முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சிக்கலில் செட்டி நாட்டு சீமான்….. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 13:50

 

பழனியப்பன் சிதம்பரம் அவர்களுக்கு செட்டிநாட்டுச் சீமான் என்று சவுக்கு பெயர் வைக்கவில்லை. இந்தப் பெயரை வைத்தது, சிதம்பரத்துக்கு இன்று நெருக்கமாக இருக்கும் கருணாநிதி.   1991 – 1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், சிதம்பரம் மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்தார்.   அப்போது நடந்த ஒரு விழாவில், மேடையில் சிதம்பரத்துக்கு நாற்காலி போடாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது, சிதம்பரத்தைப் பார்த்து கருணாநிதி கூறியதுதான் ”செட்டிநாட்டுச் சீமான் கைகட்டி நிற்கிறார்” என்பது.

 Chidam_baram

செட்டி நாட்டு சீமான் சிதம்பரம் சிக்கலில் மாட்டப் போவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன.   உள்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் சிதம்பரம், 2009 பாராளுமன்றத் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றார் என்று, ஜெயலலிதா டெல்லியில் பேட்டியளித்த போதே, சிதம்பரம் கலக்கமடைந்தார்.

 

மேலும், சாமான்யத்தில் முடிவு தெரியாத வழக்குகளாகத் தான் தேர்தல் வழக்குகள் இருப்பது வழக்கம். இந்த வழக்கை விரைவாக விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளதும், சிதம்பரத்தின் கலக்கத்துக்கு காரணமாக இருந்தது. இந்நிலையில் டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

 

அது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஆ.ராசாவுக்கு பங்கு இருந்தது போலவே சிதம்பரத்துக்கும் பங்கு இருந்தது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். டாக்டர்.சுவாமி கூறும் குற்றச் சாட்டில் அடிப்படை இல்லாமல் இல்லை.   ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவுகள் எடுத்ததில், சிதம்பரமும் பங்கு வகித்துள்ளார் என்பது அது தொடர்பான கோப்புகளில் இருந்து தெரிய வருகிறது.   ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கு துளியும் பங்கு இல்லை, அத்தனையும் செய்தது திமுகவே என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ் பக்கம், இந்த ஊழல் விசாரணை பாயாமல் பார்த்துக் கொள்கிறது மத்திய அரசு.

இது தொடர்பாக நேற்று சுப்ரமணிய சுவாமி ஒரு ஆதராத்தை வெளியிட்டார். அது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் நோட் பைல் எனப்படும் அலுவலகக் குறிப்பு. 5 நவம்பர் 2009ல் அப்போது அமைச்சராக இருந்த ராசா, ஒரு குறிப்பை எழுதுகிறார்.

 swamy

அந்தக் குறிப்பில் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுத்த பின்னர், அவை தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்தது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.   இது தொடர்பாக நிதி அமைச்சர் சிதம்பரத்தோடும், பிரதமர் மன்மோகன் சிங்கோடும், கலந்தாலோசிக்கப் பட்டது.   அந்த கூட்டத்தில், நிதி அமைச்சர் சிதம்பரம், வியாபாரத்தை விரிவாக்குவதற்காக, அந்நிய முதலீட்டை வரவேற்பது, லைசென்சை விற்பனை செய்வதாகாது என்று அருள்வாக்கு கொடுத்திருப்பதாக ராசா அந்தக் குறிப்பில் தெரிவிக்கிறார்.

 IMG

அதாவது 1700 கோடிக்கு லைசென்ஸ் வாங்கி விட்டு, யூனிடெக் நிறுவனம், நார்வேயின் டெலிநார் நிறுவனத்துக்கு, 9100 கோடிக்கு தனது 67 சதவிகித பங்குகளை விற்பனை செய்தது என்பது, லைசென்சை விற்றது ஆகாது என்கிறார் சிதம்பரம். நன்றாக இருக்கிறதய்யா உமது நியாயம்.

