்.. அதுதான் முக்கியம்...
அப்புறம் மக்கள் ஏன் தனியார் பள்ளி நோக்கி செல்ல வேண்டும்?
மக்களை வாழ விட்டாலே போதும்...
v.gopalakrishn
-உன்னைப் போன்ற ஏமாளிகலில் ஒருவன்
அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஓய்வெடுக்கும் வயது முதிர்ந்த அவருக்கு தி.மு.க.வை போலவே மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் விட்டுவிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன், என் தாயிடம் என் அண்ணன் குழைந்தையை அரசு பள்ளியில் சேர்க்க சொன்னேன் (மேலும் தனியார் ஆங்கில சிறப்பு வகுப்பில் சேர்க்கலாம் என்றேன்) அதற்க்கான பதில், உன் அண்ணி என்னை திட்டி தீர்த்துவிடுவாள ் நான் கூறினால் என் பிள்ளையின் எதிர்காலத்தை நாசமாக்க பார்க்கிறார்கள் என்று, அனைவரின் குழந்தைகளும் கான்வென்ட் போகும்போது ஏன் என் குழந்தை மட்டும் அரசு பள்ளிக்கு போக வேண்டும் என்று கேட்பாள் என்று?!! (ல்க்க் க்கு 10000 ரூபாய், எனது இஞினியரிங் காலேஜ் கட்டணமே 9000 ௦ரூபாய்) குடும்பத்துல ஏன் குழப்பத்த உண்டு பண்ணனும்னு :) நான் அமைதியாகிவிட்டே ன்? அவர்களும் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார்கள் (தனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்த ஈரோடு நகர் கலெக்டர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், இது ஒரு சிறந்த முன்னுதாரணம்)
But the judges are not.
கல்வி வியாபாரமாய் போய்விட்டது. மாணியங்களுக்கான செலவுகளை குறைக்கின்ற அரசுகள் தொடர்ந்து கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியமான துறைகளிலும் தங்கள் செலவைக் குறைப்பதற்காக கல்வியை தனியார்களிடம் கொடுக்கின்றன. கல்வி வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு எவ்வளவு லாபம் என்பதே குறிக்கோளாக இருக்க முடியும். வியாபாரம் சிறப்பாக நடக்க ஏதோ சில வசதிகளைக் காட்டி தனது வாடிக்கையாளர்கள ை இழுக்கிறார்கள். அதிக கட்டணங்களை வசூலிக்கிறார்கள ்.
தினமணி பத்திரிக்கை ஒரு ரூபாய்க்குத்தான ் விற்க வேண்டும் என்று அரசு சொன்னால் இவர்கள் விற்பார்களா? தினமணி தனது தரத்தில் வேண்டுமானால் ஊடக தர்மத்துடன் நடந்து கொள்ளலாம் ஆனால் வியாபர நோக்கில் வரும்பொழுது தனது லாபத்தை விட்டுக்கொடுப்ப ார்களா? அப்புறம்...ஊடக தர்மத்துடன் நடந்துகொள்கிறார ்களா என்பதே விவாதத்திற்குரி ய ஒன்று!!
அதுபோல வியாபாரத்தையும் அனுமதித்து விட்டு விலையிலும் கை வைத்தால் எப்படி தொழில் செய்ய முடியும.?
கல்விக் கட்டணங்கள் மக்களின் கழுத்தை நெறிக்கின்றன. இதை தடுப்பதற்கு என்ன வழி? கல்வியில் வியாபாரத்தை தடை செய்வதுதான். கல்வியில் தனியார்களின் பங்கீட்டைக் குறைப்பதுதான். அரசே கல்வி கூடங்களை நடத்துவதுதான். தாய் மொழி வழிக் கல்வி அல்லாமல் அந்நிய மொழி பயிற்று மொழியாக இருக்கும் பொழுது கல்விக்கான செலவும் கூடுகிறது. கல்வியின் தரமும் பாதிக்கப்படுகின ்றது. தாய் மொழி வழிக் கல்வியை அரசே கொடுப்பதுதான் தீர்வை நோக்கிச் செல்வதற்கான சரியான பாதையாக இருக்கும்.
அதற்கு குரல் கொடுப்பதன்றி கருணாநிதி ஜெயலலிதா என்று உண்மைக்கு புறம்பாக பேசுவது மக்களைத் திசை திருப்பும் செயல். இது மறைவில் தனியார் மயமாக்கலுக்கு ஆதரவாக மக்களின் கோபத்தை திசை திருப்பும் செயல். அதனால்தான் தினமணி என்கிற வியாபார நிறுவனம் ஊடக தர்மத்திலாவது ஒழுங்காக நடந்துகொள்கிறதா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
ஆனால் இந்த கோவிந்தராஜனோ நீதிபதியாக இருந்தும் பயன் தரவிலலை, நீதிபதியாக ஓய்வுப்பெற்றும் (இறந்தும்) பயன் தரவில்லை.
மாறன் குடும்பத்துக்கு உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக நீதிபதியாகி, ”அநீதி” வழங்கி வந்தார்.
இப்பொழுது வயதான காலத்தில் பள்ளி கட்டணம் விஷயத்தில் “settings and cuttings" பார்த்து வளமாக்கிகொண்டார ்.
நிதியின் சம்பந்தி நிதிபதிதானே?
http://thatstamil.oneindia.in/news/2011/06/16/erode-collector-admits-his-daughter-in-govt-school-aid0091.html
செயல் திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தினலே போதும் வறுமை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் சிறந்த கல்வி தேவை பூர்த்தியாகிவிட ும் .
தனியார் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தை சரி செய்கிறோம் ,கட்டணம் வரையறுக்கிறோம் என்று அந்த குழு இந்த குழு என்று வெட்டி செலவு
செய்யும் பணத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த செய்யலாம் .
RSS feed for comments to this post