முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா நிர்பந்திக்கவில்லை ராஜபக்ஷே அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 3
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 29 ஜூன் 2011 16:43

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுமாறு தம்மை இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச தெரிவித்தார். எத்தகைய தீர்வாக இருப்பினும் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

கொழும்பில் செய்தியாளர்களிடம் ராஜபட்ச மேலும் கூறியது: அரசியல் சாசனத்தின் 13-வது பிரிவை அமல்படுத்துமாறு இந்தியா நிர்பந்திப்பதாகக் கூறுவது தவறு. அவ்விதம் எத்தகைய நெருக்குதலையும் இந்தியா அளிக்கவில்லை.

 

சமீபத்தில் தேசிய பாதுகாப்பு செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது வழக்கமான விஷயம்தான். அப்போது இரு நாடுகளிடையிலான இருதரப்பு உறவு குறித்து விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

 

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டனர். ஆனால் இது வழக்கமான சந்திப்பு என்று குறிப்பிட்டார் அதிபர் ராஜபட்ச.

 

இந்தியக் குழுவினர் தன்னைச் சந்தித்தபோது, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரைத்துள்ள கருத்துகளை சுட்டிக் காட்டினர். இந்த பரிந்துரைகளை நிறைவேற்றினாலே இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியிலான தீர்வாக அமையும் என்று சிவசங்கர் மேனன் குறிப்பிட்டதாக ராஜ பட்ச சுட்டிக் காட்டினார்.

 

எத்தகைய தீர்வாக இருப்பினும் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும், நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் எத்தகைய தீர்மானத்தையும் தான் நிறைவேற்றுவதாக ராஜபட்ச கூறினார். நாடாளுமன்ற தேர்வுக் குழுவை நியமித்திருப்பது, இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதை தள்ளிப்போடும் உத்தி என்று கூறப்படுவதை அவர் முழுமையாக மறுத்தார். அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்வுக் குழுவும் பேச்சு நடத்தும். அரசியல் கட்சிகள் பேச்சு நடத்தி வருகிறது. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும்.

 

இலங்கையின் வடக்குப் பகுதியில் மாகாண கவுன்சில் தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கிழக்குப் பகுதியிலிருந்து பிரிந்து பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். இத்தேர்தலுக்கு கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையும், சில ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதுகுறித்து கேட்டதற்கு, இதை சமாளிக்க இலங்கை அரசு இரண்டு வெவ்வேறு அறிக்கைகளை தயாரித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் ராணுவ செயல்பாடு 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு எவ்விதம் மாறியுள்ளது என்பதைக் குறிக்கும் விதமாக அமையும் என்றார் ராஜபட்ச. இந்த சந்திப்பின்போது உடனிருந்த வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் பேசுகையில், அனைத்து நாடுகளுமே இலங்கைக்கு எதிராக குற்றம் சாட்டவில்லை என்றும், ஐக்கிய நாடுகளின் சிறப்பு குழு தனது அறிக்கையில் போர் குற்றம் குறித்து குற்றம் சாட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

Comments  

 
+2 #10 sk.manikandan 2011-07-02 10:26
இந்த பொறம்போக்கு சொல்லி தான் நமக்கு தெரியனுமா? நம்ம இனத்தையெ அழிச்சுட்டாணூங் க.....ராசபக்ஸே அவன் குடும்பம் .. ஒருத்தன விடாம வேரொடு வெட்டி எரியனும்...... இங்க காங்ரச ஆட்சி ல இருந்து எரியனும்.....
Quote
 
 
+1 #9 naan kadavul 2011-07-01 19:23
இது ராஜபக்சேயின் முதல் உண்மை. என்றும் உண்மை பேசாத ராஜபக்சே முதல் முறையாக உண்மை பேசி இருக்கிறார். அண்மையில் மன்மோஹன் வெளியிட்ட கருத்து ஒன்றில் ராஜபக்சே நான் எது சொன்னாலும் கேட்பதில்லை என்று மறைமுகமாக, அதனால் தமிழர் பிரச்சனை பற்றி எதுவும் சொல்வதில்லை என்று கூறி இருந்தார். அத்துடன் அவரின் கருத்தில் தமிழர் பிரச்சனை பற்றி இப்பொது அவசரப்பட முடியாது என்றும் கூறி இருந்தார்.சிங்களத்தின் தற்போதய நிலை பாராளமன்றக் குளு முடிவை ஏற்பது என்பது தான். பாராளுமன்றில் இருப்பது பெரும்பான்மை சிங்கள உறுப்பினர்கள். அவர்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.
Quote
 