 

டாக்டர் சுவாமி சிதம்பரம் மீது வீசிய அடுத்த குண்டு, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்க ஏற்பாடு செய்தவர் சிதம்பரம் தான் என்று. சுவாமியின் குற்றச் சாட்டை உதாசீனப் படுத்த முடியாத அளவுக்குத் தான் அந்த விவகாரம் நடந்திருக்கிறது.

 4091621577_9a02dffa78_b

கடந்த செப்டம்பர் மாதம், பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப் பட்டிருப்பதாக மன்மோகன் சிங்குக்கு பிரணாப் கடிதம் எழுதுகிறார்.   அதற்கு முன்பாக, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்திடம் (Central Board for Direct Taxes) இந்த விவகாரத்தை பற்றி விசாரிக்க உத்தரவிடுகிறார் பிரணாப்.   அந்த நிறுவனம், தனியார் துப்பறியும் நிறுவனங்களை வைத்து, அந்த ஒட்டுக் கேட்கும் கருவிகள் இருக்கிறதா என்று ஆராய்ந்து, 13 இடங்களில் சூயிங் கம் பொருத்தப் பட்டிருப்பதை கண்டு பிடித்தது. இதில் எழும் முக்கியமான ஒரு கேள்வி, நிதி அமைச்சராக இருக்கும் ஒருவர், ஒட்டுக் கேட்கும் கருவிகள் இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்ததும், மத்திய உளவுத் துறையிடம் (Intelligence Bureau) ஏன் சொல்லவில்லை.   அடுத்த கட்டிடத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் சொல்லாமல், ஒரு தனியார் நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

 

ஜெயலலிதா வீசிய முதல் அஸ்திரம், சிதம்பரத்தை சுற்றி சுற்றி அடிப்பது நிற்பதற்குள்ளாகவே, அடுத்த சிக்கலில் சிக்கியிருக்கிறார் சிதம்பரம்.   சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவராக வருவதை விரும்பாத சக்திகள் இது போல செயல்படுகின்றன என்றும் ஒரு தியரி சொல்லப் படுகிறது. மற்றொரு தியரி, ராகுல் காந்திக்கு போட்டியாக, தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை வளர்ப்பது, சோனியாவுக்கே பிடிக்காத காரணத்தால் சோனியாவே, சிதம்பரத்தை இது போல சிக்கலில் இழுத்து விடக் கூடும் என்றும் சொல்லப் படுகிறது.

 

எது எப்படியோ, கத்திரிக்காய் முற்றினால், கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

 

Comments  

 
0 #32 Anbarasan . K 2011-07-01 13:14
சிற்ப்பானா தகவல், நன்றீ அன்பரசன் கருர்
Quote
 
 
0 #31 barathi 2011-06-30 18:35
லுசு பயலுக
Quote
 
 
0 #30 raja 2011-06-29 14:51
என்ன இது
Quote
 
 
0 #29 Vaedhampudhidhu 2011-06-29 00:30
Quoting kk:
http://www.dailypioneer.com/348073/Corporate-nexus-in-Karuna-TV-bailout.html


கலைஞர் டிவி சுவாரஸ்யமாக, கடனை திருப்பி செலுத்த டிசம்பர் 24, 2010 அன்று விசாரணைக்காக முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ராஜா வர சிபிஐ மணி நேரத்திற்குள் தவணையில் தொடங்கப்பட்டது . கடைசி தவணை பிப்ரவரி 2011 அன்று வழங்கப்பட்டது.

