முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையே..... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 11
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 29 ஜூன் 2011 16:46

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை  அதிபர் ராஜபட்ச உலகமகாப் பொய்ச் செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

 

இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை மிகவும் உக்கிரம் அடைந்த 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது - வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும்.

 

இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான்.

 Thangabalu_2

அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி. பார்த்தசாரதியை அந்நாட்டுக்கு அனுப்பி அன்றைய அதிபர்  ஜெயவர்த்தனேவிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தச் செய்ததும் இந்திராவே.

 

1985 ஜூலை 7-ந் தேதி திம்புவில் இலங்கை அரசையும், அந்நாட்டு விடுதலை முன்னணி தலைவர்களையும் இந்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தவர் ராஜீவ்காந்தி.

 

மேலும் ராஜீவ்காந்தி - இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு சிறந்த கடுமையான நிர்ப்பந்தமாக அமைந்தது. தமிழர்களுக்கு சுயஅதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது.

 

இலங்கை தமிழர்களுக்கு உரிமை தரும் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ராஜீவ்காந்தியை இலங்கையில் அந்நாட்டு ராணுவ மரியாதை ஏற்று வரும் நேரத்தில் துப்பாக்கியால் தாக்கினார் என்பதும், அக்கொள்கைக்கென்றே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆளானார்

 

என்பதும் வரலாற்றின் சோக அத்தியாயங்கள்.

 

கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் நான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு" என்று எனது உரையை பதிவு செய்திருக்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமர்.

 

இன்றைக்கு சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உட்பட பல்வேறு உயர்மட்ட

 

இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபட்சவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.

 

ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபட்ச தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்திற்கு உரியவராகிறார். எனவே அவரது இச்செயலை உலகம் ஏற்காது. இதையும் மன்னிக்காது என்று தங்கபாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments  

 
+3 #11 Vijay babu 2011-07-03 08:33
அட சாமி இந்த கொசுவ அடிச்சு கொல்லுங்கப்பா...தொல்லை தாங்க முடியல...
Quote
 
 
+1 #10 naan kadavul 2011-07-01 19:28
தங்கபாலு தான் உலகமகா பொய்யை சொல்லி வருகிறார். மன்மோஹன் சிங்கின் சமீபத்தய ஈழத் தமிழர் பற்றிய கருத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்று தங்கபாலு நினைத்து விட்டாரா இல்லை அவரும் அதைப் படிக்கவில்லையா?
Quote
 
 
+16 #9 Arunkumar 2011-06-30 15:57
இரட்டை வேடம் போடும் இந்திய அரசால் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்பதால் தங்கபாலு மூலம் அறிக்கை விடவைத்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறது. திரு தங்கபாலு அவர்கள் இடது கையால் சாப்பிடக் கூடியவர் என்பதால் சங்கடமே இல்லாமல் பேசிவிடுவார். இது ஒன்றும் கட்சித் தகராறு இல்லை. அடுத்த நாட்டு அதிபரின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டியது மன்மோகனின் கடமை இதைக்கூட செய்ய முடியாமல் நமது பிரதமர் சோனியாவுக்கு (கால்) கழுவிவிட போனாரா?
Quote
 
 
+13 #8 Vijay123 2011-06-30 14:57
இவனெல்லாம் ஒரு ஆளு? இவன் சொன்னத போயீ ஒரு தனி பதிவா போட்டுருக்கீஙக.
Quote
 
 
+10 #7 nadagapriyan 2011-06-30 13:44
அடேய் புலாசுளாகி மூடிகினு போடா.. வந்துடாரு வாய்தா வாங்க.. வாய்ல நல்லா வண்ட வண்டயா வருது!
Quote
 
 
+12 #6 mughil 2011-06-30 12:04
(அகிலன்)அப்படிய ானால் சொட்டைபாலு இலங்கையுடனான ராஜதந்திர உறவை இந்தியா முறீத்துகொல்லும ா. ஏன் இலங்கையுடன் மென்மையான போக்கை கையால்கிரது. நேரு இந்திரா எல்லம் உண்மையாக இலங்கைக்கு தமிழர்கலுக்கு உதவிசெய்தார்கள் ஆனால் நீங்கள் இந்த இன படுகொலை செய்ததே உங்கள் கங்கிரஷ தானடா சொட்டைபாலு நியெல்லாம் ஒரு மனிதன்னு ஒனக்கு சவுக்கு ஒரு கட்டுரை வேற இவனுக்கெல்லாம் தயவு செய்து சவுக்கு நேரத்தை வீனாக்காதிர்கள்
Quote
 
 
+9 #5 Zertic 2011-06-30 12:01
என்னடா தஙகபாலு நீ திருந்தவெ மட்டியடா
Quote
 
 
+6 #4 வால்டர் வணங்காமுடி 2011-06-30 07:50
உள்ள கருணாநிதி பாலுவிடம் "மரியாதையா அந்தம்மாட்ட சொல்லி எம்பொண்ண விட சொல்லு. இல்ல ஆளைவச்சி தூக்கிறுவேன் ராகுலை" என்றுதான் சொல்லியிருப்பார ். அதை வெளியில் வந்த பாலு பத்திரிக்கையாளர ிடம் "மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று கூறியிருப்பார்.
Quote
 
 
+22 #3 வால்டர் வணங்காமுடி 2011-06-30 07:45
//சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு//

மன்மோகன் சிங் காலைக் கடன் முடித்ததும் தனக்குத் தானே சுத்தம் செய்துகொள்வாரா? இல்லை அதுவும் 'சோனியாகாந்தியின ்' வழிகாட்டுதலின்ப டி தானா?
Quote
 
 
+11 #2 வால்டர் வணங்காமுடி 2011-06-30 07:43
ராஜபக்ஷே மிகப் பெரிய பொய்யர் என்று ஒரு அண்டப் புளுகன் பாலு சொல்லியிருக்கு. இதுல காமெடி என்னன்னா இவர் சீரியஸாவே சொன்னாலும் வழக்கம்போல எல்லாரும் அதை காமெடியா எடுத்துகிட்டது தான்.
Quote
 
 
+12 #1 கண்ணன்,சென்னை 2011-06-29 17:20
இந்த ஆண்டின் மிகச்சிறந்த பொய்யர் விருது யாருக்கு? வெங்கலபாலு, ராஜபக்க்ஷ, மன்மோகன், சோனியா, குருமாராஜ், கருணாநிதி, டபக்குதாஸ், வீரமணி
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 41 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1365
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week58942
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month281202
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13197569