 
-5 #8 Ramanan 2011-07-01 11:51
வெளிநாட்டுவாழ் இலங்கைத்தமிழர்க ள் இந்த கோடை விடுமுறைக்கு பெருவாரியாக இலங்கைக்கு சுற்றுலா செல்லுகிறார்கள் .இவர்கள் அனைவரும்,இலங்கை பிரச்சனையை "உயர் ஜாதியினர் கையில்" ஒப்படைத்திருந்த ால் தமிழர்கள் காப்பற்றப் பட்டிருப்பார்கள ் என்று கருத்து தெரிவிக்கின்றனர ்(அதாவது பிராமணர்கள் மற்றும் இலங்கைத்தமிழ் வெள்ளாளர்கள்)(த ங்கள் வலதுகரமான தமிழ்தேசிய தலித்துக்கள் உட்பட).௨௦௦ ஆண்டுகளுக்கு முந்தைய காலனித்துவ சிந்தனை.மற்றபடி "கேள்வி கேட்கும் கிழ் ஜாதியினரை",பிரபாகரனைப்போல ்,நிர்வாணமாக்கி சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும்,தமிழ்நா ட்டில்,முரளிமனோ கர் ஜோஷியின் VHP யும் ஈழத்தில்? TNA யும் வரவேண்டும் என்கின்றனர்!.
Quote
 
 
+5 #7 Arunkumar 2011-06-30 15:48
தமிழர்களின் மறு வாழ்வுக்காகவோ, குடியுரிமை பெற்றுத் தரவோ, இந்தியா அறிக்கை விடுவதைத் தவிர (அதாவது கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக) வேறு எந்த முயற்சியும் செய்யவில்லையோ என்கின்ற பலமான சந்தேகம் உலக நாடுகளுக்கே கூட இருந்து வந்தது. இப்போது அது தெளிவாகி உள்ளது. ஏற்கனவே நமக்கு ஓரளவு தெரியும் ஆகையால் இந்தக் கட்டுரையில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ராஜபாக்ஷேவின் அறிக்கை தெளிவாக எடுத்துரைப்பதால ் ஒரு ஆதாரமாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளல ாம். இந்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு இந்தியாவின் மீதும் காங்கிரஸ் அரசின் மீதும் அவநம்பிக்கை அதிகமாகும். இரட்டை வேடம் போடும் இந்திய அரசு இதற்கு என்ன விளக்கம் சொல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Quote
 
 
+5 #6 Zertic 2011-06-30 12:07
சிவ சஙர மெனன் சொன்னான் நாஙக ஸ்ரிலஙகா வுக்கு நாஙக அலுத்தம் கொடுத்தம் ணு சொன்னான்........இன்னைக்கு ராஜ பட்செ சொல்ரான் இது வழ்க்கமான சடந்திப்புதானு............என்னாடா
Quote
 
 
+5 #5 jp 2011-06-30 10:21
USELESS PRIME MINISTER MANMOHAN
Quote
 
 
+6 #4 வால்டர் வணங்காமுடி 2011-06-30 07:57
ஈராக்,லிபியா விவகாரத்தில் அமெரிக்கா, ஐநா காட்டிய வேகம் இலங்கை விவகாரத்தில் காட்ட கிட்டத்தட்ட ஒரு லட்சம் வருடங்கள் ஆகும். காரணம் கொன்று புதைக்கப் பட்ட ஈழத் தமிழர்கள் மண்ணோடு மக்கி பெட்ரோலா மாறுவதற்க்கு அத்துணை காலம் ஆகும்.
Quote
 
 
+7 #3 வால்டர் வணங்காமுடி 2011-06-30 07:55
Quoting vennai:
CAN I ASK ONE QUS TO SAVUKKU READERS.. PIRABAHARAN SAID ONCE "SRILANGA ISSUE IS TAMIL AND SINGALAN ISSUE. WE ARE BROTHERS AND INDIA SHOULD NOT INVOLVE". better srilangam tamil should take care their issues. dont involve much..


If INDIA honoured PRABA's words, it should not have played major role in TAMILs GENOCIDE. If INDIA did not intervene 4th EELAM WAR, like the previous 3 wars PRABA would have won it.
NDIA not only respect PRBA's words but also volunterily involved and led the war against TAMILS. So as a TAMILAN, our first enemy is INDIA
Quote
 
 
-16 #2 vennai 2011-06-29 17:29
CAN I ASK ONE QUS TO SAVUKKU READERS.. PIRABAHARAN SAID ONCE "SRILANGA ISSUE IS TAMIL AND SINGALAN ISSUE. WE ARE BROTHERS AND INDIA SHOULD NOT INVOLVE". better srilangam tamil should take care their issues. dont involve much..
Quote
 
 
+13 #1 கண்ணன்,சென்னை 2011-06-29 16:55
மக்கு மன்மோகன் இருக்கும்வரை ராஜபக்க்ஷேவுக்க ும், எண்ணெய் கம்பெனிகளுக்கும ் பிரச்சனை இல்லை
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 62 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2466
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week24838
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month237657
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759776