இந்தியா சிமெண்ட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை தாங்கும் ஸ்ரீனிவாசன்,, கலைஞர் டிவி ரூ 50 கோடி சம்பளம். ஸ்ரீனிவாசன், இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர், கருணாநிதி குடும்பம் மிகவும் நெருக்கமான கருதப்படுகிறது. மல்லையா தான் யுபி குழுமம் கூட கலைஞர் டிவி ரூ 50 கோடி
"கலைஞர் டிவி நிறுவனங்கள் மூலம் இந்த முறைகளை ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒரு குற்றவியல் சட்டம் ஒரு பகுதியாக இருக்கலாம். அவர்கள் பிரச்சினை பற்றி அறியாமல் இருக்கலாம் மற்றும் கலைஞர் டிவி மற்றும் மக்கள் அதை கட்டுப்படுத்தும ் அரசியல் ச்லொஉட்ச் காரணமாக பணம் செலுத்த வேண்டும். நாம் இந்த நான்கு நிறுவனங்களின் விளக்கமும் பெற முடிவு செய்து எப்படியோ, "சிபிஐ வட்டாரங்கள் சொன்னது.

"பெருநிறுவன வீடுகளில் இருந்து இந்த நடவடிக்கைகளை கலைஞர் டிவி நிறுவனம் பணத்தை திருப்பி தர தனது சட்டை பையில் இருந்து எதுவும் செலவிட என்று காட்ட," ஆதாரங்கள் சேர்க்கப்பட்டது .

சிபிஐ ச்லெஉத்ச் மற்ற இரண்டு பெருநிறுவன வீடுகள் பற்றி டிக்ஹ்ட்லிப்பெட ் இருந்தது. எனினும், இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்டார் ஐடி நிறுவனம் என்று கற்று உள்ளது
Which are those other two companies?
HCL,Infosys,Wip ro???
TVS,Santiago Martin????

Any idea???


Actor naepolean running an software firm which is situated at porur-chennai, that might be one and second one I guess its Infy cause which is involving some govt projects. I dont think for cheep cost an MNC provide software service to govt.
Quote
 
 
-7 #28 anniyan 2011-06-28 12:52
அடச்சே... நான் என்னமோ செபாஸ்டியன் சைமன் (சீமான்) என்று நினைச்சேன். சீக்கிரம் அவரும் மாட்டுவார்.

--கார்கில் வீரன்
Quote
 
 
+4 #27 padhu 2011-06-27 19:27
He is imposing High Tax on People. Congress people are thinging that they are Very clever. But, people knows about this corrupted Congress men. karunanidhikku jalra/Sombu adippavan.
Quote
 
 
+2 #26 thamizhan 2011-06-27 19:26
உஙளுக்கு யாரையாவது புடிக்கலனா கென்னத்தனமா எதவது எழுதுவீங்க போல??

ராகுலுக்கு போட்டிய கார்த்தி வழர்ரத்து :லொல்: எல்லம் நீங்க ஊடாண்சு தான் விடுரீங்கனு தொனுது....
உன்மைய எழுதுங்க...

உஙகளுக்கு புடிக்கலனா.... பார்பனன் அது இதுனு திடுவீங்க... வேனும்னா..சுப்புரமணிய ஸ்வாமியா??

பிரபாகரனோட ஒப்பிட்டுக்கொள் கிரா... திருமா கிட்ட கெஷுரீங்கா... நடுநிலையா எழுதுங்க சவுக்கு... இல்லனா எழுதாதீங்க... அதிமுகக்கு ஜால்ரா அடிக்கதீங்க.... :-* ;-)
Quote
 
 
+11 #25 REBEL 2011-06-27 04:49
செட்டி நாட்டவஙக கொவ்ரமா இருப்பாஙகன்னு கேள்வி பட்டிருக்கேன். இந்த ஆளூ இவ்வளவு கேவலமா இருக்காரே. குல மானத்தை கெடுக்க வந்த குள்ள நரியே. திருந்துயா. உனக்காக இல்லாட்டாலும், உன் குல பெயருக்காகவாவது .
Quote
 
 
+21 #24 MGR 2011-06-26 23:00
அதுசரி...ராகுலுக்கு போட்டியாக கார்த்தியா?...கொஞ்சம் ஓவரா தெரியலை... ராகுல் ஒரு அரைவேக்காடு என்கிற கோணத்தில் வேண்டுமானால் அப்படி சொல்லலாமே ஒழிய...மற்றபடி கார்த்தி முதலில் கழக கூட்டணியின்றி சொந்தத்தொகுதியி ல் டெபாஸிட் வாங்கிக்காட்டட் டும்...
Quote
 
