முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மே 20 மெரினாவில் கூடுவோம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 15 மே 2012 08:22

அன்பான தோழர்களே!,
கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதையை முன்வைத்து இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவதாக செய்தியை உண்டாக்கியது. இது இலங்கையில் அரச மாற்றத்தை மட்டுமே உண்டாக்கும் என்றோம், கடந்த வருடம்..... தற்போது அதை நோக்கியே நகர்வுகள் இருக்கின்றன. ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வை வைப்பார்கள் என்று 2011 மே மாதம் சொன்னதைப் போலவே தற்போது நடக்கிறது. இதை உடைக்கவேண்டும்.
நாம் ஆதரிக்க மறுக்கவேண்டிய இந்த வருடத்திய ஐ. நா தீர்மானத்தை நம் மீது உலகம் திணித்து , ஏற்றுக்கொள்கிறாயா என்றபோது ஏற்கவேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்ற விவாதம் வந்தது. அதற்கு, ‘ நாங்கள் வேண்டுவது இதுவல்ல, இது எங்களுக்கானதல்ல, எங்கள் கோரிக்கை ‘தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பும், சுதந்திர சர்வதேச விசாரணயும் ” என்று உரத்துச் சொல்வதற்காக மார்ச் 18ஆம் தேதி சென்னை மெரினாவில் கூடினோம். ஊடகங்கள் மக்களின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை கொண்டு சென்றன. திருத்தங்களை இலங்கைக்கு ஆதரவாக கொண்டு வந்து பிறகு, ”இந்தியாவின் ஆதரவை நாங்கள் வாங்கிக் கொடுத்தோம்” என்று காங்கிரஸும், அதன் அடிபொடிகளும் தோள் தட்ட இயலாமல், தமிழர்கள் நாம், செய்தோம். இன்று இந்த கோரிக்கைகள் தமிழகத்தில் மையம் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. இந்த முன்னேற்றம் தமிழர்களின் பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும், கட்சிகளும், தலைவர்களும், அறிஞர்களும், உணர்வாளர்களும் பல்வேறு வேறுபாடுகளை கடந்து , பொது மக்கள் சமூகம் அறியக்கூடிய வகையில் பொது இடத்தில் திரண்டதால் சாத்தியமாயிற்று. கருணாநிதியே ,” ஐ. நா வாக்கெடுப்பு” என்று பேசவேண்டியதாயிற்று. தற்போது மக்களிடத்தில் பொது விவாதத்திற்கு இந்த “ஐ. நா வாக்கெடுப்பு” வந்தாயிற்று. ஆனால் இது சாத்தியமாக வேண்டுமென்றால் இனப்படுகொலை உள்ளிட்ட இன அழிப்பு நடந்ததாக அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச சுதந்திர விசாரணைஅறிவிக்கப்பட்டாக வேண்டும்.
ஐ. நாவில் தீர்மானம் வருவது மட்டுமே தீர்வை கொணராது, சர்வதேச மக்கள் சமூகம் தமிழீழ விடுதலையின் நியாயத்தை அறியும் போது நமது போராட்டம் பல அடிகள் முன்னகரும்.
இதே வகையில் நமது கோரிக்கைகள் மேலும் உரத்து கேட்க இந்த வருடம் மே 20 ஆம் தேதி சென்னை மெரினாவில், நீதி கேட்ட கண்ணகி சிலையினருகில், மாலையில் பெரும் திரளாய் ஒன்று கூடுவோம்.... பெண்களும், குழந்தைகளும், ஏனைய மக்களும் சென்ற வருடம் திரண்டார்கள் , அரசியல் படுத்தப்பட்டார்கள், கோரிக்கைகளை கூர்மையாக கவனித்தார்கள்... நாமும் அவர்களும் சந்திக்கும் அந்த நிகழ்வை மீண்டும் நிகழ்த்திக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை இது மேலும் முன்னகர்த்தும். நாம் திரள்வோம்.

 

Ninaiventhal-sticker-01-05may12-curves

 

M171

 
முள்ளி வாய்க்கால்: தீயண்ட நிலம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 39
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 02 மே 2012 07:54

email-ad-may

 
செங்கல்பட்டு பூந்தமல்லி முகாமை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 11
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012 10:44

n_t_s_7_Page_1

n_t_s_7_Page_2

 

n_t_s_7_Page_3

n_t_s_7_Page_4

 
தமிழ் தேசிய முன்னணி மாநாடு. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 21
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 04 நவம்பர் 2011 16:11

தமிழ் தேசிய முன்னணி மாநாடு வரும் 26 நவம்பர் 2011 அன்று மாலை 3 மணிக்கு ஈரோட்டில் நடைபெற உள்ளது. 

 

TNF-Notice

TNF-Notice-2nd-Page

 
பரமக்குடி சம்பவம். உண்மை அறியும் குழு அறிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 48
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 12 அக்டோபர் 2011 15:10

பரமக்குடி சம்பவம் தொடர்பாக, மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை கண்காணிப்பகம் என்று தொடர்ச்சியாக உண்மை அறியும் குழு அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வரும் சனியன்று, சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் பரமக்குடி சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப் பட இருக்கிறது.  இந்த அறிக்கை புகைப்படங்களுடன் வண்ணத்தில் நூல் வடிவில் வெளியிடப் படுகிறது.  அந்த நூலை பழ.நெடுமாறன் வெளியிட, விடுதலை ராசேந்திரன் பெற்றுக் கொள்கிறார்.

parama_notice_6

 
கைப்புள்ள ஸ்டாலின் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 63
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 12 அக்டோபர் 2011 12:37

 

கைப்புள்ள ஸ்டாலின் என்ற தலைப்பிலேயே அன்பு பதிப்பகம் சார்பில் புதிய புத்தகம் வெளியாகியுள்ளது.  இந்தப் புத்தகத்தில் எழுத்துக்களை விட ஆவணங்கள் அதிகமாக உள்ளது.  உள்ளாட்சித் துறையை தன் வசம் வைத்திருந்த ஸ்டாலினின் உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற ஊழல்களே பெருமளவில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

 

மு.க.ஸ்டாலினுக்கு ஒரு அப்பவித் தொண்டனின் கடிதம் என்ற முதல் அத்தியாயத்தோடு புத்தகம் தொடங்குகிறது.   ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அஷோக் வரதன் ஷெட்டி ஐஏஎஸ் அதிகாரி செய்த ஊழல் திருவிளையாடல்களையும் இந்தப் புத்தகம் புட்டு புட்டு வைக்கிறது.

 STALIN-WRAPPER

ஆவடியை அடுத்த மோரை கிராமத்தில் நடந்த பெரும் நில மோசடி குறித்தும், இயற்கை உரம் என்ற பெயரில் உள்ளாட்சித் துறையில் நடந்த மோசடிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை இந்த நூல் தருகிறது.

 

இதற்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் “மக்கள் ஏமாந்தார்களா ஏமாற்றப் பட்டார்களா” என்ற புத்தகத்தையும் “கேடி சகோதரர்கள்” என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்ட பத்திரிக்கையாளர் திரு அன்பு அவர்களே இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

கடந்த வாரம் இந்தப் புத்தகத்தை எம்.நடராஜன் வெளியிட, திருச்சி வேலுச்சாமி முதல் பதிப்பை பெற்றுக் கொண்டார்.

DSC_4908

 

 

 
மற்ற கட்டுரைகள்...
«முதல்முந்தைய12அடுத்தகடைசி»

பக்கம் 1 / 2

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 401 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9930
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week66832
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month269564
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12791683