 
+14 #23 Thirumalai 2011-06-26 16:40
2004-ம் ஆண்டுக்கும் முன்பும், பின்பும் காங்கிரஸ் அரசின் அத்தனை அயோக்கியத்தனங்க ளும் தெரிந்தே, 2009-ம் ஆண்டும் காங்கிரஸை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நாம் மேலும் விழிப்புனர்வை ஏற்படுத்த தவறிவிட்டோம்! இனியாவது அந்தப் பனியை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
Quote
 
 
+3 #22 R Ramamoorthy 2011-06-26 13:55
Shame Minister Chidamparam
Quote
 
 
+6 #21 Juji 2011-06-26 12:18
மாட்டிக்கிட்டான ்டா
Quote
 
 
+5 #20 K G Ramachandran 2011-06-26 11:31
I am sorry I could not able to explain.
Savukku has not published how Ambani earned so many millions in short span.
Quote
 
 
+1 #19 K G Ramachandran 2011-06-26 11:26
ஹெல்லொ சவுக்கு அம்பனி பனம் குவிதார், யெப்படி யென்பது ஷிதம்பர ரகசிஅம் யென்ன?
Quote
 
 
+1 #18 Basha Bhai 2011-06-25 23:54
we must make Amma aware of the four firms.Actual advertisements given since giving above money,advts given earlier,service tax paid,contracts, four cos advertisements to other channels should be probed.If Amma stares at Ind Cements and UB ,They will vommit everything.Pl circulate to all inc Amma
Quote
 
 
+11 #17 kumaravel hyderabad 2011-06-25 18:44
ராஜா:நாம் பேசியே ஆகணும்....

கனிமொழி:இப்ப வேணாம்..பெயில் கிடைக்கட்டும்..அப்புறம் பேசலாம்..

ராஜா:நான் பேசனும்னு சொன்னதே.. அத பத்திதான்..கிடைக்குமா?... கிடைக்காதா?
எனக்கு இங்க வடை பிடிக்கல....
Quote
 
 
+13 #16 kumaravel hyderabad 2011-06-25 18:26
சோனியா: இதுக்கு மேல யாராவது அழகிரி பத்தி எழுதுனீங்க...அவர அமெரிக்க தூதராக அனுப்பிடுவேன்...ஜாக்கிரதை...

அழகிரி: அக்கா|..போதும் இதோட நிறுத்திக்குவோம ்....{மனதுக்குள்}அவங ்களே தேவலாம் போல...
Quote
 
 
+12 #15 raama.pillappan 2011-06-25 15:37
பட்டினத்தாரும் ஒரு செட்டினாட்டு சீமாந்தான்.அவர் பாடியதைக் கேளுங்கள்:
"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பேரும்சதமல்ல''''பிள்ளைகளும் சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்தில் யாரும் சதமல்ல'"'"பணம்தான் சதம் என்று பாபங்களைத் தேடாதே மனிதா.
Quote
 
 
+6 #14 raama.pillappan 2011-06-25 15:27
ஈராக் நாட்டு சீமான் சதாம் ஹுசேன் என்ன ஆனார்.?ஜெர்மனி நாட்டு சீமான் ஹிட்லெர் என்ன ஆனார்?இத்தாலி நாட்டு சீமான் முசோலினி என்ன ஆனார்?.இன்று எகிப்து நாட்டு சீமான் முபாரக்கும் லிபியா நாட்டுசீமான் கடாபியும் என்னவாகிக்கொன்ட ிருக்கின்றார்கள ்?
தவறு செய்யாதிருங்கள் .செய்தால் வரலாறு மன்னிக்காது
Quote
 
 
+10 #13 raama.pillappan 2011-06-25 15:15
சிதம்பர ரகசியம் இப்போதுதானே கசியத் தொடங்கியுள்ளது.அடுத்த ஹீரோ அவர்தான்.உலகத்தையே ஆட்டிப்படைத்த ஹிட்லர் என்ன ஆனார்.காலம் செய்யும் கோலத்திற்குப் பெயர்தான் வரலாறு.
Quote
 
 
0 #12 Ravi_8332 2011-06-25 13:43
So long as Savukku does not become junior Kunjamani, we have no problem.
Quote
 
 
+5 #11 Saravana 2011-06-25 04:30
Shame on Chidambaram...
Quote
 
 
+21 #10 RabaSha 2011-06-25 04:00
ப.சி. ஒரு பசு தோல் போர்த்திய நரி. நிறைய பேர் இவர் புத்திசாலி, மிக நல்லவர் என்று நினைத்துள்ளனர். இவரின் வேடம் கடந்த எம்.பி. தேர்தலில் ஏமாற்றியபோது கலைந்தது, பிறகு இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நிருபனமாகியுள்ள து. நல்லது நடக்கட்டும்.
Quote
 
 
+12 #9 red 2011-06-25 00:38
சுப்ரமனியசாமி,அ வா..சும்மா இருக்க மாட்டா...எப்டியும் பா.சி'ய சிக்க வஷ்ஷிருவா...கார்தி ஷிதம்பரம் லாம் ஒரு டான் ஆஹ்....தஙகபாலுவொட பொட்டிபோட்டு தமில்னாடு காங்கிரச் தலைவர் பதவிய பிடிக்க சொல்லுஙக...அவனும் சூனா...பானா...னு ஒத்துக்கரென்.....
Quote
 
 
+2 #8 kk 2011-06-24 21:23
http://www.dailypioneer.com/348073/Corporate-nexus-in-Karuna-TV-bailout.html


கலைஞர் டிவி சுவாரஸ்யமாக, கடனை திருப்பி செலுத்த டிசம்பர் 24, 2010 அன்று விசாரணைக்காக முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ராஜா வர சிபிஐ மணி நேரத்திற்குள் தவணையில் தொடங்கப்பட்டது . கடைசி தவணை பிப்ரவரி 2011 அன்று வழங்கப்பட்டது.

இந்தியா சிமெண்ட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை தாங்கும் ஸ்ரீனிவாசன்,, கலைஞர் டிவி ரூ 50 கோடி சம்பளம். ஸ்ரீனிவாசன், இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர், கருணாநிதி குடும்பம் மிகவும் நெருக்கமான கருதப்படுகிறது. மல்லையா தான் யுபி குழுமம் கூட கலைஞர் டிவி ரூ 50 கோடி
"கலைஞர் டிவி நிறுவனங்கள் மூலம் இந்த முறைகளை ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒரு குற்றவியல் சட்டம் ஒரு பகுதியாக இருக்கலாம். அவர்கள் பிரச்சினை பற்றி அறியாமல் இருக்கலாம் மற்றும் கலைஞர் டிவி மற்றும் மக்கள் அதை கட்டுப்படுத்தும ் அரசியல் ச்லொஉட்ச் காரணமாக பணம் செலுத்த வேண்டும். நாம் இந்த நான்கு நிறுவனங்களின் விளக்கமும் பெற முடிவு செய்து எப்படியோ, "சிபிஐ வட்டாரங்கள் சொன்னது.

"பெருநிறுவன வீடுகளில் இருந்து இந்த நடவடிக்கைகளை கலைஞர் டிவி நிறுவனம் பணத்தை திருப்பி தர தனது சட்டை பையில் இருந்து எதுவும் செலவிட என்று காட்ட," ஆதாரங்கள் சேர்க்கப்பட்டது .

சிபிஐ ச்லெஉத்ச் மற்ற இரண்டு பெருநிறுவன வீடுகள் பற்றி டிக்ஹ்ட்லிப்பெட ் இருந்தது. எனினும், இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்டார் ஐடி நிறுவனம் என்று கற்று உள்ளது
Which are those other two companies?
HCL,Infosys,Wip ro???
TVS,Santiago Martin????

Any idea???
Quote
 
 
+20 #7 பார்த்திபன் 2011-06-24 19:48
சவுக்கு தயவு செய்து "ராகுல் காந்திக்கு போட்டியாக, தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை வளர்ப்பது...." போன்ற யூகங்களை பெரிதாக எழுதவேண்டாம். இதைப் படித்தால் பயங்கர காமெடியாக உள்ளது. கார்த்தி சுள்ளெறும்பு மாதிரி ராகுலுக்கு. கடித்தால் கூட நசுக்கிக் கொன்றுவிடலாம். ப.சி. சிலபல கார்பரேட்டுகளின ் ஏஜண்ட். ஆ.ராசா போல அல்லு சில்லு கம்பெனிகளின் ஏஜெண்ட் அல்ல (டாடா சரிவர லஞ்சம் கொடுக்கத் தெரியாதவர்கள்). அம்பானிகள் போன்ற பெரிய தலைகளின் ஏஜண்ட். அம்பானிகளுக்குத ் தகிடுதத்தங்கள் கைவந்த கலை. ஸ்வான் நிறுவன தில்லுமுல்லுகளு க்கு அனில் அம்பானியைக் கைது செய்திருக்க வேண்டுமே? ஏன் நடக்கவில்லை?
Quote
 
 
+4 #6 kk 2011-06-24 17:21
This is a great scoop . You have beaten other media. P C days are numbered
Quote
 
 
0 #5 Basha Bhai 2011-06-24 17:11
http://www.indianexpress.com/news/kalaignar-tv-took-money-from-4-firms-to-pay-back-db-bribe/807949/

In its effort to locate the Rs 200 crore allegedly paid as bribe to Kalaignar TV, the CBI would examine accounts of the four firms, including UB Group and India Cements, that reportedly gave money to the channel in 2010-11.



This money, the CBI believes, was used by the channel to pay back the Rs 200 crore bribe to DB Group after the CBI registered a case against it.



In its chargesheet, the CBI had said Kalaignar TV paid back Rs 200 crore to Cineyug Films, which in turn paid it to Kusegaon Fruits, from where it was transferred to DB Group. This was apparently done to back its claim that the Rs 200 crore was a loan and not a bribe to former telecom minister A Raja and DMK MP Kanimozhi for grant of licence to Swan Telecom.
The CBI said of the eight transactions, in four cases, the money was paid by companies that are not in telecom or entertainment business. “We will be examining these transaction and will be calling the officials of these companies for questioning,” said a CBI official.
Quote
 
 
+3 #4 nagamoney 2011-06-24 16:55
when he was finance minister, he sold shares indirectly when the prices were high and will utter nonsense over the
TV and see that the share tumble as per his wish and will buy. that is why once PM asked him not to frequent to the TV shows.
Quote
 
 
-13 #3 Tamilmagan 2011-06-24 16:44
Today 8153
Yesterday 0
This week 73102
Last week 139920
This month 434791
Last month 664460
என்ன சவுக்கு வரவர ரீடர்ஸ் கூட்டம் காணாம போய்டுச்சி
என்ன காரணம் சரி சரி எதாச்சும் கில்மா மட்டர் போடு எல்லாம் ஓடி வந்துடுவானுங்க
Quote
 
 
+1 #2 Vaedhampudhidhu 2011-06-24 16:16
Nalladhu, but savukku eppavumae unga Blog choose pani padikiradhuku kaaranam neengal velipaduthum "confirming details". Adhu ipodhellam migavum kuraindhu vitadhu, edho Joo. Vee. la seidhi padikura maadiri iruku. Makaluku vaelichamae indha BLOG thaan adha konjam niraya details not from one single source nu ilama niraya source vaichu eludhina samudhaya vilipunarvuku ungal BLOG kai kodukum.
Quote
 
 
+4 #1 S.THIRUPPATHY 2011-06-24 15:52
your article super i am note for last two months your pages
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 292 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10123
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week52850
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month255582
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12777701